Thursday, July 31, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -01.08.2025

 

பால கங்காதர திலகர்


      






திருக்குறள்: 

குறள் 192: 

பயனில பல்லார்முன் சொல்லல் நயனில 
நட்டார்கட் செய்தலிற் றீது. 

விளக்க உரை: 

பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லா செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்.

பழமொழி :

Believe in yourself and magic will happen. 

உன்னை நீ நம்பினால் அதிசயங்கள் நடக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. இயற்கை வளங்கள் கடவுள் நமக்கு அளித்த கொடை.


2. எனவே அவற்றை பேணிப் பாதுகாப்பேன்.

பொன்மொழி :

கோபம் வரும்போது ஒரு கணம் பொறுமையாக இருந்தால் நூறு நாள் துயரத்தில் இருந்து தப்பிக்கலாம் - சீனப் பொன்மொழி

பொது அறிவு : 

01. இந்தியாவில் "வெண்மை புரட்சியின் தந்தை"என்று அழைக்கப்படுபவர் யார்?

Dr.வர்கீஸ் குரியன்
Dr. Verghese Kurien

02.இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் போர்க்கப்பல் எது?

ஐ.என்.எஸ்.விக்ராந்த்
I. N. S.Vikrant

English words :

cabin - a small room in a ship or boat where people sleeps.கப்பலில் உள்ள துயிலறை

Grammar Tips: 

Sion  rules 

If the base word ends with d, de, or se

Add 'sion'

Example 

Decide -decision
Expand -expansion
Collide-collision
Confuse-confusion 

அறிவியல் களஞ்சியம் :

 உணவுப் பாதை போடுவது போலவே, ஆபத்து ஏற்படுவதையும் வேறொரு வேதிப்பொருளை வெளியிட்டு சிப்பாய் எறும்புகள் எறும்புக் காலனிக்கு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிடுகின்றன. இதை அறிந்து மற்ற எறும்புகள் தப்பிச் செல்லும். அதேபோல ஆண் எறும்பை இனப்பெருக்கம் செய்ய ஈர்க்கவும் ராணி எறும்புகள் ஒரு வகை ஃபெரமோனை வெளியிடுகின்றன.

ஆகஸ்ட் 01

பால கங்காதர திலகர் அவர்களின் நினைவுநாள்

பால கங்காதர திலகர் (சூலை 23, 1856 –1 ஆகத்து 1920) (அகவை 64), ஒரு இந்தியத் "தேசியவாதியும்", "சமூக சீர்திருத்தவாதியும்", விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் மக்கள் ஆதரவு பெற்ற தலைவரும் இவரே. இவரது பெயருடன் கௌரவப் பட்டமான "லோகமான்ய" என்பதையும் சேர்த்து அழைப்பதுண்டு. இந்தியாவுக்கு முதன் முதலில் தன்னாட்சி கோரியவர்களுள் திலகரும் ஒருவர். தன்னாட்சி எனது பிறப்புரிமை அதனை நான் பெறுவேன் என்னும் இவரது புகழ் பெற்ற கூற்று இன்றும் இந்தியாவில் நினைவுகூரப்படுகிறது. முதன் முதலில் மக்களிடையே சுதந்திரம் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர் ஆவார். மக்களிடையே அவருக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. அவர் திலக் மகராஜ் என்றும் அழைக்கப்பட்டார்.

நீதிக்கதை

 ஆசை

விக்னேஷின் மாமா மதுரையிலிருந்து அவனுக்கு ஒரு பேனாவை அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார். விக்னேஷ் இப்படி ஒரு பேனாவைப் பார்த்தது இல்லை. இவன் வகுப்பில் படிக்கும் எம். எல். ஏ. மகனிடம் கூட இப்படிப்பட்ட பேனா இல்லை. பேனாவின் மூடியும், முள்ளும் தங்கம் போல பளபளப்பாக இருந்தது. பள்ளிக்கூடம் போனதும் பேனாவை எல்லோரிடமும் காட்டி மகிழ்ந்தான். வகுப்பில் முதல் மாணவனாகவும் ஒழுக்கமானவனாகவும் விளங்கிய விக்னேஷை உற்சாகப்படுத்த விரும்பிய அவன் மாமா. நீ படித்து பெரியவனாகி என்ன வேலைக்குப் போவாய் என்று கேட்டார். நான் படித்து கலெக்டராக வருவேன் என்றான் விக்னேஷ். இதைக் கேட்ட அவன் அப்பா விரலுக்கேத்த வீக்கம் வேண்டும். நீ சாதாரண விவசாயின் மகன். நீ ஆசைப்படுவதில் அளவு வேண்டும் என்றார். 

ஒரு ஏழையின் மகன் கலெக்டராக வர ஆசைப்படுவது பேராசையா? என்று நினைத்தான். வகுப்பில் கவலையாக இருந்தான். வகுப்பு ஆசிரியர் அவனைப் பார்த்து விசாரித்தபோது, அவன் கவலையை சொன்னான். அவன் சொன்னதைக் கேட்டதும் ஆசிரியர் இதற்கு நானே உனக்கு நல்ல பதிலைச் சொல்லுவேன். ஆனாலும் இன்று மாலை வரை காத்திரு. எது பேராசை என்று புரிந்து கொள்வாய் என்றார். அன்று மாலை பள்ளியின் ஆண்டு விழா. அதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் பேசும்போது, கூட்டத்தில் உட்கார்ந்திருந்த விக்னேஷிடம் வந்த ஆசிரியர், உன் சந்தேகத்தை அவரிடமே கேள் என்றார். தைரியமாக எழுந்து கலெக்டரிடம் ஒரு ஏழை விவசாயின் மகன் கலெக்ட்ராக வர ஆசைப்படுவது பேராசையா? என்று கேட்டான். 

நிச்சயமாக இல்லை. நேர்மையான வழியில் பெறுவதாய் இருந்தால் உலகத்தைக்கூட வாங்க ஆசைப்படலாம். உழைப்பும் உறுதியான முயற்சியும் இருந்தால் எதற்கும் ஆசைப்படலாம். அது பேராசை ஆகாது என்று பேசி முடித்தார் கலெக்டர். இருபது ஆண்டுகள் கழிந்தன. அதே பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் விக்னேஷ் ஆண்டு விழாவில் பேசிக் கொண்டிருந்தார். நம்பிக்கையும் உறுதியான முயற்சியும் உழைப்பும் தர தயாராக இருந்தால் கலெக்டராக மட்டுமல்ல. இந்த நாட்டின் ஜனாதிபதியாக வர ஆசைப்படுவது கூட பேராசை ஆகாது என்று சொன்னபோது மாணவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். 

நீதி :
விடாமுயற்சி இருந்தால் எதையும் சாதிக்கலாம்.

இன்றைய செய்திகள்

01.08.2025

⭐நலம் காக்கும் ஸ்டாலின் புதிய மருத்துவ திட்டம் -ஆகஸ்ட் 2ஆம் தேதி  முதல் தொடங்கப்பட உள்ளது.

⭐தமிழகத்தில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல் குறித்து  சுகாதாரத்துறை மூலம் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

⭐இந்தியப் பொருட்களுக்கு 25% இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ICC இரண்டு அடுக்கு டெஸ்ட் கிரிக்கெட் சிஸ்டம்: 
முன்னணி 6 அணிகள் ஒரு பிரிவாக பிரிக்கப்படும்.

🏀 இங்கிலாந்து - இந்தியா இடையிலான  டெஸ்ட் தொடரில் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு:  இதில் இந்தியா வெற்றி பெற்றால் தொடரை சமன் செய்யும்.


Today's Headlines

⭐  Stalin New Medical Program - Health Care Plan will start from August 2nd.

 ⭐ Health Department Warning about the fast spreading of Dengue Fever in Tamil Nadu.

⭐ US President Donald Trump has announced that 25% of tariffs will be imposed on imports of  Indian goods.

🏀 Sports News

🏀 ICC two-tier Test Cricket System:  The leading 6 teams will be divided into a category.

🏀 England and India  Test series: India won the toss and chose to bowl. 
 If India wins, the series will be balanced.

Covai women ICT_போதிமரம்

Wednesday, July 30, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.07.2025


      






திருக்குறள்: 

குறள் 184: 

கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க முன்னின்று பின்னோக்காச் சொல்.

 விளக்க உரை: 

எதிரே நின்று கண்ணோ‌ட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது.

பழமொழி :

Your attitude determines your altitude. 

உங்கள் மனநிலை தான் உங்கள் உயரத்தை தீர்மானிக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. இயற்கை வளங்கள் கடவுள் நமக்கு அளித்த கொடை.


