Monday, August 17, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -18.08.2026

நேதாஜி  சுபாஷ் சந்திர போஸ் 

    




திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:48.வலியறிதல்

குறள் எண்:475

குறள்:

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.  


பொருள்:

மயில்தோகைதானே என்று அதை அளவுக்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துபோகும்.
  
பழமொழி :

Many a slip between the cup and the lip.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. பெரியோருக்கு பணிவதும், பிறருக்கு உதவுவதும் இளைஞருக்கு அழகு என்பதை நான் அறிவேன். 

2.கல்வி ஒன்றே என்னை உயர்த்தும். எனவே நன்கு படிப்பேன் .

பொன்மொழி : 

இன்றைய இளைஞரின் திறமைதான் நாளைய நாட்டின் வலிமை.

Thought for the Day :

Youth with skills, nation with strength.

பொது அறிவு : 

1. அரசியின் மணிமுடி என்று  அழைக்கப் படுவது எது?

தாஜ்மஹால்

2. திராவிட ஒப்பிலக்கணத்தின் தந்தை யார்?

திரு. கால்டுவெல்

English words :

1. Meticulous – Very careful and precise, மிகுந்த கவனமான.

2. Compassionate – Caring and kind, இரக்கமுள்ள.

புவியியலும் சுற்றுசூழலும் :

இங்கு அடர்ந்த வெப்பமண்டலக் காடுகள் காணப்படுகின்றன.
பல்வேறு அரிய தாவரங்கள் மற்றும் விலங்குகள் இங்கு வாழ்கின்றன.
செல்லுலார் சிறை (Cellular Jail) போர்ட் பிளேரில் அமைந்துள்ளது. இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் இதற்கு முக்கியத்துவம் உண்டு.

NMMS :

SAT - SOCIAL

பாண்டியர்களின் துறைமுகங்களில் மிகவும் விறுவிறுப்பாக வணிகம் நடைபெற்ற துறைமுகம் எது?

 (1) காயல்பட்டினம்

 (2) கொற்கை

 (3) காவிரிப்பூம்ட்டினம்

 (4) உறையூர் 

 விடை: (1) காயல்பட்டினம்

ஆகஸ்ட் 18

நேதாஜி அவர்களின் நினைவுநாள்

  • நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose, சனவரி 23, 1897 – இறந்ததாகக் கருதப்படும் நாள் ஆகத்து 18, 1945) இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர்.

  • 1941 இல் சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பைத் தொடங்கி, ஆசாத்ஹிந்த் என்ற வானொலிச் சேவையையும் உருவாக்கி, விடுதலைத் தாகத்தை, அங்கிருந்த இந்திய மக்களிடம் விதைத்தார். நாட்டுக்கு எனத் தனிக் கொடியை உருவாக்கி ஜன கண மன பாடலை தேசிய கீதமாக அறிவித்தார்.

  • செருமனி, இத்தாலியின் உதவி கிடைக்காது எனத் தெரிந்தபின், சப்பான் செல்ல முடிவு செய்து, போர்க்காலத்தில், நீர்மூழ்கிக் கப்பல் மூலம் சப்பான் சென்று, இராணுவ ஜெனரல் டோஜோவை சந்தித்து உதவி கேட்டார். உதவிகள் தயாரானது. பிரித்தானிய அரசுக்கு எதிராக ராஷ் பிஹாரி போஸால் உருவாக்கப்பட்டு, செயல்படாமல் இருந்த இந்திய தேசிய ராணுவத்தை, மீள் உருவாக்கம் செய்து, அதன் தலைவரானார் சுபாஷ். 

  • விடுதலைக்காகப் போராடி, நாட்டிற்காக உயிர் தர இளைஞர்கள் வேண்டுமென ஆட்கள் திரட்டி, பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தியாவில் அனைவரும், காந்தியின் அகிம்சை வழி போராட்டத்தில் விரும்பி சென்றமையால், இராணுவத்திற்கு சிலரே செல்ல நேர்ந்தது. தமிழகத்தில், முத்துராமலிங்க தேவரால் சுமார் 600 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் ராணுவத்தில் இணைந்தனர்.

நீதிக்கதை

 பங்கிட்டுத் தின்றால் பசியாறும்

ஒரு சிறிய கிராமத்தில் உதய் என்ற சிறுவன் தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்தான். ஒருநாள் பள்ளி முடிந்து வீட்டிற்குத் திரும்பும்போது, அவனுடைய நண்பன் நியாஸ் மிகவும் சோர்வாக இருப்பதைப் பார்த்தான்.

