Tuesday, June 9, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.06.2026

      




திருக்குறள்: 

"அதிகாரம்:43.அறிவுடைமை

குறள் எண்:425

குறள்:

உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு

பொருள்:

உயர்ந்தோரே உலகோர் எனப்படுவதால் அவர்களுடன் நட்பு கொண்டு இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் ஒரே நிலையாகக் கருதுவதே அறிவுடைமையாகும்"

பழமொழி :

பேராசை பெரு நட்டம். 

Covert all, lose all.       

இரண்டொழுக்க பண்புகள் :.

1. செல்லும் இடமெல்லாம் ஒழுக்கம், நேர்மை, அன்பு என்னும் விதைகளை விதைத்து செல்வேன்.

2. அதன் மூலம் இவ்வுலகை நாம் நன்கு வாழக்கூடிய இடமாக மாற்ற முயற்சி செய்வேன்.

பொன்மொழி : 

நம்பிக்கை உள்ள மனம், முடியாததையும் முடித்து காட்டும்

Thought for the Day :

Success begins when excuses end and responsibility begins.

பொது அறிவு : 

1. உலக புகையிலை எதிர்ப்பு தினம் எப்போது கடைப்பிடிக்கப்படுகிறது? 

மே 31.     

2. தேசிய தொழில்நுட்ப தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? 

மே 11

( மே 11,1998 அன்று பொக்ரான் அணுகுண்டு சோதனை வெற்றி பெற்றதையும், இந்தியாவின் முதல் பல்லுககு  விமானமான Hansa 3 வெற்றி பெற்றதையும்,  டி.ஆர்.டி.ஓ-வால் உருவாக்கப்பட்ட, குறுகிய தூரம் சென்று தரையிலிருந்து வான் குறியை தாக்கும் ஏவுகணையான திரிசூலின் சோதனை ஏவுதல் வெற்றிகரமாக நடந்ததையும் தகொண்டாடும் விதத்தில் தேசிய தொழில்நுட்ப தினம் கொண்டாடப்படுகிறது)

English words :

Ancient – Old, பண்டைய. 

Attempt – Try, முயற்சி செய்

NMMS :

3, 6, 9, 15,24, 39, _______                    

 (1) 65.          (2) 63.           (3)53.          (4) 55.                                                                       

3+3= X

X +previous number

6 + 3 = 9

9 + 6 = 15

15 + 9 = 24

24 + 15 = 39

39 + 24 = 63

  விடை:(2)  63

புவியியலும் சுற்றுசூழலும் :

பூமியின் வயது சுமார் 4.54 பில்லியன் ஆண்டுகள்.

ஜூன் 10

சுந்தர் பிச்சை அவர்களின் பிறந்தநாள்

சுந்தர் பிச்சை என்று அறியப்படும் பிச்சை சுந்தரராசன்(பிறப்பு: சூன் 10, 1972), இந்திய அமெரிக்க வாழ் கணினி தொழில் நுட்ப மேலாளர் ஆவார். இவர் அல்பபெட் (Alphabet Inc.) மற்றும் அதன் துணை நிறுவனமான கூகுள் முதன்மை செயல் அலுவலர் ஆவார்.
சுந்தர் பிச்சை 2004 ஆம் ஆண்டு கூகுள்இல் இணைந்தார். இவர் கூகிள் வாடிக்கையாளர் மென்பொருள் தயாரிப்புகள் தொகுப்பில் முக்கிய பங்கு வகித்தார். தற்போது கூகிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றுகிறார். 2013 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் நாள் ஆன்டி ரூபின் பதவி விலகிய பிறகு ஆண்ட்ராய்டு பிரிவிற்கும் சேர்த்து தலைவரானார். கூகுள் வரைபடம், ஆய்வு, வணிகம், விளம்பரம், ஆண்ட்ராய்டு, குரோம், உள்கட்டமைப்பு, கூகுள் ஆப்ஸ் ஆகியவற்றின் தலைவராக இருந்த இவர், கூகுள் உறவு நிறுவனங்களின் புதிய கூட்டு நிறுவனமான ஆல்பாபெட்டு உருவாக்கம் நிறைவுற்ற பிறகு, கூகுளின் முதன்மைச் செயல் அலுவலராகப் பொறுப்பேற்க உள்ளார். 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் திகதி முதல் ஆல்பாபெட்டு என்ற நிறுவனத்தின் தலைவர்களாக இருந்த லாரி பேஜ் மற்றும் சேர்ஜி பிரின் ஆகியோர் விலகி இவரை இரண்டு நிறுவனங்களுக்கும் ஒரே தலைமை செயல் அதிகாரியாக நியமித்துள்ளார்கள்

நீதிக்கதை

பழைய நிலைமையை மறந்து விடாதே!

முன்னொரு காலத்தில், ஒரு நாட்டை ஆண்ட அரசரிடம் விவேகமிக்க மந்திரி ஒருவர் இருந்தார். அவர் பெயர் தனயன். அரசர், எங்கு சென்றாலும், தனயனை அழைத்துச் செல்வார். தனயனின் ஆலோசனைப்படியே அனைத்தையும் செய்வார்.

இதனால், மந்திரி தனயனின் புகழ், நாடு முழுவதும் பரவியது. இதைக்கண்ட சிலர், மந்திரி மீது பொறாமை கொண்டனர். தனயன் எங்கு சென்றாலும், தன்னுடன் ஒரு பெட்டியை எடுத்துச் செல்வது வழக்கம். பொறாமைக்காரர்கள் இதை வைத்தே அரசனிடம் கோள் மூட்ட எண்ணினர்.

அரசே, மந்திரி நல்லவர் போல் நடித்து, நம்மை ஏமாற்றுகிறார். அரண்மனையில் உள்ள விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் அபகரித்து தன் பெட்டியில் வைத்துள்ளார். வேண்டுமானால் அதைச் சோதனை செய்து பாருங்கள் என்றனர்.

அரசனுக்கும், சிறிது சந்தேகம் ஏற்பட்டது. ஒருநாள் வேட்டைக்குப் போகும்போது, மந்திரி வழக்கம் போல் பெட்டியை தன்னோடு எடுத்து வந்தார். பெட்டியில் என்ன? என்று கேட்டார் அரசர். உடனே மந்திரி, பெட்டியைத் திறந்து காட்டினார், ஆடு மாடு மேய்ப்பவன் உடுத்தும் கந்தல் துணி இருந்தது.

இதெல்லாம் என்ன? என்று ஆச்சர்யத்துடன் கேட்டார் அரசர். அரசே! ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது, என் புத்திக்கூர்மையை பார்த்து, என்னை மந்திரி ஆக்கினீர்கள். இவ்வளவு உயர் பதவி கிடைத்தால், சிலர் பழைய நிலைமையை மறந்து விடுவர். எனக்கு அப்படியிருக்க மனம் வரவில்லை. பழைய நிலைமையை சுமந்தபடியே, மந்திரி பதவியில் இருக்க விரும்புகிறேன். அதனால் தான், இப்பெட்டியை எந்நேரமும் என்னுடன் வைத்திருக்கிறேன் என்றார் மந்திரி.

மந்திரியை பெரிதும் பாராட்டியதோடு, பொறாமைக்காரர்களுக்கு தக்க தண்டனையும் கொடுத்தார் அரசர். மந்திரிக்கு பல பரிசுகள் கொடுத்து கௌரவித்தார். பொறாமைக்காரர்கள், தாங்கள் செய்த சூழ்ச்சியே, தங்களது வீழ்ச்சிக்கு காரணமானதை எண்ணி வருந்தினர். 

இன்றைய செய்திகள்

10.06.2026

🗒️பெண்களின் கண்ணியமே அரசின் முக்கிய குறிக்கோள் - சிங்கப்பெண் அதிரடிப்படை தொடக்க விழாவில் முதல்-அமைச்சர் விஜய் பேச்சு.

🗒️தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கான கலந்தாய்வு - அமைச்சர் முகமது பர்வேஸ் தொடங்கி வைத்தார்.

🗒️அந்தமான் கடலில் பிரமாண்ட எரிவாயு புதையல் கண்டுபிடிப்பு
இதுவரை தோண்டப்பட்ட 3 கிணறுகளில் 2 கிணற்றில் எரிவாயு இருப்பது கண்டுப்பிடிக்கப் பட்டுள்ளது.

🗒️லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தலில் தமிழ் பெண்ணுக்கு 2-ம் இடம் கிடைக்கப் பெற்றுள்ளது.

 *விளையாட்டுச் செய்திகள்*

🏀உலக யோகாசனம்  சாம்பியன்ஷிப் - 102 தங்கம் உட்பட 114 பதக்கங்கள் வென்று
இந்திய அணி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

Today's Headlines

🗒️ “Protecting the dignity of women is the government's primary objective,” said Chief Minister Vijay at the inauguration ceremony of the Singappen Athiradippadai (Women’s Special Force).

🗒️ A counseling session for Industrial Training Institute (ITI) students was inaugurated by Minister Mohammed Parvez.

🗒️ A massive natural gas reserve has been discovered in the Andaman Sea. Natural gas has been found in 2 out of the 3 wells drilled so far.

🗒️ A Tamil woman has secured second place in the Los Angeles mayoral election.

Sports News

🏀 At the World Yogasana Championship, the Indian team secured first place, creating a record by winning 114 medals, including 102 gold medals.

Covai women ICT_போதிமரம்

Monday, June 8, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.06.2026

சார்லஸ் டிக்கென்ஸ்

   

திருக்குறள்: 


அதிகாரம்:43.அறிவுடைமை

குறள் எண்:424

குறள்:

எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு


பொருள்:
தான்‌ சொல்லுவனவற்றை
எளிய பொருளையுடையனவாகப்‌ பதியுமாறு சொல்லித்‌, தான்‌ பிறரிடம்‌ கேட்பவற்றின்‌ நுட்பமான பொருளையும்‌ ஆராய்ந்து காண்பது அறிவாகும்‌.

பழமொழி :

பழக பழக பாலும் புளிக்கும்.

 Familiarity breeds contempt.

இரண்டொழுக்க பண்புகள் :.


1. செல்லும் இடமெல்லாம் ஒழுக்கம், நேர்மை, அன்பு என்னும் விதைகளை விதைத்து செல்வேன்.

2. அதன் மூலம் இவ்வுலகை நாம் நன்கு வாழக்கூடிய இடமாக மாற்ற முயற்சி செய்வேன்.

பொன்மொழி : 

உழைப்பு இல்லாமல் உயர்வு இல்லை.

Thought for the Day :

Responsibility is not what is given to you. It is what you choose to own.

பொது அறிவு : 

1. இந்தியாவிலேயே முதல் முறையாக கடலுக்கடியில் அருங்காட்சியகம் எங்கு அமைக்கப்படுகிறது? 

மகாராஷ்டிரம்.

 2. ஜுன் 1,2026 நிலவரப்படி இந்தியாவில் உள்ள இரயில்வே மண்டலங்களின் எண்ணிக்கை எவ்வளவு? 

18.

English words :

Accept – Receive, ஏற்றுக்கொள். 

Brave – Courageous, தைரியமான.

NMMS :

8,4,15,5,22,6, ____ , ________ 

(1) 29, 7. (2) 28, 7. (3) 29, 8. (4) 27, 8. 

  • 1)     இரண்டாம், நான்காம் மற்றும் ஆறாம் இடத்தில் உள்ள எண்கள் வரிசையாக உள்ளன. அதன்படி எட்டாவது இடத்தில் வரவேண்டிய எண் 7
  • 2)  o  8 + 7 = 15
    • 15 + 7 = 22
    • 22 + 7 = 29

விடை: (1) 29,7

புவியியலும் சுற்றுசூழலும் :

பூமி நமக்குக் கிடைத்த பரிசு அல்ல; முந்தைய தலைமுறையிடமிருந்து நாம் கடனாகப் பெற்றது.

ஜூன் 09

சார்லஸ் டிக்கென்ஸ் அவர்களின் நினைவுநாள்

சார்லஸ் ஜான் ஹஃபாம் டிக்கென்ஸ் (Charles Dickens, 7 பெப்ரவரி 1812 - 9 ஜூன் 1870) விக்டோரியா காலத்தைச் சேர்ந்த மிகவும் புகழ் பெற்ற ஆங்கிலப் புதின எழுத்தாளர்களில் ஒருவரும், தீவிரமான சமூகப் பரப்புரையாளரும் ஆவார். மிகவும் வறியவராக வாழ்க்கையைத் தொடங்கியவர். அது அவரது எழுத்துக்களிலும் எதிரொலித்தது. இவரது டேவிட் காப்பர்ஃபீல்டு, ஆலிவர் டுவிஸ்ட் போன்ற புதினங்கள் (நாவல்கள்) உலகப் புகழ் பெற்றவை.

நீதிக்கதை

 புத்தகத்தின் மதிப்பு


ஒரு கிராமத்தில் வருண் என்ற சிறுவன் படித்து வந்தான். அவனுடைய புத்தகங்களும் நோட்டுகளும் எப்போதும் சிதறிக் கிடக்கும். சில நேரங்களில் புத்தகத்தின் பக்கங்களை மடிப்பான், நோட்டுகளில் கிறுக்குவான். பள்ளிப் பையை கூட சரியாக வைத்துக்கொள்ள மாட்டான்.

அதே வகுப்பில் நந்தினி என்ற சிறுமி படித்தாள். அவள் தனது புத்தகங்களுக்கும் நோட்டுகளுக்கும் அட்டை போட்டு, பெயர் எழுதி, மிகவும் பத்திரமாக வைத்திருப்பாள்.

