![]() |
நுரையீரல் |
அச்சத்திற்கு மருந்து இல்லை
There is no medicine for fear.
இரண்டொழுக்க பண்புகள் :
* வெயில் காலத்தில் செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதைத் தவிர்ப்பேன்.
*மோர், இளநீர், கம்பு, கேழ்வரகு கூழ் போன்ற இயற்கை குளிர்பானங்கள் குடித்து வெப்பத்தின் தாக்கத்தை தணிப்பேன்.
பொன்மொழி :
அறிஞர்கள் சித்தனை செய்யாதிருந்து அறிவிலிகள் ஆகிறார்கள். அறிவிலிகள் சிந்தனை செய்து அறிஞர்கள் ஆகுகிறார்கள்.
-- தத்துவஞானி கன்பூசியஸ்---
பொது அறிவு :
1. மனித உடலில் எடை குறைந்த உடல் உறுப்பு எது?
விடை: நுரையீரல்.
2. மனித உடலில் மிக அதிகமாக அடங்கியுள்ள உலோகம் எது?
விடை : கால்சியம்
English words & meanings :
வேளாண்மையும் வாழ்வும் :
இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது ஊற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெருக்கெடுத்து வற்றாத ஜிவ நதியாக ஓட வழிவகை செய்யும்...
நீதிக்கதை
பீர்பாலின் புத்திசாலித்தனம்
பீர்பால், அறிவாற்றலும் புத்திக்கூர்மையும் உள்ளவர். எவ்வளவு பெரிய சிக்கலையும், தமது அறிவுத் திறமையாலே சமாளித்து விடுவார் என்று கேள்விப்பட்ட காபூல்
அரசருக்கு, பீர்பாலின் அறிவாற்றலை ஆராய்ந்து
அறிய ஆவல் ஏற்பட்டது.
அதனால் ஒரு கடிதத்தில் , "மேன்மை தாங்கிய அக்பர் சக்ரவர்த்தி அவர்களுக்கு, ஆண்டவன் தங்களுக்கு
நலன்கள் பலவும், வெற்றிகள் பலவும் தருவாராக. தாங்கள் எனக்கு ஒரு குடம் அதிசயம் அனுப்புங்கள் "என்று எழுதி கையெழுத்துப் போட்டு, தூதன் மூலமாக அக்பருக்கு அனுப்பினார் காபூல் அரசர்.
கடிதத்தைப் படித்த அக்பர் திகைத்து போய் , ஒரு குடம் அதிசயம் அனுப்புவதா? ஒன்றுமே புரியவில்லையே என்று குழம்பி, பீர்பாலிடம் கடிதத்தை காட்டினார்.
பீர்பால் சிறிது நேரம் யோசித்தார் .பின்பு , அக்பரிடம் மூன்று மாதத்தில் அதிசயம் அனுப்புவதாக பதில் எழுதுமாறு கூறினார். அக்பரும் அதேபோல் தபால் எழுதி அனுப்பினார்.
பின்பு அக்பர், பீர்பாலிடம், ஒரு குடம் அதிசயம் எப்படி அனுப்புவீர்கள்? என்று விசாரித்தார் .
அதற்கு பீர்பால், 'மூன்று மாதம் கழித்து அந்த அதிசயத்தைப் பாருங்களேன்" என்று கூறினார் .
பிறகு பீர்பால் ஒரு மண் குடத்தை எடுத்தார். ஒரு பூசணிக்கொடியில் காய்த்திருந்த பூசணிப்பிஞ்சு ஒன்றை கொடியோடு மண் குடத்திற்குள் வைத்தார். வைக்கோலால் குடத்தை மூடினார் .
நாளாக நாளாக பூசணிப் பிஞ்சு குடத்திற்குள்ளேயே நன்றாக வளர்ந்து பெருத்தது. குடம் நிறையுமளவிற்கு பூசணிக்காய் பெருத்ததும், பூசணிக்காயைத் தவிர மற்ற வைக்கோல், கொடி, காயின் காம்பு எல்லாவற்றையும் கத்தரித்து விட்டார் பீர்பால்.
பின்பு,அந்தக் குடத்தை அக்பரிடம் காட்டினார் பீர்பால். அக்பருக்கு ஆச்சரியம். குடத்தின் வாயோ உள்ளே இருக்கும் பூசணிக்காயைவிட மிகவும் சிறியது. இதனுள் இவ்வளவு பெரிய பூசணிக்காயை எப்படி நுழைத்தார்? என்று கேட்டார் . பீர்பால் அதை விளக்கிவிட்டு, அந்தப் பூசணிக்காய் குடத்தை அப்படியே காபூல் அரசனுக்கு, அதிசயம் என்று எழுதி அனுப்பினார்.
அதைப் பார்த்த காபூல் அரசன் பீர்பாலோட புத்திக் கூர்மையை எண்ணி வியந்தார்
இன்றைய செய்திகள்