Monday, December 20, 2021

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 21.12.21

திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்: அமைச்சியல்

அதிகாரம்: அவை அஞ்சாமை

குறள் எண்: 728

குறள்:
கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும் நல்லா ரவையஞ்சு வார். பொருள்: நூல்களைக் கற்றிந்த போதிலும் நல்ல அறிஞரின் அவைக்கு அஞ்சுகின்றவர், கல்லாதவரை விடக் கடைப்பட்டவர் என்று கூறுவர்


பழமொழி :

Don't judge the worth of a person by their size.
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது

இரண்டொழுக்க பண்புகள் :

1. காடழிந்தால் மழை கெடும் எனவே இயற்கை போற்றி பாதுகாப்பேன். 

2. மழை அழிந்தால் விவசாயம் கெடும், விவசாயம் கெட்டால் உணவு அழியும். எனவே விவசாயம் பேணி பாதுகாப்பேன்

பொன்மொழி :

வழி இருப்பது உண்மை தேடுவது நம் திறமை

பொது அறிவு :

1. இந்தியாவில் மொழிவாரியாக பிரிக்கப்பட்ட முதல் மாநிலம் எது? 

ஆந்திரப்பிரதேசம். 

2. புளூட்டோ தனது கோள் என்ற தகுதியை இழந்த ஆண்டு எது? 

2006.

English words & meanings :

A path of democracy - ஜனநாயக பாதை, 

Absolute monarchy - முழு அதிகாரமுடைய முடியாட்சி

ஆரோக்ய வாழ்வு :

அவரைக்காயில் புரதம் நார்ச்சத்து மிகுந்துள்ளது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தேகத்தை பலப்படுத்துகிறது .மலச்சிக்கலைப் போக்குகிறது.

கணினி யுகம் :

Switch the video to full-screen or theater mode

*Pressing the F key switches between full-screen and normal mode.

Tip

Pressing Esc also exits the full-screen mode.

*Pressing the T key switches between theater mode and normal mode.

டிசம்பர் 21


ஜெகன் மோகன் ரெட்டி அவர்களின் பிறந்தநாள்





எடுங்குரி சன்டிந்தி ஜெகன் மோகன் ரெட்டி (தெலுங்கு:  பிறப்பு: :திசம்பர் 211972),[1] அல்லது ஜெகன் என்று அவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படும் இவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், ஆந்திரப் பிரதேச மாநிலத்தின், தற்போதைய முதல்வரும் ஆவார்.[2] இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.

2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 175 தொகுதிகளில், ஒய். எஸ். ஆர் காங்கிரஸ் கட்சி 151 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதனால் ஆந்திரப் பிரதேச முதலமைச்சராக மே 30, 2019 அன்று ஜெகன் மோகன் முதலமைச்சராகப் பதவியேற்றார்.

நீதிக்கதை

நாம் எவ்வழியோ மக்களும் அவ்வழி

ஒரு அழகான நகரத்தின் நுழைவு வாயிலில் எப்போதும் ஒரு வயதான பெரியவர் அந்நியர்கள் யாரும் உள்ளே சென்று விடாமல் காவல் காத்துக்கொண்டிருப்பார். ஒரு நாள் வாலிபன் ஒருவன் நகரத்தின் வாயிலை நோக்கி குதிரையில் வந்துகொண்டிருந்தான். 

அப்போது அங்கிருந்த வயதான காவலாளியிடம் ஐயா பெரியவரே, இந்த ஊர் மக்கள் எப்படி? என்று கேட்டான். அதற்கு அந்த வயதான காவலாளி ஏன் கேட்கிறாய் தம்பி? இந்த ஊரில் வந்து தங்கப் போகிறாயா? என்று சந்தேகத்துடன் கேட்டார்.

ஆமாம் பெரியவரே. நான் முன்பு இருந்த ஊர் மிகவும் மோசம். எதற்கெடுத்தாலும் சண்டையிட்டு கொள்வார்கள். ஒருவரைப் பற்றி ஒருவர் தவறாக பேசிக் கொண்டும், திட்டிக் கொண்டும் இருப்பார்கள். அதனால் எனக்கு எப்பொழுது அந்த ஊரைவிட்டு வருவோம் என்று இருந்தது. அதனால்தான் இந்த ஊர் எப்படி? என்று கேட்டேன் என்றான்.

