Tuesday, January 4, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 05.01.22

திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்: அரணியல்

அதிகாரம்: நாடுகுறள் எண் : 740

குறள்:
ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு

பொருள்:
நல்ல அரசு அமையாத நாட்டில் எல்லாவித வளங்களும் இருந்தாலும் எந்தப் பயனும் இல்லாமற் போகும்

பழமொழி :

Beauty is a short-lived reign.


அழகின் ஆட்சி அற்ப காலமே.

இரண்டொழுக்க பண்புகள் :

1. ஒலியாக இருக்க வேண்டும் எதிரொலியாக அல்ல எனவே எனது தனித்தன்மை எப்போதும் இழக்க மாட்டேன்.


2. ஆயத்தமே ஆயுதம் எனவே எப்போதும் எந்த காரியம் செய்யும் முன்பும் ஆயத்தமாகி செல்வேன்

பொன்மொழி :

நாம் வாழ்க்கையில் துன்பத்தை எதிர் நோக்கி துவண்டு போகும் நேரங்களில் நம்பிக்கை தரும் பொன்மொழிகள் எமக்கு உத்வேகத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கும்____கலாம் அவர்கள்

பொது அறிவு :

1. இந்தியாவின் முதலாவது டிஜிட்டல் பல்கலைக்கழகம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?

 திருவனந்தபுரம். 

2. 2020 ஆம் ஆண்டில் இந்தியாவுடன் வர்த்தகம் மேற்கொண்ட நாடுகளில் முதலிடத்தை பெற்றுள்ள நாடு எது? 

சீனா.

English words & meanings :

Accept - receiving something. ஏற்றுக்கொள்வது. 

Except - not including something or some body. ஒருவர் அல்லது ஒரு பொருள் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது.

ஆரோக்ய வாழ்வு :

தேனின் நன்மைகள்,



1) எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும். 

2) ஆரஞ்சு பழச் சுளைகளை தேனில் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்

கணினி யுகம் :

Alt + Shift + N - Add Note. 

Ctrl + Alt + T - Add term


நீதிக்கதை

 தீயவர்களின் நட்பு

ஒரு கிணற்றில் வயதானத் தவளை ஒன்று வசித்து வந்தது. இந்தத் தவளையை அங்கிருந்த மற்ற தவளைகள் அடிக்கடி தொல்லைப்படுத்திக் கொண்டிருந்தது. மற்ற தவளைகள் கொடுத்த துன்பத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாத வயதான தவளை இராட்டினத் தோண்டி வழியே வெளியே வந்து மற்ற தவளைகளை என்ன செய்யலாம்? என்று யோசித்துக் கொண்டிருந்தபோது அந்தக் கிணற்றுக்கு அருகிலிருந்த பாம்புப்புற்று அதன் கண்ணில்ப்பட்டது.

நம்மைத் துன்புறுத்திக் கொண்டிருக்கும் தவளைகளை இந்தப் புற்றிலிருக்கும் பாம்பின் உதவியோடு கொன்று விட்டால் என்ன? என்கிற எண்ணம் வந்தது. மெதுவாகப் பாம்புப்புற்றின் அருகில் சென்று பாம்பை நட்புக்கு அழைத்தது. உங்களுடைய பரம எதிரியான என்னுடன் நட்பு வைத்துக் கொள்ள வேண்டுமென்று விரும்புவது ஏன்?என்று கேட்டது அந்த பாம்பு.

அதற்கு அந்த வயதானத் தவளை, என்னுடன் இருக்கும் சில தவளைகள் என்னை தினந்தோறும் துன்புறுத்தி வருகின்றன. என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவற்றை அழிக்கத்தான் உன்னைத் தேடி வந்திருக்கிறேன் என்றது. 

என்னால் எப்படி உன் இடத்திற்கு வரமுடியும்? நான் வரும் இராட்டினத்தின் வழியாக உன்னை அங்கு அழைத்துச் செல்கிறேன் என்றது தவளை. பாம்பும் யோசித்தது. நாமோ தினமும் உணவிற்காகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும்போது, இப்படி தானாக வந்து உணவிற்கு வழி செய்யும் தவளையின் கோரிக்கையை நாம் ஏன் மறுக்க வேண்டும்? என்று நினைத்தபடி தவளையுடன் அந்த கிணற்றுக்குள் சென்றது.

கிணற்றுக்குள் சென்ற பாம்பும், அந்த வயதானத் தவளைக்குத் தொல்லை கொடுத்து வந்த தவளைகளை எல்லாம் அழித்தது. கிணற்றுக்குள் இருந்த வயதான தவளையும் மகிழ்ச்சியுற்றது. ஆனால் அந்த மகிழ்ச்சி நெடுநாள் நீடிக்கவில்லை.

பாம்பு வயதான தவளையைப் பார்த்து, உன்னுடைய எதிரிகள் எல்லாம் அழிந்து விட்டதால் என் பசிக்கு வேறு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டது. வயதானத் தவளையோ, நண்பரே! நீங்கள் எனக்கு உதவிதற்கு மிக்க நன்றி. எனக்கு இனிமேல் உங்களின் உதவி தேவையில்லை என்றது.

