இயல் : அரசியல்
அதிகாரம்:47 தெரிந்து செயல் வகை
குறள் எண்:462
குறள்:
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்.
பொருள்:
தாம் தேர்ந்துகொண்ட நிருவாகச் சுற்றத்தோடு ஒரு செயலை ஆராய்ந்து திட்டமிட்டுச் செய்பவர்க்குச் செய்ய முடியாத செயல் என்று எதுவும் இல்லை.
It is easier to destroy than to create
அழிப்பது சுலபம், ஆக்குவது கடினம்.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. கடமை தவறாமல் உதிக்கும் சூரியன் போல நானும் என் கடமையை தவறாமல் செய்வேன்.
2. கல்லடிபட்டாலும் கனி தரும் மரங்கள் போல நானும் பலன் எதிர்பாராமல் பணி செய்ய முயற்சிப்பேன்.
பொன்மொழி :
பிறருக்கு உதவுவது உயர்ந்த பண்பு என்றால் நேர்மை என்பது சிறந்த கொள்கை.
Thought for the Day :
Small steps taken daily lead to great success.
பொது அறிவு :
1. தமிழ்நாட்டின் மாநில மலர் எது?
செங்காந்தள் மலர்.
2. ஜிம்பாபே நாட்டின் தேசிய மலர் எது?
செங்காந்தள் மலர்.
English words :
Neat - Clean and organized, சுத்தமான.
Pure - Clean and untainted, தூய்மையான
புவியியலும் சுற்றுசூழலும் :
கிராம பஞ்சாயத்து என்பது மக்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கும் உறுப்பினர்களால் அமைக்கப்படுகிறது.
இதன் தலைவரை பஞ்சாயத்து தலைவர் என்று அழைப்பார்கள்.
NMMS :
MAT
பொருந்தாததைத் தேர்ந்தெடு
(1) கடத்தும் திசு
(2) புறத்தோல் திசு
(3) அடிப்படைத்திசுக்கள்
(4) இணைப்புத்திசு
விடை: (4) இணைப்புத் திசு
நீதிக்கதை
பழைய உணவின் பாதிப்பு
ஒரு கிராமத்தில் சஹானா என்ற சிறுமி வாழ்ந்து வந்தாள். ஒருநாள் வீட்டில் சமைத்த உணவு மீதமிருந்தது. அதை அம்மா குளிர்சாதனப் பெட்டியில் வைத்தார்.
இரண்டு நாட்கள் கழித்தும் அந்த உணவை சஹானா சாப்பிட வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தாள்.
அம்மா, "பல நாட்கள் வைத்திருக்கும் உணவில் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் வளரலாம். அதைச் சாப்பிட்டால் உடல்நலம் பாதிக்கப்படும்," என்று கூறினார். ஆனால் சஹானா அதைக் கேட்காமல் அந்த உணவைச் சாப்பிட்டாள்.
சில மணி நேரங்களிலேயே அவளுக்கு வயிற்றுவலி, வாந்தி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது. மருத்துவரிடம் சென்றபோது, "நீண்ட நாட்கள் வைத்திருந்த உணவைச் சாப்பிட்டதால் உணவு நச்சுத்தன்மை (Food Poisoning) ஏற்பட்டுள்ளது. இனிமேல் எப்போதும் புதிதாக சமைத்த உணவையே சாப்பிட வேண்டும்,"என்று அறிவுறுத்தினார்.
அதன்பிறகு சஹானா, பல நாட்கள் வைத்திருந்த உணவைச் சாப்பிடாமல், எப்போதும் சுத்தமான மற்றும் புதிய உணவையே சாப்பிடத் தொடங்கினாள்.
நீதி:
பல நாட்கள் வைத்திருந்த உணவைச் சாப்பிடக்கூடாது; புதிய, சுத்தமான உணவே நல்ல ஆரோக்கியத்தைத் தரும்.
இன்றைய செய்திகள்

No comments:
Post a Comment