Thursday, April 27, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 28.04.23

  திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: புறங்கூறாமை

குறள் : 190
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னு முயிர்க்கு.

பொருள்:
பிறர் குற்றத்தைக் காண்பவர்கள் தமது குற்றத்தையும் எண்ணிப் பார்ப்பார்களேயானால் புறங்கூறும் பழக்கமும் போகும்; வாழ்க்கையும் நிம்மதியாக அமையும்

பழமொழி :

Constant change is a sign of progress.
தொடர்ந்த மாற்றம், முன்னேற்றத்திற்கான அறிகுறி.

இரண்டொழுக்க பண்புகள் :

1. வாழ்க்கையில் ஒரு செயலை ஆரம்பிப்பதற்கு முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு கொள்ள வேண்டும். 

2. திட்டமிடுதல் மிக முக்கியம். திட்டமிடுவோம் செயல்படுவோம்

பொன்மொழி :

உண்மைகள் உறங்கலாம் ஆனால் ஊமையாகாது

பொது அறிவு :

1. சுதந்திர இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல் யார் ? 

ராஜாஜி .

 2.அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி யார்? 

ஜார்ஜ் வாஷிங்டன்.

English words & meanings :

Reel - a round object where we can store the wire or film role, கம்பி, சினிமா பட சுருள் ஆகியவற்றை சுற்றி வைக்க பயன்படும் வட்ட வடிவ பொருள். 

Rift - a crack in the rock, பாறையில் ஏற்படும் பிளவு 

ஆரோக்ய வாழ்வு :

ஸ்ட்ராபெர்ரி பழங்களில் வைட்டமின் C அதிகம் உள்ளது. உடலில் கொலாஜன் உற்பத்தி செய்ய வைட்டமின் C மிகவும் முக்கியம். கொலாஜன்கள் சருமத்தின் நெகிழ்ச்சி மற்றும் விரிவு தன்மைக்கு மிகவும் அவசியம். முதுமையான தோற்றத்திற்கும், சருமத்தில் சுருக்கங்கள் உண்டாவதற்கும் முக்கியமான காரணம் குறைந்த அளவிலான கொலாஜன்கள் ஆகும். ஸ்ட்ராபெர்ரி போன்ற வைட்டமின் C அதிகம் உள்ள பழங்களை உண்பதால் நம் சருமத்திற்கு முதுமை அகற்றும் தன்மை உண்டாகும்.

கணினி யுகம்

Windows key + H : Open the Share charm.
Windows key + I : Open Settings.



ஏப்ரல் 28


தொழிலாளர் நினைவு நாள் (Workers' Memorial Day,)




தொழிலாளர் நினைவு நாள் (Workers' Memorial DayInternational Workers' Memorial Day) அல்லது இறந்தோர் மற்றும் காயமடைந்தோருக்கான பன்னாட்டு நினைவு நாள் (International Commemoration Day (ICD) for Dead and Injured) ஆண்டுதோறும் ஏப்ரல் 28 ஆம் நாள் உலகெங்கும் தமது பணியின் போது கொல்லப்பட்டு, காயமடைந்து, உடல் ஊனமுற்ற தொழிலாளர்கள் நினைவுகூரப்படுகின்றனர்.[1]

இது வேலை தொடர்பான விபத்துகள், நோய்கள் என்பவற்றின் விளைவுகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும்; தொழில்சார்ந்த பாதுகாப்பு, நலம் ஆகியவை தொடர்பான விடயங்களை நாடுகள் மட்டத்திலும் அனைத்துலக மட்டத்திலும் செயல்திட்டங்களில் இடம்பெறச் செய்வதற்காகவும்; தொழில்சார் பாதுகாப்பு, நலம் போன்றவற்றை மேம்படுத்துவது தொடர்பான நாடுகளின் முயற்சிகளுக்கு உதவுவதற்குமே இந்நாள் அறிவிக்கப்பட்டது.

நீதிக்கதை

சுயநலம்

ஒரு ஊரில் ராமசாமி என்ற ஒரு செல்வந்தர் வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் சுயநலமானவர். அவர் ஊருக்குச் சென்று திரும்பும் வழியில் 30 தங்க நாணயங்கள் இருந்த பையை தொலைத்துவிட்டார். அந்த செல்வந்தர் தனது நண்பர் குருவிடம் நடந்ததை கூறி வருத்தப்பட்டார். 

