Wednesday, January 31, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.02.2024

 

கல்பனா சாவ்லா

  

திருக்குறள்


பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : துறவு

குறள்:347

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.

விளக்கம்:

 ஆசைகளைப் பற்றிக்கொண்டு விட முடியாமல் இருப்பவரைத் துன்பங்கள் பற்றிக் கொண்டு விடமாட்டா.



பழமொழி :

Measure thrice before you cut once

ஒரு செயலை செய்யும் முன் பலமுறை சிந்திக்கவும்

இரண்டொழுக்க பண்புகள் :1

1.முயற்சியும், தொடர் பயிற்சியும் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.

2.எனவே நான் ஒவ்வொரு நாளும் தேர்விற்காக கடுமையாக முயற்சி செய்தும் , தொடர்ந்து பல பயிற்சிகளை மேற்கொண்டும் அதிக மதிப்பெண்களை பெறுவதற்கு தன்னை உயர்த்திக் கொள்வேன்.

பொன்மொழி :

வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி, அழகான பசி. ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.

பொது அறிவு :

1. எந்த மாநிலத்தின் பெண்கள் அதிகம் படித்தவர்கள்?

விடை: கேரளா 

2. இந்தியாவின் தேசிய நிறம் எது?

விடை: குங்குமப்பூ நிறம் 

English words & meanings :

 retaliate - பழிவாங்கும்make an attack in return for a similar attack. reputable - honorable மதிப்பிற்குரிய.

ஆரோக்ய வாழ்வு : 

அகத்தி கீரை: தொண்டை புண், தொண்டை வலி ஆகியவை உள்ளவர்கள் அகத்தி கீரையை பச்சையாக மென்று சாப்பிட்டால் விரைவில் தொண்டை பிரச்சனை குணமாகும். அகத்தி கீரை வயிற்றில் உள்ள புழுவை கொள்ளும்,

பிப்ரவரி 01

கல்பனா சாவ்லா அவர்களின் நினைவுநாள் 


கல்பனா சாவ்லா அவர்கள் கரியானா மாநிலத்தில் “கர்மல்” என்ற ஊரில் 1961 ஆம் ஆண்டு ஜீலை மாதம் 03 ம் திகதி பானராஸ்லால் சாவ்லாவுக்கும் சன்நியோகிதா தேவிக்கும் மகளாக பிறந்தார். 

1988 ஆம் ஆண்டு நாசா ஆராய்ச்சி கூடத்தில் இணைந்து விண்வெளி ஓடங்கள் விமானங்களை ஓட்ட கற்றுகொண்டார்.

2003 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சிக்காக அமெரிக்காவின் கெனடி விண்வெளி நிலையத்தில் இருந்து STS 107 எனும் கொலம்பிய விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது.

இதில் கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 பேர் பயணம் செய்தனர். 16 நாள் ஆய்வை முடித்து வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய அவ் விண்கலம் அமெரிக்காவின் ரெக்சாஸ் வான் பரப்பில் வெடித்து சிதறியது.

ஒரு பெரும் கனவை அடைய விடாமுயற்சியோடும் முழுமனதோடும் செயற்பட்டால் வெற்றிகிட்டும் என வாழ்ந்து காட்டிய இவரது வாழ்க்கை பலருக்கும் முன்னுதாரணமாகும்.

நீதிக்கதை

 செய் நன்றி மறவாதே


கானகத்தில் புள்ளிமான் ஒன்று மகிழ்ச்சியாக துள்ளித் திரிந்து கொண்டிருந்தது.

வேடர்கள் சிலர் புள்ளிமானைப் பார்த்து விட்டனர். இன்று எப்படியும், இந்தப் புள்ளிமானை பிடித்து விட வேண்டும் என நினைத்தனர். அவர்களும் மான்குட்டியைப் பிடிக்கும்

நோக்கில் தம்மை நோக்கித் தான் வருகிறார்கள் என்றும் தெளிவாகப் புரிந்து கொண்டது.

