Monday, October 31, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.11.2022

  திருக்குறள் :

பால் : அறத்துப்பால்

இயல்: பாயிரவியல்

அதிகாரம்: நீத்தார் பெருமை

குறள் : 29
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.

பொருள்:
குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது.

பழமொழி :

A good beginning is half the battle.

நல்ல தொடக்கம் பாதி வெற்றிக்குச் சமம்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. சூரியன், மழை, மரம், ஆறு எதுவும் தனக்கென இருப்பதில்லை. அவைகளின் கனி, நீர், ஒளி, வெப்பம் அனைத்தும் பிற உயிர்களுக்கே. 

2. இயற்கையை போலவே நானும் தன்னலமின்றி வாழ முயல்வேன். 

பொன்மொழி :

ஒருதாய் தன் பிள்ளைகளை பெறுவதற்காக அழலாம்.. ஆனால் பெற்றதற்காக அழக்கூடாது...விவேகானந்தர்

பொது அறிவு :

1. சக்தி தரும் வெப்பத்தின் அலகு என்ன ?

 கலோரி

 2.ஆல்டிமீட்டர் எதை அளக்கிறது?




 உயரத்தை.

English words & meanings :

Optio-me-try- science of examining the eyes. Noun. கண்களை பரிசோதிக்கும் அறிவியல். பெயர்ச் சொல் 

ஆரோக்ய வாழ்வு :

பாலில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் மற்றும் அரைத் தேக்கரண்டி தேனை கலந்து பருகினால் வறட்டு இருமலை தடுக்கலாம்

NMMS Q :

மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் இழை __________ஆகும். 

விடை: ரேயான்

நீதிக்கதை

கைமேல் பலன் கிடைத்தது

அரசன் ஒருவன் சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவனாக இருந்தான். அரண்மணை ஜோதிடர் இந்த நம்பிக்கை மேல் குளிர்க்காய்ந்து கொண்டிருந்தார். ஒரு நாள் ஜோதிடர் அரசே, அதிகாலை எழுந்தவுடன் இரண்டு காக்கைகளை ஒன்றாகப் பார்த்தால் நாள் சிறக்கும் என்றார். மன்னன் சேவகனை அழைத்து காலையில் எங்கேயாவது இரண்டு காக்கைகள் தென்பட்டால் சொல் என்று கட்டளையிட்டான். சேவகன் தினமும் பொழுது விடியும் முன்பே தெருவிற்கு சென்றுவிடுவான். 

ஒரு நாள் அரண்மனைக்குப் பக்கத்துத் தெருவில் இரண்டு காக்கைகள் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் கண்டான். அடடா! நல்ல சகுனம், இன்று மன்னர் நமக்கு நிச்சயம் பதவி உயர்வு கொடுப்பார் என்று மகிழ்ச்சியுடன் மன்னரிடம் சென்று விபரம் சொன்னான். இதைக் கேட்ட மன்னன் சேவகனுடன் அந்த இடத்திற்கு சென்றான். அதற்குள் ஒரு காக்கை போய்விட்டது. மன்னனுக்கு மூக்கின் மேல் கோபம் வந்து விட்டது. தளபதியை அழைத்து இந்தப் பொறுப்பற்ற சேவகனுக்குப் பத்து கசையடி கொடு என்று உத்தரவிட்டான். 

சேவகன் சிரிக்க ஆரம்பித்தான். மன்னனுக்கு கோபம் அதிகமானது. ஏன் சிரிக்கிறாய் என்று சொல்லாவிட்டால் இன்னமும் பத்து கசையடி என்று உறுமினான். சேவகன் சொன்னான். மகா மன்னரே! இன்று நான் மட்டும்தான் அதிகாலையில் இரட்டைக் காக்கைகளைப் பார்த்தேன். கை மேல் பலன் கிடைத்து விட்டது அல்லவா? என்றான். மன்னருக்கு அப்போதுதான் சகுனம் பார்ப்பது தவறு என்று உரைத்தது.

இன்றைய செய்திகள்

01.11.22

* எம்பிபிஎஸ், பிடிஎஸ் இட ஒதுக்கீடு பெற்ற 7,036 பேர் 13 ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்: மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிப்பு.


* தமிழகத்தில் புதிதாக XBB என்ற உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக GISAID என்ற சர்வதேச ஆராய்ச்சி அமைப்பின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

* இன்று நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பங்கேற்க வேண்டும்: தமிழக வேளாண் துறை அழைப்பு.

* மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்க பொது சுகாதாரத் துறை உத்தரவு.

* குஜராத் மோர்பி நகர் கேபிள் நடைபாலம் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது.

* ஜெர்மனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஸ்டேடிஸ்டா (Statista) நிறுவனம் அதிக ஊழியர்களைக் கொண்டிருக்கும் அமைப்புகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 29.2 லட்சம் ஊழியர்களைக் கொண்டு இந்திய பாதுகாப்பு அமைச்சகம் முதல் இடத்தில் உள்ளது.

* உலகில் எந்த நாட்டிலும் பிரம்மோஸ் போன்ற ஏவுகணை இல்லை. போட்டியே இல்லாத வர்த்தகம் என்பதால் ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகம். இதை வாங்க 14 நாடுகள் ஆர்வமாக உள்ளதால், சுமார் ரூ.41 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் ஈட்ட வாய்ப்பு உள்ளது என்று விஞ்ஞானி ஆ.சிவதாணு பிள்ளை தெரிவித்துள்ளார்.

* டி20 உலகக் கோப்பை: அயர்லாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி- புள்ளி பட்டியலில் முன்னேற்றம்.

* சூப்பர் 750 பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவுக்கு முதன்முறையாக சாம்பியன் பட்டம்: சாத்விக்-சிராக் ஜோடி சாதனை.

* துபாயில் மினி மாரத்தான் போட்டி; தமிழக வீராங்கனை லிடியா ஸ்டாலின் 2-வது இடம் பிடித்து சாதனை.

Today's Headlines


 * 7,036 MBBS, BDS reserved candidates to submit 13 documents: Directorate of Medical Education Notification

* A study by GISAID, an international research organization, has revealed that a newly mutated corona virus called XBB has been detected in Tamil Nadu.

 * All farmers must participate in today's Gram Sabha meeting: Tamil Nadu Agriculture Department invites.

*  Public Health Department orders to provide Nilavembu Kashayam to public in hospitals.

 * Death toll rises to 141 in Gujarat Morbi Nagar cable footbridge accident

* Germany-based Statista has released a ranking of organizations with the most employees. India's Ministry of Defense tops the list with 29.2 lakh employees.

 * No country in the world has a missile like BrahMos. Export opportunities are high as it is a non-competitive trade. As 14 countries are interested in buying this, there is a possibility of earning more than Rs.41 thousand crores, according to scientist A. Sivathanu Pillai.

 * T20 World Cup: Australia beat Ireland with a huge win - improvement in the points table.

 * In Super 750 Badminton ,India got Championship for the first time,record created by Shathwick-Chirag pair .

*  Mini Marathon in Dubai; Tamil Nadu player Lydia Stalin achieved 2nd position.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Sunday, October 30, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.10.2022

 திருக்குறள் :

பால் : அறத்துப்பால்

இயல்: பாயிரவியல்

அதிகாரம்: நீத்தார் பெருமை

குறள் : 28
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும்.

பழமொழி :

A double charge will break even a cannon

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்

இரண்டொழுக்க பண்புகள் :

1. சூரியன், மழை, மரம், ஆறு எதுவும் தனக்கென இருப்பதில்லை. அவைகளின் கனி, நீர், ஒளி, வெப்பம் அனைத்தும் பிற உயிர்களுக்கே. 

2. இயற்கையை போலவே நானும் தன்னலமின்றி வாழ முயல்வேன். 

பொன்மொழி :

தம்மால் வெல்ல முடியும் என்று நம்புகிறவர்கள் தான் வெற்றிகளைக் குவிப்பார்கள்.

பொது அறிவு :

1.காமராஜர் எப்போது முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார்? 

1963ஆம் ஆண்டு. 

2. வண்டல் மண் எதன் படிவுகளால் ஏற்படுகிறது ? 

ஆறுகள்.

English words & meanings :

Neo-na-to-lo-gy - study of new born babies. Noun. பிறந்த குழந்தைகள் குறித்த மருத்துவ அறிவியல்.

ஆரோக்ய வாழ்வு :

பொதுவாக இளநீர் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுவதோடு, புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளும். அந்த இளநீருடன் எலுமிச்சை சாறு மற்றும் சிறிது புதினாவை சேர்த்து கலந்து குடித்தால், செரிமான மண்டலத்தின் செயல்பாடு மேம்படுவதோடு, உடல் நீண்ட நேரம் நீரேற்றத்துடன் இருக்கும்.

NMMS Q :

12 பசுக்கள் ஒரு புல்தரையை 10 நாள்கள் மேய்கின்றன. 20 பசுக்கள் அதே புல்தரையை மேய ______________நாட்கள் எடுத்துக் கொள்கின்றன. விடை: 6 நாள்கள். 

விளக்கம்: 12 x 10 = 20 x Y; Y = (12 x 10)/20 = 6 நாள்கள்

அக்டோபர் 31


இந்திரா காந்தி அவர்களின் நினைவுநாள்





இந்திரா காந்தி (இந்திரா பிரியதர்சினி காந்தி) இந்தியாவின் மூன்றாவது பிரதமரும், ஒரே இந்திய பெண் பிரதமரும் ஆவார். அவர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார்.
பின்னர் ஜனவரி 19 1966-இல், பிரதம மந்திரியாகப் பதவியேற்ற இவர் மார்ச் 24 1977 வரை பதவியில் இருந்தார். 1977-இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரும் தோல்வியடைந்த இவர் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். இவர் ஒரு சிறந்த அரசியல் திட்டமிடலாளரும், சிந்தனையாளரும் ஆவார். அரசியல் அதிகாரத்துக்கான அசாதாரண பற்றை அவர் கொண்டிருந்தார். ஆணாதிக்க மனப்பாங்கைக் கொண்ட இந்திய சமுதாயத்தில், ஒரு பெண்ணிடம் எதிர்பார்க்கப்படும் தன்மைகளுக்கு மாறாக வலுவான அதிகார பலத்துடன் மிகவுயர்ந்த பதவியிலிருந்து நாட்டை வழி நடத்தினார்.


நீதிக்கதை

கிணற்றில் விழுந்த நரி

ஒரு நாள் ஒரு நரி கிணற்றில் தவறி விழுந்துவிட்டது. விழுந்த அந்த நரி, யாராவது வந்து தன்னை காப்பாற்றுவார்கள் எனக் காத்திருந்தது. ஆனால், ஒருவரும் அந்தப் பக்கம் வரவேயில்லை. அதனால், சாப்பிடவும் முடியாமல், தூங்கவும் முடியாமல் தண்ணீர்ருக்குள்ளேயே தவித்துக்கொண்டிருந்தது நரி. பத்து நாட்கள் கடந்து போனது. அன்னைக்கு அந்தப் பக்கமாக ஓர் ஆடு, மே... மே...ன்னு கத்திக்கொண்டே வந்தது. 

உடனே நரி உஷாரானது. இந்த ஆட்டை வைத்து எப்படியாவது மேலே வந்துவிட வேண்டும் என்று நரி நினைத்துக்கொண்டது. ஆடு அண்ணா, இங்கே வாயேன் என்று அன்போடு அழைத்தது நரி. கிணற்றில் இருந்து வந்த குரலைக் கேட்டதும், ஆடு எட்டிப் பார்த்தது. என்ன நரியாரே... தவறி விழுந்துட்டீயா? என்று கேட்டது ஆடு. சே... சே... நானாவது விழுவதாவது. நான் வேணும்னுதான் கிணற்றுக்குள்ளே இறங்கினேன். இந்தக் கிணற்றுத் தண்ணீர் ரொம்ப சுவையாக இருக்கு. நீ வேணும்னா இறங்கி வந்து குடிச்சுப்பாரேன் என்றது நரி. ஆடு கொஞ்சமும் யோசிக்கவில்லை. 

உடனே கிணற்றுக்குள் குதித்தது. நரியே... இந்தத் தண்ணீர் சுவையா ஒன்னும் இல்லையே... உன்னை நம்பி வந்தேன் பாரு... இப்போ எப்படி வெளியில போறது? என்று கேட்டது ஆடு. முதல்ல உன் மேலே ஏறி நான் வெளியே போறேன். அப்புறம் கையை நீட்டறேன். கையைப் பிடிச்சிக்கிட்டு நீயும் வெளியே வந்துடு என்றது நரி. ஆடும் ஒப்புக்கொண்டது. ஆடு மீது ஏறி நரி வெளியே வந்தது. ம்... கையை கொடு... என்னைச் சீக்கிரமா காப்பாத்து... என்றது ஆடு. உன்னை நான் எப்படிக் காப்பாத்துறது? எதைச் செஞ்சாலும் விவேகமா, புத்திசாலித்தனத்தோட செய்யணும். இப்போவாவது புரிஞ்சுக்க. நான் வரேன்னு சொல்லிவிட்டு நரி கிளம்பியது. தன் முட்டாள்தனத்தை நினைத்து ஆடு வருந்தியது.

இன்றைய செய்திகள்

31.10.22

* தமிழகத்தின் 20 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* கேரளாவில் பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்லில் 45 குழுக்கள் கண்காணிப்பு.

* உள்ளாட்சி அமைப்புகளின் கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் ஒதுக்கீட்டை முறைப்படுத்த நகராட்சி நிர்வாகத் துறை செயலர் தலைமையில் வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.

* பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கு குழு: குஜராத் அமைச்சரவை ஒப்புதல்.

* சோமாலியா தலைநகரில் குண்டுவெடிப்பு - நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.

* சவுதி அரேபியாவில் பொறியாளராகப் பணிபுரிய விரும்பும் இந்தியர்கள் அதற்கான அங்கீகாரச் சான்றிதழ் பெறுவது கட்டாயம் என்று ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது.

* உலக ஜூனியர் பேட்மிண்டன்: தமிழக வீரர் சங்கர் முத்துசாமி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.

* தேசிய கைப்பந்து போட்டி - தமிழக பெண்கள் அணி சாம்பியன்.

* சர்வதேச ஜூனியர் ஹாக்கி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி 'சாம்பியன்' பட்டம் வென்றது. 

Today's Headlines

* Chennai Metrology Department predicted mild rain in 20 districts of TN
In reflection of bird flu in Kerala 45 teams are formed in Namakkal

* In order to regularise the commercial shopping complexes and shops allotment by Local bodies a guidance team is set under the leader ship of internal affairs Secretary. 

* To execute common civil law Gujrat approved the formation of a team for the purpose. 

* In the capital of Somalia there is an explosion. More than 100 people were killed. 

* The Indians who wanted to work as Engineers in South Arabia should get the approval certificate AICTE implies and stresses this point. 

* In World Cup Junior Badminton TN player qualified for the finals. 

* In National Volleyball league TN women's team won the match. 

* In international Junior hockey match India won by defeated Australian team
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Thursday, October 27, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.10.2022

   திருக்குறள் :

பால்: அறத்துப்பால்

அதிகாரம்/Chapter: நீத்தார் பெருமை / The Greatness of Ascetics

குறள் 27:
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.

