Sunday, March 5, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.03.2023

 திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 

இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: ஒழுக்கம் உடைமை

குறள் எண்: 401
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.

பொருள்:
நிறைந்த அறிவாற்றல் இல்லாமல் அவையில் பேசுவது ஆடுவதற்கான கட்டம் போட்டுக் கொள்ளாமலே சொக்கட்டான் விளையாடுவதைப் போன்றதாகும்.

பழமொழி :

Courage and perseverance conquer all before them.
வீரமும் விடா முயற்சியும் அனைத்தையும் வெல்லும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. என் கண் இவ்வுலகை கண்டு கற்றுக் கொள்ள உதவும் ஒரு சன்னல். 

2. எனவே என் சன்னலை பாதுகாப்பேன்.

பொன்மொழி :

நல்ல முடிவுகள்.. அனுபவத்திலிருந்து பிறக்கின்றன; ஆனால் அனுபவமோ தவறான முடிவுகளில் இருந்து கிடைக்கிறது.

பொது அறிவு :

1. திரவத்தங்கம் என்று அழைக்கப்படுவது எது?


 பெட்ரோலியம்


 2. இந்தியா மயிலை தேசியப் பறவையாக அறிவித்த ஆண்டு எது? 


 1964

English words & meanings :

docile – submissive. adjective. The horses are docile. சாந்தமான/பணிவான. பெயரடை

ஆரோக்ய வாழ்வு :

ப்ரோக்கோலி நார்ச்சத்து நிறைந்து இருப்பதால் கொழுப்பை குறைக்கும். அலர்ஜியால் ஏற்படும் பிரச்சினைகளைக் குறைக்கும். மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கும். இதயத்தை ஆரோக்கியமாக்கும் .நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உயர் ரத்த அழுத்தப் பிரச்சினையை சரி செய்யும்.


நீதிக்கதை

மோதிரம்

விஜயநகரப் பேரரசின் அவை கலைந்தது. அரசர் கிருஷ்ண தேவராயர் வெளியேறிக் கொண்டிருந்தார். மற்ற உறுப்பினர்களும் பின் தொடர்ந்தனர். அப்போது அமைச்சர் தெனாலிராமனிடம் மெல்லிய குரலில், தெனாலி... உனக்கோ வயதாகி விட்டது. ஏன் நீ அரசரிடம் கேட்டு பணி ஓய்வு பெறக் கூடாது? என்றார். அது அரசரின் காதில் விழுந்து விடவே, அரசர் சிரித்தவாறு, தெனாலிராமா! வேண்டுமானால் சொல்... மகிழ்ச்சியோடு தருகிறேன்! என்றார். அப்படியானால் சரி... ஆனால், ஒரு நிபந்தனை! எனக்குப் பதிலாக வரப்போகிறவரை நான்தான் சோதித்துத் தேர்வு செய்து தருவேன்... என்றார்.

அதற்கென்ன... அப்படியே செய்யலாம்...! என்று அரசர் ஏற்றுக் கொண்டார். அப்படியானால் உங்கள் மோதிரத்தை என்னிடம் கொடுங்கள்! என்றார் தெனாலிராமன். ஏன்...? எதற்கு? என்று அரசர் கேட்கவில்லை. கழற்றப் போனார். அதற்குள் முந்திக் கொண்டு, அமைச்சர் தன் மோதிரத்தைக் கழற்றிக் கொடுத்து விட்டார். அதை பெற்றுக்கொண்ட தெனாலிராமன், அடுத்த வியாழக்கிழமை சோதனை... அதில், வெற்றி பெறுபவர் எனது பதவியைப் பெறுவார்... நான் ஓய்வில் போய்விடுகிறேன். என்றார்.

