Sunday, December 18, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.12.2022

திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 

இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: விருந்தோம்பல்

குறள் : 90

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.

பொருள்:
அனிச்சம் எனப்படும் பூ, முகர்ந்தவுடன் வாடி விடக் கூடியது. அதுபோல் சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடிவிடுவர்.

பழமொழி :

Strength grows stronger by being tied.
ஒரு சேரக் கட்டினால் ஒன்பது யானை பலம். 

இரண்டொழுக்க பண்புகள் :

1."யாருக்கும் தீங்கு செய்யாது, எல்லோரின் நலன் குறித்தும் சிந்தித்தலே உண்மையான மனித தன்மையின் வெளிப்பாடு.

 2. நான் எப்போதும் ஒரு நல்ல மனிதனாக இருக்க முயல்வேன் "

பொன்மொழி :

பிரச்சினைகள் இல்லாவிட்டால், நம்மில் பெரும்பாலானோர் வேலையற்றவர்களாக இருப்போம். --ஜிக் ஜிக்லர்

பொது அறிவு :

1. மிகவும் கனமான மூளை உள்ள விலங்கு எது ? 

 திமிங்கலம்

 2. பாலில் காணப்படும் சர்க்கரையின் பெயர் என்ன ? 

 லாக்டோஸ்.

English words & meanings :

 eye - sight organ. noun. கண். பெயர்ச் சொல். I - first person. pronoun. நான். பிரதி பெயர்

ஆரோக்ய வாழ்வு :

இனிப்புச் சுவை அதிகம் கொண்ட கொய்யா பழத்தில் இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஏ, ஆக்சிஜனேற்றங்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன. அதேபோல கொய்யாவின் இலைகளிலும் அதிகப்படியான வைட்டமின் சி மற்றும் ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் அதிகமாக இருக்கின்றன. இவை கொலஸ்ட்ராலைக் குறைப்பது முதல் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருப்பது வரை ஏராளமான பயன்களை கொண்டது.

NMMS Q

கொடுக்கப்பட்ட நான்கு வார்த்தைகளில் பொருத்தமற்றதாக அமையும் வார்த்தை:

 a) கன்னியாகுமரி b) கோயம்புத்தூர் c) திருநெல்வேலி d) தூத்துக்குடி.

 விடை : கோயம்புத்தூர் 

 விளக்கம்: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களிலும் கடல் உள்ளது. கோயம்புத்தூரில் கடல் இல்லை. எனவே இது பொருத்தமற்றதாக அமையும்.

நீதிக்கதை

அம்மா சொல் கேள்!

ஒரு நாள் பொழுது விடிந்ததும், ஒருவன் தனது ஆடுகளை செழிப்பான ஒரு புல்வெளியில் மேய்த்துகொண்டிருந்தான். ஆடுகளை மேய்த்தவன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கண் மூடி, புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்தான். 

புல்வெளியைச் சுற்றி வேலி போடப்பட்டிருந்தது. வேலியோரம் ஓர் ஆட்டுக்குட்டி மேய்ந்து கொண்டிருந்ததை பார்த்த ஒரு ஓநாய் ஆட்டுக்குட்டியைத் தின்னும் ஆசையில் பார்த்தது. 

வேலிக்குள் முகத்தை நுழைத்துக்கொண்டு, ஓநாய் எதையோ பார்ப்பது போல பாசாங்கு செய்தது. அதைப் பார்த்த ஒர் ஆட்டுக்குட்டி, உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டது. 

ஓநாய் நண்பா!, இங்கே இளசாண புல் கிடைக்குமா என்று பார்க்கிறேன்! இளம்புல் என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சாப்பிட தோன்றுகிறது என்று வருத்தத்துடன் கூறியது. அப்படியா! நீ மாமிசத்தைத்தான் சாப்பிடுவாய் என்று என் அம்மாவும் அப்பாவும் சொன்னார்களே? என்று ஆச்சரியத்துடன் கேட்டது ஆட்டுக்குட்டி. 

சேச்சே... அதெலாம் சுத்தப் பொய்! என்றது ஓநாய். அப்படியென்றால் இரு. நான் வெளியே வருகிறேன். நாம் இரண்டு பேரும் சேர்ந்து மலையின் அந்தப் பக்கம் இருக்கும் இளம்புலை சாப்பிடலாம் என்று சொல்லிக்கொண்டு வெளியே வந்தது. 

உடனே ஓநாய் அதன்மீது பாய்ந்து அதைக்கொன்று தின்றது. அந்த ஆட்டுக்குட்டி ஓநாய்க்கு உதவி செய்ய போய் தனது உயிரை இழந்துவிட்டது. 

நீதி :
அனுபவம் நிறைந்தவரின் ஆலோசனை மிகவும் முக்கியம்.

இன்றைய செய்திகள்

19.12.22

பள்ளி மாணவர்களுக்காக 'நம்ம ஸ்கூல்'.. முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

* கோவையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் டிசம்பர் 
17 ல் கலைத் திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தொண்டாமுத்தூர் வட்டாரம் புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் மாற்று திறனாளி மாணவன் நடனம் அனைவரின் பாராட்டும் பெற்றது.

* மெட்ரோ ரயில்களில் பயணிக்க, வீட்டில் இருந்தபடியே வாட்ஸ் அப் மூலமாக டிக்கெட் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது.

* மும்பை: ஐஎன்எஸ் மர்மகோவா போர்க்கப்பல்,இந்திய
கடற்படையில் இணைக்கப்பட்டது. இந்த கப்பலை,பாதுகாப்பு அமைச்சர் நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார்!.. இந்த கப்பலில் பயன்படுத்தப்பட்டு உள்ள 75 சதவீத உபகரணங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை

* சட்டோகிராமில் நடைபெற்ற போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிாிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடாில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
   
  *புரோ கபடி 9வது லீக் இறுதிப்போட்டியில் ஜெய்ப்பூர்- அணி வெற்றி பெற்றது.

*   உலக கோப்பை கால்பந்து இறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணி அபார வெற்றி பெற்றது. இது இவர்கள் பெறும் 3- வது உலகக்கோப்பை ஆகும். அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி சாம்பியன் பட்டம் பெற்றார். 

Today's Headlines

* Chief Minister M. K. Stalin will inaugurate 'Namma School' for school students today.

*  December on behalf of School Education Department in Coimbatore
 An art festival was held on 17  In this event, the dance of a differently-abled student studying in class 7 in Pudur Panchayat Union Middle School of Thondamuthur district won the appreciation of all.

* The facility of booking tickets through WhatsApp from home to travel in metro trains will soon be introduced.

 * Mumbai: Warship INS Marmagova, India
 Joined the Navy.  The Defense Minister dedicated this ship to the country!.. 75 percent of the equipment used in this ship is locally manufactured.

* India won the first Test cricket match against Bangladesh in Chattogram.  India have taken a 1-0 lead in the 2-match Test series.
   
 * Jaipur- team won the Pro Kabaddi 9th League final.

* Argentina won the FIFA World Cup in penalty shots.It was their 3rd FIFA title. Messi became the world Champion. 
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Thursday, December 15, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.12.2022

  திருக்குறள் :

"பால் :அறத்துப்பால். 

இயல் : இல்லறவியல். 

அதிகாரம் : விருந்தோம்பல்.

 உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.

 விளக்கம்:
செல்வநிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்: அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும்."

பழமொழி :

"The resolved mind has no cares. 

 துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் மட்டுமே."

இரண்டொழுக்க பண்புகள் :

1. "எனக்குத் தான் எல்லாம் தெரியும் என்பவன், முழு முட்டாள். எனவே முட்டாள் ஆக இருக்க மாட்டேன்.


 2. எனக்கு ஒன்றும் தெரியாது என்பவன்,கற்றுக் கொண்டே இருப்பான். எனவே அமைதியாக இருந்து என் வாழ்வு மேம்பட இன்னும் கற்றுக் கொள்வேன்"

பொன்மொழி :

"தீர்வில் கவனம் செலுத்துங்கள், பிரச்சினையில் அல்ல. 

--ஜிம் ரோன்"

பொது அறிவு :

1.நமது உடலில் மிகப்பெரிய உள்உறுப்பு எது? 

 கணையம்

 2. செரித்தல் திரவத்தில் உள்ள அமிலத்தால் வரும் நோய் எது? 

 பெப்டிக் அல்சர்.

English words & meanings :

discrete - individually seperate. adjective. வெவ்வேறான. பெயரடை. Discreet-careful and prudent. adjective. புத்தி கூர்மை உள்ள. பெயரடை

ஆரோக்ய வாழ்வு :

வேர்க்கடலையில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை அதிக அளவில் இருப்பதால் இது சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுவதோடு வயதான தோற்றம் ஏற்படுத்துவதை தடுக்கிறது. சரும சுருக்கங்களை நீக்கும்.