நாம் அவர்களின் பிடியில் சிக்கிக் கொள்ளாமல் எப்படியும் தப்பித்துக் கொள்ள வேண்டும் என நினைத்தது. சிறிதும் தாமதியாமல் நான்கு கால் பாய்ச்சலில் துள்ளிக் குதித்து ஓடியது. வேடர்களும் விடுவதாய் இல்லை. தொடர்ந்து பின்பற்றி ஓடி வந்தார்கள்.

நீண்ட தூரம் ஓடி வந்துவிட்டது மான்குட்டி. களைப்பு மேலிட மேலும் அதனால் ஓடவும் முடியவில்லை. சற்று இளைப்பாற்றிச் சென்றால் தான் நல்லது எனவும் நினைத்தது.

அதே போல் நின்ற இடத்திலேயே சற்று இளைப்பாறியது. ஆட்கள் வரும் சப்தம் கேட்டு, எழுந்து பார்த்தது. அதே வேடர்கள் தம்மை விடுவதாக இல்லை போலிருக்கிறது.

தொடர்ந்து அயராமல் விரட்டிக் கொண்டும் வந்து விட்டார்கள். பாவம் மான் குட்டிக்குத் தூக்கி வாரிப் போட்டது. அவர்கள் சமீபத்தில் வந்து விட்டார்களே "எப்படித் தப்புவது அவர்களிடம்" என்றும் யோசித்தது.

அதன் அருகில் தாவரங்கள் பசுமையால் வளர்ந்து புதர் போல் மண்டிக் கிடந்தன. அப்புதருக்குள் நுழைந்து அமைதியாக ஒளிந்து கொண்டது. புதருக்குள் ஒளிந்து

கொண்ட மான் குட்டி அசைவற்று அமைதியாக நின்று கொண்டிருந்தது.

அதன் அருகில் ஓடி வந்த வேடர்கள், தொடர்ந்து மானைத் தேடி ஓடிக் கொண்டு இருந்தனர். அவர்கள் அவ்விடத்தை விட்டுச் சென்றதும் தான், மானுக்கு நிம்மதி வந்தது. தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டோம் என மகிழ்ச்சி அடைந்தது. துள்ளிக் குதித்து புதருக்கு வெளியே வந்தது.

புள்ளிமான் குட்டி ஏற்கனவே பசியோடு இருந்தது. அச்சமயத்தில் தான் வேடர்களைப் பார்த்துவிட்டு தலை தெறிக்கவும் ஓடி வந்தது. எனவே அதன் பசிக் களைப்பு நீங்க, அந்தப் புதரிலுள்ள பசுமையான இலைகளையே ருசித்து மேய்ந்து விட்டது.

சற்று நேரத்தில் மானைக் காண முடியாமல், வேடர்கள் வந்த பாதையிலேயே திரும்பினார்கள். வேடர்கள் பார்வையில் படக்கூடாதென, மீண்டும் புதருக்குள் ஓடி ஒளிந்தது மான்குட்டி.

ஆனால், இப்பொழுது அப்புதர் மான்குட்டிக்கு உதவவில்லை. காரணம் புதரில் இருந்த அடர்ந்த பசுமையான இலைகளையெல்லாம் தான், அது தின்று விட்டதே. எனவே, மான்குட்டியை இலைகளால் மறைக்க முடியவில்லை.

அதன் அருகில் வந்த வேடர்கள் கண்களில்

மான்குட்டி தெரிந்தது. அதனால் உடனே தப்பித்து ஓட முடியவில்லை. இதனால், வேடர்களிடம் மாட்டிக் கொண்டு மான்குட்டி விழித்தது. "நம் அவசர புத்தியால் தானே, நம் உயிரைக் காப்பாற்றிய இலைகளைத் தின்று விட்டோம்."

"நன்றி மறந்து செய்த செயலுக்கு ஆண்டவன் தண்டனை தந்து விட்டாரே". என எண்ணி கண்ணீர் வடித்தது.


நீதி : செய் நன்றி மறந்தவர்கள் மிருகங்களை விட மோசமானவர்கள்.

இன்றைய செய்திகள்

01.02.2024

*குழந்தைகள் மதிய உணவு திட்டத்திற்கு கூடுதல் நிதி- முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவு.

