Friday, August 9, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.08.2024






திருக்குறள்: 

பால் :பொருட்பால்

அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல்

குறள் எண்:449

முதல் இலார்க்கு ஊதியம் இல்லை மதலையாம்
சார்பு இலார்க்கு இல்லை நிலை.

பொருள் :முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை; அதுபோல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை.

பழமொழி :

வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான்

Everyone rakes the embers to bake his own cake

இரண்டொழுக்க பண்புகள் : 

*ஆபத்தில் இருப்பவர்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன். 

*துன்பப்படுபவர்களைக் கண்டால் அவர்களுக்கு ஆறுதல் கூறுவேன்.

பொன்மொழி :

பிறக்கும் போது உன்னோடு இல்லாத பெயர், நீ இறக்கும் போது உன்னோடு தான் இருக்கும் . அதை உன் சாவிற்கு கொடுக்காமல் சரித்திரத்திற்கு கொடு"----ஹிட்லர்

பொது அறிவு : 

1.ஃபிராஷ் முறை மூலம் சேகரிக்கப்படும் தனிமம் எது?

விடை: கந்தகம் (சல்ஃபர்)

2. "தங்கப் போர்வை நாடு” எனப்படுவது?

விடை: ஆஸ்திரேலியா

English words & meanings :

 Animation : உயிரோவியம். 

 Animosity : பகைமை / கடும் வெறுப்பு

வேளாண்மையும் வாழ்வும் : 

பூமிக்கு வேண்டிய சூரியக் கதிர்களின் சக்தியும் மிகச் சரியாக கிடைக்கும். இதனால் மண் செழிப்பதோடு, விதைத்த பிறகு பயிர்களும் செழித்து அறுவடையை மகிழ்ச்சியாக்குகிறது

நீதிக்கதை

 முயல்களும் தவளைகளும் 


ஒரு காட்டில் முயல் கூட்டம் ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த முயல்கள் பச்சை பசேல் என இருந்த அந்த காட்டில் கிடைத்த உணவுகளை எல்லாம் உண்டு சந்தோஷமாக வாழ்ந்து வந்தன. 

 திடீரென்று கோடைகாலம் வந்தது. கோடை கால வெப்பம் அதிகமாக இருந்ததால் அங்கே பச்சை பசேல் என இருந்த புற்கள் எல்லாம் கருகி, பாலைவனம் போல் தோற்றமளித்தன. 

 முயல்களுக்கு சாப்பிட உணவு எதுவும் கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டு கொண்டு இருந்தன. அங்கே வேட்டை நாய்கள் இந்த முயல்களை அங்கேயும் இங்கேயும் பதுங்கி வேட்டையாட காத்திருந்தன. 

அந்த வேட்டை நாய்களைக் கண்டு இந்த முயல்கள் பொந்துக்குள்ளே ஒளிந்து கொண்டு, வெளியே வரவும் முடியாமல்,உணவும் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டன. 

“எவ்வளவு நாள் தான் இப்படியே பொந்துக்குள் ஒளிந்து இருப்பது நாம் ஏதாவது செய்ய வேண்டும்”, என்று எல்லாம் முயல்களும் கூடி பேசிக்கொண்டு இருந்தன. 

அப்போது ஒரு முயல் சொன்னது, “கடவுள் நம்மை பலவீனமாக படைத்து விட்டார். எல்லா விலங்குகளும் ஏதாவது பிரச்சனை வந்தால் தங்களை காப்பாற்றிக்கொள்ளும் அளவிற்கு பலம் உடையதாக இருக்கின்றன. ஆனால், நாம் என்ன ஒரு பிரச்சனை வந்தாலும் நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியாமல்  பலவீனமாக இருக்கிறோம். கடவுள் ஏன் நம்மை இப்படி படைத்து விட்டார்?” என்று 

சொன்னது.