ஒருநாள் தேர்வு நெருங்கியது. வருண் படிக்க அமர்ந்தபோது, அவன் அறிவியல் நோட்டினை காணவில்லை. கணிதப் புத்தகத்தின் சில பக்கங்கள் கிழிந்திருந்தன. முக்கியமான குறிப்புகள் பலவற்றை அவனால் படிக்க முடியவில்லை.

ஆனால் நந்தினி தனது புத்தகங்களையும் நோட்டுகளையும் ஒழுங்காக வைத்திருந்ததால், தேவையான பாடங்களை எளிதாகத் திரும்பப் படித்தாள்.

தேர்வு முடிவுகள் வந்தபோது, நந்தினி நல்ல மதிப்பெண்கள் பெற்றாள். வருணுக்கு எதிர்பார்த்த அளவுக்கு மதிப்பெண்கள் வரவில்லை.

அப்போது ஆசிரியர் கூறினார்:

"புத்தகங்களும் நோட்டுகளும் நம் அறிவின் நண்பர்கள். அவற்றைப் பத்திரமாகப் பராமரித்தால், அவை சரியான நேரத்தில் நமக்கு உதவும்."

அன்றிலிருந்து வருணும் தனது புத்தகங்களையும் நோட்டுகளையும் கவனமாகப் பாதுகாக்கத் தொடங்கினான்.

நீதி: புத்தகங்களையும் நோட்டுகளையும் பத்திரமாகப் பராமரிப்பது நல்ல பழக்கமும், நல்ல கல்விக்கான அடிப்படையும் ஆகும். 📚✨

இன்றைய செய்திகள்

09.06.2026

🗒️கீழடி அகழாய்வில் செங்கல் கட்டுமான சுவரின் தொடர்ச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

🗒️மக்களின் உடல்நலனைப் பாதுகாக்கும் வகையில், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை விதிமுறைகள் 2018 சட்டத்தின் கீழ் செய்தித்தாள்களில் திண்பண்டங்களை மடித்து 
வழங்கத் தடை.

🗒️அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் காரணமாக ஈரானுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என  இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.

 விளையாட்டு செய்திகள்

🏀கிரிக்கெட் - ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்
 இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

Today's Headlines

🗒️ The continuation of a brick-built wall has been discovered during the excavations at Keeladi Excavation Site.

🗒️ To protect public health, wrapping and serving food items in newspapers has been prohibited under the Food Safety and Standards Regulations, 2018.

🗒️ Due to the conflict between the United States and Iran, the Indian Embassy has advised citizens to avoid traveling to Iran.

Sports News

🏀 Cricket – India secured a convincing victory in the Test match against Afghanistan.

Covai women ICT_போதிமரம்

Sunday, June 7, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.06.2026

உலகப் பெருங்கடல்கள் நாள்




திருக்குறள்: 

அதிகாரம்:43.அறிவுடைமை

குறள் எண்:423

குறள்:

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

பொருள்:
எப்பொருளை யார்‌ யாரிடம்‌ கேட்டாலும்‌,கேட்டவாறே கொள்ளாமல்‌,அப்பொருளின்‌ மெய்யான பொருளைக்‌ காண்பதே அறிவாகும்‌.

பழமொழி :

நம்பிக்கையே வாழ்க்கையின் உந்து சக்தி. 

Faith is the force of life.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. செல்லும் இடமெல்லாம் ஒழுக்கம், நேர்மை, அன்பு என்னும் விதைகளை விதைத்து செல்வேன்.


2. அதன் மூலம் இவ்வுலகை நாம் நன்கு வாழக்கூடிய இடமாக மாற்ற முயற்சி செய்வேன்.

பொன்மொழி : 

"வெற்றி என்பது நிரந்தரமல்ல; தோல்வி என்பது இறுதியுமல்ல."

Thought for the Day :

"Responsibility is not a burden. It is an opportunity to prove your character."

பொது அறிவு : 

1. தமிழ்நாடு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? 

ஜுலை 18. 

2. தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் யார்? 

உயர்திரு. ராஜ்மோகன் அவர்கள்.

English words :

Avenue - a road bordered by houses or trees, அழகான தெரு. 

Believe - regard as true, நம்பு

NMMS :

அடுத்த உறுப்பைக் கண்டுபிடி:- 4,9,19,39,___ 

(1)59         (2)69         (3) 79         (4) 74

விடை :    (3) 79 

புவியியலும் சுற்றுசூழலும் :

பூமி சூரியக் குடும்பத்தில் சூரியனிலிருந்து மூன்றாவது கோளாகும்.
உயிரினங்கள் வாழத் தகுந்த ஒரே கோள் பூமி ஆகும்.
பூமியின் மேற்பரப்பில் சுமார் 71% நீரும் 29% நிலமும் உள்ளன.

