Thursday, December 8, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.12.2022

 திருக்குறள் :

பால் :அறத்துப்பால். 

அதிகாரம் : விருந்தோம்பல். 

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.

விளக்கம்:
வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும்.

பழமொழி :

yourself first,others afterwards. 

தனக்கு மிஞ்சிதான் தானமும் தர்மமும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. உலகின் மிக சிறந்த வைரம் நல் எண்ணங்கள். 

2. வைரம் நமக்கு போதிப்பது உறுதியாக இருந்தால் மட்டுமே ஒளிர முடியும். எனவே எந்த சூழ்நிலையிலும் உறுதியாக இருப்பேன்

பொன்மொழி :

நீங்கள் அடிவாங்கத் தயாராக இல்லை என்றால் உங்களால் அழகான சிலையாக மாறவும் முடியாது.

பொது அறிவு :

1.இந்தியாவின் முதல் ஜனாதிபதி யார்?

 டாக்டர் ராஜேந்திர பிரசாத். 

2. இந்தியாவின் முதல் பிரதமர் யார்? 

பண்டித ஜவஹர்லால் நேரு.

English words & meanings :

chord - musical tone. noun. இசை தந்தி, இசை குறிப்பு. பெயர்ச் சொல். cord - rope. noun.கயிறு. பெயர்ச் சொல்

ஆரோக்ய வாழ்வு :

பூண்டில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள், விட்டமின் சி, பி 6 மற்றும் கனிமங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறையும்.

NMMS Q

0 கெல்வின் வெப்பநிலை என்பது __________ 

விடை: தனிச் சுழி

டிசம்பர் 09


ஐடா ஸோஃபியா ஸ்கட்டர் அவர்களின் பிறந்தநாள்




ஐடா ஸோஃபியா ஸ்கட்டர் (Ida Sophia Scudder, டிசம்பர் 9, 1870 – மே 23, 1960) என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண் மருத்தவராவார். இவர் வேலூரில் உள்ள கிருத்தவ மருத்துவக் கல்லூரியை நிறுவியதற்காக அறியப்படுகிறார்.


1914 இல் நெடு விடுப்பில் ஐடா அமெரிக்காவுக்குச் சென்றார். அதேநேரம் முதல் உலகப் போர் மூண்டது. 1915 இல் கடுமையான போர்ச் சூழலில் இந்தியா திரும்பிவந்தார், மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான பணியைத் விரைவுப்படுத்தினார் இதையணுத்து 1918 இல் பட்டைய மருத்துவப் படிப்புடன் பெண்களுக்கான மருத்துவப் பள்ளி நடத்துவதற்கான அனுமதியானது, சென்னை மாகாண மருத்துவத் துறை தலைவர் கர்னல் பிரைசனிடமிருந்து பெற்றார். 1918 ஆகத்து 12 இல் ஒன்றழய மறைப்பணி பள்ளியை சென்னை மாகாண கவர்னர் பென்ட்லண்ட் பிரபு தொடங்கி வைத்தார். 1948 இல் யூனியன் மருத்துவப் பள்ளி, கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போதுதான், பெண்களுடன் ஆண்களும் மருத்துவம் படிக்கத் தொடங்கினர்.

நீதிக்கதை

குரங்கு அறிஞர்

அறிஞர் ஒருவர் ஆராய்ச்சி நூல் ஒன்று எழுத நினைத்தார். அவர் அமைதியான இடத்திற்கு செல்லலாம் என்று அரக்கர்கள் இருக்கும் இடத்திற்கு, தெரியாமல் சென்றுவிட்டார். அறிஞரை பார்த்த ஒரு அரக்கன் யார் நீ? என்றான். 

நான் ஒரு அறிஞன். அமைதியான இடத்தைத் தேடி வந்தேன்! என்றார். இங்கு வந்ததற்கு தண்டனை கொடுப்பேன் என்று சொல்லி அவரை குரங்காக மாற்றிவிட்டான் அரக்கன். 

அவர் அழுதுகொண்டே, ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்குத் தாவிக் குரங்குகளைப் போல் பழங்களைத் தின்றார். பின்பு அவர் நகரத்திற்கு சென்றார். அங்கு பாக்தாத் பட்டணத்திற்குப் புறப்பட இருந்த ஒரு கப்பலில் அவர் ஏறினார். அதிலிருந்தவர்கள் சத்தம்க்கூட போட்டனர். குரங்கை வெளியே அனுப்புங்கள் என்று கத்தினர். 

