Thursday, August 25, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 26.08.2022

திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: உழவு

குறள் : 1038
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.

பொருள் :
உழுவதைக் காட்டிலும் உரம் இடுதல் நல்லது; களை எடுப்பதும், நீர் பாய்ச்சுவதும் மிகவும் நல்லது; அதைவிட நல்லது அந்தப் பயிரைப் பாதுகாப்பது.

பழமொழி :

The pen is mightier than the sword.

வாளினும் வலியது எழுதுகோல்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. இயற்கை வளங்களான நீர், காற்று, நிலத்தை பாதுகாத்து என்னால் முடிந்த அளவு அவற்றை மாசு படுத்தாமல் இருப்பேன்.

2.மின்சாரம் போன்ற எரி பொருட்கள் வீணாக்காமல் சிக்கனமான உபயோகிப்பேன்

பொன்மொழி :

கண்களை மட்டும் கவருவது அழகு! அன்புடன் கூடிய நற்செயல்கள் மனதையும், ஆன்மாவையும் கவரும். - அல்க்ஸாண்டர் போவ்

பொது அறிவு :

1.இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் பெயர் என்ன? 

அக்னி. 

2. தொழில் புரட்சி முதல் முதலில் ஆரம்பித்த நாடு எது? 

இங்கிலாந்து.

English words & meanings :

zo·og·ra·phy - The biological description of animals and their habitats. noun. வெவ்வேறு நில இயல் சூழ்நிலைகளில் வாழும் உயிரினங்கள் பற்றிய ஆய்வு. பெயர்ச் சொல்

ஆரோக்ய வாழ்வு :

சாத்துக்குடி

சாத்துக்குடியில் வைட்டமின் சி வளமான அளவில் நிறைந்திருப்பதோடு, இதில் டயட்டரி நார்ச்சத்துக்கள் மற்றும் கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், காப்பர், மக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவைகளும் அடங்கியுள்ளன.

ஆகஸ்ட்  26


அன்னை தெரேசா  அவர்களின் பிறந்தநாள்





அன்னை தெரேசா (Mother Teresa, ஆகத்து 26, 1910 - செப்டம்பர் 5, 1997), அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவரும்[1] இந்தியக் குடியுரிமை பெற்ற உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியும் ஆவார். இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும். 1950 ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார். நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழைஎளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தருவாயிலிருப்போருக்கும் தொண்டாற்றியவர் இவர். முதலில் இந்தியா முழுவதும் பின்னர் வெளிநாடுகளுக்கும் பிறர் அன்பின் பணியாளர் சபையினை நிறுவினார்.  1970 ஆம் ஆண்டுக்குள் இவர் சிறந்த சமூக சேவகர் எனவும், ஏழைகளுக்கும் ஆதரவற்றோருக்கும் பரிந்து பேசுபவர் என்றும் உலகம் முழுவதும் புகழப்பட்டார். இதற்கு மேல்கம் முக்கெரிட்ஜ் என்பவரின் சம்திங்க் பியுடிபுல் ஃபார் காட் என்ற ஆவணப்படம் ஒரு முக்கிய காரணமாகும். இவர் 1979 இல் அமைதிக்கான நோபல் பரிசினையும்1980 இல் இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருதினையும் பெற்றார். அன்னை தெரேசாவின் பிறர் அன்பின் பணியாளர் சபை அவரது இறப்பின் போது 123 நாடுகளில் 610 தொண்டு நிறுவனங்களை இயக்கிக்கொண்டிருந்தது. இதில் எய்ட்ஸ்தொழு நோய் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நல்வாழ்வு மையங்கள், இலவச உணவு வழங்குமிடங்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்கான ஆலோசனைத் திட்டங்கள், அனாதை இல்லங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவை அடங்கும்.

நீதிக்கதை

பழைய நிலைமையை மறந்து விடாதே!

முன்னொரு காலத்தில், ஒரு நாட்டை ஆண்ட அரசரிடம் விவேகமிக்க மந்திரி ஒருவர் இருந்தார். அவர் பெயர் தனயன். அரசர், எங்கு சென்றாலும், தனயனை அழைத்துச் செல்வார். தனயனின் ஆலோசனைப்படியே அனைத்தையும் செய்வார்.