“என்ன நியாஸ்? ஏன் இவ்வளவு சோர்வாக இருக்கிறாய்?” என்று உதய் கேட்டான்.

“இன்று காலை வீட்டில் இருந்து அவசரமாக வந்துவிட்டேன். உணவு சாப்பிடவில்லை . இப்போது மிகவும் பசிக்கிறது,” என்றான் நியாஸ்.

உதயிடம் அம்மா கொடுத்திருந்த இரண்டு இட்லிகளும் ஒரு வாழைப்பழமும் இருந்தன. முதலில் அவனுக்கும் பசி இருந்தது. இருந்தாலும், நண்பனின்நிலையை ப் பார்த்ததும் தனது உணவை இருவரும் சமமாகப் பகிர்ந்துக் கொண்டான்.

இருவரும் அருகிலிருந்த மரத்தடியில் அமர்ந்து உணவைப் பகிர்ந்து சாப்பிட்டனர். “உதய், உனக்கும் பசி இருந்திருக்கும் அல்லவா? உன் உணவை என்னுடன் ஏன் பகிர்ந்து கொண்டாய்?” என்று நியாஸ் கேட்டான்.

உதய் சிரித்துக்கொண்டே , “நாம் மட்டும் சாப்பிட்டால் வயிறு நிறையும். ஆனால், இருவரும் பகிர்ந்து சாப்பிட்டால் மனமும் நிறையும்!” என்றான்.

அப்போது அந்த வழியாகச் சென்ற ஆசிரியர் அவர்களின் செயலைக் கவனித்தார்.

“குழந்தைகளே , உணவைப் பகிர்ந்து கொள்வது சிறிய செயல் போலத் தோன்றலாம். ஆனால் அது அன்பையும் நட்பையும் வளர்க்கும் பெரிய பண்பு,” என்று பாராட்டினார்.

அன்றிலிருந்து உதயும் நியாஸும் மட்டுமல்லாமல், அவர்களுடைய வகுப்பு மாணவர்களும் தங்களிடம் இருப்பதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினர்.

நீதி:

நம்மிடம் இருப்பதைப் பிறருடன் பகிர்ந்து கொண்டால், உணவு மட்டுமல்ல—அன்பும் மகிழ்ச்சியும் பெருகும். “பங்கிட்டுத் தின்றால் பசியாறும்; பகிர்ந்து வாழ்ந்தால் மனம் நிறையும்.”

இன்றைய செய்திகள்

18.08.2026


🗒️அகில இந்திய காவல் விளையாட்டு போட்டிகளில் தமிழக காவல் அதிகாரிகள் 13 பதக்கங்களை பெற்றுள்ளனர்.

🗒️தேசிய தேர்வு முகமை சீர்திருத்தம் குறித்து என்.டி.ஏ தலைமை இயக்குநர், உயர்கல்வித் துறை செயலாளர் உள்ளிட்டோருடன் பிரகலாத் ஜோஷி ஆலோசனை மேற்கொண்டார்.

🗒️ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அனுப்பிய தொடக்ககால பிரபஞ்சத்தின் படங்களில் பல சிறிய சிவப்பு புள்ளிகள் காணப்பட்டுள்ளது என்பதைக்  காட்சிப் படுத்துகிறது.

 *விளையாட்டுச் செய்திகள்* 

🏏 *கிரிக்கெட்* 
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இலங்கை 284 ரன்களுக்கு ஆல் அவுட். டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

Today's Headlines

🗒️ Tamil Nadu police officers won 13 medals at the All India Police Games.

🗒️ Union Minister Pralhad Joshi held discussions with the Director General of the National Testing Agency (NTA), the Higher Education Secretary, and other officials regarding reforms in the NTA.

🗒️ Images of the early universe captured by the James Web Space Telescope show several small red dots.
Sports News

🏏 Cricket
First Test against India: Sri Lanka were all out for 284 runs. India won the toss and elected to bat first.

Covai women ICT_போதிமரம்

Sunday, August 16, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -17.08.2026




திருக்குறள்: 

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:48.வலியறிதல்

குறள் எண்:474


குறள்:

அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.

பொருள்:

பிறருடன் மனங்கலந்து பழகாமல், தன் சொந்த பலத்தையும் அறியாமல் தன்னைப் பெரிதாக எண்ணியவன் விரைவில் அழிவான்.

