Monday, November 22, 2021

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 23.11.21

 திருக்குறள் :

தக்கார் தகவிலர் என்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும். 

பொருள் 

ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப்போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும்

பழமொழி :

we can take a horse to water but can't it make it drink.


  தானாக கனியாத பழத்தைத் தடிகொண்டு அடித்தால்  கனியுமா?

இரண்டொழுக்க பண்புகள் :

1. சினம் எப்படி பட்ட உறவுகளையும் அழித்து விடும். 

2. ஆனால் பொறுமை பாறை போன்ற மனதை கூட இளக செய்து விடும். எனவே பொறுமை நம் வாழ்வில் முன்னேற மிகவும் அவசியம்

பொன்மொழி :

ஒரு நல்லப் புத்தகம் நூறு நல்ல நண்பர்களுக்கு சமம். ஆனால் ஒரு நல்ல நண்பன் ஒரு நூலகத்திற்கே சமம்.---அப்துல்கலாம்


பொது அறிவு :

1. மனித உடலின் குளிரான பகுதி எது? 

மூக்கு. 

2. பாலைவனமே இல்லாத கண்டம் எது? 

ஐரோப்பா

English words & meanings :

Heart in my mouth - feeling nervous, பயந்து நடுங்குதல், 

see eye to eye - I agree, ஒத்து போதல்

ஆரோக்ய வாழ்வு :

விட்டமின் D. இது நல்ல ஆரோக்கிய எலும்பு, சிறந்த இரத்த ஓட்டம், நச்சு பொருள் வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. காணப்படும் உணவுப் பொருட்கள் - பாலாடை, (cheese) வெண்ணெய், மீன், முட்டை மஞ்சள் கரு, காய்கறிகளில் உள்ளது

கணினி யுகம் :

CTRL+Windows Logo+F (Search for computers)

Windows Logo+F1 (Display Windows Help)

நவம்பர் 23

சுரதா 



சுரதா (நவம்பர் 23, 1921 - சூன் 20, 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால்‌ பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக்கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர்.


சர் ஜகதீஷ் சந்திர போஸ்  




சர் ஜகதீஷ் சந்திர போஸ் (Jagadish Chandra Bose) (1858-1937) தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர்.[1] போசு வானொலி அறிவியலின் முன்னோடிகளில் ஒருவர் என ஐஇஇஇ அதிகாரப்பூர்வமாக நூறு வருடங்கள் கழித்து அறிவித்தது.

நீதிக்கதை

ஒட்டகத்திற்கு நேர்ந்த கவலை

கதை :
ஒரு ஒட்டகம் காட்டில் தவம் மேற்கொண்டிருந்தது. அந்தத் தவத்தின் பெருமையை உணர்த்த பிரம்ம தேவர் ஒட்டகத்திற்குக் காட்சியளித்தார். என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார். 

இருந்த இடத்தில் இருந்த படியே உணவைப் பெரும் வகையில் என் கழுத்து நீண்டதாக இருக்க வேண்டும். அந்த நீளமான கழுத்தோடு நான் காட்டில் உலா வர வேண்டும் என்று கேட்டது. அவ்வாறே பிரம்ம தேவர் வரமளித்தார். அந்த வரத்தைப் பெற்ற பின் ஒட்டகம் உணவிற்காக அதிகம் முயற்சிக்கவில்லை. நீண்ட கழுத்துடன் எங்கும் திரிந்தது. உணவு எளிதாகக் கிடைத்தது. இதனால் சோம்பல் உற்றது ஒட்டகம். 

ஒருநாள் ஒட்டகம் அப்படி உலவிக் கொண்டிருந்த போது பெருங்காற்று வீசியது. மழை பெய்தது. அறிவற்ற அந்த ஒட்டகம் தன் தலையை ஒரு குகையில் நீட்டிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் மழைக்குப் பயந்து தன் மனைவியுடன் ஒரு நரி அந்தக் குகைக்குள் நுழைந்தது. 

குளிராலும் பசியாலும் வாடிய நரித் தம்பதியர்க்கு மிகப் பெரிய வாய்ப்பாக ஒட்டகத்தின் கழுத்து உணவாக அமைந்தது. ஒட்டகத்தின் இருபுறமும் இருந்துக் கொண்டு நரிகள் ஒட்டகத்தின் கழுத்தைக் கடித்து வேண்டிய அளவு மாமிசத்தைப் ருசித்தன. 

தனக்கு நேர்ந்த ஆபத்தை உணர்ந்த ஒட்டகம் தனது கழுத்தை சுருக்க முயற்சித்தது. நீண்ட கழுத்தைச் சுருக்க அரும்பாடுபட்டது. அதற்குள் நரிகள் ஒட்டகத்தின் கழுத்துப் பகுதி முழுதும் சாப்பிட்டு விட்டன. ஒட்டகம் மாண்டு போயிற்று. 

நீதி :
சோம்பல் சில சமயம் உயிருக்கு ஆபத்தாக மாறி விட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இன்றைய செய்திகள்

23.11.21

◆பார்வையிடாத வெள்ள சேத விவரங்கள் எதுவும் விடுபடாது என்று கன்னியாகுமரியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த மத்தியக் குழு தெரிவித்துள்ளது.

◆மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் கரோனா தடுப்பூசி செலுத்துவது அவசியம் என சென்னை உயர் நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

◆தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால் பள்ளிகளை மூட உத்தரவு.

◆கரோனா தொற்று காரணமாக நீண்டகாலமாகப் பள்ளிகளை மூடி வைத்ததால், மாணவர்களின் கற்கும் திறன் மட்டும் பாதிக்கப்படாமல், ஆண்-பெண் பாலினச் சமத்துவமும் பாதிக்கப்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது என்று யுனிசெஃப் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

◆ஊட்டச்சத்துக் குறைவு, பட்டினி, வறுமை ஆகியவற்றால் ஆப்கானிஸ்தானில் சாவின் விளிம்பில் 10 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் இருப்பதாக யுனிசெஃப் கவலை தெரிவித்துள்ளது.

◆பார்முலா1 கார் பந்தயம்: கத்தார் போட்டியில் இங்கிலாந்தின்  ஹாமில்டன் முதலிடம்.

◆உலக ஆண்கள் டென்னிஸ்: மெட்விடேவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஜெர்மனியைச் சேர்ந்த   ஸ்வெரேவ்

Today's Headlines

 * In the non-visited areas of Kanyakumari though the team didn't visit no damaged data will be left out says the Central team which visited the flood-affected areas of Kanyakumari.

* To take into account the welfare of students all teachers must take vaccination advice from the Chennai High Court.

* Due to the increased Air pollution in the capital Delhi the government ordered the schools to close. 

* In the study of UNICEF during this pandemic, they declared their concern that not only the educational level of children but also there is a chance for discrimination among the students regarding the male-female equality. 

* There are nearly 10 lakh children are in the edge of death due to poverty, malnutrition, and starving in Afghanistan
 
* In the Formula 1 race that took place in Qatar Hamilton from England won first place. 

* In the World Men's finals in Tennis Swerav of Germany defeat Medvedev and won the Championship
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment