Monday, February 28, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 01.03.22

  திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்: நட்பியல்

அதிகாரம்: தீ நட்பு

குறள் எண்: 817

குறள்:
நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்

பொருள்:
சிரித்துப் பேசி நடிப்பவர்களின் நட்பைக் காட்டிலும் பகைவர்களால் ஏற்படும் துன்பம் பத்துக்கோடி மடங்கு நன்மையானது என்று கருதப்படும்

பழமொழி :

Try and try again you will succeed at last.


அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1வார்த்தையால் பேசுவதை விட..வாழ்ந்து காட்டுவதே சிறப்பு எனவே சிறப்பான வாழ்க்கை வாழ முயற்சிப்பேன் 

2. எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.

பொன்மொழி :

நம்முடன் வாழ்வோரை
புரிந்து கொள்வதற்கு
நம்மை முதலில் புரிந்து
கொள்ள வேண்டும்...அன்னை தெரேசா

பொது அறிவு :

1.நம் வாழ்நாள் முழுதும் வளரும் உடலின் பாகங்கள் எவை? 

மூக்கு மற்றும் காது. 

2. ஆழ்கடலில் சுவாசிக்க பயன்படும் வாயுக்கலவை எது? 

ஆக்சிஜன் - ஹீலியம்.

English words & meanings :

Swamped - very busy, மிகவும் வேலையாக,

 Luminous - bright, ஒளிரக்கூடிய

ஆரோக்ய வாழ்வு :

உலர் திராட்சையின் பயன்கள்: தினசரி உணவுக்குப் பின்னர் காலை, மாலையில் 25 உலர் திராட்சைப்பழங்களை தொடர்ந்து ஏழு நாட்கள் சாப்பிட்டால், மூலநோய் குணமாகும். பெண்களின் மாதவிடாய் கோளாறுகள், இதய நோய் தீரும். இதிலுள்ள கால்சியம் சத்து, எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.




கணினி யுகம் :

Alt + F - File menu options in current program. 

Alt + E - Edit options in current program.

மார்ச் 01


பாகுபாடுகள் ஒழிப்பு நாள்

பாகுபாடுகள் ஒழிப்பு நாள் (Zero Discrimination Day)  என்பது ஐநா மற்றும் பிற சர்வதேச அமைப்புகளால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாள் ஆகும். உலக நாடுகளில் சட்டத்திலும், நடைமுறையிலும்  மனித சமுதாயத்தில் தொடர்கிற பாகுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அறைகூவல் விடுக்கும் நாளாக இது உள்ளது.  இந்த நாள் 2014 மார்ச் 1 அன்று முதன்முதலில் கொண்டாடப்பட்டது. இதை   பெய்ஜிங்கில் ஒரு முக்கிய நிகழ்வுடன் அந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி ஐநா எய்ட்ஸ் விழிப்புணர்வு/கட்டுப்பாடு அமைப்பின் (யுனெய்ட்ஸ்) நிறைவேற்று இயக்குனரான மைக்கேல் சிடிப் என்பவரால் தொடங்கப்பட்டது

நீதிக்கதை


சுயநலம்

ஒரு ஊரில் ராமசாமி என்ற ஒரு செல்வந்தர் வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் சுயநலமானவர். அவர் ஊருக்குச் சென்று திரும்பும் வழியில் 30 தங்க நாணயங்கள் இருந்த பையை தொலைத்துவிட்டார். அந்த செல்வந்தர் தனது நண்பர் குருவிடம் நடந்ததை கூறி வருத்தப்பட்டார். 

சில நாட்கள் கழித்து குரு ஊரிலிருந்து திரும்பும்போது வழியில் ஒரு பையில் தங்க நாணயங்கள் இருப்பதை கண்டார். அந்த பை ராமசாமியினுடையதாக இருக்கலாம் எனக்கருதி, அதை குரு அவரிடம் கொடுத்தார். 

குருவிடமிருந்து தங்க நாணயங்களை பெற்றுக்கொண்ட ராமசாமி, இதை வைத்து ஒரு திட்டம் தீட்ட நினைத்தார். அவன் குருவிடம், நான் இந்த பையில் 40 தங்க நாணயங்களை வைத்திருந்தேன். இந்த பையில் இப்போது 30 தங்க நாணயங்களே உள்ளன, அதனால் மீதமிருக்கும் 10 நாணயங்களை திருப்பி தரவேண்டுமென குருவிடம் கூறினார். 

