![]() |
பராக் உசைன் ஒபாமா |
The roots of education are bitter,but the fruit is sweet.
கல்வியின் வேர்கள் கசப்பானவை, ஆனால் அதன் பழம் இனிப்பாகும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1.எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை.
2.எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.
பொன்மொழி :
இந்த உலகில் நம் கண்ணுக்குத் தெரியும் மனிதர்களை நேசிக்கத் தெரியாவிட்டால், கண்ணுக்குத் தெரியாத கடவுளின் மீது அன்பு செலுத்தி எந்த பயனும் இல்லை - அன்னை தெரசா
பொது அறிவு :
01.தும்பா ராக்கெட் ஏவுதளம் எங்கு உள்ளது?
02.இந்தியாவிற்கு வந்த முதல் அமெரிக்க ஜனாதிபதி யார்?
English words :
sector - a part of an area or country or of a large group of people.ஒரு நாட்டின் அல்லது ஒரு பெருங் குழுவின் கிளைப்பகுதி.
Grammar Tips :
Difference between time and period
Time can be general
Ex: "The meeting is at 2 PM."(No point of ending)
The period is more specific and defined.
Ex: "The rainy period lasted for a month."(Both beginning and end)
அறிவியல் களஞ்சியம் :
அன்டிரியஸ் வெசலியஸ் (Andreas Vesalius) (1514-64) என்பவர் தாம் தற்கால உடலுறுப்பியல் (Modern anatomy) பற்றி அடிக்கல் இட்டு ஆய்வு தொடங்கியவர். மருத்துவக் குடும்பத்தில் பிரஸ்ஸலில் (Brussels) பிறந்தவரானார். ஐரோப்பாவிலுள்ள மிகப் பெரிய மருத்துவ மையங்களுள் ஒன்றான இத்தாலியில் (Italy) உள்ள பதுஆ (Padua) வில் தன் 23 ஆம் வயதில் உடலுறுப்பியல் பேராசிரியரானார்.
ஆகஸ்ட் 04
நீதிக்கதை
வல்லவர் யார்?
ஒரு நாள் எறும்பு தரையில் மெல்ல ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பூரான் அதன் அருகே வந்தது. நண்பா! நான் வருவதைக் கூடக் கவனிக்காமல் எங்கே சென்று கொண்டிருக்கிறாய்? என்று கேட்டது. எறும்பு பூரான் நண்பா! உன்னைக் கவனித்துக் கொண்டிருந்தால் என் கடமையை நான் சரிவரச் செய்ய முடியாதே என்று சொன்னது. அப்படியென்ன முக்கியமான கடமை? என்று பூரான் கேட்டது.
மழைக்காலத்திற்குத் தேவையான உணவை வெயில் காலத்திலேயே தேடிச் சேர்த்து வைப்பது என் கடமை என்றது எறும்பு. உன்னிடம் பேசிக்கொண்டிருந்தால் என் கடமையைச் செய்ய முடியாது என்று கூறி எறும்பு சென்றுவிட்டது. பூரானுக்கு எறும்பின் மேல் வருத்தம். அதனால் எறும்பை மட்டம் தட்டியே தீர வேண்டும் என்று நினைத்துக்கொண்டது.
அடுத்த நாள் எறும்பு வரும் வழியில் நின்று எறும்பே, கடமையை சரிவரச் செய்வதால் மட்டும் நீ வல்லவனாக முடியாது!. உன்னால் என்னைப்போல வேகமாக ஊர்ந்து வர முடியுமா? அப்படி வந்தால் நீ என்னை விட வல்லவன் என்று ஒத்துக்கொள்கிறேன் என்றது. அதற்கு எறும்பு மிக அமைதியுடன் பூரானே, உன் அளவுக்கு வேகமாக என்னால் ஊர முடியாது. அந்த தைரியத்தில் நீ பேசுகிறாய். ஆனால், நான் செய்யும் சில காரியங்களை உன்னாலும் செய்ய முடியாது. அதனால் யார் வலியவன் என்ற பரிட்சையெல்லாம் வேண்டாம் என்று திரும்பவும் கூறியது. பூரானோ அப்படி என்ன சாகசத்தை நீ செய்வாய் என்று கேட்டது.
எறும்பு பூரானை ஒரு தண்ணீர் தொட்டியின் மேல் அமர்ந்து வேடிக்கை பார்க்கச் சொல்லிவிட்டு, கரையின் அருகில் இருந்த ஒரு துரும்பில் ஏறி தண்ணிரில் விழுந்து அந்த துரும்பைப் பிடித்துக்கொண்டு தண்ணீரில் மிதந்தது. பூரானைப் பார்த்து உன்னால் இப்படிச் செய்து காட்ட முடியுமா? என்று கேட்டது. பூரான் அப்போதுதான் தனது தவறினை உணர்ந்தது. பின்பு, பூரான் எறும்பிடம் மன்னிப்புக் கேட்டு சிறந்த நண்பனாகத் திகழ்ந்து வந்தது.
நீதி :
எல்லோருக்கும் சில வல்லமைகளும் சில இயலாமைகளும் இயற்கையிலேயே உண்டு.
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment