Sunday, June 14, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.06.2026

உலகக் காற்று நாள்


திருக்குறள்: 

அதிகாரம்:43.அறிவுடைமை

குறள் எண்:428

குறள்:

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.

பொருள்:

அஞ்ச வேண்டியவைகளுக்கு அஞ்சாமல் நடப்பது அறிவில்லாத தன்மை ஆகும்; அஞ்ச வேண்டியதற்கு அஞ்சி விலகி நடப்பதே அறிவுடையவர் செயலாகும்

பழமொழி :

Contentment is more than a kingdom

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து

இரண்டொழுக்க பண்புகள் :.

1. கோபப்படாமல் அமைதியாக பொறுமையோடு இருப்பேன்.

2. பிறரின் துன்பத்தை உணர்ந்து உதவுவேன். இதன் மூலம் இரக்க குணத்தை பிரதிபலிப்பேன்.

பொன்மொழி : 

பொறுமை கசப்பானது; அதன் கனி இனிமையானது.

Thought for the Day :

Learning is a treasure; you can take it with you wherever you go.

பொது அறிவு : 

1 . தமிழ்நாட்டில் நீலகிரி வரையாடின் தற்போதைய எண்ணிக்கை எவ்வளவு? 

1364. 

2. உலக பூச்சி தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது? 

ஜுன் 6.

English words :

Generous – Liberal, தாராளமான.

Hesitate – Doubt, தயங்கு.

NMMS :

36 மீ பக்க அளவுள்ள ஒரு சதுரத்தின் பரப்பும், 24 மீ உயரமுள்ள ஒரு இணைகரத்தின் பரப்பும் சமம் எனில், இணைகரத்தின் அடிப்பக்க அளவு என்ன?

1. சதுரத்தின் பக்கம் = 36 மீ

சதுரத்தின் பரப்பளவு = a2

                                           = 36 * 36 = 1296 மீ2

2. சதுரத்தின் பரப்பளவு = இணைக்கரத்தின் பரப்பளவு = 1296 மீ2

    இணைக்கரத்தின் பரப்பளவு = அடிப்பக்கம் * உயரம் = 1296

                                                            அடிப்பக்கம் * 24 = 1296 

                                                            அடிப்பக்கம்  =  1296 / 24 = 54 மீ

விடை : 54மீ

புவியியலும் சுற்றுசூழலும் :

பூமி தனது அச்சில் சுழல்வதால் பகலும் இரவும் ஏற்படுகின்றன.
பூமி சூரியனைச் சுற்றி வருவதால் பருவ காலங்கள் உருவாகின்றன.

ஜூன் 15

உலகக் காற்று நாள் (World Wind Day) ஆண்டுதோறும் சூன் 15 ஆம் நாள் நடைபெறும் உலகளாவிய நிகழ்ச்சியாகும். இதை ஐரோப்பிய காற்று ஆற்றல் ஆணையமும், உலகளாவிய காற்று ஆற்றல் மன்றமும் ஒழுங்குப்படுத்தி வருகின்றது.. இது காற்றாற்றலைக் கொண்டாடும் தினமாகும். மேலும் இந்நாளில் காற்றாற்றலைப் பற்றிய விழிப்புணர்வையும், முக்கியத்துவத்தையும், அதன் வாய்ப்புகளையும், குழந்தைகள் மற்றும் வயதானோர் அறியும் படி செய்யப்படுகிறது.

நீதிக்கதை

 "நேர்மையான மாணவி "

ஒரு பள்ளியில் கவிநயா என்ற மாணவி படித்து வந்தாள். அவள் எப்போதும் உண்மையே பேசுவாள்.

ஒருநாள் பள்ளி முடிந்து வீட்டிற்குச் செல்லும்போது, பள்ளி மைதானத்தில் ஒரு அழகான பேனா கிடந்தது. அது மிகவும் விலையுயர்ந்த பேனாவாக இருந்தது. கவிநயாவின் நண்பர்கள் சிலர், "இதைக் கண்டுபிடித்தது நீதானே! நீயே வைத்துக்கொள்" என்றார்கள்.