பொதுவாக குளிர்காலத்தில் முடி உதிர்தல் அதிகமாக இருக்கும். இந்த சமயத்தில் வேர்க்கடலையை உணவில் சேர்த்துக் கொள்ளும்போது அதன்மூலம் பயோடின் உற்பத்தி அதிகரிக்கும். பயோடின் நம்முடைய தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டும்.

NMMS Q 

1) 1, 4, 27, 16, 125, ____     

 ans 343                                        

2) 0.5, 0.55, 0.65, 0.8,  ___      

 ans 1


டிசம்பர் 16


வெற்றி நாள்




வெற்றி நாள் (இந்தி: विजय दिवस Eng- Victory Day) 1971ல் இந்தியா வங்கதேச முக்திவாகினியுடன் இணைந்து இந்திய-பாகிஸ்தான் போர், 1971 இல் பெற்ற வெற்றியின் நினைவாக ஒவ்வோர் ஆண்டும் திசம்பர் 16 அன்று கொண்டாடப்படுகிறது.

1971 இல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போரின் விளைவாக பாகிஸ்தான் இராணுவம் தானாக முன்வந்து நிபந்தனையற்ற சரணாகதி அடைந்தது. கிழக்குப் பாகிஸ்தான் வங்காளதேசம் என்ற தனி நாடாக உருவானது. தங்களின் தோல்விக்குப் பின்னர் டாக்காவில் ரமணா குதிரைப் பந்தைய மைதானத்தில் 93,000 பாகிஸ்தான் வீரர்கள் ஜெனரல் அமீர் அப்துல்லாகான் நியாஸி தலைமையில் இந்தியாவின் லெப்டினெண்ட் ஜெனரல் ஜெகத்சிங் சிங் அரோரா, தலைமையிலான கூட்டணிப் படைகளிடம் சரணடைந்தனர். இப்போரில் உயிர் நீத்த தங்கள் நாட்டு வீரர்களின் தியாகத்திற்கு அஞ்சலி செலுத்தும்விதமாக ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் வெற்றி நாள் அனுசரிக்கப்படுகிறது.

நீதிக்கதை

பத்தாவது பாஸ்

ரகு என்பவன் மதுரையில் பத்தாவது படித்து வந்தான். அவன் பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்தான். அதை அவன் பெற்றோரிடம் மறைத்து விட்டான். 

ஒரு நாள் ரகு தனது கிராமத்திற்கு வந்தான். பஸ்ஸிலிருந்து இறங்கியதும் நாதஸ்வரமும் மேளதாளமும் முழங்கியது. ரகுவின் தந்தை பாண்டித் தேவர் தன் கையில் இருந்த மாலையை அவன் கழுத்தில் போட்டார். 

அந்த கிராமத்தில் ரகு ஒருவன் தான் பள்ளிக்கூடத்தில் படிக்கிறான். அவன் படித்து அந்த கிராமத்தை முன்னுக்குக் கொண்டு வருவான் என்று எல்லோருமே நம்பினர். ரகுவை எல்லோரும் தெருக்களில் ஊர்வலமாக அழைத்து வந்தனர். 

ரகுவின் அம்மா பேச்சியம்மா ரகுவிற்கு ஆரத்தி எடுத்தாள். பாஸ் பண்ணிட்டியாப்பா என்றாள் அம்மா. ஆமாம்மா பாஸாயிட்டேன். ஒரே ஒரு பொய்தானே என்று சமாதானப்படுத்திக் கொண்டான். ஆனால் அடுத்தடுத்து ஊரில் கேட்கும் எல்லோருக்கும் அதே பொய்யைத் திருப்பித் திருப்பிச் சொல்ல வேண்டியிருந்தது. 

என்னா தம்பி மேல படிக்கப் போறீயா? நீ டாக்டருக்குப் படிக்கப் போறியாமே, இனி மதுரையிலேயே படிக்கலாமா. இல்லை மெட்ராசுக்குப் போவணுமா? என்று ஆளுக்கு ஒரு கேள்வியாகக் கேட்டனர். இவனும் ஓயாமல் பொய் சொன்னான். 

