![]() |
சிக்மண்ட் பிராய்ட் |
Mistakes are proof that you are trying.
தவறுகளை நீங்கள் முயற்சிக்கிறீர்கள் என்பதற்கான சான்று.
இரண்டொழுக்க பண்புகள் :
1.இயற்கை வளங்களான நீர், காற்று, நிலத்தை பாதுகாப்பேன்.
2.என்னால் முடிந்த அளவு அவற்றை மாசு படுத்தாமல் இருப்பேன்.
பொன்மொழி :
உங்கள் உடல்நலனை எப்படி பாதுகாக்கிறீர்களோ அதுபோல நேர்மையையும் கடைபிடியுங்கள் - ஜவஹர்லால் நேரு
பொது அறிவு :
01.வரலாற்று புகழ் பெற்ற சார்மினார் இந்தியாவில் எந்த மாநிலத்தில் உள்ளது?
02. காவிரி ஆறு எந்த இடத்தில் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது?
English words :
take back – retraction or withdraw/ திரும்ப பெறுதல் அல்லது திரும்ப எடுத்துக் கொள்ளுதல்
Grammar Tips:
அறிவியல் களஞ்சியம் :
இந்த பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு பொது மக்கள் நீரின் முக்கியம், அதை பாதுகாக்காவிட்டால் ஏற்படக்கூடிய மோசமான பின் விளைவுகள் குறித்து ஒரு விழிப்புணர்வு அடைய வேண்டும்
செப்டம்பர் 23
நீதிக்கதை
சுயநலம்
ஒரு ஊரில் ராமசாமி என்ற ஒரு செல்வந்தர் வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் சுயநலமானவர். அவர் ஊருக்குச் சென்று திரும்பும் வழியில் 30 தங்க நாணயங்கள் இருந்த பையை தொலைத்துவிட்டார். அந்த செல்வந்தர் தனது நண்பர் குருவிடம் நடந்ததை கூறி வருத்தப்பட்டார்.
சில நாட்கள் கழித்து குரு ஊரிலிருந்து திரும்பும்போது வழியில் ஒரு பையில் தங்க நாணயங்கள் இருப்பதை கண்டார். அந்த பை ராமசாமியினுடையதாக இருக்கலாம் எனக்கருதி, அதை குரு அவரிடம் கொடுத்தார்.
குருவிடமிருந்து தங்க நாணயங்களை பெற்றுக்கொண்ட ராமசாமி, இதை வைத்து ஒரு திட்டம் தீட்ட நினைத்தார். அவன் குருவிடம், நான் இந்த பையில் 40 தங்க நாணயங்களை வைத்திருந்தேன். இந்த பையில் இப்போது 30 தங்க நாணயங்களே உள்ளன, அதனால் மீதமிருக்கும் 10 நாணயங்களை திருப்பி தரவேண்டுமென குருவிடம் கூறினார்.
குருவோ மிகவும் நல்லவர். பிறரின் பொருட்களுக்கு ஆசைப்படாத அவரது குணத்தை பற்றி அனைவருக்கும் தெரியும்.
நண்பர்கள் இருவரும் ஊரில் உள்ள தலைவரிடம் சென்றனர். விவரத்தை கேட்ட ஊர் தலைவர், ராமசாமியிடம், நீ எவ்வளவு தங்க நாணயங்களை தொலைத்தாய்? என்று கேட்டார். அதற்கு அவர் 40 தங்க நாணயங்கள் என்றார். குருவை பார்த்து நீ எவ்வளவு தங்க நாணயங்களை கண்டுபிடித்தாய்?என்று கேட்டார். அதற்கு அவர் 30 தங்க நாணயங்கள் என்றார்.
ஊர்த்தலைவர் ராமசாமியை பார்த்து, நீ தொலைத் திருப்பதோ 40 தங்க நாணயங்கள். ஆனால் குரு கண்டறிந்திருப்பதோ வெறும் 30 தங்க நாணயங்கள். எனவே இது உன்னுடையதாக இருக்காது. இனிமேல் வேறுயாராவது 40 தங்க நாணயங்களை கொண்டுவந்தால் உனக்கு சொல்லி அனுப்புகிறேன். இப்போது நீ கிளம்பலாம் என்றார்.
தலைவர் குருவைப்பார்த்து நீ கண்டுபிடித்திருப்பது ராமசாமியின் தங்க நாணயங்கள் கிடையாது, எனவே இதை நீயே வைத்துகொள் என்றார்.
தான் கூறிய பொய்யால் தனக்கு நேர்ந்த சங்கடத்தை எண்ணி வருத்தபட்டார். தனது தவறை உணர்ந்த அவர், இனி சுயமில்லாத நேர்மையான மனிதராக வாழவேண்டும் என முடிவுசெய்தார்.
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment