Wednesday, October 8, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.10.2025

புரட்சியாளர் சேகுவேரா

  






திருக்குறள்: 

குறள் 722: 

கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் 
கற்ற செலச்சொல்லு வார் 

விளக்க உரை: 

கற்றவரின் முன் தாம் கற்றவைகளைச் அவருடைய மனதில் பதியுமாறுச் சொல்லவல்லவர், கற்றவர் எல்லாரிலும் கற்றவராக மதித்துச் சொல்லப்படுவார்.

பழமொழி :

Hardwork turns dreams into reality. 

கடின உழைப்பை கனவுகளை நனவாக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.மின்சாரம் போன்ற எரி பொருட்கள் வீணாக்காமல் சிக்கனமாக உபயோகிப்பேன்.

2.சூரிய சக்தியை பயன்படுத்த முயற்சிப்பேன்.

பொன்மொழி :

நீ கடவுளின் குழந்தை என்பதால் உனக்கு என்ன நடந்தாலும் அதைவிட நீ உயர்ந்தவன் சிறந்தவன் என்ற மன உறுதி வேண்டும் - டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம்

பொது அறிவு : 

01.மிகக் குறுகிய காலம் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்தவர் யார்?

வில்லியம் ஹென்றி ஹாரிசன்
(William Henry Harrison)

02. எரிமலைகள் அதிகம் உள்ள நாடு எது?

அமெரிக்கா ஐக்கிய நாடுகள்
(United States of America)

English words :

tear up – rip into pieces,ஒரு பொருளை சிறிய துண்டுகளாகக் கிழிப்பது

தமிழ் இலக்கணம் :

 சில சுட்டு, வினாச் சொற்கள்:
'அ', 'இ', 'எ' போன்ற சுட்டு, வினா எழுத்துக்களின் முன்னரும், அவற்றின் அடியாகத் தோன்றிய அந்த, இந்த, எந்த போன்ற சொற்களின் முன்னரும் வல்லினம் மிகுந்து வரும். 
எ.கா: இந்த + பள்ளி = இந்தப்பள்ளி 
எந்த+காடு = எந்தக்காடு
அந்த+செடி= அந்தச்செடி

அறிவியல் களஞ்சியம் :

 எறும்புகள் ராணுவ வீரர்களைப் போல எப்போதும் சாரிசாரியாக ஊர்ந்து செல்வதன் மூல ரகசியம் ஃபெரமோன் என்ற வேதிப்பொருள்தான். அந்தக் கோட்டை தவறவிட்டால், வழி தெரியாமல் போய்விடும்.எறும்புகள் போடும் இந்த ஃபெரமோன் பாதை எப்போதும் வளைந்து வளைந்துதான் இருக்கும். இடையே சில இடங்களில் நீர் சொட்டிக்கொண்டிருப்பது போன்ற சிறுசிறு ஆபத்துகள் இருந்தாலும் கூட, உணவு கிடைத்துவிட்டால் எறும்புக் கூட்டம் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாது.இதை நீங்கள் நேரில் பார்க்கும்போது கவனித்திருக்கலாம்.

அக்டோபர் 09

சே குவேரா அவர்களின் நினைவுநாள்

சே குவேரா (Che Guevara) என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) (14 சூன் 1928 – 9 அக்டோபர் 1967) அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதிகியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபெற்ற போராளி எனப்பல முகங்களைக் கொண்டவர்.


உலக அஞ்சல் தினம்

உலக அஞ்சல் தினம் (World Post Dayஅக்டோபர் 9 இல் சர்வதேச ரீதியில் நினைவு கொள்ளப்படுகிறது. அக்டோபர் 91874இல் சுவிட்சர்லாந்திலுள்ள பேர்ன் நகரில் சர்வதேச அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்ட தினமே சர்வதேச அஞ்சல் தினமாகக் கொள்ளப்படுகிறது. மொத்தம் 150 மேற்பட்ட நாடுகளில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 1969 ஆம் ஆண்டு ஜப்பான் டோக்கியோவில் நடந்த அனைத்துலக அஞ்சல் ஒன்றிய கூட்டத்தில் இந்த தினம் குறித்து முடிவெடுத்து கடைபிடிக்கப்படுகிறது.

நீதிக்கதை

 செய்யும் தொழிலே தெய்வம் .

