Monday, January 31, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 01.02.22

  திருக்குறள் :

பால்: பொருட்பால், 

இயல்: படையியல், 

அதிகாரம்: படைமாட்சி, 

குறள் எண் :767: 

குறள்:
தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த 
போர்தாங்கும் தன்மை அறிந்து. 

பொருள்:களத்தில், முதலில் எதிர்கொள்ளும் போரைத் தாங்கித் தகர்க்கும் ஆற்றலை அறிந்திருப்பின், அதுவே வெற்றி மாலை தாங்கிச் செல்லக்கூடிய சிறந்த படையாகும்

பழமொழி :

A wild goose never laid a tame egg


புலிக்கு பிறந்தது பூனையாகாது


இரண்டொழுக்க பண்புகள் :

1. மகிழ்ச்சி உங்கள் மனதில் தோன்ற புன்னகை உங்கள் முகத்தில் எப்போதும் குடியேற வேண்டும். 

2. படுத்தே இருந்தால் படுக்கையும் பகையாகும். எழுந்து முயற்சி செய் உலகே உனது வசமாகும்

பொன்மொழி :

இன்று நீங்கள் எடுக்கும் முடிவு மூலம் உங்களுடைய வாழ்க்கை முழுவதையும் மாற்ற முடியும். நீங்கள் எடுக்கும் முடிவில் உறுதியாக இருக்க வேண்டும்._____அன்னை சாரதா தேவி


பொது அறிவு :

1. தேசிய ராணுவ தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? 

ஜனவரி 15.

 2. விமானத்தில் உலகை வலம் வந்து சாதனை படைத்த முதல் பெண் யார்? 

ஸாரா ரூதர்ஃபோர்ட் .( பெல்ஜீயத்தை சேர்ந்தவர்)


English words & meanings :

Hang in - don't give up. முயற்சி கை விடாதே. 

Miss the boat - it's too late. வாய்ப்பை தவற விடுதல்

ஆரோக்ய வாழ்வு :

பூண்டு ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதற்கு உதவுகிறது. ஜீரணமின்மை, ஜலதோஷம், காது வலி, வாயு தொல்லை, முகப்பரு, ஊளைச்சதை, ரத்த சுத்தமின்மை, புழுத்தொல்லை, மூல நோய்கள் வராமல் தடுக்கவும், குணப்படுத்தவும் பூண்டு அவசியம்.

கணினி யுகம் :

Ctrl + F6 - Next editor. 

Ctrl + F8 - Next perspective


பிப்ரவரி 1

கல்பனா சாவ்லா அவர்களின் நினைவுநாள்





கல்பனா சாவ்லா (Kalpana Chawla17 மார்ச் 1962 - 1 பெப்ரவரி 2003) ஒரு இந்திய அமெரிக்க விண்ணோடி ஆவார்.  இந்தியாவில் உள்ள[1] அரியானா மாநிலத்தில் கர்னல் எனும் ஊரில் கல்பனா சாவ்லா ஒரு பஞ்சாபிக் குடும்பத்தில் பிறந்தார். கல்பனா மார்ச் 1995 இல், நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்தார். 1996 ஆம் ஆண்டு அவரது முதல் பயணத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். கொலம்பிய விண்வெளி ஊர்தியான STS-87 இல் பயணித்த ஆறு வீரர்களில் ஒருவரான கல்பனாவின் இந்த முதல் பயணத்திற்கு அவர் நவம்பர் மாதம் 19 ஆம் நாள், 1997 ஆம் ஆண்டு முதல் ஆயத்தமானார். 1984 இல் சோவியத் விண்கலத்தில் பயணித்த ராகேஷ் ஷர்மாவை அடுத்து விண்வெளி சென்ற முதல் இந்தியப் பெண் வீராங்கனை என்ற அழியாப் பெருமையை இவர் பெற்றார். கல்பனாவின் முதல் பயணத்திலேயே அவர் 360 மணி நேரம் விண்வெளியில் இருந்து, 10.67 மில்லியன் கிலோமீற்றர்கள் பயணித்து பூமியைச் சுற்றி 252 முறைகள் வலம் வந்துள்ளார். இதற்காகவே அவர் விண்வெளியில் 372 மணித்தியாலங்கள் இருந்துள்ளார். STS-87க்குப் பின்னர் கல்பனா தொழில் நுட்ப வல்லுனராக விண்வெளி அலுவலகத்தில் நாசாவினால் நியமிக்கப்பட்டார். அவரது செயலைப் பாராட்டி அவரது சக வல்லுனர்களே ஒரு விருதையும் வழங்கிக் கௌரவித்தனர்.

