Sunday, October 31, 2021

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 01.11.21

  திருக்குறள் :

பால்:பொருட்பால். 

இயல்: அரசியல். 

அதிகாரம்: தெரிந்து செயல் வகை.

குறள் எண் : 462 

குறள்
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்
கரும்பொருள் யாதொன்று மில்.

பொருள்:
தெளிந்து தேர்ந்த நண்பர்களுடன், சேர்ந்து, ஆற்ற வேண்டிய செயலை ஆராய்ந்து, தாமும் நன்கு சிந்தித்துச் செய்தால் நம்மால் செய்ய முடியாத செயல் இன்று எதுவும் இல்லை.

பழமொழி :

where there is anger, there will be excellent qualities.


 கோபமுள்ள இடத்தில்தான் குணமிருக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. தனக்கு இல்லாத குணத்தையும் இயல்பையும் தகுதியையும் , இருப்பதாகக் காட்டிக் கொள்வதில்லை இயற்கை. 

2. நானும் அதை போலவே இல்லாதவற்றை இருப்பது போல் காட்டி பெருமை கொள்ள மாட்டேன்

பொன்மொழி :

நம் கனவுகளை பின்தொடரும் தைரியம் நமக்கிருந்தால், அதை நனவாக்க நம்மால் முடியும் : -----வால்ட் டிஸ்னி

பொது அறிவு :

1. உலகின் 17 பல்கலைக்கழங்களில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரே இந்தியர் யார்? 

டாக்டர். இராதாகிருஷ்ணன். 

2. தென்னிந்தியாவின் உயரமான சிகரம் எது? 

ஆனை முடி.




English words & meanings :


Debt - Money owed to another person, கடன், 

Bonus - getting extra money as a reward. வெகுமதி.

ஆரோக்ய வாழ்வு :

பொன்னாங்கண்ணி கீரை


இதில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, மினரல் சத்து,இரும்புச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், , சுண்ணாம்பு சத்துக்கள் வைட்டமின் ஏ, சி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

உடல் பொன்போல பளபளப்பாகும் என்பதால் இப்பெயர். கீரைகளின் ராணி என்று சொல்லத்தக்க கீரை பொன்னாங்கண்ணி. பலப் பல‌ மருத்துவக் குணங்களை கொண்டது.

பலன்கள்

  • கண்பார்வைக்கு மிகவும் நல்லது.
  • சருமத்துக்கு மிகவும் நல்லது.
  • மூல நோய், மண்ணீரல் நோய்களை சரிப்படுத்தும் ஆற்றல் உடையது.
  • ரத்தத்தைச் சுத்தீகரிக்கும்
  • உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.
  • வாய் துர்நாற்றத்தை நீக்கும்.
  • இதயத்திற்கும் மூளைக்கும் புத்துணர்வு ஊட்டும்.

கணினி யுகம் :

Shift + L - Add a simple line, 

Shift + O - Add orthogonal line

நீதிக்கதை

மணல் எழுத்தும் கல்லெழுத்தும்!

ஒரு ஊரில் இரண்டு நண்பர்கள் இருந்தனர். அவர்கள் பாலை மணல் வெளியில் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் இருவருக்கும் ஒரு விஷயம் குறித்து வாதம் ஆரம்பித்தது. அது வாய்ச்சண்டையாக மாறியது. நண்பனின் கன்னத்தில் அறைந்துவிட்டான் மற்றொருவன். அறை வாங்கியவன் கோபிக்கவில்லை. அமைதியாக ஒதுங்கிப் போய் மணலில் அமர்ந்தான்.

விரல்களால் மணல் இன்று என் உயிர் நண்பன் என் கன்னத்தில் அறைந்துவிட்டான்! என்று எழுதினான். மற்றவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இருவரும் நடையைத் தொடர்ந்தார்கள். வழியில் ஒரு பாலைவன ஊற்றைக் கண்டார்கள். நடந்ததை மறந்து, அந்த ஊற்றில் வெக்கை தீர குளிக்க ஆரம்பித்தார்கள். கன்னத்தில் அறை வாங்கியவன் காலை திடீரென்று யாரோ இழுப்பது போன்ற உணர்வு. அவன் புதைகுழியில் சிக்கிக் கொண்டான். 

நண்பன் நிலை கண்டதும், பெரும் பிரயத்தனப்பட்டு காப்பாற்றி கரை ஏற்றினான் அவனை அறைந்தவன். உயிர் பிழைத்த நண்பன் ஊற்றை விட்டு வெளியில் வந்ததும், அருகில் இருந்த ஒரு கல்லின் மீது அமர்ந்தான். அங்கு ஒரு கல்லை எடுத்து தட்டித் தட்டி, இன்று என் உயிர் நண்பன் என் உயிரைக் காப்பாற்றினான் என்று எழுத ஆரம்பித்தான்.

இதையெல்லாம் பார்த்த மற்றவன் கேட்டான்... நான் உன்னை அறைந்தபோது, மணலில் எழுதினாய். இப்போது காப்பாற்றியிருக்கிறேன். கல்லில் எழுதுகிறார். ஏன் இப்படி? இதற்கு என்ன அர்த்தம் நண்பா? என்றான். அதற்கு நண்பன், யாராவது நம்மை காயப்படுத்தினால், அதை மணலில் எழுதிவிடு. மன்னிப்பு எனும் காற்று அதை அழித்துவிட்டுப் போய்விடும். ஆனால் யாராவது நல்லது செய்தால் அதை கல்லில் எழுது… காலத்தைத் தாண்டி அது நிலைத்திருக்க வேண்டும்! என்று பதில் கூறினார்.

இன்றைய செய்திகள்

01.11.21

◆சிவில் சர்வீஸ் தேர்வுகளில் கிராமப்புற மாணவர்கள் எளிதில் வெற்றிபெற வாய்ப்புக்கள் அதிகம் என முதல் முயற்சியிலேயே இந்திய வனப்பணிகள் தேர்வில் வெற்றி பெற்றதுடன், தமிழகத்திலேயே முதலிடம் பெற்ற பழநி அருகேயுள்ள கலிக்கநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த திவ்யா தெரிவித்துள்ளார்.

◆சிலம்பப் பயிற்சியாளர்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்கம், மாணவர்களுக்கு வேலையில் 3% ஒதுக்கீடு என மாநில சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

◆நவம்பர் மாத இறுதிக்குள் தமிழகத்தில் 100% முதல் தவணை தடுப்பூசி போட நடவடிக்கை: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.

◆ஆதார் எண் போல ஒவ்வொரு முகவரிக்கும் தனித்தனியாக மின்னணு முகவரி குறியீடு வழங்க மத்திய அரசு திட்டம்: வர்த்தக நிறுவனங்கள் இணைய வழியில் முகவரியை சுலபமாக  உறுதிப்படுத்த முடியும்.

◆உலக நாடுகளுக்கு உதவுவதற்காக அடுத்த ஆண்டு இறுதிக்குள் 500 கோடி தடுப்பூசி டோஸ்களை தயாரிக்க இந்தியா தயாராக இருப்பதாக ‘ஜி-20’ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார்.

◆ரஷ்யாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் கொரோனா பாதிப்பு.

◆ஆப்கானிஸ்தான் ஆட்சியை உலக நாடுகள் அங்கீகரிக்காவிட்டால் விளைவுகள் ஏற்படும் என்று தலீபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

◆14 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கிக்பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் காஷ்மீர் மாணவி தங்க பதக்கம் வென்றுள்ளார்.

◆சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சத்யன்-ஹர்மீத் தேசாய் ஜோடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.


Today's Headlines

 * Divya from Kalikkanayakkanpatti village near Palani, who passed the Indian Forest Service exam in the first attempt and acquired first place in Tamil Nadu, said that "rural students have a better chance of success in the civil service exams" 

 .* 1 Rs 1 lakh cash for silambam coaches, 3% quota for students in government jobs, said the state environment-climate change department and youth welfare and sports development minister.

  * 100% first dose vaccination will be given to Tamil Nadu people by the end of November: Health Minister Ma Subramanian

  * Federal Government Scheme to provide separate electronic address code for each address like reference number: Businesses can easily verify the address online.

 * At the G-20 summit, Prime Minister Modi assured that India was ready to produce 500 crore vaccine doses by the end of next year to help the world.

 * There is an uncontrolled spread of corona in Russia.

* The Taliban have warned of consequences if the world does not recognize the Afghan regime.

 * Kashmir student wins gold at World Kickboxing Championships for Under-14s

*  India's Sathyan-Harmeet Desai pair clinch the title at the International Table Tennis Championships.

 Prepared by

Covai women ICT_போதிமரம்

Friday, October 29, 2021

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 30.10.21

  திருக்குறள் :

பால்: பொருட்பால்

இயல்: அரசியல்

அதிகாரம்: தெரிந்து செயல் வகை

குறள் எண்: 461

குறள்:
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும
ஊதியமுஞ் சூழ்ந்து செயல்.

பொருள் :
எந்த அளவுக்கு நன்மை கிடைக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று விளைவுகளைக் கணக்குப் பார்த்த பிறதே ஒரு செயலில் இறங்க வேண்டும்.

பழமொழி :

Do good to those who harm you


பகைவனை நேசித்துப்பார்

இரண்டொழுக்க பண்புகள் :

1. பெற்ற உதவிக்கு நன்றி சொல்லுவேன். செய்த தவறுக்கு மன்னிப்பு கோருவேன். 

2. இதன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்து என் வாழ்வில் சிறந்த மனிதனாக விளங்குவேன்

பொன்மொழி :

கண்களை மட்டும் கவருவது அழகு! அன்புடன் கூடிய நற்செயல்கள் மனதையும், ஆன்மாவையும் கவரும். ---- அல்க்ஸாண்டர் போவ்

பொது அறிவு :

1. உலகின் அகலமான நதி எது? 

அமேசான் நதி. 



2. குறைந்த நேரத்தில் சூரியனை சுற்றி வரும் கோள் எது? 

புதன் கோள் (மெர்குரி).

English words & meanings :

Donate - give money to charity or poor people, 

deposit - a sum of money people put in their bank account

ஆரோக்ய வாழ்வு :

கண்களைப் பாதுகாப்பதற்கான குறிப்புகள்

  • இரண்டு தேக்கரண்டி உப்பை ஒரு லிட்டர் இளம் சூடான நீரில் சேர்த்து, கண்களைக் கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.
  • ஒரு சிறிய வெந்நிறத்துண்டை, மஞ்சள் நீரில் நனைத்து நிழலில் உலர்த்தி வைத்து கொள்ள வேண்டும். கண்நோய் உள்ளவர்கள் அந்த வெண்ணிறத் துண்டுகளைக் கொண்டு கண்களை துடைத்துவர கண்சிவப்பு, கண்வலி, கண்ணில் நீர்கோர்த்தல் இவைகள் சரியாகும்.
  • உடல் சூட்டினால் அல்லது கண்ணில் அடிபட்டதாலோ கண் சிவந்து காணப்படுவது உண்டு. இதற்கு புளியம்பூவை அரைத்து கண்களைச் சுற்றிப் பற்று போட்டு வந்தால் கண்கள் சிவப்பது சரியாகும்.
  • மருதோன்றி இலையை அரைத்து தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் கண் சிவப்பு நீங்கும்.
  • நந்தியாவட்டைப் பூவை கண்களில் ஒற்றிக்கொண்டால் கண்வலி நீங்கும்.
  • கண் பார்வைத் தெளிவு பெற கொடி முந்திரிப் பழம் சாப்பிட்டு வர வேண்டும்.
  • நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் கண்கள் குளிர்ச்சிபெறும்.
  • மிளகு, சீரகம் இவற்றில் சிறிதளவு எடுத்து பொடி செய்து, எண்ணெயில் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால் கண்ணிலிருந்து நீர்வடிதல் மற்றும் கண் எரிச்சல் குணமாகும்.
  • பொன்னாங்கண்ணிக் கீரையுடன் நெய்யையும் சேர்த்து வதக்கி அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கண் நரம்புகள் பலப்படும், பார்வை தெளிவடையும்.
  • மல்லித்தழை மற்றும் கேரட்டை தேங்காய்ப்பால் சேர்த்து அரைத்து தினமும் குடித்துவர கண் நரம்புகள் பலப்படும்.

கணினி யுகம் :

Shift + R - Add rounded box, 

Shift + S - Add segmented line


நீதிக்கதை

 மனித மனத்தின் ஆசை

இந்த உலகத்தையே ஆளுகின்ற அதிகாரம் என் ஒருவனுக்கு மட்டுமே கிடைக்கவேண்டும் என்று பேராசை கொண்டான் ஒரு மன்னன். தன் குருவிடம் சென்று அதற்கு வழியும் கூறுமாறு கேட்டான். குருஜி, மன்னனுக்கு புத்தி புகட்ட விரும்பினார். அவர் அரசனிடம், சொல்கிறேன். அதற்கு முன்பு எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டும் என்றார். அரசன் ஆவலுடன், சொல்லுங்கள்! சொல்லுங்கள்! என்றான். ஒன்றுமில்லை, இந்த செப்புக்குடுவையை உன்னால் முடிந்ததைக் கொண்டு நிரப்பித் தருவாயாக! என்றார்.

அட! இதென்ன பெரிய விஷயம் என்று எண்ணியபடியே, பணியாளரை அழைத்தான். அவரிடம், பொற்காசுகள் நிறைந்த பட்டுத்துணி மூட்டை ஒன்றைத் தந்து அந்தக் குடுவையை நிரப்பச் சொன்னான். அவரும் பொற்காசுகளை அந்தக் குடுவையில் கொட்டினர். குடுவை நிறையவேயில்லை! அது மிகவும் சிறியதுதான். போடப்போட பாதிக்குமேல் காலியாகவே இருந்தது. இன்னும் நிறையக் காசுகள் கொட்டப்பட்டன. அதுவோ நிறையாமலே இருந்தது.

குருஜி, என்ன அரசரே, இந்த சின்னக் குடுவையை நிறைக்க முடியவில்லையா? என்று கேலியாகக் கேட்டார். மன்னனுக்கு அவமானமாகிவிட்டது. கஜானாவிலிருக்கும் பொற்காசுகள், மற்றும் விலையுயர்ந்த மணிகள் எல்லாவற்றையும் கொண்டுவரச் சொன்னான். அனைத்தையும் போட்டாகிவிட்டது. அப்போதும் அந்த மாயப்பாத்திரம் நிறையவே இல்லை. கஜானாவும் காலியாகிவிட்டது. மன்னன் மனம் கலங்கினான். உடலும் உள்ளமும் ஓய்ந்து போனது.

ஐயா, இது என்ன மாயம்? என்ன பாத்திரம் இது? என் மொத்த கருவூலமும் காலியாகி விட்டதே! பாத்திரம் மட்டும் நிறையவே இல்லையே? என்று கலங்கிப்போய்க் கேட்டான். அரசே, இது மனித மனத்தின் ஆசை என்ற பொருளினால் செய்யப்பட்ட குடுவை! இதை நிரப்பவே முடியாது! ஆசைக்கு ஏது அளவு? என்றார். மன்னனுக்குப் புரிந்தது. அவன் குருவை வணங்கினான். மனம் தெளிவு பெற்றது.

இன்றைய செய்திகள்

30.10.21

* மேற்கு வங்கத்தில் அனைத்து வகை பட்டாசுகளையும் வெடிக்கவும், விற்பனை செய்யவும் உயர்நீதிமன்றம் தடை.

* அரசுப் பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அரசு பள்ளிகளுக்கு பலரும் உதவி செய்வது பெருமையாக உள்ளது. அரசு பள்ளிகளுக்கு உதவ இணையதள பக்கம் உருவாக்க உள்ளோம், அதன்மூலம் உதவலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

* கீழடியில் அகழாய்வு பணி நடைபெற்ற இடங்களை பார்வையிட்டார்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் .

*  காஷ்மீரில் பனிப்பொழிவால் ஆப்பிள் தோட்டங்களுக்கு ஏற்பட்ட பெரும் சேதத்தை இயற்கை பேரிடராக அரசு அறிவித்துள்ளது. பனிப்பொழிவால் பாதிக்கப்பட்ட ஆப்பிள் தோட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். எந்த விவசாய நிலமும் வெளியாட்களுக்கு வழங்கப்படவில்லை, நிலத்தை பாதுகாப்பது அரசின் பொறுப்பு என்று ஆளுநர் மனோஜ் சின்கா தெரிவித்துள்ளார்.

* 11 ஆண்டுகளுக்கு பின்னர் கர்நாடக மாநிலத்தில் உள்ள 124.80 அடி உயரம் கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. அணை நிரம்பியதால் இன்று மதியத்துக்குள் அதிப்படியான தண்ணீர் வெளியேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* டி20 உலகக்கோப்பை தொடர்:  சார்ஜாவில் இன்று நடைபெற்ற  23-வது லீக் ஆட்டத்தில்  வங்காளதேசத்தை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெஸ்ட்  இண்டீஸ் அணி ’திரில்’ வெற்றி பெற்றது.

* பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து மற்றும் லட்சயா சென் 3வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

Today's Headlines

* The West Bengal high Court banned all types of crackers and their sales.

* Education Minister Anbil Mahesh said, "Government schools are the symbol of pride, not poverty". And also he said "I am proud by the fact that many are helping government schools. So we are going to create a platform for the people who are willing to help the government schools. They can help through this"

* Tamil Nadu CM visited the excavation site at keezhadi

* The damage of Apple Orchards at Kashmir is declared a Natural Disaster by the Government. The government also said the farmers will get the compensation amount for their loss. " No farmland is given to outside people. It is our duty to protect the land" said Governor Sinha Manoj

* After 11 years the Krishnaraja Sahar Dam in Karnataka reached its full capacity of 124.80 feet. As the dam is filled it is expected that there will be the release of water.

*T20 World cup: In the 23rd League Play West Indies won Bangladesh by only 3 runs and gave a thrill to everyone who is watching it.

* In French open Badminton match P. V. Sindhu and Latchaya of India reached the 3rd round.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Thursday, October 28, 2021

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 29.10.21

  திருக்குறள் :

பால்: பொருட்பால்

இயல்: அரசியல்

அதிகாரம் 45:பெரியாரைத் துணைக் கோடல்.

குறள் எண் : 450

குறள்:
பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.

பொருள் :
நல்லவர்களின் தொடர்பைக் கைவிடுவது என்பது பலருடைய பகையைத் தேடிக் கொள்வதை விடக் கேடு விளைவிக்கக் கூடியதாகும்.

பழமொழி :

Change is the law of nature.


 மாற்றமே இயற்கையின் நியதி.

இரண்டொழுக்க பண்புகள் :

1. பெற்ற உதவிக்கு நன்றி சொல்லுவேன். செய்த தவறுக்கு மன்னிப்பு கோருவேன். 

2. இதன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்து என் வாழ்வில் சிறந்த மனிதனாக விளங்குவேன்

பொன்மொழி :

அகங்காரம் மக்களின் உள்ளத்தில் பலவித அழகிய மாயத் தோற்றங்களை உருவாக்கும். ஆகவே அகங்காரத்தை தவிர்த்து வாழ்வது தான் சான்றோர் இயல்பு.....ரமண மகரிஷி

பொது அறிவு :

1.ஆக்டோபஸுக்கு எத்தனை இதயங்கள் உள்ளன? 

மூன்று. 

2.சர்வதேச உணவுப்பொருள் எது? 