ஆனால் கவிநயா, "இல்லை. இது யாரோ ஒருவருடைய பொருள். அவரிடம் சேர வேண்டும்" என்றாள். உடனே அந்தப் பேனாவை ஆசிரியரிடம் கொடுத்தாள்.

மறுநாள் ஒரு மாணவன் அழுதுகொண்டே ஆசிரியரிடம் வந்தான். "என் அப்பா வாங்கிக் கொடுத்த பேனா தொலைந்து விட்டது" என்றான். ஆசிரியர் கவிநயா கொடுத்த பேனாவை அவனிடம் கொடுத்தார்.

அந்த மாணவன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். ஆசிரியரும் கவிநயாவைப் பாராட்டி, "நேர்மை என்பது மனிதனின் மிகப் பெரிய செல்வம்" என்றார்.

அன்று முதல் பள்ளியில் உள்ள மாணவர்கள் அனைவரும் கவிநயாவைப் போல நேர்மையாக இருக்க முயன்றனர்.

நீதி:

**"நேர்மையே சிறந்த செல்வம். 

இன்றைய செய்திகள்

15.06.2026

🗒️பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் 
 பள்ளிகளில் மாணவர்கள் சாதி கயிறு அணிவதை அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக அறிவுறித்தியுள்ளார்.

🗒️கேரளத்தை அச்சுறுத்தும் நிபா வைரஸ், கோழிக்கோடு மாவட்டத்தில் 'நிபா' வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.கேரளாவிற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக குழு விரைந்ததுள்ளது.

🗒️இந்தியாவில் மலிவு விலையில் மருத்துவ வசதிகள். பிரதமர் மோடி பெருமிதம் .

 விளையாட்டுச் செய்திகள்

🏀 ஆசிய விளையாட்டு போட்டி: இந்திய பேட்மிண்டன் அணி அறிவிப்பு. இந்திய பெண்கள் அணியில் முன்னணி நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து. இடம் பெறுகிறார்.

Today's Headlines

🗒️ School Education Minister Rajmohan has firmly announced that students will not be allowed to wear caste-identifying threads in schools.

🗒️ The Nipah virus is posing a threat to Kerala. A Nipah virus infection has been detected in Kozhikode district, and a team from the Indian Council of Medical Research (ICMR) has rushed to Kerala.

🗒️ Prime Minister Modi expressed pride in India's affordable healthcare facilities.

Sports News

🏀 Asian Games: The Indian badminton team has been announced. Star shuttler P. V. Sindhu has been included in the Indian women's team.

Covai women ICT_போதிமரம்

Thursday, June 11, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.06.2026

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள்

திருக்குறள்: 

அதிகாரம்:43.அறிவுடைமை

குறள் எண்:427

குறள்:

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர். 

பொருள்:

அறிவுடையார் நாளை வர இருப்பதை முன் அறிய வல்லவர்; அறிவு இல்லாதவரோ அதனை அறிய இயலாதவர்.  

பழமொழி :

Coming events cast their shadow before

ஆணை வரும் பின்னே; மணியோசை வரும் முன்னே

இரண்டொழுக்க பண்புகள் :.

1. செல்லும் இடமெல்லாம் ஒழுக்கம், நேர்மை, அன்பு என்னும் விதைகளை விதைத்து செல்வேன்.

2. அதன் மூலம் இவ்வுலகை நாம் நன்கு வாழக்கூடிய இடமாக மாற்ற முயற்சி செய்வேன்.

பொன்மொழி : 

தோல்வி வெற்றியின் தாய்.

Thought for the Day :

Today's responsibility creates opportunities tomorrow.

பொது அறிவு : 

1. 23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் 2026 எங்கு நடைபெற உள்ளது? 

கிளாஸ்கோ, ஸ்காட்லாந்து. 

2. தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? 

ஏப்ரல் 24.

English words :

Essential – Necessary, அத்தியாவசியமான.


Frequent – Regular, அடிக்கடி நிகழும்

NMMS :

XYW, UVT, RSQ, OPN, _______ 

(1) KLM. (2) LMK. (3) LKM. (4) KML. 