குருவோ மிகவும் நல்லவர். பிறரின் பொருட்களுக்கு ஆசைப்படாத அவரது குணத்தை பற்றி அனைவருக்கும் தெரியும். 

நண்பர்கள் இருவரும் ஊரில் உள்ள தலைவரிடம் சென்றனர். விவரத்தை கேட்ட ஊர் தலைவர், ராமசாமியிடம், நீ எவ்வளவு தங்க நாணயங்களை தொலைத்தாய்? என்று கேட்டார். அதற்கு அவர் 50 தங்க நாணயங்கள் என்றார். குருவை பார்த்து நீ எவ்வளவு தங்க நாணயங்களை கண்டுபிடித்தாய்?என்று கேட்டார். அதற்கு அவர் 30 தங்க நாணயங்கள் என்றார். 

ஊர்த்தலைவர் ராமசாமியை பார்த்து, நீ தொலைத் திருப்பதோ 50 தங்க நாணயங்கள். ஆனால் குரு கண்டறிந்திருப்பதோ வெறும் 40 தங்க நாணயங்கள். எனவே இது உன்னுடையதாக இருக்காது. இனிமேல் வேறுயாராவது 40 தங்க நாணயங்களை கொண்டுவந்தால் உனக்கு சொல்லி அனுப்புகிறேன். இப்போது நீ கிளம்பலாம் என்றார். 

தலைவர் குருவைப்பார்த்து நீ கண்டுபிடித்திருப்பது ராமசாமியின் தங்க நாணயங்கள் கிடையாது, எனவே இதை நீயே வைத்துகொள் என்றார். 

தான் கூறிய பொய்யால் தனக்கு நேர்ந்த சங்கடத்தை எண்ணி வருத்தபட்டார். தனது தவறை உணர்ந்த அவர், இனி சுயமில்லாத நேர்மையான மனிதராக வாழவேண்டும் என முடிவுசெய்தார்.


இன்றைய செய்திகள்

01.03.22

◆கடுமையான போர் சூழலில் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழக மாணவர்கள் 5 பேர் சென்னை வந்தனர்: விமான நிலையத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார்.

◆திருப்பத்தூர் அருகே 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

◆உக்ரைனில் இருந்து 1,500 இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர்: 23 மாணவ, மாணவிகள் தமிழகம் வந்து சேர்ந்தனர்.

◆மாணவர்களை பத்திரமாக மீட்டு வருவதே இந்தியாவின் முன்னுரிமையாக உள்ளது, அதேசமயம் போரை நிறுத்துவதும், ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுப்பதும் எங்கள் முன்னுரிமையாக உள்ளது என இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகோர் பொலிகா கூறியுள்ளார்.

◆பொருளாதாரத் தடைகள், ஸ்விஃப்ட்டில் இருந்து விலக்கி வைப்பு, ரஷ்யன் சென்ட்ரல் பேங்கை முடக்கும் முயற்சிகளால் ரஷ்ய நாணயமான ரூபிளின் மதிப்பு வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது.

◆துபாய் ஓபன் சர்வதேச டென்னிசில் ரஷிய வீரர் ஆந்த்ரே ரூப்லெவ் மகுடம் சூடினார்.

◆சர்வதேச குத்துச்சண்டை: இந்திய வீராங்கனைகள் நிஹாத், நித்துவுக்கு தங்கப்பதக்கம்.

Today's Headlines


◆ In the severe wartime, 5 Tamil students who were saved from Ukraine reached Chennai. They were received by minister Senji Mustan.

◆Near Tiruppaththur 14th century stones were found.

◆From Ukraine 1,500 Indian students were returned among them were 23 Tamil students.
 
◆We are much concerned about the safety of Indian students at the same time we are giving more priority to give pressure to Russia to stop the war.....says Ukraine Ambassador for India.

◆Banning in the economy, abandoned in SWIFT, and also trying to lock out the Russian Federal Bank all these things made a historical loss in the rate of Russian Ruple.