                  ஒரு பெரிய நகரத்தில் இருந்த பெரிய கம்பெனி முன்பிருந்த கடையில் ஒரு பெரியவர் சமோசா விற்றுக் கொண்டிருந்தார். அந்த வட்டாரத்தில் அவரின் கடை மிகப் பிரபலம். ஒரு நாள் அந்த கம்பெனி மேனேஜர் கடைக்கு வந்து சாப்பிட்டுக் கொண்டே, நீங்க நல்லா நிர்வாகம் பண்றீங்க. தொழிலை நல்லா வளர்த்திருக்கீங்க, இதுவே என்னைப் போல பெரிய கம்பெனியில் நீங்க வேலையில் இருந்திருந்தால் நீங்களும் என்னைப்போல பெரிய அளவு முன்னேறியிருக்கலாம் என்றார் கிண்டலாக .

                   பெரியவர் புன்னகைத்துவிட்டு, இல்லை ஐயா . நான் உங்களை விட நன்றாகவே முன்னேறியிருக்கிறேன். பத்து வருஷத்துக்கு முன் நான் இந்த  கூடையில் சமோசா விற்றபோது நீங்கள் இந்த கம்பெனியில் வேலைக்கு சேர்ந்திருந்தீங்க. அப்பொழுது என் வருமானம் மாதம் இரண்டாயிரம் ரூபாய். உங்கள் வருமானம் மாதம் இருபதாயிரம்.

                    நீங்கள் இப்பொழுது இந்த கம்பெனியில் மேனேஜர் ஆகி விட்டீர்கள். மாதம் இரண்டு லட்சம் சம்பளம் வாங்குகிறீர்கள். இப்பொழுது எனக்கு சொந்தமாக இந்த கடை இருக்கிறது. எனக்கு நல்ல பேர் இருக்கு. நாளை என் வாரிசுகளுக்கு இந்த தொழிலை நான் தர முடியும். அவர்கள் என்னைப்போல இல்லாமல் நேரடியாக முதலாளியாக வந்து கடையை முன்னேற்றத்திற்கு கொண்டு வந்தால் போதும் . 

                    ஆனால் உங்களுக்கு அப்படியில்லை. உங்கள் பதவியை உங்கள் மகனுக்கு அப்படியே தர முடியாது. உங்களின் இத்தனை வருட உழைப்பின் பலன் உங்கள் முதலாளியின் மகனுக்குத்தான் போகும். உங்கள் மகன் மீண்டும் பூஜ்ஜியத்தில் இருந்து துவங்க வேண்டும். நீங்கள் அனுபவித்த அவ்வளவு கஷ்டத்தையும் அவனும் அனுபவிப்பான். உங்கள் மகன் உங்களைப் போல மேனேஜர் ஆகும்போது, என் மகன் எந்த நிலையில் இருப்பான் என்று நீங்களே எண்ணிப் பாருங்க என்றார். ஒருவேளை என் மகனிடம் வேலைக்கு வந்தாலும் வரலாம் என்றார். 

                    மேனேஜர் சமோசாவுக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு மௌனமாகச் சென்று விட்டார். 


நீதி : செய்யும் தொழிலைக் கொண்டு யாரையும் குறைவாக மதிப்பிடக் கூடாது.

இன்றைய செய்திகள்

09.10.2025

⭐விதிகளை பின்பற்ற தவறிய 54 அரசு & தனியார் பல்கலை க்கழகங்களுக்கு 
பல்கலைக்கழக மானியக் குழு (UGC) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

⭐அனைத்து மாவட்டங்களிலும் 5ஜி மொபைல் இணைப்பு - பிரதமர் மோடி பெருமிதம்

⭐சொந்த நாட்டு மக்கள் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்திய  மியான்மர் ராணுவம்-40 பேர் உயிரிழப்பு

⭐2025ம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு   
ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்காவை சேர்ந்த 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀முன்னேற்றம் கண்ட இந்திய வீரர்கள் . பேட்டிங் தரவரிசையை பொறுத்தவரை ஜடேஜா 6 இடங்கள் முன்னேறி 25-வது இடத்தை பிடித்துள்ளார்.

Today's Headlines

⭐ To 54 Government & Private Universities that do not follow the protocol 
The University Grants Committee (UGC) has issued a notice.

⭐ 5G Mobile Link in all districts - Prime Minister Modi is proud.

⭐ The Myanmar Army bombarded its own country's people. 40 people were killed. 

⭐ The 2025 Nobel Prize for Chemistry  is distributed to
3 people from Japan, Australia, and the United States.

🏀 Sports News

 Improvement in the ranking of the Indian players. As for the batting rankings, Jadeja has jumped 6 places from 31st place and got the 25th place.

Covai women ICT_போதிமரம்

Tuesday, October 7, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.10.2025

தேசிய விமானப்படை தினம்

    






திருக்குறள்: 

குறள் 701: 

கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் 
மாறாநீர் வையக் கணி        

விளக்க உரை: 

ஓருவர் சொல்லாமலே அவருடைய முகத்தை நோக்கி அவர் கருதிய குறிப்பை அறிகின்றவன் எப்போதும் உலகத்திற்கு ஓர் அணிகலன் ஆவான்.

பழமொழி :

Knowledge is wealth no thief can steal.

 அறிவு, திருடனாலும் திருட முடியாத செல்வம்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.மின்சாரம் போன்ற எரி பொருட்கள் வீணாக்காமல் சிக்கனமாக உபயோகிப்பேன்.

2.சூரிய சக்தியை பயன்படுத்த முயற்சிப்பேன்.

பொன்மொழி :

ஒரு குறிக்கோளை அடையும் முயற்சியில்தான் மகிமை உள்ளது. அந்த குறிக்கோளை அடைவதில் இல்லை. எனவே, முயற்சி செய்யுங்கள் - மகாத்மா காந்தி

பொது அறிவு : 

01.தேசிய நூலக தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

        ஆகஸ்ட் 12 (August 12)

02.""இசைக் கருவிகளின் ராணி'  என்று அழைக்கப்படும் கருவி எது?

             வீணை (Veenai)

English words :

tear down – demolish, இடித்துத் தள்ளுதல் 

தமிழ் இலக்கணம் :

 முற்றியலுகரச் சொற்கள்: நடு, புது, பொது போன்ற முற்றியலுகரச் சொற்களுக்குப் பின் வரும் வல்லினம் மிகுந்து வரும். 
எ.கா: நடு + காடு – நடுக்காடு
புது + சோறு – புதுச்சோறு

அறிவியல் களஞ்சியம் :

  எறும்புகளுக்குக் கண்கள் கூட ரொம்பத் தெளிவாகத் தெரியாது. ஆனால் மோப்ப உணர்வு அதிகம். இது மட்டுமில்லாமல் ஓரிடத்தில் உணவு இருப்பதைப் பார்க்கும் முதல் எறும்பு, அத்துகளின் அருகே சென்று தன் தலையில் உள்ள ஆண்டெனா போன்ற உறுப்பால் அதைத் தொட்டுப் பார்க்கிறது. அதன் பிறகு அங்கிருந்து திரும்பிச்செல்லும்போது உடலின் பின்பகுதியிலிருந்து ஃபெரமோன் என்ற வேதிப்பொருளைத் தரையில் கோடுபோல இட்டுக்கொண்டே செல்கிறது. இந்தக்கோடு அதன் கூடு வரை நீளும். இதை மோப்பம் பிடிக்கும் மற்ற எறும்புகளும் அந்தத் தடத்தை பின்பற்றிச் சென்று, உணவு இருக்கும் இடத்தை விரைவாகச் சென்றடைந்து விடுகின்றன.

அக்டோபர் 08

தேசிய விமானப்படை தினம் 2025, 93வது ஆண்டு நிறைவு: 

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8 அன்று, தேசிய விமானப்படை தினத்தை இந்தியா கொண்டாடுகிறது, நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை ஈந்த வீரர்கள் மற்றும் விமானிகளை அங்கீகரித்து, இந்திய விமானப்படை (IAF) நிறுவப்பட்டதை நினைவுகூரும் நாள் இது. *ஆற்றல் மிக்க, சக்திவாய்ந்த மற்றும் தன்னம்பிக்கை* என்ற கருப்பொருளின் கீழ் இவ்வருடம் கொண்டாடப்படுகிறது.

நீதிக்கதை

 ஏன் வந்தாய்?


அடர்ந்த காட்டில் ஓர் அத்தி மரம் இருந்தது. அந்த மரம் மிகவும் அடர்த்தியாயிருந்தது. அந்த மரத்திலிருந்த பொந்து ஒன்றில், நாகம் ஒன்று வசித்து வந்தது. மற்றொரு பொந்தில், கழுகு ஒன்று வசித்து வந்தது. இரண்டுமே, மிகவும் வயது முதிர்ந்தவை. வெளியே சென்று உணவை தேட முடியாத நிலை. அதனால், அம்மரத்தில் வசித்த மற்ற பறவைகள், தங்களுக்குக் கிடைத்த உணவில் சிறு பங்கை தினமும் கொடுத்து வந்தன.

அந்த பறவைகள் கொடுக்கும் உணவை மட்டுமே உண்டு வாழ்ந்து வந்தன. ஒருநாள், பூனை ஒன்று அந்தப் பக்கமாக வந்தது. அப்போது அம்மரத்திலிருந்த பறவைகளின் கூட்டிலிருந்து அப்பறவைக் குஞ்சுகளின், கீச் கீச் என்று சத்தம் கேட்டது. ஆகா! இங்கே நமக்கு நிறைய உணவு கிடைக்கும் போலிருக்கிறதே! என்று எண்ணியது பூனை. உடனே, மெது மெதுவாக மரத்தில் ஏறி, பறவை குஞ்சுகள் என்ன செய்கின்றன என்று பார்த்தது பூனை. பூனையை கண்ட அக்குஞ்சுகள் பயந்துபோய், சத்தமாக கூச்சலிட்டன.

ஏன் இப்படிக் கூச்சல் போடுகிறீர்கள்? என்று கேட்டுக்கொண்டே கழுகு, தன் பொந்திலிருந்து எட்டிப் பார்த்தது. கழுகு மரத்தின் அருகில் பூனை வந்து கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டது. என்னைப் பார்த்து இக்குஞ்சுகள் எல்லாம் இப்படி பயந்து கத்துகின்றனவே! நீங்களாவது தைரியம் சொல்லக் கூடாதா? என்று கேட்டுக்கொண்டே கழுகின் பக்கம் வந்து, வணக்கம் செய்தது பூனை.

நீ யார்? என்று கேட்டுக் கொண்டே, தன் கண்களை இடுக்கிக் கொண்டு அதைப் பார்த்தது கழுகு. நான் செவியன் என்னும் பூனை. உங்களிடமெல்லாம் நட்புகொள்ள வந்தேன் என்றது பூனை. ஓடு! ஓடு! இங்கு நிற்காதே! இல்லையேல், உன் உயிருக்கே ஆபத்து நேரும் என்று பயமுறுத்தியது கழுகு.

ஏன் இப்படிச் சொல்கிறீர்கள். என்னைப் பற்றி தெரிந்துகொண்டு பேசுங்கள். ஒருவனை பார்த்தவுடனேயே தீர்மானித்துவிடக் கூடாது. அவைகள் நடத்தையைப் பார்த்தே தீர்மானிக்க வேண்டும் என்றது பூனை. நீ ஏன் இங்கு வந்தாய்... நட்புகொள்ள வந்தாயா? உண்மையைச் சொல்? என்று சற்று கோபத்துடன் கேட்டது கழுகு. நான், கங்கா நதியில் நாள்தோறும் குளித்துவிட்டு விரதம் இருந்து வருகிறேன். தாங்கள் மிகுந்த தர்மவான் என்று மற்ற பறவைகள் பேசிக் கொண்டது என் காதில் விழுந்தது. வயது முதிர்ந்த சான்றோரிடமே தருமம் கேட்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அதனால்தான், இப்போது உங்களைத் தேடி வந்தேன் என்றது அந்த பூனை.

அது சரி! நீ மாமிசப் பிரியனாயிற்றே! அதிலும், கொன்று சாப்பிட அஞ்சமாட்டாயே! என்றது கழுகு. அதுமாதிரியான செயல்களையெல்லாம் விட்டுவிட்டேன். நான் காட்டிலுள்ள காய், கனி, கிழங்குகளையே சாப்பிட்டு வருகிறேன் நான்! என்றது பூனை. கழுகுக்கு, அப்பூனையின் மேல் நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. சரி, அப்படியென்றால் நீ இங்கு தங்கிக் கொள்ளலாம் என்று அனுமதி கொடுத்துவிட்டது கழுகு. பூனை தன் கைவரிசையைக் காட்டத் தொடங்கிவிட்டது. அதன் உள்நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டது. நாளடைவில் அப்பூனை, அங்கிருந்த பறவைக் குஞ்சுகளை கொன்று சாப்பிடத் தொடங்கியது. 

என்ன இது! நாள்தோறும் நம் குஞ்சுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறதே நம்முடைய கூட்டில்! என அந்தந்த பறவைகளும் ஆழ்ந்து யோசிக்கத் தொடங்கின. இதையறிந்த பூனை, சில நாட்களில் அங்கிருந்து ஓடிப்போய்விட்டது. அதுகண்ட பறவைகள், அப்பூனை தங்கியிருந்த கழுகின் மரப்பொந்தை வந்து பார்த்தன. என்ன கொடுமை! அங்கு தம் குஞ்சுகளின் எலும்புகளும், சிறகுகளும் இருப்பதைக் கண்டன. கடுங்கோபம் கொண்டன. துரோகி! இந்தக் கழுகுதான் குஞ்சுகளையெல்லாம் கொன்று சாப்பிட்டு இருக்கிறது என்று கோபப்பட்டு, அப்பறவைகளனைத்தும், அக்கழுகின் மேல் பாய்ந்து கொத்திக் கொன்றன.

