Sunday, June 26, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.06.2022

 திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: மானம்
குறள் : 968

மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து.

பொருள்:
சாகாமலே இருக்க மருந்து கிடையாது அப்படி இருக்கும்போது உயிரைவிட நிலையான மானத்தைப் போற்றாமல், வாழ்க்கை மேம்பாட்டுக்காக ஒருவர், தமது பெருமையைக் குறைத்துக் கொள்வது இழிவான செயலாகும்

பழமொழி :

Clouds that the sun builds up darken him.


வேலிக்குப் போட்ட முள் காலுக்கு வினை ஆனது.


இரண்டொழுக்க பண்புகள் :

1. பிறகு என்று தள்ளிப் போடப்படும் செயல்கள் சில சமயங்களில் இயலாமலேயே போய்விடும். எனவே அன்றைய வேலை அன்றே செய்து விடுவேன்.

 2. என் நண்பர்கள் என் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். எனவே நல்ல நண்பர்களோடு சேருவேன்.

பொன்மொழி :

கண்ணுக்குத் தெரிந்த மனிதனை மதிக்காவிட்டால்... கண்ணுக்குத் தெரியாத கடவுளை மதித்தும் பயன் இல்லை!

பொது அறிவு :

1.கங்காரு ஒரே குதிப்பில் எத்தனை தூரம் செல்லும்?

 9மீட்டர்.

 2. மிக நீண்ட ஆயுள் உடைய விலங்கு எது? 

 ஆமை.

English words & meanings :

Junky - useless or of little value. Adjective. எதற்கும் உதவாத குப்பை. பெயரளபடை. Junkie - one who is addicted to alcohol. Noun. குடிப்பழக்கம் அடிமை பட்டவர். பெயர்ச்சொல்

ஆரோக்ய வாழ்வு :


வெள்ளரிக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் அதிலுள்ள சுண்ணாம்புச்சத்து ரத்தக்குழாய்களைத் தளர்த்தி,உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது

NMMS Q 11

nescod' என்ற மாற்றியமைக்கப்பட்ட எழுத்துக்கள் மூலம் உருவாக்கப்படும் அர்த்தமுள்ள வார்த்தை என்ன? 

 விடை : second 

ஜூன் 27

பங்கிம் சந்திர சட்டர்ஜி அவர்களின் பிறந்த நாள்

பங்கிம் சந்திர சட்டர்ஜி என அழைக்கப்படும் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா (Bankim Chandra Chattopadhyay ( ஜூன் 27, 1838[1] – ஏப்ரல் 8, 1894)[2] ஒரு வங்காள எழுத்தாளரும் கவிஞரும் இதழியலாளருமாவார்.[3] இவர் எழுதிய ஆனந்த மடம் என்ற நூலில் இடம்பெற்ற வந்தே மாதரம் என்ற பாடல் இந்தியாவின் தேசியப் பாடலாக உள்ளது. இந்திய தேசிய இயக்கத்தில் பங்கு கொண்ட இவர் 13 புதினங்கள் உட்பட்ட பல நூல்களை வங்காள மொழியில் எழுதியுள்ளார். இந்தியாவின் பிற மொழிகள் மற்றும் ஆங்கில மொழி நூல்களையும் இவர் மொழிபெயர்த்துள்ளார்.

ஹெலன் கெல்லர் அவர்களின் பிறந்தநாள்



ஹெலன் கெல்லர் (Helen Adams Keller) (ஜூன் 271880 - ஜூன் 11968) புகழ்பெற்ற எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் விளங்கிய ஓர் அமெரிக்கப் பெண்மணி ஆவார். பிறக்கும் பொழுது ஆரோக்கியமாகவே இருந்தார். அவர் பிறந்து 19 மாதங்களில் ஏற்பட்ட கடும் காய்ச்சல் காரணமாகக் கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தார். ஆன் சல்லிவன், கெல்லரின் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்

ஆன் சல்லிவனை துணைக்கு வைத்துகொண்டு தொய்வின்றி உழைத்த கெல்லர் 1904 ஆம் ஆண்டு தன்து 24 ஆவது வயதில் இளங்கலை பட்டம் பெற்றார். கண்பார்வையின்றி காதும் கேளாமல் பல்கலைக் கழகத்தில் படித்து இளங்கலைப் பட்டம் பெற்ற முதற்பெண்மணி என்ற சிறப்பும் பெற்றார். 1903 இல் 'தி ஸ்டோரி ஆஃப் மை லைப்’ என்ற தலைப்பில் தனது சுயசரிதையை எழுதினார் கெல்லர். தன் வாழ்நாளில் மொத்தம் 12 நூல்களை எழுதியுள்ளார்.  

