Thursday, September 25, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.09.2025

திரு. மன்மோகன் சிங்






திருக்குறள்: 

அதிகாரம்:கள்ளாமை

திருக்குறள்:286

அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.

விளக்கம்:

பிறர் பொருளைக் கவர்வதில் மிகுந்த விருப்பமுடையவர், அளவறிந்து வாழும் நெறியில் நின்று வாழமாட்டார்.

பழமொழி :

Success tastes sweeter after struggle. 

போராட்டத்திற்குப் பிறகு பெறும் வெற்றி மிகவும் இனிப்பாக இருக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.இயற்கை வளங்களான நீர், காற்று, நிலத்தை பாதுகாப்பேன்.

2.என்னால் முடிந்த அளவு அவற்றை மாசு படுத்தாமல் இருப்பேன்.

பொன்மொழி :

என்றும் நினைவில் கொள்.மனிதனாகப் பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது - கார்ல் மார்க்ஸ்

பொது அறிவு : 

1. உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படும் நாள் எது ?

செப்டம்பர் 27-September 27

2. 'தென்னாட்டு ஸ்பா' என்று அழைக்கப்படும் சுற்றுலாத் தலம் எது?

குற்றாலம் (தமிழ்நாடு) -Coutrallam (Tamilnadu)

English words :

Take up - start a hobby or something: ஏதோ ஒரு காரியம் அல்லது ஒரு பொழுது போக்கு அம்சம் தொடங்குதல்

Grammar Tips: 

 Usage of "Some, Any, much, many, few and little"
Some used in Positive sentences, countable and uncountable 
Ex: I have some friends 
She bought some milk
Any used in negative sentences and questions 
Ex: I don't need any help.
Do you have any idea 
to be continued

அறிவியல் களஞ்சியம் :

 உலகில் முதன்முதலாக (1969ல்) நிலவுக்கு மனிதர்களை அனுப்பி அமெரிக்க விண்வெளி மையம் (நாசா) சாதனை படைத்தது. நிலவில் காலடி வைத்த முதல் வீரரானார் நீல் ஆம்ஸ்ட்ராங் . இதற்குப்பின் இதுவரை எந்தவொரு நாடும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பியதில்லை. இந்நிலையில் 50 ஆண்டுக்குப்பின் மீண்டும் மனிதர்களை அனுப்பும் 'ஆர்டிமிஸ்-II' திட்டம், 2026 பிப்.,ல் செயல்படுத்தப்படும் என நாசா அறிவித்துள்ளது. எஸ்.எல்.எஸ்., ராக்கெட்டில் ஓரியன் விண்கலத்தில், ஒரு பெண் உட்பட நான்கு விண்வெளி வீரர்கள் நிலவுக்கு செல்வர். நிலவில் தரையிறங்காமல் சுற்றி வருவர். பயண காலம் 10 நாட்கள்.

செப்டம்பர் 26

மன்மோகன் சிங் அவர்களின் பிறந்தநாள்

மன்மோகன் சிங் (Manmohan Singh, பஞ்சாபி: ਮਨਮੋਹਨ ਸਿੰਘ, பிறப்பு: செப்டம்பர் 26, 1932) இந்தியாவின் 14 ஆவது, பிரதமர் ஆவார். மன்மோகன் சிங், மேற்கு பஞ்சாபிலுள்ள கா என்னும் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) ஊரில் பிறந்தார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். மே 22, 2004 இல் இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார்

1991 முதல் 1996 வரை பி. வி. நரசிம்ம ராவ் அமைச்சரவையில் மன்மோகன் சிங் நிதி அமைச்சராக பணியாற்றினார். கல்வியாலும், பயிற்சியாலும் தேர்ந்த பொருளாதாரவியல் வல்லுநரான அவர், இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையின் துவக்கத்தில் பெரும்பங்கு வகித்தார். மன்மோகன் சிங் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் மத்திய ரிசர்வ் வங்கியின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். அவர் நிதியமைச்சராகும் முன் பின்தங்கிய நிலையில் இருந்த இந்திய பொருளாதாரம், இவரின் கொள்கைகளால் முன்னேறத் துவங்கியது.

