Wednesday, November 20, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 21.11.19

திருக்குறள்

அதிகாரம்:கொல்லாமை

திருக்குறள்:325

நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.

விளக்கம்:

உலகியல் நிலையை வெறுத்துத் துறவு பூண்டவர் எல்லோரையும்விடக் கொலையை வெறுத்துக் கொல்லாமையைக் கடைப்பிடிப்பவரே சிறந்தவராவார்.

பழமொழி

Shun the wicked, as you would the plague

 துஷ்டனைக் கண்டால் தூர விலகு

இரண்டொழுக்க பண்புகள்

1. சுத்தம் சுகம் தரும். எனவே எப்போதும் சுய சுத்தம், சுற்றுப்புற சுத்தம் பேணுவேன்.

2. என்னுடைய அகமும் தூய்மையாக இருக்கும் படி பார்த்துக் கொள்வேன்.

பொன்மொழி

நீங்கள் நல்லவர் என்றால் மற்றவர்களுக்கும் நீங்கள் நல்லவர் தான்.சமூகத்திற்கும் நல்ல செயல்களை மட்டுமே செய்பவர் தான்.

___பிராங்க்ளின்

பொது அறிவு

இன்று உலக தொலைக்காட்சி தினம் மற்றும் உலக மீன்பிடி தினம்

1.தொலைக்காட்சியை கண்டுபிடித்தவர் யார்?

 ஜே.எல்.பைர்ட்(1926)

2.மீன்களை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு எது?

ஜப்பான்.

3. நீலப் புரட்சி என்பது எதனைக் குறிக்கிறது ?

 நீலப் புரட்சி என்பது அதிக அளவு மீன் உற்பத்தியை குறிக்கும்

English words & meanings

 Laryngology – study of larynx. தொண்டை மற்றும் குரல்வளை குறித்த படிப்பு.

 Lactic - relating to or obtained from milk. பால்சார்ந்த

ஆரோக்ய வாழ்வு

கிராம்பை அவ்வப்போது கடித்துவந்தால் தலைவலிக்கு சுகமாக இருக்கும்.

Some important  abbreviations for students

HP  - horsepower

h&c - hot and cold

நீதிக்கதை

செய்நன்றி மறவேல்

ஒருநாள் மான் ஒன்று புல் மேய்ந்துக் கொண்டிருக்கையில், வேடன் ஒருவன் கண்களில் சிக்கியது. அவன் மானைக் கொல்ல, அம்பெய்தப் குறி பார்த்தான்.

மான் நாலு கால் பாய்ச்சலில் பாய்ந்து ஓடியது. சிறிது தூரம் சென்றதும், ஒரு புதரைப்பார்த்து அதன் பின் ஓடி ஒளிந்தது. மானைத் துரத்தி வந்த வேடன் அதைக் காணாது சுற்றும் முற்றும் தேட ஆரம்பித்தான்.

அவனிடமிருந்து தப்பித்துவிட்டோம் என்ற எண்ணத்தில் புதரில் வளர்ந்திருந்த செடியின் இலைகளை மான் தின்ன ஆரம்பித்தது. அப்போது அச்செடி, மானே! நான் உன்னை வேடனிடமிருந்து காப்பாற்றியுள்ளேன்! ஆனால், நீ எனது செல்வங்களான இலைகளை உண்ணுகிறாய். தயவு செய்து சில நாட்களாவது அவை தாயான என்னிடம் இருக்கட்டும் என கெஞ்சியது.

ஆனால், அதைக் கேட்காத மான் செடியின் இலைகளை உண்ணத் தொடங்கியது. அப்போது, அதனால் சிறு சலசலப்பு உண்டாக, வேடன் மான் அங்கு ஒளிந்திருப்பதைப் பார்த்துவிட்டான். அதன் மீது அம்பை எய்திக் கொன்றான்.

தன்னைக் காத்த செடியின் செய்நன்றியை மான் மறந்ததால் மான் உயிரையே இழக்க நேர்ந்தது. நாமும் நமக்கு ஒருவர் சிறிய உதவியைச் செய்தாலும் அதை மறக்காது, உதவி புரிந்தோர்க்கு நம்மாலான நன்மைகளையே செய்ய வேண்டும்.

வியாழன்
அறிவியல்

அறிவோம் அறிவியல்

Boat with baking powder

தேவையான பொருட்கள் :
ஒரு பிளாஸ்டிக் குப்பி, உறிஞ்சு குழல் (straw), ஆப்ப சோடா அல்லது சோடா மாவு, சிவப்பு நிற உணவு கலர், எலுமிச்சை சாறு அல்லது வினிகர்.

செய்முறை :
குப்பியில் உள்ள மூடியில் சிறு துளை இட்டு அதில் உறிஞ்சு குழலை சொருகவும். குப்பியின் உள்ளே ஆப்ப சோடா போட்டு அதனுடன் சிவப்பு உணவு கலரை சேர்க்கவும்  வினிகரை ஊற்றவும். மூடியை இறுக்க மூடி நீர் நிரம்பிய தொட்டியில் இடவும். தற்போது குப்பி ஒரு ஜெட் படகு போல செல்வதைக் காணலாம்.

அறிவியல் : ஆப்ப சோடா வினிகருடன் வினை புரிந்து CO2 உற்பத்தி செய்யும். இது அதிக விசையுடன் உறிஞ்சு குழல் வழியாக வெளியேறும். இந்த விசை குப்பியை அதி வேகத்தில் அங்கும் இங்கும் இயங்க வைக்கும். சிவப்பு வர்ணம் தொட்டியில் உள்ள நீரில் இருந்து வேறுபடுத்தி அறிய சேர்க்கப் படுகிறது.

இன்றைய செய்திகள்

21.11.19

* இரண்டாம் உலகப் போரின் மையப் பேசுபொருளாக விளங்கிய நாஜித் தலைவர் அடால்ஃப் ஹிட்லர் பிறந்த கட்டடத்தை காவல்  நிலையமாக மாற்ற ஆஸ்திரிய அரசு முடிவு செய்துள்ளது.

* குற்றாலம் பகுதியில் புதன்கிழமை பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதனையடுத்து குற்றாலம் அருவியில் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.

*நாமக்கல்லில், பசுமைத் தாயகம் அமைப்பு சாா்பில், 2 கிலோ நெகிழிக்கு ஒரு கிலோ அரிசி மற்றும் காய்கறி வழங்கும் விழிப்புணா்வு முகாம்  நடைபெற்றது.

* யூரோ 2020 கால்பந்து போட்டி இறுதிச் சுற்றுக்கு டென்மாா்க், ஸ்விட்சா்லாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன.

* தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் எல். சிவராம கிருஷ்ணன் இந்திய அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராக இருக்கிறார்.

Today's Headlines

🌸The Austrian government has decided to convert the birth place where  Nazi leader Adolf Hitler who was the central figure of World War II, into a police station.

 🌸Heavy rains in the Courtallam area caused floods in the Courtallam falls .Bathing was banned due to this .

 🌸 At Namakkal, Green Home Organization  held an awareness camp where they  provide 1 kg of rice and vegetable for 2 kg  of plastics.

 🌸 Denmark and Switzerland teams were qualified for the final of Euro 2020 Football Tournament.

   🌸Mr.Sivarama Krishnan, the Former cricketer of Tamil Nadu is the new chief selector of the Indian selection committee.

Prepared by
Covai women ICT_போதிமரம்

Wednesday, November 13, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 14.11.19



அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்.....

Monday, November 4, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 05.11.19

திருக்குறள்

அதிகாரம்:இன்னா செய்யாமை

திருக்குறள்:311

சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.