ஜூன் 08

உலகப் பெருங்கடல்கள் நாள்

உலகப் பெருங்கடல்கள் நாள் (World Oceans Day) எனும் இந்நாளை ஆண்டுதோறும் உலக நாடுகள் முழுவதும் சூன் 8 ஆம் நாளன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிகழ்வை, 1992 ஆம் ஆண்டில் பிரேசிலின், இரியோ டி செனீரோ நகரில் இடம்பெற்ற பூமி உச்சி மாநாட்டில், முதன் முறையாக கனடா இந்நிகழ்வுக்கான கோரிக்கையை முன்வைத்ததை அடுத்து, இது அதிகாரபூர்வமற்ற வகையில் உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வந்தது. பின்னாளில், ஐக்கிய நாடுகள் அவை 2008 ஆம் ஆண்டில் இந்நிகழ்வை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து அறிக்கை வெளியிட்டது. அன்று முதல் உலகளாவிய அளவில் பெருங்கடல் திட்டம் என்ற அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

நீதிக்கதை

  “சிறிய துளி, பெரிய பலன்”

ஒரு கிராமத்தில் அருண், மீனா என்ற இரண்டு பள்ளி மாணவர்கள் இருந்தார்கள். ஒரு நாள் அவர்களுடைய ஆசிரியர், “தண்ணீர் இல்லாமல் உலகில் எந்த உயிரும் வாழ முடியாது. அதனால் மழைநீரை சேமிக்க வேண்டும்” என்று கூறினார்.

அருண் அந்தப் பாடத்தை கவனமாகக் கேட்டான். வீட்டிற்குச் சென்று, அப்பாவுடன் சேர்ந்து வீட்டின் கூரையிலிருந்து வரும் மழைநீரை ஒரு தொட்டியில் சேமிக்கும் ஏற்பாடு செய்தான்.

ஆனால் மீனா, “மழை வந்தால் தண்ணீர் தானே கிடைக்கும்! இதற்கெல்லாம் என்ன அவசியம்?” என்று நினைத்தாள்.

சில மாதங்கள் கழித்து கோடைக்காலம் வந்தது. கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. பலர் குடிநீருக்காக கஷ்டப்பட்டனர். ஆனால் அருணின் வீட்டில் சேமித்திருந்த மழைநீர் இருந்ததால் அவர்களுக்கு சிரமம் இல்லை.

அதைப் பார்த்த மீனா, “நானும் மழைநீரை சேமித்திருக்க வேண்டும்!” என்று உணர்ந்தாள். அடுத்த மழைக்காலத்தில் அவளும் மழைநீர் சேமிப்பு முறையை அமைத்தாள்.

அதன் பிறகு அந்த கிராமத்தில் உள்ள அனைவரும் மழைநீரை சேமிக்கத் தொடங்கினர். கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறை குறைந்தது.

நீதி:

💧 “மழைநீரை சேமிப்போம்; நாளைய தண்ணீர் தேவையை பாதுகாப்போம்.”

💧 “சிறு துளி சேர்ந்து பெரிய செல்வமாகும்.”

இன்றைய செய்திகள்

08.06.2026


 🗒️ தமிழக சிங்கப் பெண் படை. ஜூன் 9 ல் தொடங்கி வைக்கப்படும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

🗒️உலகளவில் இந்தியாவில்  தான்  சமையல் எரிவாயு விலை குறைவு மத்திய அரசு அறிவிப்பு .

🗒️ஏவுகணைகளின் உற்பத்தியை 2.5 மடங்கு அதிகரிக்கப்படும் என  வடகொரியா உறுதி.

விளையாட்டு செய்திகள்

🏀தெற்காசிய பெண்கள் கால்பந்து: கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் அணி.

🏀ஆசிய செஸ் போட்டியில் தங்கம் வென்ற  தமிழக வீராங்கனை சவிதா ஸ்ரீக்கு முதல் அமைச்சர் விஜய் வாழ்த்து.

Today's Headlines


🗒️ The Tamil Nadu government has announced that the Tamil Nadu Singa Penn Force will be launched on June 9.

🗒️ The Central Government has stated that India has the lowest cooking gas (LPG) prices in the world.

🗒️ North Korea has pledged to increase its missile production by 2.5 times.

Sports News

🏀 South Asian Women's Football Championship: The Indian team won the trophy.

🏀 Tamil Nadu chess player Savitha Shri, who won a gold medal at the Asian Chess Championship, was congratulated by Chief Minister Vijay.

