Tuesday, June 24, 2025

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 25.06.25

வி.பி.சிங்

     






திருக்குறள்: 

குறள் 19: 

தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின்.     
 
விளக்கம் : மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது.

பழமொழி :

Don't judge a book by its cover. 

புறதோற்றத்தைப் பார்த்து உள்ளதைக் கணிக்காதே.

இரண்டொழுக்க பண்புகள் :

1.கல்வியும் ஒழுக்கமும் என் வாழ்வை மேம்படுத்தும்.

2. எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்.

பொன்மொழி :

புத்திசாலித்தனம் பெரிய வேலைகளை ஆரம்பித்துத் தான் வைக்கிறது. அதை முடித்து வைப்பது உழைப்புதான் - கோபர்ட்

பொது அறிவு : 

01.இந்தியாவின் சர்க்கரை கிண்ணம் என்று அழைக்கப்படும் மாநிலம் எது? 

       உத்திர பிரதேசம்(Uttar pradesh)


02. உலகிலேயே அரிசி அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் நாடு எது?

                     சீனா(China)

English words & Tips :

angry   -     கோபம்
 
agent       -    முகவர் 

Grammar Tips :

Use preposition 
 
at    for places ( small areas and location)
In. For places ( large area)

அறிவியல் களஞ்சியம் :

பால் கொதித்தால் பொங்குகிறது. ஆனால் தண்ணீர் அப்படி ஆவதில்லை. இதற்கு காரணம் பால் கொதிக்கும்போது அதிலுள்ள கொழுப்பு, புரதம் போன்றவை அடர்த்தி குறைவு என்பதால் பாலின் மேற்புறத்தில் பாலாடையாக படர்கின்றன. இது பாலில் உள்ள நீர் கொதிநிலையை அடைந்ததும் நீராவியாக மேலே எழுவதை தடுக்கிறது. எனினும் அடர்த்தி குறைவான நீராவி, பாலாடையை தள்ளி மேலே எழும்பி வெளியேறுகிறது. இதைத்தான் 'பால் பொங்குகிறது' என்கிறோம். அடுப்பின் வெப்பத்தைக் குறைத்தால் நீர் கொதிநிலையை அடையும் வேகம் குறைந்து பொங்குவது அடங்கும். 

ஜூன் 25

வி.பி.சிங் அவர்களின் பிறந்தநாள்

விஸ்வநாத் பிரதாப் சிங் (சூன் 25 1931 - நவம்பர் 272008) இந்தியக் குடியரசின் 7 ஆவது இந்திய பிரதமர் ஆவார். இவர் வி. பி. சிங் என அறியப்படுபவர். டிசம்பர் 2, 1989 லிருந்து நவம்பர் 10 1990 வரை இவர் இந்தியாவின் பிரதம மந்திரியாக இருந்தார்.

2023-இல் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் வி.பி.சிங்குக்கு முழு உருவச் சிலை அமைக்கும் அறிவிப்பை தமிழ்நாட்டு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டார்.

வி. பி. சிங்கை "இந்தியத் தலைமை அமைச்சர்களிலேயே மிகவும் அரிதான தலைமை அமைச்சராக இருந்தவர்" எனப் புகழ்ந்தார் தமிழறிஞர் கி. குணத்தொகையன்

நீதிக்கதை

 செய்யும் செயலில் அவதானம் வேண்டும்

ஒரு ஊரில் ஒரு இளம் பெண் பால் விற்று ஜீவியம் செய்து வந்தாள். அவள் தினமும் தன்னிடம் இருந்த ஒரு பசு மாட்டிலிருந்து பாலைக் கறந்து அதை ஒரு குடத்திலிட்டு தன் தலையில் வைத்து எடுத்துச் சென்று வியாபாரம் செய்து வந்தாள்.  தான் ஏழையாக இருப்பதனாலே இப்படி தினமும் பால் விற்று சீவிக்க வேண்டி உள்ளது. என் போன்ற மற்றப் பெண்களெல்லாம் விதம் விதமாக ஆடை அணிந்து எடுப்பாகச் செல்கிறார்களே என தன்னுள் கவலையுடன் இருந்தாள்.

ஒருநாள் அவள் வழமைபோல் பாலைக் கறந்தெடுத்து குடத்தினுள் விட்டு அதனை விற்பதற்காக தெரு வீதி வழியே சென்று கொண்டிருந்த போது தன் வாழ்க்கைத் தரத்தை எப்படி முன்னேற்றலாம் என கற்பனை செய்தாள்.

இன்று பாலை விற்று வரும் பணத்தில். சில கோழிக் குஞ்சுகள் வாங்குவேன். அவை வளர்ந்து பெரிதானதும்..அவைகளை விற்று வரும் பணத்தில் இரண்டு ஆட்டுக் குட்டிகள் வாங்குவேன்.. அவை வளர்ந்ததும் அவற்றை விற்று இன்னொரு பசு மாடு வாங்குவேன்.. அவற்றைக் கொண்டு ஒரு பெரிய மாட்டுப் பண்ணை வைப்பேன். அதில் வேலை செய்ய பல பெண்களை வேலைக்கு அமர்த்துவேன்.

வருமானம் பெருகவே பலவிதமான ஆடை அணிகளையும் நகைகளையும் வாங்கி அவற்றை அணிந்து கொண்டு மற்றப் பெண்கள் எல்லாம் என்னைப் பார்த்து அதிசயிக்க தக்கதாக  உல்லாசமாக இப்படி நடப்பேன், என தலையில் பால் குடம் இருந்ததை மறந்து அதைப் பிடித்திருந்த கையை எடுத்து வீசி ஸ்டையிலாக நடக்க ஆரம்பித்தாள்.

என்ன பரிதாபம் அவள் நடந்த நடையில் தலையில் இருந்த அனைத்து பாலும் கீழே கொட்டியது. குடமும் உடைந்தது.

அவளுக்கு அன்றைய பால் வியாபாரம் நஷ்டமடைந்ததுடன்..பால் குடமும் வேறு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அப்போதுதான் அவள், எந்த ஒரு காரியமும் நடந்து முடிக்கும் முன், அதை எண்ணி திட்டங்கள் போடக் கூடாது என்பதை உணர்ந்தாள்.

எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும்..அதை முதலில் கவனமாக முடிக்க வேண்டும். இடையில் வேறு நினைவுகள் வந்தால் நஷ்டமே

செய்யும் செயலில் அவதானம் வேண்டும். இல்லையேல் பெருநஷ்டம்.

இன்றைய செய்திகள்

25.06.2025


⭐9 மாவட்ட
கலெக்டர்கள் உட்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு.

⭐சென்னையில் இருந்து 2 நாள் பயணமாக  முதல்வர் மு.க.ஸ்டாலின்  ரயில் மூலம் காட்பாடி பயணம்: வேலூர், திருப்பத்தூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

⭐ பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள நீர்நிலைகள், கால்வாய்கள், மழைநீர் வடிகால்கள் மற்றும் சுமார் 1,07,677 வண்டல் வடிகட்டி தொட்டிகளை தூர்வாருதல் மற்றும் கழிவுகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஹெடிங்லி டெஸ்ட்: இந்தியா VS இங்கிலாந்து -5வது நாள் த்ரில் தொடர்கிறது.

🏀ஈட்டி எறிதல் நட்சத்திரம் நீரஜ் சோப்ரா  செக் குடியரசின் ஆஸ்ட்ராவாவில் நடைபெறும் மதிப்புமிக்க கோல்டன் ஸ்பைக் போட்டியில் இடம்பெறுகிறார்.

Today's Headlines

✏️Tamil Nadu government ordered  55 IAS officers, including 9 district collectors tobe transferred: 

✏️  Tamilnadu state Chief Minister M.K. Stalin will travel by train from Chennai to Katpadi for a 2-day trip: He will participate in various programmes in Vellore and Tirupattur.

