Wednesday, November 30, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.12.2022

  திருக்குறள் :

பால்: அறத்துப்பால் 

இயல்: இல்லறம்; 

அதிகாரம்: அன்புடைமை. 

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

விளக்கம்:
அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்.

பழமொழி :

It is never too late to learn.

கற்பதற்கு காலம், நேரம் கிடையாது

இரண்டொழுக்க பண்புகள் :

1. செல்லும் இடமெல்லாம் ஒழுக்கம், நேர்மை, அன்பு எனும் விதைகளை விதைத்து செல்வேன்.

 2. அதன் மூலம் இவ்வுலகை நாம் நன்கு வாழக் கூடிய இடமாக மாற்ற முயற்சி செய்வேன்.

பொன்மொழி :

கல்வியின் நோக்கம் மாணவர்களின் மனதை உண்மைகளால் நிரப்புவது அல்ல. அவர்களுக்கு சிந்திக்கக் கற்றுக் கொடுப்பதே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். --ராபர்ட் மேனார்ட் ஹட்சின்ஸ்

பொது அறிவு :

1. காட்டு பூனையின் அறிவியல் பெயர் என்ன? 

பெலிஸ் டைகிரினா. 

2. இண்டிகா என்ற நூலை எழுதியவர் யார்? 

மெகஸ்தனிஸ்.

English words & meanings :

ceiling -top of a room, noun. ஒரு அறையின் கூரை. sealing - setting, closing an important document or things. மூடி சீல் வைத்தல். வினைச் சொல். both homonyms

ஆரோக்ய வாழ்வு :

கஸ்டர்ட் ஆப்பிள் என்று அழைக்கப்படும் சீத்தாப்பழம் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சிறந்த மூலமாகும். இது பல்வேறு உயிரியல் செயல்முறைகளுக்கு முக்கியமானது. வைட்டமின்கள் ஏ மற்றும் சி உடன், இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் தாமிரம் ஆகியவற்றின் கணிசமான அளவு இதில் உள்ளது. குளிர்காலத்தில் செரிமானம் குறையும் போது ஏற்படும் மலச்சிக்கலை இந்த உணவில் உள்ள நார்ச்சத்து மூலம் குணப்படுத்தும்

NMMS Q

3,9,27,4,16,64,5,25,______

விடை: 125

டிசம்பர் 01


உலக எய்ட்ஸ் நாள்




உலக எய்ட்ஸ் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்நாள் எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. எய்ட்ஸ் நாள் பற்றிய எண்ணக்கரு முதலாவதாக 1988 இல் நடைபெற்ற, எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் உருவானது. அதன் பிறகு அரசுகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்நாளை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகின்றன. 1981-ஆம் ஆண்டிலிருந்து 2007-ஆம் ஆண்டு வரை எய்ட்ஸ் நோயால் இறந்தவரின் எண்ணிக்கை 250 லகரங்களுக்கு மேல்.[1] மற்றும் 2007-ஆம் ஆண்டு வரை 332 லகரம் மக்கள் இந்நோயுடன் வாழ்ந்து வருகின்றனர்.இதனால் இந்நோய் வரலாற்றிலேயே மிக கொடூரமான தொற்றுநோயாக கருதபடுகிறது. சமீபத்திய சிகிச்சை முறைகளின் முன்னேற்றம் மற்றும் கண்காணிப்பின் கீழ் இருந்தும், எய்ட்ஸ் நோயால் உலகெங்கிலும் 2007-ஆம் ஆண்டில் 20 லகரம் உயிரிழப்பு ஏற்பட்டது

நீதிக்கதை

சிங்கமும் கழுதைப்புலியின் பங்கும்

அன்று ஒரு நாள் சிங்கமும் கழுதைப்புலியும் பசுவைப் பிடித்து வைத்திருந்தன. அடுத்தநாள் சிங்கம் பசுவைக் கொன்றது. கழுதைப்புலி தன் குட்டியை சிங்கத்திடம் அனுப்பி தன் பங்கை வாங்கிவரச் சொன்னது. கழுதைப்புலியின் பங்காக பசுவின் குடலை மட்டும் கொடுத்து அனுப்பியது சிங்கம். 

கழுதைப் புலியோ, நீ ஏன் குடலை மட்டும் கொண்டு வந்தாய்? அரைவாசிப் பங்கு கேட்கவில்லையா என்று கேட்டது. பெரியவர்கள் கொடுப்பதைத்தான் கொண்டு வர முடியும். நான் எப்படி சிங்கத்தோடு விவாதிக்க முடியும் என்றது குட்டி கழுதைப்புலி. 

அதைக்கேட்டு கோபமான கழுதைப்புலி அந்தக் குடலோடு சிங்கத்தைப் பார்க்கப் போனது. சிங்கம் உணவை உண்டு குகைக்குள் ஒய்வெடுத்துக் கொண்டிருந்தது. கழுதைப்புலி வந்ததைக் கண்டு ஏன் இங்கே வந்தாய்? என்று கர்ஜித்தபடி சிங்கம் கேட்டது. 

பசுவில் பாதி கேட்க வந்த கழுதைப்புலி பயந்து தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு ராஜ சிங்கமே! நீங்கள் குடல் அனுப்பியதற்கு மிக்க நன்றி, ஆனால் அதனை உங்களிடமே சேர்க்க முடிவு செய்து விட்டோம். 

குடலை சிங்கத்திடம் கொடுத்துவிட்டுதிரும்பிய கழுதைப்புலியிடம் பசுவில் பாதி கேட்கப்போன நீங்கள் குடலையும் கொடுத்துவிட்டு வருகிறீர்களே? என்று கேட்டது குட்டி கழுதைப்புலி. 

மகனே! சிங்கம் மிகக் கொடூரமாக இருந்தது. அதைக்கண்டு நடுங்கிவிட்டேன். எனவே எனது பங்கையும் கொடுத்துவிட்டுப் பாராட்டிவிட்டு வந்தேன். எல்லாம் நன்மைக்காக என்றது தாய் கழுதைப்புலி. 

நீதி :
நம்மைவிட வலிமையானவர்களைக் கோபப்படுத்துவதை விட அவர்களை சாந்தப்படுத்துவதே பாதுகாப்பானது.

இன்றைய செய்திகள்

01.12.22

* தமிழக கல்வித்துறை வளாகம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என அழைக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.

* தமிழகத்தில்  நவம்பர்-29வரை 26.04 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

* கங்கைகொண்ட சோழபுரத்தை அடுத்த மாளிகைமேட்டில் கிடைத்த பொக்கிஷங்களைப் பாதுகாக்கும் வகையில், அங்கு அரசு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

* தமிழகம் முழுவதும் 38 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள 1,635 ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

*எதிரிகளின் ட்ரோன்களை அழிக்க பருந்துகளை பயன்படுத்தும் இந்திய ராணுவம்.

* உலகிலேயே முதல்முறையாக மூக்கு வழி கரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி: பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

* வாரத்துக்கு 4 நாட்கள் வேலை திட்டம்: இங்கிலாந்து நிறுவனங்கள் அறிமுகம்.

* 48,500 ஆண்டுகள் பழமையான ஜோம்பி வைரஸ்: ஐரோப்பிய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு.

* கடைசி ஒருநாள் போட்டியும் மழையால் ரத்து. 1-0 என தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து.

* இளவேனில் வாலறிவன், பிரக்ஞானந்தாவுக்கு அர்ஜுனா விருது - ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.

* உலகக்கோப்பை கால்பந்து : ஈரானை வீழ்த்தி அமெரிக்க அணி வெற்றி.

Today's Headlines

* Tamil Nadu Education Department Campus to be called Professor Anbazhagan Education Campus: Chief Minister Stalin's announcement.

 * Minister Senthil Balaji said that 26.04 lakh electricity connections have been linked to Aadhaar in Tamil Nadu till November 29.

*  Tamil Nadu Chief Minister M.K.Stalin has said that a government museum will be set up there to protect the treasures found in the mansion next to Gangaikonda Cholapuram.

 * 1,635 corruption cases pending for 38 years across Tamil Nadu should be completed expeditiously: Madras High Court orders.

 * Indian Army uses hawks to destroy enemy drones.

 * World's First Nasal Corona Vaccine Approved developed by Bharat Biotech.

 * 4 Days a Week Scheme: Introduction to UK Companies

 * 48,500-year-old zombie virus: discovery by European scientists

 * The last ODI was also canceled due to rain.  New Zealand won the series 1-0.