2. எனவே அவற்றை பேணிப் பாதுகாப்பேன்.

பொன்மொழி :

பிரார்த்தனைகளில் மிக உயர்ந்தது பொறுமை - புத்தர்.

பொது அறிவு : 

01.இந்தியாவில் யாருடைய பிறந்தநாள் தேசிய விளையாட்டு தினமாக(ஆகஸ்ட் 29) கொண்டாடப்படுகிறது? 

             மேஜர் தியான் சந்த்

Major Dhyan Chand. 

02. முதன் முதலில் இரும்பு கப்பலை செய்தவர் யார்?      

                   வில்லியம் வில்கின்சன்

 William  Wilkinson

English words :

Shovel - a tool used for picking up and moving sand or snow. மண் அல்லது பனி அகற்றும் கருவி

Grammar Tips: 

 tion  rules 

If the base word ends with t or te 

Add 'tion'
Example 
Act-action 
Complete-completion 
Invent-invention 
Create-creation
Solute- solution
Locate- Location
Educate- Education
Translate- Translation
Pollute- Pollution
Select -Selection
Correct- Correction

அறிவியல் களஞ்சியம் :

உணவைச் சேகரித்து வைப்பது எறும்பின் வேலைகளில் மிக முக்கியமானது. ஆனால் இப்படி சேகரித்துவைக்கும் உணவு, மழைக்காலத்தில் பூசனம் பூத்து கெட்டுப்போய் விடாமல் இருக்க அவை ஒரு வேதிப்பொருளை பயன்படுத்துகின்றன. அந்த வேதிப்பொருளும், அதன் இயல்பும் தற்போது கண்டறியப்பட்டு மருந்து தயாரிப்பில், அது பயன்படுத்தப்படுகிறது. 

நீதிக்கதை

 உழைப்பின் பயன்


ஒரு விவசாயிக்கு மூன்று மகன்கள் உள்ளனர். விவசாயிக்கு வயது அதிகமானதால் இறந்து போகும் நிலையில் இருந்தபோது, தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார். ஒரு நாள், அவர் தம் பிள்ளைகளுக்கு தன்னுடைய நிலங்களை அவர்களுக்குப் பிரித்துக்கொடுத்தார். அது மட்டுமல்லாமல், அந்த நிலங்களிலும் ஓரிடத்தில், ஓரடி ஆழத்தில் புதையல் இருப்பதாகச் சொன்னார். அதைத் தேடி எடுத்துக்கொள்ளும்படிச் சொல்லிவிட்டு இறந்து போனார். 


பிள்ளைகள் மூவரும் தந்தைக்குச் செய்ய வேண்டிய இறுதிக் காரியங்கள் அனைத்தையும் செய்தார்கள். அதன்பின், அவர் சொல்லிய புதையலை எடுப்பதற்காக நிலத்தைத் தோண்ட ஆரம்பித்தார்கள். முதலில் மூத்த மகனின் நிலம் முழுவதையும் ஒரு அடி ஆழத்துக்கு தோண்டினார்கள். புதையல் எதுவும் கிடைக்கவில்லை. 


எப்படியும் புதையலைக் கண்டுபிடித்து விட வேண்டும் என்ற வெறியில், இரண்டாவது மகனின் நிலத்தையும் தோண்டினார்கள். ஏமாற்றம்தான் மிஞ்சியது. இவ்வளவு தூரம் வந்தபின் எப்படி விட முடியும் என்று கடைசி மகனின் நிலத்தையும் தோண்டினார்கள். மறுபடியும் ஏமாற்றமே! மூவரும் சேர்ந்து தோண்டியது வீணாக வேண்டாம் என்று எண்ணி, அந்த நிலங்களில் விதை விதைத்து நீர் பாய்ச்சி உரம் போட்டார்கள். ஆண்டு முடிவில் அவர்கள் நிலத்தில் அமோக விளைச்சல். அறுவடை செய்து விற்றதில் அவர்களுக்குக் கொள்ளை லாபம். இப்படி உழைப்பால் வரும் பயனைத்தான் அப்பா புதையல் என்று குறிப்பிட்டார் என்று பிள்ளைகள் மூவரும் புரிந்து கொண்டார்கள். 


நீதி :

உழைப்பினால் வரும் பணம் அதிஷ்டம் தரும்.

இன்றைய செய்திகள்

31.07.2025


⭐தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது- துணை முதலமைச்சர் பெருமிதம்

⭐தமிழகத்தின் கிராமப்புறங்களில் செயல்படக்கூடிய டீக்கடைகள் முதல் கல்யாண மண்டபம் வரை (119 சேவை தொழில்களுக்கு) கட்டணம் செலுத்தி தொழில் உரிமம் பெற வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

⭐ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை பாதுகாப்பு படையினர் அதிரடி.

⭐இந்தியாவுக்கு சுனாமி எச்சரிக்கை இல்லை மக்கள் அச்சப்படவேண்டாம் என்று அறிவுறுத்தல்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀 கடைசி லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு இந்தியா தகுதி பெற்றது.

🏀இங்கிலாந்து - இந்தியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.

Today's Headlines


⭐Tamil Nadu is the leading state in attracting industrial investments - Proudly says the deputy CM.

⭐The Tamil Nadu government has announced that 119 service industries (from tea stalls to wedding halls) operating in rural areas of Tamil Nadu will have to pay a fee and obtain a business license.

⭐Security forces killed 2 terrorists in Jammu and Kashmir.

⭐ No tsunami warning for India, people are advised not to panic.

 *SPORTS NEWS* 

🏀 India qualified for the semi-finals by defeating West Indies in the last league match.

 🏀 The 5th and final Test match between England and India begins today

Covai women ICT_போதிமரம்

Tuesday, July 29, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.07.2025

டாக்டர் முத்துலட்சுமி

  






திருக்குறள்: 

குறள் 184: 

கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க 
முன்னின்று பின்னோக்காச் சொல். 

விளக்க உரை: 

எதிரே நின்று கண்ணோ‌ட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது.

பழமொழி :

Be the change you want to see. 

நீ மாற்றத்தை விரும்பினால், நீயே அதற்கான முன்னோடியாக இரு.

இரண்டொழுக்க பண்புகள் :

1. இயற்கை வளங்கள் கடவுள் நமக்கு அளித்த கொடை.


2. எனவே அவற்றை பேணிப் பாதுகாப்பேன்.

பொன்மொழி :

பொறுமையும் விடாமுயற்சியும் மலையையே புரட்டி விடும் - மகாத்மா காந்தி

பொது அறிவு : 

01. மனித ரத்த வகைகளை கண்டுபிடித்தவர் யார்?

கார்ல் லேண்ட்ஸ்டெய்னர்
Karl Landsteiner

02.வீரமாமுனிவரின் இயற்பெயர் என்ன?

கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி
 Constantine Joseph Beschi

English words :

nostril - nose passage மூக்குத் துளை; 

odorous - sweet smelling நறுமணம்

Grammar Tips: 

 She has excellent oral skills for music 

In this sentence, instead of oral, we should use AURAL skills 

Oral related to the mouth 

AURAL  related to the hearing

அறிவியல் களஞ்சியம் :

 ஒவ்வொரு எறும்பின் காலனியில் முகப்பில் இருக்கும் காவலாளி எறும்பு, அங்கே வரும் ஒவ்வொரு எறும்பையும் முகர்ந்து பார்த்துவிட்டு, அது தனது குழுவைச் சார்ந்ததா என்று உறுதி செய்த பிறகே, உள்ளே செல்ல அனுமதிக்கும். எறும்புகள் நகர்ந்து செல்லும்போது சில நேரம் ஆண்டெனாவை, மற்றொரு எறும்பின் தலையில் வைத்து, தங்கள் கூட்டத்தைச் சேர்ந்தது தானா என்று பரிசோதிக்கும்.

ஜூலை 30

டாக்டர் முத்துலட்சுமி அவர்களின் பிறந்த நாள்

முத்துலட்சுமி (Muthulakshmi )(சூலை 30, 1886 - சூலை 22, 1968) மருத்துவர், சமூகப் போராளி, தமிழார்வலர் என பன்முகங்களை கொண்டவர் ஆவார். 1912 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்று மருத்துவச் சேவையாற்றினார். இந்தியப்பெண்கள் சங்கத்தின் முதல் தலைவராகவும் பணியாற்றினார். இந்திய அரசாங்கத்தின் பத்மபூசண் விருதைப் பெற்றுள்ளார்.