Covai women ICT_போதிமரம்

Thursday, June 4, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.06.2026





 






திருக்குறள்: 

அதிகாரம்:43.அறிவுடைமை

குறள் எண்:422

குறள்:

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு

பொருள்:

மனத்தைச்‌ சென்ற இடத்தில்‌ செல்லவிடாமல்‌, தீமையானதிலிருந்து நீக்கிக்‌ காத்து நன்மையானதில்‌ செல்லவிடுவதே அறிவாகும்‌.

பழமொழி :


நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

Health is wealth.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. இந்த கல்வியாண்டில் பள்ளிக்கு விடுப்பு எடுக்காமல் வருவேன் .

2. எனக்கென ஒப்படைக்கப்பட்ட பணிகளை பொறுப்புணர்வுடன் சரியாக செய்து முடிப்பேன்.

பொன்மொழி : 

தெளிவான குறிக்கோளே வெற்றியின் முதல் படி.

Thought for the Day :

"Success is not about being the best. It is about being better than you were yesterday."

பொது அறிவு : 

1. ஊராட்சி திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியாவில் முதலிடம் பிடித்துள்ள மாநிலம் எது? 

தமிழ்நாடு. 

2. உலகின் மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தி நிலையம் எங்கு அமைக்கப்பட உள்ளது? 

திபெத்.

English words :

Around - On all sides , சுற்றிலும். 

Awake - rouse from sleep, தூக்கத்திலிருந்து எழுப்பு.

புவியியலும் சுற்றுசூழலும் :

புவியியல் ஏன் முக்கியம்?
✅ பூமியைப் பற்றி அறிய உதவுகிறது.


✅ வெவ்வேறு நாடுகள் மற்றும் மக்களைப் பற்றி தெரிந்துகொள்ள உதவுகிறது.


✅ இயற்கை வளங்களைப் பாதுகாக்க கற்றுக்கொடுக்கிறது.


✅ சுற்றுச்சூழல் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள உதவுகிறது

ஜூன் 05

உலக சுற்றுச்சூழல் நாள் (World Environment Day, WED) 

உலக சுற்றுச்சூழல் நாள் (World Environment Day, WED) ஐக்கிய நாடுகள் அவையால் ஆண்டுதோறும் சூன் 5 ஆம் நாள் புவிக்கோளையும் அதன் இயற்கையையும் காப்பாற்றத் தேவைப்படும் சுற்றுச்சூழல் செயல்பாட்டைப் பற்றிய நேரடியான உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தக் கொண்டாடப்படுகிறது. இது ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபையால் 1972 ஆம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இச் சபையின் சார்பில் இந்நாளின் கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP) செயற்படுகின்றது. உலகிலுள்ள நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் இது தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றாலும், ஒவ்வோர் ஆண்டிலும், முதன்மைக் கொண்டாட்டத்துக்கான இடமாக ஒரு இடம் தெரிவு செய்யப்படுவதும் வழக்கமாக உள்ளது. சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் கடந்த சில இருபதாண்டுகளாகவே உலகம் முழுவதிலும் உணரப்படுகின்ற ஒன்றாக இருந்து வருகின்றது. மனித நடவடிக்கைகளால் சூழலில் ஏற்பட்டுவரும் விரும்பத் தகாத மாற்றங்களும், அதனால் ஏற்படுகின்ற பாதகமான விளைவுகளும், இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளன. உலக சூழல் தின நிகழ்வுகளின் முக்கியமான நோக்கம், உலகம் தழுவிய அளவில் சூழலின் முக்கியத்துவம் பற்றிய உணர்வை ஏற்படுத்துவதும், அரசியல் மட்டத்தில் கவனத்தை ஈர்த்து, உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தூண்டுவதுமாகும்.

நீதிக்கதை

 நீதிக்கதை: "சின்ன விதையும் பெரிய மரமும்"

ஒரு கிராமத்தில் ஒரு சின்ன விதை மண்ணுக்குள் விழுந்தது. அது சுற்றிலும் பெரிய பெரிய மரங்களைப் பார்த்து,

"நான் இவ்வளவு சின்னதாக இருக்கிறேன். என்னால் எப்படி இவர்களைப் போல வளர முடியும்?" என்று கவலைப்பட்டது.

அப்போது அருகில் இருந்த மண் சொன்னது,

"நீ தினமும் கொஞ்சம் கொஞ்சமாக வளர முயற்சி செய்."

விதை அதன்படி மழைநீரைக் குடித்து, சூரிய ஒளியைப் பெற்று மெதுவாக முளைத்தது. நாட்கள் சென்றன. அது ஒரு செடியாக மாறியது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, அதுவே ஒரு பெரிய மரமாக வளர்ந்தது.

