Sunday, March 31, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.04.2024

  

வாங்கரி மாத்தாய்




திருக்குறள்: 

"பால்: பொருட்பால். இயல்: அரசியல். 
அதிகாரம்: இறைமாட்சி.

குறள்:387


இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு.

விளக்கம்:

இனிய சொல்லுடன் பிறர்க்குக் கொடுக்கவும், அவர்களைக் காக்கவும் ஆற்றல் பெற்ற அரசிற்கு அது எண்ணிய எல்லாவற்றையும் இவ்வுலகம் தரும்.


பழமொழி :

A single tree makes no forest

தனி மரம் தோப்பாகாது

இரண்டொழுக்க பண்புகள் :

 1. வாழ்க்கையில் ஒரு செயலை ஆரம்பிப்பதற்கு முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு கொள்ள வேண்டும். 

2. திட்டமிடுதல் மிக முக்கியம். திட்டமிடுவோம் செயல்படுவோம்.

பொன்மொழி :

ஆயிரம் வீண் வார்த்தைகளை விட பயனுள்ள இதமான ஒரு நல்ல வார்த்தை சிறந்தது
- புத்தர்.

பொது அறிவு : 

1. சோழ நாடு உள்ளடக்கிய பகுதிகள் எது?

விடை: திருச்சி, தஞ்சாவூர் 

2. சங்க காலத்தில் நிலம் எத்தனை வகைகளாக இருந்தது?

விடை: 5

English words & meanings :

 Cosmology(n) - the science of the universe விண்வெளி இயல்
Cosset (v) - to pamper somebody செல்லம் கொடுத்தல்

ஆரோக்ய வாழ்வு : 

பருப்புகீரை :பருப்புக் கீரையில் உள ஆக்சாலிக் அமிலம் சிலருக்கு சிறுநீரகக் கற்கள் உருவாகக் காரனமாகலாம். எனவே சிறுநீரகக் கல் மற்றும் சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் பருப்புக் கீரையைத் தவிர்ப்பது பாதுகாப்பானது.

ஏப்ரல் 01

வாங்கரி மாத்தாய் அவர்களின் பிறந்தநாள்



வாங்கரி மாத்தாய் (Wangari Maathaiஏப்ரல் 11940 - செப்டம்பர் 252011கென்யாவைச் சேர்ந்த அரசியல்வாதியும் சுற்றுச்சூழல் ஆர்வலரும் ஆவார். 1991 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பணிக்காக வழங்கப்படும் கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருதைப் பெற்றார். 2004ஆம் ஆண்டு பேண்தகு வளர்ச்சி, அமைதிப் பணிகளுக்காக அமைதிக்கான நோபெல் பரிசு பெற்றார். இவர் காடுகளைக்காக்க பசுமை பட்டை இயக்கம் (Green Belt Movement) என்ற ஒன்றைத்துவக்கினார்.   ஆப்பிரிக்க நாட்டுப் பெண்கள் போல் அல்லாமல் கல்வியில் சிறந்து விளங்கினார்.இளங்கலை முதுகலைப் படிப்புகளை அமெரிக்காவில் முடித்தார்.1971 இல் கென்யாவிலேயே முதல் டாக்டர் பட்டம் பெ ற்றபெண்மணி இவரே. நைரோபிப் பல்கலைக் கழகத்தில் முதல் பெண் பேராசிரியர் என்னும் மதிப்பையும் பெற்றார்.
1977இல் தம் பேராசிரியப் பணியைத் துறந்தார்.அந்த ஆண்டில் உலகச் சுற்றுச் சூழல் நாள் அன்று (சூன் 5) தம் வீட்டின் தோட்டத்தில் ஒன்பது செடிகளை நட்டு மரங்களை வளர்க்கும் பணியில் ஈடுபட்டார்.இவ்வாறு பசுமைப் பட்டை இயக்கம் என்பதைத் தொடங்கினார்.ஆப்பிரிக்கக் காடுகளை மீண்டும் உருவாக்குவதும் காடுகள் அழிப்பினால் ஏற்பட்ட மக்களின் வறுமையை ஒழிப்பதும் இவ்வியக்கத்தின் நோக்கங்கள் ஆகும்.30 ஆண்டுகளில் மூன்று கோடி மரங்களை வளர்க்க ஏழைப் பெண்களைத் திரட்டினார்.இவற்றோடு மக்கள் கல்வி,குடும்பக் கட்டுப்பாடு ஊட்டச் சத்து ஊழல் எதிர்ப்பு ஆகியவற்றிலும் பசுமை பட்டை அமைப்பு ஈடுபட்டது.1980 களில் பெண்களுக்கான தேசியக் கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.பின்னர் சனநாயக ஆதரவு இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராக ஆனார்.நைரோபில் இருந்த ஒரே பூங்காவான உகூரு என்னும் பூங்காவை அழித்து 62 அடுக்குகள் கொண்ட பெரிய கட்டடத்தைக் கட்ட அரசு முனைந்தபோது மாத்தாய் போராட்டம் நடத்தியதால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.பல்வேறு சமூக முன்னேற்றங்களுக்கான போராட்டங்களில் இவர் ஈடுபட்டதால் மீண்டும் மீண்டும் சிறைப்படுத்தப் பட்டார்.கண்ணீர் புகைக்குண்டு, தடியடி இவரைப் பதம் பார்த்தன.இவருடைய இடைவிடா போராட்டங்களினால் உலகம் இவரைத் திரும்பிப் பார்த்தது. இவருடைய சுற்றுச்சூழல் சேவையைக் கணக்கில் கொண்டு அவரின் சேவையைப் போற்றும் வகையில் நோபல் அமைதிப் பரிசு மாத்தாய்க்கு வழங்கப்பட்டது. சுற்றுச் சூழல் பாதுகாப்பு மூலம் வளர்ச்சியும் சனநாயகமும் பேணப்படு கின்றன என்று கருதி மாதாய்க்கு நோபல் அமைதிப் பரிசு வழங்கப்பட்டது.நோபல் அமைதிப் பரிசைப் பெற்ற முதல் ஆப்பிரிக்கப் பெண் என்னும் பெருமையும் அவருக்கு உண்டு.