பழமொழி :

Man proposes ; God disposes.

தான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. பெரியோருக்கு பணிவதும், பிறருக்கு உதவுவதும் இளைஞருக்கு அழகு என்பதை நான் அறிவேன். 

2.கல்வி ஒன்றே என்னை உயர்த்தும். எனவே நன்கு படிப்பேன் .

பொன்மொழி : 

“இளமை என்பது விதை; திறமை என்பது அதன் வேர்கள்; வெற்றி அதன் கனிகள்.”

Thought for the Day :

Learn a skill today, build a better tomorrow.

பொது அறிவு : 

1. "ஜன கண மன " பாடல் முதன்முதலில் எப்போது பாடப்பட்டது? 

1911. 

2. "ஜன கண மன"பாடலை எழுதியவர் யார்? 

ரபீந்திரநாத் தாகூர்.

English words :

1. Prudent – Wise and careful, விவேகமான. 

2. Versatile – Able to do many things, பல்திறமைசாலி.

புவியியலும் சுற்றுசூழலும் :

அந்தமான்–நிக்கோபார் தீவுகள் இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உள்ளன.
போர்ட் பிளேர் இதன் தலைநகரமாகும்.
நிர்வாக ரீதியாக இது ஒன்றியப் பிரதேசம் (Union Territory).
அந்தமான் மற்றும் நிக்கோபார் என இரண்டு முக்கிய தீவுக் குழுக்களைக் கொண்டது.

NMMS :

SAT - Tamil

இவற்றில் எது முதன்மைச் சான்று அல்ல? 

(1) பொறிப்புகள் 

(2) நினைவுச் சின்னங்கள்

 (3) நாணயங்கள் 

(4) இலக்கியங்கள் 

விடை: (4) இலக்கியங்கள்

நீதிக்கதை

 சமம் என்றால் எல்லோருக்கும் வாய்ப்பு


ஒரு சிறிய கிராமத்தில் கவின் என்ற சிறுவனும், அவனுடைய தங்கை காவியாவும் வாழ்ந்து வந்தனர். கவினுக்கு படிப்பதற்கும் விளையாடுவதற்கும் அதிக நேரம் கொடுக்கப்பட்டது. ஆனால் காவியாவிடம், “நீ பெண் குழந்தை; வீட்டுப் பணிகளைப் பார்த்துக்கொள்” என்று அடிக்கடி கூறப்பட்டது.


காவியாவுக்கும் அறிவியலில் மிகவும் ஆர்வம் இருந்தது. ஒருநாள் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. காவியா ஒரு அழகான சூரிய சக்தி மாதிரியை உருவாக்க விரும்பினாள்.


ஆனால் வீட்டில் அவளுக்கு நேரம் கிடைக்கவில்லை. இதைக் கவனித்த கவின், “அக்காவுக்கும் படிக்கவும், தன் திறமையை வெளிப்படுத்தவும் சமமான வாய்ப்பு வேண்டும். வீட்டு வேலைகளையும் நாமிருவரும் சேர்ந்து செய்வோம்” என்றான்.


அதன்படி இருவரும் வீட்டுப் பணிகளைப் பகிர்ந்து செய்தனர். காவியா தனது மாதிரியை உருவாக்கி அறிவியல் கண்காட்சியில் கலந்து கொண்டாள். அவளுடைய மாதிரி முதல் பரிசைப் பெற்றது.


இதைக் கண்ட பெற்றோர் மகிழ்ச்சியடைந்தனர். அப்பா, “பெண் என்பதற்காக ஒரு வாய்ப்பை மறுப்பதும், ஆண் என்பதற்காக கூடுதல் வாய்ப்பு கொடுப்பதும் சரியல்ல. திறமைக்கு பாலினம் கிடையாது” என்றார்.


அன்று முதல் அந்தக் குடும்பத்தில் வேலைகளும் வாய்ப்புகளும் அனைவருக்கும் சமமாகப் பகிரப்பட்டன.


நீதி:

ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் சமமான மரியாதையும் வாய்ப்பும் வழங்க வேண்டும். சமத்துவமே சிறந்த சமுதாயத்தின் அடித்தளம்.


இன்றைய செய்திகள்

17.08.2026

🗒️தமிழக சட்டமன்றத்தில்  மானிய கோரிக்கை மீதான விவாதங்கள்  இன்று தொடங்குகிறது.

