திருக்குறள் :
நடுவொரீஇ அல்ல செயின்.
பழமொழி :
Hard work can accomplish any task.
எறும்பு ஊற கல்லும் தேயும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. சினம் எப்படி பட்ட உறவுகளையும் அழித்து விடும்.
2. ஆனால் பொறுமை பாறை போன்ற மனதை கூட இளக செய்து விடும். எனவே பொறுமை நம் வாழ்வில் முன்னேற மிகவும் அவசியம்
பொன்மொழி :
ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று உணரும் தருணத்தில் புத்திசாலியாகின்றான். ஆனால் ஒரு புத்திசாலி தன்னை புத்திசாலி என்று பெருமிதம் கொள்ளும் தருணத்தில் முட்டாளாகின்றான்.
பொது அறிவு :
1. உலகின் மிகப் பெரிய மலர் இனம் எது?
ரப்லேசியா அர்னால்டி.
2. இந்திய அறிவியற் கழகம் அமைந்துள்ள நகரம் எது?
பெங்களூர்.
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
விட்டமின் B - வலுவான நரம்புகள், ஆரோக்கிய இரத்த ஓட்டம். காணப்படும் உணவுப் பொருட்கள் - ஈரல், வாழைப்பழம், முருங்கை கீரை, உலர் பருப்பு, பேரீச்சம் பழம், தானியங்கள் ஆகியவற்றில் காணப்படும்
கணினி யுகம் :
Windows Logo+M (Minimize all of the windows)
நவம்பர் 25
பிடல் காஸ்ட்ரோ அவர்களின் நினைவுநாள்
பிடல் காஸ்ட்ரோ (Fidel Alejandro Castro Ruz, ஆகஸ்ட் 13, 1926 - நவம்பர் 25, 2016) கியூபாவை சேர்ந்த பொதுவுடைமைப் புரட்சியாளரும் பொதுவுடைமை அரசியல்வாதியும் ஆவார். கியூபாவில் 1959 இல் புரட்சியை வழிநடத்தி புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவின் அரசை வீழ்த்தி தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்ற காஸ்ட்ரோ ,1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார்.கியூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965 இல் பதவியேற்ற இவர் கியூபாவை ஒற்றைக் கட்சி சமூகவுடைமைக் குடியரசாக்கினார். 49 ஆண்டுகள் கியூபாவை ஆண்ட காஸ்ட்ரோ பிப்ரவரி 24 2008 அன்று பதவியிலிருந்து விலகினார். உலகத்தில் நீண்ட காலத்துக்கு தலைமைப் பொறுப்பில் இருந்த தலைவர் காஸ்ட்ரோ மட்டுமே. பன்னாட்டளவில், காஸ்ட்ரோ 1979-ல் இருந்து 1983 வரை மற்றும் 2006 முதல் 2008 வரை, அணி சேரா இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருந்துள்ளார்.[2]
அமெரிக்காவில் இருந்து 93 மைல் தொலைவில் இருந்தாலும் கியூபாவை ஒரு சோசலிச நாடாகப் பேணிய பெருமை இவரைச் சாரும். இதைவிட ருசியா-அமெரிக்க பனிப்போர் நடந்த வேளையில் இவர் ருசியாவிற்குச் சாதகமாகப் பல பணிகளைச் செய்தார்.
பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள்
பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள் (International Day for the Elimination of Violence against Women) ஆண்டுதோறும் நவம்பர் 25 ஆம் நாள் அன்று உலகெங்கணும் கொண்டாடப்பட்டு வரும் ஒரு சிறப்பு நாள் ஆகும்.
உலகளாவிய ரீதியில் பெண்கள் இன்று பல விதமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளி உலகிற்கு காட்டி அதற்கான நியாயமான தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக சர்வதேச மகளிர் தினம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினம் ஆகியன முன்வைக்கப்படுகின்றன.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1999 டிசம்பர் 17 ஆம் நாள் கூடிய போது ஆண்டு தோறும் நவம்பர் 25 ஆம் நாளை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினமாகப் பிரகடனம் செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியது. இத்தீர்மானம் ஐக்கிய நாடுகள் அவையின் 54/ 134. இலக்க பிரேரணையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
நீதிக்கதை
இன்றைய செய்திகள்
A 13th century AD land donation inscription has been found near Perungudi near Madurai Airport.
The Minister of Medicine and Public Welfare has said that additional students will be included in the 7.5% reservation for rural students in the current medical student admission.
‘INS Visakhapatnam warship in modern technology with telecommunications equipment and missiles: in-house design in line with international standards.
The Union Cabinet has approved the extension of the scheme of providing free food grains to the poor in ration shops across the country for a further 4 months.
The Junior World Cup kicked off in Odisha yesterday.
Champions League Football: Manchester United win.
No comments:
Post a Comment