ஆனால் பாம்போ கோபத்துடன், உன்னை நம்பித்தான் நான் இங்கு வந்தேன். இப்போது என்னுடைய இடத்தில் வேறு ஏதாவது வந்து குடியேறியிருக்கும். தினந்தோறும் எனக்கு நீயே ஒரு தவளையை உணவாகக் கொடுக்க வேண்டும். இல்லையேல் உன் கூட்டத்தில் இருப்பவர்களை நான் என் விருப்பப்படி பிடித்துத் தின்று என் பசியைப் போக்கிக் கொள்வேன் என்று அச்சுறுத்தியது.

வயதானத் தவளையும் பயந்து, தினந்தோறும் ஒரு தவளையை பாம்புக்குக் கொடுத்து வந்தது. கடைசியில் ஒருநாள் அந்த வயதான தவளையின் மகனையும் சாப்பிட்டது. இதைக்கண்டு அதிர்ச்சியுற்ற வயதானத் தவளையின் மனைவி, நீங்கள் இந்தக் கொடியவனைக் கொண்டு வந்து நம் குழந்தையை மட்டுமில்லை, குலத்தையே அழித்து விட்டீர்கள். இனி நாம் இருவர் மட்டும்தான் மீதம் இருக்கிறோம். நாமும் அழிந்து விடுவதற்கு முன்பு ஏதாவது சூழ்ச்சி செய்து அந்த பாம்பைக் கொன்று விடுங்கள் அல்லது நாம் இருவரும் இங்கிருந்து தப்பித்துச் சென்று விடுவோம் என்று எச்சரித்தது.

அந்த சமயத்தில் அங்கு வந்த பாம்பு தனக்குப் பசியாக இருப்பதால் ஏதாவது கொடு என்று கேட்டது. உடனே வயதானத் தவளை, நண்பரே! நாங்கள் இருக்கும் வரை நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் இப்போதே என் மனைவியை அனுப்பி வேறு கிணற்றிலிருந்து தவளைகளை இங்கே அழைத்து வரச் சொல்கிறேன் என்று மனைவியை அங்கிருந்து போகச் செய்தது.

சில நிமிடங்கள் கழிந்த பின்பு, நீ எவ்வளவு நேரம்தான் பசியைப் பொறுத்துக் கொண்டிருப்பாய்? நான் வேகமாகச் சென்று தவளைகளை அழைத்து வருகிறேன் என்றபடி இராட்டினத்தின் வழியே அக்கிணற்றை விட்டு வெளியேறியது. தன் பசிக்கு உணவு கொண்டு வரச்சென்ற வயதானத் தவளையும், அதனுடைய மனைவியும் திரும்ப வரவேயில்லை. பாம்பு ஏமாற்றமடைந்தது.

கிணற்றுச் சுவற்றிலிருந்த ஒரு பல்லியைப் பார்த்த அந்த பாம்பு, பல்லியாரே, அந்தக் வயதானத் தவளைக்கு நீங்களும் நண்பன்தானே, நீ அந்தத் தவளையிடம் சென்று, நான் அந்தத் தவளைக்குத் துரோகம் செய்யமாட்டேன் என்று நான் உறுதியளித்ததாகச் சொல்லி பயப்படாமல் வரச்சொல் என்று தகவல் சொல்லி அனுப்பியது.

பல்லியும் அந்த வயதானத் தவளையைத் தேடிச் சென்று பாம்பு சொன்ன செய்தியைச் சொல்லியது. அதற்கு அந்த வயதானத் தவளை பசித்தவன் விசுவாசம் நம்ப முடியாதது. அந்தக் கொடியவனிடம் நட்பு வைத்து என் குடும்பத்தினர் அனைவரையும் இழந்து விட்டேன். நான் இனி அங்கு வர மாட்டேன் என்று சொல்லி அனுப்பியது.

நீதி :
நட்பு நல்லவர்களோடுதான் இருக்க வேண்டும்.

இன்றைய செய்திகள்

05.01.22

◆தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்ட மாணவர்களுக்கு பிளஸ் 2 தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

◆பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக விவசாயிகளிடம் கரும்பு நேரடி கொள்முதல்: அரசின் வழிமுறைகள் வெளியீடு.

◆லடாக்கின் பான்காங் ஏரிப் பகுதியில் சீன ராணுவம் புதிய பாலத்தைக் கட்டி வருவது செயற்கைக்கோள் புகைப்படம் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

◆நாடு முழுவதும் கடந்த 2020-ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான இணையவழி குற்றங்கள் 261 சதவீதம் அதிகரித்துள்ளது.

◆பிரான்ஸில் புதியவகை கரோனா வைரஸ் கண்டுபிடிப்பு: 46 உருமாற்றங்களுடன் உள்ளதாக விஞ்ஞானிகள் தகவல்.