இதனால், மந்திரி தனயனின் புகழ், நாடு முழுவதும் பரவியது. இதைக்கண்ட சிலர், மந்திரி மீது பொறாமை கொண்டனர். தனயன் எங்கு சென்றாலும், தன்னுடன் ஒரு பெட்டியை எடுத்துச் செல்வது வழக்கம். பொறாமைக்காரர்கள் இதை வைத்தே அரசனிடம் கோள் மூட்ட எண்ணினர்.

அரசே, மந்திரி நல்லவர் போல் நடித்து, நம்மை ஏமாற்றுகிறார். அரண்மனையில் உள்ள விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் அபகரித்து தன் பெட்டியில் வைத்துள்ளார். வேண்டுமானால் அதைச் சோதனை செய்து பாருங்கள் என்றனர்.

அரசனுக்கும், சிறிது சந்தேகம் ஏற்பட்டது. ஒருநாள் வேட்டைக்குப் போகும்போது, மந்திரி வழக்கம் போல் பெட்டியை தன்னோடு எடுத்து வந்தார். பெட்டியில் என்ன? என்று கேட்டார் அரசர். உடனே மந்திரி, பெட்டியைத் திறந்து காட்டினார், ஆடு மாடு மேய்ப்பவன் உடுத்தும் கந்தல் துணி இருந்தது.

இதெல்லாம் என்ன? என்று ஆச்சர்யத்துடன் கேட்டார் அரசர். அரசே! ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது, என் புத்திக்கூர்மையை பார்த்து, என்னை மந்திரி ஆக்கினீர்கள். இவ்வளவு உயர் பதவி கிடைத்தால், சிலர் பழைய நிலைமையை மறந்து விடுவர். எனக்கு அப்படியிருக்க மனம் வரவில்லை. பழைய நிலைமையை சுமந்தபடியே, மந்திரி பதவியில் இருக்க விரும்புகிறேன். அதனால் தான், இப்பெட்டியை எந்நேரமும் என்னுடன் வைத்திருக்கிறேன் என்றார் மந்திரி.

மந்திரியை பெரிதும் பாராட்டியதோடு, பொறாமைக்காரர்களுக்கு தக்க தண்டனையும் கொடுத்தார் அரசர். மந்திரிக்கு பல பரிசுகள் கொடுத்து கௌரவித்தார். பொறாமைக்காரர்கள், தாங்கள் செய்த சூழ்ச்சியே, தங்களது வீழ்ச்சிக்கு காரணமானதை எண்ணி வருந்தினர்.

இன்றைய செய்திகள்

26.08.22

* தமிழகத்தில் உள்ள 28 சுங்க சாவடிகளில், செப்டம்பர் 1ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, கார், வேன், ஜீப்களுக்கு 5 ரூபாயும், டிரக், பஸ், பல அச்சுகள் கொண்ட வாகனங்களுக்கு 150 ரூபாய் வரையும் உயர்த்தப்படவுள்ளது.

* தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் - வானிலை மையம் எச்சரிக்கை.

* இந்தியாவிலேலய சிறந்த மலை/மலைக் காட்சிகள் இடத்திற்கான அவுட்லுக் டிராவேர் விருதை தமிழ்நாடு வென்றுள்ளது.

* FIFA விதியின் படி தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக வரும் 28ஆம் தேதி நடத்தப்பட இருந்த தேர்தலை ஒரு வாரம் தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்தியாவின் தடை விரைவில் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* உலக பேட்மிண்டன் போட்டி: 2வது சுற்றில் சாய்னா நேவால் தோல்வி

Today's Headlines

 * The Union Government has decided to increase customs duty in 28 customs booths in Tamil Nadu from September 1.  Accordingly, the toll for cars, vans, and jeeps will be increased by Rs 5 and for trucks, buses, and multi-axle vehicles up to Rs 150.

 * Tamil Nadu will receive heavy rain for 4 days - Meteorological Center warns.

 * Tamil Nadu won the Outlook Traverse Award for Best Hill/Mountain Views in India.

