Tuesday, August 12, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -13.08.2025

பிடல் காஸ்ட்ரோ

     






திருக்குறள்: 

குறள் 351: 

பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும் 
மருளானாம் மாணாப் பிறப்பு 

விளக்க உரை: 

மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்.

பழமொழி :

Keep going, even when it's hard. 

கடினமாக இருந்தாலும்,தொடர்ந்தால் வெற்றி உனதே.

இரண்டொழுக்க பண்புகள் :

1.உண்மை பேசுவதே உயர்ந்த பண்பு.


2.எனவே எப்போதும் உண்மையை மட்டுமே பேசுவேன்.

பொன்மொழி :

வாழு! வாழ விடு! ஏனெனில் வாழ்க்கையின் நியதி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் சகிப்புத்தன்மையுமே ஆகும் - மகாத்மா காந்தி.

பொது அறிவு : 

01.தமிழ்நாட்டின் முதல் அரசவைக் கவிஞர் யார்?

நாமக்கல் கவிஞர்.
வெ.இராமலிங்கம் பிள்ளை
(Nammakal V. Ramalingam pillai)

02. அதிக நாடுகளைக் கொண்ட கண்டம் எது?

ஆப்பிரிக்கா-54 நாடுகள்
(Africa 54- Countries)

English words :

gangway - a bridge that people use for getting on or off a ship.கப்பலில் ஏற அல்லது இறங்கப் பயன்படுத்தப்படும் பாலம் போன்ற அமைப்பு

Grammar Tips: 

Preposition continuation 

Today, we will see where to use On/In 

On- before day, mode of transport, position 

Ex –On Monday 
On a bicycle, 
On the ground 

In – week/ month/ year
Season 
State of condition 

Ex: In 2024
      In January 
      In summer 
      In good health

அறிவியல் களஞ்சியம் :

 மனித உடலில் 60 சதவிதம் நீர் தான் உள்ளது. இது சுமார் 50 லிட்டர் இருக்கும். அதாவது நூறு கிலோ மனிதனின் உடலில் 60 லிட்டர் தண்ணீர் தான் இருக்கிறது.

ஆகஸ்ட் 13

பிடல் காஸ்ட்ரோ அவர்களின் பிறந்தநாள் 

பிடல் காஸ்ட்ரோ (Fidel Alejandro Castro Ruz, (எசுப்பானியம்: [fiˈðel ˈkastro], ஆகஸ்ட் 13, 1926 - நவம்பர் 25, 2016) கியூபாவை சேர்ந்த பொதுவுடைமைப் புரட்சியாளரும் பொதுவுடைமை அரசியல்வாதியும் ஆவார். கியூபாவில் 1959 இல் புரட்சியை வழிநடத்தி புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவின் அரசை வீழ்த்தி தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்ற காஸ்ட்ரோ ,1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார்.கூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965 இல் பதவியேற்ற இவர் கூபாவை ஒற்றைக் கட்சி சமூகவுடைமைக் குடியரசாக்கினார். 49 ஆண்டுகள் கியூபாவை ஆண்ட காஸ்ட்ரோ பிப்ரவரி 24 2008 அன்று பதவியிலிருந்து விலகினார். உலகத்தில் நீண்ட காலத்துக்கு தலைமைப் பொறுப்பில் இருந்த தலைவர் காஸ்ட்ரோ மட்டுமே. பன்னாட்டளவில், காஸ்ட்ரோ 1979-ல் இருந்து 1983 வரை மற்றும் 2006 முதல் 2008 வரை, அணி சேரா இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருந்துள்ளார்.

பன்னாட்டு இடதுகை பழக்கமுடையோர் நாள்

பன்னாட்டு இடதுகை பழக்கமுடையோர் நாள் (International Lefthanders Day) என்பது இடது கை பழக்கம் உள்ளவர்களின் தனித்துவம் மற்றும் வேறுபாடுகளைக் கொண்டாடுவதற்காக ஆண்டுதோறும் ஆகஸ்ட் 13 அன்று அனுசரிக்கப்படும் பன்னாட்டு தினமாகும். 1976 முதல் "பன்னாட்டு இடக்கை பழக்கத்தவரின் நிறுவனத்தின்" நிறுவனர் ஆர். கேம்ப்பெல் என்பவரால் கொண்டாடப்பட்டது.