கப்பலின் தலைவன் அதுவும் நம்முடன் வரட்டும். யாருக்கும் அது தொந்தரவு தராதவாறு நான் பார்த்துக் கொள்கிறேன்! என்றார். 

அந்தக் குரங்கு கப்பல் தலைவனுக்கு நன்றி உடையவனாய் இருந்தது. பாக்தாத்தில் அரசருக்கு ஆலோசனை கூறுபவர் இறந்துவிட்டதாகவும், இப்பதவியை விரும்புவோர் ஏதேனும் ஒரு செய்தியைத் மிகவும் நன்றாக தகுந்த முறையில் எழுதி அனுப்புபவர்க்கு ஆலோசகராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்னும் செய்தி அறிவிக்கப்பட்டது. 

அனைவரும் செய்தி எழுதினர், அந்தக் குரங்கு அறிஞரும் செய்தியை எழுதினார். எல்லாச் செய்திகளையும் அரசர் படித்தார். அந்தக் குரங்கின் செய்தி மிகவும் நன்றாக இருந்ததால், அந்தக் குரங்கை நேர்முகத் தேர்விற்காக அரசர் வரச் சொன்னார். அக்குரங்கு நல்ல கம்பீரமாக உடையணிந்து வந்தது. அரசவையில் அதனிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன. அது எல்லாக் கேள்விகளுக்கும் அறிவுப்பூர்வமான சரியான விடைகளைக் கூறியது. அரசருக்கு அதை மிகவும் பிடித்து விட்டது. ஆனால், மந்திரிகள் தடுத்தனர். 

ஆனால், அரசர் தீர்மானமாக குரங்கையே தலைமை ஆலோசகராக நியமித்தார். அவருடைய புதல்வி, இளவரசி இந்தக் குரங்கு உண்மையில் குரங்கு இல்லை. ஏதோ அரக்கர்களால் மாற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்தாள். அரக்கர்களின் மந்திர வித்தைகள் போன்றவற்றை அவள் படித்துள்ளாள். அந்த மந்திரத்தால் அறிஞரை பழைய நிலைக்கு மாற்றினாள். 

அவர் இளவரசிக்கு நன்றி கூறினார். பல ஆண்டுகள் அங்குத் தங்கி நன்றி விஸ்வாசத்தோடு அரசருக்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்கினார். 

நீதி :
அறிவுடையோர் எவ்வுருவில் இருந்தாலும் மதிக்கப்படுவர்.

இன்றைய செய்திகள்

09.12.22

* ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு.

* தென்னங்கன்றுகள், பயறு விதைகள் விநியோகம் தொடக்கம்; கரும்புக்கு ரூ.195 சிறப்பு ஊக்கத்தொகை: ஆணைகளை வழங்கினார் முதல்வர்  ஸ்டாலின்.

* வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மாண்டஸ் புயலின் நகரும் வேகம் மணிக்கு 6 கி.மீட்டர் என்பதில் இருந்து 11 கி.மீட்டராக அதிகரித்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* இந்தியாவில் முதல்முறையாக, 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் அவசர மருத்துவத்துக்கான முதுநிலை மருத்துவப் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

* விசாரணையை பார்க்கும் வகையில் மொபைல் செயலி 2.0 உச்ச நீதிமன்றத்தில் தொடக்கம்.

* அக்னிபாதை திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட கடற்படையினருக்கு ஐஎன்எஸ் சில்காவில் பயிற்சி .

* உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை 2022-ம் ஆண்டின் சிறந்த நபர் என டைம்ஸ் இதழ் கவுரவித்துள்ளது. அவருக்கு ‘உக்ரைனின் உத்வேகம்’ என்று புகழாரம் சூட்டியுள்ளது.

* 2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச போட்டிகளின் அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது.

* டிவிசன் ஹாக்கி லீக்: தமிழ்நாடு தபால் துறை அணி அரைஇறுதிக்கு தகுதி.

* உலகக்கோப்பை கால்பந்து போட்டியை உலகம் முழுவதும் 200 கோடி பேர் பார்த்துள்ளனர் - 'பிபா' தலைவர் தகவல்.


Today's Headlines

TET results are published on the website.

 Distribution of coconut saplings and lentil seeds started;  Special incentive of Rs 195 for sugarcane: Chief Minister Stalin issued orders.