நீதிக்கதை

 வீண் பெருமை துன்பம் தரும்.


ஒரு காட்டின் அருகில் கழுதை மேய்ந்து கொண்டிருந்தது. அருகில் இருந்த குடிசையில் பெரிய சேவல் ஒன்று இருந்தது. அதுவும் இரை தேடி அலைந்து கொண்டிருந்தது. திடீரென்று அங்கு ஒரு சிங்கம் வந்தது. சிங்கத்தைக் கண்ட சேவலும் கழுதையும் மிரண்டு பலமாகக் கூவின.

சிங்கத்திற்கு கழுதையின் குரல் புதிதல்ல. ஆனால் அச்சிங்கம் சேவலின் கூவல் கேட்டதில்லை. அதனால் அது பயந்து அங்கிருந்து திரும்பி ஓட ஆரம்பித்தது.

சிங்கம் ஓடுவதைக் கண்ட கழுதை தன் குரலைக் கேட்டுத்தான் சிங்கம் ஓடுவதாக நினைத்தது. தன்னைப் பற்றி பெருமையாக எண்ணிக் கொண்டது. தனக்கு அதிக பலம் இருப்பதாக நினைத்தது. உடனே சிங்கத்தைத் துரத்திக் கொண்டு ஓடிற்று.

சிறிது தூரம் சென்றதும் சிங்கம் திரும்பிப் பார்த்தது. கழுதை தூரத்தில் ஓடி வருவதைக் கண்டது. அருகில் சேவலைக் காணவில்லை. அதனால் அதன் பயம் நீங்கிற்று. திரும்ப ஓடி வந்து கழுதையின் மேல் பாய்ந்து அதை கொன்று தின்றது.


வீணாக பெருமை கொண்ட கழுதை க்கு துன்பம் நேரிட்டது.

இன்றைய செய்திகள்

01.04.2024

*தென் சென்னை, வடசென்னை தொகுதி ஓட்டுப்பதிவுக்கு மூன்று மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்படும்- தலைமை தேர்தல் அதிகாரி.

 *பரனூர், ஆத்தூர் உள்ளிட்ட மொத்த ஏழு சுங்கச்சாவடிகளில் இன்று முதல் ரூ. 20 வரை சுங்க கட்டணம் உயர்வு அமலுக்கு வருகிறது.
 
*தமிழகத்துக்கு ஆறாவது முறையாக வருகிறார் பிரதமர் மோடி; ஒன்பதாம் தேதி சென்னையில் 'ரோடு ஷோ'.

*ஒகேனக்கலில் நீர் வரத்து 400 கன அடியாக சரிவு.

 *மியாமி ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றது போபண்ணா ஜோடி.

Today's Headlines

*Three electronic machines will be used for polling in South Chennai and North Chennai constituencies- Chief Returning Officer.

  *From today onwards, Rs.  Increase in customs duty till 20
 
 *Prime Minister Modi is coming to Tamil Nadu for the sixth time;  'Road Show' in Chennai on the 9th.

 *Water flow in Okanagan declined to 400 cubic feet.

  *Miami Open Tennis: Bopanna pair won the title.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Wednesday, March 27, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.03.2024

  

மாக்சிம் கார்க்கி




திருக்குறள்: 

"பால்: பொருட்பால். இயல்: அரசியல். 
அதிகாரம்: இறைமாட்சி.

குறள்:386

காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.

விளக்கம்:

காண்பதற்கு எளியவனாய்க் கடுஞ்சொல் கூறாதவனாய் இருந்தால் அந்த மன்னனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நாட்டை உலகம் புகழும்.

பழமொழி :

Silence gives consent

மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி

இரண்டொழுக்க பண்புகள் :

 1.முயற்சியும், தொடர் பயிற்சியும்   வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை நான் அறிவேன்.     
                                            
  2.எனவே நான் ஒவ்வொரு நாளும் தேர்விற்காக கடுமையாக முயற்சி செய்து படிப்பேன்

பொன்மொழி :

அறிவற்ற சிநேகிதனிடம் சேர்வதை விட புத்தி சாலியான எதிரியிடம் சேர்வது மேல்.
- பெர்னாட்ஷா.

பொது அறிவு : 

1. தனது உடம்பினை விட நீளம் கூடிய நாக்கை கொண்ட விலங்கு எது?


விடை: பச்சோந்தி

2. ஆப்பிரிக்கா கண்டத்தில் மட்டும் பரவலாக வாழும் விலங்கு எது?

விடை: வரிக்குதிரை

English words & meanings :

 Brittle - breakable;உடையக்கூடிய
Baffle - Astound;குழப்பம்

ஆரோக்ய வாழ்வு : 

புளுச்சை கீரை : இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இது பசி உணர்வை குறைத்து நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும்.

மார்ச் 28

மாக்சிம் கார்க்கி  அவர்களின் பிறந்தநாள்


மாக்சிம் கார்க்கி (Maxim Gorky) என அறியப்படும் அலெக்சி மாக்சிகொவிச் பெசுகோவ் (உருசியம்Алексе́й Макси́мович Пешко́в; 28 மார்ச் [யூ.நா. 16 மார்ச்] 1868 – 18 சூன் 1936) உருசியா நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி.[1] இவர் உலகின் மிகச் சிறந்த புதினங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாய் என்ற புதினத்தை எழுதினார்.

எந்நேரமும் குறிப்பேடு வைத்திருப்பார். தனக்குத் தோன்றுவதை அதில் எழுதுவார். 1892-ல் இவரது முதல் சிறுகதையான ‘மகர் சுத்ரா’ (Makar Chudra) வெளிவந்தது. மாக்சிம் கார்க்கி என்ற பெயரில் தொடர்ந்து எழுதிவந்தார். கார்க்கி என்ற சொல்லுக்கு கசப்பு என்பது பொருள்[4]