Pattern : 2nd, 3rd, 1st

1) correct order is WXY, according to the pattern XYW

2) correct order is TUV, according to the pattern UVT

3) correct order is QRS, according to the pattern RSQ

4) correct order is NOP, according to the pattern OPN

5) correct order is KLM, according to the pattern LMK

விடை: (2) LMK

புவியியலும் சுற்றுசூழலும் :

குடிமையியல்

ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நாட்டை ஆளுகின்றனர். இந்தியா ஒரு ஜனநாயக நாடு.

ஜூன் 12

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் (World Day Against Child Labour) உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சூன் 12 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் (ஐ.எல்.ஓ) அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2002ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது. ஐ.எல்.ஓ வின் 138 மற்றும் 182வது உடன்படிக்கைகளின் ஏற்பினால் தூண்டப்பட்டு இந்த நாள் உருவாக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்றப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்த இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 2006 அக்டோபர் 10 ம் தேதி முதல் வீடு, சாலையோரக் கடைகள், ஓட்டல்கள் போன்ற இடங்களில் 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர், சிறுமியரை வேலைக்கு அமர்த்த மத்திய அரசு தடைவிதித்துள்ளது.

நீதிக்கதை

 திருட்டு முட்டையும் திருந்திய ஓணானும்

ஒரு விவசாயியின் கோழிகள் இடும் முட்டைகளை ஒரு ஓணான் தினமும் திருடி தின்று வந்தது. 

அதன் மனைவியும் பிள்ளைகளும்,

"திருட்டு தவறு, ஒருநாள் அதற்கான விலையை கொடுக்க வேண்டி வரும்"

என்று எச்சரித்தும் அது கேட்கவில்லை.

ஒருநாள் விவசாயி ஒரு அவித்த முட்டையை கோழி அருகில் வைத்து விட்டார். வழக்கம்போல் வந்த ஓணான் அதை விழுங்கியது.

அவித்த முட்டை வயிற்றில் சிக்கியதால் வேகமாக நகர முடியவில்லை.

விவசாயி துரத்த, ஓணான் தன் பொந்திற்குள் ஓடியது. தலை மட்டும் உள்ளே சென்றது, ஆனால் உடல் வெளியே சிக்கிக் கொண்டது. விவசாயியிடம் அடியும் வாங்கியது.

அப்போது தான் தன் தவறை உணர்ந்த ஓணான், கடவுளிடம் மன்னிப்பு கேட்டு இனி திருட மாட்டேன் என்று மனந்திரும்பியது.

சிறிது நேரத்தில் முட்டை ஜீரணமாகி, அது பாதுகாப்பாக பொந்திற்குள் சென்றது. அதன்பின் திருட்டை விட்டுவிட்டு நேர்மையாக வாழ்ந்ததாம்.

💎 நீதி :

🔹 திருட்டின் சுகம் சில நாள்; அதன் துன்பம் பல நாள்.

🔹 தவறை உணர்ந்து திருந்துகிறவர்களுக்கு எப்போதும் ஒரு புதிய வாய்ப்பு உண்டு.

🔹 அறிவுரையை கேட்காதவன் அனுபவத்தின் மூலம் பாடம் கற்றுக்கொள்வான்.

இன்றைய செய்திகள்

12.06.2026

🗒️ நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வேண்டும் என நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய் வலியுறுத்தல்.

🗒️நாட்டின் வளர்ச்சிக்கு ஒன்று சேர்ந்து உழைப்போம்”  என்று நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி  பேச்சு .

🗒️ஹார்முஸ் நீரிணை முழுமையாக மூடப்படுவதாக ஈரான் ராணுவம் அறிவிப்பு.

 விளையாட்டுச் செய்திகள் 

🏀 நேற்று தொடங்கிய உலகக் கோப்பை கால்பந்து FIFA போட்டித் தொடரில் புதிய விதிமுறைகள் அறிமுகம்.

Today's Headlines

🗒️ Chief Minister Vijay emphasized at the NITI Aayog meeting that Tamil Nadu should be exempted from the NEET examination.

🗒️ Prime Minister Narendra Modi said at the NITI Aayog meeting, “Let us all work together for the development of the nation.”

🗒️ The Iranian military announced that the Strait of Hormuz will be completely closed.

