Thursday, January 4, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.01.2024

   


டாக்டர் முத்துலட்சுமி 


திருக்குறள்


பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : கொல்லாமை

குறள்:330

உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்

விளக்கம்:

 வறுமையும் நோயும் மிகுந்த தீய வாழ்க்கையில் உழல்வோர், ஏற்கனவே கொலைகள் பல செய்தவராக இருப்பர் என்று முன்னோர் கூறுவர்.



பழமொழி :

Least said, sooner mended

யாகாவாராயினும் நாகாக்க

இரண்டொழுக்க பண்புகள் :1

1) பெரியோருக்கு பணிவதும், பிறருக்கு உதவுவதும் இளைஞருக்கு அழகு என்பதை நான் அறிவேன்.                                                           

2) எனவே நான் எப்பொழுதும் என்னைச் சுற்றியுள்ள பெரியோர்களிடத்து பணிவாக நடந்து கொள்வேன் . மேலும்  முடிந்தவரை அன்றாடம் பிறருக்கு உதவுவேன்.

பொன்மொழி :

இந்த வருடத்தில் எல்லா நாளுமே சிறந்த நாளே; இதை உங்கள் இதயத்தில் எழுதிவைத்துக்கொள்ளுங்கள்!’’

- ரால்ஃப் வால்டோ எமர்சன் (அமெரிக்க கவிஞர், கட்டுரையாளர்)

பொது அறிவு :

தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் யார்?


டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி

தமிழ்நாட்டின் முதல் பெண் நீதிபதி யார்?


பத்மினி ஜேசுதுரை

English words & meanings :

 drabbing - pulling இழுத்தல்.dreadful - horrible அச்சமூட்டுகின்ற.

ஆரோக்ய வாழ்வு : 

 சிறுகீரை பயன்கள் :உடல் எடை அதிகமாக இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள், வயதானவர்கள், இதய நோயாளிகள், என அனைவருக்கும் ஏற்ற கீரை இந்த சிறுகீரையாகும்..

நீதிக்கதை

 கர்வம் கொள்ளாதே


இரண்டு கழுதைகள் முதுகில் சுமைகளை ஏற்றிக் கொண்டு ஒருவன் நகரத்துக்குப் புறப்பட்டான். ஒரு கழுதையின் முதுகில் தங்க கட்டிகளும், மற்ற கழுதையின் முதுகில் உணவிற்கான தானியமும் ஏற்றிக் கொண்டான்."

தானிய மூட்டை சுமை அதிகமாக இருக்கவே, பாரத்தைத் தாங்க முடியாமல் சுமந்து கொண்டு அந்தக் கழுதை நடந்தது. தங்கக் கட்டிகளைச் சுமந்து வந்த கழுதையோ பெருமிதத்துடன் நடந்து வந்தது.

தங்கத்தை சுமந்து வந்த கழுதை "என்ன நண்பனே பேசாமல் வருகிறாய். நடைப் பயணக் களைப்பு தெரியாமல் இருக்க, ஏதாவது பேசிக் கொண்டு வாயேன்" என்றது.

"உனக்கென்ன சுலபமாகக் கூறி விட்டாய். இந்த உணவு மூட்டையை சுமக்க முடியாமல் சுமந்து வருகின்றேன். எனக்கல்லவா வலி தெரியும்" என்றபடி மெதுவாய் நடந்து வந்தது. "அதுக்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இப்பொழுது உன்னைக் காட்டிலும் நானே உயர்வானவன்" எனத் திமிருடன் பேசியது.

அதனுடன் இனி ஏதும் பேசுவதற்கில்லை என அமைதியானது நட்புக் கழுதை. அவர்களின் பயணம் காட்டு வழியே தொடர்ந்தது. பல திருடர்கள் சேர்ந்து வந்து வழி மறித்தனர். வணிகன் திருடர்களுடன் போராடிப் பார்த்தான் முடியவில்லை.

திருடர்கள் அனைவரின் கைகளிலும் பயங்கரமான ஆயுதம் இருந்தது. அதனால், வணிகன் மேலும் ஒன்றும் செய்யாமல் அமைதியானான்.

வணிகனைப் பிடித்து மரத்தில் கட்டிப் போட்டனர். சுமை அதிகம் இருக்கும் கழுதையைப் பிடித்து, சுமையில் என்ன பொருள் இருக்கிறது எனப் பார்த்தார்கள். தானியத்தையும், உணவையும் எடுத்துக் கொண்டு அக் கழுதையை விரட்டி விட்டனர்.

அடுத்த கழுதையின் முதுகில் என்ன இருக்கிறது எனப் பார்த்தார்கள். தங்கத்தைப் பார்த்ததும் திருடர்கள் அதை எடுக்க முயன்றார்கள்.