*ஜெர்மனியில் இன்று முதல் நான்கு நாள் வேலை திட்டம் அமலுக்கு வருகிறது. உடல் மற்றும் மனநிலை ஆரோக்கியம் அடைவதோடு பணியாளர்களின் செயல் திறனும் அதிகரிக்கும் என ஜெர்மனி நாடு எதிர்பார்க்கிறது.

*உலக அரங்கில் இந்தியா கம்பீரமான வளர்ச்சி பெற்று உள்ளது - ஜனாதிபதி பெருமிதம்.

*தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் வருகிற 2ஆம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு.

*கேலோ இந்தியா நிறைவு: 97 பதக்கங்களை குவித்து தமிழக அணி இரண்டாவது இடத்தை பிடித்து சாதனை.

Today's Headlines

*Additional Funding for Children's Mid Day Scheme- Chief Minister M K Stalin's order.

 *The four-day work plan comes into effect in Germany from today.  Germany expects that this will improve the employers 's  physical and mental health and thus by their efficiency .

 * India is growing majestically on the world stage - President.

 * Chance of mild rain in South Tamil Nadu and Delta districts till 2nd feb

 * Khelo India Completed: Tamil Nadu team achieved second place by bagging 97 medals.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Tuesday, January 30, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.01.2024

    

சார்மினார்

திருக்குறள்

பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : துறவு

குறள்:346

யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும்

விளக்கம்:

 யான், எனது என்கின்ற ஆணவத்தை அறவே விலக்கி விட்டவன், வான்புகழையும் மிஞ்சுகின்ற உலகப் புகழுக்கு உரியவனாவான்.

பழமொழி :

Many strokes fell mighty oaks

சிறு உளி மலையைப் பிளக்கும்

இரண்டொழுக்க பண்புகள் :1

1.முயற்சியும், தொடர் பயிற்சியும் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.

2.எனவே நான் ஒவ்வொரு நாளும் தேர்விற்காக கடுமையாக முயற்சி செய்தும் , தொடர்ந்து பல பயிற்சிகளை மேற்கொண்டும் அதிக மதிப்பெண்களை பெறுவதற்கு தன்னை உயர்த்திக் கொள்வேன்.

பொன்மொழி :

உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.

பொது அறிவு :

1. இந்தியாவின் தேசிய வாக்கியம் எது?

விடை: சத்யமேவ ஜெயதே 

2. சார்மினார் இந்தியாவின் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

விடை: தெலுங்கானா

English words & meanings :

 quagmire-a soft boggy area of land that gives way underfoot.புதைகுழி. qualm- an uneasy feeling of doubt, worry, or fear, பதற்றமடைகிறது.

ஆரோக்ய வாழ்வு : 

அகத்தி கீரை: அகத்தி கீரையில் சுண்ணாம்பு சத்து அதிகமாக இருப்பதால், அது பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. இலைகளை உலர்த்தி பொடி செய்து காலை,  மாலை இருவேளை பாலில் அரைக் கரண்டி அலவு கலந்து குடித்து வந்தால் வயிற்றுவலி குணமாகும்.

நீதிக்கதை

 வால் இல்லாத நரி


காட்டில் உணவு தேடிக் கொண்டிருந்தது நரி.

எங்கு தேடியும் நரிக்கு உணவு கிடைக்கவில்லை. பசியோ மிகவும் வாட்டியது.

இந்த வேளை உணவு கிடைக்கவில்லை என்றால் மயக்கம் வந்து விடும் போல் இருந்தது நரிக்கு. அலைந்து திரிந்து ஓரிடம் வந்து சேர்ந்தது.

வேடன் ஒருவன் காட்டு மிருகத்தைப் பிடிப்பதற்காக, பொறி வைத்து இருந்தான். பொறியில் இறைச்சியும் வைத்திருந்தான். பொறியில் இருந்த இறைச்சியை பார்த்ததும் நரி வாயில் நீர் ஊறியது.

எப்படியும் இறைச்சியை சாப்பிட்டாக வேண்டும் என்று முடிவு செய்தது. அதே சமயம் பொறியில் தானும் சிக்கிக் கொள்ளக் கூடாது எனவும் நினைத்தது.

மிகவும் கவனமுடன் இறைச்சியை எடுக்க முயற்சித்தது. இறைச்சியையும் எடுத்து விட்டது. பாவம் அதன் வால் மட்டும் பொறியில் மாட்டிக் கொண்டது.

பசி மயக்கம் தீர, முதலில் இறைச்சியைச் சாப்பிட்டது வாலைக் காப்பாற்ற பல வகையிலும் முயற்சி செய்தது அதனால் பலன் ஒன்றும் இல்லை. அதனால் வாலைக் கழட்ட முடியவில்லை, என்ன ஆனாலும் சரி, இப்படியே நின்று கொண்டு இருந்தால், வேடன் வந்து

நம்மைப் பிடித்துக் கொண்டு சென்று விடுவான், எப்படியும் நம் உயிரை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்" என முடிவு செய்தது.

தன் பலம் கொண்ட மட்டும், பொறியில் இருந்து தன்னை விடுவிக்க முயற்சித்தது. முடிவில் வால் அறுந்து போனது. வால் மட்டும் பொறியில் சிக்கிக் கொண்டது. உயிர் பிழைத்தால் போதும் என நினைத்து, நரி காட்டுக்குள் ஓடியது.

அப்படி ஓடும் பொழுது, வலி தாங்க முடியாமல் ஊளையிட்டவாறே ஓடியது. அதன் சத்தத்தைக் கேட்டு மற்ற நரிகளும் கூடிவிட்டன.

வால் இல்லா நரியைப் பார்த்து மற்ற நரிகள் யாவும் கேலி செய்து சிரித்தன.

வால் இழந்த நரி அதையெல்லாம் வெளியில் காட்டிக் கொள்ளாமல் சிரித்தது.

கூட்டத்தில் இருந்த பெரிய நரி கேட்டது, "இந்த நிலையிலுமா சிரிக்கிறாய், எப்படி உன்னால் சிரிக்க முடிகிறது?" 

"நான் இப்பொழுது தான் அழகாக இருக்கிறேன்" என்றதும், மற்ற நரிகள் சிரித்தன.

"யார் அப்படி சொன்னது?" என்றது பெரிய நரி.

அதற்கு வாலை இழந்த நரி, "யாரும் கூற வேண்டாம். இந்த வால் இருக்கும் வரை என் அழகைக் கெடுத்து விட்டது. இப்பொழுது தான் என் அழகை நான் உணர்கிறேன்" என்றவாறு கூறியது.

பெரிய நரி,"முட்டாள் நரியே, எப்படியோ உன் வாலை இழந்து விட்டாய். அதனால் சமாளித்தபடியே இப்படிக் கூறுகிறாய். வால் இல்லா மொட்டை நரி எப்படி இருப்பாய் என்று எங்களுக்கு தானே தெரியும்" என்றதும் அனைத்தும் கேலியாகச் சிரித்தன.

இனியும் அங்கு நின்று அவமானப்பட விரும்பாமல் நரி காட்டினுள் ஓடி விட்டது.

நீதி : தனக்கு ஏற்பட்ட குறை பிறருக்கும் ஏற்பட வேண்டுமென நினைப்பவன் முட்டாள், பைத்தியக்காரன்.

இன்றைய செய்திகள்

31.01.2024

*நாளை முதல் சென்னையில் இருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவை.

*'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டம் அமலுக்கு வருகிறது. கலெக்டர்கள் 24 மணி நேரம் பணியாற்ற வலியுறுத்தல்.

*ஸ்பெயின் நாடு சென்றுள்ள முதல்வர் மு க ஸ்டாலின் தமிழகத்தில் முதலீடு செய்ய வாருங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

*சென்னையில் 1ஆம் தேதி மாபெரும் மாணவர் பேரணி உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு.

*கேலோ இந்தியா போட்டி:
டென்னிஸ் ஆடவர் பிரிவில் தமிழ்நாட்டு வீரர்களான பிரணவ், மகாலிங்கம் - மகாராஷ்டிரா அணியை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது.