ஒரு பொய்யை மறைக்க ஓராயிரம் பொய் சொல்ல வேண்டி வரும் என்று தன் ஆசிரியர் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. அடுத்த நாள் ரகுவின் அப்பாவும் அம்மாவும் தனது மகன் பாஸ் ஆனால், இவனை பக்கத்து ஊர் கோவிலுக்குக் கூட்டிச் சென்று மொட்டை அடிப்பதாக பிராத்தனை செய்ததை நிறைவேற்றினர். 

ரகு உண்மையைச் சொல்ல முடியாமல் திண்டாடினான். அடுத்த நாள் ரகுவை காலேஜில் சேர்ப்பதற்கு பாண்டித் தேவர் கறவை மாட்டை கன்றுடன் சந்தையில் விற்றுவிட்டு வந்தார். ரகுவின் அம்மா ஒரு பக்கம் தன் மகன் காலேஜில் படிக்கப் போவது பற்றி ஊர்ப் பெண்களிடம் எல்லாம் முறை வைத்துப் பேசினாள். 

இனிமேலும் தான் உண்மையை மூடி மறைப்பது சரியல்ல என்று நினைத்த ரகு, அன்று இரவு தன் அப்பா அம்மா இருவரையும் அழைத்து இருவரின் கால்களிலும் விழுந்தான். பெற்றோர்கள் பதட்டம் அடைந்தனர். 

நான் உங்களிடம் பொய் சொல்லி விட்டேன். நான் தேர்வில் தோல்வியான உண்மையை மறைத்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள் என்று சொல்லி குலுங்கி அழுதான். 

ரகுவின் அப்பாவும் அம்மாவும் மலைத்து நின்றனர். பின்னர் பாண்டித்தேவர் அவனை தூக்கி மார்புடன் தழுவிக் கொண்டு என் மகன் காலேஜில் படிக்கிறான் என்று செல்வதை விட அவன் பொய் செல்ல மாட்டான் என்று சொல்வதையே நான் பெருமையாகக் நினைக்கிறேன் என்றார் பாண்டித்தேவர். 

இனி எந்தக் காரணத்தை முன்னிட்டும் பொய் சொல்ல மாட்டேன் என்று தந்தையின் கையில் அடித்து ஊறுதி சொன்னான் ரகு. பாண்டித்தேவர் பெருமைப்பட்டு ஆனந்தக்கண்ணீர் வடித்தார். 

நீதி :
பொய் சொல்லி பெற்றோர்களை காயப்படுத்துவதை விட உண்மையை மட்டும் பேசி பெருமையடையச் செய்யலாம்.

இன்றைய செய்திகள்

16.12.22

* தமிழகத்தில் கிராம, வட்டார, மாவட்ட ஊராட்சிகளுக்கு முறையே ரூ.5 லட்சம், ரூ.25 லட்சம், ரூ.50 லட்சம் ஆக நிதி அதிகாரம் உயர்வு.

* அரசுக் கல்லூரி பேராசிரியர்கள் 192 பேருக்கு விருப்பப்படி பணியிட மாறுதல்: உயர் கல்வித்துறை தகவல்.

* தமிழகத்தில் இவ்வாண்டு 58 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை: உணவுத்துறை அமைச்சர் தகவல்.

* பவானிசாகரில் இருந்து 6,500 கனஅடி நீர் திறப்பு: கரையோர பகுதிகளில் கண்காணிப்பு தீவிரம்.

* இந்திய பெருங்கடல் பகுதியில் இருந்து சீன உளவு கப்பல் திரும்பி சென்றது - இந்திய கப்பற்படை தீவிர கண்காணிப்பு.

* நாட்டில் 20 புதிய அணுமின் நிலையங்களை 2031-ம் ஆண்டுக்குள் தொடங்க மத்திய அரசு திட்டம்.

* அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஐ.நா-வின் பெண்கள் அமைப்பிலிருந்து ஈரான் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

* பெண்கள் நேசன்ஸ் ஹாக்கி: தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா.

* உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி : அர்ஜென்டினாவுக்கு எதிராக களமிறங்கும் பிரான்ஸ்.


Today's Headlines


In Tamil Nadu, the financial authority has been increased to Rs.5 lakh, Rs.25 lakh and Rs.50 lakh for village, district and district panchayats respectively.

*  192 government college professors got voluntary transfer- information by Higher Education Department..

* Action to purchase 58 lakh metric tons of paddy in Tamil Nadu this year: Food Minister informed.