அப்பொழுது அக்கழுதை தன் முதுகிலிருந்து தங்கத்தை எடுக்கவிடாமல் அவர்களை கால்களால் உதைத்துத் தாக்கியது.கழுதையின் தாக்குதலில் இருந்து தப்பிக்க வேண்டி திருடர்கள் தங்களிடமுள்ள ஆயுதங்களால் கழுதையைக் காயப்படுத்தினார்கள்.

ஒருவன் கத்தியால் அதனைக் குத்தி விட்டான் கழுதை துடிதுடித்து அந்த இடத்திலேயே விழுந்தது. திருடர்கள் தங்கத்தை எடுத்துக் கொண்டு ஓடி விட்டார்கள்.

தன் கழுதை நண்பன் கீழே விழுந்து உயிருக்கு போராடுவதைக் 'கண்டு ஏதும் செய்ய முடியாமல் அடுத்த கழுதை தவித்தது. கீழே விழுந்து கிடந்த கழுதை "பார்த்தாய நண்பா கேவலம் தங்கம் வைத்திருக்கும் நான் தான் உயர்ந்தவன் எனத் திமிராகப் பேசினேனே! அதற்கு ஏற்ற பரிசு கிடைத்து விட்டது. என்னை மன்னித்து விடு" என்றதும் இறந்து விட்டது.

தன் நண்பன் இப்படி இறந்து விட்டானே என எண்ணி கழுதை கண்ணீர் வடித்தது.


நீதி: ஒருவரைவிட ஒருவர் உயர்ந்தவர்கள் இல்லை என்ற உண்மையைப் புரிந்து கொண்டு,மனதில் நன்மையை நினைத்து நடந்தால் வாழ்வில் என்றும் தீமை நடக்காது.

இன்றைய செய்திகள்

05.01.2024

*"கேலோ இந்தியா யூத் கேம்ஸ் 2023" வரலாற்றை நிரூபிக்க மற்றொரு வாய்ப்பாக இருக்கும்- உதயநிதி ஸ்டாலின்.

*அடிடாஸ் நிறுவனம் சீனாவை தவிர்த்து ஆசியாவில் தனது முதல் சர்வதேச திறன் மையத்தை சென்னையில் கட்டமைக்க இருக்கிறது.

 *இண்டிகோ விமான டிக்கெட் கட்டணம் குறைகிறது. இதனால் பயணிகளின் விமான பயன்பாடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

*மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வரும் 15ஆம் தேதி நடைபெறும் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

*இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்டில் இந்தியா அபார வெற்றி.

Today's Headlines

*"Kelo India Youth Games 2023" will be another chance to prove history- Udayanidhi Stalin.

 *Adidas is set to set up its first international competence center in Asia Apart from China in Chennai.

  *Indigo flight ticket fares getting reduced.  It is expected to increase the passengers air/flight usage.

 *Madurai Avaniyapuram Jallikattu will be held on 15th District Collector announced.

 *India won the second Test between India and South Africa.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Wednesday, January 3, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.01.2024

  



திருக்குறள்

பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : கொல்லாமை

குறள்:329

கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து.

விளக்கம்:

கொலை செய்வதைத் தொழிலாகக் கொண்டு வாழும் மக்கள், அத்தொழிலின் தீமையை அறியாதவர் என்றாலும், அறிந்த பெரியோர் மனத்துள் அவர்கள் கீழான செயல் செய்பவராய்
எண்ணப்படுவார்.


பழமொழி :

Learn ever from an enemy

மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்

இரண்டொழுக்க பண்புகள் :

1) பெரியோருக்கு பணிவதும், பிறருக்கு உதவுவதும் இளைஞருக்கு அழகு என்பதை நான் அறிவேன்.                                                           

2) எனவே நான் எப்பொழுதும் என்னைச் சுற்றியுள்ள பெரியோர்களிடத்து பணிவாக நடந்து கொள்வேன் . மேலும்  முடிந்தவரை அன்றாடம் பிறருக்கு உதவுவேன்.

பொன்மொழி :

புத்தாண்டு தினம் என்பது ஒவ்வொரு மனிதனின் பிறந்தநாள்.’’

- சார்லஸ் லேம்ப் ( இங்கிலாந்து எழுத்தாளர்)

பொது அறிவு :

1. தமிழ்நாட்டின் சிறிய மாவட்டம் எது?

கன்னியாகுமரி

2. தமிழ்நாட்டின் முதல் பெண் ஆளுநர் யார்?