✏️As a precautionary measure for the monsoon, dredging and waste removal work is being carried out in water bodies, canals, rainwater drains and in approximately 1,07,677 sediment filter tanks, in the Chennai Corporation areas.

 *SPORTS NEWS*

🏀 Headingley Test: India VS England - 5th Day  thrill continues. 

🏀 Javelin thrower Neeraj Chopra will feature in the prestigious Golden Spike tournament in Ostrava, Czech Republic.

Covai women ICT_போதிமரம்

Monday, June 23, 2025

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 24.06.25

 


   






திருக்குறள்: 

குறள் 14:

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.

விளக்கம் : மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்.

பழமொழி :

Books open more doors than keys do. 

புத்தகங்கள் திறக்காத கதவுகள் இல்லை.

இரண்டொழுக்க பண்புகள் :

1.கல்வியும் ஒழுக்கமும் என் வாழ்வை மேம்படுத்தும்.

2. எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்.

பொன்மொழி :

குழந்தை பருவத்தில்தான் சொர்க்கம் நம்மிடையே உள்ளது - வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்

பொது அறிவு : 

01.இந்தியாவின் புராண காலங்களில் தக்சண கங்கா என்று அழைக்கப்பட்ட நதியின் தற்போதைய பெயர் என்ன?

கோதவரி (Godavari)

02. இந்தியாவில் அமிர்தசரத்தில் உள்ள பொற்கோவிலை முழுமையாக கட்டி முடித்தவர் யார்?

குரு அர்ஜுன் தேவ்
(Guru Arjun dev)

English words & Tips :

 attack    -     தாக்குதல்
 
 allow         -       அனுமதி

Grammar Tips: 

Difference between 
 I used to and I am used to, 

1,I used to wake up early in the morning 

2,I am used to waking up early in the morning 
  
1 Describes something that regularly happens in the past but it does not happen now

2. Describe something that feel normal and familiar because it is not new anymore

அறிவியல் களஞ்சியம் :


செவ்வாய் கோளில் உள்ள 'அர்சியா மான்ஸ்' என்ற உயரமான எரிமலையை விஞ்ஞானிகள் புகைப்படம் எடுத்துள்ளனர். 2001ல் அமெரிக்காவின் நாசா அனுப்பிய 'மார்ஸ் ஒடிசிய் ஆர்பிட்டர்' கடந்த மே 2ல், தெர்மல் எமிசன் இமேஜிங் சிஸ்டம் தொழில்நுட்பம் மூலம் இந்த புகைப் படத்தை எடுத்துள்ளது. இதன் உயரம் 20 கி.மீ. அகலம் 120 கி.மீ. இது பூமியின் உயரமான எரிமலையான ஹவாய் தீவிலுள்ள 'மவுனா லாவ்' எரிமலையை (9 கி.மீ.,) விட இரண்டு மடங்கு உயரமானது. மேலும் 'அர்சிய மான்ஸ்' பகுதியில் மேகத்தின் தடிமன், பூமியில் மவுனா லாவ் பகுதி மேகத்தை விட அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

ஜூன் 24

கண்ணதாசன் அவர்களின் பிறந்நாள்


கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் "அரசவைக் கவிஞராக" இருந்தவர். இவர் சேரமான் காதலி  என்ற நூலுக்காக சாகித்ய அகாதமி விருது (1980) பெற்றவர்.

நீதிக்கதை

 அன்பா, செல்வமா, வெற்றியா? எது சிறந்தது?

ஒரு ஊரில் குமரன் தன் தாய் தந்தையுடன் வசித்துவந்தான். அப்போது அவன் வீட்டின் முன் மூன்று வயதானவர்கள் வந்து ‘ உள்ளேவரலாமா ?‘ என்று கேட்டனர்.

தந்தை ‘வாருங்கள்’ என்றார்.

‘நாங்கள் மூவரும் ஒன்றாக வரமுடியாது…யாராவது ஒருவர் தான் வரமுடியும்…என் பெயர் பணம்…இவர் பெயர் வெற்றி…இவர் பெயர் அன்பு..எங்கள் மூவரில் ஒருவர் தான் ஒரு வீட்டிற்குள் செல்லமுடியும்…எங்கள் மூவரில் உங்களுக்கு யார் வேண்டுமோ அவரை அழைத்துக் கொள்ளுங்கள்’ என்றார் பணம் எனப்படுபவர்.