1898-ல் ‘ஸ்கெட்சஸ் அண்ட் ஸ்டோரீஸ்’ வெளிவந்தது. 1899-ல் முதல் நாவலும், 1902-ல் ‘தி லோயர் டெப்த்ஸ்’ என்ற நாடகமும் வெளிவந்தன. இவரது உலகப் புகழ்பெற்ற ‘மதர்’ (தாய்) புதினம் 1906-ல் வெளிவந்தது. 1906ஆம் ஆண்டு டிசம்பரில் நியூயார்க்கிலிருந்து வெளியாகும் 'ஆப்பிள்டன்' இதழில் தாய் முதற்பகுதியின் முன்பாகமும் 1907ஆம் ஆண்டு தாய் முழுவதும் வெளிவந்தன. இந்நூல் முதலில் வெளிவந்தது அமெரிக்காவில்தான். கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக மக்களைக் கிளர்ந்தெழச் செய்வது, அதிகார வர்க்கத்துக்கு எச்சரிக்கை விடுப்பது, வீரம் ஆகியவை இவரது எழுத்துகளின் அடிநாதமாகத் திகழ்ந்தன. இதனால் அரசின் கோபத்துக்கு ஆளானார். பலமுறை கைது செய்யப்பட்டார். இவரது படைப்புகள் கடும் தணிக்கையை எதிர்கொண்டன.

பல கவிதைகள் எழுதினார். ஏராளமான நூல்களைப் படித்தார். அபார நினைவாற்றல் படைத்தவர். எழுதுவதற்கு பென்சில்களையே பயன்படுத்தினார். சிறிய சிற்பங்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர்.

பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகர் என்று போற்றப்பட்டார். இவர் படைத்த தாய் (புதினம்) ’ (மதர்) நாவல், இன்றுவரை புரட்சிகரத் தொழிலாளி வர்க்கத்துக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்து வீரத்தை ஊட்டிவருகிறது. இது 200 முறைக்கு மேல் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

நீதிக்கதை

 குணம் கெட்ட கொக்கு


ஒரு பெரிய குளத்தில் நிறைய மீன்கள் இருந்தது. அவைகளுடன் பெரிய நண்டு ஒன்றும் இருந்தது. வேறு பெரிய கொக்கு ஒன்றும் இருந்தது. இவைகள் நண்பர்களாக வாழ்ந்து வந்தன. ஒன்றுக்கொன்று உதவி வந்தன.

ஒரு கடுங்கோடையில் அக்குளத்தில் நீர் வற்றியது. மீன்களும் நண்டும் அங்கிருக்க முடியாமல் தவித்தன. இதைக் கண்ட கொக்கு அவைகளுக்கு உதவி புரிவதாகச் சொல்லிற்று.

தனது அலகால் ஒவ்வொரு மீனாக கவ்விச் சென்று வேறு நீர் உள்ள குளத்திற்கு எடுத்துச் செல்வதாகச் சொல்லிற்று. அம்மாதிரி ஒவ்வொன்றாகக் கவ்விச் சென்றது. ஆனால் அவைகளை வேறு குளத்திற்கு எடுத்துச் செல்லாமல் ஒரு பாறையின்மேல் வைத்துக் கொன்று தின்று வந்தது.

இவ்வாறு எல்லா மீன்களையும் கவ்வி எடுத்துச் சென்று கொன்று தின்றது.

நீர் வற்றின குளத்தில் கடைசியில் நண்டு மாத்திரம் இருந்தது. கொக்கிடம் நண்டு தன்னையும் காப்பாற்றுமாறு கூறியது. நண்டையும் வேறு குளத்திற்கு எடுத்து செல்ல கொக்கு சம்மதித்தது. உடனே நண்டு கொக்கின் கழுத்தின் மேல் கவ்விப் பிடித்துக் கொண்டது. கொக்கும் பறந்து சென்றது.

பாறையின் அருகே வரும் போது நண்டு கீழே பாறையிலிருந்த மீன்களின் செதில்களைக் கண்டது. அதற்குக் கொக்கின் தீச்செயல் விளங்கிற்று. உடனே சிறிதும் தாமதியாமல் தனது கால்களால் கொக்கின் கழுத்தை அழுத்தி இறுக்கியது. கொக்கும் மூச்சுத் திணறி கீழே விழுந்து இறந்தது. நண்டும் தப்பிச் சென்றது.

இன்றைய செய்திகள்

28.03.2024

*சாலை நடுவில் மிளிரும் ' மெதுவாக செல்லுங்கள்' வாசகம்; இரவு நேரங்களில் விபத்து தடுக்க நடவடிக்கை.