Sports News

🏀 New rules were introduced in the FIFA World Cup football tournament that began yesterday. ⚽

Covai women ICT_போதிமரம்

Wednesday, June 10, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.06.2026


        


திருக்குறள்: 


அதிகாரம்:43.அறிவுடைமை

குறள் எண்:426

குறள்:

எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு.

பொருள்:

உலகத்துப் பெரியோர் எவ்வாறு வாழ்கின்றார்களோ, அவரோடு சேர்ந்து, தானும் அப்படியே வாழ்வது அறிவு.

பழமொழி :

Fortune favors the brave.

துணிவுடையோர்க்கே வெற்றி.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. செல்லும் இடமெல்லாம் ஒழுக்கம், நேர்மை, அன்பு என்னும் விதைகளை விதைத்து செல்வேன்.

2. அதன் மூலம் இவ்வுலகை நாம் நன்கு வாழக்கூடிய இடமாக மாற்ற முயற்சி செய்வேன்.

பொன்மொழி : 

பொறுமை கசப்பானது; அதன் கனியோ இனிமையானது.

Thought for the Day :

Responsibility is the bridge between goals and achievements.

பொது அறிவு : 

1. இந்திய முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக பதவி வகிப்பவர் யார்? 

N .S.ராஜா சுப்பிரமணி. 

2. தமிழகத்தில் முதல் முறையாக உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவுத் துறை (AI) அமைச்சர் யார்? 

உயர் திரு. ஆர். குமார் அவர்கள்.

English words :

Benefit – Advantage, நன்மை.

Conceal – Hide, மறை.

NMMS :

1, 7, 3, 63, 5, 215, 7, ______ 

(1)342. (2) 511. (3)517. (4) 343. 

1. ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு ஆகிய இடங்களில் ஒற்றை எண்கள் அமைந்துள்ளன. 

2. இரண்டாமிடத்தில் உள்ள 7 என்பதற்கான சமன்பாடு 

             (முந்தைய எண் + 1)3  -  1

        I) இரண்டாமிட எண் (1 + 1)3  -  1 =  (2)3  -  1 = 8 - 1 = 7

        II) நான்காமிட எண் (3 + 1)3  -  1 =  (4)3  -  1 = 64 - 1 = 63

          III) ஆறாமிட எண் (5 + 1)3  -  1 =  (6)3  -  1 = 216 - 1 = 215

        IV) எட்டாமிட எண் (7 + 1)3  -  1 =  (8)3  -  1 = 512 - 1 = 511

விடை: (2) 511

புவியியலும் சுற்றுசூழலும் :

"இன்றைய மாணவர்கள் நாளைய பொறுப்புள்ள குடிமக்கள்." எனவே வாரத்தில் இரு நாட்கள் குடிமையியல் குறித்தும் பார்ப்போம்.

குடிமையியல் என்றால் என்ன?

குடிமையியல் என்பது ஒரு நாட்டின் ஆட்சி முறை, குடிமக்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றிய கல்வியாகும்.

ஜூன் 11

உலகத் தமிழ்க் கழகம் என்னும் அமைப்பு தேவநேயப் பாவாணர் தலைமையில் திருச்சிராப்பள்ளியில் 1968 சூன் 11 இல் அமைக்கப்பட்டது. பெருஞ்சித்திரனார் பொதுச் செயலாளராக விளங்கினார். தமிழ்நாட்டின் அனைத்து ஊர்களிலும் பிற மாநிலங்களிலும் கிளைகள் தொடங்கப்பட்டன.

நீதிக்கதை

  "வீட்டுப் பாடத்தின் மதிப்பு"

ஒரு கிராமத்தில் மணி என்ற மாணவன் இருந்தான். அவன் பள்ளிக்குச் சரியாகச் செல்வான். ஆனால் வீட்டுப் பாடம் செய்வதில் ஆர்வம் காட்டமாட்டான்.

ஒருநாள் ஆசிரியர் கணித வீட்டுப் பாடம் கொடுத்தார். மணிகண்டன் “நாளை பார்த்துக்கொள்ளலாம்” என்று நினைத்து விளையாடச் சென்றான். அவன் நண்பன் கோபி மட்டும் வீட்டுப் பாடத்தை கவனமாகச் செய்தான்.

மறுநாள் ஆசிரியர் அனைவரின் நோட்டுப் புத்தகத்தையும் பார்த்தார். கோபியின் வீட்டுப் பாடம் மிகவும் அழகாகவும் சரியாகவும் இருந்தது. ஆசிரியர் அவனைப் பாராட்டினார்.

மணி  மட்டும் வீட்டுப் பாடம் செய்யாமல் வந்திருந்தான். பாடத்தில் ஆசிரியர் கேட்ட கேள்விகளுக்கும் அவனால் பதில் சொல்ல முடியவில்லை. அவனுக்கு வெட்கமாக இருந்தது.

அன்று மாலை மணி கோபியிடம், “நீ எப்படி பாடங்களை இவ்வளவு நன்றாகப் புரிந்துகொள்கிறாய்?” என்று கேட்டான்.

கோபி சிரித்துக்கொண்டு, “வீட்டுப் பாடம் செய்வது பாடத்தை மீண்டும் பயிற்சி செய்வது போல. அதனால்தான் எனக்கு எளிதாகப் புரிகிறது,” என்றான்.

அப்போது மணிக்கு தனது தவறு புரிந்தது. அந்த நாளிலிருந்து அவன் தினமும் வீட்டுப் பாடத்தை நேரத்திற்கு செய்து வந்தான். சில மாதங்களில் அவனும் வகுப்பில் சிறந்த மாணவர்களில் ஒருவனாக மாறினான்.

நீதி: வீட்டுப் பாடத்தை தவறாமல் செய்வதால் அறிவும் திறமையும் வளர்கின்றன. 📚✏️

இன்றைய செய்திகள்

11.06.2026

🗒️10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு   அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் ஊக்கத்தொகை வழங்கினார்.

🗒️இந்தியாவின் நீண்ட கால பிரதமர் எனும்  சாதனை படைத்தார் நரேந்திர மோடி. 

🗒️இங்கிலாந்து நாட்டில்  சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை  பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

 விளையாட்டுச் செய்திகள்

🏀ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய ஜோடி துருவ்ராவத்-மனீஷா  வெற்றி பெற்றுள்ளனர்.

🏀ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில்  பி.வி.சிந்து வெற்றி பெற்றுள்ளார்.

Today's Headlines

🗒️ Minister Rajmohan awarded incentive scholarships to students who scored high marks in the Class 10 and Class 12 public examinations.

🗒️ Narendra Modi has set a record as India's longest-serving Prime Minister. 

🗒️ In England, restrictions have been imposed on children using social media platforms. England.

Sports News

🏀 In the Australian Open Badminton Tournament, the Indian pair Dhruv Rawat and Manisha emerged victorious. Australian Open Badminton Tournament.

🏀 In the women's singles category of the Australian Open Badminton Tournament, P. V. Sindhu secured a victory. P. V. Sindhu.

Covai women ICT_போதிமரம்

Tuesday, June 9, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.06.2026

      




திருக்குறள்: 

"அதிகாரம்:43.அறிவுடைமை

குறள் எண்:425

குறள்:

உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு

பொருள்:

உயர்ந்தோரே உலகோர் எனப்படுவதால் அவர்களுடன் நட்பு கொண்டு இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் ஒரே நிலையாகக் கருதுவதே அறிவுடைமையாகும்"

பழமொழி :

பேராசை பெரு நட்டம். 

Covert all, lose all.       

இரண்டொழுக்க பண்புகள் :.

1. செல்லும் இடமெல்லாம் ஒழுக்கம், நேர்மை, அன்பு என்னும் விதைகளை விதைத்து செல்வேன்.

2. அதன் மூலம் இவ்வுலகை நாம் நன்கு வாழக்கூடிய இடமாக மாற்ற முயற்சி செய்வேன்.

பொன்மொழி : 

நம்பிக்கை உள்ள மனம், முடியாததையும் முடித்து காட்டும்

Thought for the Day :

Success begins when excuses end and responsibility begins.

பொது அறிவு : 

1. உலக புகையிலை எதிர்ப்பு தினம் எப்போது கடைப்பிடிக்கப்படுகிறது? 