மோதிரத்தைப் பெற்றுக் கொண்ட தெனாலி, ஒரு சிறிய மர டப்பாவில் அதை வைத்து மூடி, அரண்மனையில் இருந்த யானை நீர்குடிக்கும் ஆழமான பெரிய தொட்டியினுள் அதைப் போட்டுவிட்டு, யார் இதை எடுக்கிறாரோ, அவரே எனக்குப் பின் என் பதவிக்கு வரமுடியும்... என்றார். அடுத்த சில நாட்களில், பதவித் தேர்வுக்கு மனு செய்திருந்த இளைஞர்கள் அனைவரும் வந்து ஆழமான தொட்டியைப் பார்த்தனர். அப்போது தொட்டி முற்றிலும் வறண்டு போயிருந்தது. மோதிர டப்பா அடியில் கிடந்தது. அதனுள் எப்படி இறங்கி அதை எடுப்பது? அனைவரும் பல்வேறு உபாயங்களைச் செய்து பார்த்தனர். எவராலும் எடுக்க முடியவில்லை.

அதற்குள் தெனாலிராமன் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. அமைச்சர், அவர் காதில் விழும்படியாகவே, தெனாலிராமன் அந்த மோதிரத்தைத் தானே அபகரித்துக் கொள்ளச் செய்யும் தந்திரம் இது... இல்லாவிட்டால், அவனே அதை வெளியில் எடுத்துக் காட்டட்டுமே...! என்றார். அதைக் கேட்டதும், தெனாலிராமன் நேராக அரண்மனைக்குச் சென்றார். அரசர் ஒவ்வொரு வருடமும் ஹோலிப் பண்டிகையின் போது அந்த யானைத் தொட்டியில்தான் வண்ணநீரை நிரப்புவது வழக்கம். அதற்கு நீர் நிரப்பவும் வடி கட்டவும் தனித்தனிக் குழாய்கள் உண்டு. தெனாலி சென்று நீர் நிரப்பும் குழாயை திறந்து விட்டார்.

தொட்டியில் நீர் நிரம்பவே, அடியில் கிடந்த சிறிய மர டப்பா நீரில் மிதந்து மேலே வந்துவிட்டது. அதை எடுத்துத் திறந்து மோதிரத்தை அரசர் கையில் ஒப்படைத்து விட்டார். அரசரிடமிருந்து அது அமைச்சரைப் போய்ச் சேர்ந்து விட்டது. மகிழ்ச்சி அடைந்த அரசர் கிருஷ்ண தேவராயர், மோதிரத்தை எடுத்துத் தருபவர் தான் உனக்குப் பிறகு உன் பதவிக்கு வர முடியும் என்றாய்... இப்போது நீயே எடுத்துத் தந்து விட்டாய்... எனவே, உன் பதவி உன்னையே வந்தடைந்து விட்டது. ஆகவே, உனக்கு ஓய்வு தருவது பற்றி இனி நான் எண்ணிக்கூடப் பார்க்க முடியாது என்றார். அமைச்சர் வெட்கித் தலைகுனிந்தார்.

இன்றைய செய்திகள்

06.03. 2023

* கோவை வெள்ளியங்கிரி மலையில் 12 மணி நேரம் எரிந்த காட்டுத்தீ: மலை மீது ஏறுபவர்கள் இயற்கைச் சூழலை பாதுகாக்க பொறுப்புணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் என்று வனத்துறையினர் வேண்டுகோள்.

* மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக தொடரப்பட்ட வழக்குகளில் 4,922 வழக்குகள் கடந்த 6 வாரங்களில் தீர்க்கப்பட்டு, ரூ.5 கோடி அபராதத் தொகை வசூலிக்கப்பட்டதாக சென்னைப் பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

* வைரஸ் காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் வரும் 10ம் தேதி, தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

* தென் மாவட்டங்களில் 4 நாள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

* இந்தியாவில் பரவுவது இன்ஃப்ளூயன்ஸா ஏ வகை வைரஸ் - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்.

* மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆறு இருமல் மருந்து உற்பத்தி நிறுவனங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

* “நாங்கள் போருக்கு எதிரானவர்கள். மனித உரிமைகளை அடிப்படை உரிமையாக பார்ப்பவர்கள்” என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அமிரப்துல்லாஹியன் தெரிவித்துள்ளார்.

* மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 60 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றுள்ளது.

* உலகின் முதல் நிலை வீரரான நோவக் ஜோகோவிச்சின் தொடர் வெற்றிகளுக்கு துபாய் டென்னிஸ் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் முற்றுப்புள்ளி வைத்தார் 7–ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவ்.

Today's Headlines

* A forest fire burned for 12 hours in Velliangiri Hill, Coimbatore: The forest department has requested mountain climbers to behave responsibly to protect the natural environment.

 * According to the Chennai Metropolitan Traffic Police, 4,922 cases of drunken driving have been settled in the last 6 weeks and fines of Rs 5 crore have been collected.

 * People's Welfare Minister M. Subrahmanian has said that a special fever medical camp will be held at 1000 places across Tamil Nadu on the 10th as many people are suffering from viral fever.

* Chances for 4-days rain in southern districts: Chennai Meteorological Center Information.

* Influenza A virus circulating in India - Indian Council of Medical Research information.

 * The Maharashtra government has announced that the licenses of six cough medicine manufacturing companies have been temporarily revoked.

*  “We are against war.  Those who see human rights as basic rights," said Iran's Foreign Minister Amiratullahian.

*  Delhi team won the women's premier league match against RCB by 60 runs.

* World number one Novak Djokovic's winning streak was ended by Russia's 7th seed Daniil Medvedev in the semi-finals of the Dubai Tennis Series.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Thursday, March 2, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.03.2023

 திருக்குறள் :


பால் :அறத்துப்பால் 

இயல்:இல்லறவியல்

அதிகாரம்: ஒழுக்கம் உடைமை

குறள் எண்: 138

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.

பொருள்:
நல்லொழுக்கம், அறமாகிய நன்மைக்கு வித்தாக அமைந்து இம்மை மறுமையிலும் இன்பம் தரும்; தீயொழுக்கமோ துன்பமே தரும். 

பழமொழி :

Little strokes fell great oaks.

சிற்றுளியால் மலையும் தகரும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. மழை காலத்திற்கு என்று உணவை சேமிக்கும் எறும்பை போல மாணவ பருவத்திலேயே சேமிக்க பழகுவேன். 

2. கனி தரும் மரங்கள் போல மற்றவர்க்கு எப்போதும் பயன் தர முயற்சிப்பேன்.

பொன்மொழி :

பெரும் அறிவாளிகள் புத்தகங்களோடு வாழ்க்கையையும் சேர்ந்தே படிக்கிறார்கள்.

பொது அறிவு :1

. உடலில் ஓடு உள்ள ஒரே பாலூட்டி உயிரினம் எது ?

 ஆமை .

 2.கங்காரு அதிகமாக காணப்படும் நாடு எது?

 ஆஸ்திரேலியா.

English words & meanings :

domain - an area owned or controlled by a ruler. noun. Some animals have their own domain in the forests. அதிகார அல்லது ஆதிக்க வரம்பு. பெயர்ச் சொல் 

ஆரோக்ய வாழ்வு :

ஒமேகா 3 நிறைந்த கொழுப்பு மீன்கள், வெண்ணெய், நட்ஸ் வகைகள், பெர்ரி பழங்கள், அதிக அளவில் பச்சை காய்கறிகள், கீரைகள், அவித்த முட்டை போன்றவற்றை சாப்பிட வேண்டும். அதுமட்டுமின்றி சரியான உடற்பயிற்சியைப் பின்பற்றுவதோடு, மனதையும் மகிழ்ச்சியான சூழ்நிலையில் வைத்திருந்தால் உங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

  மார்ச் 03


உலகக் காட்டுயிர் நாள்


உலகக் காட்டுயிர் நாள் (World Wildlife Day) அருகிவரும் காட்டு விலங்குகள் மற்றும், தாவரயினங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கமாக, ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 3 இல் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. 2013, டிசம்பர் 20 அன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (UNGA) 68 ஆவது அமர்வில் “காட்டு விலங்குகள், மற்றும் தாவரங்கள் அருகிவரும் உயிரினங்களின் சர்வதேச வர்த்தக சாசனம்” (CITES) மூலம் இந்நாளை உலகக் காட்டுயிர் நாளாக தாய்லாந்தினால் முன்மொழியப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.[1]

இம்முயற்சியில் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் பொருட்டு திரைப்பட விழா, விழிப்புணர்வு கருதரங்கங்களை ஐ. நா நடத்திவருகிறது.

நீதிக்கதை

வித்தைக்காரனை வென்ற கதை

தெனாலி ராமன் கிருஷ்ணதேவராயரின் புகழைக் கேள்விப்பட்டு அவரைக் காண்பதற்காக விஜயநகரத்தை நோக்கிப் புறப்பட்டார். எப்படியாவது அரசரைப் பார்த்து விடுவது என்று முயற்சித்துக் கொண்டே அவ்வூரில் தங்கினார். தினமும் அரண்மனைக்குப் போவதும் திரும்பி வருவதுமாக இருந்தார். ஒரு நாள் வேடிக்கை செய்து காட்டும் செப்படி வித்தைக்காரனை சந்தித்தார். 

அவனும் அரசரிடம் தன் வித்தைகளைக் காட்டிப் பரிசு பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் இருப்பதைப் புரிந்து கொண்டார். அவனிடம் ஒரு வித்தைக்காரனாக சேர்ந்து கொண்டார். அரசர் முன்னிலையில் வித்தைக்காரன் செப்படி வித்தைகளைச் செய்து காட்டி அனைவரையும் மகிழ்வித்தான். அரசரும் மிகவும் மகிழ்ந்து ஆயிரம் பொன் பரிசளித்தார். 

ஆனால் இராமன் அரசே! இவனை விட வித்தையில் நான் வல்லவனானக இருக்கிறேன். நான் செய்யும் வித்தையை இவனால் செய்ய முடியுமா? என்று கேட்டுப் பாருங்கள். பிறகு பரிசு யாருக்கு என்று முடிவு செய்யுங்கள். அரசருக்கு மிக்க மகிழ்ச்சி. போட்டி என்று வந்தாலே மிகவும் சுவையுடையதாக இருக்குமல்லவா? சரி உன் வித்தைகளை காட்டு என்று அனுமதி வழங்கினார். 

செப்படி வித்தைக்காரனுக்கு ஒரே கோபம். உனக்கு என்னென்ன வித்தைகள் தெரியும். நீ அதைச் செய்து காட்டு, அந்த வித்தைகளை நான் செய்து காட்டுகிறேன், என்று சவால் விட்டான். தெனாலிராமனோ பதட்டம் இல்லாமல் முன்னால் வந்து நின்றார். ஐயா! நான் ஒரே ஒரு வித்தையை மட்டும் செய்கிறேன். அதுவும் கண்களை மூடிக்கொண்டு, அதையே நீங்கள் கண்களைத் திறந்து கொண்டு செய்ய வேண்டும். உங்களால் முடியாவிட்டால், அரசர் தரும் ஆயிரம் பொற்காசுகளில் பாதியை எனக்குத் தந்து விட வேண்டும், என்றார். 

