Tuesday, March 3, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.03.2026

தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு நாள்




 






திருக்குறள்: 

குறள் 605: 

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன்.  
              
விளக்க உரை: 

காலம் நீட்டித்தல், சோம்பல், மறதி, அளவு மீறியத் தூக்கம் ஆகிய இந் நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாம்.

பழமொழி :

Even a pin is good for something. 

சிறு துரும்பும் பல் குத்த உதவும்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. எனது உணவானது விவசாயி போன்ற பலர் உழைப்பில் வருகிறது.

2. எனவே உணவை வீணாக்க மாட்டேன்.

பொன்மொழி : 

இருக்கும் இடத்திலிருந்து தொடங்குங்கள். இருப்பதைப் பயன்படுத்துங்கள். முடிந்ததைச்  செய்யுங்கள் -ஆர்தர் ஆஷ்

பொது அறிவு : 

01. தென்னாட்டு தாகூர் என்று அழைக்கப்படுபவர் கவிஞர் யார்?

      கவிஞர்.வாணிதாசன்

 Thiru.Vanidasan

02. உலகின் நெல் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?

          இந்தியா-India

English words :

benevolent –kind, friendly and helpful to others.

நட்பிணக்கமும் உதவி மனப்பான்மையும் கொண்ட.

banter –friendly comments and jokes.

நட்பு முறையிலான குறிப்புரையும் கேலிப்பேச்சும்.

தமிழ் இலக்கணம்: 

 விலை விவரப் பட்டியல்/ விலை விபரப் பட்டியல் 
எது சரி?
இந்த சந்தேகம் எழும் போது அதன் 
 *வினைச்சொல்* 
*வேர்ச்சொல்*
இரண்டையும் பார்க்க வேண்டும்.

1. முல்லைத் திணை பற்றி *விவரி* .
2. இவர் ஒரு *விவரமான* ஆள்.
3. இவர் திட்டத்தை தெளிவாக *விவரித்தார்* 
மேற்கண்ட சொற்றொடர்களைப் பாருங்கள். விவரி, விவரித்து, விவரித்தல் 
போன்ற சொற்களைத்தான் பயன்படுத்துகிறோம். 
எனவே விவரம் என்பதே சரியான சொல்.

அறிவியல் களஞ்சியம் :

பூமியின் காந்த துருவங்கள் என்பது கோளின் காந்தப்புலக் கோடுகள் செங்குத்தாக இருக்கும் புள்ளிகள், மையத்தில் இருக்கும் இரும்பு நிக்கலின் திரவ இயக்கம் காரணமாக தொடர்ந்து மாறுகின்றன. வட காந்த துருவம் தற்போது கனடாவிலிருந்து சைபீரியாவை நோக்கி அலைந்து திரிந்து வேகத்தில் முடுக்கிவிடப்படுகிறது. அதே நேரத்தில் தெற்கு காந்த துருவம் அண்டார்டிகாவிலிருந்து தொலைவில் உள்ளது. இதனால் திசைகாட்டிகள் இந்தப் பகுதிகளுக்கு அருகில் நம்பகத்தன்மை குறைவாக உள்ளது. இந்தக் கம்பங்கள் நிலையானவை அல்ல; அவை புவியியல் காலத்தில் அலைந்து திரிந்து துருவ முனைப்பை மாற்றியமைக்கின்றன. பாறைகளில் பதிவுகளை விட்டுச் செல்கின்றன. ஆனால் மையத்தின் உருகிய இரும்பு மற்றும் நிக்கல், இந்த மாறும் புலத்தின் பின்னால் உள்ள இயந்திரமாகும்.  இது விண்வெளி கதிர்வீச்சுக்கு எதிரான ஒரு முக்கியமான கவசமாகும்.

மார்ச் 04

தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம்


தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் என்ற பெயரில் இந்தியாவில் தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் மார்ச் 4ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.தேசிய அளவிலான பாதுகாப்புக்குழு அமைப்பு 1966இல் தொழிலாளர் நல அமைச்சகத்தால் நிறுவப்பட்டது.

பிறகு 1971ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் தேதி தேசிய பாதுகாப்பு கவுன்சில் உருவாக்கப்பட்டது. மும்பையை தலைமையகமாகக் கொண்டு அனைத்து மாநிலத்திலும் இதன் பிரிவுகள் செயல்படுகின்றன.

தொழிலாளர்கள் விபத்துகளின்றி பணிபுரிந்திடவும், பாதுகாப்பு உணர்வுடனும், உடல்நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பணி செய்திட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே அனைத்து தொழிற்சாலைகளிலும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

நீதிக்கதை

ஏமாந்த சிறுத்தை

ஒரு நாள் சிறுத்தை பசியுடன் உணவைத் தேடியது. அப்போது ஒரு கறுப்பு மானையும் புள்ளி மானையும் கண்டது.

அவை இரண்டும் மலையடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. சிறுத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் மலையடிவாரத்தருகே சென்றது. ஆனால் எதனைத் தாக்குவது என அது முடிவு செய்யவில்லை.

அதே நேரத்தில் சிறுத்தையைப் பார்த்த மான்கள் இரண்டும் வேகமாக ஓடின. பிறகு அவை இரண்டும் ஒரு இடத்தில் இடது வலது பாதைகளில் ஓடின.

சிறுத்தை அந்த இடத்துக்கு வந்தது. ‘எதைத் துரத்தலாம்’ என்று தயங்கி நின்றது. பிறகு, ‘சரி.. கறுப்பு மானைத் துரத்தலாம். அதன் இறைச்சிதான் சுவையாக இருக்கும்’ என்று முடிவு செய்து கறுப்பு மானைத் துரத்தத் தொடங்கியது. ஆனால் அதற்குள் அது தொலைதூரம் ஓடிப் போய் விட்டது.

உடனே சிறுத்தை “அது வேகமாக ஓடக் கூடிய மான். அதைப் பிடிக்க முடியாது. பசி வேறு அதிகமாகி விட்டது. சரி… புள்ளி மானைப் பிடிக்கலாம்” என்று தீர்மானித்து மற்ற பாதையில் ஓடியது. ஆனால் புள்ளிமான் எப்போதோ பஞ்சாய்ப் பறந்துவிட்டிருந்தது.

முக்கியமான நேரத்தில் முக்கியமான முடிவை விரைவாக எடுக்க வேண்டும்.

இன்றைய செய்திகள்

04.03.2026

⭐மத்திய - மாநில உறவு: தமிழ்நாடு அரசுக்கு ஆதரவளித்த கர்நாடகா... நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

⭐ஈரானின் 131 நகரங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் இதுவரை 555 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

⭐ ஈரான்-அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான மோதலால் இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்பு உள்ளதாக மாநில அரசுகளுக்கு இந்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀டி20 உலகக் கோப்பை:2-வது அரையிறுதியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் நாளை மோதுகிறது.

🏀உலகின் உயரிய விளையாட்டு விருதுக்கு இந்திய மகளிர் அணி பரிந்துரை. இந்தப் பிரிவில் இங்கிலாந்து மகளிர் கால்பந்து அணி உள்பட 5 அணிகள் இந்தியாவுடன் போட்டியிடுகின்றன.

Today's Headlines


⭐ Centre–State Relations: Tamil Nadu has received support from Karnataka. Chief Minister M. K. Stalin expressed his gratitude.

⭐ In the attacks targeting 131 cities in Iran, 555 people have been killed so far.

⭐ Due to the conflict between Iran, United States, and Israel, India’s Ministry of Home Affairs has warned state governments that there is a possibility of violence breaking out in India.

🏀 Sports News

🏀 T20 World Cup: In the second semi-final, India cricket team will face England cricket team tomorrow.

🏀 The India women's national team has been nominated for the world’s highest sports award. In this category, five teams — including the England women's national football team — are competing against India.

Covai women ICT_போதிமரம்

Monday, March 2, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.03.2026








திருக்குறள்: 

குறள் 591: 

உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார் 
உடைய துடையரோ மற்று.  
        
விளக்க உரை: 

ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும், ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆவரோ.

பழமொழி :

As you sow, so you reap.   

வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. எனது உணவானது விவசாயி போன்ற பலர் உழைப்பில் வருகிறது.

2. எனவே உணவை வீணாக்க மாட்டேன்.

பொன்மொழி : 

நீ நடந்து போக பாதை இல்லையே என்று கவலைப்படாதே.  நீ நடந்தால் அதுவே பாதை - அடால்ஃப் ஹிட்லர்

பொது அறிவு : 

01.இந்தியாவில் காற்றாலை மின் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?