சில நாட்கள் கழித்து குரு ஊரிலிருந்து திரும்பும்போது வழியில் ஒரு பையில் தங்க நாணயங்கள் இருப்பதை கண்டார். அந்த பை ராமசாமியினுடையதாக இருக்கலாம் எனக்கருதி, அதை குரு அவரிடம் கொடுத்தார். 

குருவிடமிருந்து தங்க நாணயங்களை பெற்றுக்கொண்ட ராமசாமி, இதை வைத்து ஒரு திட்டம் தீட்ட நினைத்தார். அவன் குருவிடம், நான் இந்த பையில் 40 தங்க நாணயங்களை வைத்திருந்தேன். இந்த பையில் இப்போது 30 தங்க நாணயங்களே உள்ளன, அதனால் மீதமிருக்கும் 10 நாணயங்களை திருப்பி தரவேண்டுமென குருவிடம் கூறினார். 

குருவோ மிகவும் நல்லவர். பிறரின் பொருட்களுக்கு ஆசைப்படாத அவரது குணத்தை பற்றி அனைவருக்கும் தெரியும். 

நண்பர்கள் இருவரும் ஊரில் உள்ள தலைவரிடம் சென்றனர். விவரத்தை கேட்ட ஊர் தலைவர், ராமசாமியிடம், நீ எவ்வளவு தங்க நாணயங்களை தொலைத்தாய்? என்று கேட்டார். அதற்கு அவர் 50 தங்க நாணயங்கள் என்றார். குருவை பார்த்து நீ எவ்வளவு தங்க நாணயங்களை கண்டுபிடித்தாய்?என்று கேட்டார். அதற்கு அவர் 30 தங்க நாணயங்கள் என்றார். 

ஊர்த்தலைவர் ராமசாமியை பார்த்து, நீ தொலைத் திருப்பதோ 50 தங்க நாணயங்கள். ஆனால் குரு கண்டறிந்திருப்பதோ வெறும் 40 தங்க நாணயங்கள். எனவே இது உன்னுடையதாக இருக்காது. இனிமேல் வேறுயாராவது 40 தங்க நாணயங்களை கொண்டுவந்தால் உனக்கு சொல்லி அனுப்புகிறேன். இப்போது நீ கிளம்பலாம் என்றார். 

தலைவர் குருவைப்பார்த்து நீ கண்டுபிடித்திருப்பது ராமசாமியின் தங்க நாணயங்கள் கிடையாது, எனவே இதை நீயே வைத்துகொள் என்றார். 

தான் கூறிய பொய்யால் தனக்கு நேர்ந்த சங்கடத்தை எண்ணி வருத்தபட்டார். தனது தவறை உணர்ந்த அவர், இனி சுயமில்லாத நேர்மையான மனிதராக வாழவேண்டும் என முடிவுசெய்தார்.

இன்றைய செய்திகள்

28.04. 2023

*தமிழகத்தில் கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

* காவிரி டெல்டா மாவட்டங்களில் நிகழாண்டு சிறப்பு தூர்வாரும் பணிக்காக தமிழக அரசு ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

* சூடான் நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்டு வரும் பணிக்காக, டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் மற்றும் சென்னையில் உள்ள அயலகத் தமிழர் நலத் துறை ஆணையரகத்தில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

*13 லட்சம் தொழிலாளர்களுக்கு காப்பீடு, இலவச பேருந்து வசதி - விரைந்து அமல்படுத்த உத்தரவிட்ட டெல்லி முதல்வர் கேஜ்ரிவால்.

*நாடு முழுவதும் தற்போது உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு அருகிலேயே ரூ.1,570 கோடி செலவில் 157 புதிய செவிலியர் கல்லூரிகளை ஏற்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

*ராணுவத்துக்கு அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியல்: 4-வது இடத்தில் இந்தியா.

*பெடரேஷன் கோப்பை கைப்பந்து: ராஜஸ்தான், ரெயில்வே அணி 'சாம்பியன்'.

*கோடைகால இலவச கைப்பந்து பயிற்சி முகாம் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் மே மாதம் 1-ந் தேதி தொடங்குகிறது.

*ஆசிய பேட்மிண்டன் போட்டி: இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்.

Today's Headlines

*Minister M. Subramanian has said that the incidence of Corona is gradually decreasing in Tamil Nadu.

 *The Tamil Nadu government has allocated Rs 80 crore for special dredging work in the Cauvery Delta districts this year.

* Control rooms have been set up at the Tamil Nadu House in Delhi and the Tamil Nadu Welfare Department Commissionerate in Chennai for the rescue of Tamilan s who were ​​trapped in Sudan.

 *Delhi CM Kejriwal ordered to speed up the implementation of insurance, and free bus facilities for 13 lakh workers.

* The Union Cabinet has approved the setting up of 157 new nursing colleges at a cost of Rs 1,570 crore near the existing medical colleges across the country.

 *List of countries that spend the most on the military: India at 4th place.

* Federation Cup Volleyball: Rajasthan, Railway Team Got 'Championship'

 *The summer free volleyball training camp will start on May 1st at the Mayor Radhakrishnan Stadium in Egmore, Chennai.

 *Asian Badminton Championship: India's Trisha Jolly-Gayatri Gopichand pair advance to the next round.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Wednesday, April 26, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 27.04.23

  திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: புறங்கூறாமை

குறள் : 187
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்.

பொருள்:
மகிழும்படியாகப் பேசி நட்புக் கொள்ளுதல் நன்மை என்று தெரியாதவர் , புறம் கூறி நண்பரையும் பிரித்து விடுவர்.

பழமொழி :

Give every man thy ear,but few man
thy voice .
ஒவ்வொருவரிடமும் கேள், சிலரிடம் மட்டுமே சொல்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. வாழ்க்கையில் ஒரு செயலை ஆரம்பிப்பதற்கு முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு கொள்ள வேண்டும். 

2. திட்டமிடுதல் மிக முக்கியம். திட்டமிடுவோம் செயல்படுவோம்

பொன்மொழி :

பொறுமையும் நேரமும் இரண்டு மிகவும் சக்திவாய்ந்த போர்வீரர்கள். --லியோ டால்ஸ்டாய்

பொது அறிவு :

1. இந்தியாவில் ஐந்தாண்டு திட்டங்களை அறிமுகம் செய்தவர் யார்? 

ஜவர்கலால் நேரு . 

2. யோக கலையை கற்றுத் தந்தவர் யார் ? 

பதஞ்சலி முனிவர்.

English words & meanings :

 quash-stopping something by force, அடக்கு, 

quell- end something. ஒன்றை முடித்திடுதல் 

ஆரோக்ய வாழ்வு :

செர்ரி பழங்கள் உங்கள் நரம்புகளை அமைதி படுத்துகின்றன. அவற்றில் உள்ள மெலடோனின் உங்கள் உடலினுள் இயங்கப்படும் கடிகாரத்தை முறைபடுத்தி உங்களின் தூங்கும் மற்றும் துயிலெழும் நேரங்களை சரி செய்கிறது. இதன் மூலம் கிடைக்கும் நல்ல, அமைதியான, இடையூறு இல்லாத தூக்கம் போன்றவை இயற்கையாகவே சருமத்திற்கு பொலிவும், முதுமையில்லாத தன்மையும் அளிக்கின்றன. மேலும் செர்ரி பழங்கள் இதய ஆரோக்யத்தை மேம்படுத்தி, ஆரோக்ய கூந்தல் அளித்து, உடலின் இரத்த அழுத்தத்தையும் பராமரிக்க உதவுகிறது.

கணினி யுகம்

Windows key + E : Open File Explorer.
Windows key + G : Open Game bar when a game is open.


நீதிக்கதை

தேவதைக் காட்டிய வழி


ஒரு அரசனுக்கு திடீரென இரண்டு கண்களும் குருடாகிவிடுகிறது. அதை குணப்படுத்த மலைஉச்சியில் உள்ள சஞ்சீவிமலையில் உள்ள மூலிகையை கொண்டு வந்து பிழிந்தால் தான் முடியும். 

அதற்கு மலையடிவாரத்தில் உள்ள தேவதை வழிகாட்டினால்தான் முடியும். 

அந்த அரசனுக்கு மூன்று குமாரர்கள். 

அதில் முதலாமவன் கொண்டுவருகிறேன் என கிளம்புகிறான். தேவதை வழிகாட்ட ஒர் நிபந்தனை விதிக்கிறது. 

நான் உன்பின்னால் வருவேன். நான் இடது பக்கம் திரும்பு என்றால் இடது பக்கம் திரும்ப வேண்டும். வலது பக்கம் திரும்பு என்றால் வலதுபக்கம் திரும்ப வேண்டும். நீ நடப்பதை நிறுத்தக்கூடாது. நடந்து கொண்டே இருக்கவேண்டும். எது நடந்தாலும் பின்னால் திரும்பிக்க பார்க்ககூடாது என்கிறது. 

முதாலாமவன் நடந்து செல்ல தேவதை வழிகாட்டிச்சென்றது. திடீரென பின்னால்வரும்தேவதையின் சலங்கை ஒலி கேட்கவில்லை. என்னாயிற்று என தன்னையறியாமல் முதாலமவன் திரும்பி பார்க்கிறான். நிபந்தனையை மீறிவிட்டான். கற்சிலையாகிவிடுகிறான். 

அடுத்து இரண்டாமவன் கிளம்புகிறான். 

கிட்டதட்ட நிபந்னைகளுக்கு உட்பட்டு பாதிதூரம் வந்துவிடுகிறான். திடீரென சிரிப்பு ஒலிகேட்கிறது. 

ஆர்வம் மிகுதியால் திரும்பிபார்க்கிறான். அவனும் கற்சிலையாகி விடுகிறான். 

மூன்றாமவன் அடுத்து வருகிறான். இவனுக்கும் இதே நிபந்தனையுடன் தேவதை முன் வருகிறது. இவனும் பின் வரும் சத்தம் நின்று போனாலும் முன்னே செல்கிறான். பின்னால் அலறல் சத்தம். சிரிப்பொலி. இவைகளுக்கெல்லாம் திரும்பாமல் முன்னே செல்கிறான் வெற்றியும் பெற்று மூலிகையும் கை பற்றுகிறான். 

பின்னால் வரும் தேவதைதான் நமது மனசு. நிபந்தனையை விதித்துவிட்டு செயல் உறுதியை தடுக்க எல்லா முயற்ச்சியையும் செய்யும். அதை புறக்கணிப்பதில் தான் நம் வெற்றி அடங்கி உள்ளது.

இன்றைய செய்திகள்

27.04. 2023

* கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் ரூ.1,600 கோடியில் புதிய மருத்துவமனை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்.

* அரசு வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில், தோல்வி அடைந்தால் அவர்களுக்கு வேறு பணி வழங்கப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு மே.8 ஆம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

* இந்தியாவில் அன்றாட கோவிட் பாதிப்பு 9,000-ஐ கடந்தது: பாதிப்பு நேற்றைவிட 40 சதவீதம் அதிகரித்துள்ளது.

* "சூடானில் அமைதி திரும்புவதற்கான அறிகுறியே இல்லை" - ஐ.நா. கவலை.

* சிந்து, ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்கும் ஆசிய பேட்மிண்டன் போட்டி தொடங்கியது.

* ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பையை வீழ்த்தி குஜராத் அணி 5-வது வெற்றியை பெற்றது.

Today's Headlines

* Health Minister Subramanian informed that in the last 2 years, new hospital buildings have been constructed in Tamil Nadu at a cost of Rs.1,600 crore.

*  The Tamil Nadu government has ordered medical examinations for the drivers of government vehicles.  In this, if they fail, they will be given another job, the order said.

 * The school education department has announced that the Tamil Nadu Plus 2 examination result will be published on May 8.

 * Daily Covid cases in India cross 9,000: 40 percent increase from yesterday

 * "No sign of peace returning to Sudan" - UN  concern

*  Sindhu, Srikanth, and others will participate in the Asian Badminton Tournament.

 * In IPL   cricket, the Gujarat team won their 5th victory by defeating Mumbai.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Tuesday, April 25, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 26.04.23

  திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: புறங்கூறாமை

குறள் : 186
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந்
திறன்தெரிந்து கூறப் படும்.

பொருள்:
அடுத்தவன் குறையை அவன் இல்லாத போது எவன் கூறுகிறானோ, அவனது குறை அவன் இல்லாதபோது இன்னொருவனால் கூறப்படும்.

பழமொழி :

An old dog will learn no tricks.
இளமையில் கல்லாதது முதுமையில் வராது.

இரண்டொழுக்க பண்புகள் :

1. வாழ்க்கையில் ஒரு செயலை ஆரம்பிப்பதற்கு முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு கொள்ள வேண்டும். 