தம்பி, இந்த ஊர் உன்னுடைய ஊரைவிட மிகவும் மோசம். போட்டி, பொறாமை, ஜாதிச் சண்டை, கலவரம்ன்னு ஏதாவது ஒரு பிரச்சனை இருந்துக்கிட்டே இருக்கும். நீயே நிம்மதியைத் தேடி வர, உனக்கு இந்த ஊர் ஏற்றதாக இருக்காது தம்பி என்று கூறி, அந்த வாலிபனை வெளியே வழியனுப்பி வைத்தார்.

சிறிது நேரம் கழித்து, அவ்வழியாக வந்த வேறொரு ஆள் காவலாளியிடம் அதே கேள்வியைக் கேட்டான். ஐயா, இந்த ஊரில் தங்கி வியாபாரம் செய்யலாம் என்று இருக்கேன். இந்த ஊர் மக்கள் எப்படி? என்று கேட்டான். 

பெரியவர் சிரித்துக்கொண்டே, ஏன் தம்பி, உனக்குக் கல்யாணம் ஆகிவிட்டதா? என்று கேட்டார். ஐயா! எனக்கு மூன்று குழந்தைகளே இருக்கின்றார்கள் என்றான். அப்புறம் ஏன்? இந்த ஊருக்கு வந்திருக்கிறாய்? உங்க ஊரிலேயே வியாபாரம் செய்யலாமே? என்றார் காவலர்.

எங்க ஊர் ரொம்ப நல்ல ஊர். எங்க ஊர் மக்கள் அனைவரும் பாசமாக பழகக்கூடியவர்கள். என் குடும்பம் இப்போழுது மிகுந்த வறுமையில் இருக்கின்றது. நான் இந்த ஊருக்கு என் குடும்பத்தின் வறுமையைப் போக்க வியாபாரம் செய்து சம்பாதிப்பதற்காகத்தான் வந்தேன் என்றான். நான் நிறைய பணம் சம்பாதித்துக் கொண்டு மீண்டும் எங்க ஊருக்கு சென்று விடுவேன் என்று கண் கலங்கியபடியே கூறினான்.

அழாதே தம்பி, இந்த ஊர் மக்களும் நல்லவர்கள்தான். தைரியமாக நீ இந்த ஊரில் வியாபாரம் செய்யலாம் என்று கூறி கதவுகளைத் திறந்து உள்ளே அனுப்பி வைத்தார்.

காவலாளியின் அருகில் இருந்த ஒருவர், பெரியவரின் செயலைப் பார்த்துக் கொண்டிருந்தார். உடனே அவரிடம் முதலில் வந்தவரிடம், இந்த ஊர் மிகவும் மோசமானது என்று சொன்னீர்கள். இவரிடம் மட்டும் நல்ல ஊர் என்று சொல்கிறீர்களே ஏன்? என்று சந்தேகத்துடன் கேட்டார்.

அதற்குப் பெரியவர் இந்த உலகம் கண்ணாடி மாதிரி. நாம் எப்படி இருக்கிறோமோ அப்படித்தான் கண்ணாடி நம்மைக் காட்டும் என்றார்.

இன்றைய செய்திகள்

22.12.21

🔴 பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் மொத்தம் 16,768 சிறப்பு பேருந்துகளை இயக்கப்பட உள்ளது. 

🔴 தினசரி கொரோனா பாதிப்பில் சென்னையை மீண்டும் விஞ்சிய கோவை!

🔴 தொண்டை மண்டலத்தை இயற்கை வேளாண் மண்டலமாக்குவதுதான் இலக்கு!' - THOFA நடத்தும் வேளாண் திருவிழா

🔴 ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் டூ மாணவி முனீஸ்வரி பயின்று வருகிறார். இவர் சோழர் காலத்து ஈழக்காசுகளை கண்டெடுத்தார் ; இதனால் அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன. 

🔴 பிரபல டென்னிஸ் வீரர் ரபேல் நடாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

🔴 ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை - ஜப்பானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது இந்தியா


Today's Headlines

🔴  For the festival of Pongal total 16,768 special buses are planned to operate

🔴  In the daily status of Corona Covai upbeat Chennai

🔴  Our goal is to turn Thondai Zone into Natural Agriculture Zone - THOFA conducts Agri Festival

🔴  In Ramnad District at Thirupullani school a plus two student found out Srilangan coins which belong to the period of Chozha. She receives heaps of congratulations.

🔴  Famous Tennis Player Rafael Natal is having Corona positive.

🔴  In Asian Championship Cup India defeated Japan and confirm its 3rd victory

 Prepared by

Covai women ICT_போதிமரம்

Sunday, December 19, 2021

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 20.12.21

  திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்: அமைச்சியல்

அதிகாரம்: அவை அஞ்சாமை

குறள் எண்: 728

குறள்:
பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார்

பொருள்:
அறிவுடையோர் நிறைந்த அவையில், அவர்கள் மனத்தில் பதியும் அளவுக்குக் கருத்துக்களைச் சொல்ல இயலாவிடின், என்னதான் நூல்களைக் கற்றிருந்தாலும் பயன் இல்லை.

பழமொழி :


.All are not thieves , that dogs bark at.

சந்தேகத்துக்கு உரியவர்கள் எல்லாம் குற்றவாளிகள் அல்ல.

இரண்டொழுக்க பண்புகள் :

1. காடழிந்தால் மழை கெடும் எனவே இயற்கை போற்றி பாதுகாப்பேன். 

2. மழை அழிந்தால் விவசாயம் கெடும், விவசாயம் கெட்டால் உணவு அழியும். எனவே விவசாயம் பேணி பாதுகாப்பேன்

பொன்மொழி :


ஊக்கத்துடன் உழை ஆக்கம் தேடி வரும்

பொது அறிவு :

1. வெள்ளி அதிகமாக கிடைக்கும் மாநிலம் எது? 

ராஜஸ்தான்.. 

2. இந்தியாவின் மிகப்பெரிய நீர்பாசன கால்வாய் எது?

 சாரதா கால்வாய்.

English words & meanings :

Hit the books - go to bed, படுக்க செல்லுதல், 

in touch - in contact, தொடர்பில் இருத்தல்

ஆரோக்ய வாழ்வு :

கொழுப்பை கரைப்பதில் கொள்ளுக்கு முதலிடம் உடலிலுள்ள தேவையற்ற தண்ணீரை கொள்ளு எடுத்து விடும் கொள்ளு தண்ணீர் ரத்தத்தை சுத்திகரிப்பதுடன் உடலிலுள்ள நச்சுத் தன்மைகளை எல்லாம் எடுத்து விடும்.




கணினி யுகம் :

Youtube keyboard shortkeys: Change video playback speed

To decrease the playback speed of a video, hold down the Shift and press the , (comma) key.

To increase the playback speed of a video, hold down the Shift and press the . (period) key.

நீதிக்கதை


பொம்மைகள்

ரகு வண்ணத்தாள்களில் சின்ன சின்னதாய் குருவி, கிளி, வாத்து, மயில் என்று பொம்மைகள் செய்து கொண்டிருந்தான். வீட்டிற்குள் நுழைந்த வரதன் மகன் கத்திரியும், தாளுமாக இருந்த கோலத்தைப் பார்த்து மயிர்கால்கள் குத்திட்டு நின்றன. கோபம் தலைக்கு ஏறியது.

படிடா என்றால் படிக்க மாட்டேன் என்கிறாய். எப்பொழுது பார்த்தாலும் கிளியும், வாத்துமா செய்து வீடு முழுவதும் குப்பை போடுவது தான் மிச்சம். ஒரு பைசாவிற்குகூட பிரயோஜனம் இருக்கிறதா? இப்படி இருந்தா எப்படிடா பிழைக்கப் போகிறாய். நாலுபேரைப் போல் நல்லா படிக்கணும், நாளை வேலைக்குப் போக வேண்டும் என்கிற எண்ணமே வராதாடா என்று கோபமாக கத்தியவர்.

ரகு முதுகில் இரண்டு அடி போட்டார். செய்து வைத்திருந்த பொம்மைகளை காலால் எட்டி உதைத்தார்.

ரகுவுக்கு தன்னை அடிக்கும் போது கூட வலிக்கவில்லை. ஆனால் பொம்மைகளை உதைத்தது மனதில் வலித்தது. கலை நயமாக தான் வடித்த பொம்மைகளைப் பார்த்து பாராட்ட வேண்டாம். இப்படி எட்டி உதைக்காமல் இருந்திருக்கலாமே என்று எண்ணி அழுதான் ரகு. தோட்டத்தில் துணிகளை துவைத்து காயப் போட்டுவிட்டு வந்த சீலா, ஏண்டா ரகு அழுகிறாய் எனப்பதறியபடி உள்ளே வந்தாள். பொம்மைகள் சிதறிக் கிடப்பதையும் தன கணவர் துணி மாற்றிக் கொண்டு இருப்பதையும் பார்த்த மேகலா நிலைமையை புரிந்து கொண்டாள். ரகுவை சமாதானப்படுத்திவிட்டு, கீழே சிதறிக்கிடந்த பொம்மை தாள்களை எடுத்து ஒழுங்குபடுத்தினாள் மேகலா.

