Wednesday, November 20, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 21.11.19

திருக்குறள்

அதிகாரம்:கொல்லாமை

திருக்குறள்:325

நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.

விளக்கம்:

உலகியல் நிலையை வெறுத்துத் துறவு பூண்டவர் எல்லோரையும்விடக் கொலையை வெறுத்துக் கொல்லாமையைக் கடைப்பிடிப்பவரே சிறந்தவராவார்.

பழமொழி

Shun the wicked, as you would the plague

 துஷ்டனைக் கண்டால் தூர விலகு

இரண்டொழுக்க பண்புகள்

1. சுத்தம் சுகம் தரும். எனவே எப்போதும் சுய சுத்தம், சுற்றுப்புற சுத்தம் பேணுவேன்.

2. என்னுடைய அகமும் தூய்மையாக இருக்கும் படி பார்த்துக் கொள்வேன்.

பொன்மொழி

நீங்கள் நல்லவர் என்றால் மற்றவர்களுக்கும் நீங்கள் நல்லவர் தான்.சமூகத்திற்கும் நல்ல செயல்களை மட்டுமே செய்பவர் தான்.

___பிராங்க்ளின்

பொது அறிவு

இன்று உலக தொலைக்காட்சி தினம் மற்றும் உலக மீன்பிடி தினம்

1.தொலைக்காட்சியை கண்டுபிடித்தவர் யார்?

 ஜே.எல்.பைர்ட்(1926)

2.மீன்களை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு எது?

ஜப்பான்.

3. நீலப் புரட்சி என்பது எதனைக் குறிக்கிறது ?

 நீலப் புரட்சி என்பது அதிக அளவு மீன் உற்பத்தியை குறிக்கும்

English words & meanings

 Laryngology – study of larynx. தொண்டை மற்றும் குரல்வளை குறித்த படிப்பு.

 Lactic - relating to or obtained from milk. பால்சார்ந்த

ஆரோக்ய வாழ்வு

கிராம்பை அவ்வப்போது கடித்துவந்தால் தலைவலிக்கு சுகமாக இருக்கும்.

Some important  abbreviations for students

HP  - horsepower

h&c - hot and cold

நீதிக்கதை

செய்நன்றி மறவேல்

ஒருநாள் மான் ஒன்று புல் மேய்ந்துக் கொண்டிருக்கையில், வேடன் ஒருவன் கண்களில் சிக்கியது. அவன் மானைக் கொல்ல, அம்பெய்தப் குறி பார்த்தான்.

மான் நாலு கால் பாய்ச்சலில் பாய்ந்து ஓடியது. சிறிது தூரம் சென்றதும், ஒரு புதரைப்பார்த்து அதன் பின் ஓடி ஒளிந்தது. மானைத் துரத்தி வந்த வேடன் அதைக் காணாது சுற்றும் முற்றும் தேட ஆரம்பித்தான்.

அவனிடமிருந்து தப்பித்துவிட்டோம் என்ற எண்ணத்தில் புதரில் வளர்ந்திருந்த செடியின் இலைகளை மான் தின்ன ஆரம்பித்தது. அப்போது அச்செடி, மானே! நான் உன்னை வேடனிடமிருந்து காப்பாற்றியுள்ளேன்! ஆனால், நீ எனது செல்வங்களான இலைகளை உண்ணுகிறாய். தயவு செய்து சில நாட்களாவது அவை தாயான என்னிடம் இருக்கட்டும் என கெஞ்சியது.

ஆனால், அதைக் கேட்காத மான் செடியின் இலைகளை உண்ணத் தொடங்கியது. அப்போது, அதனால் சிறு சலசலப்பு உண்டாக, வேடன் மான் அங்கு ஒளிந்திருப்பதைப் பார்த்துவிட்டான். அதன் மீது அம்பை எய்திக் கொன்றான்.

தன்னைக் காத்த செடியின் செய்நன்றியை மான் மறந்ததால் மான் உயிரையே இழக்க நேர்ந்தது. நாமும் நமக்கு ஒருவர் சிறிய உதவியைச் செய்தாலும் அதை மறக்காது, உதவி புரிந்தோர்க்கு நம்மாலான நன்மைகளையே செய்ய வேண்டும்.

வியாழன்
அறிவியல்

அறிவோம் அறிவியல்

Boat with baking powder

தேவையான பொருட்கள் :
ஒரு பிளாஸ்டிக் குப்பி, உறிஞ்சு குழல் (straw), ஆப்ப சோடா அல்லது சோடா மாவு, சிவப்பு நிற உணவு கலர், எலுமிச்சை சாறு அல்லது வினிகர்.

செய்முறை :
குப்பியில் உள்ள மூடியில் சிறு துளை இட்டு அதில் உறிஞ்சு குழலை சொருகவும். குப்பியின் உள்ளே ஆப்ப சோடா போட்டு அதனுடன் சிவப்பு உணவு கலரை சேர்க்கவும்  வினிகரை ஊற்றவும். மூடியை இறுக்க மூடி நீர் நிரம்பிய தொட்டியில் இடவும். தற்போது குப்பி ஒரு ஜெட் படகு போல செல்வதைக் காணலாம்.