நீதிக்கதை

 வரும்முன் காப்போம்

ஒரு ஊரின் எல்லையில் இருந்த காட்டில் பெரிய குளம் இருந்தது. அதனை ஒட்டி சிறிய நீரோடை ஓடிக் கொண்டிருக்கும். அந்த குளத்தில் நிறைய மீன்கள், நண்டுகள், மற்றும் அனைத்து நீர்வாழ் இனங்கள் வாழ்ந்து வந்தன. அவற்றில் ராமு, சோமு, தாமு என்ற மூன்று மீன்கள் நல்ல நண்பர்களாக இருந்தார்கள். அந்த மூவரும் எங்கே சென்றாலும் ஒன்றாகவே போவார்கள். ஒரு பயமும் இல்லாமல் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள்.

அவர்கள் மகிழ்ச்சியை கெடுக்கும் விதமாக ஒரு நாள் மாலையில் ஒரு இரண்டு மனிதர்கள் அங்கே வந்தார்கள். வேட்டையாடிய களைப்பு முகத்தில் தெரிந்தது. குளத்து நீரை அருந்தி விட்டு, குளத்தை நன்றாக ஆராய்ந்தார்கள். பின்னர் அவர்களில் ஒருவர் இந்த குளத்தில் நிறைய மீன்கள் இருக்கிறதே, அதுவும் நன்றாக வளர்ந்து கொழு கொழு என்று இருக்கிறதே, நாம் வீணாக காடு மேடு என்று அலைந்து வேட்டையாட வேண்டாம். 

இவர்கள் பேசுவதை கேட்ட ராமு என்ற மீன் பெருங்கவலை அடைந்தது. உடனே தன் நண்பர்களான சோமு, தாமுவிடம் கூறியது. காட்டின் நடுவில் இருந்ததால் இதுவரை பெரிய ஆபத்து வந்தது இல்லை. குளத்தில் நடுவில் போய் இருந்தால் பறவைகள் கூட தங்களை ஒன்றும் செய்தது இல்லை. இன்றோ இந்த மனிதர்களால் பெரிய ஆபத்து வந்து விட்டதே என்ன செய்யலாம் என்று யோசித்தன.

ராமு எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். ஆனால் சோமு, தாமு இருவரும் கேட்கவில்லை. ராமு அவர்களிடம் மன்னிப்பு கேட்டு விட்டு தான் இன்று இரவே அந்த குளத்தை விட்டு போவதாக சொல்லிவிட்டு இரவே தப்பி வேற குளத்திற்கு போய் விட்டது. சிறிது நேரத்தில் வலை விரிப்பதாக சொன்ன இருவரும் பெரிய வலையை எடுத்து வந்து எங்கே வலை வீசுவது என்று பேசினார்கள். அவ்வளவு தான் அதைக் கேட்டு சோமு அய்யோ கடவுளே! ராமு அப்பொழுதே சொன்னதே, இரவே தப்பியிருக்கலாமே என்று புலம்பியது.

ஆனால் தாமு அந்த சூழ்நிலையிலும் கொஞ்சமும் பயப்படவில்லை, ஏன் பயப்படுகிறாய், குளத்தில் எவ்வளவோ இடங்கள் இருக்கின்றன, நாம் மறைந்துக் கொள்ளலாம் என்றது. சிறிது நேரத்தில் மீனவர்கள் வலையை வெளியே எடுத்து மாட்டிய அனைத்து மீன்களையும் தரையில் போட்டு கொன்றார்கள். அதில் தாமுவும் ஒரு மீன். வரும்முன் காப்போம் என்ற கொள்கை கொண்ட ராமு ஒரு ஆபத்தும் இல்லாமல் தப்பி மகிழ்ச்சியாக வாழ்ந்தது. வந்த போது காப்போம் என்ற கொள்கை உடைய சோமு, உடல் எங்கும் காயப்பட்டு, மற்ற மீன்களுக்கு பயந்து பயந்து வாழ்ந்தது. வந்தப்பின்பு பார்ப்போம் என்ற கொள்கை உடைய தாமு மீனோ கொல்லப்பட்டு விட்டது.

இன்றைய செய்திகள்

26.09.2025

⭐சென்னையில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி தொடங்கியது.
சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்கள், பயிற்றுனர்கள், கல்வி அமைப்புகளின் நிர்வாகிகள் ஆகியோர் பாராட்டிச் சிறப்பிக்கப்பட உள்ளனர்.