வித்தைக்காரனோ வெகு அலட்சியமாக, நீ செய்து காட்டு என்றான். உடனே இராமன் அரசரை வணங்கி கீழே அமர்ந்தான். தன் கை நிறைய மணலை எடுத்துக் கொண்டு மூடிய தன் கண்களில் நிறைய கொட்டிக் கொண்டார். அனைவரும் ஆரவாரம் செய்து சிரித்தனர். மன்னரும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார். இராமன் வித்தைக்காரனைப் பார்த்து இந்த வித்தையை நீர் உமது கண்களைத் திறந்து கொண்டே செய்து காட்ட வேண்டும் என்றார். வித்தைக்காரனால் எப்படி முடியும்? என்னை மன்னித்து விடுங்கள் என்று தலை குனிந்து நின்றான். மன்னர் மகிழ்ந்து இராமனை அழைத்து அவரைப் பற்றி அறிந்து கொண்டார். பிறகு தெனாலி ராமகிருஷ்ணா! உன் புத்தி சாதுர்யத்தை மெச்சினேன். நீ சொன்னபடி ஐநூறு பொற்காசுகளைப் பெற்றுக் கொள் என்றார். 

அரசே! இந்த வித்தைக்காரன் வித்தை காட்டுவதில் தனக்கு மிஞ்சியவர் யாருமில்லை என்று பேசிக் கொண்டிருந்தான். அவன் கர்வமாகப் பேசியதை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை உணர்த்தவும் அவன் கர்வத்தை அடக்கவும் நான் இவ்வாறு செய்தேன். நான் வித்தைக்காரன் என்று பொய் சொன்னதற்கு என்னை மன்னியுங்கள். ஆயிரம் பொன்னையும் அவருக்கே அளியுங்கள். என்று கேட்டுக் கொண்டார். 

அரசர் மனம் மகிழ்ந்து இராமன் சொன்னபடியே வித்தைக்காரனுக்கு ஆயிரம் பொற்காசுகளையும் பரிசாக அளித்தார்.

இன்றைய செய்திகள்

03.03.2023

* தமிழகத்தில் பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உயர்த்தப்பட்ட நிவாரணமாக ரூ.112 வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

* கோவை யானைகள் வழித்தடத்தில் உள்ள 118 செங்கற்சூளைகளின் மின் இணைப்பை துண்டிக்க ஐகோர்ட் உத்தரவு.

* தலைமைத் தேர்தல் ஆணையர் நியமனத்துக்கு எதிர்க்கட்சி தலைவரை உள்ளடக்கிய பரிந்துரைக் குழு தேவை: உச்ச நீதிமன்றம்.

* டெல்லி – ஜெய்ப்பூர் இடையே மின்சார விரைவு சாலை: இந்தியாவிலேயே முதல் முறையாக அமைகிறது.

* கிரீஸ் நாட்டில் கோர விபத்து - ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் 36 பேர் உயிரிழப்பு.

* துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி: முன்னனி வீரர் ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேற்றம்.

* சர்வதேச போட்டியில் 500 விக்கெட் - ஜடேஜா புதிய சாதனை.

Today's Headlines

* Chief Minister M.K.Stalin has announced that increased relief of Rs.112 will be given to farmers affected by unseasonal heavy rains in Tamil Nadu.

 * Court ordered to disconnect electric connection of 118 brick kilns on  elephant route in coimbatore 

* The appointment of the Chief Election Commissioner requires a nomination committee that includes the Leader of the Opposition: Supreme Court.

 * Delhi-Jaipur Electrified Expressway: First in India

* A terrible accident in Greece - 36 people died when trains collided head-on.

* Dubai Tennis Championships: Top seed Djokovic advances to quarter-finals

* 500 wickets in international matches - Jadeja made a new record.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Wednesday, March 1, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.03.2023

    திருக்குறள் :


பால்: அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்:  ஒழுக்கம் உடைமை

குறள் :137

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.

பொருள்:
ஒழுக்கத்தினால் எவரும் உயர்வை அடைவர்; ஒழுக்கம் இல்லாதவர் வேண்டாத பழியை அடைவர்.

பழமொழி :

Aspiring people are inspiring people.

ஆர்வம் உடையோரே ஆர்வத்தைத் தூண்ட முடியும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. மழை காலத்திற்கு என்று உணவை சேமிக்கும் எறும்பை போல மாணவ பருவத்திலேயே சேமிக்க பழகுவேன். 