கொலம்பியா விண்வெளி ஓடம் (Space Shuttle Columbiaநாசாவின் ஒரு விண்கலம் ஆகும். இதுவே முதன் முதலில் விண்ணில் செலுத்தப்பட்ட விண்வெளி ஓடம் ஆகும். இந்த முதற் பயணம் STS-1 என்ற விண்கலத்தை ஏப்ரல் 121981 இல் ஏற்றிச் சென்று ஏப்ரல் 14, 1981 இல் திரும்பியது. பெப்ரவரி 12003 இல் கொலம்பியா தனது 28வது பயணத்தை வெற்றிகரமாக முடித்து பூமி திரும்புகையில் டெக்சாசுக்கு மேலே வெடித்துச் சிதறியதில் அதில் பயணம் செய்த கல்பனா சாவ்லா என்ற இந்திய பெண் உட்பட அனைத்து ஏழு விண்வெளிவீரர்களும் கொல்லப்பட்டனர்.

நீதிக்கதை

வேலை கொடு

ஒருவன் தவம் செய்து இறைவனிடம் தன் ஆசைகளையெல்லாம் நிறைவேற்ற ஓர் ஆள் வேண்டும் என்று கேட்டான். அதற்கு இறைவன், நீ கேட்ட வரத்தைத் தருகிறேன். ஆனால், நீ அவனுக்குத் தொடர்ந்து ஏதாவது வேலை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் அவன் உன்னை விழுங்கி விடுவான்.. என்றார்.

அவனும் சரியென்று சம்மதித்தான். உடனே இறைவன் அவனுடன் ஒரு பூதத்தை அனுப்பி வைத்தார். பேராசை கொண்ட அவன், அந்தப் பூதத்திடம், எனக்கு இந்த நாட்டு அரசன் வசிப்பதை விடப் பெரிய அரண்மனை ஒன்று வேண்டும் என்றான். கண் மூடிக் கண் திறப்பதற்குள் அழகிய அரண்மனை ஒன்றைக் கட்டிக் கொடுத்தது பூதம். அவன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான்.

மேலும் மேலும் அவன் ஆசைப்பட்டவற்றையெல்லாம் உடனுக்குடன் நிறைவேற்றிவிட்டு, வேலை கொடு... வேலை கொடு... இல்லையென்றால் உன்னை விழுங்கி விடுவேன் என்று பூதம் அவனை மிரட்ட ஆரம்பித்தது. பூதத்துக்கு வேலை கொடுப்பதே அவனுக்கு வேலையாகிப் போய் விட்டது. அவனால் முடியாமல் போய் மிகவும் சோர்வடைந்து போனான்.

பூதம் அவனை விரட்ட ஆரம்பித்தது. மீண்டும் அவன் இறைவனிடம் ஓடினான். என்னைக் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று கதறினான். மனமிறங்கிய இறைவன், அவனை விரட்டி வந்த பூதத்திடம், நான் சொல்லும் வரை இந்தப் படிகளில் ஏறி ஏறி இறங்கிக் கொண்டு இரு என்று கட்டளையிட்டார்.

பூதமும் இறைவன் சொன்னபடி, படிகளில் விடாமல் ஏறி, இறங்கிக் கொண்டேயிருந்தது. பேராசைக்காரன் நிம்மதிப் பெருமூச்சு விட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று எண்ணியபடி, இறைவனை வணங்கிவிட்டுச் சென்றான். அந்தப் பூதம் போலத்தான் நமது மனமும்.. நமது மனம் நமக்குத் தேவையானவற்றை அடைய வழியைக் காட்டும். பேராசைப்பட்டால் நம்மையே அழித்து விடும்.

நீதி :
பேராசை அழிவை தரும்.

இன்றைய செய்திகள்

01.02.22

★ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தவிர்க்க வாளையாறு - எட்டிமடை இடையே ரயில் பாதையில் இரு இடங்களில் சுரங்க பாதை: அரசிடம் 16 பரிந்துரைகளை  மத்திய குழுவினர் அளித்துள்ளனர்.

★தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் 3-ம் கட்ட அகழாய்வு மேற்கொள்ள ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன.

★காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் வரும் பிப். 17-ம் தேதி போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

★நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு மணிப்பூர் மாநிலத்துக்கு முதல் முறையாக சரக்கு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

★ஆப்கானிஸ்தானில் வறுமை, பட்டினி காரணமாக சிறுநீரகங் களை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆப்கன் மீதான தடையை உலக வங்கி விலக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

★கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக கனடாவில் மக்கள் போராட்டம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்துடன் ரகசிய இடத்துக்குச் சென்றார்.

★பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்தில் சீனா, ஜப்பான் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளன.

★ஒடிசா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இளம் வயதில் சாம்பியன் பட்டம் வென்று இந்தியாவின் உன்னதி ஹூடா சாதனை படைத்துள்ளார்.

Today's Headlines

 ★ The Central Committee has submitted 16 recommendations to the Government: to build two tunnels on the railway line between Valayaru and Ettimadai to avoid the death of elephants in collisions with trains.

 ★ Preparations are underway for the 3rd phase of excavations in Sivakalai, Thoothukudi District.

 ★ In emphasizing 20-point demands including filling vacancies,  Transport workers are set to protest on 17th February in Chennai.

 ★ 75 years after the independence of our country, the freight train service has been launched for the first time in the state of Manipur. 

 ★ It has been reported that people in Afghanistan are forced to sell their kidneys due to poverty and hunger.  There has been a call to the World Bank to lift the embargo on Afghanistan.

 ★ Prime Minister Justin Trudeau went undercover with his family following growing protests in Canada against corona restrictions.

 ★ China and Japan advance to semifinals of Women's Asian Cup Football.

 ★ India's Unnati Hooda wins the Odisha Open badminton title at a young age and made an achievement.

 Prepared by

Covai women ICT_போதிமரம்

Wednesday, January 12, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 13.01.22

  திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்: படையியல்

அதிகாரம்: படைமாட்சி

குறள் எண் : 766
குறள்:
மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு.

பொருள்:
வீரம், மான உணர்வு, முன்னோர் சென்ற வழி நடத்தல், தலைவனின் நம்பிக்கையைப் பெறுதல் ஆகிய நான்கும் படையைப் பாதுகாக்கும் பண்புகளாகும்.

பழமொழி :

Idleness is the root of all evils


தீங்குகளின் உறைவிடம் சோம்பல்

இரண்டொழுக்க பண்புகள் :

1. ஒவ்வொருவருக்குள்ளும் தனித் திறமை எனும் நெருப்பு உண்டு அதை எரிய வைப்பது அவரவரின் கடமை. 

2. மாணவ வாழ்க்கை ஒரு படிக்கட்டு போல அதில் ஏறுவதும் இறங்குவதும் அவரவர் திறமை

பொன்மொழி :

எல்லாம் போய்விட்டாலும், வெல்ல முடியாத உள்ளம் இருந்தால், உலகத்தையே கைப்பற்றலாம்--------- காமராசர்

பொது அறிவு :

1. எந்த விமானம் தாங்கி போர்க்கப்பல் மீண்டும் ஆழ்கடல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது? 

ஐஎன்எஸ் விக்ராந்த். 

2. சமீபத்தில் செஸ் விளையாட்டில் இந்தியாவின் 73 வது கிராண்ட் மாஸ்டர் ஆக அங்கீகரிக்கப்பட்டவர் யார்? 

பரத் சுப்பிரமணியம்.

English words & meanings :

Hang in - don't give up, முயற்சியை விடாதே, 

on cloud nine - very happy, மிக்க மகிழ்ச்சியாக

ஆரோக்ய வாழ்வு :

கொப்பரை தேங்காய் உடன் கசகசா அரைத்து சாப்பிட்டு வர வாய்ப்புண் குணமாகும். 2. தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து காய்ச்சி நெஞ்சில் தடவி வர நெஞ்சு சளி குணமாகும்

கணினி யுகம் :

Alt + Right - Leverage Next Tu. 

Alt + Left - Leverage previous Tu.

நீதிக்கதை


குரு சொன்ன அறிவுரை

ஒரு நாட்டின் மன்னர் தனது மகனை குருகுலத்திற்கு கல்வி கற்க அனுப்பி வைத்தார். அவனும் குருகுலத்தில் மன்னர் மகன் என்ற அகந்தையை விடுத்து அனைத்து சீடர்களுடனும் ஒற்றுமையாக பழகி வந்தான். குரு சொல்லும் அனைத்து கட்டளைகளையும் மிகுந்த பணிவுடன் செய்து வந்தான். இப்படியே குருகுலத்தில் பல ஆண்டுகளாக கல்வி பயின்று வந்தான். ஒரு நாள் கல்வி பயின்று முடித்து தன்னுடைய அரண்மனைக்கு செல்ல வேண்டிய நாள் வந்தது. 

மன்னரின் மகன் குருகுலத்தில் இருந்து விடைபெற்று தன் நாட்டிற்கு செல்லும் முன் குருவிடம் ஆசீர்வாதம் வாங்க சென்றான். அப்போது மன்னரின் மகனைப் பார்த்து, குரு, நீ முறம் மாதிரி இரு! சல்லடை மாதிரி இருக்காதே!! என்று அறிவுரை கூறினார். மன்னனின் மகனும், சரி சுவாமி! நான் முறமாகவே இருக்கிறேன் என்றான்.

இதன் பொருள் என்னவென்று மன்னனுக்கு புரியவில்லை. தன் மகனிடம் கேட்டார் மன்னர். அதற்கு அவருடைய மகன், சல்லடை, நல்ல விஷயங்களை எல்லாம் கீழே தள்ளிவிட்டு, தேவையில்லாத கழிவுகளையும், கல்லையும் மண்ணையும் தான் வைத்துக் கொள்ளும். ஆனால் முறமோ, பதர், கல், மண் போன்றவற்றைக் கீழேத் தள்ளிவிட்டு நல்ல விஷயங்களை மட்டும் தக்க வைத்துக் கொள்ளும். இது தான் குரு சொன்ன அறிவுரை என்று கூறினான். குரு கூறிய அறிவுரைப்படியே மன்னரின் மகன் கடைப்பிடிக்கலானான்.

நீதி :
நல்ல விஷயங்களை மட்டும் மனதில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

இன்றைய செய்திகள்

13.12.21

✅ தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை, பிரதமர் திரு நரேந்திர மோடி  காணொலி மூலம் திறந்து வைத்தார்.

✅ இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் புதிய தலைவராக சோமநாத் நியமனம். இவர் அந்த பதவியில் 3 ஆண்டுகள் நீடிப்பார் என மத்திய அரசு அறிவிப்பு.




✅ அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்பதிவு நிறைவு..!!

✅ கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்காகவே மாணவர்களை நேரடி வகுப்புகளுக்கு அழைப்பு - நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்.