அப்போது மற்றொரு முயல் சொன்னது, “என்னால் இதற்கு மேல் இதை பொறுத்துக் கொள்ள முடியாது. பசியினாலும் இந்த வேட்டை நாய்களை பார்த்தும் பயந்து ஒதுங்கி வாழ்வதைவிட சாவதே மேல்.நான் ஏதாவது ஒரு நதியில் சென்று விழுந்து விடுகிறேன்” என்று சொன்னது. 

அப்போது மற்றொரு  முயல் சொன்னது, “நாம் அனைவரும் எது செய்தாலும் ஒன்றாக செய்ய வேண்டும். வாழ்ந்தால் ஒன்றாக வாழ்வோம், இல்லையா எல்லோரும் சேர்ந்து நதியில் விழுந்து விடுவோம்” என்று நதியை நோக்கி புறப்பட்டு சென்றனர்.

அந்த முயல்கள் எல்லாம் ஒரு நதி கரையை சென்று அடைந்தனர். அங்கே சில தவளைகள் நதிக்கரையில் இருந்தது. இந்த தவளைகள் எல்லாம் முயல்களை பார்த்து பயத்தில் ஒன்றன்பின் ஒன்றாக நதியில் குதித்தன. 

இதைப் பார்த்த முயல் கூட்டம் ஆச்சரியமாக நின்றது. “இந்தத் தவளைகள் நம்மை பார்த்த பயந்து நீருக்குள் குதிக்கின்றன. 

நாம்தான் இந்த உலகத்திலேயே பலவீனமானவர்கள், அனைவரையும் பார்த்து அஞ்சுகிறோம் என்று  எண்ணினோம். ஆனால் நம்மையும் பார்த்து சிலர் அஞ்சுகின்றனர்” என்று  தங்களுக்குள் பேசிக்கொண்டு இருந்தனர். 

அப்போது ஒரு முயல் சொன்னது, “நாம் இந்த பிரச்சனையில் இருந்து தப்பித்துக் கொள்ளவும் நம்மை பாதுகாத்துக் கொள்ளவும் நிச்சயமாக ஏதாவது ஒரு வழி இருக்கும். நாம் அந்த வழி என்ன என்று கண்டுபிடிப்போம். 

இந்த நதியில் விழுந்து நம் வாழ்வை முடித்துக் கொள்வதை விட என்ன பிரச்சனை வந்தாலும் எதிர்கொள்வதே மேல்” என்று கூறிக் கொண்டு உணவு தேடி வேறு இடத்திற்கு திரும்பின.

நீதி : வாழ்க்கையில் என்ன பிரச்சனை வந்தாலும் அதை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் எந்த தவறான முடிவும் எடுக்க கூடாது.

இன்றைய செய்திகள்

10.08.2024

* அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தினை கோவை அரசு கலைக் கல்லூரியில் முதல்வர் தொடங்கி வைத்தார்.

* “இயந்திரத்தனமாக செயல்பட்டு சொத்துகளை பதிவு செய்ய மறுக்கக் கூடாது” - சார் பதிவாளர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு.

* வயநாடு நிவாரண முகாம்களில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.10,000 நிதியுதவி: கேரள அரசு அறிவிப்பு.

* வங்கதேசம்: நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவியேற்பு.

* கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் கோரியது தமிழக அரசு.

* பாரீஸ் ஒலிம்பிக்: ஹாக்கியில் தங்கப் பதக்கம் வென்றது நெதர்லாந்து.

Today's Headlines

* The Chief Minister launched the Tamil Puthalvan Scheme at the Government Arts College, Coimbatore, which provides a monthly grant of Rs.1000

 * "Do not refuse to register assets as a machine" - Court ordered the Sub Registrars.

 * Rs.10,000 per family in Wayanad Relief Camps: Kerala Govt Announced.

 * Bangladesh: Nobel Laureate Muhammad Yunus takes oath as chief of the Interim Government.

 * International cricket stadium in Coimbatore: Tamil Nadu government has called for tenders to prepare the project report.

 * Paris Olympics: Netherlands wins gold medal in hockey.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Thursday, August 8, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.08.2024






திருக்குறள்: 

பால்: பொருட்பால்

அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல்

குறள் எண்:448

இடிப்பாரை இல்லாத எமரா மன்னன்
கெடுப்பார் இலானுங் கெடும்.

பொருள்: கடிந்து அறிவுரை கூறும் பெரியாரின் துணை இல்லாத காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்கும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.

பழமொழி :

குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும்

A kick from the wise is better than a kiss from a fool

இரண்டொழுக்க பண்புகள் : 

*ஆபத்தில் இருப்பவர்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன். 

*துன்பப்படுபவர்களைக் கண்டால் அவர்களுக்கு ஆறுதல் கூறுவேன்.

பொன்மொழி :

"எனக்கு ஒரு மரத்தை வெட்ட எட்டு மணி நேரம் இருந்தால், அதில் ஆறு மணி நேரம் நான் கோடாரியை கூர்மை படுத்துவேன்.----ஆபிரகாம் லிங்கன்

பொது அறிவு : 

1.ஹீமோகுளோபினில் உள்ள உலோகம் எது?

விடை: இரும்பு

2.நம் நாட்டில் முதன்முதலாக இரும்பு எஃகு தொழிற்சாலை நிறுவப்பட்ட இடம் எது?

விடை: ஜாம்ஷெட்பூர்(jamshedpur

English words & meanings :

 Alliance : கூட்டணி. 

 Alumni : முன்னாள் மாணவர்கள்

வேளாண்மையும் வாழ்வும் : 

மண்ணின் ஈரப்பதத்தில் நுண்ணுயிர்கள், மண் புழு, நல்ல பாக்டீரியாக்கள் உருவாக தொடங்கும்.
மழைக் காலங்களில் முளைத்திருக்கும் சிறிய செடிகளை மேய்க்கும் ஆநிரையின் கழிவுகள், மண்ணுக்கு உரமாகி மண்ணுக்கு ஆற்றலைக் கொடுக்கும். 

ஆகஸ்ட் 09

பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள் 

பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஷ்டு 9ஆம் தேதி அனுசரிக்க ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் திசம்பர் 1994 முன்மொழியப்பட்டு , 2007 செப்டம்பர் 13 அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது.[1] தொல்பழங்குடிகளான குறிஞ்சி நிலத்தின் குன்றகுறவர்களின் உரிமைகளை ஊக்குவிக்கவும், அவ்வுரிமைகளைப் பாதுகாக்கவும் இத் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிகழ்வானது அப்பழங்குடி குறவர் மக்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற உலக பிரச்சினைகளின் எடுக்கும் நல்லெண்ண முடிவுகளுக்கு அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.

நீதிக்கதை

 முயற்சி செய்யாதவர்களுக்குக் கடவுள் உதவமாட்டார் 


பூஞ்சோலை என்பது ஓர் அழகான  கிராமத்தில் மணிவண்ணன் எனபவன் வாழ்ந்து வந்தான்.


அவன் நல்லவன்தான். எனினும், எந்த ஒரு பிரச்சினையிலும், முயற்சி செய்யாமல் கடவுள் தன்னைக் காப்பாற்றுவார் என்றே எண்ணுவான் . 


தனக்குத்தானே எவன் ஒருவன் உதவி செய்து கொள்கிறானோ அவனுக்குத்தான் இறைவனும் உதவுவார் என்ற கருத்து அவனது நெஞ்சில் பதியாமல் போனது.


அவனுடைய நெருங்கிய உறவினர் திருமணம் பூஞ்சோலைக் கிராமத்திற்கு அடுத்ததாக இருந்த கிளியனூரில் நடைபெறுவதாக இருந்தது . மணிவண்ணனும் அந்தத் திருமணத்தில் கலந்து கொள்வதற்காகத் தனது மாட்டுவண்டியில் சென்று கொண்டிருந்தான். 


கிளியனூரை அடைகின்ற வேளையில் ஒரு பெரிய பள்ளத்தில் வண்டிச் சக்கரங்கள் புதைந்து விட்டன. மாடுகளும் சேற்றில் சிக்கிய தமது கால்களை எடுக்க முடியாமல் தவித்தன.


மணிவண்ணன் மிகவும் பயந்து விட்டான். மாடுகளாவது சேற்றில் சிக்கிய தமது கால்களை எடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தன. ஆனால், மணிவண்ணனோ எவ்விதச் சிறு முயற்சியையும் செய்யாமல் விழித்துக்கொண்டிருந்தான் .


உடனே அவன் “கடவுளே  என்னை இந்தத் துன்பத்திலிருந்து காப்பாற்று” என்று வேண்டினான். 


உடனே வானிலிருந்து ஒரு குரல் கேட்டது. “மனிதனே, நீ, சேற்றில் சிக்கிய உன் மாடுகளையும், வண்டியின் சக்கரங்களையும் மீட்பதற்கு சிறிதளவு கூட முயற்சியே செய்யவில்லை. வெறுமனே என்னை அழைப்பதில் எந்தப் பயனும் இல்லை. முதலில் தன்னால் ஆன முயற்சியைச் செய்பவர்களுக்குத்தான் நான் உதவுவேன்.முயற்சி செய்யாதவர்களுக்கு நான் நிச்சயம் உதவ மாட்டேன்” என்று கூறியது.


உடனே மணிவண்ணன் தனது தோள்பலத்தால் சக்கரத்தில் முட்டுக்கொடுத்து வண்டியை தூக்கி நிறுத்தி மாடுகளை அதட்டி ஓட்டினான். இப்பொழுது வண்டி சேற்றிலிருந்து மீண்டது. மணிவண்ணன் முயற்சியின் சிறப்பை அறிந்து கொண்டான். 


கடவுள் வானிலிருந்து அவனை ஆசிர்வதித்தார். 


நீதி : முயற்சி செய்யாதவர்களுக்குக் கடவுள் உதவ மாட்டார். எனவே, நாம் வெற்றி பெற,  முயற்சியைச் செய்ய வேண்டும். இறைவன் அருள் நமக்குத் தானாகவே கிடைக்கும்.

இன்றைய செய்திகள்

09.08.2024

🦋தமிழகம் முழுவதும் 24 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

🦋ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்களை நடத்த ஊரக வளர்ச்சி இயக்குநர் பா.பொன்னையா அறிவுறுத்தியுள்ளார்.

🦋மனை, கட்டுமான பிரிவுகளுக்கான கட்டணங்கள் மாற்றியமைப்பு: ஒழுங்குமுறை ஆணையம் நடவடிக்கை.

🦋42 கோடி டன் நிலக்கரி இருப்பு கொண்ட ஒடிசா சகிகோபால் சுரங்கத்தை தமிழ்நாடு மின்வாரியத்துக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

🦋வங்கதேசத்தில் உள்ள இந்திய விசா மையங்கள் அனைத்தும் காலவரையின்றி மூடல்.

🦋'தாரங் சக்தி’ என்ற பெயரில் முதல்முறையாக 10 நாடுகளின் விமானப்படையுடன் இந்தியா கூட்டுப் பயிற்சி.

🦋ஜப்பானில் 7.1 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

🦋ஐ.சி.சி. ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசை: டாப் 5-ல் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர்கள்.

🦋ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் கிறிஸ் கெயிலின் மாபெரும் சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா.

🦋ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கியில்  இந்திய அணி  வெண்கலப் பதக்கத்தை வென்றது.

Today's Headlines

🦋The Tamil Nadu government has ordered the transfer of 24 IPS officers across Tamil Nadu.

🦋 Director of Rural Development
P. Ponniah instructed the Panchayat members to hold Gram Sabha meetings in all Panchayats in Tamil Nadu on August 15th Independence Day.

🦋 Revision of Fees for Land, Construction Sections: Action taken by Regulatory Authority.

 🦋Odisha Sakigopal mine with 42 crore tonnes of coal reserves has been allotted to Tamil Nadu Electricity Board.

 🦋All,  Indian visa centers in Bangladesh remain closed indefinitely.

🦋 For the first time in the name of 'Tarang Shakti', India is conducting a joint exercise with the Air Forces of 10 countries.

 🦋7.1-magnitude earthquake hits Japan: Tsunami warning issued

 🦋ICC  ODI Batsmen Rankings:  Indian Players Dominating the Top 5  places

🦋 Rohit Sharma equaled Chris Gayle's record in ODI history

 🦋Indian team won bronze medal in Olympic men's hockey.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Wednesday, August 7, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.08.2024

மெலனின் நிறமி





திருக்குறள்: 

பால் : பொருட்பால்

அதிகாரம் : பெரியாரைத் துணைக்கோடல்

குறள் எண்:447

இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்கும் தகைமை யவர்?

பொருள்: கடிந்து அறிவுரை கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரைக் கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் யார் இருக்கின்றனர்?

பழமொழி :

அல்லல் ஒரு காலம் செல்வம் ஒரு காலம்

Sadness and gladness succeed each other

இரண்டொழுக்க பண்புகள் : 

*ஆபத்தில் இருப்பவர்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன். 

*துன்பப்படுபவர்களைக் கண்டால் அவர்களுக்கு ஆறுதல் கூறுவேன்.

பொன்மொழி :

சிந்தனை தான் உன்னைத் தூண்டி வேலை செய்ய வைக்கின்ற உந்து சக்தி.எனவே, உன் மனதை மிக உயர்ந்த சிந்தனைகளால் நிரப்பி விடு. ----விவேகானந்தர்

பொது அறிவு : 

1.சருமத்தின் மீதுள்ள நிறத்தின் காரணம் எது?

விடை: மெலனின்

2.தபால் தலையை (ஸ்டாம்ப்) வட்ட வடிவமாக வெளியிட்ட நாடு எது?

விடை: மலேசியா

English words & meanings :

 *Apprentice* : தொழில் பயிற்சி பெறுபவர் / 
 வேலைப் பயிற்சி பெறுபவர்

 *Artwork* : கலைப் படைப்பு / கலை வேலைப்பாடு

வேளாண்மையும் வாழ்வும் : 

கடுமையான கோடைக்காலங்களைச் சந்தித்த மண், இறுகி கடினமாக மாறியிருக்கும். ஆனி மழையில் இறுக்கங்கள் தளர்ந்து இதமாக இளக தொடங்கும்.

நீதிக்கதை

 பொறாமை வேண்டாம் 

ஒரு கிராமத்தில் பண்ணையார் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் தன் வீட்டில் ஒரு நாயையும், பொதி சுமக்க ஒரு கழுதையை வளர்த்து வந்தார். கழுதையை வேலைக்காரன் ஒருவன் கவனித்து வந்தான். 

பண்ணையாருக்கு அவர் வளர்க்கும் நாய் மேல் அதிக அன்பு இருந்தது. ஏனென்றால், அது இரண்டு முறை திருடர்களைப் பிடித்து அவரிடம் ஒப்படைத்துள்ளது. அவர் வெளியே சென்று வீட்டிற்கு வந்தால் தன் வாலை ஆட்டிக்கொண்டே நன்றியை காட்டும். 

அவர் அமர்ந்திருக்கும் போது உரிமையாக சென்று அவர் மடியில் படுத்துக்கொள்ளும். அவர் முகத்தை ஆசையாக நக்கும். பண்ணையார் அதற்கு இறைச்சி துண்டுகளையும் உயர்ந்த ரக உணவுகளையும் கொடுத்து மிகவும் அன்பாக வைத்திருந்தார்.

பண்ணையார் வீட்டில் வளரும் கழுதை பண்ணையார் நாய்க்கு மட்டும் இவ்வளவு சலுகைகளை வழங்குகிறாரே என்று பொறாமைப்பட்டது. பண்ணையார் நாய்க்கு கொடுக்கும் அத்தனை சலுகைகளையும் தான் பெற வேண்டும் என்று நினைத்தது. 