🗒️அதிநவீன போர் விமான தயாரிப்பு பணியில்  ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்துடன்  ரிலையன்ஸ் இணைந்துள்ளது.

 🗒️மெக்சிகோ: கரீபியன் கடற்கரையில் குவிந்த 1.05 லட்சம் டன் பாசிகள் படர்ந்துள்ளதால்  சுற்றுலாத்துறை பாதிக்கப் பட்டுள்ளது.

 *விளையாட்டுச் செய்திகள்*

🏀கிரிக்கெட் - இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: 2-வது நாள் முடிவில் இந்தியா 460/9 என்ற நிலையில் உள்ளது.

Today's Headlines

🗒️ The discussions on the demands for grants in the Tamil Nadu Assembly will begin today.

🗒️ Reliance has joined hands with Rolls-Royce to manufacture advanced fighter aircraft.

🗒️ Mexico: Tourism has been affected as 1.05 lakh tonnes of seaweed has accumulated along the Caribbean coast.

Sports News

🏏 Cricket - First Test against Sri Lanka: At the end of Day 2, India is at 460/9.

Covai women ICT_போதிமரம்

Friday, August 14, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -15.08.2026




திருக்குறள்: 

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:48.வலியறிதல்

குறள் எண்:473

குறள்:

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.   

பொருள்:

தம் ஆற்றலை அறியாமல், ஒரு வேகத்தில் செயலைச் செய்யத் தொடங்கித் தொடரமுடியாமல் இடையே விட்டுக் கெட்டவர் பலர்.

பழமொழி :

Make hay while the sun shines.

காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. இருளால் இருளை நீக்க முடியாது. ஒளி மட்டுமே அதை செய்யும். வெறுப்பால் வெறுப்பை நீக்க முடியாது. அன்பால் மட்டுமே அதை செய்ய முடியும் .

 2. பெரியோர் தனது அனுபவத்தையே அறிவுரையாக தருவார்கள். எனவே பெரியோரது அனுபவத்தை கேட்டு நடப்பேன்.

பொன்மொழி : 

மழையை மதிப்போம்; நீரைச் சேமிப்போம்; எதிர்காலத்தை காப்போம். 🌧️💧

Thought for the Day :

Respect the rain, protect the water, preserve the future. 🌧️💙

பொது அறிவு : 

1.இந்தியா சுதந்திரம் அடைந்த போது என்ன கிழமை? 

வெள்ளிக்கிழமை. 

2. zஇந்தியாவின் தேசிய கொடியை வடிவமைத்தவர் யார்? 

பிங்காளிவெங்கய்யா.

ஆகஸ்ட் 15

இந்திய விடுதலை நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்ட் 15ல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து தனி விடுதலை நாடானதை குறிக்கும் இந்த நாள் அரசு விடுமுறையாகும். இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும்.

இந்த நாளில் இந்தியப் பிரதமர் தில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அப்போது சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவுகூரப்பட்டு மரியாதை செலுத்தப்படுவர். பிரதமர் சென்ற ஆண்டு நாடு அடைந்த வளர்ச்சியையும், வரும் ஆண்டுக்கான குறிக்கோள்களையும் நாட்டு மக்களுக்கு அறிவிப்பார்.

ஒவ்வொரு மாநிலத் தலைநகரத்திலும் மாநில முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன் நலத்திட்ட உதவிகளையும் வழங்குவர். இதுபோல் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர்களும், அரசு அலுவலகங்களில் அதன் உயரதிகாரிகளும், பள்ளி, கல்லூரிகளில் தலைமை ஆசிரியர்/முதல்வர் அல்லது சிறப்பு விருந்தினராக அழைக்கப் பெற்றவர்கள் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றுவர்.

இன்றைய செய்திகள்

15.08.2026

🗒️சுதந்திர தின விழாவில் இந்த ஆண்டு, 'வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டு விழாவும்  கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

🗒️இரயில் டிக்கெட்டுகளில் அழியும் மை பிரச்சினைக்கு தீர்வு காண தெற்கு ரெயில்வே கடிதம் இந்திய ரெயில்வே வாரியத்திற்கு அவசர கடிதம் ஒன்று அனுப்பியுள்ளது.

🗒️மணிப்பூர் மாநிலத்தின் காக்சிங் மாவட்டம் கலெக்டராக (டெபுடி கமிஷனர்) தமிழ்நாட்டை சேர்ந்த இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஏஞ்சலின் ரெனிட்டா பொறுப்பேற்று சாதனை படைத்துள்ளார். 

