Thursday, January 22, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.01.2026

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்





திருக்குறள்: 

குறள் 249: 

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் 
அருளாதான் செய்யும் அறம். 

விளக்க உரை: 

அருள் மேற்கொள்ளாதவன் செய்கின்ற அறச்செயலை ஆராய்ந்தால், அஃது அறிவு தெளியாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றது.

பழமொழி :

One step each day changes everything. 

தினமும் ஒரு அடி அனைத்தையும் மாற்றும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தரமாட்டேன்.

2. துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.

பொன்மொழி : 

உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதே போல மனதுக்கு பயிற்சி புத்தக வாசிப்பு - சிக்மன்ட் பிராய்டு

பொது அறிவு : 

01.காவிரி நதி வங்காள விரிகுடாவில் எங்கு கலக்கிறது?

மயிலாடுதுறை - பூம்புகார் 
Mayiladuthurai -Poompuhar


02.இன்சுலினை சுரக்கும் உறுப்பு 
எது?

கணையம் -pancreas

English words :

plaintively-sadly

gloomy-depressing

தமிழ் இலக்கணம்: 

 பொருள்கள் –பொருட்கள் எது சரி என்று பார்ப்போமா? 
இதற்கு ஒருமை பன்மையின் இலக்கண விதியை முதலில் தெரிந்து கொள்வோம். 
குறிலுக்கு அடுத்ததாக வரும் ல்,ள் சொற்கள் பன்மைக்கு மாறும் போது ல் 'ற்' ஆகவும், ள் 'ட்' ஆகவும் மாறும் 
எ.கா –கல் –கற்கள்
சொல் –சொற்கள்
முள் –முட்கள்
புள்.  –புட்கள்
ஆனால் இரண்டு குறில் எழுத்துக்களை அடுத்து வரக்கூடிய ல், ள் ஆகிய எழுத்துக்கள் பன்மையில் எழுதும் போது கள் விகுதி மட்டும் சேர்ந்து வரும்.
எ.கா –விரல் –விரல்கள்
குறள் –குறள்கள்
எனவே பொருள்கள் என்பது தான் சரி.

ஜனவரி 23

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்நாள்



நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose, சனவரி 23, 1897– இறந்ததாகக் கருதப்படும் நாள் ஆகத்து 18, 1945) இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர். காங்கிரஸ் சனநாயகக் கட்சியின் "பார்வர்ட்" எனும் ஆங்கில இதழில், ஆசிரியரான நேதாஜி, உணர்ச்சி ததும்பும் பல கட்டுரைகளை எழுதினார்.  இந்திய தேசிய ராணுவம் நெருக்கடியான நிலையில் இருந்த போது, ஆகத்து 15, 1945ல் அவர் இறுதியாக அறிக்கை வெளியிட்டார்.அதன் சுருக்கம் இதோ

நீதிக்கதை

 சேவலும் இரத்தினக்கல்லும்


ஒரு சேவல் தனக்குத் தேவையான உணவை குப்பையைக் கிளறித் தேடிக் கொண்டிருந்தது. அப்போது அதற்கு ஒரு விலை மதிப்பற்ற இரத்தினக்கல் கிடைத்தது. அதனை பார்த்த சேவலின் குஞ்சு ஒன்று சேவலின் அருகே வந்து ஆவலுடன் அந்தக் கல்லை திருப்பி போட்டது. உடனே சேவல் வருத்தமாக இந்தக் கல் எனக்கு கிடைத்ததனால் என்ன பயன் கிடைக்கப் போகிறது. அதுவே ஒரு இரத்தின வியாபாரியின் கைக்கு கிடைத்திருந்தால் இந்தக் கல்லின் மதிப்பு என்னவென்று அவனுக்கு தெரிந்திருக்கும். எனக்கு இந்தக் கல் கிடைத்ததைக் காட்டிலும் இந்த குப்பையிலிருந்து ஒரு தானியம் கிடைத்திருந்தால் அதுவே எனக்குக் கிடைத்த விலை மதிப்பில்லாதப் பொருள் என்று கூறியது சேவல். 


நீதி :

எந்த ஒரு பொருளும் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் தான் சிறப்பு.