 * 6,500 cubic feet water release from Bhavanisagar: Vigilance intensified in coastal areas.

* Chinese spy ship returns from Indian Ocean - Indian Navy Keeps watching vigilantly. 

 * Central government plans to start 20 new nuclear power plants in the country by 2031.

 * Following the success of the resolution brought by the United States, it has been announced that Iran will be removed from the UN Women's Organization.

* Women's Nations Hockey: India beats South Africa

 * World Cup Football Final: France vs Argentina
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Wednesday, December 14, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.12.2022

 திருக்குறள் :

"பால் :அறத்துப்பால்

 இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: விருந்தோம்பல்

குறள் : 88
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்

பொருள்:
செல்வத்தைச் சேர்த்துவைத்து அதனை இழக்கும்போது, விருந்தோம்பல் எனும் நற்செயலுக்கு அதனை பயன்படுத்தப்படாமல் போய் விட்டோமே என வருந்துவார்கள்."

பழமொழி :

"What the heart thicketh, the tongue speaketh.

பானையில் சோறு இருந்தா தானே அகப்பையில் வரும். "

இரண்டொழுக்க பண்புகள் :

1. "எனக்குத் தான் எல்லாம் தெரியும் என்பவன், முழு முட்டாள். எனவே முட்டாள் ஆக இருக்க மாட்டேன். 

2. எனக்கு ஒன்றும் தெரியாது என்பவன்,கற்றுக் கொண்டே இருப்பான். எனவே அமைதியாக இருந்து என் வாழ்வு மேம்பட இன்னும் கற்றுக் கொள்வேன்"

பொன்மொழி :

ஒவ்வொரு பிரச்சனைக்குள்ளும் அதைத் தீர்ப்பதற்கான விதைகள் உள்ளன. உங்களுக்கு எந்த பிரச்சனைகளும் இல்லை என்றால், உங்களுக்கு எந்த விதைகளும் கிடைக்காது. --நார்மன் வின்சென்ட் பீலே

பொது அறிவு :

1. ஜெனிடிக்ஸ்-ன் தந்தை என அழைக்கப்படுபவர் யார் ? 

 கிரிகோர்  ஜோஹர் மெண்டல். 

 2. இதயத்தை கவர்ந்துள்ள சவ்வில் காணப்படும் திரவத்தின் பெயர் என்ன?

 பெரிகாட்டியல் பாய்மம்.

English words & meanings :

die - not living. verb. இறந்து போதல். வினைச் சொல். dye - color. noun. சாய வண்ணம். பெயர்ச் சொல் 

ஆரோக்ய வாழ்வு :

நீரிழிவு நோயாளிகள் தங்களுடைய டயட்டில் மக்னீசியம் நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிக்காமல் கட்டுக்குள் வைத்திருக்க உதவி செய்யும்.

மக்னீசியம் வேர்க்கடலையில் அதிகமாக இருக்கிறது. நம்முடைய உணவில் உள்ள மற்ற கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகளை வேகமாக ஜீரணிக்கச் செய்து, மெட்டபாலிசத்தை அதிகரித்து ரத்தத்தின் சர்க்கரை அளவை குறைக்க வேர்க்கடலை உதவி செய்யும்.

NMMS Q

கண், மூக்கு, தோல் ஆகியவற்றுடன் தொடர்புடையது. 


அ) இதயம் ஆ) காது இ) நுரையீரல் ஈ) கல்லீரல்


 விடை: காது


டிசம்பர் 15


வால்ட் டிஸ்னி அவர்களின் நினைவுநாள்




வால்ட் டிஸ்னி (/ˈdɪzni/;[3] டிசம்பர் 5 , 1901 - டிசம்பர் 151966) உலகப் புகழ் பெற்ற ஓவியர். மிக முக்கியமான கார்ட்டூன் ஓவியர். மிக்கி மவுஸ், டொனால்ட் டக் , ஸில்லி சிம்பொனிஸ் போன்றவற்றை உருவாக்கியவர். திரைப்பட இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பணிபுரிந்தவர். வால்ட் டிஸ்னி தயாரிப்பு நிறுவத்தின் இணை-நிறுவனரான டிஸ்னி(தன் அண்ணன் ராய்.ஒ.டிஸ்னியுடன் உலகின் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் ஆவார்.

