Thursday, September 30, 2021

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 01.10.21

 திருக்குறள் :

அதிகாரம்: கல்லாமை

குறள் :408

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.

பொருள்: முட்டாள்களிடம் குவிந்துள்ள செல்வம், நல்லவர்களை வாட்டும் வறுமையை விட அதிக துன்பத்தைத் தரும்.

பழமொழி :

Every tide has its ebb


ஏற்றம் உண்டு எனில் இறக்கமும் உண்டு

இரண்டொழுக்க பண்புகள் :

1. பொறுமையை விட மேலான தவமில்லை எனவே எப்போதும் பொறுமையாக இருப்பேன் .

2.திருப்தியை விட மேலான இன்பமில்லை எனவே எனக்கு உள்ள பொருட்செல்வம் போதும் என்று இன்புற்று இருப்பேன்

பொன்மொழி :

உண்மையில் பக்தி உடையவர் எத்தகைய செல்வ நிலையிலும் வறுமை நிலையிலும் தானம் செய்து கொண்டே இருப்பார்...... திருக்குர்ஆன்

பொது அறிவு :

1.உலகின் மிகப் பழமையான விளையாட்டு எது? 

போலோ.

2.கோல்ப் விளையாட்டு எங்கு தோன்றியது?

ஸ்காட்லாந்து.

English words & meanings :

Pedal - Foot-operated lever. மிதி கட்டை

Peddle - to sell goods or services. இடம் விட்டு இடம் சென்று பொருட்களை விற்றல்

ஆரோக்ய வாழ்வு :

பருப்பு வகைகளின் நன்மைகள்

1)சுண்டல்

கொண்டைக்கடலையில் ஒரு வகை தான், இந்த சுண்டல்.

இதனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

2)கடலைப் பருப்பு

கடலைப் பருப்பு அதிகம் சாப்பிட உடல் வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும்.

குறிப்பாக இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு மற்றும் கரோனரி இதய நோய் போன்றவை ஏற்படுவது குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

3)சிவப்பு காராமணி

சிவப்பு காராமணி புற்றுநோய், கொலஸ்ட்ரால் போன்றவை ஏற்படுவதைக் குறைக்கும்.

இதில் நிறைந்துள்ள வைட்டமின் K, மூளையின் செயல்பாட்டை சீராக வைக்கும்.

4)தட்டை பயறு

தட்டை பயறில் கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால், இது இதய நோய் ஏற்படுவதை தடுக்கும்.

மேலும் இதில் பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஜிங்க் நிறைந்துள்ளது

5)உளுத்தம் பருப்பு

இட்லிக்கும், தாளிப்பதற்கு பயன்படுத்தும் உளுத்தம் பருப்பில், கொழுப்பு குறைவாகவும், புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் அடங்கியுள்ளது.

மேலும் இதில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது

கணினி யுகம் :

Ctrl + Shift + F - Change the font. 

Ctrl + Space - Reset highlighted text to default font

அக்டோபர் 1

அனைத்துலக முதியோர் நாள்




ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளபடி சர்வதேச முதியோர் தினம் (International Day of Older Persons) உலகம் முழுவதும் அக்டோபர் 1 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதிலும் உள்ள மூத்த குடிமக்களை மதிக்கவும், மரியாதையை செலுத்தவும், குடும்பம்சமூகம் மற்றும் நாட்டுக்கு அவர்கள் ஆற்றிய சேவைகளை நினைவு கூறும் வகையிலும், அவர்களின் அறிவுஆற்றல் மற்றும் சாதனைகளை பார்த்துக் கற்றுக்கொள்ளவும் மக்களுக்கு எடுத்துரைக்கும் நாளாக காணப்படுகிறது.



அன்னி வூட் பெசண்ட்  அவர்களின்  பிந்தநாள் 



அன்னி வூட் பெசண்ட் (Annie Wood Besantஅக்டோபர் 11847 – செப்டம்பர் 201933) என்பவர் பெண் விடுதலைக்காகப் போராடியவர், எழுத்தாளர் மற்றும் பேச்சாளர் ஆவார். "லிங்க்" என்ற பெயரில் பத்திரிகையைத் தொடங்கி, இந்தியாவிலும் அயர்லாந்திலும் விடுதலைப் போராட்டங்களுக்கு ஆதரவாக எழுதினார். பெண்கள் விடுதலை, தொழிலாளர் உரிமைகள், குடும்பக் கட்டுப்பாடு போன்ற பலவற்றிலும் தனது கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவித்தார்.


நீதிக்கதை

 குறையா? நிறையா?


ஒரு கிராமத்தில் ஒரு ஏழை வாழ்ந்து வந்தான். அவன் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவான். தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, பானையில் பாதியளவு நீரே இருக்கும். குறையில்லாத பானை குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்துகொண்டே இருக்கும். இப்படியே இரண்டு வருடங்கள் ஆனது. கேலியைப் பொறுக்கமுடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்து ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். என் குறையை நீங்கள் சரிசெய்யுங்களேன் என்றது. 

பானையே! நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா? என்று அதன் எஜமானன் கேட்டான். உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுவில் பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். இறைவனுக்குப் பூஜை செய்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன் என்று கூறினான். இதைக் கேட்ட பானை அதன் வருத்ததை நிறுத்திவிட்டது. அடுத்தவர் பேச்சைப்பற்றிக் கவலைப்படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத்தொடங்கியது. 

நீதி :
மற்றவர்கள் பேசுவதை நினைத்துக்கொண்டு இருந்தால் நாம் நிம்மதியாக வாழமுடியாது.

இன்றைய செய்திகள்

01.10.21

■கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காற்றாலைகளில் பன்னாட்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் நவீன உத்தியில் மின்சாரம் தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

■தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

■மதுரவாயல்- துறைமுகம் இடையே 2 அடுக்கில் பறக்கும் சாலை திட்டம்; திட்ட அறிக்கை கிடைத்ததும் பணிகள் தொடங்கப்படும்: நெடுஞ்சாலைத் துறை செயலர் தீரஜ் குமார் தகவல்.


■நிபா வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்புத்திறன் அதனைப் பரப்பும் வவ்வால்களிடமே இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறியிருக்கிறார் கேரள சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ்.

■தாய்லாந்தில் கனமழையால் 70 ஆயிரம் வீடுகள் வரை நீரில் மூழ்கி உள்ளன. 7 பேர் வரை உயிரிழந்து உள்ளனர்.

■செவ்வாய் கிரகத்தின் கண்காணிப்பு பணிகள் சில வாரங்கள் நிறுத்தம்; நாசா அறிவிப்பு.

■ஜூனியர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்:தொடக்க நாளில் அசத்திய இந்திய வீரர்கள்.

■இந்தியாவின் அதிவேக மோட்டார் சைக்கிள் பந்தய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்27 வயதான கல்யாணி பொடேகர்.

Today's Headlines

📃The Minister of Information and Technology has stated that steps will be taken to generate electricity in a modern manner with the participation of multinational companies in the wind farms in the Kanyakumari district.

 📃The Met Office has forecast heavy rains in Tamil Nadu and Pondicherry for the next four days.

  📃2-lane flyover project between Maduravayal-Port;  Once the project report is received, work will start: Highways Secretary Dhiraj Kumar.

 📃Kerala Health Minister Veena George has said that bats have been found to be immune to the Nipah virus.

📃 Heavy rains in Thailand have submerged up to 70,000 homes.  Up to 7 people have been killed.

 📃Mars observation missions halted for a few weeks;  NASA announcement.

📃 In Junior Sniper Championship our Indian players' rock on an opening day.

📃 27-year-old Kalyani Bodekar, has become the fastest motorcyclist in India.
Prepared by
Covai women ICT_போதிமரம்

Wednesday, September 29, 2021

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 30.09.21

 திருக்குறள் :

அதிகாரம்:கல்லாமை

குறள்:406

உளரென்னும் மாத்திரைய ரல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்.

விளக்கம்:

படிக்காதவர் உடலால் இருப்பவர் என்று சொல்லும் அளவினரே அன்றி, எவர்க்கும் பயன்படாதவர், ஆதலால் விளைச்சல் தராத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.

பழமொழி :

Good and bad are not due others

தீதும் நன்றும் பிறர் தர வாரா

இரண்டொழுக்க பண்புகள் :

1. பொறுமையை விட மேலான தவமில்லை எனவே எப்போதும் பொறுமையாக இருப்பேன் .

2.திருப்தியை விட மேலான இன்பமில்லை எனவே எனக்கு உள்ள பொருட்செல்வம் போதும் என்று இன்புற்று இருப்பேன்

பொன்மொழி :

சரி, தவறு என்பதெல்லாம் அவரவர் வாழும் சூழ்நிலையும் வளர்ந்த விதமும் கற்பிக்கப்பட்ட ஒழுக்கமும் உருவாக்கியதே!
---ஜெயகாந்தன்

பொது அறிவு :

1.ஆய்வகத்தில் உள்ள உயிரியல் மாதிரிகளை பாதுகாக்க பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் எது? 

எத்தனால்.

2.இறந்த உடல்கள் அழுகாமல் இருக்க பயன்படுத்தப்டும் வேதிப்பொருள் எது?

 ஃபார்மால்டிஹைடு.

English words & meanings :

Clothes - the tailored or ready-made dresses. ஆடைகள். 

Cloth - woven fabric. தைக்க படாத துணி

ஆரோக்ய வாழ்வு :

பருப்பு வகைகளின் நன்மைகள்

1)துவரம் பருப்பு

துவரம் பருப்பில் நல்ல அளவில் புரோட்டீன், ஃபோலிக் ஆசிட் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. 

மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கலாம்.

2)பாசிப்பருப்பு

பாசிப்பருப்பில் வைட்டமின் ஏ, பி, சி, ஈ மற்றும் கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது.

மேலும் உடல் எடையை குறைப்பதற்கு உதவியாகவும் இருக்கும். 

3)பச்சை பயறு

பச்சை பயறு சாப்பிட்டால், உடலில் உணவுகள் எளிதல் செரிமானமடைவதோடு, உடல் எடை மற்றும் கொலஸ்ட்ரால் குறையவும் உதவியாக இருக்கும்

4)கொண்டைக்கடலை

கொண்டைக்கடலை இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறையும்.

மேலும் இது உடல் சக்தியையும் அதிகரிக்கும்.

5)மைசூர் பருப்பு

மைசூர் பருப்பின் சிறப்பு புற்றுநோய் தாக்கத்தில் இருந்தும் காப்பாற்றும்.

உடலில் இரத்தத்தை அனைத்து உறுப்புகளுக்கும் சீராக கொண்டு செல்லும்.

கணினி யுகம் :

Esc - Cancel. 

Space bar - Hand access tool

செப்டம்பர் 30:

