Thursday, January 8, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.01.2026

NRI Day - வெளிநாடுவாழ் இந்தியர் நாள்








திருக்குறள்: 

குறள் 323: 

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் 
பின்சாரப் பொய்யாமை நன்று. 

விளக்க உரை: 

இணையில்லாத ஓர் அறமாகக் கொல்லாமை நல்லது, அதற்கு அடுத்த நிலையில் கூறத்தக்கதாகப் பொய்யாமை நல்லது.

பழமொழி :

Questions are the seeds of knowledge. 

கேள்விகளே அறிவின் விதைகள்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்.

2.பெரியோர் அறிவுரையை கேட்டு நடப்பேன்.

பொன்மொழி :

என்னிடம் சிறப்பான தனித்திறமை என்று எதுவுமே இல்லை . என்னிடம் இருப்பது ஆர்வம் மட்டுமே - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

பொது அறிவு : 

01.நம்நாட்டில் முதன்முதலாக இரும்பு எஃகு தொழிற்சாலை நிறுவப்பட்ட இடம் எது? 

  ஜாம்ஷெட்பூர் -Jamshedpur

02.தங்கப் போர்வை நாடு" (Golden Fleece)எனப்படுவது  எது?

ஆஸ்திரேலியா -Australia

English words :

Slammed-banged 

generous -noble

தமிழ் இலக்கணம்: 

இன்று 500 ஐ எப்படி எழுதுவது என்று பார்ப்போம்
1. ஐநூறு ரூபாய் எனக்கு கிடைத்தது
2. ஐந்நூறு ரூபாய் எனக்கு கிடைத்தது
இதை பிரித்து எழுதுவோம்.
ஐநூறு = ஐ+ நூறு 
ஐந்நூறு = ஐந்து + நூறு 

 ஐந்நூறு ரூபாய் எனக்கு கிடைத்தது என்பதே சரி

அறிவியல் களஞ்சியம் :

 நீங்கள் சுழற்றிக்கொண்டே ஒரு பந்தை கைவிடும்போது, பலத்த காற்று வீசும் பட்சத்தில் அது பறந்து போகும் என்கிறது அறிவியல். இதை மேக்னஸ் விளைவு என்று அழைகிறார்கள். இந்த விளைவு தான் டென்னிஸ் மற்றும் கால்பந்து விளையாட்டை ஒரு தந்திரமான மற்றும் எளிமையான விளையாட்டாக மாற்றுகிறது.

ஜனவரி 09

NRI Day - வெளிநாடுவாழ் இந்தியர் நாள்


வெளிநாடுவாழ் இந்தியர் நாள், 2003 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்தியாவைத் தவிர்த்த பிற நாடுகளில் வாழும் இந்தியர்களின் நினைவாகக் கொண்டாடப்படுகிறது. மகாத்மா காந்தி, தென்னாப்பிரிக்காவிலிருந்து மும்பை வந்து சேர்ந்த நாளின் (ஜனவரி 9, 1915) நினைவாக இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு இந்திய நகரத்தில் இவ்விழா கொண்டாடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழாவின்போது, வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன.

நீதிக்கதை

 உயிரைக் காத்த உண்மை

நரி, ஓநாய், முயல் ஆகிய மூன்றும் சேர்ந்து ஒரு விவசாயின் பயிர்களையும், விளை பொருட்களையும் நாசம் செய்து வந்தன. இதனால் மிகவும் பாதிக்கப்பட்ட விவசாயி மூன்றையும் ஒழித்துக் கட்ட முடிவு செய்தான். ஒரு நாள் அந்த விவசாயி அவைகளைப் பிடிக்கப் பந்தயங்களை வைத்தான். ஒரு நாள் நரி, ஓநாய், முயல் மூன்றும் விவசாயி வைத்த பந்தயங்களில் மாட்டிக் கொண்டன. 

அவற்றைப் பிடித்த விவசாயி முதலில் முயலிடம் என் தோட்டத்திற்கு ஏன் வந்தாய்? என்று கேட்டான். அதற்கு முயல் முள்ளங்கி இலைகளைச் சாப்பிட வந்தேன். பசியினால் தான் இந்தத் தவறைச் செய்து விட்டேன். இனி ஒருபோதும் இங்கே வரமாட்டேன். என்னை மன்னித்துவிடு என்று உண்மையைக் கூறியது. அடுத்தது நரியிடம் கேட்டான். அதற்கு நரி முயல் போன்ற பிராணிகள் வந்து உனது தோட்டத்தை அழித்துவிடக்கூடாது என்று எண்ணித் தான் வந்ததாகக் கூறியது. 

