Tuesday, July 22, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.07.2025

பால கங்காதர திலகர்







திருக்குறள்: 

குறள் 151: 

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை 
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.   

 விளக்கம்:

 தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்.

பழமொழி :

The expert in anything was once a beginner.

 ஒவ்வொரு  நிபுணரும், ஒரு காலத்தில் புதியவர் தான்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.எனது பள்ளியின் வளர்ச்சிக்கான பணிகளில் எனது பெற்றோர்களும் ஈடுபட வலியுறுத்துவேன்.

2.ஊர் கூடி செய்யும் செயல்கள் அதிக நன்மை பயக்கும் என்பதால் அனைவரோடு சேர்ந்து எங்கள் பள்ளியின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன்

பொன்மொழி :

நீ நடந்து போக பாதை இல்லையே என்று வருத்தப்படாதே நீ நடந்தால் அதுவே புதிய பாதை-  அடால்ஃப் ஹிட்லர்

பொது அறிவு : 

01.இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள எல்லைக்கோட்டின் பெயர் என்ன?

                ராட்க்ளிஃப்  கோடு 

( Radcliffe  Line )

02. இந்தியாவில் இலக்கியத்திற்கான நோபல் பரிசை முதன் முதலில் பெற்றவர் யார்? 

                 ரவீந்திரநாத் தாகூர்

 (Rabindranath Tagore)

English words :

vigilant – careful and looking out for danger.ஆபத்து குறித்து எச்சரிக்கையாயிருக்கிற.

Grammar Tips: 

√  How long - used to talk about time. 

 Example: how long does it take to reach Delhi ?                   

√  How far - used to talk about distance.

 Example : How far is Chennai from Coimbatore?

அறிவியல் களஞ்சியம் :

 செல் பேசியிலிருந்து வெளியேறும் மின்காந்த கதிர்வீச்சு செவிமடுக்கும் போதெல்லாம், காதையொட்டி அமைந்துள்ள திசுக்களை நசுக்கிவிடுகிறது.  இதனால் கேட்கும் திறனைக் ‘காது’ மெதுவாக இழந்துவிடுகிறது.  செல்பேசியும், வானொலி போன்ற ஓர் ஒலிபரப்புச் சாதனமே.  இவற்றிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சை கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தைகள் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.  பதினாறு வயதுக்குக் குறைந்த சிறுவர்கள் அதிக நேரம் செல்பேசியைப் பயன்படுததும்போது பாதிப்பு பன்மடங்கு பெருகும்,  படிக்கும் நேரமும் பாதியாய் குறையும்.

ஜூலை 23

பால கங்காதர திலகர் அவர்களின் பிறந்தநாள்



பால கங்காதர திலகர் (Bal Gangadhar Tilak, மராத்தி: बाळ गंगाधर टिळक, பால கங்காதர திலகர்) 23 சூலை 1856 –1 ஆகத்து 1920 (அகவை 64), ஒரு இந்தியத் "தேசியவாதியும்", "சமூக சீர்திருத்தவாதியும்", விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் மக்கள் ஆதரவு பெற்ற தலைவரும் இவரே. இவரது பெயருடன் கௌரவப் பட்டமான "லோகமான்ய" என்பதையும் சேர்த்து அழைப்பதுண்டு. இந்தியாவுக்கு முதன் முதலில் தன்னாட்சி கோரியவர்களுள் திலகரும் ஒருவர். தன்னாட்சி எனது பிறப்புரிமை அதனை நான் பெறுவேன் என்னும் இவரது புகழ் பெற்ற கூற்று இன்றும் இந்தியாவில் நினைவுகூரப்படுகிறது. முதன் முதலில் மக்களிடையே சுதந்திரம் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர் ஆவார். மக்களிடையே அவருக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. 

நீதிக்கதை

 ஆந்தையும் அன்னமும்

ஒரு காட்டு பகுதியில நிறைய பறவை கூட்டம் வாழ்ந்துகிட்டு வந்துச்சு,ஒருநாள் ஓடைக்கு பக்கத்துல ஒரு அன்னப்பறவை கூட்டம் வந்துகிட்டு இருந்துச்சு ,அதுங்களோட அரசன் பின்னாடி எல்லா அன்ன பறவைகளும் வரிசையா வந்துகிட்டு இருந்துச்சுங்க

இத தூரத்துல இருந்து ஒரு ஆந்தை பாத்துச்சு ,அடடா இந்த அன்னப்பறவை அரசர் எவ்வளவு கம்பீரமா இருக்காரு ,நம்மளும் ஒரு நாள் நம்ம கூட்டத்துக்கு அரசரா மாறணும்னு நினைச்சது

ஒருநாள் அந்த அன்னப்பறவையோட அரசர் தனிமையில இருந்துச்சு ,அப்ப அங்க வந்த ஆந்தை அவர்கூட பேசுச்சு

நல்லா பேசுன ஆந்தைக்கும் அன்னப்பறவை அரசருக்கும் நட்பு உண்டாச்சு,

அன்னப்பறவை தன்னோட கூட்டத்தை பத்தியும் தன்னோட ஆட்சிய பத்தியும் நிறைய பேசும் ,ஆனா ஆந்தை தன்னோட வாழ்க்க பத்தி எதுவும்  சொல்லாது

ஒருநாள் காட்டுக்கு பக்கத்துல ஒரு போர் நடந்துச்சு ,அந்த போர் படைகள் இருக்குற பாசறைக்கு பக்கத்துல பறந்து போச்சு ஆந்தை

அப்பத்தான் அந்த படை எங்கயோ கிளம்ப தயாராகிட்டு இருந்துச்சு ,அப்ப ஆந்தை எதேச்சையா கூவுச்சு ,ஆந்தையோட சத்தத்தை கேட்ட படை வீரர்கள் ,அபச குணமா இருக்குனு படைய நாளைக்கு நகர்த்திக்கிடலாம்னு அங்கேயே தங்கிட்டாங்க

இத பாத்த ஆந்தை அடடா என்னோட குரலுக்கு இவ்வளவு மவுசானு நினைச்சிகிடுச்சு ,மறுநாளும் படை புறப்புடுற நேரத்துல கத்த ஆரம்பிச்சது ,அன்னைக்கும் படையை நகர்த்தாம விட்டுட்டாங்க

இத பாத்த ஆந்தைக்கு ஒரு யோசனை வந்துச்சு ,தன்னோட நண்பரான அன்ன ராஜாகிட்ட தம்பட்டம் அடிக்க ஒரு விஷயம் கிடைச்சுடுச்சுனு நினச்சு அவர்கிட்ட வந்துச்சு.

அரசரே,நானும் இப்ப ஒரு படைக்கு அரசரா மாறிட்டேன் ,என்னால ஒரு படையவே கட்டுப்படுத்த முடியும்னு சொல்லுச்சு ,ஓ அப்படியா ஆந்தையாரேனு ஆச்சார்ய பட்டுச்சு அன்னப்பறவை.

மறுநாள் அன்ன பறவை அரசரை கூட்டிகிட்டு படை இருக்குற இடத்துக்கு வந்துச்சு ஆந்தை ,அங்க வந்த உடனே அன்ன பறவை அரசருக்கு தெரிஞ்சிடுச்சு ,ஆந்தை ஏதோ தப்பு செய்துன்னு.

பாருங்க தயாரா இருக்குற இந்த படை நான் சொன்ன உடனே கலைஞ்சு போயிடும்னு சொல்லிட்டு ,படை இருக்குற பக்கம் பறக்க ஆரம்பிச்சது ஆந்தை ,இன்னைக்கும் ஆந்தை அபசகுனமா கத்திட கூடாதுனு காத்துகிட்டு இருந்த ஒரு போர் வீரன் ஒரு ஈட்டிய எடுத்து ஆந்தை மேல வீசினான்

அந்த ஆந்தை அங்கேயே அடிபட்டு செத்து போச்சு .

நீதி : வீண் பெருமை படு குழியில் தள்ளி விடும்.

இன்றைய செய்திகள்

23.07.2025

 ⭐சென்னையில் உள்ள 11,760 மழைநீர் வடிகால்களில் 1,034 கி.மீ. பகுதி தூர்வாரப்பட்டுள்ளது. 600 சேதமடைந்த கால்வாய்கள் சீரமைக்கப்பட்டு, 201 குளங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

⭐இந்தியா முழுவதும் உள்ள 766 மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிக்க ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 900 பேர் அனுமதிக்க பட்டுள்ளனர்.

⭐வங்காளதேசத்தில் பள்ளி மீது போர் விமானம் விழுந்து விபத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்வு

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀 ஒருநாள் போட்டியில் பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா 10 இடங்கள் முன்னேறினார்.
இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா முதல் இடத்தில் நீடிக்கிறார்.

Today's Headlines: 

⭐In Chennai,Out of 11,760 stormwater drainage  1,034 km. of the area has been desilted. 600 damaged canals have been repaired and 201 Pools have been renovated.

⭐One lakh 15 thousand 900 students have been admitted to study MBBS in 766 medical colleges across India. 

⭐Toll rises to 27 after fighter jet crashes into school in Bangladesh

 *SPORTS NEWS* 

🏀 India's Deepti Sharma moves up 10 places in ODI batting rankings. 
India's Smriti Mandhana remains at number one.

Covai women ICT_போதிமரம்

Monday, July 21, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.07.2025


 






திருக்குறள்: 

குறள் 121: 

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை 
ஆரிருள் உய்த்து விடும். 
         
விளக்கம் : 

அடக்கம் ஒருவனைப் பிற்காலத்தில் தேவர் உலகிற்குக் கொண்டு சேர்க்கும்; அடங்காமல் வாழ்வதோ அவனை நிறைந்த இருளுக்குக் கொண்டு போகும்.

பழமொழி :

Small efforts every day add up to big results.

 தினசரி சிறு முயற்சிகள் பெரிய வெற்றிகளை உருவாக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.எனது பள்ளியின் வளர்ச்சிக்கான பணிகளில் எனது பெற்றோர்களும் ஈடுபட வலியுறுத்துவேன்.

2.ஊர் கூடி செய்யும் செயல்கள் அதிக நன்மை பயக்கும் என்பதால் அனைவரோடு சேர்ந்து எங்கள் பள்ளியின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன்

பொன்மொழி :

நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் உன்னுடைய கால்களால் நடந்து போ.  பிறருடைய முதுகில் ஏறி பயணம் செய்ய நினைக்காதே -நியேட்சே.

பொது அறிவு : 

01.நெப்டியூன் கிரகம் சூரியனை சுற்றிவர எத்தனை ஆண்டுகளை எடுத்துக் கொள்கிறது?

            165  புவி ஆண்டுகள்

(165 Earth years)

02.தேசிய சுற்றுலா தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?        