பி. டி. உஷா அவர்களின் பிறந்தநாள்




பி. டி. உஷா கேரளாவைச் சேர்ந்த ஓர் இந்திய தடகள விளையாட்டாளர் ஆவார். 1979ஆம் ஆண்டிலிருந்து இந்திய தடகள விளையாட்டுத் துறையில் பங்கெடுத்து வருகிறார். இந்தியத் தடகள விளையாட்டுக்களில் மாபெரும் சாதனையாளர்களில் ஒருவராகக் கருதப்படும் உஷா பலநேரங்களில் "இந்தியத் தட களங்களின் அரசி"எனக் குறிப்பிடப்படுகிறார்.[2] இவர் பய்யோலி எக்சுபிரசு என்றும் அழைக்கப்படுகிறார். 1985இலும் 1986இலும் உலகத் தடகள விளையாட்டுக்களில் முதல் பத்து பெண் விளையாட்டாளர்களில் ஒருவராக விளங்கினார். இவருக்கு முன்பும் பின்பும் இந்தப் பட்டியலில் வேறெந்த இந்தியரும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிக்கதை

பிச்சைக்காரனின் தன்னம்பிக்கை

ஒரு புகைவண்டி நிலையத்தில் பிச்சைக்காரன் ஒருவன் தனது கைப்பை நிறைய பென்சில்களை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான். ஒரு கணவான் அந்தவழியாகச் சென்றபோது 5 ரூபாய் நாணயத்தை பிச்சைக்காரனின் திருவோட்டில் போட்டார். பிறகு புகைவண்டியில் ஏறி அமர்ந்தார். 

அவரது மனதில் ஒரு கருத்து உதித்தது. எழுந்து வேகவேகமாக அதே பிச்சைக்காரனிடம் சென்று, அவனது பையிலிருந்த பென்சில்களை எடுத்துக்கொண்டு 5 ரூபாய்க்குச் சமமான பென்சில்களை எடுத்துக்கொள்கிறேன். என்ன இருந்தாலும் நீயும் தொழில் செய்கிறாய் அல்லவா? என்று கூறிவிட்டு புகைவண்டியில் தனது இருக்கைக்குத் திரும்பினார். 

ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்த கணவான் ஒரு விருந்தில் கலந்துகொள்ளச் சென்றார். அந்த விருந்தில் 6 மாதங்களுக்கு முன்னாலே இரயில்நிலையத்தில் பிச்சையெடுத்துக்கொண்டு இருந்தவனும் அமர்க்களமான கோட் மற்றும் டை சகிதமான உடையில் கனகச்சிதமான கணவானாக விருந்தில் பங்குகொள்ள வந்து இருந்தான். அவன் இந்தக் கணவானை அடையாளம் கண்டுகொண்டு இப்படிக்கூறினான். 

அன்பரே... நீங்கள் என்னை மறந்து போகியிருக்கலாம். ஆனால் நான் உங்களால்தான் இப்படி நல்ல நிலைமைக்கு வந்து இருக்கிறேன். நான் நல்ல நிலைமைக்கு வருவதற்கு நீங்கதான் காரணம். அந்த கோட் சூட் வாலிபன் கணவானிடம் பழைய நிகழ்வுகளை நினைவூட்டினான். 

கணவான், எனக்கு நினைவுவந்துவிட்டது. இப்போது என்ன செய்கிறாய். உடைகளிலும் நல்ல மாற்றம் தென்படுகிறது, என்னப்பா? என்று கேட்டார். 