◆புரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்ஸ், பாட்னா அணிகள் வெற்றி.

◆தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் ஷர்துல் தாக்கூர் அபாரம்.

Today's Headlines

 🌸 The Director of State Examinations has announced that students who have learning subjects through the Tamil language will be exempted from the Plus 2 examination fee.                                  

     🌸Direct purchase of sugarcane from farmers for Pongal gift package:  Government guidelines regarding this is published.

 🌸 The construction of a new bridge by the Chinese army in the Pangong Lake area of ​​Ladakh has been confirmed by satellite photography.

🌸 Nationwide cyber crimes against children increased by 261 percent in 2020.

 🌸 A new type of coronavirus discovered in France: Scientists report that there are 46 mutations.

 🌸 Pro Kabaddi League: Bengal Warriors and Patna teams won.

 🌸 Test against South Africa: Shardul Thakur from the Indian team outshines the play by taking 5 wickets.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Monday, January 3, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 04.01.22

திருக்குறள் :

பால்: பொருட்பால்

இயல்: அரணியல்

அதிகாரம்: நாடு

குறள் எண்: 737

குறள்:
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற் குறுப்பு

பொருள்:
ஊற்றும் மழையும் ஆகிய இருவகை நீர்வளமும்  தக்கவாறு அமைந்த மலையும் அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீர் வளமும் வலிமையான அரணும் நாட்டிற்கு உறுப்புகளாகும்

பழமொழி :

A clean hand wants no washing


பொன் குடத்துக்கு பொட்டு வேண்டுமா?

இரண்டொழுக்க பண்புகள் :

1. ஒலியாக இருக்க வேண்டும் எதிரொலியாக அல்ல எனவே எனது தனித்தன்மை எப்போதும் இழக்க மாட்டேன்.


2. ஆயத்தமே ஆயுதம் எனவே எப்போதும் எந்த காரியம் செய்யும் முன்பும் ஆயத்தமாகி செல்வேன்

பொன்மொழி :

வாழ்க்கையில் சேமிப்பை
ஒரு போதும் அலட்சியம்
செய்யாதீர்கள் சேமிப்பை
அலட்சியம் செய்பவர்கள்
தன் வாழ் நாளில் ஒரு
போதும் செழிப்பை
அடைய முடியாது.___ராமகிருஷ்ண பரமஹம்சர்


பொது அறிவு :

1. இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ள ஒருங்கிணைந்த உதவி எண் எது? 

139. 

2. குருதிக் கொடை தருபவர்களுக்கு அக்குருதி மீண்டும் சுரக்க எத்தனை நாட்கள் ஆகும்?

 21 நாட்கள்.

English words & meanings :

complement - a thing that goes together well with something else. வேறொன்றுடன் நன்றாக பொருந்தும் பொருள். 

Compliment - a statement or action that shows admiration. பாராட்டு

ஆரோக்ய வாழ்வு :


ஆரோக்கிய வாழ்வு

*தேனின் நன்மைகள்*

1)மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது இரத்தம் ஊறும்.


2) தேங்காய் பாலுடன் தேன் கலந்து சாப்பிட்டால் குடல்புண் , வாய்ப்புண் குணமாகும்.

கணினி யுகம் :

F 12 - Activate Editor. 

Ctrl + ' - Acute accent

ஜனவரி 04


லூயிஸ் பிரெய்ல் அவர்களின் பிறந்தநாள்



லூயிஸ் பிரெய்ல் (ஜனவரி-4, 1809. ஜனவரி-6, 1852, பிரான்ஸ்) பார்வையற்றவர்களுக்கான பிரெய்ல் எழுத்தினை உருவாக்கியவர். பிரெஞ்சுக்காரரான இவர் பார்வையற்றவர். பார்வையற்றவர்கள் தடவிப் பார்த்துப் படிக்க ஏற்ற பிரெய்லி எழுத்தினைக் கண்டுபிடித்தார். பிரெயில் முறையில் ஒன்று முதல் ஆறு புடைப்புப்புள்ளிகளையும் ஓட்டைகளையும் கொண்டு எழுதிய எழுத்துகளை விரல்களை வைத்துத் தடவுதலின் மூலம் இனங்கண்டு கொள்வர்.


உலக பிரெயில் நாள்




புற்றெழுத்து அல்லது பிரெயில் (Braille) என்கிற எழுத்து முறை 1821-இல் பார்வையற்றோர்க்குப் படிக்க உதவ லூயி பிரெயில் என்கிற பிரான்சியரால் உருவாக்கப்பட்ட எழுத்து முறை ஆகும். ஒவ்வொரு பிரெயில் எழுத்தும் ஆறு புள்ளிகள் கொண்டுள்ள செவ்வகக் கலம் ஆகும். புள்ளிகள் 6 இடநிலைகளில் எங்கேயும் உயர்த்தப்பட்டு (26), அதாவது 64 எழுத்துச் சேர்ப்புகள் உருவாக்கப்படலாம். சில இடங்களில் புள்ளிகள் உயர்த்தப்படாமல் அமையலாம். இலக்கணக் குறிகளுக்கு தனி எழுத்துகள் உண்டு.

