Sunday, June 30, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.07.2024

  

கல்பனா சாவ்லா




திருக்குறள்: 

பால் :பொருட்பால்

அதிகாரம்:கல்லாமை

குறல் எண்:407

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில் நலம்
மண்மாண் புனைபாவை யற்று.

பொருள்: நுட்பமானதாய் மாட்சியுடையதாய் ஆராயவல்லதான அறிவு இல்லாதவனுடைய எழுச்சியான அழகு,
மண்ணால் சிறப்பாகப் புனையப்பட்ட பாவை போன்றது.


பழமொழி :

Blessed are the meek: for they shall inherit the earth.

பொறுத்தார் பூமி ஆள்வார்.

இரண்டொழுக்க பண்புகள் :

* போட்டி நிறைந்த உலகில் போராடத் தேவையான வல்லமையை வளர்த்துக் கொள்வேன்.

* என் திறமைகளை வளர்த்துக் கொண்டு சாதனைகள் புரிவேன்.

பொன்மொழி :

விடாமல் முயற்சிகளைத் தொடர்ந்து கொண்டிருப்பவர்களைத்தான் வெற்றி தேடி வரும்"---ஜவஹர்லால் நேரு

பொது அறிவு : 

1. பழங்காலத்தில் “சேரன் தீவு” என அழைக்கப்பட்ட நாடு எது?

விடை: இலங்கை

2. “ஜனநாயகம்” என்ற அரசியல் தத்துவத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் யார்?

விடை: ஆப்ரகாம் லிங்கன்

English words & meanings :

 callous-கடுமையான, heartless- இரக்கமற்ற

வேளாண்மையும் வாழ்வும் : 

இப்படி அனைத்து வேளாண்மையிலும் செயற்கை உரங்களை பயன்படுத்துவதால் காய்கறிகளில் இருக்கும் ஊட்டச்சத்து குறைவது மட்டும் இன்றி மண்ணின் வளத்தையும் பாதிக்கின்றன.

ஜூலை 01

தேசிய மருத்துவர்கள் தினம் (National Doctors' Day

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சூலை திங்கள் முதல் தேதியை தேசிய மருத்துவர்கள் நாளாகக் கொண்டாடகின்றனர். 1991 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

வரலாற்று புகழ்மிக்க மருத்துவரும் மேற்கு வங்காளத்தின் இரண்டாவது முதலமைச்சருமான மருத்துவர் பிதான் சந்திர ராய் நினைவாக தேசிய மருத்துவர்கள் நாள் கொண்டாடப்படுகிறது.[1] 1882 சூலை திங்கள் முதல் தேதி பிறந்த அவர், சரியாக 80 ஆண்டுகள் கழித்து அதே தேதியில் மறைந்தார்.[2] இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை 4, பிப்ரவரி 1961 ஆம் ஆண்டு பெற்றார். இவரின் நினைவாகவும், மருத்துவர்களின் சேவையை பாராட்டவும் இந்நாளானது இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.[சமூகம் மற்றும் தனிமனிதருக்கு மருத்துவர்கள் செய்யும் சேவையை அங்கீரிக்க உருவாக்கப்பட்டதே தேசிய மருத்துவர்கள் தினம் (National Doctors' Day) ஆகும்.


கல்பனா சாவ்லா அவர்களின் பிறந்த நாள்

கல்பானா சாவ்லா ஓர் இந்திய அமெரிக்க விண்ணோடி ஆவார்.விண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரிய கல்பானா சாவ்லா, பல பெண்களுக்கு ஒரு முன் மாதிரியாகத் திகழ்கிறார் என்றால் அது மிகையாகது. ஒரு சாதாரணப் பள்ளியில் படித்து, பலர் வியக்கும்படி தன் கனவுகளை ஒரு விண்வெளி பொறியாளராக வாழ்ந்துக் காட்டினார் கல்பனா சாவ்லா. 41வது வயதில் உலக மக்களின் நட்சத்திரமாகிப் போன ஒரு இந்தியப் பெண் வீராங்கனை


நீதிக்கதை

 சமயோஜித  புத்தி

முன் ஒரு  காலத்தில் புகழ்பெற்ற தலைவர் ஒருவர் இருந்தார். 

 தந்திரமான போர் குணம் கொண்டவர். ஒரு நாள் ஒரு மாநாட்டை முடித்துக் கொண்டு

 தனது  பாதுகாப்பு  படையுடன் நாட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார்.

வழியில்  பயணக் களைப்பு தீர ஓரிடத்தில் முகாமிட எண்ணினர். கொஞ்சம் வீரர்களை மட்டும் தன்னுடன் வைத்துக் கொண்டு மீதி பாதுகாப்பு படைவீரர்களை  வேறொரு இடத்தில் ஓய்வெடுக்க அனுப்பி வைத்தார்.