முட்டைகோஸ்

English words & meanings :

Hit the books - study hard, 

feel blue - feeling sad

ஆரோக்ய வாழ்வு :

ஆரோக்கியமாக வாழ்வதற்கான உணவு முறைகள்


எதைச் சாப்பிட்டு எதைத் தவிர்க்க வேண்டும்?

1. தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும். எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது. இவற்றில் ஏதாவது ஒன்றை ஒரே நேரத்தில் சாப்பிடவேண்டும்.

2. வாழைப்பழத்தைத் தயிர், மோருடன் கலந்து சாப்பிடக்கூடாது. வாழைப்பழம் சாப்பிட்ட உடனும், தயிர், மோர் சாப்பிடக்கூடாது.

3. பழங்களைத் தனியேதான் சாப்பிட வேண்டும். சாப்பாட்டுடன் சேர்ந்து சாப்பிடக்கூடாது. அதன் தாதுச்சத்து உணவுடன் கலந்து பலனற்றுப் போய்விடும்.

4. வெண்ணெயுடன் காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிடக்கூடாது.

5. மீன், கருவாடு சாப்பிட்ட உடன் பால், தயிர் சாப்பிடக்கூடாது. அவ்வாறு மீறி உண்டால் “வெண் மேகம்” போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.

6. உடல் மெலிந்தவர்கள், புழுங்கலரிசி சாதம் சாப்பிட வேண்டும்.

7. உடல் பருத்தவர்கள் கோதுமை உணவு உண்பது நல்லது.

8. ஆஸ்துமா உள்ளவர்கள், சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய், முள்ளங்கி ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.

9. மூல நோய் உள்ளவர்கள் முட்டை, அதிக காரம், மாமிச உணவு ஆகியவற்றை உண்ணக்கூடாது.

10. நெய்யை வெண்கலப் பாத்திரத்தில் வைத்து உபயோகிக்கக்கூடாது.

11. காலையில் வெறும் வயிற்றில் காப்பி, டீ குடிக்கக்கூடாது. ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டுப் பின்னர், காப்பி, டீ போன்றவைகளைக் குடிக்கலாம்.

12. அல்சர் உள்ளவர்களும், மஞ்சள் காமாலை உள்ளவர்களும் மிளகாய், ஊறுகாய் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளக்கூடாது.

13. பெண்கள் வீட்டிற்குத் தூரமான நாட்களில் கத்தரிக்காய், எள், அன்னாசி, பப்பாளி ஆகியவற்றைச் சேர்த்து கொள்ளக்கூடாது.

14. தோல் நோய் உள்ளவர்கள் கத்தரிக்காய், புடலங்காய், நிலக்கடலை, மீன், கருவாடு, அதிக காரம், அதிக புளிப்பு, கொத்தவரங்காய், பீன்ஸ் ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.

15. கோதுமையை நல்லெண்ணெயுடன் சமைத்துச் சாப்பிடக்கூடாது.

16. மூட்டுவலி, வாத நோயாளிகள், அசைவ உணவுகள், முட்டை, கிழங்கு வகைகளைச் சாப்பிடக்கூடாது.

கணினி யுகம் :

Shift + H - Add rhomb, 

Shift + T - Add text

நீதிக்கதை

அம்மா சொல் கேள்!

ஒரு நாள் பொழுது விடிந்ததும், ஒருவன் தனது ஆடுகளை செழிப்பான ஒரு புல்வெளியில் மேய்த்துகொண்டிருந்தான். ஆடுகளை மேய்த்தவன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கண் மூடி, புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்தான். 

புல்வெளியைச் சுற்றி வேலி போடப்பட்டிருந்தது. வேலியோரம் ஓர் ஆட்டுக்குட்டி மேய்ந்து கொண்டிருந்ததை பார்த்த ஒரு ஓநாய் ஆட்டுக்குட்டியைத் தின்னும் ஆசையில் பார்த்தது. 

வேலிக்குள் முகத்தை நுழைத்துக்கொண்டு, ஓநாய் எதையோ பார்ப்பது போல பாசாங்கு செய்தது. அதைப் பார்த்த ஒர் ஆட்டுக்குட்டி, உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டது. 

ஓநாய் நண்பா!, இங்கே இளசாண புல் கிடைக்குமா என்று பார்க்கிறேன்! இளம்புல் என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சாப்பிட தோன்றுகிறது என்று வருத்தத்துடன் கூறியது. அப்படியா! நீ மாமிசத்தைத்தான் சாப்பிடுவாய் என்று என் அம்மாவும் அப்பாவும் சொன்னார்களே? என்று ஆச்சரியத்துடன் கேட்டது ஆட்டுக்குட்டி. 

சேச்சே... அதெலாம் சுத்தப் பொய்! என்றது ஓநாய். அப்படியென்றால் இரு. நான் வெளியே வருகிறேன். நாம் இரண்டு பேரும் சேர்ந்து மலையின் அந்தப் பக்கம் இருக்கும் இளம்புலை சாப்பிடலாம் என்று சொல்லிக்கொண்டு வெளியே வந்தது. 