கோட் சூட் வாலிபன் சொன்னான், நீங்கள்தான் என்னுடைய மாற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் காரணம். என்னுடைய வாழ்நாளிலே உங்களை மறக்கமுடியாது. என் வாழ்க்கையில் என்னை ஒரு மனிதனாக மதித்த முதல் மனிதர் நீங்கள்தான். 5 ரூபாயை எனது திருவோட்டில் இட்டபின் சிறிது நேரத்திற்குப் பிறகு வந்து அந்த ரூபாய்க்குச் சமமான பென்சில்களை என்னிடமிருந்து பெற்றுச் சென்றீர்கள். 

எனக்குள் ஒளிந்திருந்த வியாபாரி அப்போதுதான் எனக்கே தெரியவந்தான். அதுவரையில் பிச்சையெடுத்துத் திரிந்த நான் அந்த ஒரு நிமிடத்தின் தாக்குதலில் ஒரு வியாபாரியாக உருவெடுத்து உழைக்க ஆரம்பித்தேன். 

அந்த ஒரு நிமிடத்துக்கு முன்னர்வரையில் சோம்பேறியாக அழுக்காக புகைவண்டி நிலையத்தில் பிச்சைக்காரர்களின் வரிசையில் ஒருவனாக யாராலும் மதிக்கப்படாத, உருப்படாதவனாக இருந்த நான் உங்கள் நடவடிக்கையால் திருந்தினேன். 

என்னுள்ளே சாக்ரடீஸின் கொள்கைகளைத் தூண்டிவிட்டவர் நீங்கள்தான். பிறகுதான் சிந்திக்க ஆரம்பித்தேன். நான் யார்? எனது கொள்கை என்ன? எதற்காகவோ பிறந்துவிட்டேன். ஆனால் சாகும்போதாவது எதையாவது சாதித்துவிட்டு சாகலாமே என முடிவெடுத்தேன். பிச்சையெடுப்பதை நிறுத்தி எனது புதிய வாழ்க்கையை ஆரம்பித்தேன். நான் உங்களுக்கு நன்றி கூறுவதற்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். நன்றிகள் பலகோடி அய்யா, என்றான்.

இன்றைய செய்திகள்

27 .06.22

★சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணிக்க 15 ஐஏஎஸ் அதிகாரிகளை கண்காணிப்பு அலுவலர்களாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

★தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்.

★அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை - இணையவழி விண்ணப்ப பதிவு தொடங்கியது.

★பூச்சிகளை பிடித்து உண்ணும் அரிய வகை தாவர இனம் மேற்கு இமயமலைப் பகுதியில் கண்டுபிடிப்பு.

★ரஷிய பொருட்களின் போக்குவரத்துக்கு தடை; எந்த சலுகையும் வழங்க முடியாது – லிதுவேனியா அறிவிப்பு.

 ★அரசுப்பள்ளிகளில் செஸ் போட்டிகள் ஜூலை 11 முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடத்த வேண்டும்; வெற்றிபெறும் மாணவர்கள், மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை பார்ப்பதற்கும், செஸ் வீரர்களுடன் கலந்துரையாடுவதற்கும் அனுமதிக்கப்படுவர்; பள்ளிக்கல்வித்துறை.

★உலக கோப்பை வில்வித்தை: இந்திய ஜோடி தங்கம் வென்று சாதனை.

★காமன்வெல்த் விளையாட்டுக்கான இந்திய நீச்சல் அணி அறிவிப்பு.

★ரஞ்சி கோப்பையை முதல் முறையாக கைப்பற்றியது மத்திய பிரதேச அணி.

★பெண்கள் கிரிக்கெட்; இலங்கைக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி.

Today's Headlines

🌸In Chennai to supervise and manage the monsoon rain and its impacts 15 IAS officers were appointed.

🌸 There is a chance for rain for 4 days on the coming days - prediction by Metrology Department

🌸Students who studied in government school till 12th then going for the Higher studies will get the stipend of 1000 rs. The registration process through website is started.

🌸 The special and rare carnivorous plants which eat insects are discovered in West Himalayas. 

🌸The country Lithuania declared that the transport of Russian goods will be stopped. There won't be any privileges.

🌸In government school the chess competition among students should be conducted between July 11th and August 5. The winners will be awarded with a tour to Mamallapuram where the Olympiatic chess tournaments are going on and will be allowed to play with the chess players there - Education Department . 

🌸In World level Archery competition Indian Pair won the gold medal. 