குமரனின் தந்தை ‘ வெற்றியை அழைக்கலாம்..நாம் எந்த வேலையைச் செய்தாலும் அதில் வெற்றியடையலாம்’ என்றார்.

ஆனால் குமரனோ …’அப்பா பணத்தையே உள்ளே அழைக்கலாம்…நம்மிடம் பணம் சேர்ந்துவிட்டால்…எல்லாவற்றையும்..வெற்றி ..உட்பட …அனைத்தையும் வாங்கலாம்’ என்றான்.

ஆனால் குமரனின் தாயோ ‘வேண்டாம்…அன்பையே அழைக்கலாம்.அன்பு தான் முக்கியம்’ என்றாள்.

பின் மூவரும், ”அன்பு உள்ளே வரட்டும்” என்றனர்.

அன்பு உள்ளே வர, அவரைத் தொடர்ந்து வெற்றியும், பணமும் கூட உள்ளே நுழைந்தனர்.

உடன் குமரனின் அம்மா’அன்பை மட்டும் தானே உள்ளே அழைத்தோம்’ என்றார்.

அன்பு சொன்னார்,’ நீங்கள் பணத்தையோ, வெற்றியையோ அழைத்திருந்தால்..மற்ற இருவரும் வெளியே நின்றிருப்போம்.

ஆனால் அன்பான என்னை வரச் சொன்னதால்.. நான் இருக்கும் இடத்தில் தான் பணமும், வெற்றியும் இருக்கும்..ஆகவே அவர்களும் உள்ளே வந்து விட்டனர்’.

அன்பு உள்ளம் இருந்தால்..நம் வாழ்வில் வெற்றியும்,தேவையான வசதிகளும் தானாகவே வந்துவிடும்.


இன்றைய செய்திகள்

24.06.2025

⭐ தமிழ்நாடு அரசு
அறிவிப்பின்படி பூங்காவாக மாறுகிறது கிண்டி ரேஸ் கோர்ஸ்! ரூ.4,832 கோடி மதிப்பிலான இந்த நிலத்தில் பசுமை பூங்கா அமைக்கப்படும்.

⭐பொது இடங்களில் போதுமான அளவு கழிப்பறைகளை அமைத்து, அவற்றை தரமாக பராமரிக்க வேண்டும்," என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசிற்கு அறிவுறுத்தியுள்ளது.

⭐UPSC
முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 25,000 ஊக்கத்தொகை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

⭐உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதியில் 20% க்கும் முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் பாராளுமன்றம் அச்சுறுத்தியுள்ளது - இது எண்ணெய் விலைகள் பீப்பாய்க்கு $100 க்கு மேல் உயரக்கூடும்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀பிரயாக்ராஜில் (அலகாபாத்) முதல் முறையாக நடைபெறும் 20 வயதுக்குட்பட்ட தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜூன் 22 அன்று மேம்படுத்தப்பட்ட மதன் மோகன் மால்வியா மைதானத்தில் தொடங்கியது.

🏀கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையில், ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாக, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஜூன் 28 ஆம் தேதி தொடங்கி ஜூலை 22 வரை நடைபெறும்.


Today's Headlines

✏ Tamil Nadu Government Announces Guindy Race Course to be converted into a park, A green park will be built on this land worth Rs. 4,832 crore.

✏ "The Madras High Court has instructed the Tamil Nadu government to construct sufficient number of toilets in public places and maintain them to a standard," it said.

✏ Tamil Nadu government announcement regarding UPSC Incentive of Rs. 25,000 for those who pass the first stage exam .

✏ Iran's parliament has threatened to close the Strait of Hormuz, which is crucial for more than 20% of global oil exports - a move that could send oil prices above $100 a barrel.