அதற்கு அடுத்தபடியாக ஓநாயிடம் கேட்டான். அதற்கு அந்த ஓநாய் நீ திருடி வைத்துள்ள எங்களுக்கு உணவாக வேண்டிய ஆட்டுக்குட்டிகளை உண்ண வந்தேன் என்று ஆணவத்துடன் கூறியது. மூன்றையும் விசாரித்த விவசாயி தன் தவறை ஒப்புக்கொண்ட முயலை மட்டும் விடுவித்து நரியையும், ஓநாயையும் கொன்றான். 

நீதி :

உண்மை நிச்சயம் வெல்லும்

இன்றைய செய்திகள்

09.01.2026

⭐ பொதுமக்களின் வசதிக்காகவும், குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும் பொது மற்றும் ஏசி இல்லாத ரயில் பெட்டிகளின் உற்பத்தியை அடுத்த 2 ஆண்டுகளில் 9640 பொது மற்றும் ஏசி இல்லாத பெட்டிகளைத் தயாரிக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.

⭐சென்னை நகரில் போகி அன்று எரிக்கப்படும்  பொருட்களால் புகை மண்டலம் ஏற்படுகிறது. மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.  எனவே புகையில்லா போகிப் பண்டிகையைக் கொண்டாட தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வேண்டுகோள்.

⭐பிலிப்பின்ஸ் நாட்டிலுள்ள மாயோன் எரிமலையின் உச்சியிலிருந்து அவ்வப்போது பாறைகள் சரிந்து விழுவதால் அப்பகுதியில் வசிக்கும் 729 குடும்பங்களைச் சேர்ந்த 2,800-க்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான 5-வது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது.
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய ஸ்டார்க் தொடர் நாயகன் விருதை வென்றார். ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்டில் ஸ்டார்க் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

Today's Headlines

⭐The Government of India plans to manufacture 9640 general and non-AC coaches in the next 2 years. Additionally, the production of public and non-AC train coaches aims to provide convenience to the public and ensure safe travel at affordable fares.

⭐In Chennai city, the burning of materials on Bhogi day creates a thick cloud of smoke. This causes health problems such as breathing difficulties and eye irritation for the general public. Therefore, the Tamil Nadu Pollution Control Board appeals to the public to celebrate a smoke-free Bhogi festival.

⭐More than 2,800 people from 729 families living in the area are being evacuated due to occasional rock falls from the summit of the Mayon volcano in the Philippines.

 SPORTS NEWS 

🏀The 5th and final Ashes Test match between Australia and England was held in Sydney. Starc won the Man of the Series award for his outstanding performance in the Ashes Test series, and Starc took 5 wickets.

Covai women ICT_போதிமரம்

Wednesday, January 7, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.01.2026

ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங்

    






திருக்குறள்: 

குறள் 296: 

பொய்யாமை யன்ன புகழில்லை எய்யாமை எல்லா அறமுந் தரும்.               
 விளக்க உரை: 

ஒருவனுக்கு பொய் இல்லாமல் வாழ்தலை விடப் புகழ் நிலை வேறொன்றும் இல்லை, அஃது அவன் அறியாமலேயெ அவனுக்கு எல்லா அறமும் கொடுக்கும்.

பழமொழி :

Every sunrise brings a new chance.   

ஒவ்வொரு சூரியோதயமும்  இன்னொரு வாய்ப்பை  தருகின்றது.

இரண்டொழுக்க பண்புகள் :

1.என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்.

2.பெரியோர் அறிவுரையை கேட்டு நடப்பேன்.

பொன்மொழி :

நேற்று என்பது முடிந்துவிட்டது. நாளை என்பது இன்னும் வரவேயில்லை. நம்மிடம் இருப்பது இன்று மட்டுமே. நற்செயல்களை இப்போதே தொடங்குவோம்.- அன்னை தெரசா

பொது அறிவு : 

"01.நவீன அறிவியலின் தந்தை"" என்று அழைக்கப்படுபவர் யார்?

         கலிலியோ கலிலி 

 Galileo Galilei 

02.தமிழ்நாட்டில் முத்து தொழில் அல்லது முத்துக் குளித்தல் அதிகம் நடைபெறும் இடம் எது?