பாத்திமா பீபி

English words & meanings :

 cordial - politely warm and friendly நட்பு, உள்ளன்புடைய. controversy - argument வாக்குவாதம்

ஆரோக்ய வாழ்வு : 

சிறுகீரை பயன்கள் : உடம்பில் ரத்த காயங்களை சீக்கிரத்தில் ஆற்றும் தன்மை இந்த சிறுகீரைக்கு உண்டு. அத்துடன், காயங்களில் தொற்றுக்களை ஏற்படாமலும், தடுக்க உதவு புரிகிறது. அதனால்தான், சிறுகீரையுடன் மஞ்சளையும் சேர்த்து அரைத்து, சொறி, சிரங்கு, காயங்கள் உள்ள இடங்களில் தடவுவார்கள். இதனால், புண்கள் விரைவில் ஆறும்

ஜனவரி 04

லூயிஸ் பிரெய்ல் அவர்களின் பிறந்தநாள்



லூயிஸ் பிரெய்ல் (ஜனவரி-4, 1809. ஜனவரி-6, 1852, பிரான்ஸ்) பார்வையற்றவர்களுக்கான பிரெய்ல் எழுத்தினை உருவாக்கியவர். பிரெஞ்சுக்காரரான இவர் பார்வையற்றவர். பார்வையற்றவர்கள் தடவிப் பார்த்துப் படிக்க ஏற்ற பிரெய்லி எழுத்தினைக் கண்டுபிடித்தார். பிரெயில் முறையில் ஒன்று முதல் ஆறு புடைப்புப்புள்ளிகளையும் ஓட்டைகளையும் கொண்டு எழுதிய எழுத்துகளை விரல்களை வைத்துத் தடவுதலின் மூலம் இனங்கண்டு கொள்வர்.


உலக பிரெயில் நாள்




புற்றெழுத்து அல்லது பிரெயில் (Braille) என்கிற எழுத்து முறை 1821-இல் பார்வையற்றோர்க்குப் படிக்க உதவ லூயி பிரெயில் என்கிற பிரான்சியரால் உருவாக்கப்பட்ட எழுத்து முறை ஆகும். ஒவ்வொரு பிரெயில் எழுத்தும் ஆறு புள்ளிகள் கொண்டுள்ள செவ்வகக் கலம் ஆகும். புள்ளிகள் 6 இடநிலைகளில் எங்கேயும் உயர்த்தப்பட்டு (26), அதாவது 64 எழுத்துச் சேர்ப்புகள் உருவாக்கப்படலாம். சில இடங்களில் புள்ளிகள் உயர்த்தப்படாமல் அமையலாம். இலக்கணக் குறிகளுக்கு தனி எழுத்துகள் உண்டு.

பிரெயில் எழுத்து முறையின் கருத்தமைவு நெப்போலியன் கோரிக்கைக்கு ஏற்ப சார்லஸ் பாபேஜ் உருவாக்கிய இரகசிய தொடர்பு முறையில் தோற்றுவிக்கப்பட்டது. பாபேஜ் பார்வையற்றோர் கல்வி நிலையத்தில் லூயி பிரேயிலை சந்தித்து, லூயி பிரெயிலின் ஆலோசனைகளுக்கு ஏற்ப குறிமுறையை மாற்றி அமைத்தார்.

நீதிக்கதை

 ஆமையும் இரண்டு வாத்துகளும்

 அது ஒரு அழகிய ஏரி. அந்த ஏரியில் அழகிய ஆமை ஒன்று தனது இரண்டு வாத்து நண்பர்களுடன் வாழ்ந்து வந்தது. தினமும் அந்த இரு வாத்துகளை ஆமை சந்திப்பது வழக்கம்.

ஒருநாள் அந்த இரண்டு வாத்துகளும் வருத்தத்துடன் காணப்பட்டன. இதைக்கண்ட ஆமை, “ஏன் இருவரும் வருத்தத்துடன் உள்ளீர்கள்”, என்று கேட்டது.

“பல வருடங்களாக மழை பெய்யாத காரணத்தால் இந்த ஏரி வறண்டு வருகிறது. இன்னும் சில காலத்திற்கு பிறகு இங்கு முற்றிலும் நீர் வறண்டுவிடும். எனவே நாங்கள் இருவரும் பக்கத்து ஊரில் உள்ள ஏரிக்குச் செல்ல இருக்கிறோம் எனக் கூறின. நீர் குறைந்தால் உங்களுக்கு உணவு தான் குறையும், எனக்கோ உயிரே போய்விடும் எனவே“ஒரு நீண்ட குச்சியை எடுத்து வாருங்கள். நான் நடுவில் என்னுடைய பற்களால் கெட்டியாய் பிடித்துக் கொள்கிறேன். நீங்கள் இருபக்கமும் பிடித்து தூக்கிக் கொண்டு பறந்து செல்லுங்கள்”, என்றது ஆமை.