 * Arjuna Award to Pragnananda ,ilavenil and valarivan presented by President Draupathi Murmu.

* Football World Cup: USA team wins by defeating Iran.

 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Tuesday, November 29, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.11.2022

 திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 

இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: அன்புடைமை

குறள் : 71
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.

பொருள்:
உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது. அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டுவிடும்.

பழமொழி :

Learning is youth is an engraving on a rock.

இளமையில் கல்வி சிலை மேல் எழுத்து.

இரண்டொழுக்க பண்புகள் :

1. செல்லும் இடமெல்லாம் ஒழுக்கம், நேர்மை, அன்பு எனும் விதைகளை விதைத்து செல்வேன்.

 2. அதன் மூலம் இவ்வுலகை நாம் நன்கு வாழக் கூடிய இடமாக மாற்ற முயற்சி செய்வேன்.

பொன்மொழி :

கல்வியே சிறந்த நண்பன். கற்றவர் எல்லா இடங்களிலும் மதிக்கப்படுகிறார். கல்வி அழகையும் இளமையையும் வெல்லும். --சாணக்யா

பொது அறிவு :

1. அணிலின் அறிவியல் பெயர் என்ன ? 

 ரோடன்ஷியா ஸ்குயிரஸ். 

 2. பாம்புகளிடம் சுரக்கப்படும் விஷத்திற்கு என்ன பெயர் ? 

 வெனம்.

English words & meanings :

capital - chief City. noun. தலை நகரம். பெயர்ச் சொல். Capitol - a place where legislatives meet. noun. அரசு ஆள்பவர்கள் ஆலோசனை மண்டபம் 

ஆரோக்ய வாழ்வு :

குளிர்காலத்தில் பசி எடுக்கும் போது, கொய்யா ஒரு சிறந்த சிற்றுண்டியாக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையான பழமாக கொய்யா உள்ளது. நாளின் நடுப்பகுதியில் உங்கள் சர்க்கரை பசியை தணிக்கிறது, மேலும் பாதாம் அல்லது அக்ரூட் பருப்புகள் போன்ற சில பருப்புகளுடன் சேர்த்து சாப்பிட்டால், அது உண்மையிலேயே ஆரோக்கியத்தை அதிகரிக்கும். மேலும் இதில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் குளிர்கால காய்ச்சலை தடுக்க உதவுகிறது.

NMMS Q

If "all the child are men" மற்றும் "All the men are women" எனில்: a) all the men are child. b) all the women are child. c) all the women are men. d) all the child are women

விடை: all the child are women

நவம்பர் 30


சர் ஜகதீஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்தநாள்... 









சர் ஜகதீஷ் சந்திர போஸ் (Jagadish Chandra Bose) (1858-1937) தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர்.[1] போசு வானொலி அறிவியலின் முன்னோடிகளில் ஒருவர் என ஐஇஇஇ அதிகாரப்பூர்வமாக நூறு வருடங்கள் கழித்து அறிவித்தது.

நீதிக்கதை

கழுகின் நன்றியுணர்ச்சியும், நரியும்

ஒரு நாள் வேடன் ஒருவன் வேட்டையாட சென்றிருந்தான். அவன் விரித்திருந்த வலையில் கழுகு ஒன்று சிக்கிக்கொண்டது. அந்த கழுகின் சிறகுகளை மட்டும் வெட்டி சங்கிலியால் கட்டிப் போட்டான். அவ்வழியே சென்ற ஒருவர், கழுகின் மீது இரக்கப்பட்டு வேடனிடம் காசு கொடுத்து அந்தக் கழுகை வாங்கி, தன் வீட்டில் அன்புடன் வளர்த்தார். 

இறக்கைகள் நன்கு வளர்ந்தது, பின் அதைப் பறக்க செய்தார். கழுகு பறந்து செல்லும் போது ஒரு முயலைப் பார்த்தது. அதை தூக்கி வந்து தன்னை வளர்த்தவரிடம் காணிக்கையாகக் கொடுத்தது. 

இதைப் பார்த்த நரி, உன்னைப் பிடித்த வேடன் மறுபடியும் பிடிக்க வரலாம், நீ இந்த முயலை அவனிடம் கொடுத்திருந்தால், மறுபடியும் அவன் உன்னைப் பிடிக்காமல் இருப்பான். எதற்காக அவரிடம் கொடுத்தாய் என கழுகிடம் கேட்டது. 

இல்லை நீ சொல்வது தவறு. வேடனிடம் நான் முயலைக் கொடுத்தாலும், பிற்காலத்தில் அவன் என்னை பிடிக்காமல் இருக்கபோவதில்லை, ஆனால் நான் ஆபத்தில் இருந்தபோது என்னைப் காப்பாற்றியவருக்கு என் நன்றியையும், விசுவாசத்தையும் தெரிவிக்கவே முயலைக் காணிக்கையாகச் கொடுத்தேன் எனப் பதில் கூறியது கழுகு. 

நீதி :
உதவி செய்தவரிடம் நன்றியோடு இருப்பது தான் பண்புள்ள செயல்.

இன்றைய செய்திகள்

30.11.22

சென்னை - மெரினா கடற்கரையில் விரைவில் இலவச வைஃபை சேவை.

விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் 4 நாட்கள் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாமில் 17 லட்சம் பேர் மனு கொடுத்துள்ளனர். இதில் 7.57 லட்சம் பேர் பெயரைச் சேர்ப்பதற்காக விண்ணப்பித்துள்ளனர்.


புதிதாக கட்டப்பட்டு வரும் கல்லூரிகள் அடுத்த கல்வியாண்டில் திறக்கப்படும்: அமைச்சர் பொன்முடி தகவல்.

மின்சாரத்தில் இயங்கும் முதல்பந்தய காரை சென்னை ஐஐடிமாணவர்கள் அறிமுகம் செய்துள்ளனர். 

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில்,பல ஆண்டுகளாக விற்பனையாகாமல் உள்ள 8,000 வீடுகளை, குறைந்த விலையில் விற்க முடிவெடுக்கப்பட்டுள்ளது என வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

கொலீஜியம் நடைமுறை இந்த மண்ணின் சட்டம் என்றும் இதை மத்திய அரசு பின்பற்றித்தான் ஆக வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

சீனாவின் பல்வேறு நகரங்களில் பொது முடக்கம் அமலில் இருப்பதை எதிர்த்து மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பல்வேறு நகரங்களுக்கும் போராட்டம் பரவுவதால், சீன அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், சீனாவில் கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.

ஹாக்கி லீக் போட்டியில் எச்.வி.எப். அணி வெற்றி பெற்றது.

உலகக்கோப்பை கால்பந்து: உருகுவே அணியை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியது போர்ச்சுக்கல் அணி.

ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்.

Today's Headlines

CHENNAI - Free Wi-Fi soon at Marina Beach.

 The Government of Tamil Nadu has announced that you can apply online to benefit under the Special Scholarship Scheme for Sportspersons.

 17 lakh people have submitted petitions in the 4-day special voter camp across Tamil Nadu. Out of this 7.57 lakh people have applied for inclusion of names.


 Newly constructed colleges to open next academic year: Minister Ponmudi informs.

 IIT Chennai students have introduced the first race car that runs on electricity.

 Housing Minister Muthusamy has said that the Tamil Nadu Housing Board has decided to sell 8,000 houses that have not been sold for many years at a low price.

 The Supreme Court has categorically stated that collegium practice is the law of the land and the central government should follow it.

 People are holding protests against the general shutdown in various cities of China. As the protest spreads to various cities, the Chinese government is in crisis. Due to this, Corona restrictions are being relaxed in China.

 HVF won the Hockey League  

 Football World Cup: Portugal beat Uruguay to advance to the 2nd round.

 Australia-West Indies first test match starts today.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Monday, November 28, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.11.2022

திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 

இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: மக்கட்பேறு

குறள் : 70
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்

பொருள்:
ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெரும்பேறு, என்று ஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு எனப்படும்

பழமொழி :

Labour conquers everything.

உழைப்பு அனைத்தையும் வெல்லும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. செல்லும் இடமெல்லாம் ஒழுக்கம், நேர்மை, அன்பு எனும் விதைகளை விதைத்து செல்வேன்.

 2. அதன் மூலம் இவ்வுலகை நாம் நன்கு வாழக் கூடிய இடமாக மாற்ற முயற்சி செய்வேன்.