      தூத்துக்குடி  Thoothukudi 

English words :

Meticulous – showing great attention to detail.ஒவ்வொரு விவரத்திலும் மிகுந்த கவனத்துடன் இருத்தல்

Articulate – Fluent or persuasive in speaking or writing. தெளிவாக உச்சரித்தல் அல்லது எழுதுதல்

தமிழ் இலக்கணம்: 

 இன்று 400 எப்படி எழுத வேண்டும் என்று பார்ப்போம்
1. உனக்கு *_நானூறு_* ரூபாய் கொடுத்தேன்
2. உனக்கு *_நாநூறு_* ரூபாய் கொடுத்தேன்
 ‌ இதில் எது சரி?
பிரித்து எழுதி பார்ப்போம் 
நானூறு‌‌ –நான்கு + நூறு 
 
நாநூறு – நான்+ நூறு 

உனக்கு *_நானூறு_* ரூபாய் கொடுத்தேன் என்பதே சரி

அறிவியல் களஞ்சியம் :

மனித மரபணுக்களில் உள்ள டி.என்.ஏ வின் எண்ணிக்கை ஆனது சுமார் 3 பில்லியன் அடிப்படை ஜோடிகளும், சுமார் 25,000 மரபணுக்களும் (ஜீன்ஸ்) உள்ளன என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். மனித உடலின் 10 டிரில்லியன் செல்களிலும் அந்த மரபணுவின் முழு நகல் காணப்படுகிறதாம், அந்த டி.என்.ஏ எல்லாவற்றையும் வரிசைப்படுத்தினால், அது பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள தூரத்தை விட 100 மடங்கு அதிகமாக நீளுமாம். 

ஜனவரி 08

ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங் அவர்களின் பிறந்த நாள்



ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங் (Stephen William Hawking, ஜனவரி 8 , 1942 -14 மார்ச்சு 2018) ஆங்கிலேய கோட்பாட்டு அறிவியலாளரும், அண்டவியலாளரும், நூலாசிரியரும் ஆவார். இவர் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தின் கோட்பாட்டு அண்டவியல் மையத்தின் இயக்குநராகப் பணியாற்றினார்.இவர் உரோசர் பென்ரோசுடன் இணைந்து பொதுச் சார்புக் கோட்பாட்டில் புவியீர்ப்பு அருநிலைத் தேற்றங்களை நிறுவியமை, ஆக்கிங்கு கதிரியக்கம் என அழைக்கப்படும் கருந்துளைகளின் கதிர்வீச்சு உமிழ்தலை எதிர்வுகூறியமை போன்ற அறிவியல் ஆய்வுகளுக்காகப் பெரிதும் அறியப்படுகிறார். இவரே முதன் முதலில் அண்டவியலுக்கான கோட்பாட்டை உருவாக்கி, பொதுச் சார்புக் கோட்பாடு, குவாண்டம் இயங்கியல் ஆகியவற்றின் மூலம் விளங்கப்படுத்தினார். குவாண்டம் இயங்கியலின் பல-உலகங்களுக்கான விளக்கத்திற்குத் தீவிர ஆதரவாளராக விளங்கினார்.

நீதிக்கதை

 தாய் சொல் தட்டாதே



ஒரு வீட்டின் முன் வாசலில் வேப்ப மரம் ஒன்று இருந்தது. தன்னை செடியாக நட்டு வைத்து நீர் ஊற்றி பாதுகாப்புடன் வளர்த்த அந்த வீட்டுக்காரர்களுக்கு நன்றி காட்டும் வகையில் சுத்தமான வேப்பமரத்துக் காற்றைக் கொடுத்தும் ,நிழல் கொடுத்தும் அந்த வீட்டினரை மகிழவைத்துக் கொண்டு இருந்தது.

வளர்ந்த மரத்தில் காகங்கள் கூடுகட்டி வாழ்ந்து வந்தது.வீட்டுக்கார அம்மா நாள்தோறும் வைக்கும் சாதத்தை சாப்பிடுவதும் , வேப்பமரத்தில் வசிப்பதுமாக சந்தோசமாக வாழ்ந்தன காகங்கள்.

அந்த வீட்டில் வசிக்கும் அம்மா மரங்களிடமும், பறவைகளிடமும் அன்பு செலுத்தியதே சந்தோசத்திற்கு காரணம்.இப்படி நாட்கள் ஓடிக்கொண்டு இருக்கும் போது காக்கா சில முட்டைகளை இட்டது.அதை அடைகாத்து குஞ்சுகள் பொரித்தது.