நீதி :

ஒருவனுடைய குணத்தைப்பற்றி தெரிந்து கொள்ளாமல் நட்பு கொள்ளக்கூடாது.

இன்றைய செய்திகள்

08.10.2025


⭐நோயாளிகள் மருத்துவ பயனாளிகள் அல்லது பயனாளர்கள் என அழைக்கப்படுவர்- அரசாணை வெளியீடு

⭐தமிழ்நாட்டில் 45ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.
வளர்ந்து வரும் அனைத்து தொழில்களிலும் தமிழ்நாடு கால்பதித்து வருகிறது.மு.க.ஸ்டாலின் பெருமிதம்.

⭐பாகிஸ்தானில் தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு- 6 பெட்டிகள் தடம் புரண்டன

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ரூ.1,121 கோடி செலவில் பீகாரில்  இந்தியாவின் 2வது பெரிய கிரிக்கெட் மைதானம் திறக்கப்பட்டுள்ளது.

Today's Headlines


⭐ The patients will be called medical beneficiaries or benefitters  government orders issued .

⭐M.K.Stalin was proudly said  there are more than 45 thousand industries in Tamil nadu. Tamilnadu is entering all the growing industries. 

⭐ Bomb blast on railway tracks in Pakistan and 6 coaches derailed 

 *SPORTS NEWS* 

🏀India's 2nd largest cricket stadium inaugurated in Bihar at a cost of Rs. 1,121 crore.

Covai women ICT_போதிமரம்

Monday, October 6, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.10.2025

நீல்ஸ்போர்




திருக்குறள்: 

குறள் 682: 

அன்பறி வாராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க் 
கின்றி யமையாத மூன்று 

விளக்க உரை: 

அன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல் வன்மை ஆகிய இவை மூன்றும் தூது உரைப்பவர்க்கு இன்றியமையாத மூன்று பண்புகளாகும்.

பழமொழி :

Wisdom is the light of the mind. 

ஞானம் என்பது மனதின் ஒளி.

இரண்டொழுக்க பண்புகள் :

1.மின்சாரம் போன்ற எரி பொருட்கள் வீணாக்காமல் சிக்கனமாக உபயோகிப்பேன்.

2.சூரிய சக்தியை பயன்படுத்த முயற்சிப்பேன்.

பொன்மொழி :

உழைப்பின் சக்தியே உலகில் மிகவும் உன்னதமானது அதை வெற்றி கொள்ளும் ஆற்றல் வேறு எந்த சக்திக்கும் கிடையாது - ஆபிரகாம் லிங்கன்

பொது அறிவு : 

01.அப்பர் எனப் போற்றப்படுபவர் யார்?


திருநாவுக்கரசர்( Thirunavukkarasar)

02. இந்தியாவில் அதிக நூலகங்கள் உள்ள மாநிலம் எது?

மகாராஷ்டிரா(Maharashtra)

English words :

talk over – discuss, கலந்து உரையாடுதல்

தமிழ் இலக்கணம் :

 நிலைமொழியில் ய, ர, ழ: 'ய', 'ர', 'ழ' ஆகிய மெய்களின் முன்னரும் வல்லினம் மிகுந்து வரும். 
எ.கா: மயில் + கொண்டை = மயில்க்கொண்டை

அறிவியல் களஞ்சியம் :

 ஆஸ்திரேலியாவின் குவின்ஸ்லாந்து பல்கலையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் 'மெகாலோபிகி ஓபெர்குலாரிஸ்' எனும் ஒருவகை புழுவின் முடியிலிருந்து எடுக்கப்படும் சில மூலக்கூறுகளுக்குப் புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். விரைவில் இதிலிருந்து புற்றுநோய்க்கான மருந்து தயாரிக்கபடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்