Today's Headlines

*Direct flight service from Chennai to Ayodhya from tomorrow.

 * 'Ungalai thedi ungal Ooril" scheme is going to be commenced soon.  Collectors are asked to work 24 hours.

 *Chief Minister M. K. Stalin, who has visited Spain, has invited people to come and invest in Tamil Nadu.

 *There will be a huge students rally on 1st at Chennai. Minister  Udhayanidhi Stalin will participate in the rally.

 *Khelo India Tournament:
 Tamil Nadu players Pranav, Mahalingam won the gold medal by defeating the Maharashtra team in the tennis men's category.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Monday, January 29, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.01.2024

மகாத்மா காந்தி 

   

திருக்குறள்

பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : துறவு

குறள்:344

இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து.

விளக்கம்:

 உடைமை ஏதும் இல்லாதிருப்பது துறவின் இயல்பு. உடைமைகளை வைத்திருப்பதோ ஆசை என்னும் மயக்கத்தை மறுபடியும் தரும்.


பழமொழி :

Many hands make work light

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

இரண்டொழுக்க பண்புகள் :1

1.முயற்சியும், தொடர் பயிற்சியும் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.

2.எனவே நான் ஒவ்வொரு நாளும் தேர்விற்காக கடுமையாக முயற்சி செய்தும் , தொடர்ந்து பல பயிற்சிகளை மேற்கொண்டும் அதிக மதிப்பெண்களை பெறுவதற்கு தன்னை உயர்த்திக் கொள்வேன்.

பொன்மொழி :

ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்ற உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌ம் இ‌ல்லா‌‌வி‌ட்டா‌ல் வா‌ழ்‌க்கை எ‌ன்பது சும‌க்க முடியாத பெ‌ரிய சுமையா‌கி‌யிரு‌க்கு‌ம்.

பொது அறிவு :

1.அரிசி நாடு என்று அழைக்கப்படுவது எது?

விடை: தாய்லாந்து 


2. தமிழ்நாட்டில் அகஸ்தியர் நீர்வீழ்ச்சி எங்கு உள்ளது?

விடை : பாபநாசம்

English words & meanings :

 Gang.  கூட்டுக்குழு
Gap.    பிளவு,,கீறல்
Gasp.  மூச்சுத்திணறல்
Gel.     கூழ் போன்ற கரைசல்
Gaze கூர்ந்து பார்த்தல்

ஆரோக்ய வாழ்வு : 

அகத்தி கீரை: அகத்திக் கீரையை சாப்பிடுபவர்களுக்கு பித்த சம்பந்தமான நோய்கள் நீங்குவதுடன் உணவு எளிதில் ஜீரணமாகும். வாரத்திற்கு ஒரு முறையாவது அகத்திக்  கீரை சாப்பிட்டு வர, உடல் உஷ்ணம் குறைந்து கண்கள் குளிர்ச்சி பெரும்.

ஜனவரி 30

மோகன்தாசு கரம்சந்த் காந்தி  அவர்களின் நினைவுநாள் 


மோகன்தாசு கரம்சந்த் காந்தி (ஆங்கிலம்Mohandas Karamchand Gandhiகுசராத்திમોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948) என்பவர் ஒரு இந்திய வழக்குறைஞரும், அன்னிய ஆட்சியை எதிர்த்த தேசியவாதியும், அரசியல் அறனாளரும் ஆவார். இவர் மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை[1] என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது. (ஆங்கிலம்Mohandas Karamchand Gandhiகுசராத்திમોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948) என்பவர் ஒரு இந்திய வழக்குறைஞரும், அன்னிய ஆட்சியை எதிர்த்த தேசியவாதியும், அரசியல் அறனாளரும் ஆவார். இவர் மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை[1] என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.

நீதிக்கதை

 எதிரிக்கு இடம் தராதே


மரத்தில் பெரிய பருந்து ஒன்று அமர்ந்திருந்தது. வயதும் ஆகிவிட்டதால், அதனால் முன்னர் போல் வேகமாகப் பறந்து, சிறிய பறவைகளைப் பிடிக்கவில்லை.