நாய் போல் தானும் ஒரு நாள் பண்ணையார் மடியில் படுத்து அவர் முகத்தை நக்க வேண்டும் என திட்டம் தீட்டியது. கழுதையின் எண்ணத்தை நாய் புரிந்து கொண்டது. அது கழுதையை பார்த்து, “நண்பா, எனக்கு கிடைக்கும் சலுகைகளை கண்டு நீ பொறாமை படாதே, நான் செய்வதைப் போன்றே நீ செய்தால் பண்ணையார் பொறுத்துக் கொள்ள மாட்டார். உன்னை நன்றாக அடித்து வீட்டை விட்டு துரத்தி விடுவார்” என்று அறிவுரை கூறியது.

கழுதை நாய் சொல்வதை காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. அது நாயை பார்த்து, “நண்பா நடப்பதை நீயே பார். பண்ணையார் என் செயலால் எப்படி மகிழ்ச்சி அடையப்போகிறார் என்பதை பார்” என்று கூறியது.

அதற்கு பிறகு நாய் எதுவும் பேசவில்லை. அன்றைக்கு பண்ணையார் வெள்ளை சட்டை வெள்ளை வேட்டி அணிந்து கொண்டு வீட்டில் அமர்ந்து புத்தகம் ஒன்றை படித்துக் கொண்டிருந்தார். உடனே கழுதை விரைவாக ஓடி சென்று அவருடைய மடியில் அமர்ந்து கொண்டது. 

தன்னுடைய நாக்கால் அவருடைய முகத்தை நக்கியது. பின்னர் பெரும் குரல் எடுத்து கத்தியது. பண்ணையாருக்கு கடும் கோபம் வந்தது. அருகில் இருந்த உருட்டு கட்டையை எடுத்து அந்த கழுதையை நன்கு அடித்து விட்டார். வலி தாங்க முடியாத கழுதை கத்திக்கொண்டே காட்டுக்குள் ஓடியது.

 நீதி : பிறருக்கு கிடைக்கும் சலுகைகளை பார்த்து நாம் பொறாமை படக்கூடாது. அவ்வாறு பொறாமை பட்டால் அது நமக்கு அழிவு தான் உண்டாக்கும்.

இன்றைய செய்திகள்

08.08.2024

🎖️சென்னை மாதவரத்தில் 150 ஏக்கரில் தொழில்நுட்ப நகரம்: மாஸ்டர் பிளானுக்கு ஒப்பந்தம் கோரியது டிட்கோ.

🎖️கூடலூர் கோக்கால் அருகே நிலம், வீடுகளில் விரிசல்: மத்திய புவியியல் துறையினர் ஆய்வு.

🎖️தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

🎖️இஸ்ரோ வடிவமைத்துள்ள புவி கண்காணிப்புக்கான அதிநவீன இஓஎஸ்-08 செயற்கைக்கோள், எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் மூலம் ஆகஸ்ட் 15-ம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது.

🎖️பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தம்; வினேஷ் போகத் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில் 100 கிராம் எடை அதிகரித்ததால் தகுதி நீக்கம்.

🎖️இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு.

🎖️இந்தியா-இலங்கை ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது.

Today's Headlines

🎖️150 Acre Technology City in Chennai Madhavaram: DITCO requested Contract for Master Plan

🎖️ Cracks in land, houses near Kokal, Kudalur: Central Geological Department is taking survey.

🎖️ Heavy rain likely in 9 districts of Tamil Nadu today: Chennai Meteorological Center Information.

 🎖️EOS-08, a state-of-the-art earth observation satellite designed by ISRO, will be launched on August 15 by SSLV T-3 rocket.

 🎖️Paris Olympic Wrestling;  Vinesh Bhogat was disqualified due to weight gain of 100 grams while advancing to the semi-finals.

 🎖️Sri Lanka squad announced for Test series against England.

 🎖️Sri Lanka won the India-Sri Lanka ODI series by 2-0.
 Prepared by

Covai women ICT_போதிமரம்