இன்றைய செய்திகள்

23.01.2026

⭐திருவாரூர் பள்ளி மாணவிக்கு டெல்லி குடியரசு தின விழாவில் பங்கேற்க அழைப்பு. சுதந்திரப்போராட்ட காலத்தில் சுபாஷ் சந்திரபோசின் ராணுவப் படையில் சேர்ந்து பணியாற்றிய நீரா ஆர்யா என்ற பெண்மணி குறித்து கட்டுரை எழுதினார்.
மாணவி வைகயோஷனாவுக்கு பதக்கம் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் வழங்கப்பட உள்ளது.

⭐நியூசிலாந்து மலையடிவாரத்தில் பயங்கர நிலச்சரிவு.. மண்ணில் புதைந்த சுற்றுலா முகாம்கள் பலர் மாயம்.

⭐இந்தியாவில் குருகிராமில் தனது முதல் பல்கலைக்கழக வளாகத்தை அமைத்த பிரிட்டிஷ் அரசு, இந்தியாவில் மேலும் 9 கிளைகளை ஆரம்பிக்க உள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் முஜிபுர் ரகுமான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 3 டி20 போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 3-வது வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

Today's Headlines

⭐A Thiruvarur schoolgirl was invited to participate in the Republic Day celebrations in Delhi. She wrote an article about a woman named Neera Arya, who served in Subhas Chandra Bose's army during the freedom struggle. Vaigayoshana will be awarded a medal and Rs. 10 thousand in cash. 

⭐A terrible landslide in the foothills of New Zealand. Many people are missing from tourist camps buried in the soil.

⭐The British government, which set up its first university campus in Gurugram, India, is set to open 9 more branches in India.

 SPORTS NEWS 

🏀Afghanistan's Mujibur Rahman took 4 wickets in the 2nd T20I against West Indies. He became the 3rd player to take a hat-trick in 3 T20Is

Covai women ICT_போதிமரம்

Wednesday, January 21, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.01.2026




 






திருக்குறள்: 

குறள் 246: 

பொருள்நீங்கிப் பொச்சாந்தா ரென்பர் அருள்நீங்கி 
அல்லவை செய்தொழுகு வார். 

விளக்க உரை: 

அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார்

பழமொழி :

Time spent in learning is never wasted. 

கற்றலில் செலவழித்த நேரம் எப்போதும் வீணாகாது.

இரண்டொழுக்க பண்புகள் :

1. நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தரமாட்டேன்.

2. துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.

பொன்மொழி : 

புத்தகங்கள் காலத்தின் விதை நெல் - பாரதிதாசன்

பொது அறிவு : 

01.தென் இந்தியாவில் மிக நீளமான கடற்கரையைக் கொண்ட மாநிலம் எது?

ஆந்திரப் பிரதேசம்-Andhra pradesh

02.உலகிலேயே மிகப்பெரிய நூலகம் எங்கு உள்ளது?


அமெரிக்கா-வாஷிங்டன் D.C
Washington, D.C., USA.

English words :

inhabitants-citizens

hit the sack - go to sleep

தமிழ் இலக்கணம்: 

 ஒரு சொல் முழுதாக முடியாமல் பாதியில் நிற்பது எச்சம் எனப்படும்
இது வினையெச்சம் பெயரெச்சம் என்று இருவகைப்படும். 
பெயரெச்சம் வினையெச்சம் என்று எவ்வாறு கண்டு பிடிப்பது என்று இன்று காண்போம்
எச்சத்திற்கு பின் வினைச் சொல் வந்தால் வினையெச்சம்.
எ. கா – எழுந்து இது ஒரு எச்சம் 
இதன் பிறகு வந்தான், சென்றான், நடந்தான் போன்ற வார்த்தைகள் வரும். இவை அனைத்தும் வினைச் சொற்கள். எனவே இது வினையெச்சம்
 சென்ற என்பது ஒரு எச்சம்.
இதன் பிறகு வண்டி, குதிரை, மாணவன் போன்ற சொற்கள் வரும். இவை அனைத்தும் பெயர் சொற்கள் எனவே இது பெயரெச்சம்

ஜனவரி 22

  • 1968 – அப்பல்லோ 5 விண்கலம் முதலாவது நிலாக்கலத்தைத் தாங்கி விண்வெளிக்கு சென்றது.