               25 ஜனவரி (25 January)

English words :

avian – related to a bird.பறவை சம்பந்தப் பட்ட. aspire – to have a strong desire to do something. அழுத்தமான விருப்பம் 

Grammar Tips: 

 The bridge rule 
When u hear /j/ sound at the end of the words use
-dge after short vowels otherwise -ge only 

Ex short vowel 

Ju*dge*, bri*dge*
Pa*ge*, ca*ge*

அறிவியல் களஞ்சியம் :

 பாக்ஸ்பி2 மரபணுவின் வெளிப்பாட்டினால் சுரக்கப்படும் பாக்ஸ்பி2 புரதம் பெண்களின் மூளையில் அதிகம் காணப்படுவதால் பெண்கள் ஆண்களைக் காட்டிலும் அதிகமாகப் பேசுகின்றனர். பெண்குழந்தைகளும் தமது வயதினை ஒத்த ஆண்குழந்தைகளைக் காட்டிலும் விரைவாக அதிக வார்த்தைகளைக் கற்றுக் கொள்வதும் இதனால்தான்! சராசரியாக நாளொன்றுக்கு சுமார் 13000 வார்த்தைகளை ஆண்களைக் காட்டிலும் பெண்கள் பேசுகின்றனர் என்பது புள்ளி விவரம்.

ஜூலை 22

பை-தோராய-நாள்
பை என்பது ஒரு வட்டத்தின் சுற்றளவுக்கும் அதன் விட்டத்திற்கும் உள்ள விகிதமாகும். பை (π) என்பது 3.14 என்ற தசம மதிப்பைக் கொண்டுள்ளது. 1706 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் கணிதவியலாளர் வில்லியம் ஜோன்ஸ் இந்த விகிதத்தைக் குறிக்க π குறியீட்டை உருவாக்கினார், பின்னர் இது சுவிஸ் கணிதவியலாளர் லியோன்ஹார்ட் யூலரால் பிரபலப்படுத்தப்பட்டது.

பை தோராய நாள் ஜூலை 22 அன்று கொண்டாடப்படுகிறது மற்றும் பை நாள் மார்ச் 14 அன்று கொண்டாடப்படுகிறது. 

நீதிக்கதை

 எல்லா உயிர்களுக்கும் உதவி செய்

ஒரு நாட்டு  ராஜாவிடம் முத்தன்  வேலை செய்து வந்தான். அந்த ராஜாவுக்கு மிருகங்கள் பறவைகள் பேசும் பாஷை தெரியும். முத்தனுக்கு ஒரேய ஆச்சரியம், எப்படி ராஜா விலங்குகள் பேசுவதை அறிந்து கொள்கிறார் என்பது அவனுக்கு வியப்பாக இருந்தது, முத்தன்  தான் அந்த ராஜாவுக்கு தினமும்  உணவு கொண்டு கொடுப்பான்.  ராஜாவின் உணவில் ஒரு பகுதி மட்டும் தனியாக தனிப் பெட்டியில் ராணியே சமைத்துத் தருவாள்.  ஒரு நாள்  முத்தன் அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்தான். அந்த பெட்டிக்குள்  ஏதோ  துண்டு தூண்களாக  சமைத்து வைக்கப்பட்டிருந்தன. இது என்னவாக இருக்கும் என்று  ஒரு துண்டை எடுத்து சாப்பிட்டுப் பார்க்கிறான். அதைச் சாப்பிட்டதும் முத்தனுக்கு பறவை மிருகங்களின் பேசும் பாஷை புரிய ஆரம்பிக்கிறது. புதிய  சக்தி கிடைத்ததும் அவன் அரண்மனையில் இருந்து அப்படியே புறப்பட்டு கிளம்பி விடுகிறான். 

அவன் குதிரையில்  கிளம்பிச் செல்லும் வழியில் எறும்புகள்  சாரை சாரையாக போவதை பார்த்தான்,  எறும்பின்  தலைவன் இவனிடம் குதிரையை எறும்புகளை மிதிக்காத வண்ணம் செலுத்தும் படி வேண்டிக் கொண்டது. அவனும் அப்படியே செய்தான். எறும்புகள் நன்றி தெரிவித்து, என்றேனும் உங்களுக்கு  உதவுவேன் என்று கூறியது.

அடுத்து, அவன் செல்லும் வழியில் குளம் இருந்தது அங்கு மூன்று மீன்கள் அழும் குரல் கேட்டது. அவை புதருக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன. குளத்தில் தாவிக் குதிக்கும் போது அவை தவறிப் புதரில் விழுந்திருந்தன. அத்தனையும் காப்பாற்றி தண்ணீருக்குள் மீண்டும் எடுத்துவிட்டு கிளம்பினான். மீன்களும் நன்றி தெரிவித்தது.

அவன் கொஞ்ச தூரம் ஒரு காட்டைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தான். சின்னஞ்சிறு காகங்களின் குரல் கேட்டது. தாய் காக்கை அவைகளிடம் “நீங்களே உங்கள் உணவைத் தேடிக் கொள்ளுங்கள் ” என்று கூறி மரத்தில் இருந்து கீழே தள்ளி விட்டிருந்தது. அவைகளுக்கு தானியங்களை உணவாக கொடுத்துவிட்டு கிளம்பினான். அவை மிகுந்த மகிழ்ச்சியுடன் நன்றி கூறின. அதன் பின் காட்டைக் கடந்து அவன் வேறு ஒரு நாட்டுக்குள் நுழைந்தான். ஊரே கோலாகலமாக இருந்தது. 

