Tuesday, August 6, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.08.2024

கலைஞர் மு. கருணாநிதி





திருக்குறள்: 

பால்: பொருட்பால்

அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல்

குறள் எண்:446

தக்கார் இனத்தனாய்த் தான்ஒழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்தது இல்.

பொருள்: தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளவனாய் நடக்கவல்ல ஒருவனுக்கு, அவனுடைய பகைவர் செய்யக்கூடிய தீங்கு ஒன்றும் இல்லை.

பழமொழி :

அலைகடலுக்கு அணை போட முடியுமா?

Against God’s wrath no castle is proof

இரண்டொழுக்க பண்புகள் : 

*ஆபத்தில் இருப்பவர்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன். 

*துன்பப்படுபவர்களைக் கண்டால் அவர்களுக்கு ஆறுதல் கூறுவேன்.

பொன்மொழி :

" யார் சொல்லியிருந்தாலும், எங்குப் படித்திருந்தாலும், நானே சொன்னாலும், உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே"-----தந்தை பெரியார்

பொது அறிவு : 

1. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்  யார்?

 டாக்டர் முத்துலட்சுமி 

2.இந்தியாவின் முதல் சபாநாயகர் யார்?

 ஜி.வி.மவ்லாங்கர்

English words & meanings :

 greet-வாழ்த்து,

 compliment-பாராட்டு

வேளாண்மையும் வாழ்வும் : 

ஆடி மாதத்தில் விதை விதைத்து விவசாயம் செய்தால், தை மாதத்தில் அறுவடை செய்யலாம். பயிர்களுக்கு தேவையான சூரிய ஒளியும், பிராண வாயுவும், நல்ல மழையும் கிடைத்து, விவசாயிகளுக்கு சிறப்பான அறுவடையைக் கொடுக்கும். 

ஆகஸ்ட் 07

இரவீந்தரநாத் தாகூர் அவர்களின் நினைவுநாள்


இரவீந்தரநாத் தாகூர்


இரவீந்தரநாத் தாகூர் (Rabindranath Tagore) வங்காள மொழி: রবীন্দ্রনাথ ঠাকুর, மே 71861ஆகஸ்ட் 71941) புகழ் பெற்ற வங்காள பல்துறையறிஞர் ஆவார்.[1][2] 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் இவர் வங்காள இலக்கியம் மற்றும் இசை வடிவத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். மேலும் இந்தியக் கலைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். இவர் கீதாஞ்சலி எனும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் ஆவார். [3] இந்த கவிதைத் தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசினைப் பெற்றார். இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரேயாவார். மேலும் ஐரோப்பியர் அல்லாத ஒருவர் இந்த விருதைப் பெறுவதும் இதுவே முதல் முறையாகும்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் நினைவுநாள்

முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi, சூன் 3, 1924 - ஆகத்து 7, 2018)[2] இந்திய அரசியல்வாதிகளுள் ஒருவர். தமிழக முதல்வராக ஐந்துமுறை பதவிவகித்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் 1969 முதல் 2018 வரை பதவி வகித்துள்ளார். 1969,1971,1989,1996,2006 என ஐந்து முறை தமிழக முதலமைச்சராகப் பணியாற்றினார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர்.

கை ரிக்ஷா ஒழிப்புத்திட்டம், பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத்திட்டம், எல்லா மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனைகள், கலை அறிவியல் கல்லூரிகள் பல பல்கலைக்கழகங்கள் எனப் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியவர்.

இடஒதுக்கீடு கொள்கையை நடைமுறைப்படுத்தி, 50 விழுக்காட்டில் 30 விழுக்காடு பிற்படுத்தப் பட்டோருக்கும், 20 விழுக்காடு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும், 18 விழுக்காடு தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும், 3 விழுக்காடு அருந்ததியருக்கும், 3.5 விழுக்காடு இஸ்லாமியருக்கும், 1 விழுக்காடு மலைவாழ் மக்களுக்கும் அளித்து அனைத்து சமூகத்திலும் அடித்தட்டு மக்கள் கல்வி, வேலை வாய்ப்புகளை உறுதி செய்ததனால் மானுட மேம்பாட்டுக் குறியீட்டில் இந்திய மாநிலங்களிலேயே தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது.

நீர்ப்பாசனம், மின்சாரம், வேளாண்மை, தொழிலாளர் நலன், நிலச் சீர்த்திருத்தம் ஆகிய துறைகளில் மேம்பாட்டுத் திட்டங்களை வளர்த்ததால் தமிழ்நாடு உணவு தானிய உற்பத்தியில் பல சாதனைகளைப் படைத்து வருகிறது. சாலை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியதாலும், தொழில் துறை முதலீடுகளை ஈர்ப்பதற்கு கலைஞரின் ஆட்சிக்காலங்களில் செயல் திட்டங்களை அறிமுகப்படுத்தியதாலும் தமிழகம் தொழில் துறையிலும் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் ஒரு சீரான வளர்ச்சியை பெற்றிருக்கிறது.

நீதிக்கதை

 நன்றியுணர்ச்சி


வேடன் ஒருவன் வேட்டையாட சென்றான். அவன் விரித்த  வலையில் வழி அறியாமல் வந்த கழுகு ஒன்று மாட்டிக்கொண்டது.

அவன் அந்த கழுகை தனது வீட்டிற்கு எடுத்துச் சென்று, அதனுடைய இறக்கைகளை வெட்டிவிட்டு சங்கிலியால் மரத்தில் கட்டி போட்டான்.

அந்த வழியாகச் சென்ற இரக்கம் உள்ள ஒருவர்,  வேடனிடம்  கழுகை காப்பாற்ற எண்ணி வேடனிடம் விலை கொடுத்து கழுகை  தன்னுடைய வீட்டிற்கு எடுத்துச் சென்றார். 

புதிய இறக்கைகள் முளைக்கும் வரை பாதுகாப்போடு வளர்த்து வந்தார். புதிய இறக்கைகள் முளைத்த உடன் அதனை காட்டுக்குள் செல்ல அனுமதித்தார்

 காட்டுக்குள் சென்ற கழுகு ஒரு முயலை பிடித்து வந்து தனது நன்றியுணர்ச்சியை காண்பிப்பதற்காக தன்னை காப்பாற்றியவருக்கு பரிசாக வழங்கியது.

 அதனைப் பார்த்த நரி கழுகிடம் "முயலைப் பிடித்து சென்று வேடனிடம் கொடுத்திருந்தால் மற்றொரு முறை உன்னை  வேட்டையாட மாட்டார்" என்று கூறியது.

அதற்கு கழுகு "அவர் எத்தனை முறை வந்தாலும் என்னை வேட்டையாட வருவார். ஏனெனில்  வேட்டையாடுதல் அவருக்கு தொழில். நான் எனது நன்றியுணர்ச்சியை காண்பிப்பதற்காகவே என்னை காப்பாற்றியவருக்கு பரிசளித்தேன்" என்று கூறியது.

இன்றைய செய்திகள்

07.08.2024

☘️போலி மருத்துவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு.

☘️‘ஜீரோ ஆக்சிடென்ட் டே’ விழிப்புணர்வு பிரச்சார திட்டம்: நாட்டிலேயே முதல் முறையாக சென்னையில் அறிமுகம்.

☘️கோவையில் இந்தியா - ஜெர்மனி கூட்டுப் போர் பயிற்சி: இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகள் பங்கேற்பு.

☘️வங்கதேசத்தில் திடீர் ராணுவ ஆட்சி: பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம்.

☘️ஈரானின் எந்த தாக்குதலையும் எதிர்கொள்ள தயார்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு.

☘️பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தம்; இந்தியாவின் வினேஷ் போகத் அரையிறுதிக்கு முன்னேற்றம்.

☘️பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.

☘️வங்காளதேசத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள மகளிர் டி20 உலக கோப்பை வேறு நாட்டுக்கு மாற்றப்படலாம் என்று  தகவல் வெளியாகி உள்ளது.

Today's Headlines

☘️Court orders Tamil Nadu government to crack down on fake doctors with an iron fist.

 ☘️'Zero Accident Day' Awareness Campaign: Launched in Chennai for the first time in the country.

☘️ India-Germany Joint War Exercise in Coimbatore: England, Spain, France countries also took part.

☘️ Sudden military rule in Bangladesh: Prime Minister Sheikh Hasina who resigned  took refuge in India.

☘️ Ready to face any attack by Iran: Israeli Prime Minister Netanyahu announced.

 ☘️Paris Olympic Wrestling;  India's Vinesh Bhoga advances to semi-finals.

 ☘️India's Neeraj Chopra qualified for the final round of javelin at the Paris Olympics.

☘️ It has been reported that the Women's T20 World Cup scheduled to be held in Bangladesh may be shifted to another country.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Monday, August 5, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.08.2024





திருக்குறள்: 

பால்: பொருட்பால்

அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல்

குறள் எண்: 445

சூல்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.

பொருள்: தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் கண்ணாகக் கொண்டு நடத்தலால், மன்னவனும் அத்தகையாரை ஆராய்ந்து நட்புக் கொள்ள வேண்டும்.

பழமொழி :

அரைக் காசுக்கு போன மானம் ஆயிரம் கொடுத்தாலும் வாராது

One cloud is enough to hide all the sun

இரண்டொழுக்க பண்புகள் : 

*ஆபத்தில் இருப்பவர்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன். 

*துன்பப்படுபவர்களைக் கண்டால் அவர்களுக்கு ஆறுதல் கூறுவேன்.

பொன்மொழி :

"உன் வேதனை பலரைச் சிரிக்க வைக்கலாம். ஆனால், உன் சிரிப்பு யாரையும் வேதனைப்பட வைக்கக்கூடாது.---சார்லி சாப்ளின்

பொது அறிவு : 

1.  ஓர் உடலின் வேதிச் செயல்களை செய்வது எது ? 

என்சைம் . 


2. அகில வானொலி ஒலி பரப்பு முதன் முதலில் தொடங்கப்பட்ட இடம் எது.?