“நாங்கள் உயரப்பறக்கும்போது நீ வாயைத்திறந்தால் கீழே விழுந்து இறந்து விடுவாய்” எனவே வாய் திறக்காமல் வரவேண்டும் என வாத்துகள் கூறியது.

அப்படியானால் “பறக்கும்போது நான் வாய் திறக்காமல் வருகிறேன் என்று ஆமை கூறியது.

இரு வாத்துகளும் இருபக்கமும் குச்சியை பிடித்து பறக்க நடுவில் ஆமை வாயில் பற்றிக்கொண்டு பறந்தன.

சிறிது தூரம் பறந்தவுடன் ஆமை சந்தோஷத்தில் துள்ளிகுதிக்க ஆரம்பித்தது. இரு வாத்துகளும் ஆமையிடம் “சிறிது நேரம் அமைதியாய் இரு. இல்லாவிடில் நீ கீழே விழுந்து விடுவாய்”, என்று கூறியது.அதனை கேட்டு கவனத்துடன் பிடித்து கொண்டது ஆமை.மூவரும் பத்திரமாக பக்கத்து ஏரிக்கு சென்று  மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்.

நீதி:ஆபத்தில் உதவ நல்ல நண்பர்கள் தேவை.

இன்றைய செய்திகள்

04.01.2024

*புத்தக வாசிப்பு அறிவின் புது புது கதவுகளை திறக்கட்டும்: உதயநிதி ஸ்டாலின்.

*அயல் நாட்டு மாணவர்களின் பெற்றோருக்கு இனி அனுமதி கிடையாது - இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்.

*அரை மணி நேரத்தில் இரண்டு முறை நள்ளிரவில் ஆப்கானை உலுக்கிய நிலநடுக்கம்.

*ஜனவரி ஒன்பது முதல் வேலை நிறுத்தம் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு.

* தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தமிழ்நாட்டில் 29 பேருக்கு பாதிப்பு.

*கடைசி டெஸ்ட் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 153 ரன்களில் ஆல் அவுட்.

Today's Headlines

*Let reading books open new doors of knowledge: Udayanidhi Stalin.

 *Parents of foreign students are no longer allowed - UK Prime Minister Rishi Sunak.

 *Earthquakes rocked Afghanistan twice in the middle of the night in half an hour.

 *Transport unions announce strike from January 9.

 * 29 people are affected in Tamil Nadu due to the increasing number of corona virus.

 *In the last Test, India were all out for 153 runs in the first innings.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Tuesday, January 2, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.01.2024

    



திருக்குறள்


பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : கொல்லாமை

குறள்:328

நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை.

விளக்கம்:

வேள்விகளில் கொலை செய்வதால் நன்மை வரும், செல்வம் பெருகும் என்றாலும், பிற உயிரைக் கொல்வதால் வரும் செல்வத்தைச் சான்றோர் இழிவானதாகவே எண்ணுவர்.


பழமொழி :

Laugh away your fears

இடுக் கண் வருங்கால் நகுக

இரண்டொழுக்க பண்புகள் :1

1) பெரியோருக்கு பணிவதும், பிறருக்கு உதவுவதும் இளைஞருக்கு அழகு என்பதை நான் அறிவேன்.                                                           

2) எனவே நான் எப்பொழுதும் என்னைச் சுற்றியுள்ள பெரியோர்களிடத்து பணிவாக நடந்து கொள்வேன் . மேலும்  முடிந்தவரை அன்றாடம் பிறருக்கு உதவுவேன்.

பொன்மொழி :

தேதி கேலண்டரின் தாளைக் கிழிக்கும் ஒவ்வொரு முறையும், புதிய யோசனை மற்றும் முன்னேற்றத்துக்கான ஒரு புதிய இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்!’’

- சார்லஸ் எஃப். கேட்டரிங் (அமெரிக்க தொழிலதிபர்)

பொது அறிவு :

1.தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் எது?

திண்டுக்கல்

2.தமிழ்நாட்டின் முதல் மாவட்டம் எது?

திருநெல்வேலி

English words & meanings :

 Bloom- a flower, especially one cultivated for its beauty.பூக்கும். banquet- an elaborate and formal meal for many people.விருந்து.