அந்த நாட்டு இளவரசி தன் கணவனைத் தேர்ந்தெடுக்கும் சுயம்வரம் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தாள். வேலைக்காரனுக்கு ஆசை, எப்படியும் இந்தப்போட்டியில் கலந்துகொண்டு நாம் இந்த நாட்டின் அரசனாக வேண்டும் என ஆசைப்பட்டான். போட்டியில் கலந்து கொண்டான். போட்டியில் வெற்றி பெறவில்லை என்றால்   சிறையில் தள்ளிவிடுவார்கள்.   போட்டி ஆரம்பம் ஆனது, அவனை ஒரு குளத்திற்குக் கூட்டிப் போனார்கள். குளத்திற்குள் ஒரு மோதிரத்தை போட்டு அதனை  எடுக்க வேண்டும் என கட்டளையிட்டார்கள் . அவன் பயந்து மலைத்து நின்றான். குளத்திற்குள் நீந்த ஆரம்பித்த அவனுக்கு ஆச்சரியம்....! “இதோ உங்கள் மோதிரம்” என்று ஒரு குரல் கேட்டது. ஒரு மீன் தன் வாயில் மோதிரத்தைக் கவ்விக்கொண்டு வந்திருந்தது. அது அவன் புதலிருந்து காப்பாற்றிய மீன். இளவரசி அடுத்த போட்டி வைத்தாள். ஒரு மூட்டை அரிசி முழுவதும் தோட்டத்தில் கொட்டப்பட்டு   விடிவதற்குள் ஒரு அரிசி விடாமல் சேகரிக்க  வேண்டும். ஆகா இது நடக்கவே நடக்காது நமக்கு சிறை தான்  என்று முடிவு செய்து அவன் தூங்கி விட்டான். அவன் உதவி இருந்த எறும்புகள் ஒவொன்றாக பொருக்கி ஒரு மூட்டையில் வைத்திருந்தது. அதனால் அதிலும் ஜெயித்து விட்டான். இறுதியான போட்டி ஒரு தங்க ஆப்பிள் காய்க்கும் மரம் காட்டில் இருக்கிறது- அதைக் கண்டுபிடித்து ஆப்பிளை எடுத்து வர வேண்டும். அவன்  இருட்டும் வரை தேடினான் பசுமை மரங்கள் மட்டுமே இருந்தன. தங்க மரத்தைக் காணவே இல்லை. கவலையுடன் இருட்டியபிறகு தூங்கிவிட்டான். காலையில் எழுந்து பார்க்கிறான்  அவன் அருகில் தங்க ஆப்பிள் இருந்தது. அவனிடம் உதவி பெற்ற காகங்கள் அந்த ஆப்பிளைத் தேடிக் கொண்டு வந்து அவனிடம் போட்டிருந்தன. அவன் அவைகளுக்கு நன்றி தெரிவித்தான். எல்லா போட்டியிலும் ஜெயித்ததால் அவனை இளவரசி மணந்து கொண்டாள். அவன் ராஜாவாக அவளுடன் அந்த நாட்டை மகிழ்ச்சியுடன் வெகு நாள் ஆட்சி செய்தான்.

நாம் செய்த உதவி வீணாகாது. அது நமக்கு ஏதாவதொரு வகையில் எப்போதாவது பயன்தரும். நாம் யாரேனும் ஒருவருக்கு உதவி செய்துவிட்டு மறந்து விட்டாலும்கூட அது பின்னொருநாளில் நமக்கு யார் வாயிலாகவாவது கிடைக்கும்.  ‘‘செஞ்ச உதவியும் இட்டுவைத்த விதையும் வீணாகப்போகாது’’  மிக மிக அவசியமான நேரத்தில் செய்யப் படும் உதவி இந்த உலகை விட மிகப் பெரியது. அரபுக் கதை. குழந்தைகளுக்கான கதை தமிழாக்கம்: ஆல்பர்ட் ” ஏப்ரல்-ஜூன் 2015 இதழ் சிறுவர் இலக்கியச் சிறப்பிதழாக வந்திருக்கிறது. குழந்தைகள் மட்டுமல்ல எந்த வயதினருக்கும் வாசிக்க இனிமையானவையே.

இன்றைய செய்திகள்

22.07.2025


⭐சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு

⭐இந்திய எல்லைக்கு அருகே திபெத்தில் ஓடும் பிரம்மபுத்திரா நதியில் ரூ.14.46 லட்சம் கோடியில் சீனா பெரிய அணையை கட்ட தொடங்கி உள்ளது.

⭐இந்தோனேசியாவில் சொகுசு கப்பல் தீ விபத்து: 5 பேர் பலி

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀மகளிர் செஸ் உலக கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை ஹம்பி

🏀வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி

🏀2025 செஸ் உலக கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு

Today's Headlines


 ⭐New Chief Justice of Chennai  High Court  takes Oath .

⭐China has started building a huge dam worth Rs. 14.46 lakh crore on the Brahmaputra River, which flows in Tibet near the Indian border.

⭐5 died  in luxury cruise ship fire in Indonesia 

 *SPORTS NEWS* 

🏀Indian player Humpy advances to semifinals of Women's Chess World Cup

🏀Australia wins first T20 against West Indies 

🏀2025 Chess World Cup to be held in India, announced.

Covai women ICT_போதிமரம்

Sunday, July 20, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.07.2025

திருமதி பிரதீபா பாட்டீல்

  






திருக்குறள்: 

குறள் 115: 

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் 
கோடாமை சான்றோர்க் கணி. 

விளக்கம் : 

தீமையும் நன்மையும் எல்லார்க்கும் முன்பே குறிக்கப்பட்டு விட்டன; இதை அறிந்து நெஞ்சத்தால் நீதி தவறாது இருப்பது சான்றோர்க்கு அழகாகும்.

