Thursday, February 29, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.03.2024

  

பொட்டாஷ் படிகாரம்




திருக்குறள்: 

பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : அவா அறுத்தல்

குறள்:368

அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.

விளக்கம்:

ஆசை இல்லாதவர்க்குத் துன்பம் வராது; இருப்பவர்க்கோ இடைவிடாமல், தொடர்ந்து துன்பம் வரும்.

பழமொழி :

Once bitten twice shy

சூடுபட்ட பூனை அடுப்பண்டை சேராது

இரண்டொழுக்க பண்புகள் :

1. பெரியோர் , பெற்றோர்,  ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.

2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.


பொன்மொழி :

ஒரு கதவு மூடப்படும்
போது இன்னொரு
கதவு திறக்கிறது.
ஆனால் பல நேரங்களில்
நாம் மூடிய கதவின்
நினைவிலேயே
இருப்பதனால்..
திறந்த கதவுகள் நம்
கண்களுக்கு தெரிவதில்லை.

பொது அறிவு : 

1. பொட்டாஷ் படிகாரம் ஒரு

விடை: இரட்டை உப்புகள்

2. குளிர் தொழில்நுட்பம் மூலம் எவ்வளவு குறைந்த வெப்பநிலையை உருவாக்க முடியும்?

விடை: 123 K 

English words & meanings :

 Knotty - difficult to solve
புதிரான , விளக்க முடியாத
Kudos- praise given for an achievement பாராட்டுகள்

ஆரோக்ய வாழ்வு : 

கொடி பசலை கீரை:கொடிப் பசலைக் கீரையுடன் சிறிது சீரகம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் தீராத தாகமும் நீரும்.

மார்ச் 01

பாகுபாடுகள் ஒழிப்பு நாள்

பாகுபாடுகள் ஒழிப்பு நாள் (Zero Discrimination Day)  என்பது ஐநா மற்றும் பிற சர்வதேச அமைப்புகளால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாள் ஆகும். உலக நாடுகளில் சட்டத்திலும், நடைமுறையிலும்  மனித சமுதாயத்தில் தொடர்கிற பாகுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அறைகூவல் விடுக்கும் நாளாக இது உள்ளது.  இந்த நாள் 2014 மார்ச் 1 அன்று முதன்முதலில் கொண்டாடப்பட்டது. இதை   பெய்ஜிங்கில் ஒரு முக்கிய நிகழ்வுடன் அந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி ஐநா எய்ட்ஸ் விழிப்புணர்வு/கட்டுப்பாடு அமைப்பின் (யுனெய்ட்ஸ்) நிறைவேற்று இயக்குனரான மைக்கேல் சிடிப் என்பவரால் தொடங்கப்பட்டது


நீதிக்கதை

 நாவினால் சுட்ட வடு


அது ஒரு அழகான வீடு. அழகான ஒரு குடும்பம் வசித்து வந்தது. அந்தக் குடும்பத்தில் ஒரு மகன் இருந்தான். அவன் எதற்கெடுத்தாலும் கோபப்படுவான் அதனால் அக்கம் பக்கத்தில் இருந்த பலர் அவனை வெறுத்தனர். இதற்கு ஏதாவது தீர்வு காண வேண்டும் என்று அவன் தந்தை நினைத்தார். உடனே தன் மகனைக் கூப்பிட்டார்,

"நீ திருந்தவே மாட்டாயா மகனே !" என்றார். அவனுக்கு அப்பா என்ன சொல்லப் போகிறார் என்பது புரிந்தது. அதற்கு அவன் "சரி! இனி கோபம் வராமல் இருப்பதற்கு முயல்கிறேன். ஆனால் முடியவில்லையே அப்பா!" என்றான்.

"சரி! நான் சொல்வது போல் செய். எப்பொழுதெல்லாம் உனக்குக் கோபம் வருகிறதோ அப்பொழுது ஒரு ஆணியை நம் தோட்டத்தில் உள்ள மரவேலியில் அடி" என்றார்.

அவனும் தனக்குக் கோபம் வரும்போதெல்லாம் ஆணியை மரவேலியில் அடித்து மரவேலியில் ஆணி பெருகிற்று.

சில நாட்கள் கழித்து அவன் கோபம் தணிந்தது. அறவே நின்று விட்டது என்று கூடச் சொல்லலாம். தன் தந்தையிடம் இந்த சந்தோஷச் செய்தியைச் சொன்னான். அவர் மகிழ்ச்சி கொண்டாலும், அவனை அழைத்து, "சரிமகனே! மிக்க மகிழ்ச்சி! அந்த ஆணிகளை இனி வேலியில் இருந்து பிடுங்கி விடு" என்றார் தந்தை. தன் தந்தை சொல்வதைக் கேட்டு அவனும் அப்படியே செய்தான்.

சில நாட்கள் கழிந்தன. "எல்லா ஆணிகளையும் மரவேலியிலிருந்து எடுத்து விட்டாயா மகனே?'' என்று தந்தை கேட்டதும், 'ஆம் தந்தையே! இப்போது உங்களுக்கு மகிழ்ச்சி தானே?" என்றான் மகன்."ஆம் அப்பா! இருந்தாலும் என்னுடன் வா" என்று அவனை மரவேலி இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்.

"இங்கே பார்! முதலில் நீ ஆணிகளை மரத்தில் அடித்தாய், பிறகு அதை மரத்திலிருந்து அப்புறப்படுத்தினாய்.

நீ செய்தது யாவும் சரியே. ஆனால் இங்கே பார் ! நீ மரத்தில் அடித்த வடு அப்படியே இருக்கிறதே ! அதை என்ன செய்வாய்?" என்று கேட்க, மகன் தலை குனிந்தான்.

'இனி கற்றுக்கொள்! தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு. திருவள்ளுவர் சொல்லி யிருக்கிறாரே! அதனால் நாம் வசை மொழியினால் ஒருவரை கோபித்தால் அந்த வடு ஆழமாக மனதில் பதிந்துவிடும். அதனால் இனி கோபம் வராமல் பார்த்துக்கொள் " என்று கூறினார். இது அவனுக்கு மட்டும் அல்ல யாவருக்கும் பொருந்துவதே.

இன்றைய செய்திகள்

01.03.2024

* விவசாய உரங்களுக்கு ரூபாய் 24,420 கோடி மானியம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

* மருத்துவக் கல்லூரி படிப்பு இலவசம்; அமெரிக்காவின் புகழ்பெற்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கல்லூரி அறிவிப்பு.

*பாம்பே ஜெயஸ்ரீ உட்பட 98 பேருக்கு சங்கீத நாடக அகடமி விருது அறிவிப்பு.

*சித்த மருத்துவத்தை உலக அளவில் கொண்டு செல்வது அவசியம்- ஆயுஷ் அமைச்சக இணை செயலர் பாவனா சக்சேனா.

* கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த புகழ்பெற்ற நடுவரான தென்னாப்பிரிக்காவை சேர்ந்த  மரைஸ் எராஸ்மஸ்.

Today's Headlines

*Rs 24,420 crore subsidy for agricultural fertilizers: Union Cabinet approves.

 * Medical college education is free;  Announcement of famous Albert Einstein College of USA.

 *Sangeetha Natak Academy award announcement for 98 people including Bombay Jayashree.

 *It is necessary to take Siddha medicine globally- Bhavana Saxena, Joint Secretary, Ministry of AYUSH.

 * Famous umpire Marais Erasmus from South Africa  announced his retirement from cricket.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Wednesday, February 28, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.02.2024

மொரார்ஜி ரன்சோதிசி தேசாய்

  




திருக்குறள்: 

பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : அவா அறுத்தல்

குறள்:367

அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்.

விளக்கம்:

ஒருவன் ஆசையை முழுதும் ஒழித்தால், அவன் கெடாமல் வாழ்வதற்கு உரிய நல்ல செயல் அவன் விரும்புமாறு வாய்க்கும்.

பழமொழி :

Old is gold

பழமையே சிறந்தது

இரண்டொழுக்க பண்புகள் :

1. பெரியோர் , பெற்றோர்,  ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.

2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.


பொன்மொழி :

நல்லது எது கெட்டது
எது என சிந்திக்க தெரியாத
மனிதன் தனக்கு மட்டுமல்ல..
மற்றவர்களுக்கும்
துரோகம் செய்கிறான்.

பொது அறிவு : 

1. நமது கால் பாதங்களில் எத்தனை எலும்புகள் இருக்கின்றன?

விடை: 16 எலும்புகள்

2. பறம்பு மலையை ஆண்ட மன்னர்?

விடை: பாரி மன்னர்

English words & meanings :

 Jaunt - a journey for pleasure.