பொன்மொழி :

நீங்கள் தாமதிக்கலாம், ஆனால் நேரம் தாமதிக்காது. --பெஞ்சமின் பிராங்க்ளின்

பொது அறிவு :

1. கண்ணீர் சுரப்பிக்குப் பெயர் என்ன ?

 லாச்ரிமல் கிளாண்ட்ஸ். 

2.கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார்? 

கெப்ளர்.

English words & meanings :

blew - wind moving and creating air current. verb. ஊதுதல். வினைச் சொல். blue - a color. noun. நீல நிறம். பெயர்ச் சொல். both homonyms

ஆரோக்ய வாழ்வு :




அஞ்சீர் என்றும் குறிப்பிடப்படும் அத்திப்பழங்களில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது நீண்ட நேரம் உங்களை நிறைவாக உணர உதவும். இது 'ஃபிசின்' என்ற நொதியைக் கொண்டுள்ளது, இது உணவை சிறந்த மற்றும் விரைவான செரிமானத்தை ஊக்குவிக்கிறது. இது தொப்பை கொழுப்பை இழக்கும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது. இதில் தாமிரம், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளிட்ட ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

NMMS Q

9, 28, 65, ____, 217. 

விடை : 126. 

விளக்கம் : 2 x 2 x 2 =8 + 1 =9; 3 x 3 x 3 = 27 + 1= 28; 4 x 4 x 4 = 64 + 1 = 65; 5 x 5 x 5 = 125 + 1 = 126; 6 x 6 x 6 = 216 + 1 = 217

நீதிக்கதை

பிடிவாதம் கொண்ட சிறுமி

ஒரு ஊரில் கீதா என்ற ஒரு சிறுமி இருந்தாள். அவள் நன்றாகப் படிப்பாள், அவளிடம் கொடுக்கும் வேலையை சரியாக செய்து முடிக்கும் திறமைசாலியானவள், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரிடமும் அன்பாகவும், பணிவாகவும் நடந்து கொள்வாள். 

ஆனால் கீதாவின் பிடிவாத குணம் மட்டும் யாருக்கும் பிடிக்கவில்லை. கீதா அவள் அம்மா, அப்பாவிடம் எது கேட்டாலும் உடனே வாங்கி தந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் வீட்டையே போர்க்களம் போல ஆக்கிவிடுவாள். 

அடுத்த நாள் கீதாவின் பிறந்தநாள். ரொம்ப நாட்களாகக் கேட்டுக்கொண்டிருந்த விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை அன்றே வாங்கித் தரச்சொல்லி அடம்பிடித்தாள். 

கீதாவின் பெற்றோர் தங்கள் சூழ்நிலையைக் கூறி, அடுத்த மாதம் வாங்கித் தருகிறேன் என்றனர். அதெல்லாம் முடியாது நான் பள்ளிக்கூடத்திற்கு சென்று வீட்டிற்கு வரும்போது நான் கேட்ட கைகடிகாரம் வேண்டும். இல்லாவிட்டால் நடப்பதே வேறு என்று சொல்லிவிட்டுச் சென்றாள். 

கீதாவின் பெற்றோர் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தனர். பள்ளி முடிந்ததும் கீதா வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள். அப்போது திடீரென்று மழை பெய்யத் தொடங்கியது. உடனே பக்கத்தில் இருந்த ஒரு குடிசை ஓரத்தில் ஒதுங்கி நின்றாள். அப்பொழுது அந்த வீட்டிற்குள் இருந்து வந்த சத்தத்தைக் கேட்டாள். 

அப்பா உங்க கால் ரொம்ப அடிப்பட்டிருக்கு. இருந்தும் ஏன் லீவு எடுக்காம வேலைக்குப் போறீங்க? என்று ஒரு சிறுமி பேசுவதை கேட்டாள். நீ தான், எல்லோரும் டூர் போறாங்க நானும் போகனும்னு சொன்னல்ல. நான் லீவு போடமா வேலைக்குப் போனாத்தான் உனக்கு டூர் போக பணம் தர முடியும் என்றார். 