 * FIFA has ordered the postponement of the election which was scheduled to be held on the 28th by one week to facilitate the conduct of the election as per the rules.  India's ban is expected to be lifted soon.

 * World Badminton Championship: Saina Nehwal lost in the 2nd round
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Wednesday, August 24, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 25.08.2022

திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: உழவு

குறள் : 1037
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.

பொருள்:
ஒருபலம் புழுதி, காற்பலம் ஆகிற அளவுக்குப் பலமுறை உழுதாலே ஒரு பிடி எருவும் தேவையின்றிப் பயிர் செழித்து வளரும்

பழமொழி :

All happening is for the best.

நடப்பவை எல்லாம் பெரும் நன்மைக்கே.

இரண்டொழுக்க பண்புகள் :

1. இயற்கை வளங்களான நீர், காற்று, நிலத்தை பாதுகாத்து என்னால் முடிந்த அளவு அவற்றை மாசு படுத்தாமல் இருப்பேன்.

2.மின்சாரம் போன்ற எரி பொருட்கள் வீணாக்காமல் சிக்கனமான உபயோகிப்பேன்

பொன்மொழி :

அடுத்தவர் பின் நின்று புறம் பேசாதே, அறிந்து கொள் உன் பின்னாலும் ஒருவர் இருக்கிறார் என்று...

பொது அறிவு :

1.ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கிய முதல் இந்தியப் பெண் யார்?.

 பி.டி உஷா

 2. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது? 

 ஞானபீட விருது.

English words & meanings :

yar·mul·ke - A skullcap worn by Jewish men and boys. Also called kippah. பெயர்ச் சொல். யூத ஆண்களும் சிறுவர்களும் தலையில் அணியும் தொப்பி 

ஆரோக்ய வாழ்வு :

பப்பாளி இலை


1. நோய் எதிர்ப்பு ஆற்றலை தருகிறது.

2.டெங்கு காய்ச்சலுக்கு இதன் இலைச்சாற்றை குடித்து விரைவாக குணம்பெறலாம்.

NMMS Q 48:

Objection' என்ற வார்த்தையில் உள்ள எழுத்துக்கள் மூலம் உருவாக்க இயலாத வார்த்தை எது? a) Object. b) Caution c) Net. 

 விடை: Caution

ஆகஸ்ட்  25


நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் நினைவுநாள்




நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங் (Neil Armstrongநீல் ஆம்ஸ்ட்ரோங்ஆகத்து 51930 – ஆகத்து 252012) ஓர் அமெரிக்க விண்வெளி வீரரும் சந்திரனில் தரையிறங்கிய முதல் மனிதரும் ஆவார். அத்தோடு இவர் வான்வெளிப் பொறியியலாளர், கப்பல்படை விமானி, வெள்ளோட்ட விமானி, மற்றும் பல்கலைக்கழகப் பேராசியர் போன்ற பதவிகளையும் வகித்துள்ளார். ஆம்ஸ்ட்ரோங், விண்வெளி வீரராக வருவதற்கு முன்னர் ஐக்கிய அமெரிக்கக் கடற்படையில் அதிகாரியாக இருந்து கொரியப் போரில் பணியாற்றினார். 

1969சூலை 20 இல் அமெரிக்காவின் அப்போலோ - 11 விண்கலத்தில் எட்வின் ஆல்ட்ரின்மைக்கேல் கொலின்ஸ் ஆகியோருடன் பயணித்த ஆம்ஸ்ட்றோங் முதலில் சந்திரனில் காலடி வைத்தார். இவரைத் தொடர்ந்து ஆல்ட்ரினும் சந்திரனில் தரையிறங்கினார். இவர் சந்திரனில் காலடி எடுத்துவைக்கும் போது முதலில் இடது காலையே வைத்தார்.

ஜூலை,2012ல் இதய அறுவைச்சிகிச்சை செய்திருந்தார், அதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இறந்தார்


நீதிக்கதை

அன்பை வெளிப்படுத்தும் விதம்

ஒரு நாள் வகுப்பறையில் ஆசிரியை மாணவர்களிடம், அன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டு வாருங்கள் என்று கூறி நான்கு மாணவிகளை அனுப்பினார். திரும்பி வந்த மாணவிகளில் ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது. இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் பூச்சி இருந்தது. மற்றொரு மாணவியிடம் ஒரு குஞ்சுப்பறவை இருந்தது. 