நீதிக்கதை

தங்கத்தூண்டில்

ஒரு ஊருல ரமேஷ், சுரேஷ் அண்ணன், தம்பிகள் இருந்தாங்க. அவங்க ரெண்டு பேரும் மீன் பிடிச்சு வாழ்க்கை நடத்துனாங்க. ஒரு நாள் மதியம் அவங்க சாப்பிட்டுக்கிட்டு இருக்கும்போது பிச்சைக்காரன் ஒருத்தன் அங்கே வந்தான். எலும்பும் தோலுமாக இருந்த அவனைப் பார்க்கவே பரிதாபமாக இருந்துச்சாம். 

அந்த பிச்சைக்காரன் அவங்ககிட்ட சாப்பிட்டு நாலு நாளாச்சு. பசிக்குது... எதாவது தாங்கன்னு கேட்டான். ரமேஷ் அவனுக்கு கொஞ்சம் சாப்பாட்டை எடுத்து தந்தான். , இதை பார்த்த சுரேஷ். , அண்ணா! இதுப்போல சோம்பேறிங்ககிட்ட இரக்கம் காடாதனு, தடுத்தான். 

அதை கேக்காம ரமேஷ் சாப்பாட்டை குடுத்தான். அடுத்த நாளும் அதே போல சாப்பிடுற நேரத்துல பிச்சைக்காரன் வந்தான். திரும்பவும் வந்ததுனால சுரேஷ்க்கு கோவம் வந்து டேய்! சோம்பேறி பையா! அடுத்த முறை உன்னை இங்க பார்த்தா தொலைச்சுடுவேன்னு கத்தினான். மூணாவது நாளும் பிச்சை கேட்டு அங்க வந்தான். அவனப்பாத்த கோபத்துல சுரேஷ் அங்கிருந்த தூண்டில் ஒன்றை எடுத்துக்கிட்டு அவனைத் ஏரிக்கரைக்கு கூட்டி வந்தான். 

இப்படி பிச்சை எடுக்குறியே! இதெல்லாம் ஒரு பிழைப்பா? உனக்கு மீன் பிடிக்க கத்துத்தரேன். இந்த தூண்டிலை வச்சு பொழைச்சுக்கோனு சொல்லி மீன் பிடிக்குறது எப்படின்னு கத்துக்கொடுத்ட்டு போய்ட்டான். 

பல நாளாக அந்த பிச்சைக்காரன் வரவே இல்ல. அவனை மறந்து போய்ட்டாங்க. ஒரு நாள் ரமேசும், சுரேசும் டிவி பார்த்துக்கிட்டு இருந்தப்போ, ஒரு அழகான குதிரை வண்டில ஒருத்தர் வந்தார். அவர் கையில தங்கத்தால் செஞ்ச தூண்டில் ஒண்ணு இருந்துச்சு. ரமேசும், சுரேசும் அவரைப் பார்த்தாங்க. தங்கத் தூண்டிலை எனது பரிசாக வச்சுக்கோனு சுரேஷிடம் குடுத்தாரு. 

தன் வீட்டுக்கு வந்த பிச்சைக்காரன்தான் இவன் என்று ரமேஷ்க்கு தெரிஞ்சுது. அவனுக்கு சரியான கோவம். நீ சாகப் பிழைக்க இருந்தப்போ உனக்கு சாப்பாடு குடுத்து காப்பாத்தியது நான். எனக்குத்தான் இந்தத் தங்கத் தூண்டிலை தரனும். எனக்குத் தா என்று கத்தினான். ஆனால், அவரோ, இது உங்க தம்பிக்குத்தான் சேரனும்ன்னு சொன்னார். இதை ரமேஷ் கேட்காம வழக்கை கோர்டுக்கு கொண்டு போனான். நடந்ததை எல்லாம் விசாரிச்சார் ஜட்ஜ். 

ரமேஷ்யை பார்த்து, நீ இவருக்கு சாப்பாடு குடுத்து உயிரை காப்பாத்தியது உண்மைதான். ஆனா, உன் தம்பியோ இவர் வாழ்வதற்கு வழி காட்டினார். அதைப் பயன்படுத்தி இவர் பெரிய பணக்காரராயிட்டார். நிலையான உதவி செய்த சுரேஷ்க்கு இவர் தூண்டிலை பரிசா குடுத்தது சரிதான். இந்தத் தங்கத் தூண்டில் சுரேஷ்க்குத்தான்னு தீர்ப்பு! வழங்கப்பட்டது. 