அறிவியல் : ஆப்ப சோடா வினிகருடன் வினை புரிந்து CO2 உற்பத்தி செய்யும். இது அதிக விசையுடன் உறிஞ்சு குழல் வழியாக வெளியேறும். இந்த விசை குப்பியை அதி வேகத்தில் அங்கும் இங்கும் இயங்க வைக்கும். சிவப்பு வர்ணம் தொட்டியில் உள்ள நீரில் இருந்து வேறுபடுத்தி அறிய சேர்க்கப் படுகிறது.

இன்றைய செய்திகள்

21.11.19

* இரண்டாம் உலகப் போரின் மையப் பேசுபொருளாக விளங்கிய நாஜித் தலைவர் அடால்ஃப் ஹிட்லர் பிறந்த கட்டடத்தை காவல்  நிலையமாக மாற்ற ஆஸ்திரிய அரசு முடிவு செய்துள்ளது.

* குற்றாலம் பகுதியில் புதன்கிழமை பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதனையடுத்து குற்றாலம் அருவியில் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.

*நாமக்கல்லில், பசுமைத் தாயகம் அமைப்பு சாா்பில், 2 கிலோ நெகிழிக்கு ஒரு கிலோ அரிசி மற்றும் காய்கறி வழங்கும் விழிப்புணா்வு முகாம்  நடைபெற்றது.

* யூரோ 2020 கால்பந்து போட்டி இறுதிச் சுற்றுக்கு டென்மாா்க், ஸ்விட்சா்லாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன.

* தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் எல். சிவராம கிருஷ்ணன் இந்திய அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராக இருக்கிறார்.

Today's Headlines

🌸The Austrian government has decided to convert the birth place where  Nazi leader Adolf Hitler who was the central figure of World War II, into a police station.

 🌸Heavy rains in the Courtallam area caused floods in the Courtallam falls .Bathing was banned due to this .

 🌸 At Namakkal, Green Home Organization  held an awareness camp where they  provide 1 kg of rice and vegetable for 2 kg  of plastics.

 🌸 Denmark and Switzerland teams were qualified for the final of Euro 2020 Football Tournament.

   🌸Mr.Sivarama Krishnan, the Former cricketer of Tamil Nadu is the new chief selector of the Indian selection committee.

Prepared by
Covai women ICT_போதிமரம்

Wednesday, November 13, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 14.11.19



அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்.....

Monday, November 4, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 05.11.19

திருக்குறள்

அதிகாரம்:இன்னா செய்யாமை

திருக்குறள்:311

சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.

விளக்கம்:

சிறப்பைத் தரும் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும்கூட அடுத்தவர்க்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கையாகும்."l

பழமொழி

Casting no Pearls before swine
 கழுதை அறியுமா கற்பூர வாசனை.

இரண்டொழுக்க பண்புகள்

1. மலருக்கு மணம் அவசியம் போல மனிதனுக்கு குணம் முக்கியம்.

2. எனவே மனிதரின் குணங்களை வைத்தே அவர்களை மதிப்பிடுவேன்.

பொன்மொழி

சிரிப்பு என்பது உலக ஜீவராசிகளில் மனிதனுக்கு மட்டுமே உள்ள சிறப்பு. இதை உணர்ந்து தேவைக்கேற்ப புன்னகை புரிதலே அதற்கு நாம் செய்யும் சிறப்பு ஆகும்.

-----நெல்லை கண்ணன்

பொது அறிவு

1. நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற நகரம் எது ?

 திருப்பூர்

 2.பிப்ரவரி 29 அன்று பிறந்த இந்திய பிரதமர் யார்?

 மொரார்ஜி தேசாய்

English words & meanings

Xylology – study of wood. மரக் கட்டைகள் மற்றும் அவற்றில் உள்ள பொருட்கள் குறித்த படிப்பு.

 Xebec - a type of sailing vessel or ship. மூன்று பாய்மரங்கள் உடைய கப்பல்

ஆரோக்ய வாழ்வு

பனங்கற்கண்டு உடல் உஷ்ணம், நீர் சுருக்கு, காய்ச்சலினால் ஏற்படும் வெப்பம் ஆகியவற்றை போக்குகிறது.

Some important  abbreviations for students

BTW - by the way

FB - Facebook

நீதிக்கதை

உருவத்தை பார்த்து பழகாதே

ஒரு குளத்தில் பல வகையான வண்ண மீன்கள் வாழ்ந்து வந்தன. மீன் குஞ்சுகள் எப்பொழுதும் கரையோரம் கூடி விளையாடிக் கொண்டிருப்பார்கள். அதில் சோமு சிண்டு என்ற மீன்கள் ஒரு நாள் விளையாடி கொண்டிருக்கும்போது ஏய் சிண்டு... என்னைப்பிடி பார்க்கலாம் என்றான். என்கிட்டேயே சவால் விடறியா இப்ப பாரு, ஒரு நொடியில் பிடிக்கறேன் என்று சொல்லி விளையாடி கொண்டிருந்தது.