 விளையாட்டுச் செய்திகள்

🏀இந்தியாவின் 80-வது சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ல்  இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் பயணம் புதிய வரலாற்றுச் சாதனையை எட்டுகிறது. 

🏀இலங்கைக்கு எதிராக காலே மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி, இந்திய ஆண்கள் அணியின் 600-வது டெஸ்ட் போட்டியாக அமைகிறது.

Today's Headlines

🗒️ This year, the 150th anniversary of the song “Vande Mataram” will also be celebrated grandly during the Independence Day celebrations.

🗒️ To find a solution to the problem of fading ink on railway tickets, the Southern Railway has sent an urgent letter to the Railway Board.

🗒️ A young IAS officer from Tamil Nadu, Angeline Renita, has created a record by taking charge as the Deputy Commissioner (Collector) of Kakching district in Manipur.

🏀 Sports News

🏀 On August 15, India’s 80th Independence Day, the Indian cricket team’s Test journey will reach a new historic milestone.

🏀 The first Test match against Sri Lanka, being played at the Galle International Stadium, will be the 600th Test match for the Indian men’s cricket team.

Covai women ICT_போதிமரம்

Thursday, August 13, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -14.08.2026





திருக்குறள்: 

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:48.வலியறிதல்

குறள் எண்:472

குறள்:
ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்

பொருள்:

தனக்குப் பொருந்தும் செயலையும் அதற்காக அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும் இல்லை.

பழமொழி :

Love your neighbour as yourself.

தன்னைப் போல் பிறரை நேசி.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. இருளால் இருளை நீக்க முடியாது. ஒளி மட்டுமே அதை செய்யும். வெறுப்பால் வெறுப்பை நீக்க முடியாது. அன்பால் மட்டுமே அதை செய்ய முடியும் .

 2. பெரியோர் தனது அனுபவத்தையே அறிவுரையாக தருவார்கள். எனவே பெரியோரது அனுபவத்தை கேட்டு நடப்பேன்.

பொன்மொழி : 

மழை வந்தால் வளம் வரும்; வளம் வந்தால் வாழ்வு வளரும்.

Thought for the Day :

Rain is the bridge between the sky and the Earth.

பொது அறிவு : 

1. கர்பத்தில் உள்ள குழந்தைக்கு எத்தனை மாதங்களில் கைரேகை உருவாகும்? 

6 மாதங்களில். 

2. 20 வகை கேன்சர் செல்களை கட்டுப்படுத்தும் காய்கறி எது? 

வெள்ளைப்பூண்டு.

English words :

Reliable – Can be trusted, நம்பகமானவர். 

Empathetic – Understands others’ feelings, பிறரின் உணர்வுகளைப் புரிந்துகொள்பவர்

புவியியலும் சுற்றுசூழலும் :

இந்தியாவின் ஆன்மா கிராமங்களில்தான் வாழ்கிறது" என்று மகாத்மா காந்தியடிகள் கூறினார். கிராமங்கள்தான் நாட்டின் முதுகெலும்பு என்றும், கிராமங்களின் முன்னேற்றமே நாட்டின் உண்மையான வளர்ச்சி என்றும் அவர் உறுதியாக நம்பினார்.இந்தியாவின் வலிமை அதன் கிராமங்களில் உள்ளது; கிராமத்தின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி.

NMMS :

MAT 

கொடுக்கப்பட்டுள்ள எண் வரிசையில் எத்தனை '6' கள் ஒற்றை எண்ணைத் தொடர்ந்தும் இரட்டை எண்ணைத் தொடராமலும் உள்ளன? 

2 5 7 3 6 4 3 4 5 6 8 6 3 4 6 5 3 6 5. 

(1) 3. 

(2) 2. 

(3) 4. 

(4) 1. 

விடை: (4) 1

ஆகஸ்ட் 14

பாகிஸ்தான் நாட்டின் சுதந்திர தினம்

நீதிக்கதை

 பொருளை பாதுகாப்போம் – பொறுப்புடன் வாழ்வோம்


ஒரு சிறிய ஊரில் ஹரிஹரன் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு தனது பொருட்களை எங்கு வைத்தான் என்பதே அடிக்கடி மறந்துவிடும். புத்தகத்தை மேசையில் வைத்துவிட்டு பேனாவைத் தேடுவான்; காலணியை ஒரு இடத்தில் கழற்றிவிட்டு வேறு இடத்தில் தேடுவான்.