நீதிக்கதை

 கழுகின் நன்றியுணர்ச்சியும், நரியும்


ஒரு நாள் வேடன் ஒருவன் வேட்டையாட சென்றிருந்தான். அவன் விரித்திருந்த வலையில் கழுகு ஒன்று சிக்கிக்கொண்டது. அந்த கழுகின் சிறகுகளை மட்டும் வெட்டி சங்கிலியால் கட்டிப் போட்டான். அவ்வழியே சென்ற ஒருவர், கழுகின் மீது இரக்கப்பட்டு வேடனிடம் காசு கொடுத்து அந்தக் கழுகை வாங்கி, தன் வீட்டில் அன்புடன் வளர்த்தார். 

இறக்கைகள் நன்கு வளர்ந்தது, பின் அதைப் பறக்க செய்தார். கழுகு பறந்து செல்லும் போது ஒரு முயலைப் பார்த்தது. அதை தூக்கி வந்து தன்னை வளர்த்தவரிடம் காணிக்கையாகக் கொடுத்தது. 

இதைப் பார்த்த நரி, உன்னைப் பிடித்த வேடன் மறுபடியும் பிடிக்க வரலாம், நீ இந்த முயலை அவனிடம் கொடுத்திருந்தால், மறுபடியும் அவன் உன்னைப் பிடிக்காமல் இருப்பான். எதற்காக அவரிடம் கொடுத்தாய் என கழுகிடம் கேட்டது. 

இல்லை நீ சொல்வது தவறு. வேடனிடம் நான் முயலைக் கொடுத்தாலும், பிற்காலத்தில் அவன் என்னை பிடிக்காமல் இருக்கபோவதில்லை, ஆனால் நான் ஆபத்தில் இருந்தபோது என்னைப் காப்பாற்றியவருக்கு என் நன்றியையும், விசுவாசத்தையும் தெரிவிக்கவே முயலைக் காணிக்கையாகச் கொடுத்தேன் எனப் பதில் கூறியது கழுகு. 


நீதி :

உதவி செய்தவரிடம் நன்றியோடு இருப்பது தான் பண்புள்ள செயல்.

இன்றைய செய்திகள்

13.08.2025

⭐வருகிற 7-ந்தேதி முழு சந்திர கிரகணம்: சென்னையில் முழுமையாக தெரியும்

⭐சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானைகள் எண்ணிக்கை 780 ஆக உயர்வு-அதிகாரி தகவல்

⭐கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி: விலைப்பட்டியலை சமர்ப்பித்த டெல், ஏசர்

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀இரண்டு ஜப்பானிய குத்துச்சண்டை வீரர்கள் -ஷிகெடோஷி கோட்டாரி மற்றும் ஹிரோமாசா உரகாவா -பரிதாபமாக இறந்தனர்.

🏀41 பந்தில் சதம் விளாசிய டெவால்ட் ப்ரீவிஸ்: பொன்னான வாய்ப்பை தவற விட்ட ஐபிஎல் அணிகள்- டி வில்லியர்ஸ்


Today's Headlines

⭐Total lunar eclipse fully visible in Chennai on the 7th September.

⭐Official information about  Elephants in the Sathyamangalam Tiger Reserve areas has increased to 780 

⭐Dell and Acer have submitted the quotation for laptops, which will be provided to college students.

 SPORTS NEWS 

🏀Two Japanese boxers - Shigetoshi Kotari and Hiromasa Uragawa - died tragically. 

🏀Dewald Brevis hits 41-ball century in IPL teams that missed a golden opportunity - de Villiers

Covai women ICT_போதிமரம்

Monday, August 11, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.08.2025

விக்கிரம் சாராபாய்

     






திருக்குறள்: 

குறள் 284: 

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் 
வீயா விழுமந் தரும். 

விளக்க உரை: 

களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும்.

பழமொழி :

Without a goal,effort is directionless. 

இலக்கு இல்லாத உழைப்பு திசை தெரியாமல் போகும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.உண்மை பேசுவதே உயர்ந்த பண்பு.


2.எனவே எப்போதும் உண்மையை மட்டுமே பேசுவேன்.

பொன்மொழி :

நமது நம்பிக்கைகள் தகரும்போது பொறுமையே நம்மை பாதுகாக்கும் - தாமஸ் ஃபுல்லர்

பொது அறிவு : 

01.பொருளியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

ஆடம் ஸ்மித் (Aadam smith)

02.இந்தியாவில் "முணுமுணுக்கும் அரங்கம்"(Whispering gallery) எங்குள்ளது?