 According to the Chennai Meteorological Department, the moving speed of Cyclone Mantus in the Bay of Bengal has increased from 6 kmph to 11 kmph.

 For the first time in India, a post-graduate course in emergency medicine has been started in 23 government medical colleges.

 Mobile App 2.0 Launched in Supreme Court to Watch Trials

 Mariners who were selected under Agnipath Program are undergoing training at INS in Silka

 Zelenskyy, the President of Ukraine, has been honored by Times Magazine as the Person of the Year 2022.  He has been hailed as 'the inspiration of Ukraine'.

 BCCI today released the schedule of international matches to be held in India from January to March 2023.

 Divisional Hockey League: Tamil Nadu Postal Department qualifies for the semi-finals.

 200 crore people watched World Cup soccer match worldwide - 'FIBA' president informs.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Wednesday, December 7, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.12.2022

 திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 

இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: அன்புடைமை

குறள் எண் : 80
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.

பொருள்:
அன்புநெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்; இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய வெறும் உடலேயாகும்.

பழமொழி :

Time stoops to no man's cure.

காலம் யார் கணிப்புக்கும் அடிபணியாது

இரண்டொழுக்க பண்புகள் :

1. உலகின் மிக சிறந்த வைரம் நல் எண்ணங்கள். 

2. வைரம் நமக்கு போதிப்பது உறுதியாக இருந்தால் மட்டுமே ஒளிர முடியும். எனவே எந்த சூழ்நிலையிலும் உறுதியாக இருப்பேன்

பொன்மொழி :

ஒரு கல்லில் விழும் ஒவ்வொரு அடியும் அந்தக் கல்லை எப்படி ஒரு அழகிய சிலையாக மாற்றுகிறதோ அதுபோல் தான் நம் ஒவ்வொரு பிரச்சனைகளும் நம்மை செதுக்குகின்றன 

பொது அறிவு :

1. ஒரு மின்னலின் சராசரி நீளம் தெரியுமா?

 6 கிலோமீட்டர் . 

2.கங்கையும் யமுனையும் கூடும் இடம் எது? 

அலகாபாத்.

English words & meanings :

chews - gnaws with teeth. verb. மெல்லுதல்.verb. வினைச் சொல். choose - to select. தேர்ந்தெடுத்தல்
noun.

ஆரோக்ய வாழ்வு :

ஒரு முட்டையில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் கோலின் நல்ல அளவு உள்ளது, இது உயிரணு சவ்வை உருவாக்குகிறது மற்றும் மூளையில் சமிக்ஞை மூலக்கூறை உருவாக்குவதில் பங்கு வகிக்கிறது. அதேபோல, முட்டையின் மஞ்சள் பகுதி லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் மூலம் செறிவூட்டப்படுகிறது. இது உங்கள் கண்ணைப் பாதுகாக்கிறது மற்றும் கண்புரை அபாயத்தையும் குறைக்கிறது. எனவே ஆரோக்கியமான மூளை மற்றும் கண்களைப் பெறுவதற்கு, வேகவைத்த முட்டைகளை சாப்பிடுங்கள்.

NMMS Q

மின் சுற்றில் செல்லும் மின்னோட்டத்தைக் கண்டறியப் பயன்படும் கருவி _________ 

விடை: அம்மீட்டர்

நீதிக்கதைa

இரண்டு தேவதைகள்!

நயாகரா நீர்வீழ்ச்சி தொடர்ந்து பாய்ந்து கொண்டிருந்தது. நீர்வீழ்ச்சியின் அழகை, இரண்டு தேவதைகள் ரசித்துக்கொண்டிருந்தனர். 

அப்போது, அனீலஸ் என்ற பறவை, அந்த நீர்வீழ்ச்சிக்கு வந்தது. தேவதைகள் இருவரும் அந்தப் பறவையைப் பார்த்து அனீலஸ் பறவை நீர்வீழ்ச்சியில் குளிக்க வந்துள்ளது, பன்னிரண்டு வருடத்திற்கு ஒருமுறை தான் நீராடும் என்று இரு தேவதைகள் பேசிக்கொண்டனர். 

அது நீராடுகிற காட்சியைப் பார்ப்பதற்கு யோகம் செய்தவர்களாக இருக்கிறோம், என்று பெருமைப்பட்டு கொண்டனர். 

அனீலஸ் பறவையோ, தன் அருகே இரண்டு தேவதைகள் இருப்பதைப் பார்த்து நீர்வீழ்ச்சியில் இன்பமாக குளித்தது. 