மே 31.     

2. தேசிய தொழில்நுட்ப தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? 

மே 11

( மே 11,1998 அன்று பொக்ரான் அணுகுண்டு சோதனை வெற்றி பெற்றதையும், இந்தியாவின் முதல் பல்லுககு  விமானமான Hansa 3 வெற்றி பெற்றதையும்,  டி.ஆர்.டி.ஓ-வால் உருவாக்கப்பட்ட, குறுகிய தூரம் சென்று தரையிலிருந்து வான் குறியை தாக்கும் ஏவுகணையான திரிசூலின் சோதனை ஏவுதல் வெற்றிகரமாக நடந்ததையும் தகொண்டாடும் விதத்தில் தேசிய தொழில்நுட்ப தினம் கொண்டாடப்படுகிறது)

English words :

Ancient – Old, பண்டைய. 

Attempt – Try, முயற்சி செய்

NMMS :

3, 6, 9, 15,24, 39, _______                    

 (1) 65.          (2) 63.           (3)53.          (4) 55.                                                                       

3+3= X

X +previous number

6 + 3 = 9

9 + 6 = 15

15 + 9 = 24

24 + 15 = 39

39 + 24 = 63

  விடை:(2)  63

புவியியலும் சுற்றுசூழலும் :

பூமியின் வயது சுமார் 4.54 பில்லியன் ஆண்டுகள்.

ஜூன் 10

சுந்தர் பிச்சை அவர்களின் பிறந்தநாள்

சுந்தர் பிச்சை என்று அறியப்படும் பிச்சை சுந்தரராசன்(பிறப்பு: சூன் 10, 1972), இந்திய அமெரிக்க வாழ் கணினி தொழில் நுட்ப மேலாளர் ஆவார். இவர் அல்பபெட் (Alphabet Inc.) மற்றும் அதன் துணை நிறுவனமான கூகுள் முதன்மை செயல் அலுவலர் ஆவார்.
சுந்தர் பிச்சை 2004 ஆம் ஆண்டு கூகுள்இல் இணைந்தார். இவர் கூகிள் வாடிக்கையாளர் மென்பொருள் தயாரிப்புகள் தொகுப்பில் முக்கிய பங்கு வகித்தார். தற்போது கூகிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றுகிறார். 2013 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் நாள் ஆன்டி ரூபின் பதவி விலகிய பிறகு ஆண்ட்ராய்டு பிரிவிற்கும் சேர்த்து தலைவரானார். கூகுள் வரைபடம், ஆய்வு, வணிகம், விளம்பரம், ஆண்ட்ராய்டு, குரோம், உள்கட்டமைப்பு, கூகுள் ஆப்ஸ் ஆகியவற்றின் தலைவராக இருந்த இவர், கூகுள் உறவு நிறுவனங்களின் புதிய கூட்டு நிறுவனமான ஆல்பாபெட்டு உருவாக்கம் நிறைவுற்ற பிறகு, கூகுளின் முதன்மைச் செயல் அலுவலராகப் பொறுப்பேற்க உள்ளார். 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் திகதி முதல் ஆல்பாபெட்டு என்ற நிறுவனத்தின் தலைவர்களாக இருந்த லாரி பேஜ் மற்றும் சேர்ஜி பிரின் ஆகியோர் விலகி இவரை இரண்டு நிறுவனங்களுக்கும் ஒரே தலைமை செயல் அதிகாரியாக நியமித்துள்ளார்கள்

நீதிக்கதை

பழைய நிலைமையை மறந்து விடாதே!

முன்னொரு காலத்தில், ஒரு நாட்டை ஆண்ட அரசரிடம் விவேகமிக்க மந்திரி ஒருவர் இருந்தார். அவர் பெயர் தனயன். அரசர், எங்கு சென்றாலும், தனயனை அழைத்துச் செல்வார். தனயனின் ஆலோசனைப்படியே அனைத்தையும் செய்வார்.