Jocular -  playful

ஆரோக்ய வாழ்வு : 

கொடி பசலை கீரை :கொடிப்பசலைக் கீரையைச் சாப்பிட்டால் எப்படிப்பட்ட புண்ணும் ஆறிவிடும். நீர்க்கடுப்பு, மலக்கட்டு போன்றவற்றுக்கும் இந்தக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

பிப்ரவரி 29

பெப்ரவரி 29 (February 29) அல்லது லீப் நாள் (leap day) என்பது கிரிகோரியன் ஆண்டில் நெட்டாண்டு ஒன்றின் 60 ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 306 நாட்கள் உள்ளன. இந்த நாள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை 4 ஆல் வகுபடும் 201620202024 போன்ற ஆண்டுகளில் மட்டுமே வருகிறது. கிரெகொரியின் நாட்காட்டி உட்பட சூரியனைச் சுற்றிவரும் புவியின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட பெரும்பாலான சூரிய நாட்காட்டிகளில் லீப் நாள் உள்ளது. லீப் நாளைக் கொண்டிருக்கும் ஆண்டு நெட்டாண்டு என அழைக்கப்படுகிறது.

மொரார்ஜி ரன்சோதிசி தேசாய் 

மொரார்ஜி ரன்சோதிசி தேசாய் (29 பிப்ரவரி 1896 - 10 ஏப்ரல் 1995) இந்திய விடுதலைப்போராட்ட வீரரும், இந்திய பிரதமரும், இந்திய அரசியல்வாதியும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் அமைச்சராக இருந்து வெளியேறி பின்பு காங்கிரஸ் கட்சியில் இந்திரா காந்தியின் வாரிசு அரசியலையும், பல அதிகார மீறல் செயல்களையும், அவர் அப்போது கொண்டு வந்த நெருக்கடி நிலையை எதிர்த்த காங்கிரஸ் கட்சியின் முதல் எதிர்கட்சியான ஜனதா கட்சியில் பிரதமர் ஆனார். இந்திய குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னாவையும் பாகிஸ்தான் குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான நிசான்-இ-பாகிஸ்தானையும் பெற்ற ஒரே இந்தியர் இவரே.

நீதிக்கதை

 தவளையின் வெற்றி


ஒரு குரு சீடர்களுடன் உரையாடுவது வழக்கம். கேள்விகளையும் கேட்டு விடைகளை அவர்களிடமே விட்டுவிடுவார். எப்போதும் தனது சீடர்களுக்கு மாலை வெளியில் புத்தியை போற்றும் சிறுகதைகளை சொல்வதை வழக்கமாக் கொண்டார். கதை சொல்ல ஆரம்பித்தார். அப்போது அவர் சீடர்களிடம், "நான் உங்களிடம் இப்போது ஒரு கதையைக் கூறி, அதற்கான சிந்தனையையும் சொல்வேன். ஆனால் இப்போது நீங்கள், நான் சொல்லும் கதையை புரிந்து கொண்டு, நான் கேட்கும் கேள்விகளுக்கு சரியாகப் பதில் சொல்ல வேண்டும். புரிகிறதா?" என்று கூறினார்.

அதற்கு சீடர்களும் "சரி குருவே!" என்று கூறி அவர் கூறப்போகும் கதையை மிகவும் கூர்மையாகக் கேட்கனர். பின் குரு கதையை சொல்ல ஆரம்பித்தார். 

"ஒரு ஊரில் விநோதமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று மக்கள் நினைத்து தவளைகளுக்குப் போட்டி வைத்தார்கள். அந்தப் போட்டியில் நிறைய தவளைகள் பங்கு கொண்டன. அது என்ன போட்டி என்று வியப்பாக இருக்கிறதா? சொல்கிறேன். அங்கு ஒரு சிறிய குன்று இருந்தது. அந்த குன்றின் உச்சிக்கு எந்தத் தவளை முதலில் சென்று வெல்கிறது என்பதுதான் அந்தப் போட்டி."

அந்த உச்சியின் உயரத்தைப் பார்த்தவுடன் அங்கு கூடியிருந்தவர்கள் எந்தத் தவளையும் இந்த உச்சியை அடைய முடியாது என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர். அத்தருணத்தில் ஒரு தவளை மட்டும் அவர்கள் பேசுவதை கூர்மையாகப் பார்த்தது.