2. கனி தரும் மரங்கள் போல மற்றவர்க்கு எப்போதும் பயன் தர முயற்சிப்பேன்.

பொன்மொழி :

உலகில் உள்ள எல்லா இதயங்களும் நல்ல இதயங்களே.. ஆனால் சந்தர்ப்பம் சூழ்நிலைகள் அதை மாற்றியமைக்கின்றன.

பொது அறிவு :

1. கல்பாக்கம் அணு உலையின் பெயர் என்ன?

 பூர்ணிமா

 2.வெள்ளைப் பூண்டில் உள்ள அமிலம் எது? 

 பாலிக்

English words & meanings :

commendation - formal or official praise. noun. The girl who rescued the sinking students received commendation. புகழ்ச்சி, மெச்சுதல். பெயர்ச் சொல் 

ஆரோக்ய வாழ்வு :

பிற்பகல் தூக்கம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை ஒழுங்குபடுத்துகிறது. அதேவேளையில் பிற்பகல் தூக்கம் 2 மணி நேரத்துக்குள் இருக்க வேண்டும். அதனை தாண்டி செல்லக்கூடாது. தூக்கம் மட்டுமின்றி, சரியான வாழ்க்கை முறையும் ஆரோக்கியமான உணவும் மூளையின் சிறந்த செயல்பாட்டுக்கு மிகவும் முக்கியம் ஆகும். அதற்கு நீங்கள் சில உணவுப் பொருட்களை தினமும் சாப்பாட்டில் செய்துக் கொள்வது அவசியமாகும்.

  மார்ச் 02



சரோஜினி நாயுடு அவர்களின் நினைவு நாள் 




சரோஜினி நாயுடு அல்லது சரோஜினி சட்டோபத்யாயா (பிப்ரவரி 13,1879ஹைதராபாத் - மார்ச் 2,1949லக்னோ) அவர் இந்தியாவின் நைட்டிங்கேல் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ஒரு பிரபலமான சிறுமுது அறிஞர், கவிஞர், எழுத்தாளர் ,சுதந்திரப் போராளி மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது பெண் தலைவரும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுனரும் ஆவார்.அவரது பிறந்த நாள் இந்தியாவில் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.

1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15 ஆம் நாள் இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு அவர் யுனைட்டட் ப்ரொவின்சஸ் (தற்போது உத்தரப்பிரதேசம் என்று அழைக்கப்படுகிறது) ன் ஆளுநராக பதவியேற்றார். இதன் வழியாக இந்தியாவின் முதல் பெண் ஆளுநரானார். மார்ச் 2, 1949 அன்று மாரடைப்பால் அவர் மரணமடைந்தார்.

நீதிக்கதை

ராஜகுருவின் நட்பு

விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் அரண்மனையில் தாத்தாச்சாரியார் என்பவர் ராஜகுருவாக இருந்தார். தெனாலி கிராமத்துக்கு அருகில் உள்ள மங்களகிரி என்னும் ஊருக்கு ராஜகுரு தாத்தாச்சாரியார் வந்திருந்தார். 

இதையறிந்த தெனாலிராமன் ராஜகுருவை சந்தித்தான். தன்னுடைய விகடத் திறமையாலும் பேச்சாற்றலாலும் ராஜகுருவின் சிஷ்யன் ஆனார். ராஜகுருவின் நட்பு கிடைத்த பின் தன் குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதாகவும் அதனால் மன்னர் கிருஷ்ணதேவராயரிடம் சிபாரிசு செய்து அரண்மனையில் வேலை கிடைக்க ஏற்பாடு செய்யுமாறும் வேண்டிக் கொண்டார். 