 *முதல் முறையாக ஓட்டு போடுபவர்களுக்கு பரிசு அறிவித்த வேலூர் கலெக்டர்.

 *தேர்தல் தொடர்பான புகார்களை 1950 என்ற எண்ணில் அளிக்கலாம்.

 *மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 200 கன அடி நீர் திறப்பு.
 
*மியாமி ஓபன் டென்னிஸ்: ரோகன் 
போபண்ணா ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்.

Today's Headlines

* 'Go Slow' reflective light studs in the middle of the road; a preventative measure to avoid accidents at night.

  * Vellore Collector announces a prize for the voters for the first time regarding elections.

  *Election-related complaints can be lodged at the number 1950.

  *  200 cubic feet of water per second is Released from the Mettur dam for drinking water requirement.
 
 *Miami Open Tennis: Rogan
 Bopanna pair advance to semi-finals.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Tuesday, March 26, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.03.2024

  

யூரி அலெக்சியேவிச் ககாரின்




திருக்குறள்: 

"பால்: பொருட்பால். இயல்: அரசியல். 
அதிகாரம்: இறைமாட்சி.

குறள்:385

இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.

விளக்கம்:

முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அரசாங்கக் கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, அதைப் பாதுக்காத்துத் திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும்.

பழமொழி :

Set a thief to catch a thief

முள்ளை முள்ளால் எடு

இரண்டொழுக்க பண்புகள் :

 1.முயற்சியும், தொடர் பயிற்சியும்   வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை நான் அறிவேன்.     
                                            
  2.எனவே நான் ஒவ்வொரு நாளும் தேர்விற்காக கடுமையாக முயற்சி செய்து படிப்பேன்

பொன்மொழி :

இந்த உலகில் நிகரில்லாத செல்வம் தன்னம்பிக்கையே.
- ஔவையார்.

பொது அறிவு : 

1. நீரை அருந்தாத நீர் வாழ் உயிரினம் எது?

விடை: டால்பின்

2. உலகில் அதிகூடிய விஷத்தன்மை வாய்ந்த மீன் இனம் எது?

விடை: ஸ்டோன் பிஷ் 

English words & meanings :

 Adjourn - postpone;ஒத்திவைக்க.
 authentic - real; உண்மையான.

ஆரோக்ய வாழ்வு : 

புளுச்சை கீரை: சொறி, சிரங்கு போன்ற சரும நோய் உள்ளவர்கள் இந்த கீரையை சட்னி செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் விரைவில் நிவாரணம் பெறலாம்.

மார்ச் 27

உலக நாடக அரங்க நாள்  

உலக நாடக அரங்க நாள் (World Theatre Day) ஆண்டுதோறும் மார்ச் 27 ஆம் நாளன்று பன்னாட்டு அரங்க நிறுவனத்தினால் கொண்டாடப்பட்டு வருகின்றது.

உலக நாடக அரங்க நாள் உலக நாடக அரங்க நிறுவனத்தினால் 1961 ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்டு இந்நிறுவனத்தின் மையங்களிலும், பன்னாட்டு நாடக அரங்க சமூகங்களினாலும் கொண்டாடப்படுகின்றது. இந்நிகழ்வை ஒட்டி பல்வேறு தேசிய, பன்னாட்டு நாடக நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இந்நாளின் முக்கிய நிகழ்வாக, உலக மட்டத்தில் புகழ் பெற்ற ஒரு நாடகக் கலைஞர் ஒருவர் இந்நாளின் முக்கியத்துவம் குறித்த தனது பிரதிபலிப்புகளையும், உலக கலாச்சார அமைதி பற்றியும் செய்தி ஒன்றை விடுப்பார். இவ்வாறான முதலாவது செய்தியை 1962 ஆம் ஆண்டில் பிரான்சிய எழுத்தாளரும், நாடகக் கலைஞருமான சான் காக்டோ விடுத்தார்.


யூரி அலெக்சியேவிச் ககாரின் அவர்களின் நினைவு நாள்


யூரி அலெக்சியேவிச் ககாரின் (Yuri Alekseyevich Gagarinஉருசியம்Ю́рий Алексе́евич Гага́рин; 9 மார்ச் 1934 – 27 மார்ச் 1968) உருசிய விண்வெளி வீரர் ஆவார். விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரராவார். அத்துடன் பூமியை விண்ணில் வலம் வந்த முதல் மனிதரும் இவரே. ககாரின் 1961 ஏப்ரல் 12 அன்று சோவியத் ஒன்றியத்தின் வசுத்தோக்-1 விண்கலத்தில் பயணித்து சுமார் 108 நிமிடங்கள் விண்ணில் சஞ்சரித்தார்.

நீதிக்கதை

 சிநேகமாக்கிக்கொள்ளத் தக்கவர்களை ஆராயும் திறம்.


ஒரு மூடன் ஒரு வணிகருடனே கூடிக்கொண்டு சிநேகமாக இருவரும் பயணம் பண்ணினார்கள். பண்ணும்போது இரவு வந்துவிட்டதால் அந்த

மூடன் வழியில் படுத்துக்கொண்டான். அப்பொழுது அந்த வணிகர் பக்கத்தில் உள்ள ஒரு மரத்தின் மறைவில் படுத்துக்கொண்டார். சிறிது நேரம் கழித்து அந்த வழியிலே போகிற கள்வர் காலிலே இந்தமூடன் கால் பட்டது. ஒரு கள்வன், "இது என்ன? கட்டை போல் இருக்கிறது" என்றான். அம்மூடன் கோபங் கொண்டு "டேய் மடையா!, உன் வீட்டுக் கட்டை பணம் முடித்துக்கொண்டு இருக்குமா?" என்றான். கள்வர் அவனை உதைத்து அவனிடம் உள்ள பணத்தைப் பிடுங்கிக்கொண்டு சென்றார்கள். போம் போது இந்தப்பணம் நல்லதோ? கெட்டதோ? என்றார்கள். அவன் அதைக்கேட்டு நல்லது, கெட்டது என்று அறியும் பொருட்டு  வணிகர் மரத்தடியில் இருக்கிறார் என்று அவரிடம்  ஓடி வணிகரை எழுப்பினான். அக் கள்வர்கள் வணிகரிடம் இருந்த பணத்தையும் பிடுங்கிக்கொண்டு உதைத்துச் சென்றார்கள். அப்போது வணிகர் மூடனைப்பார்த்து 'அப்பா ! எனக் குத்துணைவேண்டாம். நீ விரும்பிய இடத்திற்குப் போ!' என்று அவன் நட்பை வெறுத்து தனியே சென்றான். வள்ளுவரும் "மூடன் நட்பை விடுதல் இலாபம்" என்று  கூறியுள்ளார். 


ஊதியம் என்பது ஒருவர்க்குப் பேதையார் கேண்மை ஒரீஇ விடல்.

இன்றைய செய்திகள்

27.03.2024

*மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்பேஸ் தலைவரானார், ஐ.ஐ.டி மெட்ராஸ் முன்னாள் மாணவன் பவன் தவுலுரி.

*இந்தியாவிலேயே முதல் முறையாக தனியார் காடுகளை விலைக்கு வாங்கிய வனத்துறை;  வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் இணைப்பு நடவடிக்கை; 5வது புலிகள் காப்பகமான ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை.

*கேரள மாநிலம்: பழங்குடியின சமூகத்தினர் 216 பேருக்கு ஒரே மேடையில் திருமணம்; ஆசிய சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்தது.

*தமிழ்நாட்டைப் போல இலங்கையில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம். அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தொடங்கி வைத்தார்.

*மியாமி ஓபன் டென்னிஸ்: போப்பண்ணா ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்.

Today's Headlines

*Pawan Dauluri, an IIT Madras alumnus, heads Microsoft Windows and Surface.

  *For the first time in India, the Forest Department purchased private forests;  this action was taken due to heavy movements of wild animals.  5th Tiger Reserve in Srivilliputhur Meghamalai.

  *Kerala State: 216 people from the tribal community got married at the same stage;  it is also featured in the Asian Book of Records.

  * Breakfast program for school students in Sri Lanka like Tamil Nadu.  President Ranil Wickremesinghe inaugurated the event.

  *Miami Open tennis: Poppanna pair advance to quarterfinals.
 Prepared by

Covai women ICT_போதிமரம்