            குஜராத்- Gujarat

02. சென்னை உயர் நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி யார்?

 நீதிபதி.மனிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா

Hon'ble Mr. Justice Manindra Mohan Shrivastava

English words :

Scrutinize - check closely   

 refrain - stop

தமிழ் இலக்கணம்: 

 சின்னக்கொடி
சின்ன கொடி 
எது சரி 
பிரித்து பார்ப்போம்
சின்னக்கொடி = சின்னம் + கொடி
இது சரி. கட்சியின் சின்னம் கொண்ட கொடி என்று பொருள் படும்.

சின்ன கொடி = சின்ன+கொடி
சிறிய கொடி என்று பொருள்.
இரண்டும் சரியே.
1. சின்னம் என்ற சொல் நாம் உபயோகப் படுத்தும் போது வல்லினம் மிகுந்து வரும்
2. எது சரியான சொல் என்ற சந்தேகம் இருந்தால் பிரித்து பார்த்தால் தெளிந்து விடும்

அறிவியல் களஞ்சியம் :

சர்வதேச பூமிச் சுழற்சி மற்றும் குறிப்பு முறைமைச் சேவை என்னும் நிறுவனம் அணுக்கடிகாரங்களைப் பயன்படுத்தி, மில்லி வினாடி துல்லியத்துடன் பூமியின் சுழற்சி நீளத்தைக் கண்காணித்து வருகிறது. 1972 முதல் இந்தப் பதிவுகள் வைக்கப்பட்டு வருகின்றன. பூமி அதன் உருவாக்கத்திலிருந்து பெற்ற சுழற்சி உந்தத்தின் காரணமாக சுழல்கிறது. சந்திரனின் ஈர்ப்பு விசை நீண்ட காலமாக அதன் வேகத்தைக் குறைத்து வருகிறது. சமீப காலங்களில், பூமியின் உள்ளகம், புவியின் மேலோடு, கடல் நீரோட்டங்கள், வளிமண்டல மாற்றங்கள் போன்ற சிக்கலான உள் காரணிகள் தினசரி சுழற்சி வேகத்தில் சிறிய ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்துகின்றன என கணிப்பு.

மார்ச் 03

உலகக் காட்டுயிர் நாள்

உலகக் காட்டுயிர் நாள் (World Wildlife Day) அருகிவரும் காட்டு விலங்குகள் மற்றும், தாவரயினங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கமாக, ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 3 இல் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. 2013, டிசம்பர் 20 அன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (UNGA) 68 ஆவது அமர்வில் “காட்டு விலங்குகள், மற்றும் தாவரங்கள் அருகிவரும் உயிரினங்களின் சர்வதேச வர்த்தக சாசனம்” (CITES) மூலம் இந்நாளை உலகக் காட்டுயிர் நாளாக தாய்லாந்தினால் முன்மொழியப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இம்முயற்சியில் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் பொருட்டு திரைப்பட விழா, விழிப்புணர்வு கருதரங்கங்களை ஐ. நா நடத்திவருகிறது.

நீதிக்கதை

 திருந்திய மகன்


சிவாவின் தந்தை கல் உடைக்கும் கூலித் தொழிலாளி. வெயிலில் மாதம் முழுவதும் உழைத்தாலும் கூட அவருக்கு மாத வருமானம் மிகவும் குறைவுதான். அந்த வருமானத்திலேயே அவர் குடியிருக்கும் வீட்டுக்கு வாடகை, உணவு மற்றும் இதரச் செலவுகளையும் பார்த்துக் கொள்ள வேண்டும். தான் படும் கஷ்டங்களைப் போல் தன்மகன் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக சிவாவை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என எண்ணினார்.

சிவா ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தான். சிவா! கடமைக்காக பள்ளிக்கு சென்று வந்தானே தவிர, ஒழுங்காகப் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் அவனுக்குச் சிறிது கூட இல்லை. பள்ளியில் சிறிதுநேரம் இருப்பான். பிறகு சில மாணவர்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டும் பொழுதை கழித்து வந்தான். தன் தந்தையிடம் செலவுக்குக் காசு வாங்கிக் கொள்வான்.

அவர், சிவா தனக்கு ஒரே மகன் என்பதாலும், படிக்கும் மாணவர்கள் ஏதாவது வாங்கிச் சாப்பிடுகிறார்கள் என்றும் எண்ணி அவன் கேட்கும்பொழுதெல்லாம் பணம் கொடுப்பார். சிவா, தன் தந்தையார் கொடுத்த பணத்தை வாங்கிச் சாப்பிடாமல், தீய நண்பர்களுடன் சேர்ந்து சூதாட்டம் ஆடினான். மற்றவர்கள் அவன் கெட்டவன் என வெறுத்து ஒதுக்கும்படி அவனுடைய செயல்கள் இருந்தன.

அவனுடைய வகுப்பாசிரியர், அவனுடைய நடவடிக்கைகள் சரியில்லை என்று கண்டித்தார். பிறகு, அவனுடைய அப்பாவிடம் அவனைக் கண்டித்து வளர்க்குமாறும் சொன்னார். ஆனால், இவற்றால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. சிவாவின் தந்தையார் அவனுடைய செயல்களால் பெரிதும் மனம் வருந்தினார்.

ஒருநாள் காவல்துறையினர் 10 பேரை சாலையில் அடித்து உதைத்தபடி, இழுத்துச் சென்று கொண்டிருந்தனர். இதை பார்த்த சிவா கூடியிருந்தவர்களிடம், அவர்களை ஏன் காவல் துறையினர் அடிக்கிறார்கள்? என்று கேட்டான். அவர்கள் சூதாட்டம் ஆடிக் கொண்டிருந்தவர்கள், என்று கூறினர். பலநாட்களாக அவர்கள் அகப்படவில்லையென்றும், இன்று வகையாக அகப்பட்டுக் கொண்டார்கள் என்றும் அவர்கள் அவனிடம் கூறினர்.

அதைக் கேட்டதும் சிவாவிற்கு கை, கால்கள் உதறல் எடுத்தது. மற்றவர்கள் வெறுக்கும்படி நடந்தால் இப்படித்தான் உதைபட வேண்டும் போலிருக்கிறது என்று எண்ணி அன்றிலிருந்து திருந்திவிட்டான். அன்றிலிருந்து தீய நண்பர்களுடன் சேராமல், தந்தையிடம் பணம் வாங்காமல் பள்ளிக்கு ஒழுங்காக சென்று பாடங்களை நன்றாக படித்து வந்தான். தன் மகன் சிவா திருந்தியதைக் கண்ட அவன் தந்தை மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

இன்றைய செய்திகள்

03.03.2026

⭐இன்றைய செய்திகள்

⭐ இந்தாண்டின் மார்ச் முதல் மே வரையில், வட இந்தியாவில் வழக்கத்தை விட அதிக வெப்பம் பதிவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

⭐ ஈரான் மீது அமெரிக்கா & இஸ்ரேல் நடத்திய தாக்குதலின் காரணமாக உலக அளவில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், கடந்த 2 நாட்களில் மட்டும் இந்தியாவில் சுமார் 850 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. 

⭐மத்திய கிழக்கில் போர் சூழல் இந்தியாவின் ரூ.6 ஆயிரம் கோடி அரிசி ஏற்றுமதி கடும் பாதிப்பு

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀T20 WC 2026:அரை இறுதியில் நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது தென் ஆப்பிரிக்கா!

🏀ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி: கர்நாடகாவை வீழ்த்தி வரலாறு படைத்த ஜம்மு காஷ்மீர்

Today's Headlines

⭐ The India meteorological department has said that North India will experience warmer then usual temperatures from March to May this year.                        

⭐ As global tensions rise due to the US and Israel's attack on Iran around 850 flights have been cancelled in India in the last 2 days.  

⭐ India's rupees 6000  crore rice exports hit hard by the war situation in the middle East.                                 

⭐Sports news :
 
⭐ T20 WC 2026 South Africa to face New Zealand in the Semi final.            

⭐ Ranji trophy final -Jammu and Kashmir creates history by defeating Karnataka

Covai women ICT_போதிமரம்




Sunday, March 1, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.03.2026




 






திருக்குறள்: 

குறள் 581: 

ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் 
தெற்றென்க மன்னவன் கண்.

 விளக்க உரை: 

ஒற்றரும் புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இவ்விருவகைக் கருவிகளையும் அரசன் தன்னுடைய கண்களாகத் தெளியவேணடும்.

பழமொழி :

As the fool things so the bell clinks. 

  பயந்தவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். 

இரண்டொழுக்க பண்புகள் :.

1. எனது உணவானது விவசாயி போன்ற பலர் உழைப்பில் வருகிறது.

2. எனவே உணவை வீணாக்க மாட்டேன்.

பொன்மொழி : 

பயத்தை வெல்ல விரும்பினால் வீட்டில் உட்கார்ந்து அதைப்பற்றி சிந்தித்துக் கொண்டே இருந்தால் மட்டும் போதாது . வெளியில் வந்து செயலில் இறங்க வேண்டும்- டேல் கார்னகி

பொது அறிவு : 

01.உலகின் மிக நீளமான நீர்ப்பாசன கால்வாய் எது?

இந்திரா காந்தி கால்வாய் - இந்தியா 

 Indira Gandhi Canal - India 

02.தாவரங்களின் மிக நுண்ணிய  வளர்ச்சியைக் கண்டறியவும், அளவிடவும் உதவும் முக்கியக் கருவி  எது?

கிரெஸ்கோகிராஃப் -Crescograph

English words :

Passed out -became unconscious

Passed away-died

தமிழ் இலக்கணம்: 

 சின்னத்தம்பி
சின்னதம்பி
இந்த இரண்டில் எது சரி? வல்லினம் மிகுமா மிகாதா என்று காண்போம் வாருங்கள்.
பிரித்து பார்ப்போம்.
சின்னத்தம்பி = சின்னம்+ தம்பி 
இதன் பொருள் சின்னம் உடைய தம்பி. அப்படி ஒரு சொல் கிடையாது.
அடுத்த சொல்லைப் பார்ப்போம்
சின்னதம்பி = சின்ன+ தம்பி.
இதன் பொருள் சிறிய தம்பி எனவே
 *சின்னதம்பி* என்பதே சரியான சொல் ஆகும்.
 ......தொடரும்

அறிவியல் களஞ்சியம் :

 2020 ஆம் ஆண்டு முதல், பூமி அதன் சொந்த சுழற்சி வேக சாதனைகளை மீண்டும் மீண்டும் உடைத்து வருகிறது. 2024, ஜூலை 5, அன்று, பூமி வழக்கத்தைவிட 1.66 மில்லி வினாடிகள் வேகமாக சுழன்றது, இதுவே இதுவரை அளக்கப்பட்ட  எல்லா காலத்திற்குமான குறுகிய நாள். 2024 ஜூலை 9 அன்று 1.36 மில்லி வினாடிகள் குறைவான நேரத்திலும், ஜூலை 22 அன்று  1.34 மில்லி வினாடிகள் குறைவான நேரத்திலும் பூமி சுழன்றது என்று அறியப்பட்டது

மார்ச் 02

சரோஜினி நாயுடு அவர்களின் நினைவு நாள் 




சரோஜினி நாயுடு அல்லது சரோஜினி சட்டோபத்யாயா (பிப்ரவரி 13,1879ஹைதராபாத் - மார்ச் 2,1949லக்னோ) அவர் இந்தியாவின் நைட்டிங்கேல் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ஒரு பிரபலமான சிறுமுது அறிஞர், கவிஞர், எழுத்தாளர் ,சுதந்திரப் போராளி மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது பெண் தலைவரும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுனரும் ஆவார்.அவரது பிறந்த நாள் இந்தியாவில் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.

1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15 ஆம் நாள் இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு அவர் யுனைட்டட் ப்ரொவின்சஸ் (தற்போது உத்தரப்பிரதேசம் என்று அழைக்கப்படுகிறது) ன் ஆளுநராக பதவியேற்றார். இதன் வழியாக இந்தியாவின் முதல் பெண் ஆளுநரானார். மார்ச் 2, 1949 அன்று மாரடைப்பால் அவர் மரணமடைந்தார்.

நீதிக்கதை

 அதி புத்திசாலிகள்!