அக்டோபர் 07

நீல்ஸ்போர் அவர்களின் பிறந்தநாள்

நீல்ஸ் என்றிக் டேவிட் போர் ( அக்டோபர் 71885 - நவம்பர் 181962இயற்பியல் துறையில், குறிப்பாக அணுவியலில், அடிப்படை கருத்தாக்கங்கள் தந்த புகழ்மிக்க டென்மார்க் அறிவியலாளர்.அணுவில் எலக்ட்ரான்களின் இயக்கங்களை, அதன் தன்மைகளைக் கண்டறிந்து அணுவின் அமைப்புக்கு முழு வடிவம் கொடுத்தவர். இவர் இயற்பியலுக்காக 1922 இல் நோபல் பரிசு பெற்றார். 20 ஆம் நூற்றாண்டின் புகழ்மிக்க பல இயற்பியல் அறிஞர்களுக்கு வழிகாட்டியாகவும் மற்றும் பல அறிஞர்களோடு தான் வாழ்ந்த டென்மார்க்கின் கோப்பனாஃகனில் அறிவியல் கூட்டாய்வாளராக இருந்தார். ஐன்ஸ்டைனுடன் இவர் நிகழ்த்திய குவாண்ட்டம் கருத்தியம் பற்றிய கருத்துப்போர் புகழ்பெற்றது. 20 ஆம் நூற்றாண்டில் பெரும் தாக்கம் ஏற்படுத்திய மாபெரும் அறிவியலாளர்களில் ஒருவராக இவர் அறியப்படுகின்றார்.

நீதிக்கதை

 தவளைகளின் சரியான முடிவு


ஒரு காட்டில் இரு தவளைகள் வாழ்ந்து வந்தன. எந்த ஒரு கவலையும் இல்லாமல் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் அவர்கள் இருவரும் தங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். சில நாட்களுக்கு பிறகு வெயில் அதிகமானதால் காட்டில் வெப்பம் அதிகமானது.

அதோடு கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் வாழ்ந்து வந்த குளத்திலும் தண்ணீர் வற்ற ஆரம்பித்தது. அப்போது ஒரு தவளை சொன்னது அக்கா, “வெப்பத்தினால் குளத்திலிருந்த எல்லாத் தண்ணீரும் வற்றிவிட்டது. நாம் இருவரும் உயிரோடு இருக்க வேண்டுமென்றால் தண்ணீர் இருக்கும் இன்னொரு இடத்திற்கு சென்று தான் ஆக வேண்டும் இல்லை என்றால் நாம் இருவரும் இறந்து விடுவோம்” என்றது.

மற்றொரு தவளையும், “ஆம் நீ சொல்வது சரிதான் நாம் தண்ணீர் இருக்கும் இன்னொரு இடத்திற்கு செல்ல வேண்டும்” என்றது. அவர்கள் இருவரும் வேறு இடத்தை தேடி பயணித்தார்கள். செல்லும் வழியில் ஒரு தவளை அங்கே ஒரு கிணறு இருப்பதைக் கண்டு சந்தோஷப்பட்டது. “இங்க பாருங்க அக்கா நம்ம ஒரு தண்ணீர் இருக்கும் கிணற்றை கண்டுபிடித்து விட்டோம்” என்றது.

அந்தக் கிணறு மிகவும் ஆழமாக இருந்தது. அப்போது அந்தத் தவளை மற்றொரு தவளையிடம், “என்ன பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள்? நாம் தண்ணீர் இருக்கும் பெரிய கிணற்றை கண்டுபிடித்து உள்ளோம். இருவரும் அந்த கிணற்றுக்குள்ளே குதிக்கலாம்” என்றது.

அதற்கு மற்றொரு தவளை, “இல்லை நாம் அவசரப்படவேண்டாம் இந்த கிணறு மிகவும் ஆழமாக உள்ளது. நாம் வாழ்ந்து கொண்டிருந்த அவ்வளவு பெரிய குளமே வெப்பத்தில் வற்றி உள்ளது .இந்த ஆழமான கிணறு வற்றி விட்டால் நம்மால் அதில் இருந்து வெளியே வர முடியாது, எனவே சிறிது தூரம் பயணிக்கலாம் கண்டிப்பாக இன்னொரு குளத்தை நம்மால் கண்டுபிடிக்க இயலும்” என்றது.

அவர்கள் இருவரும் மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடங்கினர். சிறிது தூரம் சென்ற பிறகு ஒரு அழகான பெரிய குளத்தை கண்டனர். இருவரும் மகிழ்ச்சியில் அந்த குளத்திற்குள் குதித்தனர், சந்தோஷமாக பாடி மகிழ்ந்தனர். இருவரும் அந்த குளத்தை தங்கள் வீடாக நினைத்து வாழ ஆரம்பித்தனர்.

சில நாட்களுக்கு பிறகு அங்கே ஒரு மான் அந்த குளத்திற்கு தண்ணீர் குடிக்க வந்தது. அப்போது அது வருத்தத்துடன் சொல்லிக் கொண்டிருந்தது “எல்லா இடத்திலும் தண்ணீர் வற்றி விட்டன அருகிலுள்ள பெரிய கிணற்றில் இருந்த தண்ணீர் கூட வற்றி விட்டது” என்றது.