நீதிக்கதை


புள்ளிமான்கள்


ஒரு காட்டில் இரண்டு புள்ளி மான்கள் ஒரே மாதிரியாக இருந்தன. இணைப்பிரியாத நண்பர்களாக இருந்தன. எங்கு சென்றாலும் சேர்ந்தேதான் செல்லும். ஒரு நாள் மழை பெய்தது. மான்களால் விளையாட முடியவில்லை. மழை நின்ற பிறகு வெளியே சென்று இன்னும் மழை வருமா என்று இரண்டு மான்களும் மேலே பார்த்தன. அப்போது மேகத்திற்குள்ளிருந்து வெளியே வந்தது சூரியன். மான்கள் இரண்டும் சூரியனிடம், இன்னும் மழை வருமா? என்று கேட்டன. அதற்கு சூரியன், நான் வந்து விட்டேனே, இனி எப்படி மழை வரும்? என்று சொல்லி மான்களைப் பார்த்து சிரித்தது. 

எங்களைப் பார்த்து ஏன் சிரிக்கிறாய் என்றது ஒரு மான். நீங்கள் இருவரும் ஒரே மாதிரியாக இருக்கிறீர்கள்! அது தான் எனக்குச் சிரிப்பு வந்து விட்டது! தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நீங்கள் யார்? "நாங்கள் தான் அழகான இரண்டு புள்ளிமான்கள். நாங்கள் இருவரும் நண்பர்கள்" என்றன புள்ளிமான்கள். 

'சரி, உங்களில் யார் திறமையானவர்கள்?' என்று கேட்டது சூரியன்.

 'நாங்கள் இருவருமே திறமையானவர்கள் தான்!' என்றன புள்ளிமான்கள். 

சூரியன் சற்று யோசித்துவிட்டு சரி, அப்படியென்றால் நான் ஒரு போட்டி வைக்கிறேன். அதோ அங்கு ஒரு மரம் இருக்கிறது பாருங்கள். உங்களில் அந்த மரத்தை யார் முதலில் தொடுகிறார்களோ அவர்கள் தான் திறமையானவர்கள். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நான் ஒரு பரிசு தருவேன் என்றது. 

சூரியன் பரிசு தருவதாகச் சொன்னதும் இரண்டு மான்களும் ஓடத்தொடங்கின. ஆனால் மரத்தைத் தொடாமல் நின்று கொண்டிருந்தன. 

சூரியன் ’ஏன் மரத்தைத் தொடாமல் அப்படியே நின்று கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டது. 

ஒரு புள்ளி மான் சொன்னது, ”நான் என் நண்பனுக்கு விட்டுக்கொடுத்து விட்டேன்” என்றது. 

இன்னொரு புள்ளிமானும், ”நானும் என் நண்பனுக்கு விட்டுக்கொடுத்து விட்டேன்” என்று சொன்னது. 

இதைக் கேட்டு பெரிதும் மகிழ்ந்த சூரியன் சொன்னது, ”அழகான இரண்டு புள்ளி மான்களே! உங்கள் ஒற்றுமையைப் பார்த்து நான் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் இருவரும் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். உங்களுக்கு நான் ஒரு வானவில்லை பரிசாகத் தருகிறேன். நீங்கள் எப்போது விரும்புகிறீர்களோ அப்போதெல்லாம் வானவில்லே வருக என்று சொன்னால் போதும். வானத்தில் அழகான வானவில் தோன்றும். நீங்கள் அதைப்பார்த்து ரசிக்கலாம்” என்று சொல்லிவிட்டு சூரியன் விடை பெற்றது. மான்கள் இரண்டும் மகிழ்ந்தன. அவற்றிற்கு விருப்பமான நேரத்தில் வானவில்லை வரச்செய்து பார்த்துப் பார்த்து ரசிக்கும். 

நீதி :
நண்பர்களே விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் வாழ்க்கை வளமாக இருக்கும்.
 

இன்றைய செய்திகள்

30.07.2025

⭐காலாண்டு, அரையாண்டு தேர்வு: அட்டவணைகளை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ்.

⭐புலிகளைப் பாதுகாப்பதன் வழியே, நம் காடுகளின் ஆன்மாவை பாதுகாக்கிறோம் - பன்னாட்டுப் புலிகள் தினத்தில் முதல்வர்  மு.க.ஸ்டாலின் உரை.