அவன் வேண்டுகொண்டபடியே ராஜகுருவும் அரண்மனையில் வேலைக்கு சேர்த்து விடுவதாக வாக்களித்தார். பிறகு ராஜகுருவிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை. அதனால் விஜயநகரம் சென்று ராஜகுருவை நேரில் பார்த்து அரண்மனையில் சேர்ந்து விட வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டார். 

அதன் பிறகு தெனாலி பல நாட்கள் நடந்து விஜய நகரம் வந்து சேர்ந்தார். தெனாலிராமன் ராஜகுருவை அவரது இல்லத்தில் சந்தித்தார். தெனாலிராமனைப் பார்த்ததும் ராஜகுரு அதிர்ச்சி அடைந்தார். யாரப்பா நீ? உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். 

ராஜகுருவே நான்தான் தெனாலிராமன். தாங்கள் மங்களகிரிக்கு வந்த போது நண்பர்கள் ஆனோம். தாங்கள் அரசவையில் என்னைச் சேர்த்து விடுவதாகச் சொன்னீர்கள். பல மாதங்களாக தங்களிடமிருந்து எந்த பதிலும் வராததால் தான், நான் நேரில் வந்துள்ளேன். தயவு செய்து என்னை பற்றி மன்னரிடம் எடுத்துச் சொல்லி அரசவையில் சேர்த்து விடுங்கள் என்று வேண்டினான். 

உன்னை யாரென்றே எனக்குத் தெரியாதப்பா... மரியாதையாக வெளியே போ, இல்லையேல் அவமானப்படுவாய் என்று விரட்டினார். வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட தெனாலிராமன் பழிக்குப்பழி வாங்கத் துடித்தார். இதற்காக காளிதேவியைத் துதித்தார். 

நீதி :
நாம் யாரையும் எதற்காகவும் நம்பக் கூடாது.

இன்றைய செய்திகள்

02.03.2023

* சென்னை எல்ஐசி கட்டிட பகுதியில் வருகிறது அடுக்குமாடி கட்டிடங்கள்: சிஎம்டிஏ புதிய திட்டம்.

* ஆசிரியர்களின் நலன் காக்க ரூ.225 கோடியில் புதிய திட்டங்கள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.

* பிப்ரவரியில் இந்தியாவின் மின் நுகர்வு 9% அதிகரிப்பு - 11.78 ஆயிரம் கோடி மின்சார யூனிட் பயன்பாடு.

* எல்லையோர கிராமங்களின் வளர்ச்சியை கண்காணிக்க மத்திய அமைச்சர்களுக்கு உத்தரவு.

* கரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்திலிருந்துதான் பரவியது என்று அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ தெரிவித்துள்ளது.

* ஈரானின் அணுசக்தி தளத்தில் 83.7% யுரேனியம் செறிவூட்டப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.

* ஐசிசி டெஸ்ட் தரவரிசை : இந்திய வீரர் அஸ்வின் முதல் இடத்திற்கு முன்னேற்றம்.

* பெண்களுக்கான உலகக் கோப்பை ஸ்னூக்கர் போட்டி - இந்திய அணி தங்கம் வென்றது.

* 'பிபா'வின் சிறந்த வீராங்கனை விருதை பெற்றார் அலெக்சியா புடெல்லாஸ்.

Today's Headlines

* Apartment buildings coming up in Chennai LIC building area: CMDA new project.

 * New schemes worth Rs 225 crore to protect teacher' welfare: CM Stalin's announcement

 * India's electricity consumption up 9% in February - 11.78 thousand crore electricity units were used.

 * Union Ministers directed to monitor development of border villages.

 * According to the FBI, the United States intelligence agency, the Corona virus was spread from a Chinese laboratory.

 * Iran's nuclear power plant has 83.7% enriched uranium, according to a United Nations Monitoring committee.

* ICC Test Rankings: Indian batsman Ashwin moves up to No.1

 * Women's World Cup Snooker Tournament -  India team bags the gold.

 * Alexia Butellas won the FIFA Player of the Year Award.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்