கோல்கும்பாஸ்- கர்நாடகா
(Gol Gumbaz- Karnataka)

English words :

gangway–a passage between rows of seats in a cinema, an aircraft, etc.திரையரங்கு, விமானம் முதலியவற்றில் இருக்கை வரிசைகளுக்கு இடையே உள்ள செல்வழி்.

Grammar Tips: 

 How to use or where to use At/On/ In

At = time, age, and a particular  place 

Ex: At 10 O'clock 

At the age of 40

At the office

அறிவியல் களஞ்சியம் :

 உடலின் கனமான உறுப்பு மூளை. இதன் எடை சுமார் 1 1/4 கிலோ

ஆகஸ்ட் 12

விக்கிரம் சாராபாய் அவர்களின் பிறந்தநாள்


விக்கிரம் அம்பாலால் சாராபாய் (Vikram Ambalal Sarabhaiஆகஸ்ட் 121919 – டிசம்பர் 301971)என்பவர் இந்திய இயற்பியலாளர் ஆவார். இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை எனக் கருதப்படுகிறார். 1969 ஆம் ஆண்டு சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது பெற்றார். இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டாவின் விண்ணேவுதலுக்கு முழுமுதல் காரணமாக இருந்தார். SITE எனப்படும் ‘செயற்கைக்கோள் உதவியுடன் தொலைக்காட்சியில் பயிற்றுவிக்கும் முயற்சி’ மூலம் 2,4000 இந்திய கிராமங்களிலுள்ள 50 லட்சம் மக்களுக்கு கல்வியை எடுத்துச்செல்ல உதவினார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை (ISRO) விரிவாக்கினார்.

உலக யானைகள் நாள்



உலக யானைகள் நாள் (World Elephant Day) ஒவ்வொரு ஆண்டும் ஆகத்து 12 ல் கொண்டாடப்படுகிறது.இந்த நாள் கொண்டாடப்படுவதன் நோக்கம் யானைகளை பாதுகாப்பதே ஆகும். இன்றைக்கு உலகத்தில் உள்ள 65 அமைப்புகள் மற்றும் யானைகளை கொண்ட நாடுகள் இந்த தினத்தை கொண்டாடி வருகின்றன. இந்த தினத்தில் தனியார் வளர்க்கும் யானைகளை பாதுகாப்பதும் ஒரு நோக்கமாகும்.முதன் முதலில் இந்த தினம் 2012 ஆக.,12ல் கொண்டாட ஆரம்பிக்கப்பட்டது.


தேசிய நூலக தினம். 



ஆகஸ்ட் 12 - இன்று தேசிய நூலக தினம். சிறப்பு மிக்க இந்த நாள் கொண்டாடப்படுவதற்குக் காரணமானவர், தமிழகத்தை சேர்ந்த சீர்காழி ராமாமிருதம் ரங்கநாதன்.  இந்திய நூலகத்துறைக்கு ஆர்.ரங்கநாதன் வழங்கிய அற்புதம்தான், 'கோலன் பகுப்புமுறை.' நூல்களைப் பொருள்வாரியாகப் பிரித்து அடுக்குவதற்கான அறிவியல்பூர்வமான அணுகுமுறையே 'கோலன் பகுப்புமுறை' எனப்படுகிறது. இந்தப் பகுப்பு முறை இவரால் ஆராய்ந்து கண்டுபிடிக்கப்பட்டதாகும். இது நூலகத்துறையைச் சார்ந்த பல மேல்நாட்டு அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் உள்ள நூலகங்களும் இந்த கோலன் பகுப்புமுறையைத்தான் பயன்படுத்துகின்றன. நூலகவியலுக்கு இவர் செய்த பங்களிப்புக்காக 1957-ம் ஆண்டு, இவருக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது அளித்து சிறப்பித்தது. இவரது பிறந்த தினத்தைத்தான் 'தேசிய நூலக தின'மாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நாளில் சிறந்த நூலகர்களுக்கு விருதுகளும் வழங்கப்படுகிறது. 'இந்திய நூலகத் தந்தை' என்று போற்றப்படும் எஸ்.ஆர்.ரங்கநாதனை, இந்த நாளில் நினைவுகூர்வோம்.

நீதிக்கதை

 பொய்


மேட்டுக்குப்பம் என்ற ஊரில் சுதன் என்பவனும், அவன் மனைவியும் பிறரை ஏமாற்றுவதில் சிறந்தவர்கள். தினந்தோறும் பத்துப் பேருக்கு அன்னதானம் அளிக்கிறேன் என்று பொய் சொல்லி காசுகளை வாங்குவான் சுதன். 

ஆனால், அவன் யாருக்கும் ஒரு பிடி சோறு கூட போட மாட்டான். அன்னதானம் வாங்குவதற்கு யாராவது வந்தால், அவர்களிடம் ஐயா! இப்பத்தான் பத்துப் பேர் வயிறார சாப்பிட்டுச் சென்றனர். நாளை வாருங்கள் வயிறார சாப்பிடலாம், என்று இனிமையாகப் பேசி அனுப்பிவிடுவான். 

பக்கத்து ஊரில் மகேன் என்பவன் இருந்தான். இவன் யாரையும் ஏமாற்றி விடுவான். சுதனைப் பற்றி கேள்விப்பட்டான் மகேன். சுதன் வீட்டில் விருந்து சாப்பிட வேண்டும் என்று மகேன் சுதன் வீட்டிற்கு சென்றான். ஐயா! உங்கள் அன்னதானத்தைப் பற்றி கேள்விப்பட்டு பக்கத்து ஊரில் இருந்து வருகிறேன், என்றான். 

ஆமாம், உண்மைதான். தினந்தோறும் பத்து பேருக்கு தலை வாழை இலையில் பதினாறு வகைக் கறிகளுடன் விருந்து பரிமாறுகிறேன். சற்று முன்தான் அவர்கள் மகிழ்ச்சியாக சாப்பிட்டுச் சென்றனர். ஆனால், உங்களை ஏமாற்ற எனக்கு விருப்பம் இல்லை, நாளை வாருங்கள் என்று சொல்லி வீட்டுக்குள் சென்ற சுதனிடம், யார் வந்தது? என்று மனைவி கேட்டாள். 

நம்மிடம் ஏமாற வெளியூரில் இருந்து வந்திருக்கிறான். நாளை வா! என்று சொல்லி விட்டேன். அவன் எத்தனை நாள் வந்தாலும் இதே பதில்தான், என்று சொல்லிச் சிரித்தான் சுதன். 

மறுநாள் விடியற்காலை நான்கு மணிக்கே சுதன் வீட்டுக் கதவை தட்டினான் மகேன். தூக்கக்கலக்கத்துடன் எழுந்த சுதன், கதவை திறந்தான். ஐயா! இன்று உங்கள் வீட்டு விருந்திற்கு முதல் ஆளாக வந்துள்ளேன். விருந்து தயாரானதும் எழுப்புங்கள், என்று சொல்லி அந்த வீட்டுத் திண்ணையில் படுத்துக்கொண்டான் மகேன். 

உள்ளே வந்த சுதன், மனைவியிடம், நேற்று வந்த வெளியூர்காரன் இன்று விடிகாலையிலேயே வந்து நம் வீட்டுத் திண்ணையில் படுத்துக்கொண்டான். விருந்து சாப்பிடாமல் போக மாட்டான் போல இருக்கிறது, என்று கவலையுடன் சொன்னான். 

கவலை வேண்டாம், அவனிடம் என் மனைவிக்குக் காய்ச்சல். நாளை வா, என்று சொல்லி அனுப்பி வையுங்கள், என்றாள் அவள். மனைவி சொல்படி, பொழுது விடிந்ததும் மகேனிடம் சோகமான முகத்துடன் வந்த சுதன், என் மனைவிக்குக் காய்ச்சல் படுத்தப்படுக்கையாகக் கிடக்கிறாள். இந்த நிலையில் அவளால் சமைக்க முடியாது. நாளை வாருங்கள் கண்டிப்பாக விருந்து சாப்பிட்டுச் செல்லலாம், என்றான். 

மனைவிக்குக் காய்ச்சல் என்பதற்காக அன்னதானத்தை யாராவது நிறுத்துவார்களா? பதினாறு வகைக் கறிகளோடு, வடை, பாயசம் நான் செய்கிறேன், என்று சொல்லி சமையல் அறைக்குச் சென்று, சமைக்கத் தொடங்கினான். இதை எதிர்பாராத சுதனும், அவன் மனைவியும் திகைத்தனர். 