அந்த சம்பவத்திற்கு பின் ரகுவரன் மனதில் ஒரு வைராக்கியம் வந்து விட்டது. இந்த பொம்மைகளை வைத்து ஏதாவது செய்து சாதிக்க வேண்டும் என்று. அவனுக்கு பக்க துணையாக இருந்தாள் அன்னை மேகலா. காலங்கள் கடந்தன. ஆண்டுகள் பல தாண்டியது ஒரு நாள் சென்னையில் நீண்ட வரிசையில் மக்கள் கூட்டம். புதுமையான ஓவியக்கண்காட்சியை காண்பதற்குதான் இவ்வளவு கூட்டம், பார்த்தவர்கள் எல்லாம் பரவசப்பட்டார்கள். பூங்கா, கோவில், மசூதி, தேவாலயம், மலை, மலர்க்காடு இப்படி எண்ணிலடங்கா கண்ணைக் கவரும் இயற்கையாகவே அமைந்தது போன்ற ஓவியங்கள் பொம்மைகளால் அமைக்கப்பட்டு  கண்ணாடிப் பெட்டிக்குள் அழகாக காட்சி அளித்தது. நல்ல விலைக்கு விற்பனையும் ஆனது.

ரகுவை மட்டும் பாராட்டவில்லை. அவன் பெற்றோரையும் பாராட்டினார்கள். அவன் தந்தையின் மனமோ, கூனிக் குறுகிப் போனது தன் தவறை எண்ணி. அவர் உணர்வுகளை உணர்ந்து கொண்டான் ரகு.

அப்பா என்று அழைத்தான். தன் உணர்வுகளில் இருந்து மீண்டு வந்த வரதன், என்ன என்பது போல் பார்த்தார். பக்கத்தில் வந்த ரகு இந்த அளவிற்கு நான் வளர காரணமே எனது அப்பா, அம்மாவின் ஒத்துழைப்பு தான் என்று பேட்டி கொடுத்தான். அந்த வார்த்தைகளைக் கேட்ட வரதன் நெகிழ்ந்து போனார். படிப்பு மட்டும் உயர்வுக்கு காரணமில்லை. குழந்தைகள் எதை விரும்புகிறார்களோ அந்த துறையில் ஊக்கப்படுத்தினால் அந்த துறையில் அவர்கள் சாதனையாளர்கள் ஆவார்கள் என்றார் வரதன்.

காற்று உள்ள போதே தூற்றிக்கொள் வாழ்த்துகள் என கைகுலுக்கி விடைபெற்றார் பேட்டி எடுத்த நண்பர்.

இன்றைய செய்திகள்

20.12.21

◆பாண்டி மெரினா கடற்கரையில் மணல் சிற்பம் உருவாக்கும் போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

◆மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகட்டிடங்களின் தரம் குறித்து ஆய்வு செய்து இம்மாத இறுதிக்குள் அறிக்கை அளிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

◆சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்பட உள்ள முன்மாதிரி கிராம விருதுக்கு கிராமங்களை தேர்வு செய்ய குழுவை அமைத்து, விருதுத்தொகைக்கான நிதியையும் ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

◆கடந்த 5 ஆண்டுகளில் முப்படைகளைச் சேர்ந்த 15 ஹெலிகாப்டர்கள் விபத்துகளில் சிக்கியுள்ளன என்றும், இதில் 31 பேர்இறந்துள்ளனர் என்றும் மத்தியபாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட் தெரிவித்துள்ளார்.

◆உலக அளவில் 3 நாட்களில் ஒன்றரை மடங்கு ஒமைக்ரான் தொற்று அதிகரித்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு (டபிள்யூஎச்ஓ) எச்சரிக்கை விடுத்துள்ளது.

◆விருதுநகர் மாவட்ட விளையாட்ட ரங்கில் மண்பானை மீது நின்றபடி சிலம்பம் சுற்றி 100 மாணவர்கள் சாதனை படைத்தனர்.


◆உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி வரலாறு படைத்தார் இந்திய வீரர் ஸ்ரீகாந்த்.

◆இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக கே.எல்.ராகுல் நியமனம்.


