Thursday, April 11, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.04.2024

  

பிரக்ஞானந்தா




திருக்குறள்: 

பால்: பொருட்பால். இயல்: அரசியல். 
அதிகாரம்: கல்வி 

குறள்:394

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.

விளக்கம்:

மகிழ்ச்சி பொங்கிடச் சேர்ந்து பழகுவதும், பிரிந்திட நேரும் போது மனங்கலங்குவதும் அறிவிற் சிறந்தோர் செயலாகும்.

பழமொழி :

Strike hard while the iron is hot

அலை மோதும் போதே தலை மூழ்கு

இரண்டொழுக்க பண்புகள் :

 1. பெரியோர் , பெற்றோர்,  ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.

2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.

பொன்மொழி :

பேராசை கொண்டவன் எதிலும் திருப்தி அடைய மாட்டான். திருப்தியே மேலான செல்வம்.____ரமண மகரிஷி

பொது அறிவு : 

1. தபால் தலையை (ஸ்டாம்ப்) வட்ட வடிவமாக வெளியிட்ட நாடு எது?

விடை: மலேசியா 

.2.  “இரவும் பகலும்” என்பது?

விடை: எண்ணும்மை 

English words & meanings :

 Inscrutable - impossible to understand புரிந்து கொள்ள முடியாதது
Iniquity - immoral or unfair behaviour அநீதி, அநியாயம்

ஆரோக்ய வாழ்வு : 

*தேனின் மருத்துவ குணங்கள் சில*


1)விரைவில் செரிப்புத் தன்மையை உண்டாக்கி, மலச்சிக்கலை போக்குகிறது.


2)குழந்தைகள் தினம்தோறும் தேனை அருந்தினால் கால்சியம் மற்றும் மக்னீசியத்தின் அளவு அதிகமாகி நல்ல வலிமை கிடைக்கும்.

ஏப்ரல் 12

நெ. து. சுந்தரவடிவேலு 


பத்மஸ்ரீ முனைவர் நெ. து. சுந்தரவடிவேலு (நெய்யாடுபாக்கம் துரைசாமி சுந்தரவடிவேலு, Nayyadupakkam Duraiswamy Sundaravadiveluஅக்டோபர் 121912 - ஏப்ரல் 121993தமிழ்நாட்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தின்,[3] துணைவேந்தராக இரு முறை (1969 முதல் 1972 வரையும் 1973 முதல் 1975 வரையும்) பொறுப்பு வகித்தவர். அதற்கு முன்பு தமிழ் நாடு அரசின் கல்வி ஆலோசகராகவும், பொதுக்கல்வி இயக்குநராகவும் [4] பல காலம் சிறப்பாகப் பணியாற்றினார். 1954 ஆம் ஆண்டு, சுந்தரவடிவேலு பொதுக்கல்வி இயக்குநராகப் பதவி ஏற்றார். அப்போது தமிழக முதல்வராக இருந்த காமராசருடன் இணைந்து பல திட்டங்களைச் செயல்படுத்தினார். இவற்றுள் முன்னுரிமை வகிப்பது இலவசக்கல்வி மற்றும் இலவசச் சீருடைத்திட்டங்கள் ஆகியவை ஆகும்.

நீதிக்கதை

 வேரும், இலையும்


ஓர் ஊரில் ஒரு குடும்பம் வளப்பமாக வாழ்ந்து கொண்டிருந்தது. குழந்தைகள் தந்தையின் பேச்சை தட்டாமல் மரியாதையுடன் கேட்டார்கள். ஒரு சமயம் அந்தத் தந்தை தனது இரு புதல்வர்களின் புத்திசாலித்தனத்தை சோதித்துப் பார்க்க விரும்பினார். என்ன செய்வது என்று சிந்தித்து, ஆளுக்கு ஒரு சிறிய மாமரச் செடியைக் கொடுத்து வளர்க்கச் சொன்னார். விரைவில் இனிப்பான பழங்களை அதிகமாகத் தருகிற மரத்தை வளர்க்கும் சிறுவனுக்கு பரிசு தருவதாகவும் அறிவித்தார்.