சிறிது நேரம் சென்றது. சுதனுக்கும், மனைவிக்கும் ஒரு யோசனை வந்தது அதன்படி, மகேன் சமையலை முடித்தான். அடுப்படியில் இருந்ததால் புகை படிந்து இருக்கிறீர். ஆற்றிற்குச் சென்று நீராடிவிட்டு வாரும். வரும் போது வாழை இலைகளை அரிந்து எடுத்து வாரும், என்றான் சுதன். 

அவனும் ஆற்றிற்கு சென்று நீராடிவிட்டு, வாழை இலைகளுடன் வந்தான். அவன் வருவதை இருவரும் பார்த்தனர். உரத்த குரலில் அவள், வந்தவர்களுக்கு எல்லாம் சாப்பாடு போட நாம் சத்திரமா நடத்துகிறோம். யாருக்கும் இங்கே சாப்பாடு கிடையாது என்று கோபத்துடன் கத்தினாள். நான் யாருக்குச் சாப்பாடு போடச் சொன்னாலும் நீ போட வேண்டும். எதிர்த்துப் பேசினால் தொலைத்து விடுவேன், என்று கத்தினான் சுதன். 

இப்படியே அவர்கள் இருவரும் சண்டை போட்டபடியே பார்த்தனர். இலைகளுடன் நின்றிருந்த மகேன் அங்கிருந்து அசைவதாகத் தெரியவில்லை. தொடர்ந்து சண்டை போட்டனர். சற்று நேரத்தில் அங்கே அவனைக் காணவில்லை. இவர்கள் சண்டையை நிறுத்திவிட்டு, அந்த ஏமாளி நன்றாக சமைத்து வைத்திருக்கிறான். எனக்குப் பசியாக உள்ளது நாம் சாப்பிடுவோம், என்றாள் சுதனின் மனைவி. 

இருவரும் சாப்பிட அமர்ந்தனர். பரண் மேல் ஒளிந்து இருந்த மகேன், அவர்கள் முன் குதித்தான். தங்களது திறமை அவனிடம் செல்லாது என்பதை இருவரும் அறிந்து, அவனுக்கு விருந்து போட்டு அனுப்பி வைத்தனர். 

நீதி :
ஏமாற்றுபவர்கள் ஒருநாள் ஏமாறுவார்கள்.

இன்றைய செய்திகள்

12.08.2025

⭐நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகள் நடமாட்டம், விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க உதவி எண் அறிவித்த வனத்துறை.
 உதவி எண்: 1800 425 4343

⭐நவம்பர் 1,2 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு-ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

⭐பீகாரில் கனமழையால் வெள்ளம்: 16 லட்சம் மக்கள் பாதிப்பு-மீட்புப்பணி தீவிரம்

🏀 விளையாட்டு செய்திகள்

🏀மக்களவையில் தேசிய விளையாட்டு மசோதா நிறைவேற்றப்பட்டது:மக்களவையில் தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா மற்றும் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு திருத்த மசோதாவை இந்திய நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.

🏀 இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஐ.சி.சி
மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையில் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வதே தனது லட்சியம் என்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் கூறியுள்ளார்.


Today's Headlines

⭐The Forest Department has announced a helpline number to report wildlife movements and damage caused by animals in the Nilgiris district. Helpline number: 1800 425 4343 

⭐ The Teacher Selection Board announced the Teacher Eligibility Test (TET) scheduled on November 1st and 2nd

⭐In  Bihar, Rescue work intensifies for flood due to heavy rain, and one lakh people were affected 

 SPORTS NEWS 

🏀 The National Sports Bill was passed in the Lok Sabha. The Indian Parliament has passed the National Sports Administration Bill and the National Anti-Doping Amendment Bill in the Lok Sabha.

🏀 Indian women's cricket team captain Harmanpreet Kaur has said that her goal is to lead the team to victory in the upcoming ICC Women's Cricket World Cup in India.

Covai women ICT_போதிமரம்

Sunday, August 10, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.08.2025








திருக்குறள்: 

குறள் 221: 

வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாங் 
குறியெதிர்ப்பை நீர துடைத்து. 

விளக்க உரை: 

வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது, மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன் எதிர்பார்த்து கொடுக்கும் தன்மை உடையது.

பழமொழி :

Well begun is half done. 

நன்றாக தொடங்கியது பாதி முடிந்தது போல்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.உண்மை பேசுவதே உயர்ந்த பண்பு.


2.எனவே எப்போதும் உண்மையை மட்டுமே பேசுவேன்.

பொன்மொழி :

பொறுமையை விடச் சிறந்த தவம் இல்லை - குருநானக்

பொது அறிவு : 

01.வாசனை உணர்வு மூலம் வேட்டையாடும் பறவை எது?

கிவி(Kiwi)

02 இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சி மையம்(ISRO) எப்போது தொடங்கப்பட்டது?

1969, ஆகஸ்ட் 15, (1969,August 15)

English words :

solitary - done alone without other people.பிறர் உடன் இல்லாது தன்னந்தனியாகச் செய்யப்படுகிற

Grammar Tips: 

 When to use many and a lot 

* "Many" and "a lot of" both indicate a large quantity, but "many" is typically used with countable nouns, while "a lot of" can be used with both countable and uncountable nouns.

*  "A lot of" is generally considered more informal than "many" and is often used in spoken English. 

* Ex: "There are MANY books on the shelf,"

* EX: "I have A LOT of work to do".

அறிவியல் களஞ்சியம் :

 ஒரு வருடத்தில் ஒரு மனிதனின் கல்லீரல் 23 தண்ணீர் லாரியில் நிரப்பக்கூடிய அளவுக்கு ரத்தத்தை வடிகட்டுகிறது.

நீதிக்கதை

அது  மூக்கம்மாள் என்னும் பெண்ணுக்கு மிகவும் பொருந்தும். மூக்கம்மாள் செம்மறியாடு ஒன்றினை வளர்த்து வந்தாள். செம்மறியாடு நன்கு கொளுத்திருந்தது. அதன் உடலில் அடர்த்தியாக உரோமம் வளர்ந்திருந்தது. ஆட்டின் உரோமத்தை அடிக்கடி வெட்டிவிட வேண்டும். 


ஆடு அப்பொழுது தான் நன்றாக வளரும். அது தவிர ஆட்டு உரோமத்தைக் கம்பளி நெய்வதற்காகச் சிலர் வாங்குவார்கள். நல்ல பணம் கிடைக்கும் என்று தெரிந்தவர்கள் சிலர் ஆலோசனை கூறினார்கள். 


ஆட்டு உரோமத்தைக் கத்தரிப்பதற்கென சில ஆட்கள் உண்டு. அவர்களுக்கு கூலி கொடுக்க வேண்டும். 


கூலி ஒன்றும் அதிகம் என்று கூற முடியாது. ஆனால் அந்தச் சிறு தொகையையும் செலவழிக்க  மூக்கம்மாவுக்கு மனம் வரவில்லை.


ஆட்டு உரோமத்தைக் கத்தரிப்பது என்ன பெரிய மந்திர தந்திர வேலையா? ஒரு கத்தரிக்கோலைக் கையில் எடுத்துக் கொண்டால் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டின் உரோமத்தைக் கத்தரித்து எடுத்து விடலாம்.


இப்படிச் செய்தால் இரண்டு மூன்று ரூபாய் சிக்கனப் படுத்தினாது போல இருக்குமே என்று மூக்கம்மாள் நினைத்தாள். உடனே ஒரு கத்தரிக்கோலை எடுத்து ஆட்டின் உரோமத்தை வெட்டத் தொடங்கினாள். 


இதற்கு முன்னர் ஆட்டின் உரோமத்தை வெட்டி அவளுக்குச் சற்றும் பழக்கமில்லாததால் உரோ மத்தை வெட்டும் போது கத்தரிமுனை ஆட்டின் சதைப்பகுதியையும் வெட்டி ரணமாக்கியது.


ஆடு வேதனையைப் பொறுக்க முடியாமல் துடிதுடியாய்த் துடித்து அலறியது. அவள் பயந்து போய் நிறுத்தி விட்டாள். அதை மாட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றால் பணம் செலவாகுமே என்று சும்மா இருந்து விட்டாள். ரணம்பட்ட இடம் சீழ் கோர்த்து ஆடு ஒரே வாரத்தில் இறந்து விட்டது. 


செலவினை சிக்கனப்படுத்த நினைத்த  மூக்கம்மாளுக்கு ‘முதலுக்கே மோசமானது’ ஆட்டினை இழந்து அவதிப்பட்டாள்.

நீதி: கஞ்சத்தனம் அழிவை கொண்டு வரும் 

இன்றைய செய்திகள்

11.08.2025


🌟 6500 கிலோ எடையுள்ள தகவல் தொடர்பு செயற்கைக்கோள் விண்ணில் விரைவில் செலுத்த படும். இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்.