பிரெயில் எழுத்து முறையின் கருத்தமைவு நெப்போலியன் கோரிக்கைக்கு ஏற்ப சார்லஸ் பாபேஜ் உருவாக்கிய இரகசிய தொடர்பு முறையில் தோற்றுவிக்கப்பட்டது. பாபேஜ் பார்வையற்றோர் கல்வி நிலையத்தில் லூயி பிரேயிலை சந்தித்து, லூயி பிரெயிலின் ஆலோசனைகளுக்கு ஏற்ப குறிமுறையை மாற்றி அமைத்தார்.

நீதிக்கதை

சிறந்தவர் யார் ?

ஒரு நாட்டின் மன்னன் தனக்கு ஒரு புதிய அந்தரங்க ஆலோசகரை நியமித்துக் கொள்ள விரும்பினான். அது பற்றி அவன் தன் அமைச்சரிடம் ஆலோசிக்க வந்தான். அரசே! நம் நாட்டில் அரசியல், பொருளியல், நீதித்துறை, ஆட்சித்துறை, எனப் பலதுறைகளில் நன்கு படித்தவர்கள் இருக்கின்றனர். இப்பதவிக்கு அறிவிப்பு செய்தால் அவர்களில் பலர் தங்களைக் காண வருவர். அவர்களுக்குத் தேர்வு நடத்தி நன்கு படித்த ஒருவரைத் தேர்ந்தெடுக்கலாம் என்றார்.

நாடெங்கிலும் பறை சாற்றுவித்து அந்தரங்க ஆலோசகர் பதவிக்கு தகுதி உடையவர்கள் குறிப்பிட்ட ஒரு நாளில் தேர்வுக்கு வரலாம் என அறிவித்தார். மன்னர் குறிப்பிட்ட நாளில் பல இளைஞர்கள் தேர்வுக்கு வந்தனர். அவர்களுக்கு நடந்த தேர்வில் இரு இளைஞர்கள் முன்னதாக வந்தனர். ஆனால், இருவரும் எல்லா விஷயத்திலும் சமமாக இருந்ததால் அவர்களில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்று முடிவு செய்ய அமைச்சரை அணுகினார் மன்னர்.

இப்பதவிக்கு வெறும் புத்தகப்படிப்பு இருந்தால் மட்டும் போதாது. சிக்கலான பிரச்னைகளைச் சமாளித்து நல்ல முடிவு காணத் திறமை பெற்றவராக இருக்க வேண்டும். அவர்கள் இருவருக்கு மட்டும் பரீட்சை வைத்து அதில் தேர்ந்தவனைப் பதவிக்கு நியமியுங்கள் என்றார். மறுநாள் அமைச்சர் இருவரையும் அழைத்து, இன்று காலை என் நண்பரின் உடல் நிலை மிகவும் மோசமாகிவிட்டது. அவரது நிலை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் எனக் கூறி விவரிக்கலானார்.

என் நண்பர் இன்று காலை என்னிடம் கூறியதை அப்படியே கூறுகிறேன். என் நண்பர் வயதானவர். இதய நோயாளி. ஒரு நாள் இரவு அவர் பயங்கரமான கனவு ஒன்றைக் கண்டார். அந்தக் கனவில் அவர் ஒரு அடர்ந்த காட்டிற்குள் வழி தவறிப் போய் விட்டார். அவர் ஒரு இடத்தில் நான்கு பாதைகள் சேர்வதைக் கண்டார். மங்கலான இரவில் நட்சத்திர ஒளியில் அவர் அவற்றில் ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து நடந்து சென்றார். அங்கு சில சிங்கங்கள் திரிந்து கொண்டிருந்தன. அவற்றில் ஒன்று அவரை நோக்கிப் பாய்ந்து வந்தது.

நண்பர் பயந்து வந்தவழியே ஓடி மறுபடியும் நான்கு பாதைகள் சேரும் இடத்தை அடைந்தார். இரண்டாவது பாதையில் பயமில்லாது நடந்து சென்றார். கொஞ்ச தூரத்தில் ஏதோ வெளிச்சம் இருந்தது கண்டு அங்கு சென்றார். அங்கு பல பாம்புப் புற்றுகள் இருப்பதையும் அவற்றின் மேல் பல பாம்புகள் படமெடுத்து ஆடுவதையும் கண்டார். அவற்றில் ஒன்று ஐந்து தலைநாகம். அவரைக் கண்ட ஐந்து தலைப்பாம்பு சீறவே, அவர் பயந்து வந்த வழியே திரும்பி ஓடி மீண்டும் நான்கு பாதைகள் சேரும் இடத்தை அடைந்தார்.

பிறகு அவர் மூன்றாவது பாதையில் நடந்து செல்லலானார். கொஞ்ச தூரம் சென்றதும் அது ஒரு மலை அடிவாரத்தில் போய் முடிந்தது. அங்கு பல மனித எலும்பு கூடுகள் இருப்பதைக் கண்டு மலைத்து நின்றார். அப்போது அந்த மலையில் ஒரு குகையிலிருந்து பயங்கர ராட்சஸன் ஒருவன் உறுமிக் கொண்டிருப்பதை கண்ட என் நண்பர் பயந்து வந்த வழியே திரும்பி ஓடி மறுபடியும் நான்கு பாதைகள் கூடும் இடத்தை அடைந்தார்.

இம்முறை அவர் நான்காவது பாதையில் சென்றார். அவர் கொஞ்ச தூரம் சென்றதும் தன் பின்னால் ராட்சஸன் வருவது கண்டு பயந்து வேகமாக ஓடினார். அவர் ஒரு பாறையின் விளிம்பை அடைந்து விட்டார். அங்கிருந்து போக வழியில்லை. பாறையின் கீழ்வெகு ஆழத்தில் தான் நிலப்பரப்பு தெரிந்தது. அவர் ராட்சஸனுக்கு பயந்து நின்ற போது கால்கள் நடுங்க பாறையிலிருந்து தவறி கீழே படுபாதாளப் பள்ளத்தில் விழுந்து விட்டார்.

அமைச்சர் தம் நண்பர் கண்ட இந்தக் கனவைக் கூறி, பார்த்தீர்களா எவ்வளவு பயங்கரமான கனவு என்று! இதய நோயாளியான என் நண்பர் இந்தக் கனவைக் கண்டு முடித்ததும் கண் விழித்தார். மறுவினாடியே அவரது இதயத்துடிப்பு நின்றது. அவர் இறந்து போய்விட்டார் என்றார். அப்போது இருவரில் ஒருவர் பயந்து போய் மெதுவாய் தாழ்ந்த குரலில், கனவில் காணும் காட்சிகள் கூட மனிதனின் உடல் நலனை பாதிக்கின்றன. தங்களது நண்பர் நான்கு முறைகளில் பயந்து ஓடி இருக்கிறார். அந்தப் பயம் அவரைப் பெரிதும் பாதித்திருக்கிறது. கண் விழித்ததும் இதய நோயாளியான அவர் பயத்தால் இதயம் தாக்கப்பட்டு உயிரை இழந்திருக்க வேண்டும். உங்களது நண்பரின் பிரிவால் உங்களுக்குப் பெரும் துயரமே ஏற்பட்டுள்ளது என்றான். அதைக் கேட்ட பின் அமைச்சர் மற்றவரை பார்க்கவே அவர் சிரித்தவாறே, ஆகா! என்ன அருமையான கட்டுக்கதை என்றான். 

அமைச்சரும், கட்டுக்கதையா? ஏன் அப்படிக் கூறுகிறாய்? என்று சற்று கோபப்பட்டவர் போலக் கேட்டார். தங்கள் நண்பர் இந்த பயங்கரக் கனவைக் கண்டதும் உடனே கண் விழித்தார் என்றும் மறுவினாடியே அவரது இதயத்துடிப்பு நிற்கவே அவர் இறந்துவிட்டார் என்று கூறினீர்கள். நீங்களோ உங்கள் நண்பரே இந்தக் கனவை உங்களிடம் கூறியதாகச் சொன்னீர்கள் அது எப்படி முடியும்? அவர் தான் கனவைக் கண்டு கண் விழித்ததும் இறந்து போய்விட்டாரே. அதனால் அவர் எப்படி இந்தக் கனவைத் தாமே உங்களிடம் சொல்லி இருக்க முடியும். முடியவே முடியாது. அதனால்தான் இது கட்டுக்கதை என்றேன் என்றான். அமைச்சர் இரண்டாவது நபரை பாராட்டி அவனையே மன்னனின் அந்தரங்க ஆலோசகனாகத் தேர்ந்தெடுத்தார்.

நீதி :
புத்திசாலிகளுக்கு என்றுமே வெற்றிதான்.

இன்றைய செய்திகள்

04.01.22

◆10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடிப் பொதுத்தேர்வு நடை பெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

◆கரோனாவைக் கட்டுப்படுத்த முகக்கவசம் அணியாதவர்களுக்குத் தயக்கமின்றி அபராதம் விதிக்கும்படி மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்களுக்கு சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

◆முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு இணையவழியில் நேற்று தொடங்கியது.

◆15 வயது முதல் 18 வயதுள்ள பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று நாடு முழுவதும் தொடங்கியது. 

◆மருத்துவ படிப்பில் பொருளாதாரத்தில் நலி்ந்த முன்னேறிய வகுப்பினருக்கான 10%இடஒதுக்கீட்டுக்கு குடும்பத்தின் ஆண்டு வருமான உச்ச வரம்பாக ரூ.8 லட்சம் நிர்ணயித்தது நியாயமானதுதான் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

◆பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தாதவர்கள் வெளிநாடு செல்ல தடை - ஐக்கிய அரபு அமீரகம் உத்தரவு.