விளக்கம்
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்.

பழமொழி :

He that can stay obtains.

பொறுத்தார் பூமி ஆள்வார்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. எந்த காரியம் செய்தாலும் சிறிதே எ‌ன்றாலு‌ம் மிக அக்கறையுடன் செய்வேன். 

2. அதே போல மற்றவர் பேசும் போது மிக கவனமாக கவனிப்பேன்.

பொன்மொழி :

உன்னை பேசும் உலக வாயை அடைக்க சொல் தேவை இல்லை உன் உன்னத செயல் தான் வேண்டும்.

பொது அறிவு :

1.நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது? 

1986 . 

2.எந்த கிரகத்தில் தொடர்ந்து 250 நாட்களுக்கு பகலாகவே இருக்கும்? 

செவ்வாய் கிரகத்தில்.

English words & meanings :

Me-li-to-lo-gy - the study of bees. Noun. The word Melitology comes from the Greek word Melitta means "bee". தேனீக்கள் குறித்த படிப்பு

ஆரோக்ய வாழ்வு :

பண்டிகை முடிந்த மறுநாள்,  எலுமிச்சை மற்றும் இஞ்சி சாற்றினை ஒன்றாக கலந்து, அதில் சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடித்தால், உடலின் மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதோடு, செரிமான மண்டலத்தின் செயல்பாடு மேம்பட்டு, உடலும், மனமும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.





NMMS Q :

தனி வட்டி காண உதவும் சூத்திரம்: _______________ 

(p x n x r)÷ 100 ; p = அசல்; n = காலம்; r = வட்டிவீதம்

நீதிக்கதை

ஏழ்மையிலும் நேர்மை

ஒரு ஊரில் தொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யாததால், அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள் பசியால் வாடினர். நல்ல உள்ளம் படைத்த செல்வந்தர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் சென்று தங்களின் குழந்தைகளுக்கு உதவி செய்யுமாறு வேண்டினர். 

இளகிய உள்ளம் படைத்திருந்த அவர், இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம். ஆளுக்கொரு மோதகம் கிடைக்குமாறு செய்கிறேன். என் வீட்டிற்கு வந்து மோதகத்தை எடுத்துச் செல்லச் சொல்லுங்கள்! என்றார். 

மாளிகை திரும்பிய அவர், தன் வேலைக்காரனை அழைத்தார். இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்துக் கொள். ஆளுக்கொரு மோதகம் கிடைக்க வேண்டும். நாளையிலிருந்து மோதகங்களைக் கூடையில் சரியான எண்ணிக்கையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே இருக்க வேண்டும் என்றார். 

மறுநாள், வேலைக்காரன் மோதகக் கூடையுடன் வெளியே வந்தான். அங்கே காத்திருந்த சிறுவர், சிறுமியர் அவனைச் சூழ்ந்து கொண்டனர். கூடையை அவர்கள் முன் வைத்தான். 

பெரிய மோதகத்தை எடுப்பதில் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர். ஆனால், ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள். எல்லோரும் எடுத்துச் சென்றது போக, மிஞ்சி இருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள் அவள். 

இப்படியே தொடர்ந்து நான்கு நாட்கள் நிகழ்ந்தது. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார் செல்வந்தர், ஐந்தாம் நாளும் அப்படியே நடந்தது. எஞ்சியிருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் அந்த சிறுமி. தன் வீட்டிற்கு வந்தவள், தன் தாயிடம் அதைத் தந்தாள். அந்த மோதகத்தைப் பிய்த்தாள் தாய். அதற்குள் இருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது. 