அப்பா நான் டூர் போகலை. அடுத்தமுறை போய்க்கிறேன். நீங்க உங்க காலைப் பார்த்துக்கோங்கப்பா என்றாள். அந்த சிறுமியின் அம்மா, நீங்க ரெஸ்ட் எடுங்க, அவள் டூர் போகட்டும். ஒரு பெரிய வீட்டுல வேலை இருக்குதாம், நான் வேலைக்குப்போறேன். அந்த பணத்துல அவளுக்கு டூர் போகவும், உங்க காலுக்கு வைத்தியம் பார்க்கவும் சரியாக இருக்கும் என்றாள். 

ஒரு சிறுமி தன் அப்பாவின் கஷ்டத்தைப் புரிந்து கொண்டு விட்டுக்கொடுக்கிறாள், அவள் அம்மாவும் குடும்பத்திற்காக வேலைக்கு செல்கிறார். இதை பார்த்த கீதா அவளின் தவறினை உணர்ந்தால் இனி நாமும் அம்மா, அப்பாவுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது என்று நினைத்தால். 

கீதா வீட்டிற்கு வந்ததும், பெற்றோர் கீதா என்று அவர்கள் வாயெடுக்க, அப்பா கைக்கடிகாரம் இப்போ இல்லைன்னா என்ன அடுத்த பிறந்த நாளைக்கு வாங்கித்தாருங்கள் என்று கூறினாள். கீதா பேசியதைக்கேட்டு வியப்படைந்தனர் அவளது பெற்றோர். தனது பிடிவாத குணத்தை மாற்றிக்கொண்டு மகிழ்ச்சியோடு பிறந்த நாளைக் கொண்டாடினாள் கீதா. 

நீதி :
வீட்டின் சூழ்நிலைகளை புரிந்து கொள்ளுதல் வேண்டும்.

இன்றைய செய்திகள்

29.11.22

* அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 'வானவில் மன்றம்' திட்டம்: திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

* சென்னையில் கடும் பனிமூட்டம் நிலவியதால் மஸ்கட், குவைத், புனே விமானங்கள் பெங்களூரு, ஹைராபாத்துக்கு திருப்பிவிடப்பட்டன.

* அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பணிமாறுதல் கலந்தாய்வுக்கு கால அட்டவணை வெளியீடு: நாளை முதல் கலந்தாய்வு தொடங்குகிறது.

* 15 ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்பாட்டில் இருக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் வாகனங்கள் 2023 ஏப்ரல் முதல் அழிக்கப்படும் என்றும் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

* லேசான காய்ச்சல் ஏற்படும்போது ஆன்டிபயாடிக் மருந்துகளை தவிருங்கள்: மருத்துவர்களுக்கு ஐசிஎம்ஆர் அறிவுறுத்தல்.

* அண்டத்தில் உள்ள கருந்துளையிலிருந்து வரும் ஒளிக்கற்றைகளின் எதிரொலிகளை ஒலி வடிவமாக நாசா வெளியிட்டுள்ளது.

* ஃபிஃபா கால்பந்து: மொராக்கோ வெற்றியால் ஆத்திரம்; பெல்ஜியத்தில் கலவரம்.

* இந்திய ஒலிம்பிக் சங்க முதல் பெண் தலைவராக தங்க மங்கை பி.டி. உஷா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

* உலகக்கோப்பை கால்பந்து: ஸ்பெயின் , ஜெர்மனி அணிகளின் ஆட்டம் சமனில் முடிந்தது.

Today's Headlines

* 'Rainbow Forum' Scheme for Government School Students: Launched by Chief Minister Stalin in Trichy.

 *  Due to heavy fog in Chennai, Muscat, Kuwait and Pune flights were diverted to Bangalore and Hyrabad.

*  Time Table Released for Govt School Teachers Transfer Consultation: The consultation starts from tomorrow.

*  Union Road Transport Minister Nitin Gadkari has also said that vehicles of central and state governments which are in use for more than 15 years will be destroyed from April 2023.

*  Avoid antibiotics for mild fever: ICMR guidance for clinicians.

 * NASA has released the echoes of light rays from a black hole in the universe in the form of sound.

*  FIFA Football: Fury over Morocco win;  Riots in Belgium.

 * Thanga Mangai P.D. is the first woman president of the Indian Olympic Association.  Usha is elected unopposed.

*  World Cup Football: The match between Spain and Germany ended in a draw.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்