⭐ கலந்தாய்வு மூலம் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் சேரும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணத்தை வசூலித்தால் அந்த கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

⭐முதல்முறையாக ரெயில் மூலம் ஏவப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி

⭐சென்னையில் வேளாண் வணிகத் திருவிழா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀இந்தியா 'ஏ'- ஆஸ்திரேலியா 'ஏ' அணிகள் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது.
ஒருநாள் தொடரில் கேப்டனாக ஷ்ரேயஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Today's Headlines

⭐The Tamil Nadu Excellence in Education program has begun in Chennai. Teachers, instructors, and administrators of educational institutions who have done excellent work will be felicitated.

⭐The Directorate of Medical Education and Research has issued a warning to private medical colleges that the accreditation of colleges will be cancelled if they charge additional fees from students joining MBBS and BDS through counselling. 

⭐First missile test through train was successful 

⭐Chief Minister M.K. Stalin will  inaugurate Agribusiness festival in Chennai.

 SPORTS NEWS 

🏀The first Test match between India 'A' and Australia 'A' ended in a draw. Shreyas has been appointed as the captain for the ODI series.

Covai women ICT_போதிமரம்

Wednesday, September 24, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.09.2025

சதீஷ் தவான் 

   






திருக்குறள்: 

குறள் 515: 

அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான் 
சிறந்தானென் றேவற்பாற் றன்று. 

விளக்க உரை: 

(செய்யும் வழிகளை) அறிந்து இடையூறுகளைத்தாங்கிச் செய்து முடிக்க வல்லவனை அல்லாமல், மற்றவனைச் சிறந்தவன் என்றுக் கருதி ஒருச் செயலைச் செய்யுமாறு ஏவக்கூடாது.

பழமொழி :

A single kind word can change someone's entire day. 

ஒரு இனிய சொல் ஒருவரின் முழு நாளையே மாற்றிவிடும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.இயற்கை வளங்களான நீர், காற்று, நிலத்தை பாதுகாப்பேன்.

2.என்னால் முடிந்த அளவு அவற்றை மாசு படுத்தாமல் இருப்பேன்.

பொன்மொழி :

சிறந்த எண்ணம் கீழான எண்ணத்தை அடக்கும்போது ஒரு மனிதன் தனக்குத்தானே தலைவனாகிறான் - சாக்ரடீஸ்

பொது அறிவு : 

01.தமிழகத்தின் ஏலக்காய் நகரம் என்று அழைக்கப்படும் நகரம் எது?

போடிநாயக்கனூர்- தேனி மாவட்டம்
Bodinayakanur -Theni District

02.FIDE உலக சதுரங்கப் போட்டி 2025 எந்த நாட்டில் நடைபெற உள்ளது?

கோவா- இந்தியா
Goa- India

English words :

Take on –accept a task. ஒரு பொறுப்பை ஏற்றுக் கொள்ளுதல்

Grammar Tips: 

 "Into" vs "in to"
“Into” is a preposition that means "to the inside" of something.
As per rules prepositions describe the relationship between a noun or pronoun and another word.
Ex: We walk into a restaurant 

We use “in to” when either the word “in” or the word “to” is part of a verbal phrase.
Ex: “Let's check in to the hotel before we go out.”
“Jessie stopped in to pick up lunch.”

அறிவியல் களஞ்சியம் :

 கடலுக்கு அடியில் தனிமங்கள்

மெக்சிகோவின் மேற்கு -- அமெரிக்காவின் ஹவாய் இடையே உள்ள கடல் பகுதியில் 13,123 அடி ஆழத்தில் நிக்கல், மாங்கனீசு, காப்பர், ஜிங்க், கோபால்ட் உள்ளிட்ட தனிமங்கள் உள்ளன. இவை 'பாலிமெட்டாலிக் நுாடுல்ஸ்' என அழைக்கப்படும் பாறைகளில் கலந்துள்ளன என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அதே போல சூரிய ஒளி இல்லாத 13 ஆயிரம் - 19 ஆயிரம் அடி ஆழ பகுதிகளில் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய, இந்த தனிமங்களின் மூலக்கூறுகள் உதவுகின்றன. இப்பகுதி 45 லட்சம் சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது என தெரிவித்துள்ளனர்.

செப்டம்பர் 25

சதீஷ் தவான் அர்களின் பிறந்த நாள்

சதீஷ் தவான் (பஞ்சாபி: ਸਤੀਸ਼ ਧਵਨ, இந்தி: सतीश धवन) (25 செப்டம்பர் 1920–3 சனவரி 2002) ஓர் இந்திய ராக்கெட் ஆராய்ச்சியாளர் ஆவார். சிறீநகரில் பிறந்த இவர் இந்தியாவிலும் ஐக்கிய அமெரிக்க நாடுகளிலும் கல்வி பயின்றுள்ளார். 1972-இல் இவர் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவராகவும் பதவி வகித்திருக்கிறார். இவரது நினைவாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இசுரோ ஆய்வு மையத்துக்கு இவருடைய பெயர் இடப்பட்டுள்ளது.

நீதிக்கதை

 ஓர் ஆண் மான் காட்டில் அலைந்து திரிந்து கொண்டிருந்தபோது அதற்கு தாகம் ஏற்பட்டது. தண்ணீரை தேடி ஒரு குளத்தின் அருகே வந்தது. தாகம் தண்ணிரை வயிறு முட்ட நீரை பருகியது.

அப்போது தன்னுடைய உருவத்தை தண்ணீரில் கண்டது. தலைக்கு மேல் கிளைகள் போல் விரிந்து இருந்த தன் கொம்புகளின் பிம்பத்தை நீரில் பார்த்தது. ‘அவை எவ்வளவு அழகாக இருக்கின்றன! உலகிலேயே மிக அழகான மிருகமாக நான் இருப்பதற்கு இந்த கொம்புகளே காரணம்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டது.

சொல்லியவாறு கீழே குனிந்த மான் ஒல்லியான தன்னுடைய கால்களை பார்த்தது; மிகவும் ஏமாற்றமடைந்தது. ‘இல்லை, இந்த கால்கள் என்னை அழகில்லாதவனாக்குகின்றன. உலகிலேயே அழகான மிருகமாக நான் இருக்க முடியாது,’ என்று சொல்லி வருந்தியது.

மரங்களுக்குப் பின்னால் நின்றவாறு பசியோடு இருந்த புலி ஒன்று சத்தம் இல்லாமல் மானை பார்த்துக் கொண்டிருந்தது. மானை நோக்கி மிக மெதுவாக நகர்ந்து வந்தது. உயரமாக வளர்ந்திருந்த புற்கள் சரசரத்தன. தன் எண்ணங்களில் மூழ்கியிருந்த மான் புலி நெருங்குவதை கவனிக்கவில்லை. 

புலி, மானை பிடிக்க பாய்ந்தது. திடுக்கிட்ட மான் மிக வேகமாக ஓட துவங்கியது. புலியிடமிருந்து தப்பித்து நான்கு கால் பாய்ச்சலில் அதிவேகமாக ஓடியது. புலி மிகவும் பின்னால் துரத்திக் கொண்டு வந்தது.

இனிமேல் துரத்தினாலும் மானை பிடிக்க முடியாது என்று புலி முடிவு செய்த நேரத்தில் மானின் கொம்புகள் ஒரு மரக்கிளையில் சிக்கிக்கொண்டன. மரக்கிளையில் இருந்து விடுபட மான் மிகவும் முயற்சி செய்தது. ஆனால், மானால் கொம்புகளை விடுவிக்க முடியவில்லை.

“என் கால்கள் அழகாக இல்லை என்று நான் அவமானமடைந்தேன். நான் தப்பித்துக் கொள்ள அவை தான் எனக்கு உதவி புரிந்தன. என் கொம்புகளை நினைத்து நான் பெருமிதம் அடைந்தேன். ஆனால், என்னுடைய இறப்புக்கு அவையே காரணமாக உள்ளன” என்று மான் வருத்தத்துடன் தனக்குள் சொல்லிக் கொண்டது.

இதற்குள் மானை நெருங்கிய புலி அதன் மீது பாய்ந்து, அதை கொன்று தின்றது.

நீதி: ஆபத்துக்கு உதவாத அழகை விட நம்மை காக்கும் நமது உறுப்புகள், நல்ல நண்பர்கள் நமக்கு தேவை.