தமிழ் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்ட  நாள்




தமிழ் விக்கிப்பீடியாவின் வரலாறு 2003, செப்டம்பர் 30 ஆம் திகதி முதல் தொடங்குகிறது. இன்று தமிழ் விக்கிப்பீடியாவில் பக்கங்கள் 4,44,421, கட்டுரைகள் 1,41,094, கோப்புகள் 8,040, தொகுப்புகள் 32,79,774, பயனர்கள் 1,95,560, சிறப்புப் பங்களிப்பாளர்கள் 354, தானியங்கிகள் 188, நிருவாகிகள் 34, அதிகாரிகள் 4 என வளர்ந்து நிற்கின்றது. தமிழ் விக்கிப்பீடியாவைப் பொருத்தமட்டில் இ. மயூரநாதனின் முன்னெடுப்புக்களே தமிழ் விக்கிப்பீடியாவின் ஆரம்ப வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளது. தற்போது விக்கிப்பீடியாவில் பயனர்கள் 1,95,560 பேர் புகுபதிகை செய்துள்ளனர். அதில் முன்னிலையில் நின்று பங்களிக்கும் சிறப்புப் பயனர்கள் 354 உள்ளனர். இப்போதைக்கு அனைத்துப் பயனரின் பங்களிப்புடன் தமிழ் விக்கிப்பீடியாவில் காணப்படும் கட்டுரைகளின் எண்ணிக்கை 1,41,094 ஆகும். இதில் சிறப்பு என்னவென்றால் 18% கட்டுரைகள் இ. மயூரநாதனுடையதாகவே இருப்பதே. 2015 ஆம் ஆண்டின்படி மயூரநாதன் எழுதியக் கட்டுரைகள் 4000 எனும் எண்ணிக்கையினை கடந்துச் செல்கிறது. அத்துடன் மயூரநாதன் எழுதும் கட்டுரைகள், எண்ணிக்கையை அதிகரிப்பதனை மட்டுமே நோக்காகக் கொள்ளாமல் காத்திரமானவைகளாகவும் உள்ளன.

பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாள்





பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாள் (International Translation Day) ஆண்டுதோறும் விவிலிய மொழிபெயர்ப்பாளர் புனித ஜெரோமின் (கிபி 347-420) நினைவு நாளான செப்டம்பர் 30ஆம் நாள் கொண்டாடப்படும் ஒர் சிறப்பு நாளாகும். ஜெரோம் மொழிபெயர்ப்புகளின் பாதுகாவலர் என அழைக்கப்படுகிறார்.


நீதிக்கதை

 வியாபாரியின் கதை


ஒரு ஊரில் ஒரு வியாபாரி இருந்தான். அவன் நன்றாக உழைத்து பணத்தைச் சேர்த்தான். அதனால் அவனுக்கு பண ஆசை அதிகரித்து! மனநிம்மதி போய்விட்டது. 

ஒருநாள் இரவு திடீரென்று அவனுக்கு ஓர்! யோசனை தோன்றியது. சன்யாசியாகி விட்டால் மன நிம்மதி கிடைக்கும் என்று முடிவெடுத்தான். 

மறுநாளே, தன்னிடமிருந்த பணத்தையெல்லாம் ஒரு துணியில் மூட்டையாகக் கட்டிக் கொண்டு ஊரைவிட்டு காட்டுக்கு வந்தான். 

அங்கே ஒரு சன்யாசி தவம் செய்து கொண்டிருந்தார். அவரிடம் பல சிஷ்யர்கள் தொண்டு செய்து கொண்டிருந்தனர். அவர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதைப் பார்த்து வியாபாரி, அந்த குருவை வணங்கி, சாமி நான் ஒரு வியாபாரி சம்பாதிக்க சம்பாதிக்க பண ஆசை நாளுக்கு நாள் அதிகரித்தது. மன நிம்மதி போய்விட்டது. நான் சேர்த்த பணமூட்டையை பெற்றுக் கொண்டு என்னையும் சிஷ்யனாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பணிவாகக் கேட்டான். 

அவன் கீழே வைத்த பணமூட்டையை, அந்தக் குரு எடுத்துக் கொண்டு, திடீரென்று ஓட ஆரம்பித்தார். வியாபாரிக்கு ஒன்றும் புரியவில்லை! அவனும் அவருக்குப் பின்னே ஓடினான். அவன் தன் பின்னால் ஓடிவருவதைக் கவனித்த குரு, இன்னும் வேகமாக ஓட ஆரம்பித்தார். வியாபாரியும் அய்யோ, என் பணமூட்டை... ! என்று கத்திக் கொண்டே அவர் பின்னால் ஓடினான். 

குரு பணமூட்டையுடன் வெகுதூரம் சென்றுவிட்டு, பிறகு மீண்டும் அவரது இடத்திற்கே வந்து பணமூட்டையை அதே இடத்தில் வைத்துவிட்டு, மீண்டும் சலனமில்லாமல் அமர்ந்து கொண்டார். 

நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு வியாபாரியும் குருவிடம் வந்தான். தனது பணமூட்டை இருப்பதைப் பார்த்து குழம்பிப்போனான். 

குரு அவனைப் பார்த்து மகனே, இன்னும் பண ஆசை உன்னைவிட்டுப் போகவில்லை! அதனால் நீ மீண்டும் வியாபாரம் செய். எனது ஆசிரமத்தில் உனக்கு இப்போதைக்கு இடமில்லை! சென்று வா... ! என்று சாந்தமாக உபதேசம் செய்தார். வியாபாரி தனது பணமூட்டையுடன் ஊர் திரும்பினான். 

நீதி :
அளவோடு சம்பாதித்தால் மனநிம்மதியுடன் இருக்கலாம்.

இன்றைய செய்திகள்

30.09.21

★பெருந்தொற்றுக் காலத்தில் மாணவர்களுக்கு ஏற்படும் கற்றல் இழப்புகளை ஈடு செய்ய சிறப்பு கவனம் செலுத்தும் வகையில் தமிழக அரசு அறிவித்துள்ள கற்பித்தல் வாசிப்பு இயக்கத்துக்கு சிஆர்ஒய் அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.

★குழந்தைத் தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் அபராதம் மற்றும் இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என தொழிலாளர் நலத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

★கலைஞர் செம்மொழித் தமிழ் விருதைப் பெற புதுச்சேரி மத்தியப் பல்கலைகக்கழக முன்னாள் பேராசிரியர்கள் இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

★நாடு முழுவதும் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழங்கப்படும் தேசிய உணவுத் திட்டத்தின் பெயர் பிரதமர் போஷான் திட்டம் என மாற்றப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்காக அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.1.30 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

★2021 ஆம் ஆண்டுக்கான முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு (NEET PG) முடிவுகள் வெளியாகியுள்ளன.

★நியூசிலாந்தில் டெல்டா வைரஸ் காரணமாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

★சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி 2-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டி அணியை வீழ்த்தியது.

★பாராஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மாரியப்பன் உட்பட 4 பேருக்கு பதவி உயர்வு - இந்திய விளையாட்டு ஆணையம் -‘சாய்’ முடிவு.

Today's Headlines

★CROY welcomes the Teaching Reading Movement announced by the Government of Tamil Nadu with a special focus on bridging the students for their learning loss during this pandemic period. 

 ★ The Department of Labor has warned that employing child labor carries a fine and up to two years in prison.

 ★ Two former professors of Puducherry Central University have been selected to receive the kalaingar semozhi award.

 ★ The name of the National Food Program for students in grades 1 to 8 across the country has been changed to the Prime Minister's Boshan Program.  The Union Cabinet has approved an allocation of Rs 1.30 lakh crore for the next five years.

 ★ NEET PG results for 2021 postgraduate medical courses have been released.

 ★ Corona infection is on the rise in New Zealand due to the delta virus.

 ★ Paris Saint-Germain beat Manchester City by 2-0 in the Champions League.

 ★ Promotion will be given for four persons including Paralympic medalist Mariappan said SAI the Sports Commission of India.
Prepared by
Covai women ICT_போதிமரம்

Tuesday, September 28, 2021

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 29.09.21

 திருக்குறள் :

அதிகாரம்:கல்லாமை

குறள்:406

உளரென்னும் மாத்திரைய ரல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்.

விளக்கம்:

படிக்காதவர் உடலால் இருப்பவர் என்று சொல்லும் அளவினரே அன்றி, எவர்க்கும் பயன்படாதவர், ஆதலால் விளைச்சல் தராத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.

பழமொழி :

Action speaks better than words.

சொல்வதைக் காட்டிலும் செயலே சிறந்தது.