விடை : கொல்கத்தா மற்றும் மும்பை 

English words & meanings :

 trivial-அற்புதமான,

 short- குறுகிய

வேளாண்மையும் வாழ்வும் : 

இந்த மாதத்தில், சூரியனின் ஒளிக்கதிர்கள் சரியான அளவிலான அதிர்வலை கொண்ட சக்தியோடு வெளிப்பட்டு, பூமியை வந்தடையும். அதோடு பிராணவாயுவும், ஜீவ ஆதார சக்தி அதிகம் உள்ள மாதமாகவும் ஆடி மாதம் விளங்குகிறது.

நீதிக்கதை

 காக்கை நண்பன்


 ஒரு கிராமத்தில் ஒரு விவசாயி  தன்னுடைய நிலத்தில் நெல் விவசாயம் செய்து வந்தார்.

அவரது நிலத்திற்கு பக்கத்தில் இருந்த பெரிய மரத்தில் அதிக காகங்கள் வாழ்ந்து வந்தன.


எப்போதும் தன் வீட்டை சுற்றியே வரும்  காகங்களை அவருக்கு மிகவும் பிடிக்கும்.காகங்களுக்கு தன் வீட்டில் இருக்கும் உணவையும் தானியங்களையும் கொடுத்து மகிழ்வார்.


 ஒரு நாள் அவருடைய விவசாய நிலத்திற்கு அதிகமான வெட்டுக் கிளிகள் வந்தன. வந்த வெட்டுக்கிளிகள் அவருடைய தானியத்தை மட்டும் இல்லாமல் பயிர்களையே வீணாக்கின. அதைப் பார்த்த விவசாயி மிகவும் வருத்தப்பட்டார்.


 விவசாயி மிகவும் கஷ்டப்பட்டு  வெட்டுக் கிளிகளை விரட்ட முயற்சி செய்தார். ஆனால் வெட்டுக்கிளிகள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்ததால் அவரால் அனைத்தையும் விரட்ட முடியவில்லை.


 தன்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை என்ற வருத்தத்துடன் நெல் பயிர்களை பார்த்துக் கொண்டே   அமர்ந்திருந்தார். 


 விவசாயியை வருத்தத்துடன்  பார்த்த காகங்கள் உடனடியாக அவருக்கு உதவ வயலில் சென்று வெட்டுக் கிளிகளைப் பிடித்து சாப்பிட ஆரம்பித்தன.


 தனது பயிர்களை வெட்டுக்கிளிகளிடமிருந்து காப்பாற்றிய காக நண்பர்களை பார்த்து விவசாயி மகிழ்ச்சி அடைந்தார்.

இன்றைய செய்திகள்

06.08.2024

🍂சென்னை உள்ளிட்ட தமிழக நகரங்களின் நெரிசலுக்கு தீர்வு காண சாலை, பாலம் திட்டங்கள்: அமைச்சர்கள் ஆய்வு.

🍂அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் 4,970 தற்காலிக ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு 2028-ம் ஆண்டு வரை தொடர் பணி நீட்டிப்பு ஆணை வழங்கி பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

🍂திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் மழை: செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 577 கன அடி நீர்வரத்து.

🍂இந்தியாவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள் வோரில் 10 சதவீதம் பேர் வெளிநாட்டினர் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

🍂வெப்ப அலைகளால் ஆந்திராவில் அதிக உயிரிழப்பு, தமிழகத்தில் குறைவு: மக்களவையில் தகவல்.

🍂நியூராலிங்க் நிறுவனம் தனது மூளை சிப்பினை வெற்றிகரமாக இரண்டாவது நபருக்கு பொருத்தி உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

🍂வங்கதேச பயணத்தை தவிர்க்க இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை: உதவி எண்கள் அறிவிப்பு.

🍂பாரீஸ் ஒலிம்பிக் டென்னிஸ்: தங்கப்பதக்கத்தை தட்டி சென்றார் ஜோகோவிச்.

🍂ஐ.சி.சி. ஜூலை மாத சிறந்த வீரர் விருது; பரிந்துரை பெயர் பட்டியலில் இந்திய ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றுள்ளார்

Today's Headlines

🍂Road, Bridge Projects to Solve Congestion in Tamil Nadu Cities Including Chennai: Ministerial Review.

 🍂The Department of School Education has ordered to extend the work of 4,970 temporary teachers and staff working in government schools till 2028.

 🍂Rain in Tiruvallur, Kanchipuram: 577 cubic feet per second inflow to Chembarambakkam lake.

 🍂A study has revealed that 10 percent of transplant recipients in India are foreigners.

 🍂Death toll high in Andhra due to heat wave, less in Tamil Nadu: Information in Lok Sabha.

 🍂Elon Musk has announced that Neuralink has successfully implanted its brain chip into a second person.

 🍂External Affairs Ministry warns Indians to avoid travel to Bangladesh: helpline alert.

 🍂Paris Olympics Tennis: Djokovic wins gold.

 🍂ICC  July Player of the Month Award;  Indian all-rounder Washington Sundar is on the shortlist.
 Prepared by

Covai women ICT_போதிமரம்