உடனே ஓநாய் அதன்மீது பாய்ந்து அதைக்கொன்று தின்றது. அந்த ஆட்டுக்குட்டி ஓநாய்க்கு உதவி செய்ய போய் தனது உயிரை இழந்துவிட்டது. 

நீதி :
அனுபவம் நிறைந்தவரின் ஆலோசனை மிகவும் முக்கியம்.

இன்றைய செய்திகள்

29.10.21

★8-ம் வகுப்புத் தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்படுகிறது.

★அரசுப் பள்ளியில் பயின்று ஐஐடி நுழைவுத் தேர்வில் வென்ற அருண்குமார் என்ற மாணவரின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என, முதல்வர்  அறிவித்துள்ளார்.

★இந்து தமிழ் திசை’ நாளிதழ் முன்னெடுக்கும் ‘சுத்தம் சுகாதாரம்’ இணையவழி சுகாதார விழிப்புணர்வுத் தொடர் நிகழ்வை தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் நேற்று தொடங்கி வைத்தார்.

★கிராமப்புற மக்களுக்கு சட்ட விழிப்புணர்வு அளிப்பதற்கான பிரச்சார ஊர்தியின் பயணம் தொடக்கம்: திருவள்ளூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு ஏற்பாடு.

★மும்பை உயர் நீதிமன்றம் பிறப்பித்திருந்த தடையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், நாடு முழுவதும் இளநிலை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தேசிய தேர்வு முகமைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.

★4 ஆண்டுகளில் இளநிலைப் பட்டப் படிப்பு, பி.எட். படிப்புடன் கூடிய ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டத்தை மத்திய கல்வித்துறை அமைச்சகம் அடுத்த கல்வியாண்டு முதல் அறிமுகம் செய்யவுள்ளது. இந்தப் படிப்பில் சேர்வதற்கு தேசிய அளவில் நுழைவுத் தேர்வு அவசியம்.

★மீண்டும் லாக்டவுன்: ரஷ்யாவை உலுக்கும் கரோனாவால் மாஸ்கோவில் கடும் கட்டுப்பாடு.

★வடகொரியாவில் உணவு பஞ்சம் தலைவிரித்து ஆடுவதால் 2025-ம் ஆண்டு வரை மக்கள் குறைவாக உணவு சாப்பிட வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

★நீரஜ் சோப்ரா, மிதாலிராஜ், சுனில் சேத்ரி உள்பட 11 பேருக்கு கேல்ரத்னா விருது வழங்கும்படி விருது கமிட்டி விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.

★பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் போட்டியில் இந்திய வீரர் லட்சயா சென் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.




Today's Headlines

🌸Hall tickets for 8th class individual selectors are released today.

 🌸  Chief Minister has announced that the government will pay the tuition fees for Arunkumar, a  government school student and got selected in the IIT entrance examination.

 🌸 The Minister of Tamil Nadu School Education yesterday launched the 'Clean Health' e-Health Awareness Series organized by the "Hindu Tamil Direction daily." 

 🌸 Launch of the campaign vehicle to provide legal awareness to the rural people: Organized by the Tiruvallur District Legal Services Commission.

 🌸 The Supreme Court has quashed the ban imposed by the Mumbai High Court, allowing the National Examinations Agency to publish the results of the undergraduate NEET examination across the country.

 🌸 Undergraduate degree in 4 years with B.Ed.  The Central Ministry of Education will introduce an integrated teacher education program from the next academic year.  A national-level entrance examination is required to join this course.

 🌸 Lockdown again: Tight control in Moscow due to the outburst of Corona in Russia, which was shaken by this deadly virus. 

 🌸 North Korea's government has ordered people to eat less until 2025 as food shortages loom large.

 🌸 The award committee has recommended to the Sports Ministry that to give Kelratna award to 11 persons including Neeraj Chopra, Mithaliraj, and Sunil Chhetri.

🌸 Indian player Lakshya Sen has advanced to the next round of the French Open badminton men's singles tournament.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Wednesday, October 27, 2021

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 28.10.21

  திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்: அரசியல்

அதிகாரம் 45:  
பெரியாரைத் துணைக் கோடல்

குறள் எண் : 443

குறள்:
அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.

பொருள்:
பெரியவர்களைப் போற்றிப் பாராட்டி அவர்களுடன் உறவாடுதல் எல்லாப் பேறுகளையும் விடப் பெரும் பேறாகும்.

பழமொழி :

Drawn wells have the sweetest water.

இறைக்கிற கிணறு ஊறும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. எப்போதும் நாம் தான் வல்லவன் என்ற
அகந்தையை ஒதுக்கி ..நல்லவனாய் வாழு நாளும் சிறக்கும் நீயும் சிறப்பாய்.

 2. எண்ணம் உறுதியாக உன்னதமாக இருந்தால், எண்ணியபடி உயரலாம்.

பொன்மொழி :

எதிரிகள் தாக்கி தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும், நீங்கள் தாங்கித் தாங்கி வலுவை பெற்றுக்கொள்ளுங்கள்- அறிஞர் அண்ணா.

பொது அறிவு :

1. சென்னை உயர்நீதிமன்றம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது? 

1862.

2."இந்திய திட்ட நேரம் "(IST) எந்த மாநிலத்தின் நேரத்தை குறிக்கின்றது? 

அலகாபாத்.

English words & meanings :

Hold your horses - slow down, எதாவது வேகமாக செய்யும் போது வேகம் குறைத்தல், 

lend an ear - listening others talk patiently, பொறுமையாக கவனித்தல்

ஆரோக்ய வாழ்வு :

முளை கட்டுதல் - ஊட்டச்சத்துக்களின் அளவுகளை அதிகமாக்குதல்


முளை கட்டுதல் என்பது பயறுகளை ஒரு இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து, நீரை வடிகட்டி, ஊறிய பயறுகளை, ஒரு பருத்தித் துணியில் தளர்வாகக் கட்டி தொங்கவிட வேண்டும். ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறைகள், நீரை தெளித்து ஈரப்பதத்தில் வைக்கும் நிலையில், முளையானது 6 முதல் 8 மணி நேரத்திற்குள் தோன்றும்.



  • உயிர்ச்சத்து முளைக்கட்டுவதனால் கிடைக்கின்றது. 100 கிராம் பயிரில் 7 முதல் 20 மி.கி உயிர்ச்சத்து கிடைக்கிறது.
  • ரைபோஃபிளேவின், நயாசின், கோலின் மற்றும் பையோட்டின் அளவுகள் அதிகரிக்கப்படுகிறது. மாவுச்சத்தானது சர்க்கரைப் பொருட்களாக மாற்றப்படுகிறது.
  • பயறுகளில் நச்சுத்தன்மை உண்டாக்கும் பொருட்களையும், நல்ல ஊட்டத்திற்கு எதிராக செயல்படும் காரணிகளையும் குறைக்கிறது.
  • திட்ட உணவில், உணவு வகைகளை அதிகரிக்கலாம். ஏனெனில், முளைக்க வைக்கப்பட்ட பயறுகளை, சாலட் மற்றும் பச்சடி போன்ற உணவு வகைகளில் சேர்க்கலாம்.
  • இயங்காத நிலையில் உள்ள நொதிகளை செயல் புரிய வைத்து, சீரணித்தலும் நன்கு நடைபெற்று, உடலிற்கு கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்துகளின் அளவும் அதிகரிக்கிறது.
  • கூட்டு நிலையில் இருக்கும் கால்சியம், துத்தநாகம், இரும்புச்சத்து போன்ற தாது வெளியிடப்படுகின்றன. முளை கட்டப்பட்ட பயறுகளை சமைக்காமல் உண்ணலாம். ஏனெனில், முளை கட்டுதலினால் பயற்றின் சுவை மற்றும் தன்மை கூட்டப்படுகிறது.

கணினி யுகம் :

Shift + B - Add box, 

Shift + C - Add circle

அக்டோபர் 28

பில் கேட்ஸ் அவர்களின்  பிந்தநாள் 




வில்லியம் ஹென்றி கேட்ஸ் (பில் கேட்ஸ்) (English: William Henry Gates or Bill Gates) (பி. அக்டோபர் 281955மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர். இவர் அதன் தலைமை கணிப்பொறி மென்பொருள் வல்லுனராகவும் (CSA), முதன்மை செயல் அதிகாரியாகவும் (CEO) பணியாற்றியுள்ளார். கோர்பிஸ் நிறுவனத்தினையும் நிறுவியுள்ளார். போர்பஸ் இதழின்படி உலகின் முதல் பணக்காரர் என்று அறியப்படுகிறார். உலகின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகளாக முதல் இடத்தினைப் பெற்று வருகிறார். 1999-ல் இவரின் குடும்பச் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர்களைக் கடந்தது.

நீதிக்கதை

யானையின் திறமை

ஒரு காட்டில் யானை ஒன்று வாழ்ந்து வந்தது. அதற்கு நண்பர்கள் யாரும் இல்லாததால் அந்த காட்டில் நண்பர்களை தேடிச் சென்றது. யானை முதலில் மரத்தில் ஒரு குரங்கை பார்த்தது. அந்த குரங்கிடம் சென்று நீ என்னை நண்பனாக ஏற்றுக் கொள்வாயா என்று கேட்டது. அதற்கு அந்த குரங்கு நீ பெரிய உடம்பினைக் கொண்டுள்ளாய். அதனால் என்னை போல் உன்னால் மரத்திற்கு மரம் தாவ முடியாது. ஆகவே உன்னை நண்பனாக ஏற்று கொள்ள முடியாது என்று குரங்கு சொன்னது.