ஆரோக்ய வாழ்வு : 

சிறுகீரை பயன்கள் :ரத்தசோகை பிரச்சனை இருப்பவர்களும், இந்த கீரையை அடிக்கடி சாப்பிடவேண்டும். இதனால், ரத்தத்தில் ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

ஜனவரி 03

சாவித்திரிபாய் புலே அவர்களின் பிறந்தநாள்


சாவித்திரிபாய் புலே (Savitribai Jyotirao Phule, 3 சனவரி 1831 – 10 மார்ச் 1897) ஒரு சமூக சீர்திருத்தவாதியும், கவிஞரும் ஆவார்.இவர் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என அழைக்கப்படுகிறார். இவர் தன் கணவர் மகாத்மா ஜோதிராவ் புலேயுடன் (Mahatma Jyotirao Govindrao Phule) இணைந்து, ஆங்கிலேயர் காலத்தில் பெண் உரிமைக்காகவும், கல்விக்காகவும் பாடுபட்டவர். இவர்கள் பெண் கல்விக்காக முதல் பள்ளியை பூனாவிற்கருகிலுள்ள பிடெ வாடாவில் 1848 ஆம் ஆண்டு நிறுவினர்.[1][2]

சாவித்திரிபாய் புலே பிறப்பின் 186 ஆவது ஆண்டு நிறைவை தேடு பொறி கூகுளானது, ஜனவரி 3, 2017 அன்று ”கூகுள் டூடுள்” கொண்டு அடையாளப்படுத்திச் சிறப்பித்தது

நீதிக்கதை

வாங்கினால்தானே அது 

நீதிக்கதை

 இரண்டு தவளைகள்!

 

மிகவும் ஆழமான கிணறு ஒன்றில் இரண்டு தவளைகள் விழுந்து விட்டன. இரண்டும் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தவித்தன. கிணற்றின் ஓரம் ஏறி மேலே வருவதற்கு முயற்சி செய்துக் கொண்டிருந்தன.  இரண்டு தவளைகளும் வழுக்கி வழுக்கி உள்ளே விழுந்துக் கொண்டிருந்தன.

இரண்டு தவளைகளும் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த தகவல் அங்கிருந்த அனைத்து தவளைகளுக்கும் தெரிய வந்தது. அனைத்து தவளைகளும் ஒன்றுக் கூடி கிணற்றின் அருகே வந்தது.

ஆனால் அந்தத் தவளை கூட்டம், அந்த இரு தவளைகளுக்கு உதவி செய்யவில்லை. அதற்கு மாறாக இரு தவளைகளிடமும், ’ஏன் வீணாக முயற்சி செய்துக் கொண்டிருகிறீர்கள்? உங்களால் இது முடியாது. உங்கள் முயற்சியைக் கைவிட்டு விடுங்கள். மரணம் தான் உங்கள் முடிவு’ என்று கூச்சலிட்டது.

இரு தவளைகளும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் மீண்டும் முயற்சி செய்துக் கொண்டே இருந்தன. தவளை கூட்டம் விடுவதாக இல்லை, ‘இந்தக் கிணறு மிகவும் ஆழமானது. வீண் முயற்சியை விட்டுவிட்டு மரணத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று கத்தியது.இரு தவளைகளில் ஒரு தவளை சற்று தடுமாறியது. மீண்டும் கத்தியது அந்தக் கூட்டம், ’மேலே நீங்கள் ஏறி வர வேண்டிய தூரத்தைக் கண்டீர்களா? இவ்வளவு தூரம் ஏறி வருவது சாத்தியம் அற்றது. இதுவரை இந்தக் கிணற்றில் விழுந்த 98 தவளைகளும் இறந்துவிட்டன. உங்களுடன் சேர்த்து அந்த எண்ணிக்கை இன்று 100 ஆக உயர போகிறது. முயற்சியைக் கைவிட்டுவிடுங்கள் உங்கள் விதி மரணம் தான் என்பதை ஏற்று, கிணற்றின் உள்ளே விழுந்து விடுங்கள்’ என்று ஆரவாரம் செய்தது.

இரு தவளைகளில் ஒரு தவளையின் மனம் மாறியது. மேலே இருக்கும் தவளைகள் கூறுவது சரி தான் என்று ஏற்றுக் கொண்டது. அதன் முயற்சியைக் கை விட்டு, கிணற்றின் நீரினுள் விழுந்து இறந்து விட்டது.

முயற்சி செய்துக் கொண்டிருந்த அந்த ஒரு தவளையைப் பார்த்து, ‘அதோ பார். உன்னோடு ஏறிக் கொண்டிருந்த தவளை உண்மையை உணர்ந்து உள்ளே விழுந்து விட்டது. நீயும் உன் முடிவை ஏற்றுக் கொள். அது தான் உனக்கு இருக்கும் ஒரே வழி’ என்று சத்தம் போட்டன.