பின் போட்டி தொடங்கியதும் அனைத்து தவளைகளும் அடித்துப் பிடித்துக் கொண்டு ஒன்றன் மேல் ஒன்றாக முட்டி மோதி ஏறி கடைசியில் வழுக்கி விழுந்தன. ஆனால் ஒரு சில தவளைகள் சற்று நிதானமாக ஓரளவு உயரத்தை அடைந்தன. இருந்தாலும் தங்களால் மேலும் ஏற முடியாமல் கீழே விழுந்து விட்டன. இவ்வாறு இருக்க ஒரு தவளை மட்டும் உயரத்தை பொருட்படுத்தாமல் மேலே ஏறி, ஏறி குன்றின் உச்சியை அடைந்தது அங்கு கூடியிருந்த அனைவருக்கும் ஒரே ஆச்சர்யம்!

வெற்றி பெற்ற தவளைக்குப் பரிசு கொடுக்கும் நேரம் வந்தது. பரிசைக் கொடுப்பதற்காக அந்த வெற்றி பெற்ற தவளையைப் பார்த்து "உங்கள் வெற்றிக்கு காரணம் என்ன?" என்று பரிசு கொடுப்பவர் கேட்டார். அந்தத் தவளை

எதுவுமே பேசாமல் இருந்தது. ''சரி இப்பொழுது உங்களை நான் கேள்வி கேட்கிறேன். அந்தத் தவளை ஏன் பேசாமல் இருந்தது?" என்று குரு

சீடர்களை கேட்டார். அனைத்து சீடர்களும் பதில் தெரியாது குழப்பத்தில் இருந்தனர். பின்னர் அவர்கள் "தெரிய வில்லையே!" என்று குருவிடம் கூறினர்.

குருவும் "வேறு எதுவும் இல்லை! அந்தத் தவளைக்குக் காது கேட்காது, மற்றும் வாய் பேச வராது. அதனால்தான் அது எதுவும் பேசவில்லை" என்று கூறினார். மேலும் தொடர்ந்தார். "அது மட்டுமல்லாமல் அந்தத் தவளை வெற்றியென்னும் ஒரே நோக்கத்தை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு போட்டியில் பங்கு கொண்டதால் தான் அதனால் வெற்றி பெற முடிந்தது" என்பதையும் கூறிச் சென்றுவிட்டார். இதிலிருந்து என்ன தெரிகிறது? உறுப்புக்கள் செயல்படாவிட்டாலும் தன்னம்பிக்கையுடன் முன்னேற வேண்டும் என்ற ஒரே குறிக்கோள் இருந்தால் நாம் வாழ்க்கையில் வெற்றியடையலாம் என்பது தெரிகிறது.

இன்றைய செய்திகள்

29.02.2024

*மூத்த பத்திரிக்கையாளர் 
வி. என். சாமிக்கு கலைஞர் எழுதுகோல் விருது -மு க ஸ்டாலின் அறிவிப்பு.

* ஓட்டுநர் உரிமம் இனி 
விரைவு அஞ்சலில் மட்டுமே அனுப்பப்படும்: தமிழ்நாடு போக்குவரத்து துறை.

* அரசு பள்ளிகளில் மார்ச் ஒன்றாம் தேதி முதல் மாணவர் சேர்க்கை.

* புற்றுநோயை குணப்படுத்த ரூபாய் 100க்கு மாத்திரை -டாட்டா இன்ஸ்டிட்யூட் சாதனை.

* தூத்துக்குடி குலசையில் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ரோகிணி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

* ஐசிசி டெஸ்ட் தரவரிசை: இரண்டே போட்டியில் விளையாடி 31 இடங்கள் முன்னேறிய துருவ் ஜுரல்.


Today's Headlines

*Kalainjar Pen Award to Senior Journalist
 V.  N.  Sami    Announcement by CM - M. G. Stalin.

 * Driving license will be 
 Sent by speed post only: Tamil Nadu Transport Department.

 * Admission to government schools will start from 1st March.

 * Pill for Rs 100 to cure cancer - Tata Institute accomplishment.

 * The Rohini rocket was successfully launched from the Tuticorin,  Kulasai rocket launch pad.

 * ICC Test Rankings: Dhruv Jural has moved up 31 places in just two matches.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Tuesday, February 27, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.02.2024

  

சர்.சி.வி.இராமன்




திருக்குறள்: 

பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : அவா அறுத்தல்

குறள்:366

அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா.

விளக்கம்:

ஒருவனை வஞ்சித்துக் கெடுப்பது ஆசையே. அதனால் ஆசை உண்டாகி விடாமல் அஞ்சி வாழ்வதே அறம்.


பழமொழி :

Nothing is impossible to a willing heart

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு

இரண்டொழுக்க பண்புகள் :

1. பெரியோர் , பெற்றோர்,  ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.

2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.


பொன்மொழி :

மகிழ்ச்சி என்பது ஒரு பட்டாம்பூச்சி போன்றது, நீங்கள் அதை எவ்வளவு அதிகமாகத் துரத்துகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக அது உங்களை விட்டு தப்பிச் செல்லும், ஆனால் நீங்கள் வேறு விடயங்களில் கவனம் செலுத்தினால், அது மெதுவாக உங்கள் தோளில் வந்து அமரும். --ஹென்றி டேவிட் தோரே

பொது அறிவு : 

1. மயொங்கொலி எழுத்துக்களின் எண்ணிக்கை?

விடை: 8

2. சோப்பு தயாரிக்கப் பயன்படுவது எது?

விடை: சோடியம் ஹைட்ராக்சைடு

English words & meanings :

 Indigenous (adv) - natural இயற்கையானது

Indulge - took care of கவனித்துக் கொள்

ஆரோக்ய வாழ்வு : 

கொடி பசலை கீரை :கொடி பசலைக் கீரையை நீரில் போட்டு அலசினால் கொழகொழப்பான திரவம் கிடைக்கும். இதை தலை அல்லது நெற்றியில் தடவினால் தலைவலி குணமாகும். நல்ல தூக்கமும் வரும்.

பிப்ரவரி 28

தேசிய அறிவியல் நாள்

தேசிய அறிவியல் நாள் (National Science Dayஇந்தியாவில் பெப்ரவரி 28 ஆம் நாளில் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

தேசத்தலைவர்கள் மற்றும் தியாகிகளைக் கொண்டாடுவது போல அறிவியல் மேதைகளும் போற்றப்பட வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் 1987 - ஆம் ஆண்டு இந்தத் தேசிய அறிவியல் நாள் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிக்கோளை அடிப்படையாக கொண்டு இந்நாள் கொண்டாடப்படுகிறது.இந்திய மண்ணில் பிறந்து உலகம் போற்றும் வகையில் பல அரிய கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து வெளியிட்டவரும் சிறந்த இயற்பியல் மேதையுமான சர். சி. வி ராமன் தன்னுடைய நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28 ம் தேதி தேசிய அறிவியல் தினம் என அறிவிக்கப்பட்டது.[3]

சர். சி. வி. இராமன் தனது புகழ்பெற்ற ராமன் விளைவை (Raman Effect) இந்நாளிலேயே கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பு உலகளாவிய பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்ததுடன் உயரிய விருதான நோபல் பரிசும் (1930) இவருக்கு கிடைத்தது. அந்நிகழ்வின் நினைவாகவும் அறிவியல் என்பது அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடும் இந்திய அரசு இந்நாளைத் தேசிய அறிவியல் நாளாகப் பிரகடனப்படுத்தியது.

நீதிக்கதை

 சொர்க்கமும் நரகமும்


ஒரு ஊரில் ஒரு மிகப் பெரிய பணக்காரன் இருந்தான். ஆனால் என்ன பயன்? யாருக்கும் ஒன்றுமே கொடுத்து உதவாத ஒரு கருமியாக வாழ்ந்து வந்தான். அவனுக்கு

சொர்க்கத்தையும் நரகத்தையும் காண வேண்டும் என்று மிகுந்த ஆசை.

ஒருநாள் உறங்கும் பொழுது அவனது கனவில் ஒரு பெரியவர் தோன்றினார். அவனது ஆசை அறிந்து அவனை சொர்க்கத்துக்குக் கூட்டிச் செல்வதாகக் கூறினார். அவர் சொற்படியே அவருடன் சென்றான் அந்தக் கருமி. முதலில் அவனை எங்கு அழைத்துச் சென்றார் தெரியுமா? அவனை நரகத்திற்குக் கூட்டிச் சென்றார். அவர்கள் சென்றபோது அங்கு உணவு உண்ணும் நேரமாக இருந்தது. பெரிய பெரிய அண்டாக்களில் சாதம், குழம்பு மற்றும் சுவை மிக்க பல பதார்த்தங்களும் யாவும் இருந்தன. அவரவர்களுக்கு சாப்பிட தட்டுகள் கொடுக்கப்பட்டு சுவைமிக்க உணவு கூட பரிமாறப்பட்டது. அந்த உணவைக் கண்டவுடன் எல்லோருக்கும் நாவில் எச்சில் ஊறியது. ஆனால் அந்தோ பரிதாபம்! அனைவராலும் கையை நீட்டி உணவுப் பொருளை எடுக்கவே முடியவில்லை, தவிர கையை மடக்கி வாய்க்கு அந்த உணவைக் கொண்டு செல்லக் கூட முடியவில்லை. பரிதாபமான நிலையில் அவர்கள் இருந்தார்கள். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது இதுதானோ?

