Effort is the bridge between dreams and reality.
முயற்சி தான் கனவு மற்றும் நிஜம் இடையேயான பாலம்.
இரண்டொழுக்க பண்புகள் :
1.கல்வி கற்பது பணம் சம்பாதிக்க மட்டும் அல்ல, அறிவை வளர்க்கவும் தான்.
2.எனவே படித்து எனது அறிவை வளர்த்துக் கொள்வேன்.
பொன்மொழி :
அன்பே சொர்க்கத்தின் நுழைவாயில். அன்புடன் பெருந்தன்மையான செயல்கள் புரியும்போது கடவுள் நம்மிடம் இருக்கிறார்- லூகி லார்கம்
பொது அறிவு :
01.இந்தியத் திரையுலகின் மிக உயரிய விருதுஎது?
தாதாசாகேப் பால்கே விருது
Dadasaheb Phalke Award
02. இந்தியாவின் ""டெக்கான் ராணி"" என்று அழைக்கப்படும் நகரம் எது
பூனே - Pune
English words :
slip-fall because the ground is slippery,trip-fall because foot hit something
தமிழ் இலக்கணம்:
அறிவியல் களஞ்சியம் :
இதயத்தின் வேலை என்பது, இரண்டு காரணிகளால் நடைபெறுகிறது.
இதயத் தசைகளில் ஏற்படும் மின் தூண்டுதல்கள்
இந்த மின் தூண்டலினால் இதய அறைகளில் இருந்து இரத்தம் பீய்ச்சி அடிக்கப்படுவது.
நீதிக்கதை
துளையிட்ட காசு
அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான்.
ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக் காசின் நடுவில் துளை இருந்தது. துளையிட்ட காசு கிடைப்பது அதிஷ்டம் என்று ஒரு நம்பிக்கை. அதனால், அதிஷ்டம் என்னைத் தேடி வரும், பணக்காரனாகிவிடுவேன் என்று நினைத்தான். அந்தக் காசைத் தன் கோட்டுப் பையில் போட்டுக் கொண்டான்.
அன்று, அவனுக்கு மற்ற நாளைவிட அதிக வருமானம் கிடைத்தது. எல்லாம் காசு கிடைத்த நேரம் என நினைத்தான். அன்றிலிருந்து அவன் தினமும் கோட்டுப் பையில் இருக்கும் காசைத் தொட்டுப் பார்த்துக்கொள்வான். வெளியே எடுக்கமாட்டான்.
சில ஆண்டுகளில் பணம், பதவி அனைத்தும் வந்து சேர்ந்தன. பல வருடங்களுக்குப் பின், ஒரு நாள் தன் மனைவியிடம், அந்தக் காசைப் பார்க்கவேண்டும் போல் உள்ளது என்றவாறு கோட்டுப் பையில் இருந்து எடுத்தவனுக்கு அதிர்ச்சி!
அந்தக் காசில் துளையே இல்லை. என்ன ஆயிற்று? என்று குழப்பத்துடன் பார்த்தான்.
அவன் மனைவி சொன்னாள், என்னை மன்னியுங்கள். உங்கள் கோட்டு தூசியாக இருக்கிறதே என்று வெளியே உதறினேன். காசு தெருவில் விழுந்துவிட்டது. எவ்வளவோ தேடியும் கிடைக்கவில்லை. நான்தான் வேறு காசைப் போட்டு வைத்தேன் என்றாள்.
இது எப்போது நடந்தது? என்று கேட்டான்.
அந்தக் காசு கிடைத்த மறுநாளே என்றாள்.
அவன் அமைதியாக சிந்தித்தான். உண்மையில் அதிஷ்டத்தைக் கொடுத்தது அந்த நாணயம் இல்லை. என்னுடைய நம்பிக்கைதான் என நினைத்தான். முன்பைவிட உற்சாகத்துடன் தனது பணியைத் தொடர்ந்தான்... !
இன்றைய செய்திகள்

No comments:
Post a Comment