ஆனால் அந்த ஒரு தவளை அவை கூறும் எதையும் கண்டுக் கொள்ளவில்லை. மேலே ஏற முயற்சி செய்துக் கொண்டே இருந்தது. பல மணி நேர முயற்சிக்குப் பின் மேலே ஏறி வந்து விட்டது. சுற்றி இருந்த தவளைகளுக்கு ஒரே ஆச்சிரியம். அந்தத் தவளையைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடின.

அதற்குப் பின் மேலே வந்த தவளை அந்தத் தவளை கூட்டத்திடம், ’தவளை நண்பர்களே! உங்களால் தான் என்னால் இதைச் செய்ய முடிந்தது மிகவும் நன்றி’ என்று உரைத்தது. தவளை கூட்டம் குழப்பமாக நின்றது.

அந்தத் தவளை மேலும் தொடர்ந்தது, ‘எனக்குச் சிறு வயது முதலே காதுக் கேட்காது. செவித்திறன் குறைபாடுள்ள நான் தெரியாமல் கிணற்றின் உள்ளே விழுந்து விட்டேன். ஆனால் நீங்கள் அனைவரும் ஒன்றுக் கூடி வாயை அசைத்துக் கொண்டே இருப்பதை கவனித்துக் கொண்டே இருந்தேன். 

நான் மேலே ஏறி வர நீங்கள் அனைவரும் இடைவிடாமல் வாயை அசைத்து ஊக்கம் அளித்ததை கவனித்தேன். அது தான் நான் மேலே ஏறி வர உறுதுணையாக இருந்தது’ என்று அப்பாவியாகப் பதில் அளித்தது.

நம் வாழ்க்கையிலும் புதிதாக ஏதேனும் முயற்சி செய்யும்பொழுது, பலர் நம்மை விமர்சனம் செய்துக் கொண்டே இருப்பர். முதல் தவளையைப் போல அவற்றைக் காதில் வாங்கிக் கொண்டிருந்தால் நாம் நினைத்த இலக்கை அடைய முடியாது. இரண்டாம் தவளையைப் போல அவற்றுக்குச் செவி சாய்க்காமல் செய்ய நினைப்பதை செய்துக் கொண்டே செல்ல வேண்டும்.

ஒரு நாள் நினைத்த இலக்கை அடைந்த பின் விமர்சித்த வாய் அனைத்தும் வியந்து நம்மை வாழ்த்தும்.

இன்றைய செய்திகள்

03.01.2024

*2023 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீசின் முகேஷ் அம்பானி இந்தியாவின் கோடீஸ்வரர் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

*ரன்வேயில் தரையிறங்கிய விமானத்தில் திடீர் தீ விபத்து: ஜப்பானில் பரபரப்பு.

*நெல்லையில் 92 சதவீத நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது - கலெக்டர் தகவல்.

*திருச்சியில் கட்டப்பட்ட பன்னாட்டு விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

*கடந்த ஆண்டை விட மூன்று கோடி பேர் அதிகமாக மெட்ரோ ரயிலில் பயணம்.

*யுனைடெட் கோப்பை டென்னிஸ்; நம்பர் 1 வீரர் ஜோகோவிச்சின் செர்பிய அணி காலிறுதிக்கு முன்னேற்றம்.

Today's Headlines

* Reliance Industries' Mukesh Ambani topped India's billionaire list in 2023.

*Sudden fire in plane landing on runway: stir in Japan

* 92 percent relief amount has been given in paddy - Collector information.

*Prime Minister Modi inaugurated the international airport built in Trichy.

* More than three crore  people travelled by metro train than last year.

*United Cup Tennis; No. 1 player Djokovic's Serbian team advances to the quarterfinals.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Monday, January 1, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.01.2024

    




திருக்குறள்

பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : கொல்லாமை

குறள்:327

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.

விளக்கம்:

 தன்னுயிரே போவதாக இருப்பினும்கூட அதற்காக இன்னொரு உயிரைப் போக்கும் செயலில் ஈடுபடக்கூடாது.

பழமொழி :

Lamp at home and a lion at chase

பார்த்தல் பூனை, பாய்ந்தால் புலி

இரண்டொழுக்க பண்புகள் :1

1) பெரியோருக்கு பணிவதும், பிறருக்கு உதவுவதும் இளைஞருக்கு அழகு என்பதை நான் அறிவேன்.                                                           

2) எனவே நான் எப்பொழுதும் என்னைச் சுற்றியுள்ள பெரியோர்களிடத்து பணிவாக நடந்து கொள்வேன் . மேலும்  முடிந்தவரை அன்றாடம் பிறருக்கு உதவுவேன்.