◆ In Dubai international open tennis Russian Player Anthre Rooplev won the match 

◆ In international boxing Indian players, Nihath and Niththu won the gold medal
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Sunday, February 27, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 28.02.22

  திருக்குறள் :

குறள் - 816, 
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும். 

பொருள் - அறிவில்லாதவனிடம் நெருங்கிய நட்புக் கொண்டிருப்பதை விட, அறிவுடைய ஒருவரிடம் பகை கொண்டிருப்பது கோடி மடங்கு மேலானதாகும்

பழமொழி :

Talking more is not wisdom.


அதிகப் பேச்சு அறிவுடைமை அல்ல.

இரண்டொழுக்க பண்புகள் :

1வார்த்தையால் பேசுவதை விட..வாழ்ந்து காட்டுவதே சிறப்பு எனவே சிறப்பான வாழ்க்கை வாழ முயற்சிப்பேன் 

2. எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.

பொன்மொழி :

தன்னம்பிக்கை இல்லாதவன்
வெற்றி பெறுவது கடினம்..
அசைக்க முடியாத
தன்னம்பிக்கை கொண்டவன்
வீழ்வது அரிது....அம்பேத்கர்

பொது அறிவு :

1.உலகின் பெரிய ரயில்நிலையம் எது? 

நியூயார்க் (கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல்). 

2. எந்த நாடு ஆண் - பெண் இருவருக்கும் சம ஊதியம் வழங்க சட்டம் இயற்றியுள்ளது?

 ஐஸ்லாந்து.

English words & meanings :

Brief - short, சுருக்கமாக, 

caution - careful - கவனமாக

ஆரோக்ய வாழ்வு :

தினமும் 8- 10 பாதாம் சாப்பிடுவதால் அதில் உள்ள அமினோ அமிலம் மூளையின் செயல்திறனை அதிகரிக்கச் செய்யும். பாதாமை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து காலையில் தோலை நீக்கிவிட்டு, தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை சீராக இருக்கும். பாதாமின் தோலில் உள்ள டேமின் என்ற வேதிப்பொருள், செரிமானத்தை பாதிக்கும் என்பதால் தோலுடன் உண்ண வேண்டாம்.

கணினி யுகம் :

Ctrl+shift+> - increase the font size, 

ctrl+shift +< - decrease the font size

பிப்ரவரி 28


தேசிய அறிவியல் நாள்




தேசிய அறிவியல் நாள் (National Science Dayஇந்தியாவில் பெப்ரவரி 28 ஆம் நாளில் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

தேசத்தலைவர்கள் மற்றும் தியாகிகளைக் கொண்டாடுவது போல அறிவியல் மேதைகளும் போற்றப்பட வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் 1987 - ஆம் ஆண்டு இந்தத் தேசிய அறிவியல் நாள் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிக்கோளை அடிப்படையாக கொண்டு இந்நாள் கொண்டாடப்படுகிறது.இந்திய மண்ணில் பிறந்து உலகம் போற்றும் வகையில் பல அரிய கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து வெளியிட்டவரும் சிறந்த இயற்பியல் மேதையுமான சர். சி. வி ராமன் தன்னுடைய நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28 ம் தேதி தேசிய அறிவியல் தினம் என அறிவிக்கப்பட்டது.[3]

சர். சி. வி. இராமன் தனது புகழ்பெற்ற ராமன் விளைவை (Raman Effect) இந்நாளிலேயே கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பு உலகளாவிய பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்ததுடன் உயரிய விருதான நோபல் பரிசும் (1930) இவருக்கு கிடைத்தது. அந்நிகழ்வின் நினைவாகவும் அறிவியல் என்பது அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடும் இந்திய அரசு இந்நாளைத் தேசிய அறிவியல் நாளாகப் பிரகடனப்படுத்தியது.

நீதிக்கதை


வளைந்த நாணல்

ஒரு நாள் தென்றல் காற்று வீசியது. தோட்டத்திலுள்ள மரங்கள், புற்களையும், நாணலையும் பார்த்து, சிறு தென்றல் காற்று வீசியதற்கே பலமற்றுப் போய் அசைந்து கொடுக்கிறாயே? என்று ஏளனமாகப் பேசி சிரித்தன. 