அந்த மரத்தின் நிழலில் பல பறவைகள் கூடு கட்டின. பயணிகள் ஓய்வெடுத்தார்கள்.

அப்போது அந்த மரம் நினைத்தது,

"ஒரு நாள் நான் சின்ன விதைதான். ஆனால் தினமும் முயற்சி செய்ததால் இன்று பெரிய மரமாக வளர்ந்தேன்."

நீதி: பெரிய வெற்றி ஒரே நாளில் கிடைக்காது. தினமும் சிறிது சிறிதாக முயற்சி செய்தால் பெரிய சாதனைகள் சாத்தியமாகும்.

இன்றைய செய்திகள்

05.06.2026

🗒️முதலமைச்சர் விஜய்  அவர்கள் இயற்கை வளங்கள் துறை சார்பில் ஆலோசனையின் முடிவில்  சட்டவிரோதமாக கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

🗒️புதிய சட்டசபை பேரவை செயலாளராக திருமதி சாந்தி பொறுப்பேற்றார் . தமிழக சட்டமன்றத்தின் முதல் பெண் செயலாளர் என்ற வரலாற்று சிறப்பு இவரைச் சேரும் .

🗒️வழக்கறிஞர்கள்  A I உதவியுடன் மனுக்கள் மற்றும் வாதங்களை தயாரிக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

🗒️ஜப்பானை புரட்டிப்போட்ட ‘ஜாங்மி’புயல் காரணமாக 900 விமான சேவைகள் ரத்து.

 🏀விளையாட்டு செய்திகள் 

🏀 நார்வே சர்வதேச செஸ் போட்டி ஆஸ்லோ நகரில் நடந்து வருகிறது. இதில் கார்ல்செனை  இளம் இந்திய வீரர் பிரக்ஞானந்தா மீண்டும் வீழ்த்தி 3 வது பெரும் சாதனை.

Today's Headlines

 🗒️ Chief Minister Vijay, at the conclusion of a consultation meeting held by the Department of Natural Resources, instructed officials to take action to prevent the illegal transportation and smuggling of mineral resources.

🗒️ Mrs. Shanthi has assumed office as the new Secretary of the Legislative Assembly. She becomes the first woman Secretary in the history of the Tamil Nadu Legislative Assembly.

🗒️ The Supreme Court has stated that lawyers may use AI assistance to prepare petitions and legal arguments.

🗒️ As a result of Typhoon Jangmi's widespread impact across Japan, 900 flight services have been cancelled.

🏀 Sports News

🏀 The Norway International Chess Tournament is being held in Oslo. In the tournament, young Indian chess player R Praggnanandhaa defeated Magnus Carlsen once again, achieving his third major victory over the Norwegian champion.

Covai women ICT_போதிமரம்

Wednesday, June 3, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.06.2026




 






திருக்குறள்: 

அதிகாரம்:43.அறிவுடைமை

குறள் எண்:421

குறள்:

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்

பொருள்:

அறிவு, அழிவு வராமல்‌ காக்கும்‌ கருவியாகும்‌; அன்றியும்‌ பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும்‌ அழிக்க முடியாத உள்ளரணும்‌ ஆகும்‌.

பழமொழி :

முயற்சி திருவினையாக்கும். 


Effort never fails.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. இந்த கல்வியாண்டில் பள்ளிக்கு விடுப்பு எடுக்காமல் வருவேன் .

2. எனக்கென ஒப்படைக்கப்பட்ட பணிகளை பொறுப்புணர்வுடன் சரியாக செய்து முடிப்பேன்.

பொன்மொழி : 

எதிர்காலம், தங்கள் கனவுகளின் உறுதியை நம்புபவர்களுக்கே சொந்தமானது.

பொது அறிவு : 

1. நிலவில் இருந்து கனிமங்களை சேகரித்து வர இஸ்ரோ மேற்கொள்ளும் திட்டம் எது?

 சந்திராயன் 4. 

2. உலகிலேயே உயரமான ரயில்வே பாலம் எங்கு அமைந்துள்ளளது? 

ஜம்மு - காஷ்மீர். (செனாப் பாலம், 359 m)

English words :

Advance - put forward,முன்னுக்குப்போ. 

Another - One more, இன்னுமொரு.

புவியியலும் சுற்றுசூழலும் : 

பூமியையும் அதில் வாழும் மக்களையும் பற்றிப் படிக்கும் அறிவியல் புவியியல் ஆகும்.