அந்தத் தங்கக் காசை எடுத்துக் கொண்டு செல்வந்தரின் வீட்டிற்கு வந்தாள் சிறுமி. ஐயா! இது உங்கள் தங்கக் காசு. ரொட்டிக்குள் இருந்தது. பெற்றுக் கொள்ளுங்கள்! என்றாள். மகளே! உன் பெயர் என்ன என்று கேட்டார் செல்வந்தர். சிறுமி தன் பெயர் கிருசாம்பாள் எனக் கூறினாள். மகளே உன் பொறுமைக்கும், நற்பண்பிற்கும் நான் அளித்த பரிசே இந்தத் தங்கக் காசு. மகிழ்ச்சியுடன் இதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல் என்றார் செல்வந்தர். துள்ளிக் குதித்தபடி ஓடி வந்த அவள், நடந்ததை தன் தாயிடம் சொன்னாள். 

நீதி :
பொறுமை, நேர்மை இரண்டும் இருந்தால் எதிலும் நிச்சயம் வெற்றி பெறலாம்.

இன்றைய செய்திகள்

28.10.22

* ஆன்லைனில் விண்ணப்பிப்பது நிறைவு: உதவி மருத்துவர் பணிக்கு நவம்பரில் எழுத்து தேர்வு.

* தேசிய ஒற்றுமை தினமான அக்.31-ம் தேதி மாணவர்கள் பங்கேற்புடன் மாரத்தான்: கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ, யுஜிசி அறிவுறுத்தல்.

* தமிழகத்தில் 29 மற்றும் 30-ம் தேதிகளில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை ஒட்டி இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகளில் 2.80 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.9.54 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தமிழக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

* போக்குவரத்து விதிமீறல்: சென்னையில் நேற்று ஒரு நாளில் 2,500 பேரிடம் ரூ.15 லட்சம் அபராதம் வசூல்.

* உக்ரைனில் போர் தீவிரம் அடைவதால் இந்தியர்கள் வெளியேற வேண்டும் - இந்திய தூதரகம் அவசர உத்தரவு.

* காலநிலை மாற்ற விளைவை கண்காணிப்பதில் விஞ்ஞானிகள் வகிக்கும் பங்கு, நமது நிகழ்காலத்திற்கும் நமது எதிர்காலத்திற்கும் நம்பமுடியாத அளவிற்கு முக்கியமானது என நியூசிலாந்து பிரதமர் பாராட்டு.

* சீனாவின் வூஹான் நகரில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்துள்ளதால் நகரை சுற்றிய பல இடங்களில் தீவிர பொது முடக்கத்தை சீனா அறிவித்துள்ளது.

* டி20 உலகக்கோப்பை:
சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் 56 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி.

* இந்திய ஆண்கள் கிரிக்கெட்  அணிக்கு நிகராக மகளிர் அணிக்கும் ஊதியம்: பிசிசிஐ அறிவிப்பு.

* புரோ கபடி: டெல்லியை வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸ் வெற்றி.

Today's Headlines

* Online Application Completion: Written Test in November for Asst.

*  Marathon with student participation on National Unity Day Oct 31: AICTE, UGC instructions to colleges.

*  The Chennai Meteorological Department has informed us that widespread heavy rains are likely to occur in Tamil Nadu on 29th and 30th.

*  In Tamil Nadu, 2.80 lakh people have traveled in special buses run on the occasion of Diwali.  According to the Tamil Nadu Transport Department, a revenue of Rs 9.54 crore has been obtained through this.

*  Traffic Violation: 2,500 people were fined Rs 15 lakh in one day yesterday in Chennai.

 * Indians to evacuate as the war intensifies in Ukraine - Indian Embassy Urgent Order

 * The Prime Minister of New Zealand hailed the role scientists play in monitoring the effects of climate change as incredibly important to our present and our future.

 * China has announced a strict lockdown in many places around the city as the spread of Corona has increased again in the Chinese city of Wuhan.

*  T20 World Cup:
 India beat the Netherlands by 56 runs in the Super 12 round match.

 * Women's team to be paid at par with Indian men's cricket team: BCCI announcement

 * Pro Kabaddi: Bengal Warriors beat Delhi
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்