◆ஐ.எஸ்.எல். கால்பந்து: ஜாம்ஷெட்பூரை வீழ்த்தியது சென்னை.

◆இந்தியா-தென்ஆப்பிரிக்கா மோதும் 2-வது டெஸ்ட்: ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று தொடங்கியது.

◆இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான  தென்ஆப்பிரிக்க அணி அறிவிப்பு.


Today's Headlines

 🌸 School Education Minister Anbil Magesh has said that there will be a direct Public examination for 10th and 12th class students.

 🌸Health Secretary Radhakrishnan has directed district collectors and corporation commissioners to impose fines on those who do not wear masks to control corona.

  🌸Counseling for postgraduate engineering courses started online yesterday.

 🌸Vaccination work has started for 15- to 18-year-olds  across the country yesterday.

  🌸The Central Government has said in the Supreme Court that it is reasonable to set a maximum annual family income limit of Rs 8 lakh for the 10% reservation for the economically disadvantaged forward caste in medical studies.

  🌸Those who have not been vaccinated with booster dose are barred from traveling abroad - UAE order.

 🌸ISL  Football: Chennai defeated Jamshedpur.

 -🌸2nd Test between India and South Africa: Started yesterday in Johannesburg.

 🌸 South African team announces one-day cricket match against India.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Sunday, January 2, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 03.01.22

   திருக்குறள் :

பால்: பொருட்பால்

இயல்: அரணியல்

அதிகாரம்: நாடு

குறள் எண்: 735

குறள்:
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு

பொருள்:
பல குழுக்களாகப் பிரிந்து பாழ்படுத்தும் உட்பகையும், அரசில் ஆதிக்கம் செலுத்தும் கொலைகாரர்களால் விளையும்

பழமொழி :

You waited this much, wait just a bit more. 
 ஆக்கப் பொறுத்தவருக்கு ஆறப் பொறுக்கவில்லை

இரண்டொழுக்க பண்புகள் :

1. ஒலியாக இருக்க வேண்டும் எதிரொலியாக அல்ல எனவே எனது தனித்தன்மை எப்போதும் இழக்க மாட்டேன்.


2. ஆயத்தமே ஆயுதம் எனவே எப்போதும் எந்த காரியம் செய்யும் முன்பும் ஆயத்தமாகி செல்வேன்

பொன்மொழி :

நாம் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம் ஆனால் அனைவருக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன. வாய்ப்புக்காக காத்திராதே வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்___அப்துல் கலாம்

பொது அறிவு :

1. 2022 ல் 22 வது உலக கோப்பை கால்பந்து போட்டி எங்கு நடைப்பெற உள்ளது?  

கத்தார்.

2. கொத்தடிமை முறை ஒழிப்பு தினத்தை  கடைப்பிடித்த இந்திய நாட்டின் முதல் மாநிலம் எது?

 தமிழ்நாடு.

English words & meanings :

Quiet - silence. அமைதி

Quite - very (the exam is quite hard). முற்றிலும்.

ஆரோக்ய வாழ்வு :

*டார்க் சாக்லேட்டின் நன்மைகள்*

1) டார்க் சாக்லேட்டில் புற்றுநோய் எதிர்ப்பு ஆன்டி ஆக்சிடென்ட் அதிக அளவில் உள்ளது.

2) டார்க் சாக்லேட் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.


ஜனவரி 03


சாவித்திரிபாய் புலே அவர்களின் பிறந்தநாள்




சாவித்திரிபாய் புலே (Savitribai Jyotirao Phule, 3 சனவரி 1831 – 10 மார்ச் 1897) ஒரு சமூக சீர்திருத்தவாதியும், கவிஞரும் ஆவார்.இவர் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என அழைக்கப்படுகிறார். இவர் தன் கணவர் மகாத்மா ஜோதிராவ் புலேயுடன் (Mahatma Jyotirao Govindrao Phule) இணைந்து, ஆங்கிலேயர் காலத்தில் பெண் உரிமைக்காகவும், கல்விக்காகவும் பாடுபட்டவர். இவர்கள் பெண் கல்விக்காக முதல் பள்ளியை பூனாவிற்கருகிலுள்ள பிடெ வாடாவில் 1848 ஆம் ஆண்டு நிறுவினர்.[1][2]

சாவித்திரிபாய் புலே பிறப்பின் 186 ஆவது ஆண்டு நிறைவை தேடு பொறி கூகுளானது, ஜனவரி 3, 2017 அன்று ”கூகுள் டூடுள்” கொண்டு அடையாளப்படுத்திச் சிறப்பித்தது

நீதிக்கதை

தங்கமா? வெள்ளியா?

ஒரு நா‌ட்டி‌ல் பொருளாதார ‌நிபுண‌ர் ஒருவ‌ர் இரு‌ந்தா‌ர். அ‌ந்த நா‌ட்டு ம‌ன்ன‌ர் எந்த ஒரு முக்கியமான காரியத்தை செய்வதாக இரு‌ந்தாலு‌ம், அ‌ந்த ‌நிபுணரை அழை‌த்து ஆலோசனை‌க் கே‌ட்ட ‌பிறகே செ‌ய்வா‌ர். அவரின் புகழ் மற்ற நாடுகளுக்கும் பரவியது. 