 தலைவர் பாதுகாப்பு படை இன்றி இருப்பதை அறிந்த  அவரின் எதிரிகள் ஆயிரக்கணக்கான படை வீரர்கள் சூழ அவருடைய இருப்பிடம் நோக்கி வர தொடங்கினர் 

 நடு ராத்திரியில் அவர் தூங்கிக் கொண்டிருந்த பொழுது அந்த தகவல் அவருக்கு கிடைத்தது. குறைவான எண்ணிக்கையில் உள்ள படைவீரர்களைக் கொண்டு அவர்களை சமாளிக்க இயலாது என்று யோசித்தார்.

 உடனே அவர் தம் வீரர்களுக்கு கட்டளையிட அவர்கள் அந்த இடத்தில் எதுவும்  இருந்த இடம் தெரியாமல் அழித்துவிட்டு அவர்களும் மறைவான இடங்களில் தனித்தனியாக மறைந்து கொண்டனர்.

 தலைவரும் தன்னுடைய பாதுகாப்பு கவசங்களை எல்லாம் கழற்றி விட்டு அங்கே அமர்ந்து வீணை வாசிக்க  தொடங்கினார்.  

சற்று நேரத்தில் அங்கே வந்த எதிரி நாட்டுப் படைகள் அவர் தனியே வீணை வாசித்துக் கொண்டு அமர்ந்திருப்பதை பார்த்தனர். 

எதிரி நாட்டு படையின்   தலைவர் இவர் சாதாரணமான முறையில் வீணை வாசித்துக் கொண்டிருக்கிறார் என்றால் நம்மை பிடிக்க வேறு ஏதேனும் தந்திர வழியில் படை வீரர்களை மறைத்து வைத்திருப்பாரோ என்று யோசித்தார். 

எனவே படைகளுடன் பின்வாங்கினார்.

எப்போதும் பிரச்சினையை கண்டு பயப்படாமல்  சமயோஜித  புத்திக்கொண்டு  தீர்க்க வேண்டும்

இன்றைய செய்திகள்

01.07.2024

# வேளாண் மற்றும் தோட்டக்கலை அலுவலர்கள் நியமனம்: 133 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் தமிழக முதல்வர்.

# சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.14.56கோடியில் அதிநவீன மருத்துவ உபகரணங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.

# தமிழக காவல் துறையினருக்கு பணியின்போது உயிரிழப்போ, உடலுறுப்பு இழப்போ, காயமோ ஏற்பட்டால் வழங்கப்படும் கருணைத் தொகை உயர்த்தப்படுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

# கடும் வெப்ப அலையில் 62 கோடி பேர் இந்தியாவில் பாதிப்பு:அமெரிக்காவின் பருவநிலை மத்திய ஆய்வுக் கூடத்தின் விஞ்ஞானிகள் குழு  வெளியிட்ட அறிக்கை தகவல்.

# சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற விண்கலத்தில் எரிபொருள் கசிவு: சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் சிக்கல்.

# சர்வதேச டி20 கிரிக்கெட்: விராட், ரோகித் வரிசையில் ஜடேஜாவும் ஓய்வு அறிவிப்பு.

# ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: இத்தாலியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது சுவிட்சர்லாந்து அணி.

# ஈஸ்ட்போர்ன் டென்னிஸ்: அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.

Today's Headlines

# Agriculture and Horticulture Officers are appointed: Chief Minister of Tamil Nadu issued work orders to 133 people.

 # New and latest medical equipment which  costs  Rs.14.56 crore was brought to public use in Rajiv Gandhi Government  Hospital, Chennai.

#  The chief minister said that the gratuity paid to the Tamil Nadu Police Department in case of loss of life, loss of limb or injury while on duty will be increased.

 # 62 crore people affected by extreme heat wave in India: According to the report released by the team of scientists of the United States' National Center for Climate Research.

# There is Fuel Leak in the Space Shuttle : There is a Problem for Sunitha Williams' Returning to Earth

 # International T20 cricket: Virat, Rohit and Jadeja announce retirement

# European Football Championship: Switzerland beat Italy to reach the quarter-finals.

 # Eastbourne tennis: USA's Taylor Brits advances to finals
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Friday, June 28, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.06.2024

  

கிரீன்லாந்து




திருக்குறள்: 

பால்:பொருட்பால்

அதிகாரம்:கல்லாமை

குறள் எண்:406

உளர்என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களர்அனையர் கல்லா தவர்.

பொருள்: கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப்படும் அளவினரே
அல்லாமல், ஒன்றும் விளையாத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.

பழமொழி :

Pride comes before fall. 

 அகம்பாவம் அழிவைத் தரும்.

இரண்டொழுக்க பண்புகள் :

*மழைநீரே குடிநீருக்கு ஆதாரம் என்பதால் மழை நீரை சேமிப்பேன்.

*தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவேன்.