⭐கோவை - திருப்பூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் கள ஆய்வு.

⭐காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் துப்பாக்கி
சண்டை.

⭐கென்யாவில்  சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 25 பேர் பலி.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀புலாவாயோவில் ஜிம்பாப்வேயை நியூசிலாந்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 359 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

🏀காசாவில் உணவுக்காக காத்திருந்த கால்பந்து வீரர் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழப்பு.

Today's Headlines


🌟 ISRO Chairman Narayanan has  informed  6500 kg communication satellite to be launched soon. 

⭐ Chief Minister M.K.Stalin has planned for 2 days field inspection in Tiruppur district.

⭐Security forces, terrorists gun battle in Kashmir.

⭐25 people were killed due to  the falling of the bus  into the roadside ditch in Kenya.

 *SPORT NEWS* 

🏀New Zealand beat Zimbabwe by an innings and 359 runs in Bulawayo to register a huge victory. 

🏀Footballer killed in Israeli attack while waiting for food in Gaza.

Covai women ICT_போதிமரம்

Thursday, August 7, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -08.08.2025








திருக்குறள்: 

குறள் 166: 

கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் 
உண்பதூஉ மின்றிக் கெடும்.

விளக்க உரை: பிறர்க்கு உதவியாகக் கொடுக்கப்படும் பொருளைக் கண்டு பொறாமைப்படுகின்றவனுடைய சுற்றம், உடையும் உணவும் இல்லாமல் கெடும்.

பழமொழி :

Every mistake is a hidden lesson. 

ஒவ்வொரு தவறும் ஒரு மறைந்த பாடமே.

இரண்டொழுக்க பண்புகள் :

1.எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை.

2.எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.

பொன்மொழி :

பொறுமையே ஆற்றல்; பொறுமையும் காலமும் முசுக்கொட்டை இலையைக் கூட பட்டாக மாற்றிவிடும் - சீனப் பொன்மொழி

பொது அறிவு : 

01.இந்தியாவின் முதல் நிலக்கரி காட்சியகம் எங்கு திறக்கப்பட்டுள்ளது?

தேசிய அறிவியல் மையம்
புதுடெல்லி
National science centre, New Delhi

02. உலகி
ல் பூக்கள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?

நெதர்லாந்து(Netherland)

English words :

elusive - not easy to catch or find.நழுவிச் செல்லும் தன்மையுடைய.

Grammar Tips: 

 When to use some and any
"Some" is used in affirmative (positive) sentences
Ex: "I have some cookies."

while "any" is used in negative sentences and questions.
Ex: "I don't have any money."

அறிவியல் களஞ்சியம் :

 லூயிஸ் பாஸ்டர், (Louis Pasteur) (1822-95) என்ற பெரிய பிரெஞ்சு வேதியியலாரை அவர் பின்பற்றி ஆய்வு செய்தவர். பாஸ்டர் மக்களின் நோய்களுக்கான எதிர்ப்புக்கான தடைக்காப்பை, நோய்த் தடுப்புச் சத்து நீர்களை (Vaccines) ஊசி மூலம் குருதியில் உட்செலுத்தியோ அல்லது திறன் குறைந்த நுண்ணுயிர்களின் சேகரிப்புத் தொகுதியை உட்செலுத்தியோ இயற்கையான பகைவர்களை உள்ளேயே உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்தி வளர்த்தார்.

ஆகஸ்ட் 08

ரோஜர் ஃபெடரர் அவர்களின் பிறந்தநாள்

ரோஜர் ஃபெடரர் (பிறப்பு - ஆகத்து 8, 1981) சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த டென்னிசு வீரர். 20 கிராண்ட் சிலாம் எனப்படும் பெருவெற்றித் தொடர்களை வென்றுள்ளார். மேலும், மொத்தம் 302 வாரங்கள் தரவரிசைப் பட்டியலில் முதல் இடம் பிடித்தவராகவும், தொடர்ச்சியாக 237 வாரங்கள் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்றிருந்தமையும் இவரது முக்கிய சாதனைகளுள் ஒன்றாகும்.

இவர் இதுவரை ஒற்றையர் ஆண்கள் பிரிவில் 20 கிராண்ட் சிலாம் (6 ஆத்திரேலிய ஓப்பன், ஒரு பிரெஞ்சு ஓப்பன், 5 அமெரிக்க ஓப்பன், 8 விம்பிள்டன்) பட்டங்களை வென்றுள்ளார். தவிர நான்கு (ஆத்திரேலியா, பிரெஞ்சு, விம்பிள்டன், அமெரிக்கா) இடங்களிலும் கிராண்ட் சிலாம் பட்டங்களை வென்ற எட்டு ஆண் வீரர்களுள் ஒருவராவார். 29 முறை கிராண்ட்சிலாம் இறுதிப் போட்டிகளில் ரோசர் பெடரர் விளையாடியுள்ளது இதுவரை யாரும் நிகழ்த்தாத சாதனையாகும். மேலும் தொடர்ச்சியாக 23 முறை கிராண்ட்சிலாம் போட்டிகளின் அரையிறுதியில் விளையாடியதும் இவரது முக்கியச் சாதனைகளுள் ஒன்றாகும்.

நீதிக்கதை

 பசி தாங்க முடியாத எலிகள் இரண்டு தாங்கள் ஒளிந்திருந்த வீட்டின் சமையல் அறைக்குள் புகுந்தன. அங்கே ஒரு பெரிய பானை நிறைய பால் இருப்பதைக் கண்டன. ஆனால் அது உயரமான பானை. இதனால் பாலைக் குடிக்க முடியாமல் எலிகள் திண்டாடின.


       இதையடுத்து இரு எலிகளும் ஒரு முடிவுக்கு வந்தன. ஓர் எலியின் மீது இன்னோர் எலி ஏறி பாலைக் குடிப்பது. அதன் பிறகு கீழே உள்ள எலி மேல் ஏறி பாலைக் குடிக்கலாம் என திட்டமிட்டு, அதை செயல்படுத்தின.அதன்படி மேலே உள்ள எலி பாலைக் குடித்த போது, கீழே இருந்த எலி கத்தியது: “போதும்! நான் பால் குடிக்க வேண்டும்…”


     கீழே இருந்த எலி போட்ட சத்தத்தை கேட்டு மிரண்டு மேலே இருந்த எலி, பால் பானைக்குள் விழுந்துவிட்டது.இதைக் கண்ட கீழே இருந்த எலி, “நல்லது, இனி எனக்குத்தான் எல்லா பாலும்” என்று நினைத்தது. பிறகு அந்தப் பானையைச் சுற்றி சுற்றி வந்தது. ஆனால் மேலே ஏற முடியவில்லை. கடைசியில் பசியால் அது செத்துப் போய்விட்டது.

நீதி : துன்பத்தில் இருந்து விடுதலை அடைய மற்றவர்களின் ஒத்துழைப்புத் தேவை.


இன்றைய செய்திகள்

08.08.2025

⭐சுதந்திர தின விடுமுறை: தென் மாவட்டங்களுக்கு செல்ல சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு

⭐அமலாக்கத்துறை விசாரணை இன்றி பலரை ஆண்டுக்கணக்கில் சிறையில் வைத்துள்ளது. இவ்வாறு நேர்மையின்றி செயல்படக்கூடாது என சுப்ரீம் கோர்ட் அமலாக்கத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது

⭐14 ஆண்டுகளுக்கு பிறகு இரட்டை இலக்கம் பெற்று  சாதனை; தமிழக பொருளாதார வளர்ச்சி 11.9 சதவீதமாக அதிகரிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

⭐இந்தியாவுக்கு 50% வரி: டிரம்ப் மீண்டும் அதிரடி

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀இந்தியாவில் நடைபெறும் ஆசிய கோப்பை ஹாக்கி- பாகிஸ்தான் அணி விலகல்

🏀அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.43 கோடி பரிசு தொகை அளிக்கப்படும்.

Today's Headlines

⭐Indian Railways has announced special trains for the southern districts 
regards for the upcoming Independence Day holidays:  

⭐ Supreme Court says the Enforcement department should not act dishonestly for years of imprisonment without trial.. 

⭐Chief Minister M.K. Stalin proudly announced a double-digit record in Tamil Nadu's economic growth, which increased to 11.9 percent after 14 years.

⭐US President Trump has taken action on a 50% tax on India: 

 SPORTS NEWS 

🏀 Pakistan pulls out of the Asia Cup Hockey in India.

🏀US Open tennis champions to receive Rs 43 crore prize money each.


Covai women ICT_போதிமரம்