பழமொழி :

Stay curious,stay learning. 

ஆர்வம் இருந்தால் தான் கற்றல் தொடங்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.எனது பள்ளியின் வளர்ச்சிக்கான பணிகளில் எனது பெற்றோர்களும் ஈடுபட வலியுறுத்துவேன்.

2.ஊர் கூடி செய்யும் செயல்கள் அதிக நன்மை பயக்கும் என்பதால் அனைவரோடு சேர்ந்து எங்கள் பள்ளியின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன்

பொன்மொழி :

எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறு ஆவதில்லை. வரலாறு ஆனவர்கள் யாரும் தனக்காக வாழ்ந்ததில்லை . - காமராஜர்

பொது அறிவு : 

01.இந்தியாவின் தங்க நகரம் என்று அழைக்கப்படும் நகரம் எது?

ஜெய்சல்மார் - ராஜஸ்தான்
Jaisalmar - Rajasthan

02. பூகம்ப அதிர்வை அளக்க பயன்படும் கருவி எது?

சீஸ்மோகிராப்
Seismograph

English words :

Parchment – a material made from the skin of animals for writing purposes in the past.

Grammar Tips: 

The catch rule

After short vowels, use 'tch'
Ex. Catch

After consonants and long vowels, use ch
Ex. Peach, bench 

அறிவியல் களஞ்சியம் :

 ஒவ்வொரு மனிதருக்கும் தனிப்பட்ட நறுமணம் இருப்பதால், வாசனை சோப்புகளால் ஏற்படும் பாதிப்புகள் மனிதருக்கு மனிதர் வேறுபடுகிறது. மனிதர்கள் தேர்ந்தெடுக்கும் சோப்புகளின் வாசனையும் அவர்களில் சிலரை மட்டும் கொசு கடிக்க ஒரு காரணமாக அமையலாம் என்று ஐசயன்ஸ் (iScience) என்ற ஆய்விதழில் வெளிவந்துள்ளது

ஜூலை 21

21 July 2007 – Pratibha Patil became the first woman President of India.

21 ஜூலை 2007 - திருமதி பிரதீபா பாட்டீல் அவர்கள் இந்தியாவின் முதல் பெண் குடியரசுத்தலைவர் ஆனார்.

நீதிக்கதை

 அறிவு உயிரைக் காப்பாற்றும்


வீமபுரி என்ற நாட்டை வீரகேசரி என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் நீதியும், நேர்மையும் தவறாமல் ஆட்சி செய்து வந்ததால் அவன் நாட்டு மக்கள் பயமும் கவலையும் இன்றி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள்.

அந்த அரசன் தன்னாட்டு மக்களின் செயல்களை கண்காணிக்க மாறுவேடம் அணிந்து செல்வது வழக்கம். அவ்வாறு அவன் மாறுவேடம் அணிந்து செல்லும்போது வழியில் உழவன் ஒருவன் வயலில் உழுது கொண்டிருப்பதை பார்த்தான். அவனைக் கண்ட மாறு வேடத்தில் இருந்த அரசன், “எல்லாம் வல்ல இறைவன் உனக்கு நல்ல வலிமையையும், நீண்ட வாழ்நாளையும் வழங்குவானாக” என்று வாழ்த்தினான். 

அதற்கு அந்த உழவன் மாறுவேடத்தில் இருந்த அரசனைப் பார்த்து, “தாங்கள் என்மீது காட்டும் அன்பிர்க்கு மிக்க நன்றி” என்றான். “நிலத்தில் எவ்வளவு வருமானம் கிடைக்கிறது?” என்று மாறுவேடத்தில் இருந்த அரசன் அந்த உழவனிடம் கேட்டான். 

அதற்கு உழவன், “மாதத்திற்கு நூறு வெள்ளி காசுகள் கிடைக்கின்றன” என்று பதில் அளித்தான். “அவ்வளவு தொகையை என்ன செய்கிறாய்?” என்று அரசன் கேட்டான். 

“ஐந்தில் ஒரு பங்கை அரசனுக்கு வரியாக செலுத்துகிறேன். இன்னொரு பங்கை நான் பட்ட கடனுக்கு அடைக்கிறேன். மற்றொரு பங்கை கடனாகத் தருகிறேன். நான்காவது பங்கை வீசி எறிகிறேன். இறுதிப் பங்கை எனக்காக செலவு செய்கிறேன்” என்று புதிராகப் பேசினான்.

இதை கேட்ட மாறுவேடத்தில் இருந்த அரசனுக்கு ஒன்றுமே புரியவில்லை. தன் மாறுவேடத்தை   கலைத்தான். இதுவரை தன்னிடம் பேசியவர் அரசர் தான் என்பதை அறிந்த உழவன் அவரை பணிவுடன் வணங்கினான்.

“நீ சொன்ன பதிலில் வரியாகத் தருவதும், உனக்காக செலவு செய்வதும்தான், எனக்கு புரிந்தது. மற்றவற்றின் அர்த்தம் என்ன?” என்று கேட்டான் அரசன். 

அதற்கு உழவன் அரசே, “என் வருமானத்தில் ஒரு பங்கை என் தாய் தந்தையருக்கு செலவு செய்கிறேன். என்னை வளர்த்து ஆளாக்கிய அவர்களுக்கு செலவு செய்வதை கடனுக்கு அடைக்கிறேன் என்றேன்.

இன்னொரு பங்கை என் மகனுக்கு செலவு செய்கிறேன். பிற்காலத்தில் என்னை காப்பாற்றப் போகிறவன் அவன். அதனால், அதை கடனாகத் தருகிறேன் என்றேன். 