🌸Women's cricket against Sri Lanka Indian team won again for the 2nd time
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Thursday, June 23, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.06.2022

 திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: மானம்

குறள் : 965
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்.

பொருள்:
குன்றினைப் போல் உயர்ந்து கம்பீரமாக நிற்பவர்களும் ஒரு குன்றிமணி அளவு இழிவான செயலில் ஈடுபட்டால் தாழ்ந்து குன்றிப் போய் விடுவார்கள்

பழமொழி :

Measure thrice before you cut once

ஒரு செயலை செய்யும் முன் பலமுறை சிந்திக்கவும்

இரண்டொழுக்க பண்புகள் :

1. பெற்றோர் ஆசிரியர்கள் நான் நலம் பெறவே ஆலோசனை கூறுவர். கண்டிப்பாக அந்த அறிவுரைகள் படி நடக்க முயற்சி செய்வேன். 

2. நல்ல பண்புகள் கடை பிடித்து நல்ல செயல்கள் நாள் தோறும் செய்வேன்

பொன்மொழி :

வீழ்ந்தாலும் எழும் சூரியன் போல, படிப்படியாய் ஊன்றி மிதித்து முன்னேறு! ஒருநாள் நீயும் வெற்றியாளனே!

பொது அறிவு :

1.எந்த விட்டமின் ஈரலில் பாதுகாக்கப்படும்? 

விட்டமின் ஏ. 

2. மனித உடலில் கெட்டியான பகுதி எது? 

பற்களின் இனாமல்.

English words & meanings :

Identical - similar in every detail. Adjective. ஒத்த வேறு பாடு இல்லாத. பெயரடைச் சொல்

ஆரோக்ய வாழ்வு :

வாழைப்பூ நரம்புகளை வலுவூட்டும். குறிப்பாக மூளை நரம்புகளில் சூட்டைக் தணித்து புத்துணர்வைக் கொடுக்கும்.

NMMS Q 10

AB = 0; BC = 2; CD = 6 எனில் ABC இன் மதிப்பு என்ன? விடை: 0

ஜூன் 24


கண்ணதாசன் அவர்களின் பிறந்நாள்





கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் "அரசவைக் கவிஞராக" இருந்தவர். இவர் சேரமான் காதலி  என்ற நூலுக்காக சாகித்ய அகாதமி விருது (1980) பெற்றவர்.

நீதிக்கதை

தவளையின் வெற்றி

வெகு காலத்திற்கு முன்பு சிறிய தவளைகள் பல ஒன்று சேர்ந்து ஒரு பந்தயத்திற்கு ஏற்பாடு செய்தன. மிகப்பெரிய கோபுரம் ஒன்றில் ஏறி அதன் உச்சியை அடைய வேண்டும் என்பது தான் பந்தயத்தின் இலக்கு. 

இந்தப் பந்தயத்தைப் பார்ப்பதற்காகவும், போட்டியாளர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் அந்த பெரிய கோபுரத்தைச் சுற்றி மிகப்பெரும் கூட்டம் கூடி விட்டது. 

போட்டி ஆரம்பமாகி விட்டது. உண்மையிலேயே அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவருக்குக் கூட அந்த சிறிய தவளைகளால் கோபுரத்தின் உச்சியை அடைய முடியும் என்ற நம்பிக்கை இல்லை. 

கூட்டத்திலிருந்தவர்கள் பேசிக்கொண்டனர். வழி மிகவும் கடினமானது. 

இந்தச் சிறிய தவளைகளால் நிச்சயமாக உச்சியை அடைய முடியாது. 

வெற்றிபெற ஒரு சிறிய வாய்ப்பு கூட அவற்றுக்குக்கிடையாது. கோபுரத்தின் உயரம் மிகவும் அதிகம். 

பார்வையாளர்களின் இத்தகைய பேச்சைக்கேட்ட அந்த சிறிய தவளைகள் ஒன்றன்பின் ஒன்றாக கோபுரத்தின் மேலே ஏற முடியாமல் சரிய ஆரம்பித்தன. ஒரு ஜான் ஏறினால் ஒரு முழம் சறுக்கியது. தொடர்ந்து உற்சாகத்துடன் இருந்த ஒரு சில தவளைகள் மட்டும் மேலும் அதிக உயரத்திற்கு ஏறிக் கொண்டிருந்தன. 

கூடியிருந்த கூட்டம் தொடர்ந்து கூக்குரலிட்டது. 

இது மிகவும் கடினமான விஷயம். உங்களில் ஒருவரும் உச்சியை அடையப்போவதில்லை. 

உற்சாகமாக இருந்த அந்த சிறிய தவளைகளில், சில மிகவும் சோர்வடைந்து தங்கள் முயற்சியைக் கைவிட்டு விட்டு கீழ் நோக்கி இறங்கத் தொடங்கின. 

ஒரே ஒரு தவளையைத் தவிர அனைத்து தவளைகளும் தங்கள் முயற்சியை கைவிட்டு விட்டன. அது மட்டும் தொடர்ந்து மேலே மேலே ஏறிக்கொண்டே இருந்தது. அது தன் முயற்சியில் சற்றும் மனம் தளரவில்லை. அது மிகுந்த பிரயத்தனத்துடன் கோபுரத்தின் உச்சியை சென்றடைந்தது. 

மற்ற அனைத்துத் தவளைகளும் அந்த ஒரு தவளையால் மட்டும் எப்படி கோபுரத்தின் உச்சியை அடைய முடிந்தது என்பதைத் தெரிந்து கொள்ள மிகுந்த ஆவலாக இருந்தன. 

போட்டியில் கலந்து கொண்ட தவளைகளில் ஒன்று, வென்ற தவளையிடம் உனக்கு மட்டும் கோபுரத்தின் உச்சியை அடைவதற்கு உண்டான பலம் எங்கிருந்து வந்தது? என்று கேட்டது. 

வெற்றி பெற்ற தவளை கூறியது இவர்கள் சொல்வது எதுவும் என் காதில் விழவில்லை என் எண்ணம் முழுதும் உச்சியை அடைவது மட்டுமே...

இன்றைய செய்திகள்

24.06.22

🔆 தமிழகத்திலேயே முதன்முறையாக திருச்சி தென்னூரில் உள்ள சுப்பையா நினைவு நடுநிலைப் பள்ளியில் காலை உணவு வங்கி என்ற முன்னோடித் திட்டம்  தொடங்கப்பட்டது.

🔆கடலூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 பேர் உயிரிழப்பு; மூவர் படுகாயம்.

🔆தமிழகத்தில் பிஏ4, பிஏ5 வகை கரோனா வேகமாக பரவி வருவதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.

🔆போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வாரிசுகள் தொழிற்கல்வி கூடங்களில் இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

🔆மேகேதாட்டு அணை கட்டுவதற்கான கர்நாடகா விண்ணப்பம் நிராகரிப்பு - மேலாண்மை ஆணைய கூட்டம் தள்ளிவைப்பு.

🔆அசாம் வெள்ளத்தில் 89 பேர் உயிரிழப்பு - 55 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு.

🔆இலங்கை பொருளாதாரம் சீர்குலைவு; கச்சா எண்ணெய் வாங்க நிதி இல்லை - பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு.

🔆புரோ ஆக்கி லீக் தொடர்: வெற்றியோடு நிறைவு செய்தது இந்திய அணி.

🔆இலங்கைக்கு எதிரான முதல் டி20 : 34 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய பெண்கள் அணி வெற்றி.

Today's Headlines

🔆For the first time in Tamil Nadu, a pilot project called Breakfast Bank was launched at Subbaiah Memorial Middle School in Trichy Tennur.

🔆 Explosion at firecracker factory near Cuddalore: 3 got killed: Three got injured.

 🔆Health Minister Mr.M. Subramanian has warned that PA4 and PA5 corona are spreading rapidly in Tamil Nadu.

 🔆The Municipal Transport Corporation has announced that the heirs of the employees of the Transport Corporation can apply for admission under the reservation in the vocational halls.

🔆 Rejection of Karnataka application for construction of Meghathattu Dam - Postponement of Management Commission meeting.

 🔆Assam floods kill 89 people and  more than 55 lakhs people injured

 🔆Sri Lankan economic downturn;  No funds to buy crude oil  announced by P M Ranil Wickremesinghe

  🔆Indian team won the pro Hockey league.

 Indian women's team won the first T20 by 34 runs against Sri Lanka
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்