அடுத்தநாளே தோட்டத்தில் பலத்த சூறைக்காற்று வீசியது. சூறைக்காற்று பலமாக வீசியதால் தோட்டத்தில் இருந்த மரங்கள் ஒவ்வொன்றாக முறிந்து விழுந்தன. அப்போது நாணல், மரங்களே! நீங்களும் என்னைப் போல் வளைந்து கொடுக்கப் பழகியிருந்தால் இப்படி வேரோடு சாய்ந்திருக்க மாட்டீர்கள்!

எங்களைப் பார்த்து ஏளனமாக கேலி பேசினீர்களே! நாங்களும் உபயோகமானவர்கள் தான். நாங்கள் ஆற்றுநீர் கரையை அரிக்காமல் தடுப்பதால்தான், நீங்களெல்லாம் கம்பீரமாக நிற்க முடிகிறது. இல்லையேல் கம்பீரமாக நிற்க முடியாது. அதேபோல் உருவத்தில் சிறியதாக இருக்கும் எறும்பு, தும்பிக்கைக்குள் நுழைந்து கடித்தால் உருவத்தில் பெரிய யானையாலும் வலியை தாங்கிக் கொள்ள முடியாது என்றது.

நாணல் பேசியதை கேட்டு மரங்களால் எதுவுமே பேச முடியவில்லை. அப்போதுதான் மரங்கள் உருவத்தில் சிறியதாக இருந்த நாணலைப் பார்த்து அலட்சியமாகப் பேசியது தவறு என்பதைப் புரிந்து கொண்டன.

நீதி :
ஒருவரையும் ஏளனமாகப் பேசக்கூடாது.

இன்றைய செய்திகள்

28.02.22

✔கல்வியில் சிறந்த மாநிலம் என்ற பட்டம் போதாது, ‘உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கல்வியில் சிறந்த தமிழகம்’ என்ற பட்டத்தைப் பெறவேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

✔ மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடலில் இந்தியாவின் முதல் கடல் பசு பாதுகாப்பகம்: ரூ.5 கோடி செலவில் அமைக்க தமிழக அரசு அனுமதி.

✔ ரூ.12,000 கோடி வருவாயைக் கடந்த பதிவுத்துறைக்கு, தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்  பாராட்டு தெரிவித்துள்ளார்.

✔ உக்ரைன் நகரங்களுக்குள் நுழைந்து ரஷ்ய படைகள் தாக்குதலை துரிதப்படுத்தி உள்ள நிலையில் கீவ், கார்கிவ் நகரங்களில் இருக்கும் இந்தியர்கள் வெளியே வரவேண்டாம் என உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

✔ சர்க்கரை, உப்பு அதிகம் உள்ள உணவுகளுக்கு கூடுதல் வரி: நிதி ஆயோக் ஆலோசனை.

✔ ரஷ்ய ராணுவ நடவடிக்கை 4-வது நாளை எட்டியுள்ள நிலையில், போரை நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு அறிவுறுத்த வேண்டி உக்ரைன் சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.

✔ பல்கேரியாவில் நடந்து வரும் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்துள்ளது.

✔ கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான கார்பந்தயப் போட்டியில் சென்னை வீரர் முதலிடம் பிடித்தார்.

Today's Headlines

 ✔ Chief Minister MK Stalin has advised that the title of 'Best State in Education' is not enough, we need to get the title  'A state Best in Higher Education and Research Education' also. 

 ✔ India's first sea cow sanctuary in the Gulf of Mannar, in the Bagh Strait, approved by the Government of Tamil Nadu at a cost of Rs 5 crore.

 ✔ The Minister of Commercial Taxes and Registration of Tamil Nadu has applauded the registration department for its revenue of Rs 12,000 crore.

 ✔ The Indian embassy in Ukraine has advised Indians in Kyiv and Kharkiv not to leave Ukrainian cities as Russian forces intensify their fight.

 ✔ The extra tax on foods high in sugar and salt: Financial ayog advice.

 ✔ Ukraine has appealed to the International Court of Justice (ICJ) to instruct Russia to end the war as Russian military action reaches its 4th day.

 ✔ India wins bronze at an international boxing tournament in Bulgaria

 ✔ The Chennai player took the first place in the national level car race held in Coimbatore.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Friday, February 25, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 26.02.22

 திருக்குறள் :

பால் : பொருட்பால், 

இயல் : நட்பியல், 

அதிகாரம்:தீ நட்பு 

குறள் எண்:815.