விளக்கம்:

சிறப்பைத் தரும் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும்கூட அடுத்தவர்க்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கையாகும்."l

பழமொழி

Casting no Pearls before swine
 கழுதை அறியுமா கற்பூர வாசனை.

இரண்டொழுக்க பண்புகள்

1. மலருக்கு மணம் அவசியம் போல மனிதனுக்கு குணம் முக்கியம்.

2. எனவே மனிதரின் குணங்களை வைத்தே அவர்களை மதிப்பிடுவேன்.

பொன்மொழி

சிரிப்பு என்பது உலக ஜீவராசிகளில் மனிதனுக்கு மட்டுமே உள்ள சிறப்பு. இதை உணர்ந்து தேவைக்கேற்ப புன்னகை புரிதலே அதற்கு நாம் செய்யும் சிறப்பு ஆகும்.

-----நெல்லை கண்ணன்

பொது அறிவு

1. நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற நகரம் எது ?

 திருப்பூர்

 2.பிப்ரவரி 29 அன்று பிறந்த இந்திய பிரதமர் யார்?

 மொரார்ஜி தேசாய்

English words & meanings

Xylology – study of wood. மரக் கட்டைகள் மற்றும் அவற்றில் உள்ள பொருட்கள் குறித்த படிப்பு.

 Xebec - a type of sailing vessel or ship. மூன்று பாய்மரங்கள் உடைய கப்பல்

ஆரோக்ய வாழ்வு

பனங்கற்கண்டு உடல் உஷ்ணம், நீர் சுருக்கு, காய்ச்சலினால் ஏற்படும் வெப்பம் ஆகியவற்றை போக்குகிறது.

Some important  abbreviations for students

BTW - by the way

FB - Facebook

நீதிக்கதை

உருவத்தை பார்த்து பழகாதே

ஒரு குளத்தில் பல வகையான வண்ண மீன்கள் வாழ்ந்து வந்தன. மீன் குஞ்சுகள் எப்பொழுதும் கரையோரம் கூடி விளையாடிக் கொண்டிருப்பார்கள். அதில் சோமு சிண்டு என்ற மீன்கள் ஒரு நாள் விளையாடி கொண்டிருக்கும்போது ஏய் சிண்டு... என்னைப்பிடி பார்க்கலாம் என்றான். என்கிட்டேயே சவால் விடறியா இப்ப பாரு, ஒரு நொடியில் பிடிக்கறேன் என்று சொல்லி விளையாடி கொண்டிருந்தது.

அப்போது கரையில் ஒரு காகம் புழுக்களைக் கொத்திக் கொண்டிருப்பதை பார்த்து ஏய் சோமு, அங்கே பார் அவன் எவ்வளவு கருப்பாக இருக்கிறான். அவன் குரலை நீ கேட்டிருக்கிறாயா? அருவருப்பாக இருக்கும். அவனை பார்த்தால் பயமாக இருக்கிறது வா போய்டலாம் என்று சிண்டு சொன்னதும், எல்லா மீன்களும் குளத்துக்குள் வேகமாகச் சென்றன. அவசர அவசரமாக மீன்கள் உள்ளே சென்றபோது, பசங்களா? ஏன் இப்படி ஓடி வர்றீங்க? என ஒரு பெரிய மீன் கேட்டது கரையில் காகம் இருக்கு. அதனோட நிறமும் குரலும் பயமா இருக்கு? அதான்...

ஓ....! காகமா, காகத்தினால் நமக்கு எந்த ஆபத்தும் இல்லை. உருவத்தை மட்டுமே வைத்து ஒருவரைப் பற்றி தப்பாக நினைக்கக் கூடாது என்று, அந்த பெரிய மீன் சொல்ல, மற்ற மீன்குஞ்சுகள் இந்த தாத்தாவுக்கு வேற வேலை இல்லை. எப்பவும் உபதேசம் தான். வாங்க போகலாம். என கூறி சென்றது. அடுத்த நாள் வந்தது. குளத்தின் கரையில் கொக்கு ஒன்று அமர்ந்து இருந்தது. அதை பார்த்த மீன் குஞ்சுகள், ஏய் அங்கே பாரு வெள்ளையா... அட! என்ன பறவை அது? வெள்ளையா எவ்வளவு அழகா இருக்கு! அலகும் நீளமா இருக்கு. அடடே! அதனோட நடையைப் பாரேன். மீன் குஞ்சுகள் பேசும் சத்தம் கேட்டு குளத்தை நெருங்கியது கொக்கு.

உடனே மீன் குஞ்சுகள், அண்ணே! நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. உங்க அலகைத் தொட்டுப் பார்க்கலாமா? கொக்குக்கு ஒரே கொண்டாட்டம். ஓ! தொட்டுப் பாரேன். ஒரு மீன் குஞ்சு கொக்கை நெருங்க, கொக்கு மீனை கவ்வியது. நல்லா மாட்டிக்கிட்டியா? என்றது. மாட்டிய மீன் ஆ! என்னை விட்டு விடு! என்று கெஞ்சியது. இதை பார்த்த மற்ற மீன் குஞ்சுகள் ஆபத்து... ஓடுங்க! ஓடுங்க! என்று குளத்திற்குள் சென்றன. அந்த கொக்கு கவ்விய மீனுடன் வானத்தில் சென்று மறைந்தது.



மற்ற மீன் குஞ்சுகள், அந்த தாத்தா மீன் சொன்னது சரியாப் போச்சு. அழகை மட்டும் பார்த்து ஒருத்தரோட பழகக்கூடாது. ஆமாம்! ஆமாம்! என்று உறுதியெடுத்து கொண்டன. அன்று முதல் மற்ற மீன் குஞ்சுகள் கவனமாக இருந்தன. சந்தோஷமாக வாழ்ந்தன.

இன்றைய செய்திகள்

05.11.19

*அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

*டெல்லி காற்றுமாசு விவகாரம்: பஞ்சாப், ஹரியானா, உ.பி. மாநில தலைமை செயலாளர்களுக்கு உச்சநீதிமன்றம் சம்மன்.

*பொள்ளாச்சி  ஆழியாறு அணையில் இருந்து நீர் திறப்பு.

*டில்லியை தொடர்ந்து பஞ்சாப்பில் உச்சகட்டத்தை எட்டி உள்ள காற்று மாசுபாடு காரணமாக பஞ்சாப் கண்காணிப்பு மைய செயற்கோள்கைகள் திணறி வருகின்றன.

*16 அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி: உலக கோப்பை அட்டவணை வெளியீடு...2020 நவ. 15ல் மெல்போர்னில் இறுதிப்போட்டி.

Today's Headlines

🌸A new meteorological low-lying area near Andaman has been developed, said the Chennai Meteorological Department.

🌸Delhi Airpollution issue:  Supreme Court sent summons to   Punjab, Haryana and UP

🌸Pollachi: Water released from Azhiyar dam.

🌸 Due to air pollution which has reached its peak in Punjab following Delhi the satellites which monitoring the Punjab are being groped.

🌸 World cup T20 match schedule  between 16 teams was released,on 2020 Nov  15th finals will be played at Melbourne.

Prepared by
Covai women ICT_போதிமரம.

Wednesday, October 9, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 10.09.19

திருக்குறள்

அதிகாரம்:வாய்மை

திருக்குறள்:291

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.

விளக்கம்:

பிறருக்கு எள்முனையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும்.

பழமொழி

A bad day never hath a good night.

 முதல் கோணல் முற்றும் கோணல்.

இரண்டொழுக்க பண்புகள்

1. போக்குவரத்து விதிகளை மீறி நடப்பது மரணம் மற்றும் விபத்துகள் நடைபெற வழிவகுக்கும்.

2. எனவே எப்போதும் சாலை விதிகளை மதித்து நடப்பேன்.