Today's Headlines

 🌸 Sand Sculpture Making Competition was held today at Pandi Marina Beach.  A large number of children participated enthusiastically and displayed their talents.

 🌸The Minister of Education has instructed the authorities to inspect the quality of school buildings across the state and submit a report by the end of this month.

 🌸The government has set up a committee to select villages for the Model Village Awards which are good in health and hygiene. This is to promote and encourage village panchayats that excel in health and hygiene.  Funds for the award are allotted, GO is also released for the same. 

🌸 Union Defense Minister Ajay Bhatt has said that 15 helicopters belonging to the three forces have crashed in the last five years, killing 31 people.

 🌸The World Health Organization (WHO) has warned that the number of omega-3 infections has increased worldwide by one and a half times in three days.

🌸100 students set a record around Silambam to stand on the mud pot in the Virudhunagar District Sports stadium.


 🌸 World Championship Badminton: Indian player Srikanth made history by advancing to the final for the first time.

 🌸 Appointment of K L Rahul as Vice-Captain of the Indian Test Team.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Friday, December 17, 2021

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 18.12.21

  திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்: அமைச்சியல்

அதிகாரம்: அவை அஞ்சாமை

குறள் எண்: 727

குறள்:
பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார்.
குறள் விளக்கம்:

அறிவுடையோர் நிறைந்த அவையில், அவர்கள் மனத்தில் பதியும் அளவுக்குக் கருத்துக்களைச் சொல்ல இயலாவிடின், என்னதான் நூல்களைக் கற்றிருந்தாலும் பயன் இல்லை.



பழமொழி :

Love thy neighbour as thyself. 

உன்னைப் போலவே பிறரை நேசி.

இரண்டொழுக்க பண்புகள் :

1. பொய்யுரைத்தால் புகழும் கெடும் எனவே ஒரு போதும் பொய் கூற மாட்டேன்.

2. சோம்பினால் வளர்ச்சி கெடும் எனவே எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க முயல்வேன்.

பொன்மொழி :

குற்றத்துக்கு காரணம் அறியாமையே. குற்றம் செய்யாமல் இருக்க விரும்பினால் நல்லவர்களுடன் பழக வேண்டும்.பிறர் நம்மைத் தாழ்வாகக் கருதவோ, நடத்தவோ இடம் அளிக்கக்கூடாது.___பாரதியார்

பொது அறிவு :

1. மன்னார் வளைகுடாவில் கலக்கும் தென்னிந்திய ஆறு எது? 

தாமிரபரணி 

2. சாத்தனூர் அணை எந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது? 

தென்பெண்ணை.

English words & meanings :

In the neck of time - just in time, கடைசி நேரத்தில், 

in the dark - not aware of something, சுற்றி நடக்கும் காரியங்கள் குறித்து அறியாமல் இருப்பது

ஆரோக்ய வாழ்வு :

வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாக்கும்.


டிசம்பர் 18


ஜெ.ஜெ. தாம்சன்  அவர்களின் பிறந்தநாள்




ஜெ.ஜெ. தாம்சன்(Joseph John Thomson) என்று பொதுவாக அறியப்படுகின்ற சர் ஜோசப் ஜான் தாம்சன்(டிசம்பர் 181856 - ஆகஸ்ட் 301940)அணுவின் அடிப்படைப் பொருளான மின்னணு எனப்படும் எலக்ட்ரானைக் கண்டுபிடித்த ஆங்கில இயற்பியலார் ஆவார். இவர் மின்சாரவியல்காந்தவியல், ஐசோடோப்புகள் குறித்து ஆய்வுகள் செய்தவர். 'நவீன அணு இயற்பியலின் தந்தை' எனப் போற்றப்படுபவர். நிறை நிறமாலையைக் கண்டறிந்தவர்.இயற்பியல் பேராசிரியராக விளங்கியது மட்டுமல்லாமல் தனது ஆய்வுகளுக்காக 'ஆதம்சு பரிசு' மற்றும் 1906 -ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு ஆகியவற்றைப் பெற்றவர்.


