Tuesday, January 31, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.02.2023

  திருக்குறள் :


பால் :அறத்துப்பால் 

இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: நடுவுநிலைமை

குறள் : 115
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.

பொருள்:
ஒருவர்க்கு வாழ்வும், தாழ்வும் உலக இயற்கை; அந்த இரு நிலைமையிலும் நடுவுநிலையுடன் இருந்து நீதி தவறாது உறுதி காட்டுவதே பெரியோர்க்கு அழகாகும்.

பழமொழி :

Hear more,but talk less.

அதிகம் கேள், குறைவாக பேச

இரண்டொழுக்க பண்புகள் :

1. கடமை தவறாமல் உதிக்கும் சூரியன் நாம் நமது கடமையை தவறாமல் செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம். 

2. கல்லடி பட்டாலும் கனி தரும் மரங்கள் நாம் பலன் எதிர் பாராமல் பணி செய்ய ஒரு நல் உதாரணம்.

பொன்மொழி :

ஆரோக்கியத்தை பெற்றுள்ள ஒருவர் நம்பிக்கையை பெற்றுள்ளார்; நம்பிக்கையைப் பெற்றுள்ள ஒருவர் எல்லாவற்றையும் பெற்றுள்ளார்.

பொது அறிவு :

1. தமிழ் பல்கலைக்கழகம் எந்த ஆண்டு துவங்கப்பட்டது ? 

 1981

 2.தேசிய விளையாட்டு தினம் எப்போது?

 ஆகஸ்ட் 29.

English words & meanings :

Ant and English. Ant that goes to school - Brilliant 

ஆரோக்ய வாழ்வு :

வெங்காயத்தில் பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் காணப்படுகிறது. இது சளி, காய்ச்சல் மற்றும் இருமல் போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது.
இதற்காக பருவ கால ஒவ்வாமை உடைய 16 பெரியவர்களிடம் 4 வாரங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 200mcg/mL அளவு கொடுத்த போது அதன் அறிகுறிகள் 62. 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது தொண்டை புண் போன்ற அறிகுறிகளை குறைக்கவும் பயன்படுகிறது.

NMMS Q

பருத்தித் தாவரங்களில் பூச்சிகளை கட்டுப்படுத்த உதவும் பாக்டீரியா எது?

 விடை: பேசில்லஸ் துரின்ஜியன்சிஸ். 

பிப்ரவரி 01


கல்பனா சாவ்லா அவர்களின் நினைவுநாள் 




கல்பனா சாவ்லா அவர்கள் கரியானா மாநிலத்தில் “கர்மல்” என்ற ஊரில் 1961 ஆம் ஆண்டு ஜீலை மாதம் 03 ம் திகதி பானராஸ்லால் சாவ்லாவுக்கும் சன்நியோகிதா தேவிக்கும் மகளாக பிறந்தார். 

1988 ஆம் ஆண்டு நாசா ஆராய்ச்சி கூடத்தில் இணைந்து விண்வெளி ஓடங்கள் விமானங்களை ஓட்ட கற்றுகொண்டார்.

2003 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சிக்காக அமெரிக்காவின் கெனடி விண்வெளி நிலையத்தில் இருந்து STS 107 எனும் கொலம்பிய விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது.

இதில் கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 பேர் பயணம் செய்தனர். 16 நாள் ஆய்வை முடித்து வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய அவ் விண்கலம் அமெரிக்காவின் ரெக்சாஸ் வான் பரப்பில் வெடித்து சிதறியது.

ஒரு பெரும் கனவை அடைய விடாமுயற்சியோடும் முழுமனதோடும் செயற்பட்டால் வெற்றிகிட்டும் என வாழ்ந்து காட்டிய இவரது வாழ்க்கை பலருக்கும் முன்னுதாரணமாகும்.