நீதிக்கதை

 கற்றப் பாடம்


ஒரு நாள் காட்டில் உள்ள சிங்கம், நரி, கழுதை ஆகிய மூன்றும் சேர்ந்து வேட்டைக்குச் சென்றன. அன்று வேட்டையில் கிடைப்பதை சமமாகப் பிரித்துக் கொள்வது என்று மூன்றும் முடிவு செய்தன. வேட்டைக்கு செல்லும் வழியில் கொழுத்த கலைமான் ஒன்று அகப்பட்டது. அதனை சிங்கம் பங்கு போடச் சொல்லி கழுதைக்கு கட்டளை இட்டது. அக்கழுதையோ ஏற்கனவே மூவரும் செய்து கொண்ட ஒப்பந்தப்படி கலைமானை மூன்று சமப்பங்காக கூறு போட்டது. சிங்கமோ, தனக்கு மரியாதைக் கொடுக்காமல் சமபங்கு போட்ட கழுதையின் மேல் கோபம் கொண்டு அதன் மீது பாய்ந்து கழுதையைக் கொன்றது. 


பிறகு உடன் இருந்த நரியை பங்கு போடச் சொல்லியது சிங்கம். சிறிய பங்கை தனக்கு வைத்துக் கொண்டு மீதமுள்ள அனைத்தையும் சிங்கத்திற்கே கொடுத்தது. அதனைப் பார்த்து மகிழ்ச்சியடைந்த சிங்கம் இவ்வளவு பெருந்தன்மையையும், மரியாதையையும் எங்கே கற்றாய்? என்று கேட்டது. அதற்கு அந்த நரி, இறந்து கிடக்கும் கழுதையைச் சுட்டிக்காட்டி, இதனிடமிருந்துதான் கற்றுக் கொண்டேன் என்று கூறி விட்டு அவ்விடத்தை விட்டுச் சென்றது. 


நீதி :

கெட்டவர்கள் நியாயத்திற்கு மதிப்பு அளிக்க மாட்டார்கள்.

இன்றைய செய்திகள்

22.01.2026

⭐254 மீன்பிடிப் படகுகளும்  கைது செய்யப்பட்டவர்கள் உட்பட 90 மீனவர்களும் இலங்கை காவலில் உள்ளனர். இத்தகைய சம்பவங்கள், கடலோரப் பகுதிகளின் சமூக மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பை ஆழமாக சீர்குலைத்துள்ளது.

⭐ வட இந்திய மாநில ங்களிலிருந்து போதைப்பொருள்களை வாங்கி, விற்பனை செய்து வந்த வேலூர் காட்பாடியிலுள்ள தனியார் பல்கலைக் கழகத்தில் படிக்கும் 7 மாணவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

⭐ரஷ்யாவின் கம்சட்காவில் கடும் பனிப்புயல் வீசி வருகிறது. 2 மாடி கட்டிட உயரம் வரை பனிப்பொழிவு மூடியுள்ளது.அடுக்குமாடி குடியிருப்பை சுற்றிய பனிப்பொழிவை இடித்து சுரங்கம் தோண்டி மக்கள் வெளியேறி வருகின்றனர்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀 ஐ.பி.எல் மார்ச் மாதம் 26-ம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

🏀இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது.

Today's Headlines

⭐ 254 fishing boats and 90 fishermen, including those who were arrested and are in Sri Lankan custody.  Such incidents have deeply disrupted the social and economic structure of coastal areas.

⭐ Police have arrested 7 students studying at a private university in Vellore's Kadpadi for purchasing and selling drugs from North Indian states.

⭐ A severe snowstorm is blowing in Kamchatka, Russia. The snow has covered buildings up to 2 stories high. People are digging tunnels to come out by clearing the snow around the apartment building.

 SPORTS NEWS

🏀 IPL is expected to start on March 26. 

🏀 New Zealand won the 3-match ODI series between India and New Zealand cricket teams by a score of 2-1.

Covai women ICT_போதிமரம்

Tuesday, January 20, 2026

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 21.01.26











திருக்குறள்: 

குறள் 292

 "பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த 
நன்மை பயக்கும் எனின்"

விளக்க உரை: 

குற்றமற்ற நன்மையைக் கொடுக்கவல்லதாக இருக்குமானால், பொய்யான சொற்களும் வாய்மை என்று சொல்லப்படும் இடத்தைப் பெற்றுவிடும்".