நான்காவது பங்கை என் மகளுக்கு செலவு செய்கிறேன். எப்படி இருந்தாலும் திருமணம் ஆகி இன்னொருவன் வீட்டில் வாழ வேண்டியவள். அதனால் அந்த செலவை வீணாகத் தெருவில் எறிகிறேன் என்றேன். 

அந்த  உழவனின் பதிலை கேட்டு மகிழ்ந்த அரசன். உன் அறிவுக் கூர்மை மிகவும் நன்றாக உள்ளது. “இந்த விளக்கத்தை நான் இல்லாமல் நீ யாரிடமும் கூறக்கூடாது. அப்படி கூறினால் உன் உடலில் உயிர் இருக்காது” என்று சொல்லிவிட்டு சென்றான். 

அரசவைக்கு வந்த அரசன், தான் கேட்ட புதிரை அனைவரிடமும் சொல்லி அதற்கு விளக்கம் கேட்டான். ஒருவராலும் அதற்கு விளக்கம் கூற முடியவில்லை. இந்த புதிருக்கு யார் விளக்கம் கூறினாலும் அவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாக வழங்கப்படும், என்று அறிவித்தான் அரசன். 

அரசனுக்கு இந்த புதிரைக் கூறியவர் யார் என்பதை அறிந்து கொண்டான் அமைச்சர்களுள் ஒருவன். அந்த அமைச்சர் நேராக இந்த உழவனிடம் சென்றார்.. 
“அரசு நாணய சாலையில் புத்தம் புதிதாக அச்சடித்த இந்த ஐநூறு பொற்காசுகளை பெற்றுக்கொண்டு அரசரிடம் சொன்ன புதிருக்கான விளக்கத்தை என்னிடம் கூறு” என்றான் அமைச்சர். 

கண்ணை பறிக்கும் ஒளியுடன் கூடிய பொற்காசுகளை கண்ட உழவன் அரசரை எப்படியும் சமாளித்துக் கொள்ளலாம் என்று எண்ணி அந்த புதிருக்கான விளக்கத்தை கூறி பொற்காசுகளைப் பெற்றுக் கொண்டான்.

அரண்மனைக்குத் திரும்பிய அமைச்சர் நேரடியாக அரசிடம் சென்று புதிருக்கான விளக்கத்தை கூறினான். உழவன் தான் பதில் கூறி இருக்கிறான் என்பதை அரசன் அறிந்து கொண்டு, அவனை இழுத்து வருமாறு தன்னுடைய காவலர்களுக்கு ஆணையிட்டான்.

அரசவைக்கு இழுத்து வரப்பட்ட உழவனை பார்த்து, “உனக்கு என்ன துணிச்சல்? நான் இல்லாமல் யாரிடமும் அந்த புதிருக்கான விளக்கத்தை சொல்லக்கூடாது. சொன்னால் உன் உயிர் போய்விடும் என்று உனக்கு நான் கட்டளையிட்டிருந்தேன். என் கட்டளையை மீறி சொல்லி இருக்கிறாய், உன் உயிரை இப்பொழுது யார் காப்பாற்றப் போகிறார் என்று பார்ப்போம்” என்று கோபத்துடன் கேட்டான் அரசன். 

அதற்கு அந்த உழவன் அரசனைப் பார்த்து, “அரசே, நான் சொல்வதைக் கேளுங்கள். என் மீது எந்த தவறும் இல்லை என்று பணிவாக கூறினான்,” உழவன். 

அதற்கு அரசன், “நான் இல்லாமல் யாரிடமும் இந்த புதிருக்கான பதில் சொல்லக்கூடாது என்றேன் அல்லவா?” என்று கத்தினான். 

உடனே அமைச்சர் எடுத்து கொடுத்த பொற்காசுகளை அரசனிடம் காட்டிய உழவன், “இந்த பொற்காசுகளில் ஒரு பக்கத்தில் தங்கள் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இதை பார்த்து தான் அமைச்சரிடம் பதில் கூறினேன். 

எனவே தங்களை வைத்துக் கொண்டுதான் நான் விளக்கம் கூறினேன். தங்கள் கட்டளையை நான் எந்த வகையிலும் மீறவில்லை” என்று கூறினான். 

உழவனின் அறிவுக் கூர்மையை  அறிந்த அரசன் அவனுக்கு பரிசுகள் பல தந்து அனுப்பி வைத்தான். உழவனின் உயிரைத் தக்க சமயத்தில் காப்பாற்றியது அவருடைய அறிவுக் கூர்மையே ஆகும்.

இன்றைய செய்திகள்

21.07.2025

⭐இந்த ஆண்டில் 3-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை:
கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

⭐ இந்தியாவில், 18 வயதுக்கு மேற்பட்ட சுமார் 77 கோடி பேர் டைப்-2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2.5 கோடி பேர் நீரிழிவுக்கு முந்தைய நிலையில் அதாவது நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர்.

⭐இந்தியா சீனா மற்றும் ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து செயல்படும் RIC அமைப்பை (Russia-India-China Mechanism) உருவாக்க ரஷ்யா முயற்சி எடுத்து உள்ளது.


🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀உலக கோப்பை மகளிர் செஸ் காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஹம்பி வெற்றி

🏀Freestyle செஸ் தொடர்: உலகின் நம்பர் 1 வீரரான கார்ல்சனை மீண்டும் வீழ்த்தி பிரக்ஞானந்தா வெற்றி


Today's Headlines

⭐Warning to coastal residents near Mettur dam regarding the dam being filled for the 3rd time this year.