பொன்மொழி

படிப்படியான வளர்ச்சி தான் நிலையான வெற்றியைத் தரும் ...அசுர வளர்ச்சி என்றும் அர்த்தமற்ற தோல்வியைத் தரும் ....

------ பில்கேட்ஸ்

பொது அறிவு

1. 13 மொழிகளில் பேசவும், எழுதவும் தெரிந்த இந்திய பிரதமர் யார்?

பி்.வி. நரசிம்ம ராவ்.

2. டெல்லியில் உள்ள 'ராஜ்காட் சமாதி' யாருடைய நினைவாக கட்டப்பட்டது?

மகாத்மா காந்தி

English words & meanings

1. Camphor - a white volatile subject with aromatic smell. கற்பூரம். வெள்ளை நிறம்  மிகுந்த இனிய நறுமணம் கொண்ட திடப்பொருளாகும். இது இயற்கையாக சில மரங்களின் கட்டைகளிலும், செயற்கையாக டர்பென்டைன் எண்ணெயில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

 2. Customer - a person who buys things or getting service. நுகர்வோர்

ஆரோக்ய வாழ்வு

வெங்காயத்தாளில் உள்ள பெக்டின் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

Some important  abbreviations for students

min. - minute or minimum.

misc. - miscellaneous

நீதிக்கதை

குருவி கொடுத்த விதை

ஓர் ஊரில் பண்ணையார் ஒருவருக்கு அந்த ஊரில் இருந்த அனைத்து நிலங்களும் சொந்தமாக இருந்தது. அவரிடம் முனியன் என்ற உழவன் வேலை பார்த்தான். அவனுக்கு சிறிய குடிசையும், கொஞ்ச நிலமும் இருந்தது.

பண்ணையாரிடம் முனியன், ஐயா! உங்கள் அனைத்து நிலங்களில் உழுது விதை நட்டுவிட்டார்கள். என் நிலம் மட்டும் காலியாக உள்ளது. என் நிலத்தில் விதைப்பதற்கு சிறிது தானியம் தாருங்கள் என்றான்.

சொந்தமாகப் பயிரிட வேண்டாம், என் நிலத்திலேயே உழுது பயிரிடு. அரை வயிற்றுக் கஞ்சியாவது கிடைக்கும் என்று கோபத்துடன் சொன்னார் அவர். சோகத்துடன் வீட்டுக்கு சென்று தன் மனைவியிடம், நமக்கு தானியம் தரவில்லை. நீயும் நம் குழந்தைகளும் எப்போதும் போலப் பட்டினி கிடக்க வேண்டியதுதான். இதுதான் நம் தலைவிதி என்று சொல்லி வருத்தப்பட்டான்.

அவர்கள் குடிசையில் குருவி ஒன்று கூடு கட்டியதை முனியனும், அவன் மனைவியும் பார்த்தனர். பாவம்! வாய் பேச முடியாத உயிர் அது. நாம் அதற்குத் தொல்லை செய்யக்கூடாது என்றான் முனியன். கூட்டில் அந்தக் குருவி நான்கு குஞ்சுகள் பொறித்தது.

திடீரென்று அந்தக் குருவிக்கூட்டுக்குள் ஒரு பாம்பு நுழைந்ததை பார்த்த குருவிக்குஞ்சுகள் கத்தியது, அதைக்கேட்ட உழவன் பாம்பை பிடித்துக் கொல்வதற்குள் அது மூன்று குஞ்சுகளைத் தின்று விட்டது. தரையில் விழுந்த ஒரு குஞ்சு மட்டும் கால் ஒடிந்து இருந்தது. அதை அன்போடு எடுத்து அதற்குக் கட்டுப்போட்டான். அதை மீண்டும் கூட்டில் வைத்து உணவு கொடுத்து நன்கு பார்த்துக்கொண்டான்.

அந்தக் குருவியின் கால்கள் சரியானதும், அது பறந்து சென்றது. உழவனும் குடும்பத்தினரும் வறுமையில் இருந்தனர். அச்சமயம் அவர்கள் வீட்டுக்கு அவன் வளர்த்த குருவி வந்தது. அவன் கையில் 3 விதையை கொடுத்து இதை உன் வீட்டுத் தோட்டத்தில் ஒன்றும், வீட்டின் முன்புறத்தில் ஒரு விதையையும், மற்றொரு விதையை வீட்டின் ஜன்னல் ஓரத்திலும் நட்டு வை. என் மீது காட்டிய அன்பிற்கு நன்றி என்று சொல்லிவிட்டுப் பறந்தது. குருவி சொன்னபடியே மூன்று விதைகளையும் நட்டான்.

மறுநாள் காலையில் அங்கே மூன்று பெரிய பூசணிக்காய்கள் காய்த்தன. இதைப் பார்த்து ஆச்சரியப்பட்டான். பின்பு, அந்த பூசணிக்காயை இரண்டு துண்டாக வெட்டிப்பார்த்தான். அதனுள் இருந்து விதவிதமான உணவுப் பொருள்கள் வந்தன. சுவையான அவற்றை எல்லோரும் மகிழ்ச்சியாக உண்டனர். மீண்டும் அந்தப் பூசணிக்காயை ஒன்று சேர்த்ததும். பழையபடி அது முழுப் பூசணிக்காய் ஆனது.

இது மந்திரப் பூசணிக்காய். நமக்கு உணவு வேண்டும் என்றால் பிளந்தால் உணவு கிடைக்கும் என்றான். இதேபோல், மீதமுள்ள 2 பூசணிக்காயையும் பிளந்து பார்த்தனர். அதில், ஒன்றில் அழகான ஆடைகள், விலை உயர்ந்த மணிகளும், மற்றொன்றில் பொற்காசுகளும் இருந்தன.

அதன் பிறகு முனியன் குடும்பம் பெரும் வசதியான வாழ்க்கை வாழ்ந்தனர். இதனை அறிந்த பண்ணையார், உழவனிடம் முனியா! உனக்கு எங்கிருந்து இவ்வளவு செல்வம் கிடைத்தது? உண்மையைச் சொல் என்று கேட்டார்.

அவனும் நடந்ததை எல்லாம் அப்படியே சொன்னான். அதை கேட்ட அவர் வீட்டில் மேல் பகுதியில் குருவிக்கூடு ஒன்றை அவரே செய்தார். ஒரு குருவி வந்து அந்தக் கூட்டில் தங்கி நான்கு குஞ்சுகள் பொறித்தது. பாம்பு வரவே இல்லை. அதனால் அவரே, அந்த குருவிக்கூட்டை கலைத்து மூன்று குஞ்சுகளை கொன்றார். ஒரு குருவியின் காலை உடைத்துக் கீழே எறிந்தார்.

பிறகு கால் உடைந்த குருவியிடம் அன்பு காட்டுவது போல் நடித்து வேளை தவறாமல் உணவு அளித்தார். கால் சரியான அந்தக் குருவி கூட்டைவிட்டுப் பறந்து போனது. அவர் குருவி விதை கொடுக்கும் என்று எதிர்பார்த்தபோது, கதவைத் தட்டியது குருவி. அவரிடம் மூன்று விதைகளைத் தந்தது. ஒன்றை வீட்டின் பின்புறமும், இரண்டாவதை வீட்டின் முன்புறமும், மூன்றாவதைக் கிணற்றோரமும் நடு என்று சொல்லிவிட்டுப் பறந்து சென்றது. மூன்று தானியங்களையும் நட்டார்.

மறுநாளே மூன்று பெரிய பூசணிக்காய்கள் காய்த்து இருந்தன. மூன்று பூசணிக்காயையும் வெட்டினார். அதில் ஒன்றில் இருந்து எண்ணற்ற பூச்சிகள் வயலில் விளைந்திருந்த பயிர்களை எல்லாம் ஒரு நொடிக்குள் வீணாக்கியது. பின்பு இரண்டாவதில் இருந்து தீ வெளிப்பட்டு அவரையும் அந்த மாளிகையையும் ஒரு நொடிக்குள் சாம்பல் ஆக்கியது. மூன்றாவதில் பாம்பு, தேள், பூரான் போன்றவை இருந்தன. அதன்பிறகு, தனது பேராசை தவறு என உணர்ந்தார் பண்ணையார்.

நீதி :
பொறாமை குணம் இருத்தல் கூடாது.

வியாழன்
அறிவியல் & கணினி

அறிவோம் அறிவியல்

நீரும் எண்ணெயும் கலக்குமா?

 தேவையான பொருட்கள் : ஒரு மூடியுள்ள குப்பி, சமையல் எண்ணெய், சோப்,நீர் மற்றும் உணவு வண்ணம் .

 செய்முறை :நீரை குப்பியில் எடுத்து கொள்ளவும். அதில் சிறு துளிகள் உணவு வண்ணம் இடவும். நன்கு கலக்கவும். பின் அதில் எண்ணெய் ஊற்றி நன்கு மூடி குலுக்கவும். எண்ணெயும் நீரும் சேராமல் இருப்பதைக் காணலாம். தற்போது அதில் சிறிது திரவ சோப்பை ஊற்றவும். இப்பொழுது கலக்குங்கள் எண்ணெயும் நீரும் கலக்க ஆரம்பிக்கும். காரணம் :சோப்பு இரண்டையும் நோக்கி ஈர்க்கப்படும். எனவே அது நீர் மற்றும் எண்ணெயோடு கலந்து அதை கலக்க ஆரம்பிக்கும்.

கணினி சூழ் உலகு

6, 7 & 8 - ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் உள்ள ICT Corner activities செய்வது எப்படி என்பதைப் பற்றிய காணொலி

Click here to view the video

இன்றைய செய்திகள்

09.10.2019

* நாம் அன்றாடம் பயன்படுத்தி வரும் மொபைல் போன்கள் முதல் லேப்டாப்கள், இ-வாகனங்கள் வரையிலான எலெக்ட்ரானிக் சாதனங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் லித்தியம் பேட்டரிகளின் பரிணாம வளர்ச்சி குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டதற்காக வேதியியல் விஞ்ஞானிகள் ஜான் பி குட்எனாப்(ஜெர்மனி), ஸ்டான்லி விட்டிங்ஷஹாம்(பிரிட்டன்) மற்றும் அகிரா யோஷினோ(ஜப்பான்) ஆகிய மூவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.



* நெல்லை, மதுரை, திண்டுக்கல், சேலம், நீலகிரி மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

* கடல் பிளாஸ்டிக்கை அகற்ற புதிய தொழில்நுட்பத்தை நெதர்லாந்து விஞ்ஞானி கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.

* உலக சாம்பியன் பட்டம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கிய கேரள ஒலிம்பிக் சங்கம்.

* தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி: தெ.ஆப்பிரிக்காவுக்கு எதிராக இன்று புனேவில் 2-வது டெஸ்ட் தொடங்குகிறது.

Today's Headlines

🌸 The Nobel Prize  was declared to John B. Goodenab (Germany), Stanley Wittenham (UK) and Akira Yoshino (Japan)  for their work on the evolution of Lithium batteries, which is used in electronic devices, from mobile phones to laptops and e-vehicles.

 🌸 Meteorological Department Warned that there will be heavy rainfall in some districts including Nellai, Madurai, Dindigul, Salem, Nilgiris and Coimbatore.  .

 🌸Netherland scientist invented a new technology to remove plastics in marine

 🌸 Kerala Olympic Association awarded RS 10 lakh to our badminton champion P V Sindhu.

🌸 Indian team took initiation to win the series: Today  the 2nd Test begins  in Pune against South Africa .

Prepared by
Covai women ICT_போதிமரம்

Wednesday, September 25, 2019

பள்ளி காலை வழிபாட்டுக் குழுவின் சிறப்பு நிகழ்வு - 25.09.19

அனைத்து ஆசிரியர்களும் தினமும் காலையில் தங்கள் அலைபேசியில் அதிகம் தேடும் செய்தி எங்களின் காலை வழிபாடு செயல்பாடுகள். இதனை கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக வெற்றிகரமாக செயல்படுத்தி வருவதற்கு என் குழு நண்பர்களே காரணம். பல சிரமங்கள் இருந்தாலும் தினமும் தங்களுடைய பதிவுகளை பதிவிட்டு, பிழை திருத்தம் செய்து இதனை சுமையாகக் கருதாமல் பெரும் கடமையாக எண்ணி செயல்படுத்தி வரும் என் அருமை குழு நண்பர்களுக்கு நன்றிகள் பல.....எங்களின் செயல்பாடுகளை அங்கீகரித்து பாடசாலை வலைதளத்தால் வழங்கப்பட்ட குரு விருதினை அனைவரின் சார்பாகவும் திருச்சியில் நடந்த நிகழ்வில் பெற்றுக் கொண்டேன்.இக்கௌரவத்தினை எங்கள் குழுவினருக்கு வழங்கும் பொருட்டு பல நாட்கள் காத்திருந்து பின் நேற்று நடைப்பெற்ற எங்களின் போதிமரம் ஒருநாள் கணினிப் பயிற்சியில் ஒரு வாய்ப்பு கிடைத்தது. எம் குழுவின் அன்பர்கள் அனைவருக்கும பாடசாலை வலைதளத்தின் சான்றிதழுடன் எனது அன்பளிப்பாக ஒரு சிறிய பரிசும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.  சென்னையில் இருந்து உதவிவரும் திருமதி.ரூபி பாக்கியம் ஆசிரியர் அவர்களுக்கு சென்னையில் நடைப்பெறற ஒரு நிகழ்வில் திரு.ஆசீர் ஜூலியஸ் அவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். கோவை, பொள்ளாச்சி, சென்னை என பல பகுதிகளில் இருந்தாலும் ஒரே எண்ணத்தோடு ஒண்றிணைந்து இப்பணியினை திறம்பட செய்துவரும் என் குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.... இதற்கு உறுதுணயாக இருந்து வரும் எல்லாம் வல்ல இறைவனுக்கும், எங்கள் அனைவரின் குடும்ப உறவுகளுக்கும், போதிமரம் மூர்த்தி ஐயா அவர்களுக்கும், தினமும் வழிபாட்டுச் செயல்பாடுகளை PDF ஆக மாற்றி தந்து கொண்டிருக்கும் மகிழ்ச்சி ஐயா அவர்களுக்கும், எங்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கும் எண்ணற்ற ஆசிரிய நண்பர்களுக்கும் எங்கள் குழுவின் சிரம் தாழ்ந்த நன்றிகள்....... தொடர்ந்து பயணிப்போம் உங்கள் அனைவரின் ஆதரவுடன்...

Monday, September 2, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 03.09.19

திருக்குறள்

அதிகாரம்:கூடாவொழுக்கம்

திருக்குறள்:272

வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தான்அறி குற்றப் படின்.

விளக்கம்:

தன் மனத்திற்குக் குற்றம் என்று தெரிந்தும்கூட அதைச் செய்பவர், துறவுக்கோலம் பூண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை.

பழமொழி

All things come to those who wait

 பொறுத்தார் பூமி ஆள்வார்.

இரண்டொழுக்க பண்புகள்

1. அமைதி நம் அறிவை வளர்ப்பது மட்டும் அல்ல நாம் ஆழ்ந்து சிந்திக்க நம்மை தூண்டும்.
2. எனவே தேவையில்லாத பேச்சை குறைத்து அமைதி காக்க முயல்வேன்.