 SPORTS NEWS
🏀 The first-ever National Junior Athletics Championship under 20 years of age in Prayagraj (Allahabad) began on June 22 at the upgraded Madan Mohan Malviya Stadium.

🏀 Led by captain Harmanpreet Kaur, with Smriti Mandhana as vice-captain, the Indian women's cricket team will play from June 28 to July 22.

Covai women ICT_போதிமரம்

Sunday, June 22, 2025

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 23.06.25

  


 






திருக்குறள்: 

குறள் 13:

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.

விளக்கம் : மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.

பழமொழி :

Hitch your wagon to a star. 

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.கல்வியும் ஒழுக்கமும் என் வாழ்வை மேம்படுத்தும்.

2. எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்.

பொன்மொழி :

உங்கள் எதிர்காலத்தை உங்களால் மாற்ற முடியாது . பழக்க வழக்கங்களை மாற்றலாம் . உங்கள் பழக்கவழக்கங்கள் நிச்சயம் எதிர்காலத்தை மாற்றும்- ஏ பி ஜே அப்துல் கலாம்.

பொது அறிவு : 

01.இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம் எது?

நாளந்தா பல்கலைக்கழகம்
பீகார்(Nalanda university- Bihar)

02. இந்தியாவின் கேப் கென்னடி என்று அழைக்கப்படும் இடம் எது?

ஸ்ரீஹரிகோட்டா-ஆந்திரபிரதேசம்
Sriharikota-Andarapradesh

English words & Tips :

 alone     -      தனிமை
 
  ability    -       திறமை

Grammar Tips:

"At" and "in" are prepositions used to indicate location, but they differ in their specificity. 
"In" is used for enclosed spaces or larger areas, like rooms, cities, or countries.
"at" is used for specific points or locations, like addresses or specific places like a bus stop or particular house

அறிவியல் களஞ்சியம் :


செவ்வாய் கோளில் உள்ள 'அர்சியா மான்ஸ்' என்ற உயரமான எரிமலையை விஞ்ஞானிகள் புகைப்படம் எடுத்துள்ளனர். 2001ல் அமெரிக்காவின் நாசா அனுப்பிய 'மார்ஸ் ஒடிசிய் ஆர்பிட்டர்' கடந்த மே 2ல், தெர்மல் எமிசன் இமேஜிங் சிஸ்டம் தொழில்நுட்பம் மூலம் இந்த புகைப் படத்தை எடுத்துள்ளது. இதன் உயரம் 20 கி.மீ. அகலம் 120 கி.மீ. இது பூமியின் உயரமான எரிமலையான ஹவாய் தீவிலுள்ள 'மவுனா லாவ்' எரிமலையை (9 கி.மீ.,) விட இரண்டு மடங்கு உயரமானது. மேலும் 'அர்சிய மான்ஸ்' பகுதியில் மேகத்தின் தடிமன், பூமியில் மவுனா லாவ் பகுதி மேகத்தை விட அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

ஜூன் 23

கிஜூபாய் பதேக்கா அவர்களின் நினைவுநாள்


கிஜூபாய் பதேக்கா (Gijubhai Badheka, 15 நவம்பர் 1885 – 23 ஜூன் 1939) சித்தல் நகரில் பிறந்த இவர், இந்தியாவில் மாண்டிசோரி கல்வி முறையை அறிமுகப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தார். இவர் “மீசை உள்ள அம்மா“ எனவும் அறியப்படுகிறார். முதலில் அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். 1923 – ல் அவருடைய மகன் பிறந்த பிறகு, அவர் குழந்தை வளர்ச்சி மற்றும் கல்வியில் தனது ஆர்வத்தை செலுத்தினார். 1920-ல் பதேகா “ பால மந்திர்” என்னும் முன் தொடக்கப் பள்ளியை  நிறுவினார். “ பகல் கனவு“ போன்ற பல கல்விசார் நூல்களை வெளியிட்டுள்ளார்.