இரண்டொழுக்க பண்புகள் :

1. பொறுமையை விட மேலான தவமில்லை எனவே எப்போதும் பொறுமையாக இருப்பேன் .

2.திருப்தியை விட மேலான இன்பமில்லை எனவே எனக்கு உள்ள பொருட்செல்வம் போதும் என்று இன்புற்று இருப்பேன்

பொன்மொழி :

 எதுவும் தானாக வளரவேண்டும். அனுபவத்திலும் அதனால் வரும் படிப்பினையிலும் தவிர வேறு எதிலும் மதிப்பு இல்லை. .. சுவாமி விவேகானந்தர்

பொது அறிவு :

1.உலகின் மிகப் பெரிய அஞ்சல்துறை கொண்ட நாடு எது? 

இந்தியா.

2.உலகின் மிகப் பெரிய அணை எங்குள்ளது? 

அமெரிக்காவில் உள்ள கௌல்டாம் அணை.

English words & meanings :

Find - to discover and understand. கண்டுபிடித்தல். 

Search - to look for thoroughly in a place. தேடுதல்

ஆரோக்ய வாழ்வு :

இருதயத்திற்கு ஆரோக்கியமான உணவுகள்

  • கீரை வகைகள் பொதுவாகவே ஆரோக்கியமானவை. அவற்றை சாலட்களாக சாப்பிடலாம். 
  • ஆரஞ்சு, பப்பாளி, பரங்கி போன்ற பழங்கள் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது. 
  • தக்காளிப் பழத்தில் இதயத்தை பாதுகாக்கும் சக்திகள் நிறைந்துள்ளது. அதிக அளவு உணவில் தக்காளி சேர்த்துக் கொள்வது உங்கள் இதயத்தைப் பாதுகாக்கும் 
  • 70% கோகோ நிறைந்த டார்க் சாக்லெட் 
    பிராக்கோலி, இது வெளிநாட்டு உணவு என்றாலும், இந்தியாவிலும் தற்போது கிடைக்கிறது. 
  • ஒமேகா-3எஸ் நிறைந்த மீன்களை அதிகம் சாப்பிடவும். சூரை, காலா, கானாங்கெளுத்தி, கொய்மீன் உள்ளிட்டவற்றை அதிகம் உட்கொள்ளவும். 
  • பாதாம் மற்றும் அக்ரூட் பருப்புகள் உள்ளிட்ட சத்தான கடலை வகைகளை சாப்பிடவும். 

கணினி யுகம் :

Ctrl + Ins - Copy selected item. 

Shift + Ins - Paste

செப்டம்பர் 29:

ரூடோல்ப் கிறிஸ்டியன் கார்ல் டீசல்  அவர்களின் நினைவுநாள்






ரூடோல்ப் கிறிஸ்டியன் கார்ல் டீசல்  (மார்ச் 181858 - செப்டம்பர் 291913) ஜெர்மனியைச் சேர்ந்த பொறியியலாளரும் புகழ் பெற்ற டீசல் உந்து பொறியைக் கண்டுபிடித்த கண்டுபிடிப்பாளரும் ஆவார். ரூடோல்ப் டீசல் உந்து பொறி கண்டுபிடித்தது குறித்த ஆய்வுக் கட்டுரையை 1886 ஆம் ஆண்டு வெளியிட்டார்.

உலக இருதய தினம்





சர்வதேச இருதய அமைப்பு, ஆண்டுதோறும் செப்டம்பர் 29 ஆம் தேதியை, உலக இருதய தினமாக அனுசரிக்கிறது. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒன்றே முக்கால் கோடி பேர் இருதய நோயால் தங்களது இன்னுயிரை இழப்பதாக கூறுகிறார்கள். அதில் 75 லட்சம் பேர் மாரடைப்பாலும் 67 லட்சம் பேர் வாத நோயாலும் இறக்கின்றனர்.இருதய நோய்கள் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலக இருதய தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது

நீதிக்கதை

 பாசமுள்ள சிறுவன்


மாட்டுகாரன் ஒருவர் தன் பசுவோடு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அமைதியாக நடந்து வந்த பசு திடீரென அடம்பிடித்து நடு ரோட்டில் அமர்ந்து கொண்டது. சிறிய அளவிலான அந்த ரோட்டில் வாகனங்கள் எதுவும் செல்லமுடியாதபடி பசு நடுரோட்டில் படுத்திருந்தது. மாட்டுகாரன் எவ்வளவு முயற்சி செய்தும் அந்த பசுவை எழுப்ப முடியவில்லை. 