ஒருநாள் பள்ளிக்குச் செல்லும்போது அவனுடைய கணிதப் புத்தகம் கிடைக்கவில்லை. வீடு முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. இறுதியில், முந்தைய நாள் விளையாடிவிட்டு வந்தபோது புத்தகத்தை வாசல் அருகே வைத்துவிட்டு மறந்தது நினைவுக்கு வந்தது.


அவன் அவசரமாக அங்கே சென்று பார்த்தபோது, புத்தகம் மழையில் நனைந்து சேதமடைந்திருந்தது. ஹரிஹரன் மிகவும் வருந்தினான். அப்போது அவனுடைய தாத்தா, “பொருள் சிறியதாக இருந்தாலும், அது நமக்குத் தேவையானது. ஒவ்வொரு பொருளையும் பயன்படுத்தியவுடன் அதற்குரிய இடத்தில் பத்திரமாக வைத்தால், அதைத் தேடி அலைய வேண்டியதில்லை; பொருளும் நீண்ட நாட்கள் நன்றாக இருக்கும்” என்று அறிவுரை கூறினார்.


அன்று முதல் ஹரிஹரன் ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டான். புத்தகங்களை அலமாரியில், பேனாக்களை பெட்டியில், காலணிகளை அதற்குரிய இடத்தில் வைத்து பாதுகாக்கத் தொடங்கினான். சில நாட்களுக்குப் பிறகு, அவனுடைய நண்பன் தனது பேனாவைக் காணாமல் தேடிக்கொண்டிருந்தான். ஹரிஹரன், “நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு நிரந்தர இடம் வைத்துக்கொள். அப்போது பொருட்கள் தொலைந்து போகாது” என்று கூறினான். நண்பனும் அந்தப் பழக்கத்தைப் பின்பற்றத் தொடங்கினான்.


நீதி:

நமக்குச் சொந்தமான பொருட்களை அலட்சியமாக வைக்காமல், அவற்றை பத்திரமாகப் பாதுகாத்து, பயன்படுத்திய பிறகு அதற்குரிய இடத்தில் வைப்பது நல்ல பழக்கம்.

இன்றைய செய்திகள்

14.08.2026

🗒️பெரும்பாலான மக்களை பாதிக்கும் வரிகளை உயர்த்தாமல், வருவாயை அதிகரிப்பதற்கான ஆலோசனைகளை வழங்குமாறு, பொருளாதார நிபுணர் மான்டேக் சிங் அலுவாலியா தலைமையிலான குழுவிடம், தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

🗒️காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் தமிழ்நாடு அரசு முறையீடு செய்துள்ளது.

🗒️நடப்பாண்டின் முழு சூரிய கிரகணம்: வானியல் நிகழ்வின் அற்புத காட்சியை கண்டுகளித்த மக்கள்
இந்திய நேரப்படி இரவு 11.16 மணிக்கு சூரிய கிரகணம் நடைபெற்றதால், இந்தியாவில் இதனை காண முடியவில்லை.

 விளையாட்டுச் செய்திகள்
🏀செஸ் -சின்க்பீல்டு கோப்பை : சிந்தாரோவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த பிரக்ஞானந்தா முதல் சுற்றில் டிரா செய்தார்.

Today's Headlines

🗒️ The Tamil Nadu government has asked a committee led by economist Montek Singh Ahluwalia to suggest ways to increase revenue without raising taxes that would affect most people.

🗒️ The Tamil Nadu government has approached the Supreme Court against the order issued by the Cauvery Water Management Authority.

🗒️ People around the world watched the amazing sight of the total solar eclipse this year. Since the eclipse occurred at 11:16 p.m. Indian time, it could not be seen from India.

🏀 Sports News

🏀 Chess – Sinquefield Cup: R. Praggnanandhaa recorded his first win by defeating Sindarov. He had drawn his first-round game.

Covai women ICT_போதிமரம்

Wednesday, August 12, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -13.08.2026

பிடல் காஸ்ட்ரோ




திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:48.வலியறிதல்

குறள் எண்:471

குறள்:

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.

பொருள்:

செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் ,இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.

பழமொழி :

Look before you leap.

ஆழம் தெரியாமல் காலை விடாதே.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. இருளால் இருளை நீக்க முடியாது. ஒளி மட்டுமே அதை செய்யும். வெறுப்பால் வெறுப்பை நீக்க முடியாது. அன்பால் மட்டுமே அதை செய்ய முடியும் .