இன்றைய செய்திகள்

25.09.2025

⭐தமிழகத்தில் ₹.1,500 கோடியில்,133 புதிய துணை மின்நிலையங்கள் & ஏற்கெனவே உள்ள துணை மின்நிலையங்களில், 52 பவர் டிரான்ஸ் ஃபார்மர்களைப் பொருத்த தமிழக மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளது.

⭐நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயில் 20 பெட்டிகளுடன்   இயக்கம்: 1,440 பேர் பயணிக்கலாம்.

⭐தமிழகத்தில் வருகிற 30-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஐசிசி தரவரிசையில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவின் உச்சத்தை தொட்ட அபிஷேக் சர்மா..!

Today's Headlines

⭐The Tamil Nadu Electricity Board is planning to install 133 new substations & 52 power transformers in existing substations at a cost of ₹1,500 crore in Tamil Nadu.

⭐ Nellai - Chennai Vande Bharat train to operate with 20 coaches: 1,440 passengers can travel. 

⭐ Meteorological Centre has announced  heavy rain likely in Tamil Nadu till 30th  September

 SPORTS NEWS 

🏀Cricket - Abhishek Sharma surpasses Virat Kohli,  Suryakumar Yadav in ICC rankings.

Covai women ICT_போதிமரம்

Tuesday, September 23, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.09.2025

மங்கள்யான்

  






திருக்குறள்: 

குறள் 512: 

வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை 
ஆராய்வான் செய்க வினை. 

விளக்க உரை: 

பொருள் வரும் வழிகளைப் பெருக்கச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளைஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்ய வேண்டும்.

பழமொழி :

The more you give, the more you gain. 

நீங்கள் அதிகம் கொடுத்தால், அதிகம் பெறுவீர்கள்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.இயற்கை வளங்களான நீர், காற்று, நிலத்தை பாதுகாப்பேன்.

2.என்னால் முடிந்த அளவு அவற்றை மாசு படுத்தாமல் இருப்பேன்.

பொன்மொழி :

தன்னை உயர்ந்தவனாகவும் மற்றொரு மனிதனை தாழ்ந்தவனாகவும் கருதுபவன் மனநோயாளி - அண்ணல் அம்பேத்கர்

பொது அறிவு : 

01 பழங்காலத்தில் "சேரன் தீவு" என்று அழைக்கப்பட்ட நாடு எது?

இலங்கை-Sri Lanka

02. உலக தாய்மொழி தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

பிப்ரவரி 21- February 21

English words :

Take down –remove something, write down the spoken words, ஒரு பொருளை அகற்றுதல், சொல்லுவதை எழுதுதல்

Grammar Tips: 

Prepositions

In - should come before 

* Times of the day - e.g : in Morning
* Months - e.g : in January
* Years - e.g : in 2004
* Seasons - e.g : In Summer

அறிவியல் களஞ்சியம் :

 பூமியை விட்டு விலகும் நிலவு


ஆண்டுக்கு 3.8 செ.மீ., என்ற அளவில் நிலவு, பூமியை விட்டு விலகி செல்கிறது. இதனால் பூமி சுற்றும் வேகமும் குறைகிறது. இதனால் ஒரு நாளுக்கான நேரம் 25 மணியாக அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். ஆண்டுதோறும் நிலவு நகர்வதால் 7 கோடி ஆண்டுக்கு முன் ஒரு நாளுக்கு 23.5 மணி நேரமாக இருந்தது. ஆனால் இதுகுறித்து நாம் கவலைப்பட தேவையில்லை. ஆண்டுக்கு 3.8 செ.மீ., என்பது பூமி - நிலவு இடையிலான 3.84 லட்சம் கி.மீ., துாரத்தில் வெறும் 0.00000001 சதவீதம் தான். எனவே இது நடக்க லட்சக்கணக்கான ஆண்டுகளாகும் என தெரிவித்துள்ளனர்.

செப்டம்பர் 24

2014 – மங்கள்யான் விண்கலம் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தினால் வெற்றிகரமாக செவ்வாய் சுற்றுவட்டத்தில் செலுத்தப்பட்டது.