பொன்மொழி

இறைவன் தனக்கான அடையாளங்களை இயற்கையிடம் அற்பனித்தான்.
மனிதர்களாகிய நாம்  இயற்கையை காப்போமாக...

----- வலம்புரி ஜான்

பொது அறிவு

1.பொருளாதாரத்தின் தந்தை எ‌ன்று‌ அழைக்கப் படுபவர் யார்?

ஆடம் ஸ்மித்

2. உலகின் மிகச் சிறிய கடற்கரை எந்த நாட்டில் உள்ளது?

மொனோகோ நாடு.
4.1 கி. மீ மட்டுமே உள்ளது

English words & meanings

Ginger - a spice as well as medicine
இஞ்சி. ஒரு நறுமணப் பொருள் மற்றும் மருத்துவ பொருள் ஆகும்.
தரை கீழ் தண்டிற்கு சிறந்த எடுத்துக்காட்டு

Grazing - a method of feeding herbivores animals
மேய்ச்சல், மேய்தல்

ஆரோக்ய வாழ்வு

வெந்தயம் கல்லீரல் புற்றுநோயை தடுக்கிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கிறது .

Some important  abbreviations for students

FYI - For Your Information

DIY - Do It Yourself

நீதிக்கதை

நரியின் தந்திரம்

ஒரு அடர்ந்த காட்டில் சிங்கம் ஒரு கூட்டம் சேர்த்தது. எல்லா மிருகமும் வந்தது. முதலில் ஒரு குரங்கைக் கூப்பிட்டு, என் உடம்பை முகர்ந்து பார் எப்படி இருக்கு? ன்னு சொல் என்றது சிங்கம். குரங்கு வந்து முகர்ந்து பார்த்துவிட்டு வாசனை நல்லா இல்லீங்க கொஞ்சம் மோசமாத்தான் இருக்குன்னு சொல்லியது.

சிங்கம் கோபமடைந்து என் உடம்பையா அப்படிச் சொல்றேன்னு ஓங்கி ஒரு அறை விட்டுது. குரங்கு கீழே விழுந்துவிட்டது. அடுத்து ஒரு கரடியைக் கூப்பிட்டு. நீ வா வந்து பார்த்து சொல்லு என்றது. கரடி அந்தக் குரங்கைப் பார்த்துக்கிட்டே வந்தது.

சிங்கத்தை முகர்ந்து பார்த்தது ஆகா! ரோஜாப்பூ வாசனை! ன்னு சொல்லுச்சு. பொய்யா சொல்றே? ன்னு ஓங்கி ஒரு அறை விட்டது. அதுவும் கீழே விழுந்தது. அடுத்தப்படியா ஒரு நரியைக் கூப்பிட்டு. நீதான் சரியாச் சொல்லுவ! நீ வந்து சொல்லு என்றது.

நரி குரங்கையும் கரடியையும் பார்த்துக்கிட்டே வந்தது. சிங்கத்தை முகர்ந்து பார்த்து மன்னிக்கணும் தலைவா, எனக்கு மூணு நாளா ஜலதோஷம்! என்று சொல்லி நரித் தந்திரமாக தப்பிக்கொண்டது.

நீதி :
நரியின் தந்திரம் எல்லா மனிதர்களுக்கும் இருத்தல் வேண்டும்.

செவ்வாய்

English & ART

Some interesting facts about English language

* The word "uncopyrightable" is the longest English word in normal use that contains no letter more than once.

* A sentence that contains all 26 letters of the alphabet is called a "pangram".

* The following sentence contains all 26 letters of the alphabet: "The quick brown fox jumps over the lazy dog." This sentence is often used to test typewriters or keyboards.

ART

கலையும் கைவண்ணமும் காண இங்கே கிளிக் செய்யவும்

இன்றைய செய்திகள்

03.09.2019

☘ப சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து லேண்டர் 'விக்ரம்' வெற்றிகரமாக தனியாக பிரிக்கப்பட்டு தன்னுடைய வரலாற்று சிறப்புமிக்க நிலவிறக்கத்திற்கு  தயார் நிலையில் உள்ளது.

☘மேற்கு வங்க மாநிலம் மேற்கு மேதினி பூர் மாவட்டத்தில் பணி அமர்த்தப்பட்ட பாபன் மோகன்டா எனும் வன அதிகாரி அனைத்து நெகிழி குப்பிகளையும் தன் அலுவலக பூந்தொட்டிகளாக மாற்றி அனைவரையும் ஆச்சரியப் பட வைத்துள்ளார்.



☘தமிழகம் மற்றும் புதுவையில் இன்று இரவு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

☘ வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக முதல் சர்வதேச சதத்தை பதிவு செய்த விஹாரி தனது தந்தைக்கு இதனை அர்ப்பணிப்பதாக தெரிவித்துள்ளார்.

☘2-வது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 468 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த இந்திய அணி இந்த டெஸ்டிலும் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது.

Today's Headlines

🌸In Chandrayaan-2 the lander 'VIKRAM' got separated and Chandrayaan-2 is ready for the historical landing on moon.

🌸A forest officer named Papon Mohanta who was appointed in West Medinipur District in Calcutta miraculously converted all plastic bottles into beautiful flower pot to decorate his office and astonished everyone.

🌸 To night there is a chance of rain in both Tamil Nadu and Pudhuchery says Chennai metrology.

🌸Hanuma Vihari who recorded his first century against West Indies said that century is dedicated to his father - a heart touching statement.

🌸 In second test there is a great chance for India to win the match as it set it's target of 468 runs  against West Indies.