செய்தேமம் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று. 

பொருள்:
காவல் செய்து வைத்தாலும் காவல் ஆகாத கீழ்மக்களின் தீய நட்பு, ஒருவனுக்கு ஏற்படுவதைவிட ஏற்படாமலிருப்பதே நன்மையாகும்.

பழமொழி :

What is one man's meal is another man's poison.


பூனைக்கு கொண்டாட்டம், எலிக்கு திண்டாட்டம்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. நிலையான வெற்றிக்கு எந்த குறுக்கு வழியும் கிடையாது எனவே நேர் வழியில் தான் என் வாழ்க்கை அமைத்துக் கொள்வேன். 

2. என் வாழ்வில் நடைபெறும் காரியங்கள் அனைத்தும் நன்மைக்கே.எனவே எதைக் குறித்தும் கலங்காமல் முன்னேறி செல்வேன்

பொன்மொழி :

வெற்றி எனும் உயரத்தை
அடைய ஏணியாக
இருக்கும் ஆயுதம் தான்
தன்னம்பிக்கை அதை
எப்போதும் வளர்த்துக் கொள்.....சுவாமி விவேகானந்தர்

பொது அறிவு :

1. இந்திய குடியரசின் அதிகாரப்பூர்வ மொழிகள் எத்தனை? 

22 மொழிகள். 

2. 1 டிகிரி தீர்க்க ரேகையைக் கடக்க பூமி எடுத்துக்கொள்ளும் நேரம் எவ்வளவு? 

4 நிமிடம்.

English words & meanings :

Astonished - surprised, மிகுந்த ஆச்சர்யம், 

narrate - tell, சொல்லுதல்

ஆரோக்ய வாழ்வு :

செவ்வாழைப்பழம் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கும். கண்களின் ஆரோக்கியத்தையும், நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையையும், சருமத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். பல் வலி, பல்லசைவு போன்ற உபாதைகளையும், விரைவில் குணப்படுத்தும். உடல் எடையை கட்டுப்படுத்தும். 21 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு தீர்வு கிடைக்கும்.





நீதிக்கதை


உருவத்தை பார்த்து பழகாதே

ஒரு குளத்தில் பல வகையான வண்ண மீன்கள் வாழ்ந்து வந்தன. மீன் குஞ்சுகள் எப்பொழுதும் கரையோரம் கூடி விளையாடிக் கொண்டிருப்பார்கள். அதில் சோமு சிண்டு என்ற மீன்கள் ஒரு நாள் விளையாடி கொண்டிருக்கும்போது ஏய் சிண்டு... என்னைப்பிடி பார்க்கலாம் என்றான். என்கிட்டேயே சவால் விடறியா இப்ப பாரு, ஒரு நொடியில் பிடிக்கறேன் என்று சொல்லி விளையாடி கொண்டிருந்தது.

அப்போது கரையில் ஒரு காகம் புழுக்களைக் கொத்திக் கொண்டிருப்பதை பார்த்து ஏய் சோமு, அங்கே பார் அவன் எவ்வளவு கருப்பாக இருக்கிறான். அவன் குரலை நீ கேட்டிருக்கிறாயா? அருவருப்பாக இருக்கும். அவனை பார்த்தால் பயமாக இருக்கிறது வா போய்டலாம் என்று சிண்டு சொன்னதும், எல்லா மீன்களும் குளத்துக்குள் வேகமாகச் சென்றன. அவசர அவசரமாக மீன்கள் உள்ளே சென்றபோது, பசங்களா? ஏன் இப்படி ஓடி வர்றீங்க? என ஒரு பெரிய மீன் கேட்டது கரையில் காகம் இருக்கு. அதனோட நிறமும் குரலும் பயமா இருக்கு? அதான்...