நீதிக்கதை

 புள்ளிமான்கள்


ஒரு காட்டில் இரண்டு புள்ளி மான்கள் ஒரே மாதிரியாக இருந்தன. இணைப்பிரியாத நண்பர்களாக இருந்தன. எங்கு சென்றாலும் சேர்ந்தேதான் செல்லும். ஒரு நாள் மழை பெய்தது. மான்களால் விளையாட முடியவில்லை. மழை நின்ற பிறகு வெளியே சென்று இன்னும் மழை வருமா என்று இரண்டு மான்களும் மேலே பார்த்தன. அப்போது மேகத்திற்குள்ளிருந்து வெளியே வந்தது சூரியன். மான்கள் இரண்டும் சூரியனிடம், இன்னும் மழை வருமா? என்று கேட்டன. அதற்கு சூரியன், நான் வந்து விட்டேனே, இனி எப்படி மழை வரும்? என்று சொல்லி மான்களைப் பார்த்து சிரித்தது.

எங்களைப் பார்த்து ஏன் சிரிக்கிறாய் என்றது ஒரு மான். நீங்கள் இருவரும் ஒரே மாதிரியாக இருக்கிறீர்கள்! அது தான் எனக்குச் சிரிப்பு வந்து விட்டது! தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நீங்கள் யார்? நாங்கள் தான் அழகான இரண்டு புள்ளிமான்கள். நாங்கள் இருவரும் நண்பர்கள் என்றன புள்ளிமான்கள்.

சரி, உங்களில் யார் திறமையானவர்கள்? என்று கேட்டது சூரியன். நாங்கள் இருவருமே திறமையானவர்கள் தான்! என்றது புள்ளிமான்கள். சூரியன் சற்று யோசித்துவிட்டு சரி, அப்படியென்றால் நான் ஒரு போட்டி வைக்கிறேன். அதோ அங்கு ஒரு மரம் இருக்கிறது பாருங்கள். உங்களில் அந்த மரத்தை யார் முதலில் தொடுகிறார்களோ அவர்கள் தான் திறமையானவர்கள். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நான் ஒரு பரிசு தருவேன் என்றது.

சூரியன் பரிசு தருவதாகச் சொன்னதும் இரண்டு மான்களும் ஓடத்தொடங்கின. ஆனால் மரத்தைத் தொடாமல் நின்று கொண்டிருந்தன. சூரியன் ஏன் மரத்தைத் தொடாமல் அப்படியே நின்று கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டது. ஒரு புள்ளி மான் சொன்னது, நான் என் நண்பனுக்கு விட்டுக்கொடுத்து விட்டேன் என்றது. இன்னொரு புள்ளிமானும், நானும் என் நண்பனுக்கு விட்டுக்கொடுத்து விட்டேன் என்று சொன்னது.

இதைக் கேட்டு பெரிதும் மகிழ்ந்த சூரியன் சொன்னது, அழகான இரண்டு புள்ளி மான்களே! உங்கள் ஒற்றுமையைப் பார்த்து நான் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் இருவரும் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். உங்களுக்கு நான் ஒரு வானவில்லை பரிசாகத் தருகிறேன். நீங்கள் எப்போது விரும்புகிறீர்களோ அப்போதெல்லாம் வானவில்லே வருக என்று சொன்னால் போதும். வானத்தில் அழகான வானவில் தோன்றும். நீங்கள் அதைப்பார்த்து ரசிக்கலாம் என்று சொல்லிவிட்டு சூரியன் விடை பெற்றது. மான்கள் இரண்டும் மகிழ்ந்தன. அவற்றிற்கு விருப்பமான நேரத்தில் வானவில்லை வரச்செய்து பார்த்துப் பார்த்து ரசிக்கும்.

நீதி :
நண்பர்களே விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் வாழ்க்கை வளமாக இருக்கும்.

இன்றைய செய்திகள்

24.09.2025

⭐பள்ளி மாணவர்களுக்கு 2-ம் பருவம் பாடப்புத்தகம் தயார்: பள்ளிக்கல்வி இயக்குனர்.

⭐தமிழகத்துக்கு உரிய நிதியை விடுவித்து மக்கள் நியாயமாக பயன் அடைய விடுங்கள்-மு.க.ஸ்டாலின்.

⭐ அமெரிக்காவின் வேலை வாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை. எச்-1பி விசாவை அதிகளவில் பெறும் இந்தியர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀 இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் இடையிலான கடைசி போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது.

Today's Headlines

⭐Director of our  School Education said the second semester textbook will ready for school students 

⭐M.K. Stalin requested  the central government to release the funds which is due for Tamil Nadu and let the people benefit fairly

⭐ Americans get priority in US job opportunities. This comes as a shock to Indians who are the largest recipients of H-1B visas. 

 SPORTS NEWS
🏀 In the last match between India and Australia women's teams, the Australian team won the 3-match ODI cricket series 2-1 and won the trophy.

Covai women ICT_போதிமரம்

Monday, September 22, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.09.2025

சிக்மண்ட் பிராய்ட்







திருக்குறள்: 

குறள் 511: 

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த 
தன்மையான் ஆளப் படும். 

விளக்க உரை: 

நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான்.

பழமொழி :

Mistakes are proof that you are trying. 

தவறுகளை நீங்கள் முயற்சிக்கிறீர்கள் என்பதற்கான சான்று.

இரண்டொழுக்க பண்புகள் :

1.இயற்கை வளங்களான நீர், காற்று, நிலத்தை பாதுகாப்பேன்.

2.என்னால் முடிந்த அளவு அவற்றை மாசு படுத்தாமல் இருப்பேன்.

பொன்மொழி :

உங்கள் உடல்நலனை எப்படி பாதுகாக்கிறீர்களோ அதுபோல நேர்மையையும் கடைபிடியுங்கள் - ஜவஹர்லால் நேரு

பொது அறிவு : 

01.வரலாற்று புகழ் பெற்ற சார்மினார் இந்தியாவில் எந்த மாநிலத்தில் உள்ளது?

தெலுங்கானா-Telangana

02. காவிரி ஆறு எந்த இடத்தில் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது?

பூம்புகார் மயிலாடுதுறை மாவட்டம்
Poompuhar - Mayiladuthurai district

English words :

take back – retraction or withdraw/ திரும்ப பெறுதல் அல்லது திரும்ப எடுத்துக் கொள்ளுதல்

Grammar Tips: 

 Plural rule
If the noun ends with s,x,z,ch,sh,ss,zz add es to the noun
Bus– buses
Box–boxes
Match –matches
Bush–bushes
Mess- messes
If the noun ends with f or fe add ves to the noun 
Leaf –leaves
Knife –knives

அறிவியல் களஞ்சியம் :

 இந்த பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு பொது மக்கள் நீரின் முக்கியம், அதை பாதுகாக்காவிட்டால் ஏற்படக்கூடிய மோசமான பின் விளைவுகள் குறித்து ஒரு விழிப்புணர்வு அடைய வேண்டும்

செப்டம்பர் 23

சிக்மண்ட் பிராய்ட் அவர்களின் நினைவுநாள்

சிக்மண்ட் பிராய்ட் (Sigmund Freudசிக்மண்ட் ஃபுரொய்ட், மே 6, 1856 – செப்டெம்பர் 23, 1939) ஒரு ஆஸ்திரிய உளநோய் மருத்துவர். இவர் உளவியலின் உளப்பகுப்பாய்வுச் சிந்தனை முறையை நிறுவியவர். உள்மனம் (unconscious mind) பற்றிய இவரது கோட்பாடுகள், அடக்குதலுக்கு எதிரான பாதுகாப்புப் பொறிமுறை, உளப்பிணிகளை, பிணியாளருடன், உளப்பகுப்பாய்வாளர் பேசிக் குணப்படுத்துவதற்காக உளப்பகுப்பாய்வுச் சிகிச்சைச் செயல்முறைகளை உருவாக்கியதன் மூலம் பிராய்ட் பெரும் பெயர் பெற்றார்.

நீதிக்கதை

சுயநலம்


ஒரு ஊரில் ராமசாமி என்ற ஒரு செல்வந்தர் வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் சுயநலமானவர். அவர் ஊருக்குச் சென்று திரும்பும் வழியில் 30 தங்க நாணயங்கள் இருந்த பையை தொலைத்துவிட்டார். அந்த செல்வந்தர் தனது நண்பர் குருவிடம் நடந்ததை கூறி வருத்தப்பட்டார். 