Prepared by
Covai women ICT_போதிமரம்

Tuesday, July 16, 2019

Tuesday, June 11, 2019

Thursday, May 30, 2019

1st std text books - term 1, term 2

Term - 1

Tamil & English - Click here to download

கணக்கு & சூழ்நிலையியல் - Click here to download

Maths & EVS - Click here to download

Term - 2

Tamil & English - Click here to download

கணக்கு & சூழ்நிலையியல் - Click here to download

Maths & EVS - Click here to download

TERM - 3

Tamil & English -  Click here to download

கணக்கு & சூழ்நிலையியல் - Click here to download

Maths & EVS - Click here to download



Wednesday, May 29, 2019

5th std text books term 1, Term 2, Term 3

Term -1

Tamil & Eng - Click here to download

கணக்கு, அறிவியல் & சமூகவியல் - Click here to download

Maths, Science & Social - Click here to download

Term 2

Tamil & Eng - Click here to download

கணக்கு - Click here to download

அறிவியல். - Click here to download

சமூகவியல் - Click here to download

Maths - Click here to download

Science - Click here to download

Social science - Click here to download

TERM - 3

Tamil & English - Click here to download

கணக்கு, அறிவியல் & சமூகவியல் - Click here to Download

Maths, Science & Social - Click here to download

4th std text books term 1, term 2, term 3

Term - 1

Tamil & English - Click here to download

கணக்கு, அறிவியல் & சமூகவியல் - Click here to download

Maths, Science & Social - Click here to download

Term - 2

Tamil & English - Click here to download

கணக்கு - Click here to download

அறிவியல் - Click here to download

சமூகவியல் - Click here to download

Maths - Click here to download

Science - Click here to download

Social - Click here to download

TERM - 3

Tamil - Click here to download

English - Click here to download

கணக்கு, அறிவியல் & சமூகவியல் - Click here to download

Maths, Science & Social - click here to download

3rd text books Term 1, Term 2, Term 3

Term - 1

Tamil  & Eng - Click here to download

கணக்கு, அறிவியல் & சமூகவியல் - Click here to download

Maths, Science & Social - Click here to download

Term - 2

Tamil & Eng - Click here to download

கணக்கு - Click here to download

அறிவியல் - Click here to download

சமூகவியல் - Click here to download

Maths - Click here to download

Science -  Click here to download

Social - Click here to download

TERM - 3

Tamil & English - Click here to download

கணக்கு, அறிவியல் &  சமூகவியல் - Click here to download

Maths, Science. & Social - Click here to download


2nd std new books term 1, term 2, term 3

Term - 1

Tamil full book - Click here to download

English - Click here to download

கணக்கு, அறிவியல் & சமூகவியல் - Click here to download

Maths, Science & Social - Click here to download

Term - 2

Tamil & English - Click here to download

கணக்கு & சூழ்நிலையியல் - Click here to download

Maths & EVS - coming soon

Term - 3

Tamil & English - Click here to download

கணக்கு & சூழ்நிலையியில் - Click here to download

Maths & EVS - Click here to download


Thursday, May 16, 2019

6th text books - term 1, term 2, term 3

Term - 1

Tamil - Click here to download

English - Click here to download

Tamil medium

கணக்கு -  Click here to download

அறிவியல் - Click here to download

சமூகவியல் - Click here to download

English medium

Maths - Click here to download

Science -  Click here to download

Social science - Click here to download

Term - 2

Tamil & English - Click here to download

Tamil medium

கணக்கு - Click here to download

அறிவியல் & சமூகவியல் - Click here to download

English medium

Maths - Click here to download

Science & Social - Click here to download

TERM - 3

 Tamil & English - Click here to download

Tamil medium

கணக்கு - Click here to download

அறிவியல் & சமூகவியல் - Click here to download

English medium

Maths -  Click here to download

Science & Social -  Click here to downoad





8 th std new books - term 1, term 2, term 3

Term - 1

Tamil full book - Click here to download

English - Coming soon

Tamil medium

கணக்கு - Click here to download

அறிவியல் & சமூகவியல் - Click here to download

English medium

Maths - Click here to download

Science  & Social science - Click here to download

Term - 2

Tamil & English - Click here to download

Tamil medium

கணக்கு - Click here to download

அறிவியல் & சமூகவியல் - Click here to download

English medium

Maths - Click here to download

Science  & Social science -  Click here to download

TERM - 3

Tamil - Coming soon

English -  coming soon

Tamil medium

கணக்கு - Click here to download

அறிவியல் & சமூகவியல் - Click here to download

English medium

Maths - Click here to download

Science  & Social science  - Click here to download

Wednesday, May 15, 2019

7th std text books - term 1, term 2, term 3

Term - 1

Tamil - Click here to download

English - Click here to download

Tamil medium

கணக்கு - Click here to download

அறிவியல் & சமூகவியல் - Click here to download

English medium

Maths - Click here to download

Science & Social - Click here to download

Term - 2

Tamil & English - Click here to download

Tamil medium

கணக்கு - Click here to download

அறிவியல் & சமூகவியல் - Click here to download

English medium

Maths - Click here to download

Science & Social - Click here to download

TERM - 3

Tamil & English -  click here to download

Tamil medium

கணக்கு  - Click here to download

அறிவியல் & சமூகவியல்  -  Click here to download

English medium

Maths  - Click here to download

Science & Social -  Click here to download

Thursday, April 4, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 05.04.19

திருக்குறள்

அதிகாரம்:தீவினையச்சம்

திருக்குறள்:202

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.

விளக்கம்:

தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்சிட வேண்டும்.

பழமொழி

எறும்பு ஊரக் கல்லும் தேயும்

Persistence never fails

இரண்டொழுக்க பண்புகள்

 1.பள்ளி பொது இடங்களில் உள்ள பொருட்களை உடைக்காமல் பாதுகாப்பேன்.
2.தே‌சிய சின்னங்கள், தே‌சிய கொடி மற்றும் தே‌சிய பாடலுக்கு உ‌ரிய மரியாதை அளிப்பேன்.

பொன்மொழி

கோபம், மனதில் பல தீய எண்ணங்கள் தோன்றுவதற்கு காரணமாக இருக்கிறது. பொறாமை, வஞ்சகம், ஒழுக்கமின்மை போன்ற பல தீய குணங்களையும் உண்டாக்கி விடுகிறது. வீண் விபரீதங்களையும், பொருள் இழப்பையும் ஏற்படுத்துகிறது. எனவே, கோபத்தை குறைத்துக்கொள்ள வேண்டும்.

     - ஔவையார்

 பொது அறிவு

1.தமிழக அன்னிபெசன்ட் என்று அழைக்கப்படுபவர் யார்?

 மூவலூர்  ராமாமிர்தம் அம்மையார்

2. மாநிலங்களவைத் துணைத் தலைவர் யார்?

 ஹரிவன்ஷ்   நாராயன் சிங்

காலத்திற்கு ஏற்ப உண்ண வேண்டிய உணவுகள்



1. கோடைக் காலத்தில், குளிர்ச்சி தரக்கூடிய உணவுகளான கேழ்வரகு, பச்சைப் பயறு, பாசிப் பருப்பு, நீர்க் காய்கள், கீரைகள், இளநீர், இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்க்காத நீர் மோர் சாப்பிடலாம்.

2. குளிர் காலத்தில் செரிமான சக்தியின் ஆற்றல் அதிகமாக இருக்கும். பொங்கல், பூரி போன்ற எண்ணெய் நிறைந்த, செரிமானத்துக்கு நேரம் ஆகக்கூடிய உணவைச் சாப்பிட்டாலும் செரிக்கக் கூடிய ஆற்றல் உடலில் இருக்கும். நல்லெண்ணெய், பசு நெய் சேர்த்த உணவுகள் சாப்பிடலாம். இதனால் சரும வறட்சி இருக்காது. நீண்ட நேரத்துக்குப் பசிக்காத வகையில், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.

English words and Meaning

Viewpoint  கண்ணோட்டம்
சிந்திக்கும் விதம்
Worse    மிகவுகம் கெட்ட
Tragedy.   சோக சம்பவம்
Stun   வியப்படைய செய்
பிரமிக்க வை
Revile  திட்டுதல்,ஏசுதல்

அறிவியல் விந்தைகள்

ஞாயிறு
*கதிரவன் அல்லது சூரியன் (Sun) என்பது கதிரவ அமைப்பின் மையத்தில் உள்ள ஒரு விண்மீன் ஆகும்.
 *இது கிட்டத்தட்ட ஒரு கோள வடிவில் இருக்கும் சூடான பிளாசுமா ஆகும்
*கதிரவன், புவியில் உயிர்கள் வாழ்வதற்கான ஆற்றல் மூலமாக விளங்கி வருகிறது. புவியை விட 109 மடங்கு பெரியதாக உள்ளது.
*கதிரவன், புவியில் உயிர்கள் வாழ்வதற்கான ஆற்றல் மூலமாக விளங்கி வருகிறது. புவியை விட 109 மடங்கு பெரியதாக உள்ள
* கதிரவனின் நிறையில் மூன்றில் ஒரு பங்கு ஹைட்ரசனும்  மீதமுள்ள பங்கில் பெரும்பாலும் ஹூலியமும்  அவற்றுடன் சிறிய அளவிலான ஆக்சிஜன், கரிமம், இரும்பு மற்றும் நியான் உள்ளிட்ட  தனிமங்களும் உள்ளன.

Some important  abbreviations for students

* MRI   -  Magnetic Resonance Imaging

* MICR -  Magnetic ink character recognition

நீதிக்கதை

வீரசிம்மன் ஒரு குறுநல மன்னர்! சிற்றரசராக இருந்த அவர். அக்பருடைய ஆதிக்கத்தில் இருந்தார். முகலாய சாம்ராஜ்யத்திற்கு கப்பம் செலுத்தி, அவர்களுடன் நட்புறவோடிருந்தார். தனது ராஜ்யத்தில் குடிமக்களின் நிம்மதியையே பெரிதாக மதித்த வீரசிம்மன், முகலாயர்களின் அடிமையாக இருந்ததைப் பொருட்படுத்தவில்லை. ஆனால், அவருடைய ராஜ்யத்தில் இருந்த சில இளைஞர்கள் மன்னர் தன்மானத்தை அடகுவைத்து விட்டதாகக் கருதினர். அந்த இளைஞர்கள் தயக்கமின்றி அவரை அணுகி அவருடைய கொள்கைக்குத் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தனர்.

சுதந்திரம் தங்களுடைய பிறப்புரிமை என்றும், நாட்டின் அமைதிக்காக, முகலாயர்களின் அடிமைகளாகத் திகழ்வது அவமானம் என்றும் தங்கள் கருத்தை வெளிப்படுத்தினர். அதற்கு வீரசிம்மன், “நானும் சுதந்திரத்தை விரும்புகிறேன். ஆனால் அதைப் பெறுவதற்காக, இரத்த ஆறு ஓடுவதை நான் விரும்பவில்லை, முகலாயர்கள் மிகப்பலம் பொருந்தியவர்கள். அவர்களுடைய படைப்பலத்திற்கு முன் குறுநல மன்னனாகிய என்னால் ஒன்றும் செய்ய முடியாது” என்றார்.

அதற்கு அவர்கள் “படைப்பலத்தை மட்டும் ஏன் ஒப்பிடுகிறீர்கள்? நம்முடைய அறிவினால் முகலாயர்களை வெற்றி கொள்ள முடியாதா?” என்றனர். “நம்மிடம் அத்தகைய அறிஞர்கள் இருக்கிறார்களா?” என்றார் வீரசிம்மன்.
“ஏன் இல்லாமல்?” என்றனர் இளைஞர்கள்.

“ஒன்று தெரிந்து கொள்ளுங்கள்! அக்பரின் சபையில் உள்ள அறிஞர்களைப் போல் வேறு எங்குமே காண முடியாது” என்றார். “அவர்களுடைய அறிவுத்திறமையை சோதித்துப் பார்த்து விடலாமே!” என்று சவால் விட்ட ஓர் இளைஞன் “நான் ஒரு சோதனை சொல்கிறேன். நீங்கள் அக்பரிடம் அவருடைய தர்பாரிலிருந்து அறிவு நிரம்பிய ஒரு பானையை அனுப்பச் சொல்லி வேண்டுங்கள்” என்றான். “அறிவு நிரம்பிய பானையா? அது ஏன்? தண்ணீரைப் பிடிப்பதுபோல் பானையில் அறிவை நிரப்ப முடியுமா?” என்று கேட்டார் மன்னர்.

“அது இயலாது என்று நினைக்கிறீர்களா?” என்றான் அவன்.
“ஆம்! அது முடியாத ஒன்று!” என்றார் மன்னர்.
“இயலாததை செய்து முடிப்பவன்தான் அறிவாளி! அக்பரின் தர்பாரில் உலகிலேயே சிறந்த அறிவாளிகள் உள்ளனர் என்று சொன்னீர்களே! அத்தகைய தலைசிறந்த அறிவாளிகள் நாங்கள் கேட்டதை செய்யட்டுமே!” என்று திமிராகக் கேட்டான் அவன். மன்னரும் வேறு வழியின்றி அதற்கு ஒப்புக் கொண்டார்.

சில நாள்கள் கழித்து, வீரசிம்மன் நன்கு பேசவல்ல ஒரு தூதனை கை நிறைய வெகுமதிகளுடன் அக்பரிடம் அனுப்பினார். வீரசிம்மனின் தூதன் அக்பரின் தர்பாரில் நுழைந்து அவரை வணங்கி விட்டு, தனது மன்னர் கொடுத்தனுப்பியிருந்த வெகுமதிகளை அக்பரிடம் சமர்ப்பித்துவிட்டு, மன்னரின் வாழ்த்துகளையும் தெரிவித்தான்.
“வீரசிம்மன் நலமாக இருக்கிறாரா?” என்று அக்பர் வினவினார். “சக்கரவர்த்தியின் தயவு இருக்கும் போது எங்கள் மன்னரின் நலத்தைப் பற்றிக் கேட்க வேண்டுமா!” என்றான் தூதன் பணிவுடன்.

“உங்கள் மன்னருக்கு என் வாழ்த்துகளைத் தெரிவிப்பாய்!” என்ற அக்பர், “மன்னரிடமிருந்து எனக்கு ஏதாவது செய்தி உண்டா?” என்று கேட்டார். “பிரபு! உங்கள் தர்பாரில் பல அறிஞர்கள் நிறைந்துள்ளனர். அதனால் அறிவு நிரம்பிய ஒரு பானையை தயவு செய்து நீங்கள் கொடுத்தருளும் படி எங்கள் மன்னர் வேண்டிக் கொள்கிறார்“ என்றான் தூதன். அதைக் கேட்டு தர்பாரில் இருந்தவர் வியப்படைந்தனர்.
அறிவை எப்படிப் பானையிலிட்டு நிரப்ப முடியும்? ஆனால் அக்பர் அதைப் பற்றி தீவிரமாக சிந்திக்கவில்லை. தன் தர்பாரில் ஏராளமான அறிஞர்கள் இருக்கையில், இந்த விஷயத்தை அவர்களே கவனித்துக் கொள்வார்கள் என்று விட்டு விட்டார். அதனால் அவர் வீரசிம்மன் விரும்பிய பொருள் ஒரு மாதத்திற்குள் அனுப்பப்படும் என்று தூதனிடம் சொன்னார்.


“பிரபு! உங்கள் கருணைக்கு எல்லையே இல்லை! உங்களுடைய ஆதிக்கத்திலிருப்பதை எண்ணி எங்கள் மன்னர் பெருமைப்படுகிறார்” என்று தூதனும் சாமர்த்தியமாக அக்பர் மனம் குளிரும்படி பேசிவிட்டு, திரும்பிச் சென்றான்.
அவன் சென்ற பிறகு, அக்பர் தன் தர்பாரிலிருந்த அறிஞர்களை நோக்க அவர்களுள் ஒருவர் “பிரபு! வீரசிம்மன் கேட்டிருப்பதை கொடுக்க முடியவே முடியாது” என்றார். “முடியாதது என்று ஒன்றுமே கிடையாது. அதைக் கொடுத்தே ஆக வேண்டும்” என்று அக்பர் கோபத்துடன் கூறியதும், அனைவரும் பயத்தினால் ஒன்றும் பேசாமல் இருந்து விட்டனர்.
“பிரபு!” என்று மெதுவாக அழைத்தவாறே எழுந்த பீர்பால், “எனக்கு ஒரு பதினைந்து நாள் அவகாசம் கொடுங்கள். இந்த சவாலை நான் சமாளிக்கிறேன்” என்றார்.

“நிச்சயமாக இதை வெற்றிகொள்ள முடியுமா?” என்று அக்பர் கேட்டார்.
“நான் எப்போதாவது சொல்லிவிட்டு செய்யாமல் இருந்திருக்கிறேனா?” என்று பீர்பால் திருப்பிக் கேட்டதும்,
“நல்லவேளை! என்னுடைய தர்பாரில் நீ ஒருத்தனாவது அறிவாளியாக இருக்கிறாயே!” என்று பீர்பாலைப் புகழ்ந்து விட்டு மற்றவர்களை ஏளனத்துடன் பார்த்தார்.