நீதிக்கதை

 விட்டுக் கொடுத்து நடந்தால் ஒற்றுமை வளரும், நஸ்டம் ஏற்படாது

ஒரு வீட்டில் இரண்டு பூனைகள் நண்பர்களாயிருந்தன….ஆனால் அவைகள் இரண்டும் ஒற்றுமையில்லாது அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்தன.

ஒரு நாள் அப்பூனைகளுக்கு ஒரு அப்பம் கிடைத்தது. அவை இரண்டும் அதை சாப்பிட முனைந்த போது அதை சரிசமமாக பிரிப்பதில் அவைகளுக்குள் பிரச்சனை ஏற்பட்டது.

அதனால் பூனைகள் இரண்டும் யாரிடமாவது சென்று அப்பத்தை சரிசமமாக பங்கிட்டு தரச்சொல்லலாம் என எண்ணி வீட்டிற்கு வெளியே வந்தன. அப்போது ஒரு குரங்கு அங்கு வந்தது.

குரங்கிடம் அப்பத்தை கொடுத்து  அதைச் சமமாக பிரித்துத் தரும்படி கேட்டன. குரங்கும் மிக மகிழ்வுடன் அதற்கு சம்மதித்து ஒரு தராசு கொண்டு வந்து, அப்பத்தை இரண்டாக பிய்த்து தராசின் ஒவ்வொரு தட்டிலும் ஒவ்வொரு அப்பத்துண்டை வைத்து வைத்தது.

அப்போது ஒரு அப்பத் துண்டு சிறிது பெரிதாக இருந்ததினால் அந்தத் துண்டு இருந்த தட்டு சற்று கீழே பதிந்தது. உடனே அந்தக் குரங்கு அந்த அப்பத் துண்டை எடுத்து ஒரு கடி கடித்து சாப்பிட்டு விட்டு மீதியை தட்டில் போட்டது . இப்போது மற்றத் தட்டு கீழே தாழ்ந்தது. அப்போதும் அந்த தட்டில் இருந்த அப்பத்துண்டை எடுத்து சிறிது  கடித்து விட்டு மீண்டும் போட்டது.

இப்படியே மாறி மாறி தட்டுகள் தாழ…குரங்கும் மாறி மாறி அப்பத்துண்டுகளை கடித்துச் சாப்பிட்டது.

அப்பம் குறைவதைக் கண்ட பூனைகள் இனி நீங்கள் அப்பத்தை பிரிக்க வேண்டாம் நாங்களே பார்த்துக்கொள்கிறோம்” என மீத முள்ள அப்பத்தைத் தரும்படி கேட்டன.

ஆனால் குரங்கோ, மீதமிருந்த அப்பம் ‘நான் இது வரை செய்த வேலைக்கு கூலி’ என்று சொல்லிவிட்டு அதையும் வாயில் போட்டுக்கொண்டது.

பூனைகள் ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுத்து ஒற்றுமையாக இருந்திருந்தால்…அப்பத்தை சாப்பிட்டு இருக்கலாம். ஒற்றுமையில்லாததால் நஷ்டம் அடைந்தன.

நாமும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அன்பாக இருந்தால், உள்ளதையும் இழக்காமல் ஒற்றுமையுடனும் இருக்கலாம்

இன்றைய செய்திகள்

23.06.2025

⭐புதிய மினி பஸ் சேவை திட்டத்தின் மூலம் 3,103 வழித்தடங்களில் போக்குவரத்து வசதி; தற்போது வரை 90,000 கிராமங்களை சேர்ந்த 1 கோடி பேர் பயன்பெற்றுள்ளனர். தமிழக அரசு தகவல்.

⭐ ஈரானிய அணுசக்தி நிலையங்கள் உட்பட மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

⭐டெல்லியில் வீடுகள் இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர் குடும்பங்களுக்கு வங்கிக் கணக்கில் தலா ரூ.8000 நிதியுதவி வழங்கினார் அமைச்சர் ஆவடி நாசர்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀கிளாட்பெக் களிமண் போட்டியில் நடந்த இறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் நோலியா மந்தாவை 6-2, 6-4 என்ற கணக்கில் தோற்கடித்து டீன் ஏஜ் வீராங்கனை மாயா ராஜேஷ்வரன் தனது முதல் ITF ஜூனியர் பட்டத்தை வென்றார்.