குஞ்சுகளுக்கு தேவையான உணவை தாய் காகமும், தந்தை காகமும் எடுத்து ஊட்டி வளர்த்தது.குஞ்சுகளும் உணவுகளை உண்டு வளர ஆரம்பித்தது.இறக்கைகள் வளரத் தொடங்கின.அப்போது தாய் பறவை தன் குஞ்சுகளைப் பார்த்துக் கூறியது.

"உங்களுக்கு இறக்கைகள் வளர்ந்து விட்டது, என்று பறக்க முயற்சி செய்யாதீர்கள். இன்னும் வளர்ந்தால் தான் பறப்பதற்கு வேண்டிய ஆற்றல் உங்களுக்கு வரும். இப்போது பறக்க முயற்சி செய்து விழுந்து விட்டால் உங்கள் உயிருக்கு ஆபத்தாக முடிந்து விடும்…….

எனவே , கூட்டை விட்டு வெளியில் வந்தாலும் பறக்க முயற்சிக்க வேண்டாம். கிளைகளில் அமர்ந்து கொள்ளுங்கள்’ என்றது தாய் காகம்." சரி" என குஞ்சுகள் கேட்டுக்கொண்டன.சில நாட்கள் சென்ற பின்………..

ஒரு நாள் ஒரு ஒரு குஞ்சு மட்டும் கூட்டில் இருந்து வெளியில் வந்து கிளைகளில் அமர்ந்து கொண்டு வெளி உலகைப் பார்த்துக் கொண்டு இருந்தது.

வானில் பறக்கும் பறவைகளை எல்லாம் பார்த்த குஞ்சு காகம் தானும் பறக்க முயற்சித்தது .கிளைகளில் தாவித்….தாவி. பறக்க முயற்சி செய்தது.அதை கவனித்த மற்றொரு குஞ்சும் வெளியில் வந்தது.தானும் தாவித்…தாவி…. பறக்க முயற்சி செய்தது.

இறக்கைகள் சரியாக வளராத நிலையில் இருந்த அந்த குஞ்சு காகம் தடுமாறி கீழே விழுந்தது .மேலே பறக்க முடியாமல் தன் தாயை கா..கா… என அழைத்த வண்ணம் இருந்தது.

தன குஞ்சுவின் குரல் கேட்டு பறந்து வந்த தாய் காகமும் தந்தை காகமும் கரைந்து கொண்டே இருந்தன.பக்கத்தில் வசித்த காகங்கள் எல்லாம் கூட்டமாக வந்து விட்டன .குஞ்சு காகத்தால் பறக்க முடியவில்லை.

இதைக் கவனித்த அந்த வீட்டு அம்மா குஞ்சு காகத்தை தூக்கி கிளையில் வைத்தார்கள். தனது கூட்டிற்குள் போய் உட்கார்ந்து கொண்டது குஞ்சு காகம்.

தாய் காகம் மறுபடியும் புத்தி சொன்னது,."இன்னும் உங்களுக்கு பறக்கும் அளவிற்கு இறக்கைகள் வளரவில்லை, பறக்க முயற்சிக்காதீர்கள்."என மீண்டும் எச்சரித்தது காகம்.

"சரி" என கேட்டுக்கொண்ட குஞ்சுகள் மறுநாள் தாய் காகம் வெளியில் போன சமயம் பார்த்து கிளையில் வந்து அமர்ந்து கொண்டன.பறவைகள் பறப்பதை பார்த்த குஞ்சு காகம், நான் இன்று நன்றாக பறந்து விடுவேன்’என்றது.

‘வேண்டாம்’ என்றது மற்ற குஞ்சுகள்.’நேற்று நீ பிழைத்ததே இந்த வீட்டுக்கார அம்மா உன்னை எடுத்து இங்கு விட்டதால்தான் ,நம் அம்மா காகம் நம்மை எச்சரித்ததை மறந்து விட்டாயா?

"தாய் சொல் தட்டவேண்டாம் "அவர்கள் நமது நன்மைக்காகத்தான் சொல்வார்கள் .,என்றது மற்றொரு குஞ்சு.

இதை எல்லாம் கேட்காத குஞ்சு காகம் இறக்கையை அடித்து பறந்தது.அடுத்த நிமிடமே தரையில் வந்து விழுந்தது.மேலே மேலே பறக்க முடியாமல் தாவித்தாவிச் சென்று…கழிவு நீரில் விழுந்து விட்டது.

