![]() |
| பில் கேட்ஸ் |
Every fall in life is a step to rise.
வாழ்க்கையில் ஒவ்வொரு வீழ்ச்சியும் எழுவதற்கான படிகளே.
இரண்டொழுக்க பண்புகள் :
1.செல்லும் இடமெல்லாம் அன்பு, ஒழுக்கம், நேர்மை எனும் விதைகளை விதைத்துச் செல்வேன்.
2.அதன் மூலம் இவ்வுலகை நாம் நன்கு வாழக்கூடிய இடமாக மாற்ற முயற்சி செய்வேன்.
பொன்மொழி :
அதிகம் வைத்திருப்பவன் செல்வந்தன் அல்ல; அதிகம் கொடுப்பவனே செல்வந்தன்
–எரிச் ஃப்ரோம்
பொது அறிவு :
1. 2014 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்பட்டது?
02.இந்தியாவில் அதிக மழை பெய்யும் மாநிலம் எது?
English words :
vineyard – a piece of land where grapes are grown.திராட்சைத் தோட்டம்
தமிழ் இலக்கணம்:
அறிவியல் களஞ்சியம் :
முதல் 8 வாரம் வரை குழந்தைகளின் கண்களில் கண்ணீர் வராது.
மனித இதயம் சராசரியான ஒரு வருடத்திற்கு 35 மில்லியன் முறை துடிக்கிறது.அக்டோபர் 28
நீதிக்கதை
ஒரு ஊர்ல ஒரு வயசான பாட்டி தனியா வசித்து வந்தார்கள். அந்த ஊர்ல கொஞ்ச நாளா திருடங்க நடமாட்டம் அதிகமிருந்தது.
ஒரு நாள் பாட்டி வெளியே போய்விட்டு வந்து பார்த்த போது வீட்டுக் கதவு திறந்திருந்தது. உள்ளே போன பாட்டிக்கு வீட்டுக்குள் ஒரு திருடன் திரைச்சீலைக்குப் பின்னால் மறைந்து இருப்பது தெரிந்து விட்டது.
அவனை எப்படியும் தப்பிக்க விடக் கூடாது புத்திசாலித் தனமாக பிடிக்கணும்னு நினைச்ச பாட்டி உடனே ஒரு தந்திரம் செய்தார்கள்.
அங்கிருந்த விளக்கு தண்டின் முன் நின்று கொண்டு, மாய விளக்கே என் மீது கோபமா? நான் வெளியே போய் வந்ததும் என்ன நடந்தது என்று கேட்பாயே இன்று ஏன் கேட்கவில்லை என்றார்கள். இதைக் கேட்டதும் திருடனுக்கு ஆச்சரியம். பேசும் விளக்கா என்று எட்டிப் பார்த்தான்.
விளக்கு திரைச்சீலையின் அசைவில் லேசாக ஆட பாட்டி, கோபமில்லையா? அப்படியானால் என்ன நடந்தது சொல்கிறேன் கேள். பக்கத்து வீட்டு ஜூலி இன்று கடைத் தெருவுக்குப் போகும் போது ஒரு நாய் அவளைத் துரத்தியது. அவள் சத்தம் போட்டுக் கத்தினாள்.
மீண்டும் விளக்கு காற்றில் அசைய, ஓ எப்படிக் கத்தினாள் என்று கேட்கிறாயா என பாட்டி கேட்டார்கள். திருடனுக்கோ ஒன்றும் புரியவில்லை. நமக்கு மட்டும் ஒண்ணும் கேட்க வில்லை. விளக்கு ஆடுவது தெரியுது. ஆனால் கிழவி பேசுகிறாளே என்று குழம்பினான்.
மாய விளக்கே ஜூலி எப்படிக் கத்தினாள் என்று சொல்கிறேன் என்றபடி பாட்டி ஹெல்ப் ஹெல்ப் என்று உரக்கக் கத்த அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் பாட்டிக்கு ஏதோ ஆபத்து என்று ஓடி வந்தவர்கள் திருடனைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
நீதி :
காலம் அறிந்து அதற்கேற்ப புத்திசாலித் தனமாக நடந்து கொள்ள வேண்டும்.
இன்றைய செய்திகள்

No comments:
Post a Comment