🏀FIH ஹாக்கி புரோ லீக்கில் இன்று இந்தியாவின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் பெல்ஜியத்தை எதிர்கொள்கின்றன.

🏀பாரீஸ் டைமண்ட் போட்டியில்
 88.16 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து சாம்பியன் பட்டம் வென்றார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா.


Today's Headlines

⭐ By new mini bus service project transport facilities are afforded to 3,103 routes till date. Up to 90,000 villages and  1 crore people are benefitted information by Tamil Nadu Government.

⭐In three nuclear power stations including  Iranian nuclear power stations    United States did the air strike. 

⭐ Minister Avadi Nasar has  donated Rs.8000 in the bank accounts of people who were affected by Delhi house demolition.

⭐Maya Rajeshwaran, the first junior to defeat Switzerland's Noliya Manta by 6-2, 6-4 in the Gladbeck Kaliman competition and won her first IFT junior title.

⭐In FIH Hockey Pro League today Indian men and women facing the Belgium team.
Indian player Neeraj Chopra won the championship by throwing 88.16 meters in Javelin throw

Covai women ICT_போதிமரம்

Thursday, June 19, 2025

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 20.06.25

கவிஞர் சுரதா

   






திருக்குறள்: 

குறள் 12:

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

விளக்கம் : உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.

பழமொழி :

 Kindness makes even intelligence beautiful.

 நற்குணம் இருந்தால் அறிவும் அழகாகிறது.

இரண்டொழுக்க பண்புகள் :

1. காகம் ஒற்றுமையையும், தேனீயும் எறும்புகளும் சுறுசுறுப்பையும் போதிக்கின்றன.

2. இயற்கையை காப்பதோடு மட்டும் அல்லாது அவற்றில் இருந்து பாடமும் கற்றுக் கொள்வேன்.

பொன்மொழி :

படைப்பில் பிரம்மாண்டமான படைப்பு நமது மனதுதான் . மனதை அழகுபடுத்துங்கள் , வாழ்க்கை அழகாகும். - புத்தர்

பொது அறிவு : 

01.உலக அஞ்சலக தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
அக்டோபர் 9(October 9)

02. அடையாறு புற்றுநோய் மையத்தை ஏற்படுத்தியவர் யார்?
டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி
Dr.Muthulakshmi Reddy

English words & Tips :

 awful     -     மிக மோசமான 
 

converse      -     உரையாடு

Grammar Tips : 

Fish (one  fish)

Fish ( 3or more when they are same type) 

Fishes ( 3or more fish when they are different type of fish)

அறிவியல் களஞ்சியம் :

மைக்ரோசாப்ட் உருவாக்கிய அரோரா AI, சூறாவளி மற்றும் மணல் புயல் உட்பட பல வானிலை நிகழ்வுகளை 91% துல்லியத்துடன் கணித்துள்ளது. 

ஜூன் 20

கவிஞர் சுரதா அவர்களின் நினைவுநாள்

சுரதா (Suratha; 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால்‌ பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக் கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர்.

நீதிக்கதை

 துஷ்ட்டருக்கு அறிவுரை கூறக் கூடாது



ஒரு காட்டில் ஒரு நாள் அடை மழை பெய்துக் கொண்டிருந்தது. அப்போது அந்தக் காட்டில் இருந்த ஒரு குரங்கு மழையில் நனைந்து நடுங்கியவாறு ஒரு மரத்தடியில் ஒதுங்கி நின்றது.

அந்த மரத்தில் இருந்த பறவை ஒன்று கூடு கட்டி தன் குஞ்சுகளுடன் மழைக்கு நனையாது பாதுகாப்பாக உட்கார்ந்து கொண்டிருந்தது.