நீதிக்கதை

வளைந்த நாணல்

ஒரு நாள் தென்றல் காற்று வீசியது. தோட்டத்திலுள்ள மரங்கள், புற்களையும், நாணலையும் பார்த்து, சிறு தென்றல் காற்று வீசியதற்கே பலமற்றுப் போய் அசைந்து கொடுக்கிறாயே? என்று ஏளனமாகப் பேசி சிரித்தன. 

அடுத்தநாளே தோட்டத்தில் பலத்த சூறைக்காற்று வீசியது. சூறைக்காற்று பலமாக வீசியதால் தோட்டத்தில் இருந்த மரங்கள் ஒவ்வொன்றாக முறிந்து விழுந்தன. அப்போது நாணல், மரங்களே! நீங்களும் என்னைப் போல் வளைந்து கொடுக்கப் பழகியிருந்தால் இப்படி வேரோடு சாய்ந்திருக்க மாட்டீர்கள்!

எங்களைப் பார்த்து ஏளனமாக கேலி பேசினீர்களே! நாங்களும் உபயோகமானவர்கள் தான். நாங்கள் ஆற்றுநீர் கரையை அரிக்காமல் தடுப்பதால்தான், நீங்களெல்லாம் கம்பீரமாக நிற்க முடிகிறது. இல்லையேல் கம்பீரமாக நிற்க முடியாது. அதேபோல் உருவத்தில் சிறியதாக இருக்கும் எறும்பு, தும்பிக்கைக்குள் நுழைந்து கடித்தால் உருவத்தில் பெரிய யானையாலும் வலியை தாங்கிக் கொள்ள முடியாது என்றது.

நாணல் பேசியதை கேட்டு மரங்களால் எதுவுமே பேச முடியவில்லை. அப்போதுதான் மரங்கள் உருவத்தில் சிறியதாக இருந்த நாணலைப் பார்த்து அலட்சியமாகப் பேசியது தவறு என்பதைப் புரிந்து கொண்டன.

நீதி :
ஒருவரையும் ஏளனமாகப் பேசக்கூடாது.

இன்றைய செய்திகள்

01.02.2023

* ஆதார் எண் - மின் இணைப்பு எண்ணை இணைக்க வழங்கிய அவகாசம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், மேலும் 15 நாட்கள் நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

* ஐஐடி மெட்ராஸில் நடக்கும் ஜி-20 கருத்தரங்கு!
‘கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு’ என்ற தலைப்பில் நடக்கவிருக்கும் இந்த கருத்தரங்கு, ஜி-20 உறுப்பு நாடுகள் இடையே கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை எவ்வாறு திறம்படப் பயன்படுத்துவது என்பது குறித்து விளக்கவுள்ளது.

* இந்தியாவில் அதிக மாசு அடைந்த ஆறுகள் பட்டியலில் சென்னை கூவம் ஆறு இடம் பெற்றுள்ளது.

* தமிழ்நாட்டில் பல புகழ்பெற்ற கோயில்களும் அதற்கு பல வரலாறுகளும் உள்ளன. எனவே தமிழ்நாட்டில் கோவில்களின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

* பிப்ரவரி 3ம் தேதி அண்ணா நினைவு நாளில், வழக்கமாக நடத்தப்பட்டு வரும் அமைதிப் பேரணி நடைபெற உள்ளது . 

* ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றதை தொடர்ந்து சர்வதேச டென்னிஸ் தரவரிசை பட்டியலில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மீண்டும் முதலிடம் பிடித்தார்.

* ஐசிசி மகளிர் டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசை: 2-வது இடத்தில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா . 

Today's Head lines

 * Aadhaar-EB connection linking deadline extended to Feb 15. Earlier the dead line was today.

* Chennai is all set to host the first G20 Education Working Group meeting on February 1 and 2 and as a precursor a seminar on the ‘Role of Digital Technology in Education'. This seminar will explain in detail to the members of G20 countries how to utilise the technology in education. 

* In the list of most polluted rivers of India, Chennai's Couvam also listed as most polluted one.

* In Tamil Nadu there are so many famous temples with ancient history. So the activities of all temple should be carried out as a open book. Verdict by Madurai court. 

* On February 3rd the memorial day of Anna, as usual there Will be a silent procession. 

* As the result of his championship in Australia open tennis Novak Djokovic hold first place again in the ranking list. 

* ICC women's T20 Bowler Rankings: Deepti Sharma of India is at No. 2
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Monday, January 30, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.01.2023

  திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 

இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: நடுவுநிலைமை

குறள் : 114
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும்.

பொருள்:
ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப்போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும்

பழமொழி :

Failures are stepping stones to success.

தோல்வியே வெற்றிக்கு முதல் படி. 

இரண்டொழுக்க பண்புகள் :

1. கடமை தவறாமல் உதிக்கும் சூரியன் நாம் நமது கடமையை தவறாமல் செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம். 

2. கல்லடி பட்டாலும் கனி தரும் மரங்கள் நாம் பலன் எதிர் பாராமல் பணி செய்ய ஒரு நல் உதாரணம்.

பொன்மொழி :

உணர்ச்சியுள்ள மனிதன் பிறரைத் திருத்துவதில் நேரத்தைச் செலவு செய்கிறான். ஆனால், அறிவுள்ள மனிதனோ தன்னைத் திருத்திக் கொள்வதில் கவனத்தைச் செலுத்துகிறான்.

பொது அறிவு :

1. புனுகு என்னும் நறுமணம் எந்த விலங்கில் இருந்து எடுக்கப்படுகிறது ?

 புனுகுப் பூனை. 

 2. சங்கின் இரண்டு வகை தெரியுமா?

 வலம்புரி , இடம்புரி.

English words & meanings :

weather - climate. noun. வானிலை. பெயர்ச் சொல். whether - if. expressing a doubt . conjunction. இரண்டில் ஒன்று. இணைப்புச் சொல் 

ஆரோக்ய வாழ்வு :

சின்ன வெங்காயத்தில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகிறது. இது ஆக்ஸினேற்ற அழுத்தத்தில் இருந்து நம் செல்களை பாதுகாக்கிறது. உடலில் ஏற்படும் அழற்சி க்கு எதிராக செயல்படுகிறது.
இதில் குவர்செடின் என்ற ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகிறது. இது அழற்சி எதிர்ப்பு தன்மை கொண்டுள்ளது. இதனால் இதய நோய்கள், புற்றுநோய்கள் மற்றும் நீரிழிவு நோய்களுக்கு எதிராக செயல்படுகிறது.




NMMS Q

பாக்டீரியாவில் புரதச்சேர்க்கை கீழ்கண்ட எந்த வகை ரிபோசோம்களால் நடைபெறும்? 

 a) 70s. b) 80s. c) 90s. d) 85s. 

 விடை: 70s

நீதிக்கதை

ஓநாயும் ஆடும்

ஒரு காட்டில் ஒரு ஓநாயும். ஒரு வெள்ளாடும் இருந்தது. கொழுத்த அந்த ஆட்டின் மீது ஓநாய்க்கு எப்போதும் ஒரு கண். அதை அடித்து சாப்பிடவேண்டும் என்று. அதற்காக பலமுறை ஓநாய் அந்த ஆட்டை சண்டைக்கு இழுத்தது. ஓநாயின் குணம் அறிந்த ஆடு ஓநாயிடம் இருந்து தன் புத்திசாலித்தனத்தால் தப்பிவந்தது.

ஒரு சமயம் ஒரு நதியின் நடுவில் குறுகலான ஒரு பாலத்தில் ஆடு சென்றது. அப்பாலம் ஒரு நபர் சென்றால் ஒருவர் எதிரே வர முடியாத அளவு குறுகலானது. பாலத்தில் ஆடு வருவதைக்கண்டு, பெரும்பகுதியை ஆடு கடந்ததும், ஓநாய் அந்த முனையிலிருந்து ஆட்டை நோக்கி வந்தது. இப்போது ஆடும், ஓநாயும் எதிரெதிரே வந்துவிட்டன.

ஆடு ஓநாயிடம் நான் கிட்டத்தட்ட பாலத்தைக் கடந்துவிட்டேன். சற்று நீங்கள் பின் சென்று எனக்கு இடம் கொடுத்தால் நான் சென்றுவிடுவேன் என்றது. இதுதான் சரியான தருணம் என எண்ணி ஓநாய் ஆட்டை வீண் சண்டைக்கு இழுத்தது. நான் முட்டாள்களுக்கு இடம் தர மாட்டேன். நீயே எனக்கு இடம் கொடுத்துப் பின்னால் போ என்றது.

ஓநாயின் நோக்கம் அறிந்த ஆடு, நான் முட்டாள்களுக்கு முதல் இடம் தருவேன் என தான் பின்னால் சென்று ஓநாய் பாலத்தை கடக்கச் செய்தது. ஓநாயும் தன் செயல் இம்முறையும் பலிக்கவில்லையே என சென்றுவிட்டது.

ஆடு தன் புத்திசாலித்தனத்தால் ஓநாயை முட்டாள் என மறைமுகமாக சொன்னதுடன், கெட்டவர்களுடன் வீண்வாதம் கூடாது என்று உணர்ந்ததால் உயிர் பிழைத்தது.ஜி20 கல்வி செயற்குழு மாநாடு: சென்னையில் 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை.

இணையதளம் மூலமாக மின்கட்டணம் செலுத்தும்போது போலி ரசீது வழங்கப்படுவதைத் தடுக்கஒரே மாதிரியான ரசீது வழங்கும் முறையை மின்வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.

வானிலை முன்னறிவிப்பு: பிப்ரவரி 1-ல் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

பனிப்பொழிவு காரணமாக சுவிட்சர்லாந்து போல் காட்சியளிக்கும் அருணாச்சலப் பிரதேசம்.

சீனாவின் அச்சுறுத்தலை முறியடிக்க லடாக் எல்லையில் 135 கி.மீ.தொலைவுக்கு புதிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது.

ஜூனியர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய பெண்கள் அணிக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக கோப்பை ஹாக்கி போட்டி: பெல்ஜியத்தை வீழ்த்தி 3-வது முறையாக ஜெர்மனி அணி கோப்பையை வென்றது.

இன்றைய செய்திகள்

31.01.2023

* ஜி20 கல்வி செயற்குழு மாநாடு: சென்னையில் 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை.

* இணையதளம் மூலமாக மின்கட்டணம் செலுத்தும்போது போலி ரசீது வழங்கப்படுவதைத் தடுக்கஒரே மாதிரியான ரசீது வழங்கும் முறையை மின்வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.

* வானிலை முன்னறிவிப்பு: பிப்ரவரி 1-ல் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

* பனிப்பொழிவு காரணமாக சுவிட்சர்லாந்து போல் காட்சியளிக்கும் அருணாச்சலப் பிரதேசம்.

* சீனாவின் அச்சுறுத்தலை முறியடிக்க லடாக் எல்லையில் 135 கி.மீ.தொலைவுக்கு புதிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது.

* ஜூனியர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய பெண்கள் அணிக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

* உலக கோப்பை ஹாக்கி போட்டி: பெல்ஜியத்தை வீழ்த்தி 3-வது முறையாக ஜெர்மனி அணி கோப்பையை வென்றது.

Today's Headlines

* Due to G20 Executive committee Conference , Drones were banned for 3 days in Chennai

 * The Electricity Board has introduced a uniform receipt system to prevent fake receipts from being issued while paying electricity bill online.

 * Weather forecast: Heavy rain likely in 11 districts of Tamil Nadu on February 1.

*  Arunachal Pradesh looks like Switzerland due to snowfall.

 * To overcome the threat of China, construction of a New High Way of length 135 Km has been started in the Ladakh border

* A prize money of Rs 5 crore has been announced for the Indian women's team who won the title of champion in the Junior 20 Over Cricket World Cup.

* Hockey World Cup: Germany win the  World Cup for the 3Rd time after defeating Belgium.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்