முட்டாளாகிய சிறுவன் தான் வளர்த்து வந்த செடி பெரிதாகி, மரத்தின் இலைகள் யாவும் உதிர்வதைக் கண்டான். சிறிது காலத்தில் கிளையின் நுனியில் பூக்கள் பூப்பதையும் அவன் கண்டான். ஒவ்வொரு இலையின் மீதும் தண்ணீர் ஊற்றினான். என்ன ஆயிற்று? கிளைகளில் இருந்த இலைகள் மேலும் அதிகமாக உதிர்ந்தன. வளர்ந்து நீண்டு நின்ற மரமும் சீக்கிரமே பட்டுப்போயிற்று. ஆனால் அறிவுள்ள சிறுவன் என்ன செய்தான் தெரியுமா? இதற்கு மாறாக மரத்தின் வேருக்குத் தண்ணீர் ஊற்றினான். மரம் கிடு கிடுவென்று பசுமையாக செழித்து வளர்ந்தது. குறுகிய காலத்திலேயே இனிப்பான பழங்களை நிறையத் தந்தது.

அதுபோல மனிதனின் அறிவு வளர்ச்சியை பரிசோதிக்க கடவுள் மனிதப் பிறவியை நமக்குக் கொடுத்திருக்கிறார். முட்டாள் மனிதர்கள் என்ன செய்கிறார்கள்? நிலையான அமைதியும் அமரத்துவமும் பெற விரும்புகிறார்கள். குறுக்கு வழியில் போகிறார்கள். அதற்காக புலன்களின் விருப்பத்தை நிறைவேற்றவும், உலகியல் ஞானம் பெறவும் முயற்சிக் கிறார்கள். அதுதான் சரியான வழி எனவும் நினைக்கிறார்கள்இது தவறு. பகுத்தறிவில்லாத அவர்கள் வீணே பரிதாபமாக இறக்கிறார்கள். இதற்கு மாறாக அறிவுடையவன் என்ன செய்கிறான்? அனைத்து படைப்புகளுக்கும் மூலமாக இருக்கும் இறைவனை நினைந்து தியானம் செய்கிறான். அவன் மனம் ஒருநிலைப்படுகிறது. இதன் மூலம் உலகில் அனைத்துச் செல்வமும், ஞானமும் அவனுக்கு கிடைக்கிறது. இறைவன் நிலையான பேரானந்தத்தையும் அளிக்கிறார். அதனால் நாமும் இறைவனை நம்பி நம் முழு மனதையும் சில நேரங்களுக்கு அவருக்காக அரப்பணிக்க வேண்டும்.

இன்றைய செய்திகள்

12.04.2024

*இரண்டாம் உலகப்போரில் உயிர்நீத்த தமிழர்களுக்கு நடுகல்: திறப்பு விழாவிற்கு முதல்வருக்கு அழைப்பு.

*தமிழகத்தில் வரும் 16ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு.

*இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையேயான போரால் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் ஸ்கில் இந்தியா திட்டம் மூலம் பயிற்சி பெற்ற 6000 கட்டுமான தொழிலாளர்கள் இஸ்ரேலுக்கு செல்ல உள்ளனர்.

*சைபர் கிரைமில் உலக அளவில் இந்தியாவுக்கு பத்தாவது இடம்.

*கேண்டிடேட் செஸ் போட்டி: ஆறாவது சுற்றில் பிரக்ஞானந்தா வெற்றி.

Today's Headlines

*Monument for theTamilians who lost their lives in World War II: Invitation is given to TN  Chief Minister for the inauguration 

 *Chance of moderate rain till the 16th in Tamil Nadu.

 * The war between Israel and the Hamas organization has created a labor shortage.  6,000 construction workers trained through the "Skill India Program" conducted by the central government are going to Israel.

 *Globally India ranks 10th in cybercrime.