அன்று மாலை வீடு திரும்பிய பீர்பால், தன் தோட்டத்தை நன்றாகப் பார்வையிட்டார். மற்ற காய்கறிச் செடிகளுடன், ஒரு பரங்கிக் கொடியையும் பார்த்தார். அதில் பல பூக்கள், பிஞ்சுகள், காய்கள் இருந்தன. உடனே வீட்டிற்குள் சென்ற அவர் ஒரு காலிப் பானையை எடுத்து வந்தார். அதைத் தரையில் வைத்து விட்டு, பரங்கிக் கொடியில் பிஞ்சுடன் கூடிய ஒரு பகுதியை அந்தப் பானையினுள் நுழைத்து பரங்கிப் பிஞ்சு பானைக்குள் இருக்குமாறு செய்துவிட்டு, கொடியின் நுனியை வெளிப்புறம் நோக்கி இழுத்து விட்டார். பார்ப்பதற்கு, பறங்கிக் கொடி பானையினுள் புகுந்து, பிறகு வெளியே வந்தது போல் இருந்தது.

“சரியாக இருக்கிறது!” என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்ட பீர்பால், தன் மனைவியிடமும், தோட்டக்காரனிடமும் அந்தப் பானையையும், பரங்கிக் கொடியையும் மிகவும் பத்திரமாகப் பாதுகாக்கச் சொன்னார். தினமும் அவர் தோட்டத்திற்கு வந்து பானையினுள் இருந்தப் பரங்கிப் பிஞ்சைப் பார்வையிட்டு வந்தார். பத்து நாள்களில் பிஞ்சு காயாகிப் பெருத்தது. அப்படியே விட்டு வைத்தால் காய் இன்னும் பெரிதாக வளர்ந்து பானையை உடைத்து விடும் என்ற நிலை வந்த போது, பீர்பால் பானைக்குள் சென்று, வெளியே வந்த கொடியின் பாகங்களைக் கத்தியால் அறுத்து விட்டார். இப்போது பானைக்குள் நன்கு வளர்ந்த பறங்கிக்காய் மட்டுமே இருந்தது. பானையின் வாயினை துணியினால் இறுக மூடி அடைத்த பீர்பால் பின்னர், அதை தர்பாருக்கு எடுத்துச் சென்றார்.

அக்பரிடம் பானையை அளித்த பீர்பால், “பிரபு… இதுதான் மன்னர் வீரசிம்மன் விரும்பிய அறிவுப்பானை! இதை அவரிடம் அனுப்பி வையுங்கள்” என்றார். அதைக் கண்ட அக்பர், “என்ன, பீர்பால்! விளையாடுகிறாயா? பானையில் எப்படி அறிவை நிரப்ப முடியும்? இதற்குள் உண்மையில் என்ன இருக்கிறது?” என்று ஆர்வத்துடன் அக்பர் கேட்டார்.
“பிரபு, அறிவுப்பானைக்குள் அறிவுதான் இருக்கும். வீரசிம்மன் பானைக்குள் இருக்கும் அறிவை எடுத்துக் கொண்டு, பானையை திருப்பி நமக்கு அனுப்பி விட வேண்டும். அதை வெளியில் எடுக்கும் போது அது நசுங்கக் கூடாது. பானையும் உடையக் கூடாது. ஒருக்கால் பானை உடைந்து போனால், வீரசிம்மன் பத்தாயிரம் பொற்காசு அபராதம் செலுத்த வேண்டும். இவை அனைத்தையும் அவருக்குத் தெரிவித்து விடுங்கள்” என்றார் பீர்பால்.

“என்ன? அபராதம் பத்தாயிரம் பொற்காசுகளா?” என்று அக்பர் கேட்டார்.

“அறிவின் விலை மிகவும் அதிகம் பிரபு” என்றார் பீர்பால்.

அவ்வாறே பானையை தூதன் மூலம் கொடுத்தனுப்பியபின், ஆர்வத்தை அடக்க முடியாத அக்பர், “பீர்பால்! பானைக்குள் என்னதான் வைத்திருக்கிறாய் என்று எனக்கு கூறு” என அவசரப்படுத்தினார்.
உடனே பீர்பால் தான் செய்ததைச் சொன்னார். “பிரபு, வீரசிம்மன் தனது குறும்புத்தனமான கேள்விக்கு சரியாக மூக்குடைப்படுவார். பானைக்குள் இருக்கும் பரங்கிக்காயை அவரால் பானையை உடைக்காமல் முழுதாக வெளியே எடுக்க முடியாது. பரங்கிக்காயை அறுத்து வெளியே எடுப்பதும் கூடாது. அதனால் அவர் நம்மிடம் வசமாக சிக்கிக் கொண்டார்.

“அடப்போக்கிரி!” என்று பீர்பால் முதுகில் செல்லமாகத் தட்டினார் அக்பர். பானையைப் பெற்ற வீரசிம்மன் பானையினுள் ஒரு பெரிய பரங்கிக்காய் இருப்பதைப் பார்த்தார். கூடவே அந்த இரண்டு நிபந்தனைகளையும் கேட்டார். பரங்கிக்காயை அறுக்கவும் கூடாது. அதே சமயம் முழுதாக வெளியே எடுக்க முயன்றால் பானை உடையும். உடனே அந்த அதிகப் பிரசங்கி இளைஞர்களை அழைத்த மன்னர், அறிவுப்பானையை அவர்களிடம் காட்டி விளக்க, அவர்கள் முகத்தில் அசடு வழிந்தது

“உங்கள் பேச்சைக் கேட்டு நானும் முட்டாள் ஆனேன். முன்னமே சொன்னேன், அக்பரின் சபையில் அறிஞர்களுக்குப் பஞ்சமில்லை என்று. என் பேச்சை நீங்கள் கேட்கவில்லை. அபராதத் தொகையை ஈடுகட்ட, நீங்கள் காலம் முழுவதும் என்னிடம் சம்பளமின்றி உழைக்க வேண்டும்” என்றார்.

பிறகு தலைவிதியை நொந்து கொண்டு, அபராதத் தொகையை அக்பருக்கு அனுப்ப, அவர் அதில் பாதியை பீர்பாலுக்கு வழங்கினார்.

இன்றைய செய்திகள்
05.04.2019

* பிளஸ்1 வேதியியல் விடைத்தாள் கீ ஆன்சரில் புதிய கட்டுப்பாடு : சென்டம் குறையும் என ஆசிரியர்கள் அதிர்ச்சி.

* குரூப் 1 தேர்வு முடிவு வெளியீடு முதன்மை தேர்வு ஜூலை 12 முதல் 14ம் தேதி வரை நடக்கிறது : டிஎன்பிஎஸ்சி தகவல்.

* இந்தியாவில் காற்று மாசு; 2017ல் 12 லட்சம் பேர் பலி: சர்வதேச ஆய்வறிக்கையில் அதிர்ச்சி.

* பெருவில் நடைபெற்ற மோட்டார் சைக்கிளுடனான போட்டியில் உசேன் போல்ட் வெற்றி.

* மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஸ்ரீகாந்த் கிதாம்பி காலிறுதிக்கு முன்னேறிய நிலையில், பிவி சிந்து அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

Today's Headlines

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹


🌸 In evaluating Plus 1 chemistry answersheets there is new control in key. The teachers are shocked that the centum will drop.

🌸 Group 1 Exam Results The primary examination will take place from July 12 to 14: TNPSC Information.

🌸Air pollution in India; 12 lakh killed in 2017: shocking report by international research

* Hussein Bolt wins the competition with the motorcycle in Peru.

🌸 In the Malaysian Open badminton season, Srikanth's enters to quarter-finals, but PV Sindhu lose the match  .

🌹🌹🌹🌹🌹🌹🌹

🎊Be happy
      Be bright
       Be you
Have a nice day🎊😊

Prepared by
Covai women ICT_போதிமரம்