இதைக் கேட்ட தவளைகள் நல்லவேளை நாம் அந்தக் கிணற்றுக்குள் குதிக்காமல் விட்டோம். குதித்து இருந்தோமென்றால் நாம் அங்கேயே இறந்திருப்போம் என்றனர்.

நீதி: எப்போதும் யோசித்து செயல்பட வேண்டும் பார்த்து அல்ல

இன்றைய செய்திகள்

07.10.2025

⭐இன்றைய செய்திகள்

⭐தீபாவளிக்கு 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

⭐வன்முறையால் பதற்றம்: ஒடிசாவின் கட்டாக்கில் ஊரடங்கு உத்தரவு - இணைய சேவை முடக்கம்

⭐மலைச்சரிவுகளில் பனிப்புயல்: எவரெஸ்ட் சிகரத்தில் சிக்கி 1,000 பேர் தவிப்பு

⭐காசாவின் கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்க மறுத்தால் ஹமாஸ் அழிக்கப்படும் - டிரம்ப் கடும் எச்சரிக்கை

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார் துருக்கி துப்பாக்கிச் சுடுதல் வீரர் யூசுப் டிகெக்!

Today's Headlines

⭐Minister Sivashankar announced 20,378 special buses to be operated for the Diwali festival.

⭐ There is tension due to violence in Odisha's Cuttack. This led to curfew. Internet services have also been suspended.

⭐1,000 stranded on Mount Everest due to a blizzard in the mountains.

 ⭐Trump has issued a stark warning that Hamas will be destroyed if it refuses to give up control of Gaza.

 SPORTS NEWS 

 🏀Turkish shooter Yusuf Dicek wins gold at European Championships.

Covai women ICT_போதிமரம்

Sunday, October 5, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.10.2025

கவிஞர் புலமைப்பித்தன்

 






திருக்குறள்: 

குறள் 681: 

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் 
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு 

விளக்க உரை: அன்புடையவனாதல், தகுதியானக் குடிப்பிறப்பு உடையவனாதல் அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல், ஆகிய இவை தூது உரைப்பவனுடையத் தகுதிகள்.

பழமொழி :

Success tastes sweeter after struggle.

 போராட்டத்திற்குப் பிறகு பெறும் வெற்றி மிகவும் இனிப்பாக இருக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.மின்சாரம் போன்ற எரி பொருட்கள் வீணாக்காமல் சிக்கனமாக உபயோகிப்பேன்.

2.சூரிய சக்தியை பயன்படுத்த முயற்சிப்பேன்.

பொன்மொழி :

என்றும் நினைவில் கொள்.மனிதனாகப் பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது - கார்ல் மார்க்ஸ் 

பொது அறிவு : 

01. நமது உடலின் ஆக்சிஜன் படகு என்று அழைக்கப்படுவது எது? 

  ஹீமோகுளோபின்(Hemoglobin)

02. இந்தியாவில் செம்பு அதிகம் கிடைக்கும் மாநிலம் எது? 

           ராஜஸ்தான்(Rajasthan )

English words :

Take up - start a hobby or something: ஏதோ ஒரு காரியம் அல்லது ஒரு பொழுது போக்கு அம்சம் தொடங்குதல்

தமிழ் இலக்கணம்

ஒற்றெழுத்து விதிகள் என்பவை தமிழில் இரண்டு சொற்கள் இணையும்போது சில வல்லின மெய்கள் (க், ச், த், ப்) மிகுந்து வரும் அல்லது இயல்பாக இருக்கும் என்னும் இலக்கண விதியாகும்.


1.நிலைமொழியில் உயிர்: முதல் சொல்லின் இறுதியில் உயிர் எழுத்து வந்து, இரண்டாம் சொல்லின் முதலில் 'க', 'ச', 'த', 'ப' வந்தால், வல்லினம் மிகுந்து வரும். 

எ.கா: பள்ளி + கூடம் = பள்ளிக்கூடம்

அறிவியல் களஞ்சியம் :

 புவி வெப்பத்தை அதிகரிக்க வைக்கும் பசுமை இல்ல வாயுக்களில் முக்கியமானது மீத்தேன். இது பசுக்களின் சாணத்தில் இருந்து அதிகளவில் வெளிவருகிறது. சுவீடன் நாட்டு விவசாய பல்கலையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பசுஞ்சாணத்தில் 'ஆஸ்பராகாப்சிஸ் டாக்ஸ்ஃபோர்மிஸ்' எனும் சிவப்பு நிறப்பாசியைச் சேர்ப்பதன் வாயிலாக, அதிலிருந்து உற்பத்தி ஆகும் மீத்தேனை, 44 சதவீத அளவுக்குக் குறைக்க முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர்.