 2. பெரியோர் தனது அனுபவத்தையே அறிவுரையாக தருவார்கள். எனவே பெரியோரது அனுபவத்தை கேட்டு நடப்பேன்.

பொன்மொழி : 

மழை வானத்தின் பரிசு; அதைச் சேமிப்பது நம் பொறுப்பு.

Thought for the Day :

The sound of rain is the music of nature.

பொது அறிவு : 

1 . ஈ.வெ.ராமசாமி அவர்களை "பெரியார் " என்றழைத்தவர்கள் யார்? 

 அன்னை மீனாம்பாள் சிவராஜ் மற்றும் நீலாம்பிகை அம்மையார். 

2. ஈ.வெ.ராமசாமி அவர்களுக்கு" பெரியார்" என்ற பட்டம் எதற்காக வழங்கப்பட்டது ? 

பெண்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டதால் 1938, நவம்பர் 13- ல் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் வழங்கப்பட்டது.

English words :

Creative – Thinks in new ways, படைப்பாற்றலுள்ளவர்.

 Courageous – Faces difficulties bravely, துணிச்சலானவர்.                   

புவியியலும் சுற்றுசூழலும் :

கிராம நிர்வாகம்
மக்களின் தேவைகளை விரைவாக அறிந்து தீர்வு காண உதவுகிறது.
ஜனநாயகத்தில் மக்களின் நேரடி பங்கேற்பை ஊக்குவிக்கிறது.
கிராம வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு அடித்தளமாக விளங்குகிறது

NMMS :

MAT 

ஒரு குறிப்பிட்ட குறியீட்டு மொழியில் 'Kit Mit Fit' என்பதை 'Some good films' எனவும், .'Zit Rit Kit' என்பதை ' Some real stories' எனவும், 'Sil Fit Rit' என்பதை 'Many good stories' எஎவும் கொண்டால் 'real' என்பதை எந்தக் குறியயீட்டால் குறிக்கலாம்? 

 (1) Zit.

 (2) Sil.

 (3) Rit.

 (4)Kit. 

 விடை: (1) Zit

ஆகஸ்ட் 13

பிடல் காஸ்ட்ரோ அவர்களின் பிறந்தநாள் 

பிடல் காஸ்ட்ரோ (Fidel Alejandro Castro Ruz, (எசுப்பானியம்: [fiˈðel ˈkastro], ஆகஸ்ட் 13, 1926 - நவம்பர் 25, 2016) கியூபாவை சேர்ந்த பொதுவுடைமைப் புரட்சியாளரும் பொதுவுடைமை அரசியல்வாதியும் ஆவார். கியூபாவில் 1959 இல் புரட்சியை வழிநடத்தி புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவின் அரசை வீழ்த்தி தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்ற காஸ்ட்ரோ ,1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார்.கூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965 இல் பதவியேற்ற இவர் கூபாவை ஒற்றைக் கட்சி சமூகவுடைமைக் குடியரசாக்கினார். 49 ஆண்டுகள் கியூபாவை ஆண்ட காஸ்ட்ரோ பிப்ரவரி 24 2008 அன்று பதவியிலிருந்து விலகினார். உலகத்தில் நீண்ட காலத்துக்கு தலைமைப் பொறுப்பில் இருந்த தலைவர் காஸ்ட்ரோ மட்டுமே. பன்னாட்டளவில், காஸ்ட்ரோ 1979-ல் இருந்து 1983 வரை மற்றும் 2006 முதல் 2008 வரை, அணி சேரா இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருந்துள்ளார்.

பன்னாட்டு இடதுகை பழக்கமுடையோர் நாள்

பன்னாட்டு இடதுகை பழக்கமுடையோர் நாள் (International Lefthanders Day) என்பது இடது கை பழக்கம் உள்ளவர்களின் தனித்துவம் மற்றும் வேறுபாடுகளைக் கொண்டாடுவதற்காக ஆண்டுதோறும் ஆகஸ்ட் 13 அன்று அனுசரிக்கப்படும் பன்னாட்டு தினமாகும். 1976 முதல் "பன்னாட்டு இடக்கை பழக்கத்தவரின் நிறுவனத்தின்" நிறுவனர் ஆர். கேம்ப்பெல் என்பவரால் கொண்டாடப்பட்டது.