புவியியலின் முக்கியப் பிரிவுகள்


🌍 இயற்கைப் புவியியல்

  • மலைகள்
  • ஆறுகள்
  • கடல்கள்
  • காலநிலை
  • நிலநடுக்கம், எரிமலைகள்


👨‍👩‍👧‍👦 மனிதப் புவியியல்

  • மக்கள் தொகை
  • நகரங்கள்
  • விவசாயம்
  • தொழில்கள்
  • போக்குவரத்து

ஜூன் 04

ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி சிறுவர்களுக்கான பன்னாட்டு நாள்


ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி சிறுவர்களுக்கான பன்னாட்டு நாள் (International Day of Innocent Children Victims of Aggression) என்பது ஆண்டுதோறும் சூன் 4 அன்று ஐக்கிய நாடுகளால் நினைவுகூரப்படும் ஒரு நாளாகும். இது 1982 ஆகத்து 19 முதல் ஆண்டுதோறும் நினைவுகூரப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் இந்நாள் 1982 லெபனான் போரில் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மீது கவனம் செலுத்தியது, பின்னர் இதன் நோக்கம் "உடல், மன மற்றும் உணர்ச்சி ரீதியான பாதிப்புகளுக்கு ஆளான உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் அனுபவிக்கும் வலியை" உணர்ந்துகொள்வதாக விரிவடைந்தது. இந்த நாள் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஐநாவின் உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறது

நீதிக்கதை

 நீதிக்கதை: “குருவியும் பள்ளியும்”

ஒரு கிராமத்தில் ஒரு சிறிய குருவி இருந்தது. அதற்கு தினமும் நண்பர்களுடன் விளையாடுவதுதான் பிடிக்கும். அருகில் இருந்த மற்ற குருவிகள் எல்லாம் பள்ளிக்குச் சென்று புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டன.

ஆனால் இந்தக் குருவி, “இப்போ விளையாடுறதுதான் முக்கியம். படிப்பு பிறகு பார்த்துக்கலாம்!” என்று சொல்லி பள்ளிக்குப் போகாமல் இருந்தது.

சில மாதங்கள் கழித்து, ஒரு நாள் பெரிய புயல் வந்தது. மற்ற குருவிகள் ஆசிரியர் கற்றுக் கொடுத்தபடி பாதுகாப்பான இடங்களைத் தேர்ந்தெடுத்து தப்பித்துக் கொண்டன. ஆனால் பள்ளிக்குச் செல்லாத குருவிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அது மிகவும் சிரமப்பட்டது.

அப்போது அதன் நண்பர்கள் உதவி செய்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றார்கள்.

அன்றிலிருந்து அந்தக் குருவி, “விளையாட்டு முக்கியம் தான். ஆனால் படிக்க வேண்டிய வயதில் படித்தால் தான் வாழ்க்கையில் சரியான முடிவுகளை எடுக்க முடியும்” என்று உணர்ந்து தினமும் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தது.

நீதி:

படிக்கிற வயதில் கல்வி கற்றுக்கொண்டால், எதிர்காலத்தில் வரும் சவால்களை அறிவுடன் சமாளிக்க முடியும். 📚✨

இன்றைய செய்திகள்

04.06.2026

🗒️தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் என்.ஆனந்த் அவர்கள்  ரூ.342 கோடியில் குடிநீர் நீர்த்தேக்கம் பணிகளை நேரில் ஆய்வு செய்தார் .

🗒️ மாவட்டம் முழுவதும் சிங்கப்பெண்  விழிப்புணர்வு பயிலரங்கம் நடத்தவேண்டும் -உயர் நீதிமன்றம் கிளை உத்தரவு.

🗒️25 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு... 

🗒️ விமான எரிபொருள் விலையை கட்டுப்படுத்த ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

 🗒️ஐ.நா. பொதுச்சபை அடுத்த தலைவராக வங்காளதேச வெளியுறவு துறை மந்திரி கலீலூர் ரகுமான் தேர்வு செய்யப்பட்டுள்ளார் 

🏀 விளையாட்டு செய்திகள்

பிரெஞ்சு ஓபன் -டென்னிஸ் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் உக்ரைனிய வீராங்கனை- வரலாறு படைத்த கோஸ்ட்யுக்

Today's Headlines

🗒️Tamil Nadu Public Works Department Minister N. Anand personally inspected drinking water reservoir projects worth ₹342 crore.

🗒️The High Court Bench has directed that "Singappen" awareness workshops be conducted across the district.

🗒️Heavy rainfall is likely in 25 districts.

🗒️The Central Government has decided to allocate ₹10,000 crore to help control aviation fuel prices.

🗒️Khalilur Rahman, Bangladesh's Foreign Minister, has been elected as the next President of the United Nations General Assembly.

🏀 Sports News

🗒️French Open Tennis: Marta Kostyuk created history by becoming the first Ukrainian woman player to advance to the semifinals of the French Open.

Covai women ICT_போதிமரம்