அந்த நேரத்தில், நீர்வீழ்ச்சியின் வேகம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. நீர் வேகமாகத்தை தாங்காமல் அனீலஸ் பறவை, தடுமாறியபடி நீரில் சிக்கிக்கொண்டது. அதைக் கண்ட தேவதைகள் இருவரும் பயந்தனர். 

அதில் ஒரு தேவதை, அனீலஸ் பறவை ஆபத்தில் சிக்கிவிட்டது. நான் சென்று உடனே காப்பாற்றுகிறேன்! என்றாள். உடனே மற்றொரு தேவதை, வேண்டாம். அனீலஸ்ஸை நானே சென்று காப்பாற்றுகிறேன். அந்த பாக்கியம் எனக்கே கிடைக்க வேண்டும் என்றாள். அதைக் கேட்ட மற்றொரு தேவதையோ, நானே அனீலஸ்ஸைக் காப்பாற்றப் போகிறேன். எக்காரணம் கொண்டும் உன்னை அனீலஸ்ஸைக் காப்பாற்றும்படி விட்டுக்கொடுக்க மாட்டேன்! என்று பிடிவாதமாகக் கூறியது. 

இப்படியே இரண்டு தேவதையும் வாக்குவாதம் செய்துகொண்டிருந்த நேரத்தில், கீச்... கீச்... என்ற கீச் குரல் கேட்டது. இரண்டு தேவதைகளும் திடுக்கிட்டு பார்த்தன. அவர்கள் பக்கத்தில் அனீலஸ் பறவை நின்று கொண்டிருந்தது. 

தேவதைகளே! உங்களுக்குள் சண்டை எதற்கு? நான் உயிர் பிழைத்து விட்டேன். நீங்கள் என்னைக் காப்பாற்றுவீர்கள் என்று நம்பிக் கொண்டிருந்தால், என் உயிரை இழந்திருப்பேன். நானே முயற்சி செய்து உயிர் பிழைத்து உங்கள் முன்னே நின்று கொண்டிருக்கிறேன்! என்றது. 

அதைக் கேட்ட இரண்டு தேவதைகளும், வெட்கத்தில் தலை குனிந்தனர். நமக்குள் போட்டியிட்டு தற்பெருமைப்பட்டுக் கொண்டோமே! இந்தப் பறவைக்கு இருக்கிற அறிவு கூட தேவதைகளான நமக்கு இல்லையே! என்று வருத்தப்பட்டனர். 

நீதி :
பிறரை நம்புவதை விட நாம் நம்மை நம்பினால் வாழ்க்கையில் முன்னேரலாம்.

இன்றைய செய்திகள்1

08.12.22

* "தமிழகத்தில் இன்று வரை செயல்பாட்டில் உள்ள 108 அவசர உதவி வாகனங்கள் 1343. அவற்றில், 300 வாகனங்கள் உயிர்காக்கும் அதிநவீன கருவிகள் பொறுத்தப்பட்டு முழுமையான உயிர் காக்கும் வாகனங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது" என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

* சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வு முடிவு வெளியீடு: 2,529 பட்டதாரிகள் தேர்ச்சி.

* சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு.

* வானிலை முன்னறிவிப்பு: டிச.10 வரை தமிழகம், புதுவையில் கனமழை மற்றும் அதி கனமழைக்கு வாய்ப்பு.

* அனைவருக்கும் உணவளிக்க வேண்டியது அரசின் கடமை - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்.

* நாசாவின் ஆர்ட்டெமிஸ் 1 ​​ஓரியன் விண்கலம் நிலவை மிக அருகில் புகைப்படங்கள் எடுத்த நிலையில் டிசம்பர்-11 ஆம் தேதி மீண்டும் பூமிக்கு திரும்பவுள்ளது.

* கூச் பெஹர் கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி அடுத்த சுற்றுக்கு தகுதி.

* ஐசிசி டெஸ்ட் பேஸ்ட்மேன் தரவரிசை : ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுசேன் முதல் இடத்திற்கு முன்னேற்றம்.

* உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்: இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளி வென்று அசத்தல்.

* முதலாவது டிவிசன் ஹாக்கி லீக்: ஆர்.வி.அகாடமி  அணி வெற்றி.

Today's Headlines

* "The number of emergency vehicles 108 in operation in Tamil Nadu is 1343. Among them, 300 vehicles have been equipped with advanced life-saving equipment and have been upgraded to complete life-saving vehicles," Tamilnadu Medical and People's Welfare Minister M. Subramanian said.

*  Civil Service Mains Result Released: 2,529 Passed Graduates.

 * Disaster recovery teams are ready in 10 districts including Chennai.

 * Weather Forecast: Chance of heavy and very heavy rains in Tamil Nadu, Pudvai till Dec 10.

 * It's the government's duty to feed all advice from Supreme Court

*  NASA's Artemis 1 Orion spacecraft will return to Earth on Dec-11 after taking the closest images of the moon.

 * Cooch Behar Cup Cricket: Tamil Nadu team qualified for the next round.

*  ICC Test Batsman Rankings: Australia's Marines Lapuzanne advances to the top spot.

 * World Weightlifting Championships: Mirabai Chanu of India wins silver and is amazing.

 * First Division Hockey League: RV Academy win.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Tuesday, December 6, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.12.2022

திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 

இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: அன்புடைமை

குறள் : 77
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.

பொருள்:
அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும். அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவதுபோல இருக்கும்

பழமொழி :

Where there is anger, there may be excellence.
கோபம் உள்ள இடத்தில் தான் குணமும் இருக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. உலகின் மிக சிறந்த வைரம் நல் எண்ணங்கள். 

2. வைரம் நமக்கு போதிப்பது உறுதியாக இருந்தால் மட்டுமே ஒளிர முடியும். எனவே எந்த சூழ்நிலையிலும் உறுதியாக இருப்பேன்

பொன்மொழி :

எல்லாப் பதில்களையும் தெரிந்து கொள்வதை விட, சில கேள்விகளை தெரிந்து கொள்வது சிறந்தது. --ஜேம்ஸ் தர்பர்

பொது அறிவு :

1. உலோகம் சாராத கனிமம் எது? 

ஜிப்சம் . 

2. தீப்பற்றாத மரம் எது? 

செம்மரம்.

English words & meanings :

cereal - a breakfast food. noun. ஒரு வகை காலை உணவு. பெயர் சொல். serial - sequential. தொடர்கதை. noun. பெயர்ச் சொல்

ஆரோக்ய வாழ்வு :

ஒரு முட்டையில் துத்தநாகத்துடன் நல்ல அளவு வைட்டமின் பி 6 மற்றும் பி 12 உள்ளன. அவை 'நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. மேலும், அவை காய்ச்சல் மற்றும் குளிர்ச்சிக்கு எதிராக போராட உதவுகின்றன. முட்டை வைட்டமின் டி இன் நல்ல மூலமாக இருப்பதால், உங்கள் எலும்புகளை வலுவாக வைத்திருக்கும் உதவும்.

NMMS Q

சூரிய மின்கலம் ஒளி ஆற்றலை ___________ ஆற்றலாக மாற்றுகிறது. 

a) வேதி. b) மின். c) வெப்ப d) ஒலி.

 விடை: மின்

டிசம்பர் 07


கொடி நாள் (இந்தியா) 




கொடி நாள் என்பது இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தின் ஏழாம் நாளை படை வீரர் கொடி நாளாக இந்திய அரசும் இந்திய மாநில அரசுகளும் கடைப்பிடிக்கின்றன. இக்கொடி நாள் 1949ஆம் ஆண்டு டிசம்பர் ஏழாம் நாள் முதல் இந்தியா முழுமைக்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.

நீதிக்கதை

மலைப்பாம்பும் மான் குட்டியும்

ஒரு நாள் மான்குட்டி ஒன்று தனது தாய்க்காக நாவல் பழங்களை பறிக்க ஆற்றை கடந்தது. அப்போது அங்கு குறட்டி என்ற பெயரைக்கொண்ட ஒரு மலைப்பாம்பு இருந்தது. அது இருபது அடிக்கும் நீளமாக மரங்களின் கிளைகளில் படர்ந்து இருக்கும். அது அழகிய உடம்பும், கரும்புள்ளிகளும் கொண்டது. கரும்பழுப்பு, பழுப்பு என்று பல நிறங்களில் மலைப்பாம்புகள் இருக்குமே தவிர இப்படி லட்சணமான கரும்புள்ளிகளுடன் பார்ப்பது மிக கடினம். 