✅ இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கேப் டவுன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான நேற்று தென் ஆப்பிரிக்காவை 210 ரன்களில் சுருட்டியது இந்தியா. 

✅ஆசிய கோப்பை மகளிர் கால்பந்து - 
இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த இந்துமதி, சந்தியா, கார்த்திகா, சவுமியா, மாரியம்மாள் ஆகிய 5 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.

Today's Headlines

*  In Tamil Nadu PM Thiru. Narendra Modi inaugurated 11 medical colleges virtually

* S Somanath was  appointed as the tenth chairman of the Indian Space Research Organisation (ISRO). He will hold his office for 3 years says central government. 

* The online registration for Jallikattu which is going to take place in Avaniyaapuram, Balamedu and Alanganallur is over.

* To give vaccination only the students are being called explains Tamil Nadu government in the court. 

* The 3rd Cricket test match is taking place in Cap Town ground between India and South Africa. Yesterday that is the day two the Indian team just folded the South African team by 210 runs.

*  In Asian Women's football for Indian team players from Tamil Nadu got selected. They are Indhumathy,Santhiya, Karthicka, Soumya and Mariyammal.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Tuesday, January 11, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 12.01.22

திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்: படையியல்

அதிகாரம்: படைமாட்சி

குறள் எண் : 765

குறள்:
கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை

பொருள்:
உயிரைப் பறிக்கும் சாவு எதிர்கொண்டு வந்தாலும் அஞ்சாமல் ஒன்றுபட்டு எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையதற்கே படை என்ற பெயர் பொருந்தும்.

பழமொழி :

God helps those who help themselves


தனக்கு உதவுவோருக்கு உதவுவான் இறைவன்

இரண்டொழுக்க பண்புகள் :

1. ஒவ்வொருவருக்குள்ளும் தனித் திறமை எனும் நெருப்பு உண்டு அதை எரிய வைப்பது அவரவரின் கடமை. 

2. மாணவ வாழ்க்கை ஒரு படிக்கட்டு போல அதில் ஏறுவதும் இறங்குவதும் அவரவர் திறமை

பொன்மொழி :


துன்பங்கள் வரும் போது அதை தைரியமாகவும் சாதுரியமாகவும் எதிர் கொள்ள நாம் கற்றுக் கொள்ள வேண்டும். துன்பங்களை கண்டு துவண்டு விட கூடாது.அனைத்திலும் வெற்றி அடைவதற்கான ரகசியம் விடா முயற்சி.........ISRO சிவன்.

பொது அறிவு :


1. "வெளிநாடு வாழ் இந்தியர் தினம் " எப்போது கடைப்பிடிக்கப்படுகிறது?

 ஜனவரி 9.


 2. எந்த நாளை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் " வீர் பால் தினமாக " அறிவித்துள்ளார்? 


 டிசம்பர் 26.

English words & meanings :


Fly - an insect with wings, ஈ. 

Fly - move through the air with the help of wings 

ஆரோக்ய வாழ்வு :


1.பனங்கிழங்கு சாப்பிடுவதினால் பித்தம்த நீங்கி உடல் பலம் பெறும். 2. கருவேப்பிலை தொடர்ந்து துவையல் செய்து சாப்பிட்டு வர பித்தம் தணியும்.

கணினி யுகம் :

Shift + F5 - Last modified segment. 

 Ctrl + End - Last segment 


ஜனவரி 12


தேசிய இளைஞர் நாள்




சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான சனவரி 12 ஆம் தியதி தேசிய இளைஞர் நாள் (National Youth Day) என இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.

1984 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் இந்நாளினை "தேசிய இளைஞர் நாளாக" அறிவித்தது, அதைத்தொடர்ந்து 1985-ல் சனவரி 12-ம் திகதி முதன்முதலாக கொண்டாடப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது


நீதிக்கதை


மாற்றம்

ஒரு நாள் ஆபிசில் வேலை செய்யும் பணியாட்கள் நோட்டீஸ் போர்டில் ஏதோ எழுதி இருக்கிறதே என்று பார்க்க சென்றனர். அதில் உங்கள் வளர்ச்சிக்கு இடையூராக இருந்த நபர் நேற்று காலமானார். அடுத்த கட்டிடத்தில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும் என்று எழுதி இருந்தது.

நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்த நபர் யாராக இருக்கும் என்று அவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது. அனைவரும் அடுத்த கட்டிடத்திற்கு சென்றனர். சவப்பெட்டி வைத்திருக்கும் இடத்தை நோக்கி ஒருவர் பின் ஒருவராக செல்ல ஆரம்பித்தனர். சவப்பெட்டியை நெருங்க நெருங்க, நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்தவன் யாராக இருக்கும். நல்ல வேளை அவன் இறந்துவிட்டான் என்று நினைத்தபடியே முன்னோக்கி சென்றனர்.

சவப்பெட்டியினுள் எட்டி பார்த்தவர்களுக்கு தூக்கி வாரிப் போட்டது. அதில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி மட்டுமே இருந்தது. சவப்பெட்டியினுள் யார் எல்லாம் பார்க்கிறார்களோ அவர்கள் முகமே அதில் தெரிந்தது. கண்ணாடி அருகில் ஒரு வாசகம் எழுதி இருந்தது.

உங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் மட்டுமே காரணம். நீங்கள் வளர வேண்டும் என்றால் அது உங்கள் கையில் மட்டுமே உள்ளது. உங்கள் வளர்ச்சியை உங்களை தவிர வேறு யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று எழுதியிருந்தது. உங்கள் வாழ்கையை உங்கள் முதலாளியால் மாற்ற முடியாது. உங்கள் நண்பர்களால் மாற்ற முடியாது. 

நீதி :
நீங்கள் நினைத்தால் மட்டுமே உங்கள் வாழ்வை மாற்ற முடியும்
I

இன்றைய செய்திகள்

12.12.21

★கரூரில் 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு மற்றும் சிலைகள் மீட்பு.

★மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்த வழக்குகளை பிப்ரவரி 15ஆம் தேதிக்குத் தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

★முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அதிக சிகிச்சை முறைகளுடன் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதற்கான அரசாணை வெளியீடு.

★ராணுவத்தில் வீரர்களின் நம்பிக்கையை பெறுவதற்கு அவர்களை அதிகாரிகள் நியாயமாக நடத்த வேண்டும் என்று ஆயுதப் படைகள் தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது.

★10% கரோனா நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதி; மாநிலங்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்: மத்திய சுகாதாரத் துறை அறிவுரை.


★ஒமைக்ரான் வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு என தனி தடுப்பூசி தயார் செய்யப்பட்டு வருவதாகவும் மார்ச்சில் அது பயன்பாட்டுக்கு வருமென்றும் ஃபைஸர் மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.


★பல்வேறு நாட்டு முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்குபெறும் இந்தியன் ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் நேற்று தொடங்கியது.

★புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணி 3-வது வெற்றி.

Today's Headlines

 ★  9th century inscriptions and statues are recovered at Karur.

 ★ The Chennai High Court has adjourned  the cases against the law which provides for 7.5 per cent reservation for government school students in admission to medical studies till February 15th .

 ★ Government Released GO to extend the Chief Minister's Comprehensive Medicare Plan for 5 years with more treatment options.

 ★ The Armed Forces Tribunal has advised that officers should be treated fairly in order to gain the confidence of soldiers in the military.

 ★ 10% of corona patients are admitted in hospital;  States must act with caution: Federal Department of Health adviced.


 ★ Pfizer says a separate vaccine is being developed to control the omega-3 virus and will be available in March.


 ★ Indian Open Badminton Tournament started yesterday with the participation of leading players from various countries.

 ★ Pro Kabaddi League: Tamil Talawas team won 3rd victory.

 Prepared by

Covai women ICT_போதிமரம்