2. திட்டமிடுதல் மிக முக்கியம். திட்டமிடுவோம் செயல்படுவோம்

பொன்மொழி :

நாம் நமது நேரத்தை செலவிடும் விதம் நாம் யார் என்பதை வரையறுக்கிறது. --ஜோனதன் எஸ்ட்ரின்.

பொது அறிவு :

1. தேசிய கடல்வழி தினம் என்று அனுசரிக்கப்படுகிறது ? 

ஏப்ரல் 5.

 2. தேசிய அறிவியல் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது ? 

பிப்ரவரி 28.

English words & meanings :

 pacify - make the angry person calm, அமைதி படுத்துதல், 

pantry - a small room where food is kept, உணவு சேமிப்பு அறை.

ஆரோக்ய வாழ்வு :

ஆன்டிஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ள திராட்சை நம் உடலின் ஒட்டு மொத்த ஆரோக்யத்திற்கும், சருமத்திற்கும் நன்மை தருகிறது. நம் உடலின் இரத்த குழாய்களை தளர்த்தி, இரத்த ஓட்டத்தை உடல் முழுவதிலும் மேம்படுத்துகிறது. திராட்சையில் உள்ள தாவர ஊட்டச் சத்துக்கள் நம் சருமத்தை புற ஊதா கதிர்களிடமிருந்து காப்பாற்றுகிறது. அதனால் முதுமை தள்ளிப்போடப் படுகிறது. மேலும் திராட்சை எடை குறைப்பு, எடை சமாளிப்பு, மூளையின் ஆற்றலை அதிகப் படுத்துதல், மூளையின் செயல்பாடு ஆகியவற்றிற்கு மிகவும் உதவுகிறது

கணினி யுகம்

Windows key + C - Open Cortana in listening mode.
Windows key + D - Display and hide the desktop.



ஏப்ரல் 26






செர்னோபில் அணு உலை விபத்து என்பது 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் நாள் அன்றைய சோவியத் ஒன்றியத்தின் உக்ரேனிலுள்ள பிப்யாட் என்னும் இடத்துக்கு அருகில் அமைந்திருந்த செர்னோபில் அணு உலையில் ஏற்பட்ட விபத்தைக் குறிக்கும்.
இது உலகின் மிக மோசமான அணு உலை விபத்து எனச் சொல்லப்படுகின்றது. அனைத்துலக அணு ஆற்றல் நிகழ்வு அளவீட்டில் 7 ஆவது நிலையை எட்டிய ஒரே விபத்தான இதன் விளைவாக மோசமான கதிரியக்கம் சூழலுக்குள் வெளியேறியது. இந்நிகழ்வின் போது ஏற்பட்ட வெடிப்பினால் 30 பேர் இறந்தனர். எனினும் இவ்விபத்தினால் ஏற்பட்ட பின்விளைவுகளினால் இறந்தவர் தொகை அதிகமாகும். 2000 நபர்கள் இறந்தனர். இரத்தக்குழாய் வெடித்து அதிக அளவு இரத்தப்போக்கு, உறுப்புச் சிதைவு, முடி கொட்டுதல், கண்புரை, இரத்தத்தில் இயல்புக்கு மாறான நிலைகள், தோல்புற்று நோய், சீழ்பிடித்து ரணமாதல், கதிர்வீச்சு நோய் முதலிய நோய்கள் உருவாகின. இதன் காரணமாகா காற்று நீர் ஆகியவற்றில் கதிரியக்க மாசு படிந்து தாவரங்களையும், விலங்குகளையும் பாதித்தது. உயிரிகள் துன்புற்றன.

நீதிக்கதை

நாளை என்பது நம் கையில் இல்லை

ஒரு ஊரில் ஒரு குட்டிப்பறவை இருந்தது. அது பல இடங்களுக்கும் உணவு தேடி பறந்தது. ஓரிடத்தில், ஒரே ஒரு புழு சுற்றிக்கொண்டிருந்தது. பறவை அதைக் கொத்த முயன்ற போது, புழு பறவையிடம், என்னை மட்டும் சாப்பிட்டு விட்டால், உன் பசி தீர்ந்து விடுமா? சற்று தூரத்தில் நாற்பது, ஐம்பது புழுக்கள் இருக்கின்றன. கொஞ்ச தூரம் பறந்து சென்றால் அவற்றையும் சேர்த்து சாப்பிடலாம், என்றது. இரக்கமில்லாத அந்தப் பறவை, எப்போதோ கிடைக்கப் போகும் நாற்பது, ஐம்பது புழுக்களுக்காக, உன்னையும் விட்டு விட்டால் என்னாகும்? இப்போது, உன்னைத் தின்று பசியாறிக் கொள்கிறேன். பிறகு என் வழியில் நான் செல்கிறேன், என்று சொல்லி, புழுவை விழுங்கி விட்டது.

கொஞ்ச தூரம் பறந்து சென்று ஓரிடத்தில் அமர்ந்தது. அது அமர்ந்த இடம் ஒரு வலை. அதில் இருந்து மீள முடியவில்லை. வேடன் அதை தூக்க வந்தான். பறவை அவனிடம், வேடனே! நான் சாதாரண குஞ்சுப்பறவை. என்னிடம் என்ன இறைச்சி இருக்கும்! என்னுடன் வா! என் இருப்பிடத்தில் பல கொழுத்த பறவைகள் உள்ளன. அவற்றைப் பிடித்துச் சென்றால், உனக்கு நிறைய இறைச்சி கிடைக்கும் என்று சொல்லி தப்பிக்கப் பார்த்தது. அட பறவையே! நாளை கிடைக்கப்போகும் பலாக்காய்க்காக, இன்று கிடைக்கும் கிளாக்காயை எவனாவது விடுவானா? ஹூம்... இன்றைய உணவையே நான் பார்க்கிறேன், நாளைக்குரியதை, அந்த நாராயணன் பார்த்துக் கொள்வான், என்றவன், பறவையின் கழுத்தை திருகி விட்டான்.

இன்றைய செய்திகள்

26.04. 2023

* அரசு பள்ளிகளில் பராமரிப்பு, பாதுகாப்பு, தூய்மைப் பணிகளுக்கு தனியாரை நியமிக்கும்போது, தமிழ் தெரிந்த பணியாளர்களை நியமிப்பதை கட்டாயமாக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என டெண்டர் குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதி மாற்றம்: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்.

* செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின்கீழ், அதிக கணக்குகள் தொடங்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது.

* காய்ச்சல், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கான 48 மருந்துகள் தரமற்றவை என்று மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

* ஊடகங்களுக்கு நீதிபதிகள் பேட்டி அளிக்க கூடாது - உச்ச நீதிமன்றம் உத்தரவு.

* பூமியை நேற்று நான்கு விண்கற்கள் கடந்த  நிலையில், இன்று 1007 அடி உயரமுள்ள விண்கல் கடக்க உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

* சென்னையில் நடைபெறும் ஆசிய ஹாக்கி போட்டியில் பாகிஸ்தான், சீனா அணிகள் பங்கேற்பது உறுதி.

* சென்னை-பஞ்சாப் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் 27-ம் தேதி தொடங்குகிறது.

Today's Headlines

* The Madras High Court has directed the tender committee to consider making it mandatory to appoint personnel who know Tamil while appointing private individuals for maintenance, security, and cleanliness work in government schools.

* Plus 2 Public Exam Result Release Date Changed: Minister Anbil Mahes Information.

 * Tamil Nadu ranks 2nd in the list of states with the highest number of accounts opened under the Selvamalam Savings Scheme.

*  According to the Central Drug Quality Control Board, 48 medicines for problems like fever and high blood pressure are substandard.

*  Judges should not give interviews to media - Supreme Court orders.

*  After four meteors passed the Earth yesterday, a 1007 feet high meteorite will pass by today, according to NASA.

*  Pakistan and China are confirmed to participate in the Asian Hockey Tournament in Chennai.

 * Ticket sales for the Chennai-Punjab match will begin on the 27th.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Monday, April 24, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 25 04.23

  திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: புறங்கூறாமை

குறள் எண்: 185

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்.

பொருள்:

அறம் பேசும் மனித மனத்தின் தன்மையை புறம் பேசும் தன்மையால் கண்டு கொள்ளலாம்.

பழமொழி :

Tomorrow never comes

கடந்து போன காலம் கரணம் போட்டாலும் வராது

இரண்டொழுக்க பண்புகள் :

1. வாழ்க்கையில் ஒரு செயலை ஆரம்பிப்பதற்கு முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு கொள்ள வேண்டும். 

2. திட்டமிடுதல் மிக முக்கியம். திட்டமிடுவோம் செயல்படுவோம்

பொன்மொழி :

மனிதராகப்  பிறந்த எல்லோரும் தவறு செய்கிறார்கள். மூடர்கள், அதை தொடர்ந்து செய்கிறார்கள்.