⭐ In India, about 770 million people over the age of 18 are suffering from type 2 diabetes. 25 million people are at risk of developing pre-diabetes.

⭐Russia is trying to create an RIC (Russia-India-China Mechanism) system that will bring together India, China, and Russia.

 SPORTS NEWS 

🏀Indian player Humpy won in the World Cup Women's Chess quarterfinal 

🏀 Freestyle Chess Series: Praggnanandhaa won again, defeating world No. 1 Carlsen.


Covai women ICT_போதிமரம்

Thursday, July 17, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.07.2025

நெல்சன் மண்டேலா

        






திருக்குறள்: 

குறள் 113: 

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை 
அன்றே யொழிய விடல். 

விளக்கம்: 

நன்மையே தருவதாக இருந்தாலும் நீதியை விட்டு விலகுவதால் வரும் லாபத்தை, அப்பொழுதே விட்டு விடுக.

பழமொழி :

Today a reader,tomorrow a leader. 

இன்று வாசிப்பவர், நாளை வழிகாட்டுபவர்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. வாழ்க்கையில் ஒரு செயலை ஆரம்பிப்பதற்கு முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிடுதல் மிக அவசியம். 

2. எனவே எந்த செயலையும் செய்யும் முன் திட்டமிடுவேன், செயல்படுவன்.

பொன்மொழி :

ஆச்சரியங்களைக் கண்டு வியப்படையாமல் ,அதன் தொடக்கப் புள்ளியிலிருந்து ஆராய்வதில் தான் வெற்றியாளனின் பயணம் தொடர்கிறது.

பொது அறிவு : 

01.இடிதாங்கியை கண்டுபிடித்தவர் யார்?

பெஞ்சமின் பிராங்கிளின்
Benjamin Franklin

02.தமிழ்நாட்டில் காற்றாலைகள் அதிகம் உள்ள இடம் எது?

முப்பந்தல் - கன்னியாகுமரி
Muppandal - Kanyakumari

English words :

Hamster - a wild nocturnal animal. வெள்ளெலி.
1. தனிமை விரும்பி. தன் சொந்த இனத்தோடு கூட வாழ விரும்பாது.
2. முன்னும் பின்னும் ஒரே வேகத்தில் ஓடக்கூடியது

Grammar Tips: 

 L:

Often silent after 'a', 'o', or 'u' (e.g., talk, walk, would). 

N:

Silent after 'm at the end of a word (e.g., autumn, hymn).

அறிவியல் களஞ்சியம் :

 குழந்தை பிறக்கும் பொழுது 300 எலும்புகள் இருக்கும். இவற்றில் 94 எலும்புகள் இளகி மற்றவற்றுடன் இணைந்து வளர்ந்த பருவத்தில் 206 ஆகிறது. எடையை தாங்குவதில் எலும்புகள் கருங்கல்லை விட உறுதியானவை. ஒரு தீப்பெட்டி அளவு உள்ள எலும்பு 9 டன் எடையை தாங்கும் அதாவது கருங்கல்லை போல நான்கு மடங்கு அதிகம்.

ஜூலை 18

நெல்சன் மண்டேலா அவர்களின் பிறந்தநாள்


நெல்சன் மண்டேலா (Nelson Rolihlahla Mandela, 18 சூலை 1918 – 5 திசம்பர் 2013), தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தொடக்கத்தில் அறப்போர் (வன்முறையற்ற) வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இவர்கள் மரபுசாரா கொரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர். மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. சிறையின் பெரும்பாலான காலத்தை இவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார். 1990 இல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது. மண்டேலா, உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்கினார். மண்டேலா, இனவெறி ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாபிரிக்காவை மக்களாட்சியின் மிளிர்வுக்கு இட்டுச் சென்றவர். அமைதிவழிப் போராளியாக, ஆயுதப் போராட்டத் தலைவனாக, தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடி பின்னர் விடுதலையாகி குடியரசு தலைவரரானார்
. அமைதிக்கான நோபல் பரிசு  இவருக்கு வழங்கப்பட்டது. நெல்சன் மண்டேலா பன்னாட்டு நாள் (Nelson Mandela International Day) என்பது தென்னாபிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை 18 ஆம் நாளைக் குறிக்க ஐக்கிய நாடுகள் அறிவித்த சிறப்பு நாளாகும்.

நீதிக்கதை

 நன்றி மறந்த சிங்கம்



ஒருநாள் ஒரு மரம் வெட்டுறவர் காட்டுக்குள்ள மரம் வெட்டிக்கிட்டு இருந்தாரு ,அப்ப யாரோ கத்துற மாதிரி சத்தம் கேட்டுச்சு

உடனே சத்தம் கேட்ட பக்கம் போய் பாத்தாரு அந்த விறகுவெட்டி.அங்க ஒரு சிங்கம் கூண்டுக்குள்ள அடைஞ்சு கிடைச்சது ,அத பாத்ததும் தெரிஞ்சது ஏதோ வேட்டைக்காரன் கூண்டு வச்சு அந்த சிங்கத்தை பிடிச்சிட்டான்னு.

விறகுவெட்டிய பாத்ததும் ”மனிதனே என்னை காப்பாத்துன்னு” சொல்லி கத்துச்சு அந்த சிங்கம் ,இருந்தாலும் தயக்கமா இருந்த அந்த விறகுவெட்டி ”சிங்கமே, நீ வேட்டையாடி சாப்புடுற மிருகம் உன்ன வெளிய விட்டா நீ என்ன கொன்னு தின்னுடுவன்னு” சொன்னாரு.