நா.பார்த்தசாரதி  அவர்களின் பிறந்தநாள்






நா.பார்த்தசாரதி (Na. Parthasarathyடிசம்பர் 181932 - டிசம்பர் 131987) புகழ் பெற்ற தமிழ் நெடுங்கதை எழுத்தாளர் ஆவார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளது. இவருடைய புகழ் பெற்ற நெடுங்கதைகளான குறிஞ்சி மலர் மற்றும் பொன் விலங்கு தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன. சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.இவர் எழுதிய "சாயங்கால மேகங்கள்" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1983 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாவல் வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது. இவர் 93 நூல்களை எழுதியிருக்கிறார்

நீதிக்கதை

மூன்று மீன்கள்

ஒரு சிறிய குளத்தில் மூன்று மீன்கள் வாழ்ந்து வந்தன. முதல் மீன் தனக்குத் துன்பம் வரும் முன்பே தப்பித்துக்கொள்ள விரும்பும். இரண்டாவது மீன் தனக்குத் துன்பம் வரும்போது தப்பித்துக்கொள்ள வழிதேடும். மூன்றாவது மீன் தனக்குத் துன்பம் வந்தால் அந்தத் துன்பத்தை ஏற்றுக்கொள்ளும். இந்த மூன்று மீன்களும் நண்பர்களாக வாழ்ந்து வந்தனர். 

ஒரு நாள் மீனவர்கள் இருவர் குளக்கரைக்கு வந்தனர். குளத்தில் நீர் குறைவாக இருந்ததால் நாளை வந்து குளத்திலுள்ள மீன்களையெல்லாம் பிடித்துச் செல்லலாம் என்று பேசிக்கொண்டனர். 

அதைக் கேட்டுக் கொண்டிருந்த முதலாவது மீன், ஓடிச்சென்று தன் நண்பர்கள் இருவரிடமும் அதைப் பற்றிக் கூறி எச்சரிக்கை செய்தது. பின்னர், அந்தக் குளத்தை விட்டு ஒரு வாய்க்காலின் வழியே வெளியேறி வேறு இடத்துக்குச் சென்று விட்டது. 

இரண்டாவது மீன், நாளை தானே, அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்றது. மூன்றாவது மீன், வருவது வரட்டும்! எது நடந்தாலும் அது விதிவசம்தான் என்று சும்மா இருந்தது. 

மறுநாள் மீன் பிடிப்பவர்கள் வந்து குளத்திற்குள் வலையினை வீசினர். இரண்டாவது மீனும் மூன்றாவது மீனும் வலையில் அகப்பட்டன. 

இரண்டாவது மீன் மீனவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக தான் இறந்துவிட்டது போல் நடித்தது. அதனைப் பார்த்த மீனவர்கள், இறந்த மீன் நமக்கு எதற்கு? என்று நினைத்து, அதனை வலையிலிருந்து எடுத்து மீண்டும் குளத்திற்குள்ளேயே எறிந்து விட்டனர். அந்த மீன் குளத்திற்குள் ஓடிச்சென்று ஒளிந்துக் கொண்டது. 

மூன்றாவது மீன் வலைக்குள்ளேயே துள்ளிக்கொண்டிருந்தது. அதனை அவர்கள் பிடித்துச் சென்றனர். 

நீதி :
ஒரு சிக்கல் வரும் முன்னர் தப்பித்துக்கொள்பவரும் சிக்கல் வருகின்றபோது தப்பித்துக்கொள்பவரும் எப்போதுமே இன்பமடைவார்கள

இன்றைய செய்திகள்

18.12.21

◆தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும்: அரசாணை வெளியிட்ட தமிழக அரசு.

◆வங்கிகள் தனியார்மயத்தை கண்டித்து வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டம்.


◆இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனங்களுக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

◆முப்படைத் தளபதிகள் குழு தலைவராக ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவானே நியமிக்கப்பட்டுள்ளார்.


◆தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள்; பெருந்தொற்று பேராபத்தின் கடைசி அத்தியாயத்தில் இருக்கிறோம்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

◆உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் கிதம்பி ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கம் உறுதி செய்துள்ளார்.

◆ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 17 ரன்கள் எடுத்துள்ளது.

Today's Headlines

  When Tamizhthaai song was sung, everyone should stand up without fail: The government of Tamil Nadu issued the order.

 Bank employees and officials across the country protest against the privatization of banks.


 The Department of School Education has announced that a re competitive examination will be held for those who pass the qualifying examination for the posts of Intermediate Teacher and Graduate Teacher.

  Army Commander General MM.  Naravane has been appointed as the chief of the army staff


 Get vaccinated;  We are in the last episode of the Great Depression: said US President Joe Biden.

 India's Kitambi Srikanth has advanced to the semifinals of the World Badminton Championships.

 ◆ England is 17 for two wickets on Day 2 of the Ashes Test.
 Prepared by

Covai women ICT_போதிமரம்