அறுசுவை உணவு எதிரே இருந்தால் கூட அவர்களால் உண்ண முடியவில்லை. அவர்களுக்கு பசியோடு ஆத்திரமும் சேர்ந்து கொண்டது. அனைத்து அண்டாக்களையும் கீழே தள்ளிவிட்டு அவற்றில் உள்ள உணவை வீணாக்கிவிட்டனர். பின்னர் தாங்க முடியாத பசியினால் கீழே உட்கார்ந்து அழுதார்கள். இது தினமும் நடக்கும் சம்பவம்.

பிறகு அந்த பெரியவர் அந்தப் பணக்காரனை சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கும் அதே போல உண்ணும் வேளைதான். நரகத்தில் இருந்தது போலவே அண்டாக்கள் நிறைய அருமையான சாப்பாடுகள் எல்லாம் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்தவர்களுக்குக் கையை நீட்ட முடிந்தது. ஆனால் தங்கள் வாய்க்கு அருகே கொண்டு செல்வதற்காக அவர்கள் கையை மடக்கமுடியவில்லை. நீட்டியபடியே இருந்தது. ஆனால் அவர்களுக்கு உக்தி தெரிந்தது. நீட்ட முடியும் ஆனால் மடக்கத்தானே முடியவில்லை என்று எண்ணி, ஒருவர் தனது நீட்டிய கையினால் இனிப்பு வகைகளை எடுத்து எதிரே இருந்தவர் வாய் அருகில் நீட்டி அவருக்கு ஊட்டினார். மடக்கத்

தானே முடியாது கையை நீட்டி எதிரே இருப்பவரின் வாயில் ஊட்டலாம் அல்லவா? எவ்வளவு சாமர்த்தியம்? இப்படியே அனைவரும் ஒருவருக்கொருவர் தங்களுக்குள் ஊட்டி மகிழ்ந்தனர். அனைவரின் வயிறும் நிரம்பியது. எல்லோரும் மகிழ்ச்சியடைந்தனர்.

இத் தருணத்தில் கருமி கனவில் இருந்து மீண்டான். சொர்க்கம் என்பது தனியே எங்கும் கிடையாது. ஒருவருக் கொருவர் உதவி செய்து வாழ்வதையே சொர்க்கம் என்பதை அவன் புரிந்து கொண்டான். யாவருக்கும் பகிர்ந்து உண்ணாமல் தான் மட்டும் சுகமாய் வாழ நினைப்பது தான் நரகம் என்பதையும் உணர்ந்து கொண்டான்.

அன்றிலிருந்து அவன் அனைவருக்கும் உதவிகள் பல புரிந்து நல்வாழ்வு வாழ்ந்தான். அதனால் நாமும் பலருக்கு அவர்கள் தேவை புரிந்து பல நன்மைகள் புரிந்தால் நாம் சொர்க்கத்தை இந்த வாழ்விலேயே கண்டுவிடலாம். ↓

இன்றைய செய்திகள்

28.02.2024

*மதுரையில் சிறு, குறுந்தொழிலதிபர்கள் டிஜிட்டல் மாநாடு- பிரதமர் மோடி பங்கேற்பு.

*வருவாய் துறை அலுவலர்கள் நேற்று முதல் வேலை நிறுத்தம்.

*கடலோர காவல் படையில் பெண்களுக்கு நிரந்தர பணி; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு.

*கீழடி அகழாய்வு அறிக்கை 9 மாதங்களில் வெளியாகும் - மத்திய அரசு தகவல்.

*கிரிக்கெட்: ராஞ்சி டெஸ்டில் சுப்மன் கில், துருவ் ஜூரல் கை கொடுக்க இந்திய அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

Today's Headlines

* Digital conference of small and micro entrepreneurs in Madurai - Prime Minister Modi will participate.

 *Revenue department officers are on strike from yesterday.

 *Permanent employment for women in the Coast Guard;  Supreme Court order to Central Govt.

 *Keezhadi Excavation Report to be released in 9 months - Central Govt.

 *Cricket: Subman Gill, Dhruv Jural help India won Ranchi Test by five wickets.
 Prepared by

Covai women ICT_போதிமரம்