அந்த வழியாக ஒரு போலீஸ்காரர் வந்தார். தன்னுடைய முரட்டு மீசையையும் கையிலிருந்த லத்தியையும் வைத்து மிரட்டிப் பார்த்தார். மாட்டுகாரனுடன் சேர்ந்து பசுவை இழுத்துப் பார்த்தார். பசு அசையவில்லை 

அப்போது ஐஸ்கிரீம் விற்கும் நபர் ஒருவர் அந்த வழியாக வந்தார். குளிர்ச்சியாகப் பேசிப்பார்த்தார். நகராமல் இருந்த பசுவை மூவரும் சேர்ந்து இழுத்தனர். 

மல்யுத்த போட்டியொன்றில் வெற்றிபெற்று திரும்பிக் கொண்டிருந்த வீரர் ஒருவர் அந்த வழியாக வந்தார். ஒரு பசுவை ரோட்டிலிருந்து மூன்று பேர் நகர்த்துவதைப் பார்த்து நகைத்தார். மூன்று பேரையும் நகரச் சொல்லிவிட்டு மல்யுத்த வீரர் தனித்து மாட்டை இழுத்துப் பார்த்தார். பசு அசரவில்லை. 

அந்த வழியாக ஒரு சிறுவன் வந்தான். அவன் ரோட்டருகே வளர்ந்து நின்ற புற்களை பறித்து கட்டாக கட்டி பசுவிற்கு கொடுத்தான். பசு புல்லை சாப்பிட எழுந்தது. சிறுவன் புல்லை பசுவிடம் காட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். பசுவும் அவனோடு நகர்ந்தது. 

நீதி :
அன்பால் எதையும் சாதிக்கலாம்.

இன்றைய செய்திகள்

29.09.21

★மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என  வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

★காந்தி பிறந்த நாள் அன்று சென்னையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப்போட்டி நடத்தப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது.

★புதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

★பல அடுக்குப் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றி தொடக்கப் பள்ளிகள் முதல் படிப்படியாகத் திறக்கலாம் என்று ஐசிஎம்ஆர் அமைப்பின் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

★30 ஆண்டுகளாக பேசிக் கொண்டே இருக்கிறீர்கள் ஆனால் பலன் என்னவென்று இத்தாலியின் மிலன் நகரில் யூத் ஃபார் க்ளைமேட் (Youth4Climate)மாநாட்டில் "காலநிலை மாற்றத்துக்கான இளைஞர்கள்" என்ற தலைப்பில் கிரெட்டா துன்பர்க் உலகத் தலைவர்களை விளாசியிருக்கிறார்.

★ஐ.பி.எல் கிரிக்கெட்: டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Today's Headlines

★ A press release issued by the Department of Employment and Training states that Central Government employees can apply for selected posts.

 ★ The Tamil Development Department has announced that a talk show will be held for school and college students in Chennai on Gandhi's birthday.

 ★ The Minister of Medicine and Public Welfare has said that the Central Government has given permission for the admission of students to the new medical colleges.

 ★ Experts from the ICMR organization suggest that elementary schools can be opened in the first place following a series of layers of security.

 ★ In the youth4climate conference held in Milan city Italy, CretaDunberg had vigorously said to all the world leaders that   You've been talking for 30 years but what's the benefit of that?

 ★ IPL Cricket: Kolkata Knight Riders won the match by 3 wickets against Delhi.
Prepared by
Covai women ICT_போதிமரம்