 *Candidates Chess Tournament: Pragnananda wins the sixth round.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Tuesday, April 9, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.04.2024

  

உட் பஃபெல்லோ தேசிய அருங்காட்சியகம்




திருக்குறள்: 

"""பால்: பொருட்பால். இயல்: அரசியல். 
அதிகாரம்: கல்வி 

குறள்:393

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.

விளக்கம்:

கற்றவரே கண் உடையவர்; கல்லாதவரோ முகத்தில் இரண்டு புண்ணையே உடையவர்.

பழமொழி :

Stones are thrown only at fruit bearing trees

காய்த்த மரம் தான் கல்லடி படும்

இரண்டொழுக்க பண்புகள் :

 1. பெரியோர் , பெற்றோர்,  ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.

2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.

பொன்மொழி :

செய்ய முடிந்தவன் சாதிக்கிறான். செய்ய முடியாதவன் அடுத்தவர்களுக்கு போதிக்கிறான்.

பொது அறிவு : 

1. சங்க காலம் எனப்படுவது?

விடை: கி.பி 300 முதல் கி.மு 300 வரை  

2. உலகின் மிகப்பெரிய பூங்கா எங்கு உள்ளது?

விடை: கனடாவில் உள்ள உட் பஃபெல்லோ நேஷனல் பார்க்

English words & meanings :

 Concentration ஒருநிலைப்படுத்துதல்
Determine தீர்மானித்தல்/முடிவு
Deduct.  கழிவு, தள்ளுபடி

ஆரோக்ய வாழ்வு : 

பொதுவாக தென்னிந்திய உணவுகளில் உணவின் சுவை மற்றும் மணத்தை அதிகரிக்க கறிவேப்பிலை சேர்க்கப்படுகிறது. எல்லா உணவுகளிலும் சேர்க்கப்படும் கறிவேப்பிலை, உங்கள் தலைமுடி ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் எண்ணெயிலும் சேர்த்து பயன்படுத்தலாம். இந்தியாவின் பாரம்பரிய மருத்துவமான ஆயுர்வேதத்திலும் கறிவேப்பிலை அதிகமாக பயன்படுத்ததப்படுகிறது.

நீதிக்கதை

 கோபத்தை மறந்த ராமு


குறள் :
தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.

விளக்கம் :
தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும். ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.

கதை :
ஒரு ஊரில் ராமு என்பவன் இருந்தான். அவன் எப்போதும் கோபப்படும் சுபாவத்தை கொண்டவன். ஒரு முறை அவனது நண்பன் அவனிடம் ஆணிகள் நிரம்பிய பையை கொடுத்தான். நீ எப்போதெல்லாம் கோபப்படுகிறாயோ அப்போதெல்லாம் ஒரு ஆணியை இந்த சுவற்றில் அடிக்கவும் என்றான்.

ராமுவும் அப்படியே செய்து வந்தான். முதல் நாள் அவன் 35 ஆணிகளை அடித்தான். மறு நாள் 30 என்று இப்படியாக குறைந்து கொண்டு வந்தது. சில நாட்கள் கழித்து அவன் கோபப்படுவதை நிறுத்திவிட்டான். அதனால் அவன் ஆணிகளை அடிக்கவில்லை. அதை அவனது நண்பன் பார்த்து பெருமைப் பட்டான். அவனை முழுவதுமாக திருத்த ஆசைப்பட்ட அவன் அவனிடம் அடித்த ஆணிகளை பிடுங்க சொன்னான்.

ராமுவும் அப்படியே செய்தான். அதை பார்த்த அவன் நண்பன் அவனிடம் சொன்னான். நண்பனே நீ நான் சொன்னபடியே எல்லா வேலைகளையும் செய்தாய். இப்போது நீ அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன.

ஆனால் ஆணி அடித்த இடங்களில் உள்ள ஓட்டைகளை பார். இந்த சுவர் முன்னால் இருந்த மாதிரி இல்லை. எல்லா இடங்களிலும் ஓட்டைகள் உள்ளன.

அது போலத்தான் நீ கோபத்தில் சொல்லும் வார்த்தைகளும், செயல்களும் ஒரு வடுவை உண்டாக்கி விடும். நீ என்னதான் உன் செயல்களுக்கு மன்னிப்பு கேட்டாலும் அந்த வடு மாறாது, மறையாது. நீ வார்த்தைகளால் உண்டாக்கும் வடுவிற்கும், செயல்களால் உண்டாக்கும் வடுவிற்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை என்றான் ராமுவின் நண்பன்.

நீதி :
எக்காரணத்தினாலும் தீய சொற்களை பயன்படுத்தக் கூடாது.

இன்றைய செய்திகள்

10.04.2024

*ஏப்ரல் 11 அன்று ரம்ஜான் கொண்டாடப்படும்- தலைமை காஜி அறிவிப்பு.

*கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 19ஆம் தேதி விடுமுறை: பூ மார்க்கெட் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிப்பு.

*கோதை ஆற்றில் வெள்ளப்பெருக்கு; திற்பரப்பு அருவியில் குளிக்க தடை.

*கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னை - நெல்லை இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்.

*சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் காலின்ஸ்.

Today's Headlines

*Ramzan will be celebrated on April 11- Chief kaji announced.

 *19th Holiday for Koyambedu Market: it is notified that Flower Market will function as usual.

 *Flood in Gothai River;  bathing in Tirparapu Falls is prohibited.

 *Weekly special trains will be operated between Chennai - Nellai during summer vacation.

 *Charleston Open Tennis: Collins won the title.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Sunday, April 7, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.04.2024

  

பங்கிம் சந்திர சட்டர்ஜி




திருக்குறள்: 

"பால்: பொருட்பால். இயல்: அரசியல். 
அதிகாரம்: கல்வி

குறள்:392

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு..

விளக்கம்:

எண்ணும் எழுத்தும் எனப்படும் அறிவுக் கண்களைப் பெற்றவர்களே, உயிர் வாழ்வோர் எனக் கருதப்படுவார்கள்.

பழமொழி :

Still waters run deep

நிறை குடம் தளும்பாது.

இரண்டொழுக்க பண்புகள் :

 1. பெரியோர் , பெற்றோர்,  ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.

2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.

பொன்மொழி :

கோபத்தின் ஒரு நொடியில் பொறுமையாக இருந்தால், நூறு நாள் துன்பத்திலிருந்து தப்பிக்கலாம்_____ சீனப் பழமொழி

பொது அறிவு : 

1. பூச்சி இனங்களில் அறிவு மிக்கது எது? 

விடை: எறும்பு 

2. “மலை பிஞ்சி” என்பது?

விடை: குறுமணல் 

English words & meanings :

 Gorge - the throat தொண்டை
Gramaphone - an instrument reproducing speech music etc from a  record.பதிலிசைக் கருவி

ஆரோக்ய வாழ்வு : 

வைட்டமின் பி12 பற்றாக்குறை ஏற்படும்போது உடலில் சில அறிகுறிகள் நமக்குத் தோன்றும்.

அதிகப்படியான சோர்வு,

உடல் அசௌகரியம்,

சருமம் வெளிறிப்போய் மஞ்சள் நிறமாக மாறதல்,

கண்பார்வை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்,

ஞாபகத்திறன் பிரச்சினை,

நடக்கும்போது, பேசும்போது தடுமாற்றங்கள் ஏற்படுவது

போன்ற அறிகுறிகள் உண்டாகும்.

ஏப்ரல் 08


பங்கிம் சந்திர சட்டர்ஜி  அவர்களின் நினைவுநாள்


பங்கிம் சந்திர சட்டர்ஜி என அழைக்கப்படும் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா (Bankim Chandra Chattopadhyay ( ஜூன் 27, 1838[1] – ஏப்ரல் 8, 1894)[2] ஒரு வங்காள எழுத்தாளரும் கவிஞரும் இதழியலாளருமாவார்.[3] இவர் எழுதிய ஆனந்த மடம் என்ற நூலில் இடம்பெற்ற வந்தே மாதரம் என்ற பாடல் இந்தியாவின் தேசியப் பாடலாக உள்ளது. இந்திய தேசிய இயக்கத்தில் பங்கு கொண்ட இவர் 13 புதினங்கள் உட்பட்ட பல நூல்களை வங்காள மொழியில் எழுதியுள்ளார். இந்தியாவின் பிற மொழிகள் மற்றும் ஆங்கில மொழி நூல்களையும் இவர் மொழிபெயர்த்துள்ளார்.