பழமொழி :

Dream big,Start small. 

பெரிதாக கனவு காணு, சிறியதாக தொடங்கு.

இரண்டொழுக்க பண்புகள் :

1. நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தரமாட்டேன்.

2. துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.

பொன்மொழி : 

புத்தகத்தைப் போல விசுவாசமான நண்பர் இல்லை - எர்னெஸ்ட் ஹெமிங்வே

பொது அறிவு : 

01.நவீன இயற்பியலின் தந்தை என்று  அழைக்கப்படுபவர் யார்?

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் -Albert Einstein

02. தமிழ்நாட்டின் பட்டு நகரம் என்று அழைக்கப்படும் நகரம் எது?

காஞ்சிபுரம்-Kanchipuram

English words :

prankster-joker

expedition-mission

தமிழ் இலக்கணம்: 

 இன்று எடு என்பதற்கான வினை முற்றுச் சொற்களைப் பார்ப்போம்.
1. சிறிது நேரம் ஓய்வு எடு –தவறு
  சிறிது நேரம் இளைப்பாறு
2. ஆசிரியர் பாடம் எடுத்தார் –தவறு 
    ஆசிரியர் பாடம் கற்பித்தார்
3. உறுதி மொழி எடுத்துக் கொண்டனர் –தவறு 
     உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்
4. முடிந்த வரை முயற்சி எடுக்க வேண்டும் –தவறு 
முடிந்த வரை முயற்சி மேற்கொள்ள வேண்டும்
இனி சரியான வினை மரபுச் சொற்களை பயன்படுத்துவீர்கள் தானே மாணவர்களே.

அறிவியல் களஞ்சியம் :

பிரபஞ்சத்தின் 96 சதவிகிதம் ஆனது மனிதர்களால் கண்டறிய முடியாத இருண்ட விஷயம் (டார்க் மேட்டர்) மற்றும் இருண்ட ஆற்றலால் நிரம்பி உள்ளது. இந்த பொருள்களை உருவாக்கும் துகள்கள் ஆனது வழக்கமான விண்வெளி விடயங்கள் அல்லது ஒளியுடன் தொடர்பு கொள்ளாது என்பதால், அவைகள் என்னவென்று கண்டுபிடிக்கவே முடியவில்லை.

ஜனவரி 21

  • 1960 – மேர்க்குரி விண்கலத்தில் சாம் என்ற பெண் செம்முகக் குரங்கு விண்வெளிக்குப் பயணமானது.

நீதிக்கதை

 கழுதையின் தந்திரம்


வியாபாரி ஒருவர் உப்பு வாங்குவதற்காக கழுதையைக் கடற்கரைக்கு ஓட்டிச் சென்றார். கடற்கரைக்குச் செல்லும் வழியில் ஒரு ஓடை இருந்தது. அந்த வியாபாரி உப்பை வாங்கிக் கழுதையின் மீது ஏற்றி வைத்துக் கொண்டு அந்த ஓடையைக் கடந்து செல்ல முற்பட்டபோது கால் தவறிக் கழுதை ஓடையில் விழுந்தது. ஓடையில் விழுந்ததால் கழுதையின் மேலிருந்த உப்பு மூட்டையில் இருந்த உப்பில் பாதி அளவு தண்ணீரில் கரைந்து போயிற்று. ஓடையில் விழுந்தக் கழுதை தட்டுத்தடுமாறி எழுந்த போது மூட்டையின் கனம் மிகவும் குறைந்தது. வியாபாரி திரும்பிப்போய், இன்னும் கூடுதலாக உப்பைத் தனது கோணிகளில் நிரப்பிக் கழுதையின் மேல் பாரத்தை ஏற்றி வைத்து அழைத்து வந்தான். ஓடையை நெருங்கியதும் கழுதை வேண்டுமென்றே மீண்டும் விழுந்து தனது பாரத்தைக் குறைத்துக் கொண்டது. எனவே அது வெற்றிகரமாகக் கனைத்தது. 