பொன்மொழி :

ஒரு புத்தகத்தின் அத்தியாயம் எழுதக் காத்திருப்பதைப்போல், புது வருடம் நம் முன்னால் நின்றுகொண்டிருக்கிறது. இலக்குகளை நிர்ணயிப்பதன் மூலமாக, அந்தக் கதையை எழுத நாம் உதவுவோம்.’’

- மெலடி பீட்டி (அமெரிக்க எழுத்தாளர்)

பொது அறிவு :

1. தமிழ்நாட்டின் மாநில மலர் எது?


செங்காந்தள்

2. தமிழ்நாட்டின் மாநில மரம் எது?


பனை மரம்

English words & meanings :

 Accentuate-make more noticeable or prominent. வலியுறுத்து. Axle- a rod or spindle (either fixed or rotating) passing through the centre of a wheel or group of wheels. அச்சு.

ஆரோக்ய வாழ்வு : 

சிறுகீரை பயன்கள் : நார்ச்சத்து அதிகம் உள்ளதால், செரிமானம் எளிதாகி, வயிற்றை சுத்தப்படுத்துகிறது.. மலச்சிக்கலையும் தீர்க்கிறது.. வைட்டமின் A, B, C, மற்றும் இரும்புச்சத்து,பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாதுக்கள் இந்த சிறுகீரையில் நிரம்பி கிடக்கின்றன.

நீதிக்கதை

 புறா சொல்லும் பாடம்


சில புறாக்கள் ஒரு கோயில் மாடத்துல தங்கியிருந்தன

வயது முதிர்ந்த ஒரு புறாதான் தலைவர். தினமும் காலையில்  தலைவர் வழி காட்டி அழைச்சிகிட்டு போகுற இடத்துக்கு போய்  இரை சாப்பிட்டுட்டு மாலையில தங்களோட இடத்துக்குத் திரும்பிடும்.

இதைக் கவனித்த  வேடன் ஒருநாள் இரவு கோயில் அருகிலேயே தரையில் நிறைய தானியங்களைத் தூவி , அதன் மேலே ஒரு வலையை அமைத்து நான்கு மூலையிலும்  குச்சி அடித்து வைத்துவிட்டு போனான்.

அதிகாலையில் எல்லா புறாவும் இரைதேடி கிளம்பும் போது கீழே கொட்டிக்கிடக்கும் அந்த தானியங்களைப் பார்த்தன. ” இங்கேயே நம் தேவைக்கும் அதிகமான தானியங்கள் சிதறிக் கிடக்கின்றன; அதனால் நெடுந்தூரம் பறந்து போய் இரை தேட வேண்டாம்” என்று சில இளம் புறாக்கள் கூறின. அதற்கு தலைமைப் புறா,

” இத்தனை நாளில்லாமல் இன்றைக்கு இவ்வளவு தானியமா; எனக்கு இது சந்தேகமாக உள்ளது. மேலும் நம் முயற்சி இல்லாமல் தானே எதுவும் கிடைத்தால் அதில் ஆபத்து இருக்கலாம்; நான் போய் இரைக்கான இடத்தை தேர்வு செய்து வருகிறேன் ” என்றது.அதற்குள் இளம் வயது புறாக்கள் ஒன்றுகூடி, “சுலபமாக கிடைப்பதை தலைவர் தடுக்கப் பார்க்கிறார்; வாருங்கள் இந்த தானியங்களை சாப்பிடுவோம் ” என்று கூறி எல்லா புறாக்களையும் தானியங்கள் மீது இறங்கச் செய்தன.

அவ்வளவுதான், அடுத்த நொடி புறாக்களின் கால்கள் வலையில் சிக்கிக் கொண்டன. ஆபத்தை உணர்ந்த புறாக்கள் பொறுமையிழந்து சிறகுகளை அடித்தபடி ” ஆபத்து, காப்பாற்றுங்கள்”  என்று கதறத் தொடங்கின.அப்போது தலைவர் எல்லோரையும் அமைதிப்படுத்தியது. மேலும்

” நான் சொல்வதை இப்போதாவது கவனமாகக் கேளுங்கள், நாம் வேடன் கையில் சிக்காமல் தப்பிக்கலாம். எல்லாரும் இறந்தது போல நடியுங்கள். வேடன் வலையின் நான்கு மூலைகளிலும் அடித்து வைத்திருக்கும் குச்சியை எடுத்ததும் நான் வேகமாகப் பறந்துவந்து வேடன் தலையில் கொத்துவேன்;அவன் வலிதாங்காது கத்துவான். அதை உங்களுக்கான எச்சரிக்கையாக கருதி எல்லாரும் ஒற்றுமையாக சிறகடித்து வலையுடன் வானத்தில் பறக்க வேண்டும்” என்று திட்டம் கூறியது. சிறிது நேரத்தில் வந்து பார்த்த வேடன் தண்ணீரில்லாமல் புறாக்கள் இறந்துவிட்டதாக எண்ணினான். ” அடடா, இவை உயிருடன் இருந்தால் நல்ல விலைக்கு விற்பதால் நிறைய பணம் கிடைத்திருக்கும். பரவாயிலலை இதாவது கிடைத்ததே என்று வலையின் நான்கு மூலைகளின் முளைக்குச்சிகளை அகற்றினான். தாமதமில்லாமல் தலைமைப்புறா பறந்து வந்து வேடன் தலையில் கொத்தியது. வேடன் வலியில்

” ஆ..அம்மா” என்று கத்தினான். இந்த ஒலியைக்கேட்ட மற்ற புறாக்கள் படபடவென சிறகடித்து வலையுடன் வானில் பறந்தன. அதன் கீழே வேடன் சிறிது தூரம்”ஐயோ..என் வலை.” என்று கத்திக் கொண்டே ஓடினான்.

பறந்த புறாக்கள் ஒரு மலையைக் கடந்து சென்றபோது தலைமைப்புறா கீழிறங்க ஆணையிட்டது. அந்த இடத்தில் ஒரு எலி வலை இருந்தது. வலையுடன் புறாக்கள் இறங்கிதைப் பார்த்த எலி உள்ளே ஓடி பதுங்கியது.

தலைமைப்புறா, “எலி நண்பா,நான்தான் உன் புறா நண்பன் வந்திருக்கிறேன். ஆபத்திலிருக்கும் எங்களைக் காப்பாற்று”  என்று கூறியது.  வெளிவந்த எலி , ” நண்பனான  உனக்கு ஆபத்தென்றால் காப்பாற்றலாம்;  என் சிறிய பற்களால் கடித்து எல்லாரையும் விடுவிக்க முடியாது” என்றது.

“நம் நட்புக்காக இவர்களை நீ காப்பாற்றியே ஆகவேண்டும் ” என்றது புறா.

நண்பனின் வேண்டுதலை மறுக்க முடியாத எலி வலையைக்கடித்து எல்லாரையும் விடுவித்தது.

விடுதலையடைந்த புறாக்கள் எலிக்கு நன்றி கூறிவிட்டு பறந்தன.

அன்புக் குழந்தைகளே, இக்கதை மூலம் நாம் பெறும் படிப்பினை:

உழைப்பில்லாமல் வருபவை ஆபத்து உள்ளவை.

அனுபவமிக்க வீட்டில் உள்ள பெரியவர் அறிவுரையைக் கேட்கவேண்டும்

ஒற்றுமையே பலமாகும்; அதுவே வெற்றி தரும்.

துன்பநேரத்தில் நண்பனைக் காக்க வேண்டும்.

சிறியவர்களும் சில நேரங்களில் பெரிய உதவியைச் செய்வார்கள்.

இன்றைய செய்திகள்

02.01.2024

*கவிஞர் வைரமுத்துவின்
 "மகா கவிதை" நூல் முதலமைச்சர் 
மு க ஸ்டாலின் வெளியிட்டார்.

*ஜப்பானைத் தொடர்ந்து தென்கொரியா, ரஷ்யாவிலும் நிலநடுக்கம் மற்றும் வடகொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை.

*ஜம்மு-காஷ்மீர்- ஸ்ரீ நகரில் உள்ள லால் சவுக்கில் இதுவரை இல்லாத அளவில் புத்தாண்டு கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது.

* திருச்சி மாவட்டத்தில் சாகுபடி மையங்களில் நெல் வரத்து குறைந்துள்ளதால் தற்போது தமிழகம் முழுவதும் அரிசி விலை திடீர் உயர்வு.

* புரோ கபடி லீக்:  ஒரு புள்ளியில் வெற்றியை நழுவ விட்ட தமிழ் தலைவாஸ். 9வது லீக்கில் ஆடிய தமிழ் தலைவாசுக்கு இது ஏழாவது தோல்வி.

Today's Headlines

*Poet Vairamuthu's
 "Maha Kavithai" book was 
Published by Chief Minister M. K.Stalin.

*After Japan, South Korea, Russia also received an earthquake warning and a tsunami warning for the eastern coast of North Korea.

*Jammu-Kashmir- Sri Nagar's Lal Chowk had an unprecedented New Year celebration.

* Due to reduced supply of paddy in cultivation centers in Trichy district, the price of rice has suddenly increased across Tamil Nadu.

* Pro Kabaddi League: Tamil Thalaivas miss out on victory by one point. This is the seventh defeat for Tamil Thalaivas who played in the 9th league.
 Prepared by

Covai women ICT_போதிமரம்