நான்கு மாணவிகளில் முதலில் கிளம்பிப்போன மாணவி கடைசியில் வெறும் கையுடன் திரும்பி வந்தாள். ஆசிரியை அந்த மாணவியிடம் நீ ஏன் எதையும் கொண்டு வரவில்லை என்று கேட்டார்.

அதற்கு அந்த மாணவி, நானும் மலரைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. செடியிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. சுதந்திரமாய்ப் பறக்கட்டும் என்று விட்டுவிட்டேன். குஞ்சுப் பறவையைப் பார்த்தேன். தாய்ப்பறவை தேடுமென்று விட்டுவிட்டேன் என்று பதில் கூறினாள். 

மாணவி கூறிய பதிலைக் கேட்டவுடன் ஆசிரியை அந்த மாணவியை அணைத்துக் கொண்டார். அன்பு என்றால் இது தான். ஒன்றுமே கொடுக்க வேண்டாம். எதையுமே பறிக்காமல் இருந்தால் அதுவே போதும் என்றார்.

இன்றைய செய்திகள்

25.08.22

* தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட உறுப்பினர் பணியிடத்தை நிரப்பும் வரை மின் கட்டணத்தை உயர்த்த உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

* நீட் தேர்வு முடிவுகள் இன்னும் வராததால், தேர்வு முடிவைப் பொருத்து கலந்தாய்வுக்கான தேதி நிர்ணயிக்கப்படவிருக்கிற காரணத்தால், இன்று நடைபெறுவதாக இருந்த பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தள்ளிவைக்கப்படுகிறது என்று தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

* காலணி உற்பத்தியில் முன்னணி இடத்தில்உள்ள தமிழகத்தில், காலணி, தோல் பொருட்கள் உற்பத்தியில் மேலும் ரூ.20 ஆயிரம்கோடி முதலீடு மற்றும் 2 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் புதிய கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.

* உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட குறுகிய தொலைவு ஏவுகணை சோதனை வெற்றி.

* மிகச் சிறப்பான பணிக்காக பிரிட்டனை சேர்ந்த உலக சாதனை புத்தகத்தில் மிசோரம் போலீஸ் இடம் பிடித்துள்ளது.

* ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி சூரியக் குடும்பத்திலேயே பெரிய அளவிலான வியாழன் கோளை படம்பிடித்து அனுப்பியுள்ளது.

* வெப்ப அலை எதிரொலி: வரலாறு காணாத வறட்சியால் சீனா தவிப்பு.

* உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: 3-வது சுற்றுக்கு ஜப்பான் வீராங்கனை முன்னேற்றம்.

* சென்னையில் நடைபெறும் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிகளுக்கான டிக்கெட் விலை வெளியிடப்பட்டுள்ளது.

* இந்திய கால்பந்து சம்மேளனத்திற்கு நிர்வாகிகள் தேர்தல் வருகிற 2-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Today's Headlines

 * The High Court has imposed an interim stay on the increase in electricity tariff until the post of legal member is filled in the Tamil Nadu Electricity Regulatory Commission.

 * Tamil Nadu Higher Education Minister Ponmudi has said that since the results of NEET are not yet available and the date of the consultation is to be fixed based on the result, the consultation for the general category which was to be held today has been postponed.

 * In Tamil Nadu, which is a leader in footwear production, a new policy has been released to invest Rs. 20 thousand crores in footwear and leather products and create 2 lakh jobs.

*  Indigenously Designed Short Range Missile Test Success

 * Mizoram Police has been named in the British Book of World Records for Outstanding Performance.

 * The James Webb Telescope has imaged the largest planet in the Solar System, Jupiter.

 * Heat wave reverberations: China grapples with record drought. 

* Badminton World Championships: Japan advances to 3rd round

 *The ticket price for the International Women's Tennis Tournament in Chennai has been released.

 * It has been announced that the Football Federation of India will hold executive elections on 2nd.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Tuesday, August 23, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 24.08.2022

   திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: உழவு

குறள் : 1035
இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.

பொருள்:
தாமே தொழில் செய்து ஊதியம் பெற்று உண்ணும் இயல்புடையவர், பிறரிடம் சென்று கையேந்த மாட்டார், தம்மிடம் வேண்டி நின்றவர்க்கும் ஒளிக்காமல் வழங்குவார்

பழமொழி :

A stich in time saves nine.

விரிசலைச் சரி செய்துவிட்டால் உடைவது தப்பும். 

இரண்டொழுக்க பண்புகள் :

1. இயற்கை வளங்களான நீர், காற்று, நிலத்தை பாதுகாத்து என்னால் முடிந்த அளவு அவற்றை மாசு படுத்தாமல் இருப்பேன்.

2.மின்சாரம் போன்ற எரி பொருட்கள் வீணாக்காமல் சிக்கனமான உபயோகிப்பேன்

பொன்மொழி :

நாள்காட்டியின் இருவரி வாசகம் போல், நாளுக்கு நாள் புதிது புதிதாய் அர்த்தம் தந்துகொண்டே இருக்கிறது வாழ்க்கை!

பொது அறிவு :

1.இந்திய அறிவியற் கழகம் அமைந்துள்ள நகரம் எது ? 

 பெங்களூர்

 2. இந்தியாவின் மிகப்பெரிய நதி எது?

 கங்கை.

English words & meanings :

Xe-no-pho-bia - a fear or hatred of foreign people and cultures.. Noun. அந்நியர்கள் குறித்து அச்சம். பெயர்ச் சொல் 

ஆரோக்ய வாழ்வு :




தர்பூசணியின் மொத்த எடையில் 92% தண்ணீர், 6% சர்க்கரை சத்து என்பதால் வெயிலுக்கு மிகவும் உகந்தது. விட்டமின் அதிகம்  நிறைந்துள்ள பழமாக இப்பழம் திகழ்கிறது.

NMMS Q 47:

12 ÷ 4 = 8 ; 9 ÷ 4 = 5 ; 7 ÷ 5 = 2 எனில் ÷ என்ற குறியீட்டின் அர்த்தம் என்ன?

 விடை: கழித்தல்

நீதிக்கதை

நன்மை தீமை இரண்டையும் ஏற்றுக்கொள்

ஒரு வயதான விவசாயி தன் வயலில் பாடுபட்டு உழைத்து அதில் வரும் சொற்பமான வருமானத்தில் வாழ்ந்துகொண்டிருந்தார். ஒரு நாள் அவர் வளர்த்து வந்த குதிரை காணாமல் போய்விட்டது. தகவலைக் கேள்விப்பட்ட அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் என்ன ஒரு துரதிர்ஷட நிலை? என்று பரிதாபமாக விசாரித்தனர். அவர்களின் ஆறுதலுக்கு விவசாயி மௌனமாக இருக்கலாம் என்று பதிலளித்தார்.

அடுத்த நாள் தொலைந்துப்போன அவருடைய குதிரை தன்னுடன் மூன்று குதிரைகளை அழைத்து வந்தது. இதை ஆச்சர்யமாக பார்த்த அக்கம் பக்கத்தினர், நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி, இப்பொழுது நான்கு குதிரை உனக்கு கிடைச்சிடுச்சு என்றனர். தனக்குக் கிடைத்த அதிர்ஷ்டத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் மறுபடியும் இருக்கலாம் என்று கூறினார் விவசாயி. 

ஒரு வாரத்துக்குப் பிறகு, விவசாயியின் மகன் குதிரையை வேகமாக ஓட்டிச்சென்று தவறுதலாக கீழே விழுந்து காலை உடைத்துக்கொண்டான். இப்பொழுது அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், விவசாயிடம், உனக்கு ஒரு நல்லது நடந்தால், அடுத்து ஒரு கெட்டது நடக்குதே. உன் பையன் எழுந்து நடக்க பத்து மாதத்திற்கும்மேல் ஆகும் போல இருக்கிறதே, ரொம்ப கஷ்டமான நிலைமை என்று கூறி ஆதங்கப்பட்டனர். அப்போழுதும் அந்த விவசாயி பெரிதாக வருந்தாமல் இருக்கலாம் என்று அதே பதிலைக் கூறினார்.

ஒரே வாரத்தில் அந்த நாட்டில் போர் வந்துவிட்டது. வீட்டில் இருக்கும் எல்லா இளைஞர்களும் கட்டாயம் போரில் கலந்துகொள்ள வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. வீடு வீடாக ராணுவத்தினர் புகுந்து இளைஞர்களை அழைத்துச் சென்றனர். ஆனால், அந்த ஏழை விவசாயியின் மகனுக்குக் கால் உடைந்து இருந்ததால் அவனை மட்டும் அழைத்துச் செல்லவில்லை. இதைக் கண்டு ஊர் மக்கள் அந்த விவசாயியின் அதிர்ஷ்டத்தைக் கண்டு புகழ்ந்தனர். இப்போதும் அந்த விவசாயி இருக்கலாம் என்று கூறினார்.

அந்த விவசாயி ஒவ்வொருமுறையும் கூறும் பதிலைக் கேட்டுக் கொண்டிருந்த அவருடைய நண்பர், அந்த விவசாயியைப் பார்த்து, உனக்கு நல்லது நடந்தாலும், கெட்டது நடந்தாலும் இருக்கலாம் இருக்கலாம் என்றே சொல்கிறாயே ஏன்? என்று கேட்டார்.

அதற்கு அந்த விவசாயி நல்லது, கெட்டது இரண்டும் நாணயத்தின் இருபக்கங்கள். யாருக்கும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். சுகம், துக்கம் இவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை என்பதை உணர்ந்தாலே போதுமானது என்றார்.

இன்றைய செய்திகள்

24.08.22

* செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக கடந்த ஜூலை 28-ம் தேதி விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் வரும் சனிக்கிழமை ஆகஸ்டு-27 அன்று பள்ளிகள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

*நெல் உற்பத்தி மற்றும் சாகுபடிப் பரப்பில் கடந்த 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழகம் சாதனை படைத்துள்ளது.

*ஆதிதிராவிடர், பழங்குடியின மக்கள் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தில் பயன்பெற ஆண்டு வருமான உச்சவரம்பை அரசு ரூ.3 லட்சமாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

*தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 96.20% பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர் - சுகாதாரத் துறை தகவல்.

*வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) முறையாக அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் நேற்று மீண்டும் போராட்டம் நடத்தினர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

* இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு மரியாதை கொடுங்கள்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் சீனா, ரஷ்யாவை இடித்துரைத்த இந்தியா.

*ஒருநாள் போட்டி தரவரிசையை வெளியிட்டது ஐசிசி : 3-வது இடத்தில் இந்திய அணி.

*உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: முதல் சுற்றில் லக்‌ஷயா சென் வெற்றி.

*2023 உலகக் கோப்பை ஹாக்கி : மிகப்பெரிய அளவில் போட்டியை நடத்த தயாராகும் ஒடிசா அரசு.

Today's Headlines

*The Tamil Nadu government has announced that schools in 4 districts of Chennai, Kanchipuram, Tiruvallur and Chengalpattu will function on Saturday, August 27 to compensate for the holiday on July 28 for the Chess Olympiad.

 *Tamil Nadu has achieved a record in paddy production and cultivation area after last 20 years.

* The government has announced raising the annual income ceiling to Rs 3 lakh to benefit from the Adi Dravida Tribal People's Economic Development Scheme.

* 96.20% of people above 18 years of age in Tamil Nadu have received the first dose of vaccine - Health Department data.

* Farmers protested again in Delhi yesterday, demanding nine-point demand, including the proper implementation of Minimum Support Price (MSP) for agricultural product.  This caused a heavy traffic jam.

 *Respect sovereignty, territorial integrity: UN  India slams China, Russia in Security Council meeting

 *ICC publishes ODI Rankings:  Indian team at 3rd place

* World Badminton Championship: Lakshya Sen wins first round

* 2023 Hockey World Cup: Odisha government is gearing up to host the tournament on a grand scale.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்