நீதிக்கதை

 குறை இல்லாதவர் இல்லை


ஒருநாள் மயில் ஒன்று கடவுளை வேண்டித் தவம் செய்தது. மயிலின் கடுமையான தவம் கண்டு மெச்சிய கடவுள். அதற்கு முன் தோன்றி காட்சி தந்தார்.

"அழகிய மயிலே, உன் தவத்தைக் கண்ட உள்ளம் குளிர்ந்தோம். உன் தவத்தின் நோக்கம் என்ன சொல்," எனக் கேட்டார் கடவுள்.

"கடவுளே தங்களை வணங்குகிறேன். எனக்கு நீண்ட நாள் ஒரு கவலை மனதுக்குள் இருந்து வாட்டுகிறது."

"சொல் கேட்கிறேன்" ஆதரவாகப் பேசினார் கடவுள். "என் குரலே எனக்குப் பிடிக்கவில்லை. கருப்பாய் பிறந்துள்ள குயிலுக்கு மட்டும் குரல் இனிமையாக இருக்கிறதே" என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியது.

"அழகு மயிலே உனக்கென்ன குறைச்சல். நீ தான் பறவைகளில் அழகானவன். உன் கழுத்து அழகும், தோகையின் அழகும் வேறு எந்த பறவைகளுக்காவது படைக்கப்பட்டுள்ளதா? நீ தோகை விரித்து ஆடும் போது எவ்வளவு அழகாய் இருக்கிறாய் தெரியுமா!" என கடவுள் சொன்னாலும், மயில் சமாதானம் அடையவில்லை.

"நீங்கள் கூறுவதெல்லாம் உண்மைதான். இருப்பினும் என் குரல் இன்னும் அழகாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். பறவைகளில் எல்லாவற்றிலும் நானே முதன்மையாய் இருந்திருப்பேன் அல்லவா" என்றது.

"எல்லா குணங்களும் ஒருவருக்கே அமைந்து விடாது. குறை நிறை இருக்கத்தான் செய்யும். நிறையை கண்டு மனம் மகிழ வேண்டியதுதானே. கழுகு வலிமையானது. குயில் பாடும் திறன் பெற்றது. கிளி பேசும் ஆற்றல் கொண்டது. உனக்குத் தான் அதிகம் தகுதிகள் உள்ளன. எனவே அதை எண்ணிப் பெருமைப்படு" என்று மறைந்தார் கடவுள்.


நீதி : குறைகளையே காலம் முழுவதும் நினைத்துக் கொண்டு இருக்காமல், தன் நிறைகளை அறிந்து, அதை மேலும் நன்கு வளர்த்துக் கொண்டு சிறப்புடன் வாழ்வதே இனிய வாழ்க்கை ஆகும்.

இன்றைய செய்திகள்

08.04.2024

*கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை 10 சதவீதம் உயர்வு.

*கோவையில் சர்வதேச தரத்தில் மைதானம் அமைக்கப்படும் என மு க ஸ்டாலின் வாக்குறுதி.

*தண்ணீர் இன்றி பாறைகளாக தெரியும் கொடிவேரி தடுப்பணை; சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்.

*தேர்தல் அலுவலர்கள் ஓட்டு போடும் சிறப்பு வசதியை பயிற்சி முகாம்களில் நேற்று ஏற்பாடு செய்திருந்தனர் .

*ஜப்பானில் பெண்களுக்கான ஐ.டி. எப்., டென்னிஸ் தொடரில் இரட்டையர் பிரிவு பைனலில் சாம்பியன் பட்டம் பெற்ற இந்தியாவின் அன்கிதா ரெய்னா ஜோடி.

Today's Headlines

* 10 percent increase in vegetable prices in Koyambedu market.

 *Chief minister M.K.STALIN promise that an international standard stadium will be constructed in Coimbatore.

 *Kodiveri dam is seen with rocks only without water;  Tourists are disappointed.

 *Electoral officers had organized a special facility for voting in the training camps yesterday.

 *  India's Ankita Raina pair won the doubles final in I.T.F Tennis series.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Thursday, April 4, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.04.2024

 

மியான்மர்

    




திருக்குறள்: 

"பால்: பொருட்பால். இயல்: அரசியல். 
அதிகாரம்: கல்வி

குறள்:391

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

விளக்கம்:

பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும் கற்ற பிறகு அதன்படி நடக்கவேண்டும்.

பழமொழி :

Speech is silver, silence is golden

அமைதியே ஆரவாரத்தைக் காட்டிலும் சிறந்தது

இரண்டொழுக்க பண்புகள் :

 1. வாழ்க்கையில் ஒரு செயலை ஆரம்பிப்பதற்கு முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு கொள்ள வேண்டும். 

2. திட்டமிடுதல் மிக முக்கியம். திட்டமிடுவோம் செயல்படுவோம்.

பொன்மொழி :

தன்னம்பிக்கை கொண்டவர்கள் ஒவ்வொரு பிரச்சனையிலும் உள்ள வாய்ப்பை பார்க்கின்றார்கள். நம்பிக்கை இல்லாதவர்கள் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள பிரச்சனையை பார்க்கிறார்கள்.

பொது அறிவு : 

1. செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சென்னையில் நிறுவப்பட்ட ஆண்டு?


விடை: 2008, மே 19

2. இராணுவ ஆட்சி நடைபெறும் நாடு எது?

விடை: மியான்மர் 

English words & meanings :

 Fame - renown; புகழ். 
 Feckless - not responsible; பொறுப்பற்ற.

ஆரோக்ய வாழ்வு : 

பருப்புகீரை : வேர்வை கொப்பளங்கள், வெந்நீர் கொப்பளங்கள், தீக்காய கொப்ளங்களுக்கும் இக்கீரையை அரைத்து தடவலாம். உடலில் உள்ள கொழுப்பு  கரையும்.

நீதிக்கதை

 விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டும்.


அடர்ந்த வனப் பகுதியில் தனது ஆட்டு மந்தையை மேய்ச்சலுக்கு விட்டு, விட்டு ஒரு மரத்தின் அடியில் காணப்பட்ட நிழலில் உறங்கிக் கொண்டு இருந்தான் ஒரு இடையன்.


அப்பொழுது வானத்தில் ஒரு கழுகு தனது இரையைத் தேடியபடி வட்டமிட்டுக் கொண்டு இருந்தது. அந்தக் கழுகு இந்த இடையனின் ஆட்டு மந்தையில் இருந்த ஒரு ஆட்டுக் குட்டியை கண்டது. அதனைப் பார்த்த மாத்திரத்தில் விரைந்து வந்து அதனை தூக்கிக் கொண்டு பறந்தது.


இந்தக் காட்சியை வெகு நேரமாக ஒரு காகம் பார்த்துக் கொண்டு இருந்தது. கழுகைப் போலவே செயல்பட்டு தானும் அந்த மந்தையில் இருக்கும் ஆட்டுக் குட்டிகளில் ஒன்றை தூக்கி வர வேண்டும் என விருப்பம் கொண்டது. ஆனால், கழுகின் சக்தி என்ன, தனது சக்தி என்ன என்பதை அந்தக் காகம் சிந்திக்க மறந்தது.

இடையனோ நல்ல நித்திரையில் இருந்தான்.