இறக்கைகள் எல்லாம் நனைந்த நிலையில் தாவிச் செல்லவும் முடியாமல் ,பறக்கவும் முடியாமல் தவித்தது.

தாய் காகமும், மற்ற காகங்களும் கா…கா…என கத்தி தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியது. சிறிது நேரத்தில் குஞ்சு காகம் கழிவு நீரில் தன் உயிரை விட்டது.


அதைப் பார்த்த மற்ற குஞ்சுகள் கண்ணீர் விட்டன. "தாய் சொல்லைக் கேட்ட" குஞ்சுகள் கூட்டில் பத்திரமாக இருந்தன.

இன்றைய செய்திகள்

08.01.2026


⭐டெல்லியில் காற்று மாசினை தடுக்க தவறியதற்காக காற்றுதர மேலாண்மை ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

⭐ 150.18 மில்லியன் டன் அரிசி உற்பத்தியுடன் இந்தியா, நமது அண்டை நாடான சீனாவை விஞ்சி உலகின் மிகப்பெரிய அரிசி உற்பத்தி செய்யும் நாடாக உருவெடுத்துள்ளது.

⭐பி.எஸ்.எல்.வி-சி 62 ராக்கெட் 12-ந் தேதி விண்ணில் பாய்கிறது.
ஆராய்ச்சி நிறுவனங்களின் 17 துணை செயற்கைக்கோள்களும் ராக்கெட் மூலம் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀இங்கிலாந்து மற்றும வேல்ஸில் பெண்களுக்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்று பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. ஏற்கனவே 6 அணிகள் தகுதிப் பெற்றுள்ளன. 4 அணிகள் தேர்வு செய்யப்பட இருக்கின்றன.

Today's Headlines

⭐The Supreme Court has slammed the Air Quality Management Authority for failing to curb air pollution in Delhi.

⭐ India has emerged as the world's largest rice producer, surpassing our neighboring country China, with a rice production of 150.18 million tonnes.

⭐PSLV-C62 rocket to launch on 12th. 17 satellites of research institutes are also planned to be launched by the rocket. 

 *SPORTS NEWS*

🏀The Women's T20 Cricket World Cup is set to be held in England and Wales. 10 teams will participate in this series and will compete in a series of matches, also 6 teams have already qualified. 4 teams are yet to be selected.

Covai women ICT_போதிமரம்

Tuesday, January 6, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.01.2026








திருக்குறள்: 

குறள் 294: 

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் 
உள்ளத்து ளெல்லாம் உளன். 

விளக்க உரை: 

ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்.

பழமொழி :

"Joy multiplies when shared." 

மகிழ்ச்சி பகிர்ந்தால் இரட்டிப்பாகிறது.

இரண்டொழுக்க பண்புகள் :

1.என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்.

2.பெரியோர் அறிவுரையை கேட்டு நடப்பேன்.

பொன்மொழி :

வெற்றி பெற மூன்று வழிகள்: மற்றவர்களை விட- அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள், அதிகமாக பணியாற்றுங்கள் குறைவாக எதிர்பாருங்கள் - வில்லியம் ஷேக்ஸ்பியர்

பொது அறிவு : 

01.உலகில் இயற்கை ரப்பர் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில்
முன்னணியில் நாடு எது?

தாய்லாந்து -Thailand

02.மாலத்தீவின் தலைநகரம் எது?

 மாலே  - Maley

English words :

Consensus- agreement 

Bustle -hurry

தமிழ் இலக்கணம்: 

 300,400, 500 எழுத்தால் எழுதுவது எவ்வாறு என்று  பார்ப்போம்
இன்று 300 எழுதுவதைப் பார்ப்போம்
300 –முன்னூறு
           முந்தூறு
எது சரி?
"நான் முன்னூறு ரூபாய் வாங்கினேன்."

முன்னூறு பிரித்தால் 
முன் + நூறு 

"நான் முன் + நூறு ரூபாய் வாங்கினேன்."
இதன் பொருள் நான் முன்பு நூறு ரூபாய் வாங்கினேன் என்பதாகும்.