ஓ....! காகமா, காகத்தினால் நமக்கு எந்த ஆபத்தும் இல்லை. உருவத்தை மட்டுமே வைத்து ஒருவரைப் பற்றி தப்பாக நினைக்கக் கூடாது என்று, அந்த பெரிய மீன் சொல்ல, மற்ற மீன்குஞ்சுகள் இந்த தாத்தாவுக்கு வேற வேலை இல்லை. எப்பவும் உபதேசம் தான். வாங்க போகலாம். என கூறி சென்றது. அடுத்த நாள் வந்தது. குளத்தின் கரையில் கொக்கு ஒன்று அமர்ந்து இருந்தது. அதை பார்த்த மீன் குஞ்சுகள், ஏய் அங்கே பாரு வெள்ளையா... அட! என்ன பறவை அது? வெள்ளையா எவ்வளவு அழகா இருக்கு! அலகும் நீளமா இருக்கு. அடடே! அதனோட நடையைப் பாரேன். மீன் குஞ்சுகள் பேசும் சத்தம் கேட்டு குளத்தை நெருங்கியது கொக்கு.

உடனே மீன் குஞ்சுகள், அண்ணே! நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. உங்க அலகைத் தொட்டுப் பார்க்கலாமா? கொக்குக்கு ஒரே கொண்டாட்டம். ஓ! தொட்டுப் பாரேன். ஒரு மீன் குஞ்சு கொக்கை நெருங்க, கொக்கு மீனை கவ்வியது. நல்லா மாட்டிக்கிட்டியா? என்றது. மாட்டிய மீன் ஆ! என்னை விட்டு விடு! என்று கெஞ்சியது. இதை பார்த்த மற்ற மீன் குஞ்சுகள் ஆபத்து... ஓடுங்க! ஓடுங்க! என்று குளத்திற்குள் சென்றன. அந்த கொக்கு கவ்விய மீனுடன் வானத்தில் சென்று மறைந்தது.

மற்ற மீன் குஞ்சுகள், அந்த தாத்தா மீன் சொன்னது சரியாப் போச்சு. அழகை மட்டும் பார்த்து ஒருத்தரோட பழகக்கூடாது. ஆமாம்! ஆமாம்! என்று உறுதியெடுத்து கொண்டன. அன்று முதல் மற்ற மீன் குஞ்சுகள் கவனமாக இருந்தன. சந்தோஷமாக வாழ்ந்தன.

இன்றைய செய்திகள்

26.02.22

✅ தமிழகம் முழுவதும் அஞ்சலகங்களில் ஆதார் சிறப்பு முகாம்.


✅ புதுச்சேரியில் மார்ச் 19-ல் காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு  நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


✅ நாசாவின் செயற்கைக்கோளுக்கு சிக்காத சூரிய புரோட்டான் நிகழ்வுகளை சந்திரயான்-2 விண்கலம் கண்டறிந்தது: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தகவல்.

✅ ரஷ்யாவின் தாக்குதலால் விமான போக்குவரத்து நிறுத்தம் - உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்.

✅ உக்ரைன் தலைநகர் கீவ் நகரின் வடக்குப் பகுதியில் ரஷ்யப் படைகள் குவிந்துள்ள நிலையில், உக்ரைன் சண்டையை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

✅ 'மெட்ரோ ரயில் நிலையத்தில் 30 மணி நேரமாக தஞ்சம்... எங்களை பிரதமர் மோடி மீட்க வேண்டும்' - உக்ரைனில் சிக்கிய இந்திய மாணவர்கள்.

✅ ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி: தொடரை கைப்பற்றியது வங்காளதேசம்.

✅ காமன்வெல்த் போட்டிக்கு தகுதி பெற்றார் இந்தியாவின் மீராபாய் ஜானு.

Today's Headlines

✅ Aadhar Special Camp at Post Offices across Tamil Nadu.

 ✅ It has been announced that the written test for the post of a police officer will be held on March 19 in Pondicherry.


✅ Chandrayaan-2 spacecraft detects solar proton events that are not captured by NASA's satellite: information by Indian Space Research Organization

 ✅ Air traffic is stopped due to a Russian attack - now Indians stranded in Ukraine.

 ✅ As Russian forces concentrate north of the Ukrainian capital, Kyiv, Russia has said it is ready for talks if Ukraine stops fighting.

 ✅ 'Asylum at the metro station for 30 hours ... Prime Minister Modi must rescue us' - Indian students stranded in Ukraine.

✅ 2nd ODI against Afghanistan: Bangladesh won the series.

 ✅ India's Mirabai Janu qualifies for Commonwealth Games
 Prepared by

Covai women ICT_போதிமரம்