அடுத்ததாக யானை, முயல் ஒன்றை பார்த்தது. அந்த முயலிடம் சென்று என்னை நண்பனாக ஏற்றுக்கொள்வாயா என்று கேட்டது. அதற்கு அந்த முயல் நீ பெரிய உடம்பினை கொண்டுள்ளாய் அதனால் உன்னால் என்னை போல் வேகமாக ஓடமுடியாது என்று சொன்னது. அடுத்ததாக யானை, தவளை ஒன்றை பார்த்தது. அந்த தவளையிடமும் சென்று என்னை உன் நண்பனாக ஏற்று கொள்வாயா என்று கேட்டது. அதற்கு தவளை என்னை போல் உன்னால் தாவ முடியாது. ஆதலால் உன்னை என் நண்பனாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொன்னது.

கடைசியாக யானை, நரி ஒன்றை பார்த்தது. அதனிடமும் சென்று என்னை உன் நண்பனாக ஏற்றுக்கொள்வாயா என்று கேட்டது. நரியும் நீ உடம்பளவில் பெரியவனாக உள்ளாய். ஆதலால் உன்னை நண்பனாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொன்னது. யானை கவலையில் தனது இடத்திற்குச் சென்றது.

அடுத்த நாள் காலையில் விலங்குகளின் சத்தம் கேட்டு அங்கு ஓடி கொண்டிருந்த கரடியிடம் ஏன் ஓடுகிறீர்கள்? என்று யானை கேட்டது. அதற்க்கு கரடி இங்கு உள்ள விலங்குகளை ஒன்று ஒன்றாக புலி கொன்று சாப்பிட்டு வருகிறது. அதனால்தான் நாங்கள் ஓடுகிறோம் என்று சொல்லி கொண்டே ஓடியது.

யானை இதற்கு ஒரு வழி கொண்டு வரணும் என்று நினைத்து புலியிடம் சென்றது. புலியை பார்த்து ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டது. அதற்கு அந்த புலி, இது உனக்கு தேவையில்லாத விஷயம் என்று சொன்னது. யானை அதற்கு பாடம் கற்பிக்கும் வகையில் அதனை தனது காலால் உதைத்து தள்ளியது. காயத்துடன் அந்த புலி அந்த காட்டை விட்டு தலை தெரிக்க ஓடியது.

இதனை கண்ட அங்கு உள்ள விலங்குகள் நீ உடம்பில் பெரியவன் அல்ல நீ இனி எங்கள் நண்பன் என்று சொல்லி யானையை நண்பனாக ஏற்று கொண்டன.

இன்றைய செய்திகள்

28.10.21

★செங்கல்பட்டு அருகே அரசுப் பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு: சத்துணவுத் தயாரிப்பையும் சரிபார்த்தார்.

★பி.ஆர்க். படிப்புக்கான கலந்தாய்வில் ஜெஇஇ எழுதியவர்களையும் அனுமதிக்க வேண்டும்: அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.

★மாணவர்களின் கற்றல் இடைவெளியை சரிசெய்ய ரூ.200 கோடியில் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம்  தொடக்கம்.

★வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; கடலோர மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை.

★இருசக்கர வாகன பயணத்தில், 9 மாதம் முதல் 4 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம், குழந்தைகளை அழைத்துசெல்லும்போது மணிக்கு 40 கி.மீ. வேகத்துக்கு மேல் செல்லக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

★கனடாவின் புதிய பாதுகாப்புத்துறை அமைச்சராக தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட அனிதா ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

★கோவேக்சின் தடுப்பூசிக்கு அனுமதி இல்லை, கூடுதல் தரவுகளை கோரும் உலக சுகாதர அமைப்பு.

★கேரபாவோ கோப்பை கால்பந்து தொடரில் அர்செணல், செல்ஸியா மற்றும் சண்டெர்லேண்ட் அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

★டி20 உலகக்கோப்பை: வங்காளதேசத்தை 124 ரன்களில் சுருட்டியது இங்கிலாந்து.

Today's Headlines

 ★ Chief Minister Stalin gave a surprise visit and inspection at a government school near Chengalpattu: He also checked the noon meal's preparation.

 ★ For the B.Arch. counseling JEE  participants also should be allowed: High Court ordered Anna University.

 ★ Launch of Rs. 200 crores ‘Home-based Education’ project to balance the students' learning gap.

 ★ New Depression in the Bay of Bengal: Chennai Meteorological Department warns of heavy rains in coastal districts.

 ★Various restrictions have been announced including Helmets are mandatory for children between the ages of 9 months and 4 years on a two-wheeler and also there should be a speed limit of 40 km / h only while taking children on the bike. 

 ★ Anita Anand, a native of Tamil Nadu, has been appointed as the new Minister of Defense of Canada.

 ★ The covaccine is not accepted by the World Health Organization- asking for more details.

 ★ Arsenal, Chelsea, and Sunderland are advancing to the quarterfinals of the Carabao Cup football series.

 ★ T20 World Cup: England beat Bangladesh by 124 runs.

 Prepared by

Covai women ICT_போதிமரம்