அந்த சந்தர்பத்தைப் பயன்படுத்தி அந்தக் காகம் ஆட்டு மந்தைக்குள் விரைந்து புகுந்தது. ஒரு சிறு ஆட்டுக் குட்டியை தேர்ந்தெடுத்து அதன் மேல் அமர்ந்து தனது நகம் கொண்டு அதனை பலமாகப் பற்ற நினைத்தது. எனினும், அந்த ஆடு ஒரு குட்டி ஆடாகவே இருந்தாலுமே கூட, அதன் ரோமம் மிகவும் அடர்த்தியாக இருந்ததால் அந்தக் காகத்தால் அந்த ஆட்டை பற்றிக் கொள்ள இயலவில்லை. பிறகு மிகவும் சிரமப்பட்டு தனது நகங்களை மெல்ல அதன் ரோமங்களுக்குள் விட்டு பற்றிக் கொண்டது. ஆனால், ஆட்டுக் குட்டி மிகவும் கனமாக இருந்ததால் அந்தக் காகத்தால் அதனை தூக்க முடியவில்லை. அதனால் தப்பித்தால் போதும் என அந்த ஆட்டுக் குட்டியை விட்டு, விட்டுப் பறந்து செல்ல நினைத்தது.

ஆனால், அந்தக் காகத்தின் கால்கள் அந்த ஆட்டுக் குட்டியின் ரோமங்களில் நன்றாக சிக்கிக் கொண்டதால், காகம் தனது கால்களை வெளியே எடுக்க முயற்சி செய்யும் போது அந்த ஆட்டுக் குட்டிக்கு வலி எடுத்தது. அதனால் அந்த ஆட்டுக் குட்டி கத்தியது. காகமும் தப்பிக்க முடியாமல் வசமாக மாட்டிக் கொண்டு கரைந்தது. இதனால் அந்த ஆட்டு மந்தைகளில் இருந்த அனைத்து ஆடுகளும் நடப்பது

அறியாது பயம் கொண்டு கனைத்தது. இதனால் அந்த இடமே பேர் இரைச்சல் அடைந்தது.

இடையன் இந்தப் பேர் இரைச்சலைக் கேட்டு, "தனது ஆடுகளுக்கு என்ன நேர்ந்ததோ!" என்று பயந்து கண் விழித்துக் கொண்டான். பிறகு அவன் நடந்ததை அறியாது சுற்றி, சுற்றி என்ன ஏது என்று பார்த்தான். உடனே தனது ஆட்டை நகங்களால் காயப்படுத்திக் கொண்டு இருந்த அந்தக் காகத்தை கண்டான். அத்துடன் அவ்விடம் நோக்கி விரைந்து ஓடி வந்தான். பிறகு தனது தடியால் அந்தக் காகத்தை அடித்தே கொன்றான்.

பாவம் அந்தக் காகம் தனது சக்திக்கு மீறிய செயலைச் செய்யப் போய் பரிதாபமாகத் தனது உயிரை விட்டது.


நீதி : எப்போதுமே விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டும்.

இன்றைய செய்திகள்

05.04.2024


*வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ஆம் தேதி பொது விடுமுறை தமிழக அரசு அறிவிப்பு.

*கோடைகால வெளிநாட்டு சுற்றுலாவிற்கு தயாராகும் சென்னை மக்கள்; விமான கட்டணம் அதிகரிப்பு.

*12 ஆம் வகுப்பு வரலாற்று பாடத்தில் 
ஹரப்பா நாகரீகம் குறித்து புதிய மாற்றம்- என் சி இ ஆர் டி.

*முதியவர்களுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது.

*மொராக்கோவில் கிராண்ட் பிரிக்ஸ் ஹசன் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.

Today's Headlines

* Tamil Nadu Government has declared a public holiday on April 19, the polling day.

 *Chennai people are getting ready to have a summer  tour abroad; this leads to  increase in Airfare.

 *In 12th class History
 A new correction on the Harappan Civilization- NCERT.

 *Postal voting for senior citizens has started.

 *India's Yuki Bhambri pair advance to quarterfinals of Grand Prix Hassan Tennis men's doubles in Morocco.
 Prepared by

Covai women ICT_போதிமரம்