⭐ துருக்கியில், இதுவரை இல்லாத வகையில் 122.9 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகி உள்ளது. இதனால் அங்கு காட்டுத்தீ பரவி வருகிறது. காட்டுத்தீக்கு இதுவரை 14 பேர் பலியாகி உள்ளனர். 

⭐ கம்போடியாவில் சைபர் மோசடி தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் 105 இந்தியர்கள் உட்பட 3,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.

🏀எனது சாதனை பயணம் தொடரும்: உலக கோப்பை செஸ் சாம்பியன் திவ்யா நம்பிக்கை.


Today's Headlines

⭐Our educational minister, Anbil Mahesh, has released the  Quarterly and Half-yearly exam schedules.

⭐Our Chief Minister, M.K. Stalin, delivered a speech on International Tiger Day, stating that we should protect tigers, as they are the soul of our forests.

⭐ Turkey has recorded an all-time high temperature of 122.9 degrees Fahrenheit, sparking wildfires that have killed 14 people so far.

⭐ Over 3,000 people, including 105 Indians, have been arrested in a cyber fraud raid in Cambodia.

 SPORTS NEWS 

🏀 The West Indies team suffers a crushing defeat to Australia on Home Town.

🏀 My journey of achievement will continue: World Cup chess champion Divya Bhasma.


Covai women ICT_போதிமரம்

Monday, July 28, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.07.2025

பன்னாட்டுப் புலி நாள்

     






திருக்குறள்: 

குறள் 165: 

அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார் 
வழுக்கியுங் கேடீன் பது. 

விளக்க உரை: 

பொறாமை உடை‌யவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் தவறாது கேட்டைத் தருவது அது.

பழமொழி :

Don't put off until tomorrow, what you can do today. 

இன்று செய்யக்கூடியதை நாளைக்கு தள்ளி வைக்காதே.

இரண்டொழுக்க பண்புகள் :

1. இயற்கை வளங்கள் கடவுள் நமக்கு அளித்த கொடை.


2. எனவே அவற்றை பேணிப் பாதுகாப்பேன்.

பொன்மொழி :

ஒழுக்கத்தின் பெருமையை குறைப்பதை தவிர, பொறாமைக்கு வேறு தன்மை கிடையாது - லிவி

பொது அறிவு : 

01.சுதந்திர இந்தியாவின் முதல் பெண் மத்திய அமைச்சர் யார்?

Dr.ராஜ்குமாரி அம்ரித் கவுர் .
Dr.Rajkumari Amrit Kaur 

02. பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினரான முதல் இந்தியர் யார்?

தாதாபாய் நௌரோஜி
Dadhabai Naoroji

English words :

frantic – extremely frightened, doing things in hurry. அச்சம் கொண்ட, படபடப்புடன் செயலாற்றுகிற

Grammar Tips: 

 They bought potatoes. They bought meat.

They bought both potatoes and meat

We should use both... and 
When we need both things together

அறிவியல் களஞ்சியம் :

 எறும்புகள் ராணுவ வீரர்களைப் போல எப்போதும் சாரிசாரியாக ஊர்ந்து செல்வதன் மூல ரகசியம் ஃபெரமோன் என்ற வேதிப்பொருள்தான். அந்தக் கோட்டை தவறவிட்டால், வழி தெரியாமல் போய்விடும்.எறும்புகள் போடும் இந்த ஃபெரமோன் பாதை எப்போதும் வளைந்து வளைந்துதான் இருக்கும். இடையே சில இடங்களில் நீர் சொட்டிக்கொண்டிருப்பது போன்ற சிறுசிறு ஆபத்துகள் இருந்தாலும் கூட, உணவு கிடைத்துவிட்டால் எறும்புக் கூட்டம் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாது.

ஜூலை 29

பன்னாட்டுப் புலி நாள்

பன்னாட்டுப் புலி நாள் அல்லது உலகப் புலி நாள் என்பது புலி வளம்பேணல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வோராண்டும் ஜூலை 29இல் கொண்டாடப்படும் நாளாகும்.இந்நாள் 2010இல் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் நடந்த புலிக் குழுமலில் உருவாக்கப்பட்டது. இந்நாளின் நோக்கம் புலிகளின் இயற்கை வாழ்விடங்களைக் காப்பாற்றுவதற்கான உலகளாவிய அமைப்பை ஏற்படுத்தி, புலி வளம்பேணும் சிக்கல்கள் குறித்த பொதுமக்கள் விழிப்புணர்வை மேம்படுத்தி அவர்களது ஆதரவைப் பெறுவதாகும்.