பொன்மொழி :

" என்னிடம் எதை வேண்டுமானாலும் கேள்; ஆனால் என் நேரத்தை மட்டும் கேட்காதே! ---- நெப்போலியன் ஹில்

பொது அறிவு : 

1. உலகின் மிகப்பெரிய தீவு எது?

விடை: கிரீன்லாந்து

2. உலகின் மிகச்சிறிய கண்டம் எது?

விடை: ஆஸ்திரேலியா

English words & meanings :

 honesty-நேர்மையான,

 sincerity-நேர்மை

வேளாண்மையும் வாழ்வும் : 

உற்பத்தி பெருக்கத்திற்காக உலக நாடுகள் செயற்கை வேளாண்மை செயல் படுத்த ஆரம்பித்தன. ஆனால் அது மண்ணையும் மக்களையும் மக்கள் உடல்நிலையும் பாதிக்க ஆரம்பித்தது.

நீதிக்கதை

 வேலை


சிற்பக்கூடத்திற்கு பார்வையாளர் ஒருவர் சென்றார் அங்கே இருந்த சிற்பி செதுக்கி வைத்திருந்த சிற்பங்கள் அனைத்தும் மிகவும் அழகாக இருந்தது அவர் சிற்பம் செதுக்கி கொண்டிருப்பதை  பார்த்துக் கொண்டிருந்த  பார்வையாளருக்கு ஒரு சந்தேகம் தோன்றியது

 அவர் அந்த சிற்பியிடம்,   "இந்த இரண்டு சிலைகளும் ஒரே மாதிரி இருக்கிறதே! இரண்டு சிலைகள் செய்ய கூறினார்களா"?  என்றார்

 அதுக்கு அந்த சிற்பி அவரிடம் ," இல்லை இல்லை நான் முதலில் செய்த சிற்பத்தில் ஒரு குறை உள்ளது அதனால்  புதிய  சிலை செதுக்கி கொண்டிருக்கிறேன்" என்றார்.

 பார்வையாளரும்,"குறையா?  இவ்வளவு அழகான சிற்பத்தில் குறை உள்ளதா? எங்கே உள்ளது!  என்று கேட்டார்.

 அதுக்கு அந்த சிற்பி அவரிடம் ,"சிலையின் வலது காதுக்கு கீழே சிறிய  விரிசல் ஒன்று உள்ளது பாருங்கள்"என்றார்

 அவர் அந்த சிற்பியிடம் "இந்த சிற்பத்தை எங்கே பிரதிஷ்டை செய்ய இருக்கிறார்கள்"? என்று கேட்டார்."கோபுரத்தின் மீது வைக்க உள்ளார்கள்"என்றார் சிற்பி.

அதற்கு அவர் " கோபுரத்தின் மீது வைக்கும் போது இந்த சிறிய விரிசல் எவர் கண்ணிலும் தெரியாது அல்லவா"? என்று கேட்டார்.

அதற்கு சிற்பி "நான் பிறருக்காக வேலை செய்யவில்லை  என் மனசாட்சி படி வேலை செய்கிறேன்"என்று  கூறினார்.

இன்றைய செய்திகள்

29.06.2024

# ஊட்டி, கொடைக்கானலுக்கான இ-பாஸ் நடைமுறையை செப்டம்பர்-30 வரை நீட்டித்து ஐகோர்ட் உத்தரவு.

# மயிலாடும்பாறையில் 13-ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு.

# மாநகராட்சிகளாக தரம் உயரும் திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி, புதுக்கோட்டை: பேரவையில் மசோதா தாக்கல்.

# இந்திய ராணுவத்தில் விரைவில் ரோபோ நாய்கள்: சீன எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு.

# சர்வதேச விண்வெளி நிலையத்தை அப்புறப்படுத்தும் பணியை ஸ்பேஸ்எக்ஸ் வசம் ஒப்படைத்த நாசா.

# ஈஸ்ட்போர்ன் டென்னிஸ் : அமெரிக்க வீரர் டெய்லர் பிரிட்ஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்.

# கோபா அமெரிக்க கால்பந்து தொடர்: பொலிவியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற உருகுவே.

# டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதல்.

Today's Headlines

# Court orders extension of e-pass procedure for Ooty, Kodaikanal till September-30th.

 # Discovery of the 13th Century stone Inscription at Mayiladumparai.

 # Tiruvannamalai, Namakkal, Karaikudi, Pudukottai are being upgraded to Municipal Corporations: Bill passed in Assembly.

#  Robot dogs will be used soon in the Indian Army: it is to tighten the security in Chinese border areas.

 # NASA entrusted SpaceX with the task of disposing  the International Space Station.

 # Eastbourne Tennis: American Taylor Pritz advances to semi-finals.

 # Copa America: Uruguay beat Bolivia and bagged the thrashing victory 

 # T20 World Cup Final: India vs South Africa clashes today.
 Prepared by

Covai women ICT_போதிமரம்