பொது அறிவு :

1. எல்லா வகையான தவளைகளும் எந்த குடும்பத்தில் அடங்கும்? 

ரானாடே. 

2. பறவைகளின் தாடைகள் என்னவாக மாறுகின்றன? 

அலகுகளாக .

English words & meanings :

 Oriental - belong to East or far East countries, தூர கிழக்கு நாடுகள் சார்ந்த, 

Otters - a brownish river animal that eats fish, நீர் நாய்

ஆரோக்ய வாழ்வு :

அன்னாசி பழத்தில் பிரோமெலான் என்னும் நொதி (enzyme) உள்ளது. தொண்டை வலி, கீல் வாதத்தினால் உண்டாகும் வீக்கம் மற்றும் கட்டிகளை குறைக்க இந்த நொதி உதவுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அதனால் அன்னாசி பழம் கீல்வாத நோய் உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைகிறது.

கணினி யுகம்

Windows key. : Open or close Start Menu.
Windows key + A: Open Action Center.


ஏப்ரல் 25



உலக மலேரியா நாள்

உலக மலேரியா நாள் (World Malaria Day, WMD) ஆண்டுதோறும் ஏப்ரல் 25 ஆம் நாள் உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் மலேரியா நோயினால் சுமார் 7 லட்சம் பேர் இறக்கின்றனர். உலக அளவில் 3.3 பில்லியன் மக்கள் மலேரியாவால் பாதிப்படைகின்றனர்.[1] மலேரியா நோயைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் உலக சுகாதார அமைப்பு 2007இல் ஏப்ரல் 25 ம் நாளை மலேரியா நாளாக அறிவித்தது.

2012 ஆம் ஆண்டில் அண்ணளவாக 627,000 பேர் மலேரியாவ் நோயால் இறந்துள்ளனர், இவர்களில் பெரும்பாலானோர் ஆப்பிரிக்கக் கண்டத்தில் வாழும் குழந்தைகள் ஆவர்.



புதுமைப்பித்தன்  அவர்களின் பிறந்தநாள்


புதுமைப்பித்தன் என்ற புனைப்பெயர் கொண்ட சொ. விருத்தாசலம் (ஏப்ரல் 251906 - சூன் 301948), மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார்.[2] கூரிய சமூக விமர்சனமும் நையாண்டியும், முற்போக்குச் சிந்தனையும், இலக்கியச் சுவையும் கொண்ட இவருடைய படைப்புகள், இவரின் தனித்தன்மையினை நிறுவுகின்றன. இவரது படைப்புகள் மிக அதிகமாக விவாதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, 2002இல் தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடமை ஆக்கியது.


மார்க்கோனி அவர்களின் பிறந்தநாள்




மார்க்கோனிஎனப்படும் குலீல்மோ மார்க்கோனி (Guglielmo Marconiஏப்ரல் 251874 – ஜூலை 201937) வால்வுகளுள்ள வானொலியைக் கண்டு பிடித்தவர். 'நீண்ட தூரம் ஒலிபரப்பப் படும் வானொலியின் தந்தை" எனப்படுபவர். ' கம்பியற்ற தகவல்தொடர்பு முறை' மற்றும் 'மார்க்கோனி விதி' ஆகியவற்றை உருவாக்கியவர். இக்கண்டுபிடிப்பிற்காக 1909-இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் உடன் இணைந்து பெற்றார். இவர் ஒரு தொழில் முனைவர், தொழிலதிபர், மற்றும் 1897 ல் 'மார்க்கோனி வானொலி நிறுவனத்தின் நிறுவனர்', 'வானொலி'மற்றும் அதனோடு தொடர்புடைய கருவிகளை உருவாக்கியவர்.

நீதிக்கதை

நீங்கள் தான் கடவுள்


ஒரு ஊரில் கணவனை இழந்த சீதா என்று ஒரு பெண் இருந்தாள். அவளுக்கு ஒரு குழந்தை. அவள் தினமும் வேலைக்குச் சென்றால் தான் அவளால் குடும்பம் நடத்த முடியும் என்ற சூழ்நிலை. எனவே குழந்தையை பார்த்துக்கொள்ள ஒரு வேலைக்காரியை ஏற்பாடு செய்துவிட்டு, இவள் தினமும் வேலைக்குச் செல்வாள்.


இப்படி இருக்க ஒருநாள் மாலை நேரம் வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போது வீட்டு வேலைக்காரி தொலைப்பேசியில் அழைத்து குழந்தைக்கு உடல்நிலை சரி இல்லை என்று கூறினாள். அலுவலகத்தில் இருந்து கிளம்பி மருந்து வாங்க மருந்துக் கடைக்கு சென்றாள். மருந்து வாங்கிவிட்டு தனது மகிழுந்திடம் வந்தாள். மகிழுந்தின் சாவியை உள்ளேயே வைத்து பூட்டியதை உணர்ந்தாள்.


என்ன செய்வது எனத் தெரியவில்லை. வீட்டில் இருந்து வேலைக்காரி மீண்டும் தொலைப்பேசியில் அழைத்து குழந்தையின் உடல்நிலை மேலும் மோசமாகிறது என்று கூறினாள். சீதாவிற்குக் கண்கள் கலங்கின. இறைவா... எனக்கு உதவி செய் எனக் கடவுளிடம் கண்ணீர் வர வேண்டினாள். அப்போது ஒரு இருசக்கர வாகனத்தில் ஒருவர் நீண்ட முடியும் தாடியும் வைத்துக்கொண்டு பல நாள் குளிக்காத ஒரு முரடன் போல வந்து சேர்ந்தார்.


சீதா கடவுளே... இது தான் நீ செய்த உதவியா...? என்று மனதில் நினைத்துக்கொண்டு வந்தவரிடம் வண்டியின் சாவி உள்ளே மாட்டிக்கொண்டது எனக் கூறினாள். வந்தவர் சீதாவிடம் தான் உதவி செய்வேன் என்று கூறி ஒரு நிமிடத்தில் மகிழுந்தின் கதவை திறந்து கொடுத்தார். சீதா நன்றி கூறி நீங்கள் தான் கடவுள் என்று கூறினாள். அதற்கு அவர் இல்லை.... நான் நேற்று தான் சிறையில் இருந்து வெளியே வந்த ஒரு மகிழுந்து திருடன்... ஏழு ஆண்டுகள் சிறையில் இருந்து நேற்று தான் வெளியே வந்தேன் என்று கூறினார்.


சீதா மகிழ்ச்சியுடன் நான் கடவுளிடம் உதவிக் கேட்டேன். அதற்கு அவர் ஒரு வல்லுநரை அனுப்பி வைத்துள்ளார் என்று கூறி நன்றியுடன் விடை பெற்றார். அவர் செய்த சிறிய உதவியின் அளவை உணர்ந்தார்

இன்றைய செய்திகள்

25.04. 2023

* அரசு மருத்துவர் பணி: 1,021 இடங்களை நிரப்ப இன்று எழுத்துத் தேர்வு.

* தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் (டேன்ஜெட்கோ) முதல்கட்டமாக 200 தொழில்நுட்ப உதவியாளர் காலிப்பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

* தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.

* காஷ்மீர், வடகிழக்கு மாநில எல்லைப் பகுதிகளின் போர் முனைகளில் பெண் அதிகாரிகள் நியமனம்.

* எதிரி நாட்டு ஏவுகணைகளை வானில் இடைமறித்து தாக்கும் இந்திய ஏவுகணை சோதனை வெற்றி.

* சூடானில் இருந்து இந்தியர்களை மீட்கும் 'ஆபரேஷன் காவேரி' திட்டம் செயல்படத் தொடங்கி உள்ளது.

* சர்வதேச டென்னிஸ்: ஸ்வியாடெக் மற்றும் அல்காரஸ் 'சாம்பியன்'.

Today's Headlines

* Govt Doctor Jobs: Written test will be held today to fill 1,021 posts.

*  Tamil Nadu Government has given the approval to fill up 200 Technical Assistant vacancies in Tamil Nadu Electricity and Distribution Corporation (TANJETCO) through TNPSC in the first phase.

* Chance of rain for 4 days in Tamil Nadu.

 * Appointment of Women Officers in the Front Lines of Kashmir and North East Frontier Regions.

 * Indian missile test successfully intercepts enemy missiles in mid-air.

* 'Operation Kaveri' to rescue Indians from Sudan has begun.

*  International Tennis: Sviatek and Algaras 'Champion'.
 Prepared by

Covai women ICT_போதிமரம்