நீதிக்கதை

 தனிமை வேண்டாம் – ஒற்றுமையே பலம்

ஒரு சிறிய கிராமத்தில் அருண், கார்த்திக்,ஹரிஷ் என்ற மூன்று நண்பர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களுடன் பள்ளியில் படிக்கும் மாணவன் ரவி மிகவும் அமைதியானவன். அவன் அதிகமாக யாரிடமும் பேசமாட்டான்.

ஒருநாள் பள்ளியில் ஆசிரியர் மாணவர்களை குழுக்களாகப் பிரித்து ஒரு அறிவியல் மாதிரி செய்யச்சொன்னார். ரவியை எந்தக் குழுவிலும் சேர்க்காமல் சில மாணவர்கள், “அவன் அமைதியாக இருக்கிறான்; நம்முடன் சேர்ந்து வேலை செய்ய மாட்டான்” என்று கூறினர்.

அதைப் பார்த்த அருணுக்கு வருத்தமாக இருந்தது. அவன் ரவியிடம் சென்று, “நீ எங்களுடன் சேர்ந்து இந்த மாதிரியை ச் செய்யலாம். உனக்கும் நல்ல யோசனைகள் இருக்கலாம்!” என்றான்.

ரவி முதலில் தயங்கினான். பின்னர் அவர்களுடன் சேர்ந்து வேலை செய்யத்தொடங்கினான். ஆச்சரியமாக, மாதிரியை எப்படி அழகாக அமைக்கலாம் என்பதற்கான சிறந்த யோசனையை ரவிதான் கூறினான். அனை வரும் சேர்ந்து உழைத்து, அந்தக் குழு பள்ளியில் முதல் பரிசைப் பெற்றது. ஆசிரியர் அவர்களை ப் பாராட்டி, “ஒருவரை அவர் அமைதியாக இருப்பதற்காகவோ, வித்தியாசமாக இருப்பதற்காகவோ தனியாக ஒதுக்கக்கூடாது. ஒவ்வொருவரிடமும் ஏதாவது ஒரு சிறப்பு திறமை இருக்கும். அதை அறிய வாய்ப்பு கொடுத்தால்தான் அது வெளிப்படும்” என்றார்.

அன்று முதல் மாணவர்கள் யாரையும் தனியாக ஒதுக்காமல், அனைவரையும் தங்களுடன் சேர்த்துக்கொள்ளத் தொடங்கினர்.

நீதி:

யாரையும் தனிமைப்படுத்தவோ, ஒதுக்கவோ கூடாது. ஒவ்வொருவருக்கும் தனித்திறமை உண்டு; அன்பும் ஒற்றுமையும் அந்தத் திறமையை வெளிக்கொண்டு வரும்.

இன்றைய செய்திகள்

13.08.2026

🗒️ சுதந்திர தின கொண்டாட்டம் மற்றும் வார இறுதி நாட்கள் என்பதால் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க www.tnstc.in மூலம் முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. 

🗒️இந்தியாவில் 22,000-க்கும் அதிகமான காட்டு யானைகள் உள்ளன மேலும் ஆசிய காட்டு யானைகளின் தாயகம் இந்தியா என்று பிரதமர் மோடி பெருமிதம்.

🗒️அமெரிக்காவின் நியூயார்க், நியூ ஜெர்சி ஆகிய மாநிலங்கள், ஆகஸ்ட் 15ஆம் நாளை “இந்திய சுதந்திர நாள்” என்று பிரகடனம் செய்துள்ளன. இந்தியா-அமெரிக்கா இடையிலான நீண்டகால நட்புறவை அங்கீகரிக்கும் வகையில் இந்த அறிவிப்புகள் வெளியிடப் பட்டுள்ளன.

 *விளையாட்டுச் செய்திகள்*

🏀மாமல்லபுரத்தில் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி நேற்றுத்  தொடங்கப்பட்டது.

Today's Headlines

🗒️ Due to Independence Day celebrations and the weekend, the Tamil Nadu State Transport Corporation has advised passengers to book their bus tickets in advance through www.tnstc.in to avoid crowds.

🗒️ India has more than 22,000 wild elephants. Prime Minister Modi proudly said that India is home to Asian wild elephants.

🗒️ The U.S. states of New York and New Jersey have proclaimed August 15 as "Indian Independence Day" to recognize the long-standing friendship between India and the USA.

🏀 Sports News

🏀 An international surfing competition began yesterday in Mamallapuram.

Covai women ICT_போதிமரம்