மலைப்பாம்புகள் பொதுவாக பறவைகள், முயல் போன்ற சிறிய பிராணிகளைப் பிடித்து உண்ணும். சில சமயம் மான் போன்ற சற்றுப் பெரிய விலங்குகளைக் கூடத் தாக்கும். 

ஆனால் குறட்டி வித்தியாசமாக காட்டெருமைக்கன்று, சிறுத்தை போன்றவற்றைக் கூட தனது குறட்டிப்பிடியில் நொறுக்கி எடுத்துவிடும். அதனால் அதற்கு குறட்டி என்று பெயர் வழங்கி வந்தது. குறட்டி ஆற்றங்கரையையே பார்த்துக்கொண்டு இருந்தது. ஆற்றங்கரையில் வரும் மிளா மான் குட்டியைப் பார்த்தது. மான்குட்டி தனது பக்கமாக வரும்வரை காத்திருந்தது. மானும் ஆற்றைக் கடந்து குறட்டி இருக்கும் இடத்தை நோக்கி வந்தது. மானை குறட்டி சுற்றிக்கொண்டது. அம்மா என்று கதறியது மான்குட்டி. குறட்டி அதன் முகத்தைப் பார்த்தது. பாவமாக இருந்தது. 

மான் தேம்பி அழுதது. அதன் கண்களில் கண்ணீர் வழிந்தது. குறட்டி இப்படி திடீர் தாக்குதல் நடத்தும் போது எந்த ஒரு மிருகமும் தப்பிக்க போராட்டம் நடத்தும். மான் குட்டியைப் பார்த்து, நீ ஏன் அழுகிறாய் என்றது குறட்டி. மான் தனது அழுகையை நிறுத்திவிட்டு எப்படியும் நான் சாகுவது உறுதி. சாகும் முன்னர் அம்மாவின் உயிரைக் காப்பாற்றிய பெருமையாவது என்னைச் சேரும். நீங்கள் எனக்கு உதவுங்கள் என்றது மான். நான் எப்படி உதவ முடியும்? என்றது. 

மொட்டச்சி அம்மன் பாறைக்குச் சென்று நாவல் பழங்களை எடுத்து என் அம்மாவிற்கு கொடுத்துவிட்டு நான் வருகிறேன். பின்னர் உன் இஷ்டப்படி என்னைக் கொன்று சாப்பிடு என்றது மான். நீ மீண்டும் என்னிடம் திரும்பி வருவாய் என்று எனக்கு நம்பிக்கையில்லை. அப்படியேன்றால் நீ என் கூடவே வா... நாவல் பழங்களை என் தாயிடம் சேர்த்ததும் நீ என்னைக் கொன்று சாப்பிடு. 

உன்னை விட்டால் என்னால் பிடிக்கமுடியாது? உன் வேகம் என்ன, என் வேகம் என்ன? என்றது குறட்டி. என் மீது நம்பிக்கை இல்லை என்றால் நீ என்ன சொல்கிறாயே அதற்கு நான் கட்டுப்படுகிறேன். நான் உன் உடலை சுற்றியபடியே இருப்பேன். என்னை சுமந்த படியே செல்ல வேண்டும் என்று சொன்னது குறட்டி. அது அதற்கு ஒத்துக் கொண்டு மொட்டச்சி அம்மன் பாறைக்குச் சென்று நாவல் பழங்களை சேகரித்துக் கொண்டது. தனது அம்மாவுக்காக கொண்டு வந்த நாவல் பழத்தை உண்ணக் கொடுத்தது. 

நாவல் பழங்களைக் கொடுத்துவிட்டு தப்பிக்கலாம் என்று நினைத்தால் அப்புறம் நோய் வாய்ப்பட்டிருக்கும் உனது அம்மா எனக்கு உணவாக நேரிடும் என்றது குறட்டி. நீ செய்த உதவியை ஒரு நாளும் மறக்க மாட்டேன். என் வார்த்தையை மீறமாட்டேன் என்று சொல்லிவிட்டு துள்ளி ஓடிய மான் குட்டி தனது அம்மாவுக்காக கொண்டு வந்த நாவல் பழத்தை உண்ணக் கொடுத்தது. 

குறட்டி மெல்ல ஊர்ந்து மரங்களில் மறைந்து கொண்டது. அங்கு அதற்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு பதினைந்து இருபது மான்கள் உடல் நலம் விசாரித்தபடி இருந்தன. அதில் இரண்டு மூன்று மான்கள் ஒன்று சேர்ந்தால் கூட அவற்றின் கொம்புகளால் தனது தலையைக் குத்திக் கிழித்து விடுமே என்று நினைத்தது. பயம் என்றால் என்னவென்று தெரியாத குறட்டிக்குக்கூட கொஞ்சம் நடுக்கமாக இருந்தது. உடலை வளைத்து நெளிந்தபடி மறைவிடம் நோக்கி நகர்ந்தது. 

அதே மான்குட்டி தனியாக வந்தது. என் கடமை முடிந்தது. எனது வார்த்தையை நான் காப்பாற்றி விட்டேன். உனக்கு எனது நன்றி என்று சொன்னவாறு குறட்டியின் முன்னால் வந்து நின்றது மான்குட்டி. குறட்டியின் முரட்டுத் தோலையும் மீறி அதன் உடல் புல்லரித்தது. 

எனக்கு உதவி செய்த உன்னை காட்டிக் கொடுக்க மாட்டேன். உன்னை கொன்று தின்னப்போகும் நான் எப்படி உனக்கு உதவியவன் ஆவேன்? நீ சொன்னது சரிதான்... ஆனால் நீ உதவாவிட்டால் என் அம்மாவைக் காப்பாற்ற முடியாது போயிருக்கும். பெற்றோருக்காக தனது உயிரைத் தருவதைவிட பெருமை தரக்கூடிய விஷயம் உலகத்தில் வேறு என்ன இருக்க முடியும்?

குறட்டி தனது தலையை மெல்ல உயர்த்தி மான்குட்டியின் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து, தாய்க்காக தனது உயிரை தரத்துணிந்த உன்னை வணங்குகிறேன் என்று சொல்லி, குறட்டி அதனை உயிரோடு விட்டுச்சென்றது. 

நீதி :
எப்போது மற்றவருக்கு உதவும் குணம் இருத்தல் வேண்டும்.

இன்றைய செய்திகள்

07.12.22

* அடாப்டிவ் டிராஃபிக் சிக்னல்: சென்னை நெரிசலைக் குறைக்க வருகிறது நுண்ணறிவு போக்குவரத்து திட்டம்.

* கல்வி நிறுவனங்களுக்கு நேரடியாகச் சென்று படித்தவர்களையே ஆசிரியர்களாக நியமிக்கும் வகையில் ஆசிரியர் நியமன நடைமுறைகளை மூன்று மாதங்களில் மறு ஆய்வு செய்ய தமிழக பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* தமிழகத்தில் 15 மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களில் குரூப்-3ஏ தேர்வுகள் நடத்தப்பட உள்ளது என தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

* மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மாலை புயலாக வலுவடையக்கூடும் என்பதால், தமிழகத்தில் 9-ம் தேதி அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அன்றைய தினம் பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

* ஜி20 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில்  தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் தொழில்நுட்ப பரிமாற்றம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடந்தது.

* கரோனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என சீனாவில் உள்ள வூஹான் ஆய்வக விஞ்ஞானி தனது புதிய புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

* இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ரிஷிகேஷ் கனிட்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

* முதலாவது டிவிசன் ஹாக்கி லீக்: மின்சார வாரிய அணி வெற்றி.

* 2027-ம் ஆண்டு ஆசிய கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பில் இருந்து பின்வாங்கியது இந்தியா.


Today's Headlines

* Adaptive traffic signal: Intelligent traffic scheme coming to reduce congestion in Chennai.

*  The Madras High Court has directed the Tamil Nadu Department of School Education and Higher Education to re-examine the teacher appointment procedures in three months so that only educated people can be appointed directly to the educational institutions.

*  The Tamil Nadu Public Service Commission has announced that the Group-3A examinations will be conducted at the examination centers in 15 districts of Tamil Nadu.

*  The Chennai Meteorological Department has warned that there is a possibility of very heavy rain in Tamil Nadu on the 9th as the deep depression moving in the west-northwest direction may intensify into a storm this evening.  A red alert was issued for many districts on that day.

 * The meeting of representatives from G20 member countries began in Udaipur, Rajasthan.  On the first day of the meeting, discussions were held on important issues including technology transfer.

 * A Wuhan laboratory scientist in China claims in his new book that the coronavirus was created by humans.

*  Former player Rishikesh Kanitkar has been appointed as the batting coach of the Indian women's cricket team.

* 1st Division Hockey League: Power Board Team Win.

* India has backed up its bid to host the 2027 Asian Cup football tournament.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்