இதனால், மந்திரி தனயனின் புகழ், நாடு முழுவதும் பரவியது. இதைக்கண்ட சிலர், மந்திரி மீது பொறாமை கொண்டனர். தனயன் எங்கு சென்றாலும், தன்னுடன் ஒரு பெட்டியை எடுத்துச் செல்வது வழக்கம். பொறாமைக்காரர்கள் இதை வைத்தே அரசனிடம் கோள் மூட்ட எண்ணினர்.

அரசே, மந்திரி நல்லவர் போல் நடித்து, நம்மை ஏமாற்றுகிறார். அரண்மனையில் உள்ள விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் அபகரித்து தன் பெட்டியில் வைத்துள்ளார். வேண்டுமானால் அதைச் சோதனை செய்து பாருங்கள் என்றனர்.

அரசனுக்கும், சிறிது சந்தேகம் ஏற்பட்டது. ஒருநாள் வேட்டைக்குப் போகும்போது, மந்திரி வழக்கம் போல் பெட்டியை தன்னோடு எடுத்து வந்தார். பெட்டியில் என்ன? என்று கேட்டார் அரசர். உடனே மந்திரி, பெட்டியைத் திறந்து காட்டினார், ஆடு மாடு மேய்ப்பவன் உடுத்தும் கந்தல் துணி இருந்தது.

இதெல்லாம் என்ன? என்று ஆச்சர்யத்துடன் கேட்டார் அரசர். அரசே! ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது, என் புத்திக்கூர்மையை பார்த்து, என்னை மந்திரி ஆக்கினீர்கள். இவ்வளவு உயர் பதவி கிடைத்தால், சிலர் பழைய நிலைமையை மறந்து விடுவர். எனக்கு அப்படியிருக்க மனம் வரவில்லை. பழைய நிலைமையை சுமந்தபடியே, மந்திரி பதவியில் இருக்க விரும்புகிறேன். அதனால் தான், இப்பெட்டியை எந்நேரமும் என்னுடன் வைத்திருக்கிறேன் என்றார் மந்திரி.

மந்திரியை பெரிதும் பாராட்டியதோடு, பொறாமைக்காரர்களுக்கு தக்க தண்டனையும் கொடுத்தார் அரசர். மந்திரிக்கு பல பரிசுகள் கொடுத்து கௌரவித்தார். பொறாமைக்காரர்கள், தாங்கள் செய்த சூழ்ச்சியே, தங்களது வீழ்ச்சிக்கு காரணமானதை எண்ணி வருந்தினர். 

இன்றைய செய்திகள்

10.06.2026

🗒️பெண்களின் கண்ணியமே அரசின் முக்கிய குறிக்கோள் - சிங்கப்பெண் அதிரடிப்படை தொடக்க விழாவில் முதல்-அமைச்சர் விஜய் பேச்சு.

🗒️தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கான கலந்தாய்வு - அமைச்சர் முகமது பர்வேஸ் தொடங்கி வைத்தார்.

🗒️அந்தமான் கடலில் பிரமாண்ட எரிவாயு புதையல் கண்டுபிடிப்பு
இதுவரை தோண்டப்பட்ட 3 கிணறுகளில் 2 கிணற்றில் எரிவாயு இருப்பது கண்டுப்பிடிக்கப் பட்டுள்ளது.

🗒️லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தலில் தமிழ் பெண்ணுக்கு 2-ம் இடம் கிடைக்கப் பெற்றுள்ளது.

 *விளையாட்டுச் செய்திகள்*

🏀உலக யோகாசனம்  சாம்பியன்ஷிப் - 102 தங்கம் உட்பட 114 பதக்கங்கள் வென்று
இந்திய அணி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

Today's Headlines

🗒️ “Protecting the dignity of women is the government's primary objective,” said Chief Minister Vijay at the inauguration ceremony of the Singappen Athiradippadai (Women’s Special Force).

🗒️ A counseling session for Industrial Training Institute (ITI) students was inaugurated by Minister Mohammed Parvez.

🗒️ A massive natural gas reserve has been discovered in the Andaman Sea. Natural gas has been found in 2 out of the 3 wells drilled so far.

🗒️ A Tamil woman has secured second place in the Los Angeles mayoral election.

Sports News

🏀 At the World Yogasana Championship, the Indian team secured first place, creating a record by winning 114 medals, including 102 gold medals.

Covai women ICT_போதிமரம்