இதனால் யோசனை செய்தது. மனதில் ஒரு நல்லவழி தோன்றியது. பறவைகள் அப்பகுதியில் வரும் நேரத்தில் அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தது.

அப்பொழுது புறாக்கூட்டம் ஒன்று பறந்து வந்து . அங்கு அமர்ந்தன. புறாக்கள் அசைவற்று அமர்ந்திருந்த பருந்தினைப் பார்த்தன.

பருந்தின் அருகில் ஒரு புறா சென்றது."ஏன் இப்படி அமைதியாக இருக்கிறாய்" எனக் கேட்டது.

"நான் நிறைய பாவங்கள் செய்து விட்டேன். இனி மேல் பாவங்களே செய்ய மாட்டேன் என ஆண்டவனிடம் கூறி மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருக்கின்றேன்" என்றபடி கண்ணீர் விட்டது.

அதன் பேச்சையும், கண்ணீரையும் உண்மை தான் என நம்பிவிட்டன. புறாக்கள் அனைத்தும் அதற்காக பரிதாபப்பட்டன. அவைகளின் மனம் இரக்கப்பட்டன.

"நான் செய்த பாவங்களுக்கு பரிகாரமாய் உங்களுடன் இருந்து, எப்பொழுதும் உங்களுக்கு காவலாய் இருப்பேன்" என்றதும் புறாக்கள் மகிழ்ச்சி அடைந்தன.

பருந்து சொல்வதும் உண்மை தான் என நம்பின.. வயதான காலத்தில் பருந்து திருந்தி இருக்கலாம். எனவே அதை நாம் ஏற்றுக் கொள்வதே நன்மை எனவும் முடிவு செய்தன.

அனைத்தும் ஒன்று கூடி முடிவு செய்தததினால், பருந்தை தம் இடத்திற்கு அழைத்துச் சென்றன.

பருந்து மிகவும் மகிழ்ச்சியுடன் புறாக்களின் இருப்பிடம் அடைந்தது. அங்கு இருந்த நிறையப் புறாக்களைக் கண்டதும், தனக்குள் ஒரு முடிவு எடுத்தது.

"புறாக்களே, உங்களிடம் நான் ஒன்று கூறவும் மறந்து விட்டேன்."

"என்ன அது சொல்" என்றன.

"உங்கள் சமுதாயத்துக்கு நான் காவலாக இருப்பேன் என்றாலும், என் வயிற்றுப் பசிக்கு என்ன செய்யப் போகிறீர்கள், நீங்கள் சாப்பிடும் தானியங்களை நான் சாப்பிட மாட்டேனே" எனக் கூறிச் சிரித்தது.

"அதற்கு எங்களை என்ன செய்யச் சொல்கிறாய்"

"பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டாம், ஒரு வேளைக்கு ஒரு புறா மட்டும் தாருங்கள், அதைச் சாப்பிட்டு பசியாறிக் கொள்கிறேன்."

பருந்து இப்படிக் கூறியதும் தான், தாங்கள் அவசரப் பட்டு தவறு செய்து விட்டோம் என உணர்ந்தன.

நீதி : பகைவனுக்கு இடம் கொடுத்தால் உள்ளதும் போய் விடும்.

இன்றைய செய்திகள்

30.01.2024

*மாநகர பஸ் டிக்கெட்டுகளுக்கு ஆன்லைனில் பணம் செலுத்தும் வசதி அறிமுகம்.

*சென்னையில் இருந்து மீண்டும் ஹாங்காங், மொரிஷியஸ்க்கு நேரடி விமான சேவை.

*கூடங்குளம் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்.

Today's Headlines: 

*Introduction of online payment facility for city bus tickets.

 * Direct flights from Chennai to Hong Kong and Mauritius started again.

 * Shutdown of power generation at Kudankulam 's first nuclear reactor.

 * Our chief minister M.K. Stalin was in tour to Europe  for first time since he took office as CM 

 * Tamil Nadu won gold in kelo Indian Games Volleyball.
 Prepared by

Covai women ICT_போதிமரம்