அக்டோபர் 06

புலமைப்பித்தன்  அவர்களின் நினைவுநாள்  



புலமைப்பித்தன் (Pulamaipithan, அக்டோபர் 6, 1935 - செப்டம்பர் 8, 2021) தமிழ் கவிஞர் மற்றும் பாடலாசிரியர் ஆவார்.  புலமைப்பித்தன் கோயமுத்தூரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் ராமசாமி ஆகும். தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை நான்கு முறை பெற்றிருக்கும் புலமைப்பித்தன், சட்டமேலவை உறுப்பினர் மற்றும் அரசவைக் கவிஞர் ஆகிய பொறுப்புகளையும் அலங்கரித்திருக்கிறார்.

நீதிக்கதை

 குரு சொன்ன அறிவுரை


ஒரு நாட்டின் மன்னர் தனது மகனை குருகுலத்திற்கு கல்வி கற்க அனுப்பி வைத்தார். அவனும் குருகுலத்தில் மன்னர் மகன் என்ற அகந்தையை விடுத்து அனைத்து சீடர்களுடனும் ஒற்றுமையாக பழகி வந்தான். குரு சொல்லும் அனைத்து கட்டளைகளையும் மிகுந்த பணிவுடன் செய்து வந்தான். இப்படியே குருகுலத்தில் பல ஆண்டுகளாக கல்வி பயின்று வந்தான். ஒரு நாள் கல்வி பயின்று முடித்து தன்னுடைய அரண்மனைக்கு செல்ல வேண்டிய நாள் வந்தது. 


மன்னரின் மகன் குருகுலத்தில் இருந்து விடைபெற்று தன் நாட்டிற்கு செல்லும் முன் குருவிடம் ஆசீர்வாதம் வாங்க சென்றான். அப்போது மன்னரின் மகனைப் பார்த்து, குரு, நீ முறம் மாதிரி இரு! சல்லடை மாதிரி இருக்காதே!! என்று அறிவுரை கூறினார். மன்னனின் மகனும், சரி சுவாமி! நான் முறமாகவே இருக்கிறேன் என்றான்.


இதன் பொருள் என்னவென்று மன்னனுக்கு புரியவில்லை. தன் மகனிடம் கேட்டார் மன்னர். அதற்கு அவருடைய மகன், சல்லடை, நல்ல விஷயங்களை எல்லாம் கீழே தள்ளிவிட்டு, தேவையில்லாத கழிவுகளையும், கல்லையும் மண்ணையும் தான் வைத்துக் கொள்ளும். ஆனால் முறமோ, பதர், கல், மண் போன்றவற்றைக் கீழேத் தள்ளிவிட்டு நல்ல விஷயங்களை மட்டும் தக்க வைத்துக் கொள்ளும். இது தான் குரு சொன்ன அறிவுரை என்று கூறினான். குரு கூறிய அறிவுரைப்படியே மன்னரின் மகன் கடைப்பிடிக்கலானான்.


நீதி :

நல்ல விஷயங்களை மட்டும் மனதில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

இன்றைய செய்திகள்

06.10.2025


⭐சென்னையில் தீபாவளி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்- 18 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு

⭐இருமல் மருந்தால் குழந்தைகள் உயிரிழப்பு: மத்திய சுகாதார அமைச்சகம் அவசர ஆலோசனை

⭐வங்கதேச இறக்குமதி குறைந்ததால் உள்நாட்டு சந்தைகளில் திருப்பூர் ஆடைகளின் தேவை அதிகரிப்பு

⭐நேபாளில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு - 47 பேர் உயிரிழப்பு

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀 இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.

🏀 இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி இடையே ஒரு முக்கியமான 2026 உலகக் கோப்பை முன்னிலை பெற்ற கால்பந்து போட்டி நடைபெறுகிறது.

Today's Headlines

⭐ In and around Chennai for Diwali security arrangements are intensified, 18 thousand policemen were  on duty in supervising the city 

⭐ Union Health Ministry discussing  urgently  on child deaths by cough medicine.

⭐Demand for Tirupur garments in domestic markets increases as Bangladeshi imports declined

 ⭐47 people died due to heavy rains, floods, landslides in Nepal 

 *SPORTS NEWS* 

🏀 The World Cup cricket match is underway between India and Australia. 

🏀 An important 2026 World Cup qualifying football match is taking place between England and Germany.

Covai women ICT_போதிமரம்