சில நாட்கள் கழித்து குரு ஊரிலிருந்து திரும்பும்போது வழியில் ஒரு பையில் தங்க நாணயங்கள் இருப்பதை கண்டார். அந்த பை ராமசாமியினுடையதாக இருக்கலாம் எனக்கருதி, அதை குரு அவரிடம் கொடுத்தார். 


குருவிடமிருந்து தங்க நாணயங்களை பெற்றுக்கொண்ட ராமசாமி, இதை வைத்து ஒரு திட்டம் தீட்ட நினைத்தார். அவன் குருவிடம், நான் இந்த பையில் 40 தங்க நாணயங்களை வைத்திருந்தேன். இந்த பையில் இப்போது 30 தங்க நாணயங்களே உள்ளன, அதனால் மீதமிருக்கும் 10 நாணயங்களை திருப்பி தரவேண்டுமென குருவிடம் கூறினார். 


குருவோ மிகவும் நல்லவர். பிறரின் பொருட்களுக்கு ஆசைப்படாத அவரது குணத்தை பற்றி அனைவருக்கும் தெரியும். 


நண்பர்கள் இருவரும் ஊரில் உள்ள தலைவரிடம் சென்றனர். விவரத்தை கேட்ட ஊர் தலைவர், ராமசாமியிடம், நீ எவ்வளவு தங்க நாணயங்களை தொலைத்தாய்? என்று கேட்டார். அதற்கு அவர் 40 தங்க நாணயங்கள் என்றார். குருவை பார்த்து நீ எவ்வளவு தங்க நாணயங்களை கண்டுபிடித்தாய்?என்று கேட்டார். அதற்கு அவர் 30 தங்க நாணயங்கள் என்றார். 


ஊர்த்தலைவர் ராமசாமியை பார்த்து, நீ தொலைத் திருப்பதோ 40 தங்க நாணயங்கள். ஆனால் குரு கண்டறிந்திருப்பதோ வெறும் 30 தங்க நாணயங்கள். எனவே இது உன்னுடையதாக இருக்காது. இனிமேல் வேறுயாராவது 40 தங்க நாணயங்களை கொண்டுவந்தால் உனக்கு சொல்லி அனுப்புகிறேன். இப்போது நீ கிளம்பலாம் என்றார். 


தலைவர் குருவைப்பார்த்து நீ கண்டுபிடித்திருப்பது ராமசாமியின் தங்க நாணயங்கள் கிடையாது, எனவே இதை நீயே வைத்துகொள் என்றார். 


தான் கூறிய பொய்யால் தனக்கு நேர்ந்த சங்கடத்தை எண்ணி வருத்தபட்டார். தனது தவறை உணர்ந்த அவர், இனி சுயமில்லாத நேர்மையான மனிதராக வாழவேண்டும் என முடிவுசெய்தார். 

இன்றைய செய்திகள்

23.09.2025

⭐விரைவில் 2,417 செவிலியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

⭐GST 2.0: ஆவின் பால் பொருட்களின் விலை குறைக்கபடுகிறது.

⭐கடைக்காரர்கள், வர்த்தகர்கள் இந்திய தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்ய வேண்டும்: பிரதமர் மோடி

⭐கைபர் பக்துன்க்வாவில் உள்ள கிராமத்தின் மீது பாகிஸ்தான் சரமாரி குண்டு வீச்சு: 30 பேர் உயிரிழப்பு

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஓய்வு முடிவை திரும்ப பெற்ற தென் ஆப்பிரிக்கா அணியின் அதிரடி வீரர் டி காக்

🏀2036ல் ஒலிம்பிக் போட்டி இந்தியா நடத்துகிறது: மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்

Today's Headlines

⭐Chief Minister M.K. Stalin has announced  2,417 nursing vacancies to be filled soon.

⭐GST 2.0 Prices of Aavin milk products are being reduced.

 ⭐PM Modi said shopkeepers, traders should sell made in India products

⭐Pakistan shelling of a village in Khyber Pakhtunkhwa: 30 people were killed.

 SPORTS NEWS 

🏀South Africa's De Kock calls off retirement 

🏀India to host 2036 Olympics: Union Minister Mansukh Mandaviya

Covai women ICT_போதிமரம்