அடுத்த சொல்
முந்நூறு இதைப் பிரித்தால் மூன்று + நூறு  

"நான் மூன்று + நூறு ரூபாய் வாங்கினேன்." என்பது இதன் பொருளாகும்.
எனவே 300 ஐ முந்நூறு என்று தான் எழுத வேண்டும்

அறிவியல் களஞ்சியம் :

 வாழைப்பழங்களில் பொட்டாசியம் உள்ளது என்பதை அறிந்த நமக்கு, அதன் பொட்டாசியம் சிதைவு அடையும் பொபோது அவைகள் சற்றே கதிரியக்கத்தை உருவாக்குகின்றன என்பது தெரிந்து இருக்க வாய்ப்பே இல்லை. . கதிர்வீச்சு விஷத்தை உட்கொள்ள ஒரே நேரத்தில் நீங்கள் 10,000,000 வாழைப்பழங்களை சாப்பிட வேண்டும். 

நீதிக்கதை

 அடிமையானக் குதிரை

ஒரு குதிரைக்கும், கலைமானுக்கும் இடையில் சிறு பகை ஏற்பட்டதால் அக்கலைமானை ஒழித்துக் கட்ட எண்ணியக் குதிரை ஒரு மனிதனின் உதவியை நாடியது. அதன் வேண்டுகோளை ஏற்ற மனிதன் குதிரைக்குச் சேணமும், கடிவாளமும் போட்டான். அதன் மீது சவாரி செய்து கலைமானை விரட்டிப் பிடித்துக் கொன்றான். 

தனது பகைவன் ஒழிந்ததைக் கண்டு மகிழ்ந்த குதிரைக் கனைத்தது. தன் எதிரியை ஒழித்த மனிதனுக்கு நன்றி கூறியது. தன் கடிவாளத்தை நீக்கித் தன்னை விடுவிக்கும்படி வேண்டியது. 

குதிரையே, உன்னை விடுவிப்பதா! அது முடியவே முடியாது. நான் வசதியாகச் சவாரி செய்ய நீ எனக்கு மிகவும் பயன்படுவாய். ஆகையால் உன்னை விடுவிக்கவே மாட்டேன் என்று கூறிச் சிரித்தான். 

அன்று முதல் குதிரை, மனிதனுக்கு அடிமையாக இருக்கிறது. குதிரையின் வஞ்சம் தீர்ந்தது. ஆனால் அது தன் சுதந்திரத்தினை இழந்து அடிமையாகவே இருக்க வேண்டியதாயிற்று. 

நீதி :

பிறருக்கு கேடு நினைப்பவன் நிச்சயம் கெட்டுப்போவான்.

இன்றைய செய்திகள்

07.01.2026

⭐மாணவர்களின் கல்வி மற்றும் டிஜிட்டல் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், முதற்கட்டமாக உயர்கல்வி பயிலும் 10 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி உள்ளது. 

⭐2026-27 ஆண்டுக்குள் நாடு முழுவதும் ஒரு கோடி வீடுகளில் சோலார் பேனல்களைப் பொருத்தும் இலக்கை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.சோலார் அமைப்புகள் பொருத்தப்பட்ட வீடுகளுக்கு மாதந்தோறும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் கிடைக்கும்.

⭐அடுத்த ஐந்து நாட்களுக்கு வடமேற்கு, மத்திய, கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் காலை நேரங்களில் அடர்த்தியான மூடுபனி நிலை நீடிக்கும் எனவும், இதனால் குளிர் அதிகரிக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. 

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது.
நேபாளம் அணி தனது டி20 உலக கோப்பை போட்டிக்கான ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.

🏀ஆஷஸ் தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை 3 -1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா ஏற்கனவே கைப்பற்றி விட்டது குறிப்பிடத்தக்கது.

Today's Headlines

⭐ Intending to improve the academic and digital skills of students, the Tamil Nadu government has implemented a scheme to provide free laptops to 10 lakh students pursuing higher education in the first phase.

⭐The central government has set a target of installing solar panels in one crore homes across the country by 2026-27. Homes equipped with solar systems will get up to 300 units of free electricity every month.

⭐ The Indian Meteorological Department has also said that this will increase the cold. And the  dense fog in the mornings over northwest, central, east and northeast India for the next five days

 SPORTS NEWS 

🏀The T20 World Cup cricket series is being held in India and Sri Lanka. Nepal has launched its jersey for the T20 World Cup.

🏀The 5th and final match of the Ashes series is being played in Sydney. It is noteworthy that Australia has already won this 5-match Test series by a score of 3-1.

Covai women ICT_போதிமரம்

Monday, January 5, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.01.2026








திருக்குறள்: 

குறள் 211: 

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட் 
டென்னாற்றுங் கொல்லோ உலகு. 

விளக்க உரை: 

இந்த உலகத்தார் மழைக்கு என்ன கைமாறு செய்கின்றனர்;, மழை போன்றவர் செய்யும் உதவிகளும் கைமாறு வேண்டாதவை.

பழமொழி :

"Learning is a ladder that never ends". 

கற்றல் ஒரு முடிவில்லாத ஏணி.

இரண்டொழுக்க பண்புகள் :

1.என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்.

2.பெரியோர் அறிவுரையை கேட்டு நடப்பேன்.

பொன்மொழி :

ஏமாற்றுவதை விட தோற்றுப் போவது சிறந்தது -ஆபிரகாம் லிங்கன்

பொது அறிவு : 

01.காந்திஜியை முதன்முதலில்  "தேசத்தந்தை" (Father of the Nation) என்று அழைத்தவர் யார்?

திரு.சுபாஷ் சந்திர போஸ் 
Subhas Chandra Bose

02.இந்திய அரசியலமைப்பின் முன்னுரையை முதன்முதலில் வரைவு செய்தவர்  யார்?

திரு.ஜவஹர்லால் நேரு
 Jawaharlal Nehru

English words :

Arid-extremely dry

Hiatus -break

தமிழ் இலக்கணம்: 

 பிறமொழி சொற்களை கண்டு பிடிப்பது எப்படி பாகம் 2
மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் 
மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
2. கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்தேன்
 கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தேன்
3. அந்த நிர்வாகி மிகவும் நேர்மையானவர்
அந்த அலுவலர் மிகவும் நேர்மையானவர்

அறிவியல் களஞ்சியம் :

 ஒரு வாயுவாக, ஆக்சிஜனுக்கு மனமும் கிடையாது, நிறமும் கிடையாது. ஆனால் அதன் திரவ மற்றும் திட வடிவங்களில், இது வெளிர் நீல நிறமாக இருக்கிறது

ஜனவரி 06

கபில்தேவ் அவர்களின் பிறந்தநாள்



கபில்தேவ் ராம் லால் நிகாஞ்ச் (Kapil Dev Ram Lal Nikhanj பிறப்பு: ஜனவரி 6, 1959) என்பவர் முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் மற்றும் அணித் தலைவர் ஆவார். இவர் அனைத்துக் காலத்திற்குமான சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். மேலும் இந்திய அணி பெற்ற தலைசிறந்த அணித்தலைவர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார். இவரை நூற்றாண்டின் சிறந்த துடுப்பாட்ட வீரர் என விஸ்டன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு 2002ஆம் ஆண்டில் அறிவித்தது.

1983-ல் இந்தியா உலகக்கோப்பையை வென்றபோது அணியின் தலைவராக இருந்தார். அக்டோபர் 1999 முதல் ஆகஸ்ட் 2000 வரை இந்தியத் தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்தார். 1994 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். 

கிரிகோர் யோவான் மெண்டல் அவர்களின் பிறந்தநாள்






கிரிகோர் யோவான் மெண்டல் (Gregor Johann Mendel, சூலை 20, 1822 – சனவரி 6, 1884), மரபியல் குறித்த அடிப்படை ஆய்வுப் பணிகளுக்காக அறியப்படும் ஆத்திரிய நாட்டைச் சேர்ந்த ஒரு அகத்தீனிய அவைத் துறவி. இவரை மரபியலின் தந்தை என்று அழைக்கிறார்கள்.

மெண்டல், தனது ஆர்வத்தின் காரணமாக தனிப்பட்ட முறையில் ஆய்வு மேற்கொண்டார். தன் தோட்டத்தில் இருந்த பட்டாணிச் செடிகளில், முறைப்படுத்தப்பட்ட மகரந்தச் சேர்க்கை நடைபெறச் செய்தார். அதன் விளைவுகளை புள்ளியியல் அடிப்படையில் விளங்கிக்கொள்ள முற்பட்டபோது, மரபுப் பண்புகள் சில குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டே ஒரு சந்ததியில் இருந்து அடுத்த சந்ததிக்கு எப்படி கடத்தப்படுகின்றன என்பதைக் கண்டறிந்தார். பிற்காலத்தில், இவ்விதிகள் மெண்டலின் விதிகள் எனப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டன. 1866ல் இது குறித்த ஆராய்ச்சிக்கட்டுரை ஒன்றினை எழுதினார். எனினும், இக்கட்டுரையின் முக்கியத்துவத்தை, அவர் வாழ்நாளில் எவரும் உணரவும் இல்லை; ஏற்கவும் இல்லை. 1900ல் Correns, De Vries, Tschermak என்ற மூன்று தனிப்பட்ட ஆய்வாளர்கள் மெண்டல் எழுதிய கட்டுரையின் முக்கியத்துவத்தை உணர்ந்தனர். இன்று, மெண்டல் வரையறுத்த கோட்பாடுகள் மரபியலின் அடிப்படையாக விளங்குகின்றன.