மரத்தடியில் குரங்கு நனைந்து நடுங்குவதைப் பார்த்ததும் பறவைக்கு குரங்கு மீது இரக்கம் வந்தது.  மனம் பொறுக்காமல் ‘ குரங்காரே..என்னைப்பாரும்…வெய்யில் மழையிலிருந்து என்னையும் என் குஞ்சுகளையும் காப்பாற்றிக்கொள்ள கூடு கட்டியிருக்கிறேன்.  அதனால் தான் இந்த மழையிலும் நாங்கள் சந்தோஷமாக இருக்கிறறோம். நீரும் அப்படி ஒரு பாதுகாப்பான கூடு செய்திருக்கலாமே. கூடு இருந்தால் நீர் இப்படி நனைய மாட்டீர் அல்லவா? என்று புத்தி சொன்னது. இதனைக் கேட்ட குரங்காருக்கு கோபம் சீறிக் கொண்டு வந்தது. உன்னைவிட நான் எவ்வளவு வலுவானவன். எனக்கு நீ புத்தி சொல்கிறாயா?….

இப்போ உன்னையும் உன் குஞ்சுகளையும் என்ன செய்கிறேன் பார்’ என மரத்தில் விடுவிடு என ஏறி பறவையின் கூட்டை பிய்த்து எறிந்தது.

பறவைக்கு அப்போதுதான் புரிந்தது’ அறிவுரைகளைக்கூட…..அதைக்கேட்டு நடப்பவர்களுக்குத்தான் சொல்லவேண்டும்  என்று.

துஷ்டனுக்கு நல்லது சொல்லப் போய் தனக்கும் தன் குஞ்சுகளுக்கும் பாதுகாப்பாக இருந்த கூட்டை இழந்து நனைகின்றோமே என மனம் வருந்தியது.

நாமும்…ஒருவருக்கு அறிவுரை வழங்குமுன் அவர் அதனை ஏற்று நடப்பாரா என்று புரிந்துகொண்ட பின்னரே அறிவுரை வழங்கவேண்டும்.


இன்றைய செய்திகள்

20.06.2025


⭐தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும்: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை.

⭐ தமிழ்நாடு அரசு வீடு தேடி சென்று, ரேஷன் பொருட்களை விநியோகிக்க திட்டமிட்டுள்ளது.

⭐ மத்திய கிழக்கு நாடுகள் உற்பத்தி செய்யும் எண்ணெயை உலகச் சந்தைகளுக்கு கொண்டு செல்லும் முக்கிய நீர்வழி பாதையான 'ஹார்மோஸ் நீரிணை'யை மூடப்போவதாக ஈரான் அறிவித்துள்ளது.

⭐பொதுமக்களுக்கு இலவசமாக சுத்தமான  குடிநீர் வழங்கும் வகையில் சென்னையில் ரூ.6.04 கோடியில் 50 குடிநீர் ஏடிஎம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀லீட்ஸ் டெஸ்டுக்கு முன்னதாக எம்எஸ் தோனியின் சாதனையை ரிஷப் பந்த் எதிர்நோக்குகிறார்.

🏀ஹாக்கிக்கு ஒரு பெரிய ஊக்கமாக, 2025 ஆம் ஆண்டு FIH ஆண்கள் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கியை நடத்துவதற்காக ஹாக்கி இந்தியா தமிழ்நாடு அரசாங்கத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.


Today's Headlines


✏ Temperatures in Tamil Nadu to be above normal: Chennai Meteorological Department warns. 

✏ Tamil Nadu government plans to go door to door and distribute ration items.

✏ Iran has announced that it will close the Strait of Hormuz, a key waterway that carries oil produced by Middle Eastern countries to world markets.

✏ Chief Minister M.K. Stalin inaugurated 50 drinking water ATMs in Chennai at a cost of Rs. 6.04 crore to provide free clean drinking water to the public.

 SPORTS NEWS 

🏀 Rishabh Pant looks forward to matching MS Dhoni's record ahead of Leeds Test.

🏀 In a major boost for hockey, Hockey India has signed a Memorandum of Understanding with the Tamil Nadu government to host the FIH Men's Junior World Cup Hockey in 2025.

Covai women ICT_போதிமரம்