வியாபாரிக்குக் கழுதையின் தந்திரம் புரிந்துபோகவே, மூன்றாம் முறையாக கடற்கரைக்கு அதை ஓட்டிச் சென்றான். அங்கே உப்புக்கு பதிலாகக் கடற்பஞ்சு மூட்டைகளை வாங்கி கழுதையின் மேல் பாரத்தை வைத்தான். ஓடையை அடைந்ததும், மீண்டும் அதே தந்திரத்தைக் கழுதை செய்தது. ஆனால் கடற்பஞ்சு தண்ணீர்ரை உறிஞ்சிக்கொண்டு மிகவும் கனத்துப் போனது. தான் செய்த தந்திரம் தன்மீதே பாயவே, கழுதை இரண்டு மடங்கு பாரத்தைச் சுமக்க வேண்டியதாயிற்று. 

நீதி :

தெரிந்தே தவறு செய்யக் கூடாது

இன்றைய செய்திகள்

21.01.2026

⭐தமிழ்நாடு முழுவதும் நோய் தடுப்பு துறை மூலம் "தொழுநோயை தடுப்பது" குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை தமிழக அரசு முன்னெடுத்துள்ளது.

⭐தமிழகத்தில் 121 தடுப்பணைகள் மற்றும் 63 அணைக்கட்டுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்

⭐மேற்கு வங்கத்தில் நிபா வைரஸ் பரவல் அதிகரித்து இருப்பதால் பறவைகள், விலங்குகள் கடித்த பழங்களை சாப்பிடக் கூடாது என்று தமிழக அரசின் பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀5 அணிகள் பங்கேற்றுள்ள 4-வது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட்டின் முதற்கட்ட ஆட்டங்கள் மும்பையில் நடந்தன. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் குவித்தது. குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

Today's Headlines

⭐The Tamil Nadu government has launched an awareness campaign on "Prevention of Leprosy" through the Department of Disease Prevention across Tamil Nadu.

⭐The Chief Minister of Tamil Nadu has predicted that work is underway to construct 121 check dams and 63 embankments in Tamil Nadu.

⭐The Tamil Nadu government's public health department has advised against eating fruits bitten by birds and animals due to the increasing spread of the Nipah virus in West Bengal.

 SPORTS NEWS 

🏀The first leg of the 4th Women's Premier League (WPL) T20 cricket tournament, featuring 5 teams, was held in Mumbai. And first, Bengaluru scored 178 runs for the loss of 6 wickets. The Gujarat team scored only 117 runs for the loss of 8 wickets in 20 overs and lost.

Covai women ICT_போதிமரம்

Monday, January 19, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.01.2026

எட்வின் யூஜின் ஆல்ட்ரின்



 






திருக்குறள்: 

குறள் 291: 

வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றந் தீமை யிலாத சொலல்.         
விளக்க உரை: 

வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும்.

பழமொழி :

Today's effort is tomorrow's success.  

இன்றைய முயற்சியே  நாளைய வெற்றி.

இரண்டொழுக்க பண்புகள் :

1. நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தரமாட்டேன்.

2. துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.

பொன்மொழி : 

உங்களை சிறப்பாக செயல்பட வைக்கவே பிரச்சினைகள் ஒரு வாய்ப்பாக வருகிறது.

     டியூக் எலிங்டன்

பொது அறிவு : 

01.உலகின் மிகப்பெரிய தனிப்பட்ட மலர் இனம் எது?

ரஃப்லேசியா அர்னால்டி 

            Rafflesia  arnoldii

02.இந்தியாவின் முதல் செங்குத்து-தூக்கு கடல் பாலம் எது?

புதிய பாம்பன் பாலம் -

ராமேஸ்வரம், தமிழ்நாடு 

New Pamban Bridge -Rameshwaram Tamil Nadu.