”மனிதனே நானே கூண்டுக்குள்ள அடிபட்டு கிடக்குறேன் என்னால உனக்கு எந்த ஆபத்தும் வராது கூண்ட தொறந்து விடு”ன்னு கெஞ்சி கேட்டுக்கிடுச்சு.

சிங்கத்தோட பேச்ச கேட்டு மனசு இறங்குன அவரு கூண்ட தொறந்து விட்டாரு ,வெளிய வந்த சிங்கம் திடீர்ன்னு அந்த மனுசன பிடிக்க பாஞ்சது.

பயந்துபோன விறகுவெட்டி ”நன்றி கெட்ட சிங்கமே, இது என்ன உன்ன காப்பாத்துன என்னையே கொல்ல வரேன்னு” கத்துனாரு

அப்ப அந்த சிங்கம் சொல்லுச்சு ”என்னோட குணம் உனக்கு தெரியாதா? ,நான் ஒரு வேட்டை மிருகம்னு தெரிஞ்சும் என்ன விடுவிச்ச உனக்கு என்ன நடந்தாலும் அதுக்கு நான் பொறுப்பில்லன்னு” சொல்லி அவரு மேல குதிக்க ஆரம்பிச்சது.

சிங்கத்த நம்புனது ரொம்ப தப்புனு நினச்சு வருத்தப்பட்ட மனுஷன் அந்த சிங்கத்துக்கு உணவா ஆகுறது தனக்கு கிடைச்ச தண்டனைனு நினச்சுகிட்டு இருக்கும்போது அங்க ஒரு நரி வந்துச்சு.

”நரியாரே! நரியாரே! என்ன காப்பாத்துங்க”ன்னு சொல்ல, நடந்தத தெரிஞ்சுக்கிட்ட நரி அந்த மனுசன காப்பாத்த நினைச்சது

அது ”எப்படி சிங்கத்த நீ காப்பாத்துனனு” கேட்டுச்சு , உடனே சிங்கம் சொல்லுச்சு ”நான் இந்த கூண்டுக்குள்ள இருந்தப்பனு” கதைய சொல்ல ஆரம்பிச்சது.

”இருங்க இருங்க சிங்கராஜாவே, அது எப்படி நீங்க கூண்டுக்குள்ள மாட்டுனீங்க ,இந்த மனுஷன் எந்த பக்கம் இருந்து வந்தான் ,எப்படி இவனால கூண்ட தொறக்க முடிஞ்சதுன்னு” கேள்வி கேட்டுகிட்டே இருந்துச்சு.

அப்ப சிங்கம் நடந்தத நடிச்சு காமிக்க ஆரம்பிச்சது,அப்ப சொல்லுச்சு ”நான் இந்த கூண்டுக்குள்ள இருந்தானான்னு” சொல்லிகிட்டே கூண்டுக்குள்ள போச்சு சிங்கம் ,இதுதான் சமயம்னு டக்குனு கூண்ட மூடிடுச்சு நரி.

”இது என்ன தீர்ப்பு சொல்ல வந்த நீ இப்படி பண்ணலாம்ணு” கேட்டது , ”வேட்டையாடுற உன்னோட குணத்த எப்படி உன்னால மாத்திக்க முடியாதோ ,அதுமாதிரி அடுத்தவங்களை ஏமாத்துற பழக்கத்த என்னால விட முடியாதுன்னு” சொல்லி அந்த மனுசன காப்பாத்துச்சு அந்த நரி.

அப்பத்தான் அந்த சிங்கத்துக்கு ஒரு குறள் ஞாபகத்துக்கு வந்துச்சு

தனக்கு நன்மை செய்ய வந்த மனுசன கொல்ல நினைச்சது தன்னோட  நன்றி இல்லாத தனம். அதனால தனக்கு கிடைச்ச தண்டனை சரிதான்னு நினைச்சது .

இன்றைய செய்திகள்

18.07.2025

 ⭐மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவு

⭐தி.நகரில் ரூ.254 கோடியில் 5 மாடிகளுடன் பிரமாண்ட புதிய பஸ் நிலையம்

⭐பீகாரில் 125 யூனிட் வரை மின்சாரம் இலவசம் முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவிப்பு

⭐அமெரிக்காவில் பெய்து வரும் கனமழையால் நியூயார்க் & நியூ ஜெர்சியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பல நெடுஞ்சாலைகள்,  சுரங்கப்பாதைகள் வெள்ளத்தில் மூழ் கின.போக்குவரத்து கடும் பாதிப்பு.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஆஸ்திரேலியா தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுகிறார் அந்த்ரே ரஸல்.

🏀ரேபிட் செஸ் போட்டி: உலகின் நம்பர் 1 வீரரான கார்ல்சனை வீழ்த்தி பிரக்ஞானந்தா வெற்றி


Today's Headlines

⭐ Tamil Nadu Chief Minister ordered the officials  to complete the stormwater drainage work quickly 

⭐ A grand new 5-storey bus stand in T. Nagar for Rs 254 crore 

⭐Bihar CM Nitish Kumar announced the free electricity units  up to 125 units 

⭐The heavy rains in the United States of America have caused flooding in New York and New Jersey, flooding many highways and subways, and severely affecting traffic.

 SPORTS NEWS 

🏀Andre Russell retires from international cricket with the Australia series. 

🏀Rapid Chess Tournament: Praggnanandhaa beats world No. 1 Carlsen.


Covai women ICT_போதிமரம்