அப்போது கரையில் ஒரு காகம் புழுக்களைக் கொத்திக் கொண்டிருப்பதை பார்த்து ஏய் சோமு, அங்கே பார் அவன் எவ்வளவு கருப்பாக இருக்கிறான். அவன் குரலை நீ கேட்டிருக்கிறாயா? அருவருப்பாக இருக்கும். அவனை பார்த்தால் பயமாக இருக்கிறது வா போய்டலாம் என்று சிண்டு சொன்னதும், எல்லா மீன்களும் குளத்துக்குள் வேகமாகச் சென்றன. அவசர அவசரமாக மீன்கள் உள்ளே சென்றபோது, பசங்களா? ஏன் இப்படி ஓடி வர்றீங்க? என ஒரு பெரிய மீன் கேட்டது கரையில் காகம் இருக்கு. அதனோட நிறமும் குரலும் பயமா இருக்கு? அதான்...

ஓ....! காகமா, காகத்தினால் நமக்கு எந்த ஆபத்தும் இல்லை. உருவத்தை மட்டுமே வைத்து ஒருவரைப் பற்றி தப்பாக நினைக்கக் கூடாது என்று, அந்த பெரிய மீன் சொல்ல, மற்ற மீன்குஞ்சுகள் இந்த தாத்தாவுக்கு வேற வேலை இல்லை. எப்பவும் உபதேசம் தான். வாங்க போகலாம். என கூறி சென்றது. அடுத்த நாள் வந்தது. குளத்தின் கரையில் கொக்கு ஒன்று அமர்ந்து இருந்தது. அதை பார்த்த மீன் குஞ்சுகள், ஏய் அங்கே பாரு வெள்ளையா... அட! என்ன பறவை அது? வெள்ளையா எவ்வளவு அழகா இருக்கு! அலகும் நீளமா இருக்கு. அடடே! அதனோட நடையைப் பாரேன். மீன் குஞ்சுகள் பேசும் சத்தம் கேட்டு குளத்தை நெருங்கியது கொக்கு.

உடனே மீன் குஞ்சுகள், அண்ணே! நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. உங்க அலகைத் தொட்டுப் பார்க்கலாமா? கொக்குக்கு ஒரே கொண்டாட்டம். ஓ! தொட்டுப் பாரேன். ஒரு மீன் குஞ்சு கொக்கை நெருங்க, கொக்கு மீனை கவ்வியது. நல்லா மாட்டிக்கிட்டியா? என்றது. மாட்டிய மீன் ஆ! என்னை விட்டு விடு! என்று கெஞ்சியது. இதை பார்த்த மற்ற மீன் குஞ்சுகள் ஆபத்து... ஓடுங்க! ஓடுங்க! என்று குளத்திற்குள் சென்றன. அந்த கொக்கு கவ்விய மீனுடன் வானத்தில் சென்று மறைந்தது.



மற்ற மீன் குஞ்சுகள், அந்த தாத்தா மீன் சொன்னது சரியாப் போச்சு. அழகை மட்டும் பார்த்து ஒருத்தரோட பழகக்கூடாது. ஆமாம்! ஆமாம்! என்று உறுதியெடுத்து கொண்டன. அன்று முதல் மற்ற மீன் குஞ்சுகள் கவனமாக இருந்தன. சந்தோஷமாக வாழ்ந்தன.

இன்றைய செய்திகள்

05.11.19

*அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

*டெல்லி காற்றுமாசு விவகாரம்: பஞ்சாப், ஹரியானா, உ.பி. மாநில தலைமை செயலாளர்களுக்கு உச்சநீதிமன்றம் சம்மன்.

*பொள்ளாச்சி  ஆழியாறு அணையில் இருந்து நீர் திறப்பு.

*டில்லியை தொடர்ந்து பஞ்சாப்பில் உச்சகட்டத்தை எட்டி உள்ள காற்று மாசுபாடு காரணமாக பஞ்சாப் கண்காணிப்பு மைய செயற்கோள்கைகள் திணறி வருகின்றன.

*16 அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி: உலக கோப்பை அட்டவணை வெளியீடு...2020 நவ. 15ல் மெல்போர்னில் இறுதிப்போட்டி.

Today's Headlines

🌸A new meteorological low-lying area near Andaman has been developed, said the Chennai Meteorological Department.

🌸Delhi Airpollution issue:  Supreme Court sent summons to   Punjab, Haryana and UP

🌸Pollachi: Water released from Azhiyar dam.

🌸 Due to air pollution which has reached its peak in Punjab following Delhi the satellites which monitoring the Punjab are being groped.

🌸 World cup T20 match schedule  between 16 teams was released,on 2020 Nov  15th finals will be played at Melbourne.

Prepared by
Covai women ICT_போதிமரம.