English words :

shriveled-shrinked due to age

 fatigue-weariness

தமிழ் இலக்கணம்: 

 இன்று செய்வதற்கான வினை மரபுச் சொற்களை பார்ப்போம்
1. மாறன் சிலை செய்தான் – தவறு
    மாறன் சிலை வடித்தான்
2.குமரன் பானை செய்தார் –தவறு
குமரன் பானை வனைந்தான் 
3.வீரன் போர் செய்தான் –வீரன் போர் புரிந்தான்
4.மற்றவர்களுக்கு தீங்கு செய்யாதே – தவறு 
மற்றவர்களுக்கு தீங்கு இழைக்காதே

அறிவியல் களஞ்சியம் :

வண்ணங்களை வகைப்படுத்தி காணும் திறன் ஆனது மரபணுக்கள் எக்ஸ் குரோமோசோமில் காணப்படுகின்றன. இவ்வகை எக்ஸ் குரோமோசோம்கள் ஆனது பெண்களுக்கு இரண்டும், ஆண்களுக்கு ஒன்றும் இருக்கிறது. ஆக பெண்களால் ஆண்களை விட அதிக அளவில் வண்ணங்களை பிரித்து பார்க்க முடியும்.

ஜனவரி 20

எட்வின் யூஜின் ஆல்ட்ரின் அவர்களின் பிறந்தநாள் 

எட்வின் யூஜின் ஆல்ட்ரின், Edwin Eugene Aldrin, Jr., பிறப்பு: ஜனவரி 20, 1930) என்பவர் அமெரிக்க விண்வெளி வீரரும் விமானியும் ஆவார். இவர் முதன் முதலாக மனிதரை சந்திரனில் ஏற்றிச் சென்ற அப்பல்லோ 11 விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ரோங் உடன் பயணம் செய்து சந்திரனில் இறங்கிய இரண்டாவது மனிதர் என்ற பெருமையைப் பெற்றார்

நீதிக்கதை

ஒரு தவளையும் ஒரு சுண்டெலியும்


ஒரு காட்டில் ஒரு தவளையும், ஒரு சுண்டெலியும் நண்பர்களாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் தவளை வாழ்ந்து வந்த குளத்தில் நீர் வற்றிவிடவே தவளை மிகவும் வருந்தியது. அதனால் எலி அங்குமிங்கும் தேடி அலைந்து ஒரு குளத்தைக் கண்டுபிடித்தது. இருவரும் சேர்ந்து குளத்தினருகில் சென்றவுடன் குளம் யாருக்குச் சொந்தம் என்பதில் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டத்தால் எலி தன் இனத்தவரை ஆதரவுக்கு அழைத்தது. 

தவளையும் அதேபோல் தன் இனத்தவர்களை உதவிக்கு அழைத்தது. சண்டையில் நிறைய எலிகளும் தவளைகளும் இறந்து போயிற்று. இதனை வானத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்த பருந்துகள் பார்த்தன. பருந்துகள் கீழே வந்து சண்டையிட்டுக் கொண்டிருந்த எலிகள், தவளைகள் மீது பாய்ந்து அவைகளைத் தமக்கு இரையாக்கிக் கொண்டன. 

நீதி :

எளியவன் தனித்து இருந்தால் அவனை வலியவன் வெல்வது எளிது 

இன்றைய செய்திகள்

20.01.2026


⭐குடியரசு தின விழா - தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார். குடியரசு தின விழா கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகளை அந்தந்த மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

⭐தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் நீட்டிப்பு. நேற்றைய நிலவரப்படி 13.03 லட்சம் பேர் தங்கள் பெயர்களை சேர்க்க விண்ணப்பித்துள்ளனர்.
பிப்ரவரி 17-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று இந்திய தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கூறினர்.

⭐ஸ்பெயினில் 2 அதிவிரைவு ரெயில்கள் மோதிய விபத்தில் 21 பேர் உயிரிழப்பு. மாலகா மற்றும் மாட்ரிட் இடையே 300 பயணிகள் பயணித்த ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்: மார்ஷ் தலைமையில் ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு.
3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. அடுத்த மாதம் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Today's Headlines

⭐Regarding Republic Day Celebrations - 1 lakh policemen on security duty across Tamilnadu. The respective state governments are making arrangements for the Republic Day celebrations.

⭐Time is extended  to add names to voter list in Tamilnadu.  As of yesterday, 13.03 lakh people have applied to include their names. The final voter list will be published on February 17, Officers of Election  Commission of India  said.

⭐ 21 killed in Spain high-speed train collision. Train carrying 300 passengers derails between Malaga and Madrid.

 *SPORTS NEWS* 

🏀T20 series against Pakistan: Australia team announced under Marsh. Pakistan and Australia teams will compete in a 3-match T20 series. The T20 World Cup is scheduled to be held next month.

Covai women ICT_போதிமரம்