நீதி :
நாம் செய்யும் உதவி அப்போதைக்கு கஷ்டம் தீர்ந்தால் மட்டும் போதாது, எப்போதும் கஷ்டம் வராதபடி உதவி செய்தல் வேண்டும்.

இன்றைய செய்திகள்

15.12.22

* விதிமீறல் கட்டடங்கள்: ஈஷா அறக்கட்டளைக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்தது ஐகோர்ட்.

* தூய்மைப் பணியாளருக்கு ஓய்வூதியப் பலன்களை வழங்காமல் வழக்குகள் மூலம் இழுத்தடிக்க முயற்சி செய்வதாகக் கூறி தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறைக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 * இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட முதல் நாளில் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்குதல், முதல்வர் கோப்பை கபடி போட்டிக்கு ரூ.47 கோடி ஒதுக்கீடு செய்தல் உள்ளிட்ட கோப்புகளில் கையெழுத்திட்டார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள். 

* பொறியியல் கல்லூரிகளில் தமிழ் பாடங்களை பயிற்றுவிக்க யுஜிசியின் வழிமுறையின்படி முதுநிலை பட்டதாரிகள் பணிக்கு நியமிக்கப்படுவார்கள். அடுத்த ஆண்டு முதல் பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் தமிழ் பாடங்கள் கொண்டு வரப்பட உள்ளன என்று உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

* வங்கிக் கணக்கு விவரம் இல்லாத ரேஷன் கார்டுதாரர்கள் பட்டியல் வெளியீடு: வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு புதிதாக தொடங்கவும் ஏற்பாடு.

* அலோபதி மருத்துவர்கள் போல் சித்த மருத்துவர்களுக்கும் பதவி உயர்வு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

* 3 ஆண்டுகளில் 1,811 என்ஜிஓ-க்களின் வெளிநாட்டு நன்கொடை பெறும் உரிமம் ரத்து - மக்களவையில் மத்திய அரசு தகவல்.

* இளைஞர்களை புகைப்பிடிக்கும் பழக்கத்திலிருந்து விடுவிப்பதற்காக
ஜனவரி 1, 2009-க்கு பிறகு பிறந்தவர்களுக்கு புகைப்பிடிக்க வாழ்நாள் தடை: நியூசிலாந்து அதிரடி சட்டம்.


* செவ்வாய் கோளில் ஏற்பட்ட தூசிப் புயல் காற்றின் ஒலியை நாசா அனுப்பிய ரோவர் விண்கலம் பதிவுச் செய்துள்ளது. இது நாசா விஞ்ஞானிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

* புரோ கபடி லீக்கில் முதல் முறையாக அரையிறுதிக்குள் நுழைந்தது தமிழ் தலைவாஸ்.

* உலகக் கோப்பை கால்பந்து: 6-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதித்த அர்ஜென்டினா.

* வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டி: முதல் நாளில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் சேர்ப்பு.

Today's Headlines

* Violating buildings: ICourt quashes pollution control board's notice to Isha Trust

 * The Supreme Court has imposed a fine of Rs 1 lakh on the school education department of the Tamil Nadu government for trying to drag out the pension benefits of the sanitation workers through lawsuits.

 *  Mr. Udayanidhi Stalin, who took over as the Minister of Youth Welfare and Sports Development, on the first day he signed the files including increasing the pension for the athletes and allocating Rs. 47 crores for the Chief Minister's Cup Kabaddi Tournament.

 * Post Graduates will be appointed as per UGC guidelines to teach Tamil subjects in Engineering Colleges. Higher Education Minister Ponmudi has said that Tamil subjects will be introduced in polytechnic colleges from next year as well.

* Publication of list of Ration card holders without bank account details: A fresh start arrangement for those without bank account details.

 * The High Court has ordered the promotion of Siddha doctors like allopathic doctors.

* Cancellation of licenses of 1,811 NGOs receiving foreign donations in 3 years - Central Government informs Lok Sabha.

* To free the youth from the habit of smoking, Lifetime smoking is being banned for people who were born after January 1, 2009: New Zealand  Gov implements Law.

* A NASA rover has recorded the sound of a dust storm on Mars. This has made NASA scientists happy.

 * Tamil Thalaivas entered the semifinals for the first time in the Pro Kabaddi League.

* World Cup Football: Argentina reach the finals for the 6th time.

 * Test match against Bangladesh: India scored 278 runs for the loss of 6 wickets on the first day.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்