ஒரு நா‌ள் பொருளாதார ‌நிபுணரை, அ‌வ‌ர் வ‌சி‌க்கு‌ம் ஊ‌ரி‌ன் தலைவ‌ர் அழை‌த்து‌, நீ நா‌ட்டு‌க்கே பொருளாதார ‌‌விஷய‌ங்க‌ளி‌ல் ஆலோசனை வழ‌‌ங்கு‌கிறா‌ய். ஆனா‌‌ல் உ‌ன் மகனை கவ‌னி‌க்காம‌ல் ‌வி‌ட்டு‌வி‌ட்டாயே. அவனு‌க்கு உலோக‌த்‌தி‌ல் ‌அ‌திக ‌விலை ம‌தி‌ப்பானது த‌ங்கமா? அ‌ல்லது வெ‌ள்‌ளியா எ‌ன்று கூட தெ‌ரிய‌வி‌ல்லையே. நா‌ட்டு ‌விஷய‌ங்களை கவ‌னி‌த்தது போது‌ம், ‌வீ‌ட்டையு‌ம் கொ‌ஞ்ச‌ம் கவ‌னி எ‌ன்று கூ‌றினார். 

வீ‌ட்டி‌ற்கு வ‌ந்த ‌நிபுண‌ர், தனது மகனை அழை‌த்து, மகனே.. உலோக‌த்‌தி‌ல் ‌விலை ம‌தி‌ப்பானது த‌ங்கமா? வெ‌ள்‌ளியா? எ‌ன்று கே‌ட்டா‌ர். அத‌ற்கு அ‌ந்த மக‌ன் த‌ங்க‌ம் எ‌ன்று ப‌தில‌ளி‌த்தா‌ன். உடனே, த‌‌ந்தை ‌பிறகு ஏ‌ன் இ‌ந்த ஊ‌ர் பெ‌ரியவ‌ர்க‌ள் உ‌ன்னை‌ப் ப‌ற்‌றி எ‌ன்‌னிட‌ம் புகா‌ர் கூ‌றினா‌ர்க‌ள். உ‌ன்னை நா‌ன் ச‌ரியாக வள‌ர்‌க்க‌வி‌ல்லை எ‌ன்று‌ம், த‌ங்க‌த்‌தி‌ற்கு‌ம், ‌வெ‌ள்‌ளி‌க்கு‌ம் உ‌ள்ள ‌வி‌த்‌தியாச‌த்தை‌க் கூட‌ அவ‌ன் அ‌றி‌ந்‌திரு‌க்க‌வி‌ல்லை எ‌ன்று எ‌ன்‌னிட‌‌ம் சொன்னார்கள் எ‌ன்று ச‌ந்தேக‌த்துட‌ன் கே‌ட்டா‌ர்.

அ‌த‌ற்கு அ‌ந்த மக‌ன், த‌ந்தையே, ‌தினமு‌ம் நா‌ன் ப‌ள்‌ளி‌க்கு‌ச் செ‌ல்லு‌ம் போது, உ‌ங்க‌ளிட‌ம் என்னைப் பற்றி சொல்லிய பெ‌ரியவ‌ர்க‌ள், எ‌ன்னை அழை‌த்து ஒரு கை‌யி‌ல் வெ‌ள்‌ளி நாணய‌ங்களையு‌ம், ஒரு கை‌யி‌ல் த‌ங்க நாணய‌த்தையு‌ம் வை‌த்து‌க் கொ‌ண்டு, இ‌தி‌ல் எது பெ‌ரியதோ அதை ‌நீ எடு‌த்து‌க் கொ‌ள் எ‌ன்று கூறுவா‌ர்க‌ள்.

நா‌ன் உடனே வெ‌ள்‌ளி நாணய‌ங்களை எடு‌த்து‌க் கொ‌‌‌ள்வே‌ன். அவ‌ர்க‌ள் கலகலவெ‌ன்று ‌சி‌ரி‌ப்பா‌ர்க‌ள். நா‌ன் வெ‌ள்‌ளி நாணய‌த்தை எடு‌த்து‌க் கொ‌ண்டு ப‌ள்‌ளி‌க்கு‌ச் செ‌ன்று ‌விடுவே‌ன் எ‌ன்றா‌ன். இ‌தை‌க் கே‌ட்டு அ‌தி‌ர்‌ந்த ‌நிபுண‌ர், வெ‌ள்‌ளியை ‌விட த‌ங்க‌ம்தா‌ன் ‌விலை உய‌ர்‌ந்தது எ‌ன்று உன‌க்கு‌த் த‌ெ‌ரி‌ந்‌திரு‌ந்து‌ம் ஏ‌ன் வெ‌ள்‌ளியை எடு‌த்து‌க் கொ‌ள்‌கிறா‌ய் எ‌ன்று கே‌ட்டா‌ர். 

அத‌ற்கு அ‌ந்த மக‌ன், த‌ந்தையை தனது அறை‌க்கு அழை‌த்து‌ச் செ‌ன்று, ஒரு பெ‌ட்டியை‌த் ‌திற‌ந்து கா‌ண்‌பி‌த்தா‌ன். அ‌ந்த பெ‌ட்டி ‌நிறைய வெ‌ள்‌ளி நாணய‌ங்க‌ள் இரு‌ந்தன. அ‌ப்போது மக‌ன் சொ‌ன்னா‌‌ன், த‌ந்தையே, ஒ‌வ்வொரு முறையு‌ம் அவ‌ர்க‌ள் எ‌ன்‌னிட‌ம் த‌ங்க, வெ‌‌ள்‌ளி நாணய‌ங்களை கா‌‌ண்‌பி‌க்கு‌ம் போது‌ம் நா‌ன் வெ‌ள்‌ளி நாணய‌ங்களையே எடு‌த்து‌க் கொ‌ள்வே‌ன். அதனா‌ல்தா‌ன் எ‌ன்‌னிட‌ம் இ‌வ்வளவு வெ‌ள்‌ளி நாணய‌ங்க‌ள் இரு‌க்‌கி‌ன்றன. நா‌ன் எப்போது த‌ங்க நாணய‌த்தை தே‌ர்வு செ‌ய்‌கிறேனோ அ‌ன்றுட‌ன் ‌இ‌ந்த ஆ‌ட்ட‌ம் ‌நி‌ன்று போகு‌ம். அவ‌ர்களை ஆ‌ட்ட‌த்‌தி‌ல் வெ‌ற்‌றி பெற ‌வி‌ட்டு ‌வி‌ட்டு, நா‌ன் ‌‌‌‌நிஜ‌த்‌தி‌ல் ஜெ‌யி‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறே‌ன் எ‌ன்று கூ‌றினா‌ன். இ‌ந்த ப‌திலை‌க் கே‌ட்டது‌ம் ஆன‌ந்த‌ம் அடை‌ந்தா‌ர் த‌ந்தை.

நீதி :
புத்திசாலிகளுக்கு என்றுமே வெற்றிதான்.

இன்றைய செய்திகள்

03.01.22

★தென்தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை: மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என எச்சரிக்கை.

★தமிழகத்தில் டெல்டா, ஒமைக்ரான் வைரஸ் இணைந்து மூன்றாவது அலையை ஏற்படுத்திவருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

★நேரடி நியமன குளறுபடியால் 16 மாவட்டக் கல்வி அதிகாரிகள் பதவியிறக்கம்.

★நம்பகத்தன்மைமிக்க பணியாளர்களில் மருத்துவர்கள் முதலிடம்; நம்பகமான நாடுகளில் இந்தியாவுக்கு 2-ம் இடம்: சர்வதேச கருத்துக் கணிப்பில் தகவல்.

★கரோனா வைரஸில் தொடங்கி ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா, ஒமைக்ரான், டெல்மைக்ரான் என வைரஸ் உருமாற்றம் அடைந்து வருகிறது. உலக அளவில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாகப் பரவி அச்சுறுத்தி வரும் நிலையில் அடுத்த வைரஸ் இஸ்ரேலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஃப்ளோரினா என பெயரிட்டுள்ளனர்.


★12 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் ரசிகர்கள் இன்றி நடந்து வருகிறது. இதில் ஒரே நாளில் நடைபெற்ற 3 ஆட்டங்களும் ‘டை’ யில் முடிந்துள்ளது.

★ஐ.எஸ்.எல் கால்பந்து : சென்னை - ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதல்.


★இந்திய கிரிக்கெட் அணி 2022 ஆம் ஆண்டு  விளையாடவுள்ள கிரிக்கெட் தொடர்களின் முழு அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.


Today's Headlines

★ Heavy rain in the south today and tomorrow: Fishermen warned not to go to sea.

 ★ Minister of Public Welfare Ma Subramanian has said that Delta and Omicron virus is causing the third wave in Tamil Nadu.

 ★ 16 District Education Officers sacked due to a direct appointment scam.

 ★ The prevalence of delta virus in India is declining and omega is increasing: Federal Government Information.

 ★ Physicians rank first among reliable staff;  India ranks 2nd among trusted countries: Information in International Poll.

 ★ Starting with the corona virus, the virus transforms into alpha, beta, gamma, delta, omicron, telmicron.  The next virus to be detected in Israel is the omega virus, which is threatening to spread rapidly worldwide.  This is called Florina.


 ★ The 8th Pro Kabaddi League match involving 12 teams is going on in Bangalore without fans.  All the 3 matches played on the same day ended in a tie.

 ★ ISL Football: Chennai - Jamshedpur teams clash.


 ★ The BCCI has released the full schedule of the cricket series that the Indian cricket team will play in 2022.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்