நீதிக்கதை

 சொந்த இடம்

அயோத்தியா நகரத்தில் சித்திராங்கன் என்ற ஒரு நாய் வாழ்ந்து வந்தது. நாள் தோறும் பசியில் வாடி, அலைந்து கொண்டிருந்தது. 

ஒரு நாள் அந்த நாய், நாம் ஏன் உணவு கிடைக்காத இந்த நகரத்தில் அலைந்து கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்து, நாம் வேறு ஒரு நகரத்திற்குச் சென்றுவிடலாமே! என்று நினைத்தது. தன்னுடைய சக நண்பர்களிடம் கூறிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு அருகில் உள்ள வேறொரு நகரத்திற்குச் சென்றது. 

அங்கு ஒரு வீட்டில் சென்று தஞ்சம் புகுந்தது. அந்த வீட்டிலிருந்த எஜமானி அம்மா இந்த நாயைத் தன் வீட்டிற்குள்ளேயே வைத்துக்கொண்டு, அதனைத் தன் பிள்ளைபோல வளர்த்து வந்தாள். அந்த நாய்க்கு நல்ல உணவும் மதிப்பும் இருந்து வந்தது. 

ஒரு நாள் அந்த நாய் தன் எஜமானி அம்மாவுக்குத் தெரியாமல் வீட்டைவிட்டு வெளியே வந்து, தெருவில் நின்றது. 

அந்தத் தெருவில் வாழும் பிற நாய்கள் அந்த நாயைக் கண்டதும் விரட்டிக் கடிக்கத் தொடங்கின. இரத்தக் காயங்களோடு அந்த நாய் மீண்டும் அயோத்தியா நகருக்கே திரும்பி வந்தது. 

அந்த நாயின் நண்பர்கள், என்ன நண்பா! புதிய நகரம் எப்படி இருந்தது? என்று விசாரித்தன. 

அதற்கு அந்த நாய், அந்த நகரம் செழிப்பாக இருக்கிறது. அந்த நகரத்துப் பெண்கள் இரக்க குணமுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆனால், அங்கிருக்கும் நம் இனத்தவர்கள்தான் சரியில்லை. அதனால் தான் நான் திரும்ப இங்கேயே வந்துவிட்டேன் என்றது. 

ஆதலால், எப்போதும் சொந்த இடத்தில் இருப்பதுதான் சுகம் என்றது அந்த நாய்.

இன்றைய செய்திகள்

06.01.2026

⭐சேத்துப்பட்டில் பயணிகள் விரைவு ரெயில் தடம்புரண்டு விபத்து. பயணிகள் விரைவு ரெயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் எந்த பாதிப்பும் இல்லை.

⭐ சென்னை பெருநகர காவல் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்களின் துரித நடவடிக்கையால் கடந்த 2025 ஆம் ஆண்டு மட்டும் சைபர் மோசடியில் பொதுமக்கள் இழந்த ரூ.25.97 கோடி மீட்கப்பட்டுள்ளது.

⭐ஈரானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை எதிர்த்து ஈரானின் 22 மாகாணங்களின் 100-க்கும் அதிகமான பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் 5வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.இந்த ஆஷஸ் தொடரில் பென் ஸ்டோக்ஸை ஸ்டார்க் 5 முறை ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.
மேலும், பென் ஸ்டோக்ஸை அதிகமுறை ஆட்டமிழக்கச் செய்த பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

Today's Headlines

⭐Passenger express train derails in Sethupattu. There was no damage, as no passengers on the passenger express train.

⭐ Due to the prompt action of the Chennai Metropolitan Police Cyber ​​Crime Division police stations, Rs. 25.97 crore lost by the public to cyber fraud in the last year alone has been recovered.

⭐Thousands of people have taken to the streets in more than 100 locations across 22 provinces of Iran to protest the economic crisis in the country. 

 SPORTS NEWS 

🏀The 5th and final match of the 5-match Ashes series between Australia and England is being played in Sydney. Starc has dismissed Ben Stokes 5 times in this Ashes series. Also, He holds the record for being the bowler to dismiss Ben Stokes the most times.

Covai women ICT_போதிமரம்