நீதிக்கதை

 கிணற்றில் விழுந்த நரி

ஒரு நாள் ஒரு நரி கிணற்றில் தவறி விழுந்துவிட்டது. விழுந்த அந்த நரி, யாராவது வந்து தன்னை காப்பாற்றுவார்கள் எனக் காத்திருந்தது. ஆனால், ஒருவரும் அந்தப் பக்கம் வரவேயில்லை. அதனால், சாப்பிடவும் முடியாமல், தூங்கவும் முடியாமல் தண்ணீருக்குள்ளேயே தவித்துக்கொண்டிருந்தது நரி. பத்து நாட்கள் கடந்து போனது. அன்னைக்கு அந்தப் பக்கமாக ஓர் ஆடு, மே... மே...ன்னு கத்திக்கொண்டே வந்தது. 

உடனே நரி உஷாரானது. இந்த ஆட்டை வைத்து எப்படியாவது மேலே வந்துவிட வேண்டும் என்று நரி நினைத்துக்கொண்டது. ஆடு அண்ணா, இங்கே வாயேன் என்று அன்போடு அழைத்தது நரி. கிணற்றில் இருந்து வந்த குரலைக் கேட்டதும், ஆடு எட்டிப் பார்த்தது. என்ன நரியாரே... தவறி விழுந்துட்டீயா? என்று கேட்டது ஆடு. சே... சே... நானாவது விழுவதாவது. நான் வேணும்னுதான் கிணற்றுக்குள்ளே இறங்கினேன். இந்தக் கிணற்றுத் தண்ணீர் ரொம்ப சுவையாக இருக்கு. நீ வேணும்னா இறங்கி வந்து குடிச்சுப்பாரேன் என்றது நரி. ஆடு கொஞ்சமும் யோசிக்கவில்லை. 

உடனே கிணற்றுக்குள் குதித்தது. நரியே... இந்தத் தண்ணீர் சுவையா ஒன்னும் இல்லையே... உன்னை நம்பி வந்தேன் பாரு... இப்போ எப்படி வெளியில போறது? என்று கேட்டது ஆடு. முதல்ல உன் மேலே ஏறி நான் வெளியே போறேன். அப்புறம் கையை நீட்டறேன். கையைப் பிடிச்சிக்கிட்டு நீயும் வெளியே வந்துடு என்றது நரி. ஆடும் ஒப்புக்கொண்டது. ஆடு மீது ஏறி நரி வெளியே வந்தது. ம்... கையை கொடு... என்னைச் சீக்கிரமா காப்பாத்து... என்றது ஆடு. உன்னை நான் எப்படிக் காப்பாத்துறது? எதைச் செஞ்சாலும் விவேகமா, புத்திசாலித்தனத்தோட செய்யணும். இப்போவாவது புரிஞ்சுக்க. நான் வரேன்னு சொல்லிவிட்டு நரி கிளம்பியது. தன் முட்டாள்தனத்தை நினைத்து ஆடு வருந்தியது.

இன்றைய செய்திகள்

29.07.2025

⭐சென்னையில் மாணவர்கள், மகளிருக்கு சிறப்பு பஸ் சேவைகள்- போக்குவரத்துக் கழகம்  பரிசீலனை.

⭐ உதகையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

⭐பட்டினியில் உயிரிழக்கும் காசா மக்கள்.. 3 இடங்களில் தற்காலிக போர் நிறுத்தம் அறிவித்த இஸ்ரேல்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀பெண்கள் உலகக் கோப்பை செஸ்: சாம்பியன் பட்டம் வென்ற திவ்யா தேஷ்முக்.

🏀ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் A-வில் இந்தியா, பாகிஸ்தான் இடம்பெற்றுள்ளது.

Today's Headlines

⭐Transport Corporation of Chennai has considered special bus services for students and women.

⭐The continuous heavy rains in Ooty have affected the normal life of the People. 

⭐Israel announced a temporary ceasefire in 3 locations as the people in Gaza are dying of hunger.

 SPORTS NEWS 

🏀Women's World Cup Chess: Divya Deshmukh won the championship.

🏀 In the cricket series, India and Pakistan are in the Asia Cup Group A.


Covai women ICT_போதிமரம்