முன்னொரு காலத்தில் ஒரு நாட்டில் வாழும் மக்கள், இந்த உலகத்திலேயே தாங்கள்தான் பெரிய அறிவாளிகள் என்று நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள் அனைவரும் சரியான முட்டாள்கள் என்பது அவர்களுக்கு தெரியாது. ஒருநாள் அவர்கள் மரத்தால் ஒரு பெரிய வீடு கட்டத் தீர்மானித்தனர். அதற்கான நல்ல மரத்தைத் தேர்ந்தெடுப்பதற்காக அவர்கள் காட்டுக்குப் போக முடிவு செய்தனர். அப்போது, அவர்களில் மிகவும் அதிபுத்திசாலியான ஒருவன் சொன்னான்.


நான் குதிரை வண்டியில் ஏறி முதலில் போகிறேன். நீங்களெல்லாம் பின்னால் வாருங்கள்! என்றான். எல்லாரும் அதை ஏற்றுக் கொண்டனர். அதிபுத்திசாலி குதிரை வண்டியில் ஏறி காட்டுக்குப் பாய்ந்து சென்றான். ஆனால், வழியில் அவன் குதிரைவண்டி ஒரு கல்லின் மீது ஏறியதால் கவிழ்ந்தது. அவன் கையிலிருந்த கோடாரி தூரத்தில் சென்று விழுந்தது. அவனும் ஆழமான ஒரு குழியில் விழுந்து விட்டான்.


குதிரை வண்டிக்குப் பின்னால் வந்த மற்ற அறிவாளிகள், அதிபுத்திசாலியின் கோடாரி வழியில் கிடப்பதைப் பார்த்தனர். அவர்களில் மிகச் சிறந்த அறிவாளி அவன்தான் என்பதால், அவன் கோடாரியை விட்டுச் சென்றதற்கு ஏதும் முக்கியமான காரணம் இருக்கும் என்று மற்றவர்கள் நினைத்தனர். அதனால், எல்லாரும் மரம் வெட்டுவற்காகத் தங்கள் கையில் எடுத்து வந்திருந்த கோடாரியை அப்படியே போட்டுவிட்டுத் தொடர்ந்து சென்றனர்.


காட்டுக்குச் சென்று வெட்டுவதற்கு ஏற்ற மரத்தைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், யார் கையிலும் கோடாரி இல்லையே, பிறகு எப்படி மரம் வெட்டுவது? எல்லாரும் ஒன்றாக அமர்ந்து இதற்கு என்ன வழியென்று சிந்தித்தனர். அவர்களில் ஒரு அறிவாளி, இந்த மரத்தின் கிளையைப் பிடித்து தொங்குகிறேன். நீங்கள் அனைவரும் என்னுடைய காலைப் பிடித்து தொங்குங்கள். அப்படி தொங்கினால் மரக்கிளை வளைந்து ஒடிந்து விழும். நாம் அதை எடுத்துச் சென்று வீடு கட்டலாம் என்றான். எல்லோரும் அதை ஏற்றுக் கொண்டனர். அந்த அறிவாளி சொன்னது போலவே செய்தனர். மரக்கிளை ஒடிந்து கீழே விழும் நேரத்தில் முதலில் மரக்கிளையைப் பிடித்து தொங்கிய அறிவாளியின் கை வழுக்கியது. கை வழுக்கி அனைவரும் கீழே விழுந்தனர். மரக்கிளை முன்பு இருந்தது போலவே நீளாமாக ஆனது.


அவர்கள் அனைவரும் மீண்டும் கூடி அமர்ந்து சிந்தித்தனர். அவர்களில் ஒருவன் அப்போது நல்ல படியாகச் சிந்தித்தான். அவன் சொன்னான். நண்பர்களே, நாம் திரும்பிச் சென்று, வழியில் போட்டுவிட்டு வந்த கோடாரிகளை மீண்டும் எடுத்து வரலாம். அதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை! என்றான். அவ்வாறு அவர்கள் சென்று தங்கள் கோடாரிகளுடன் திரும்பி வந்தனர். தேவையான மரத்தை வெட்டி எடுத்துக்கொண்டு கிராமத்துக்குச் சென்றனர். தங்களது புத்திசாலித்தனத்தை நினைத்து தங்களை தாங்களே மிகவும் பாராட்டிக் கொண்டனர்.

இன்றைய செய்திகள்

02.03.2026

⭐ தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று துவங்குகிறது. தமிழ்நாட்டில் 8.07 லட்சம் மாணவர்கள் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத உள்ளனர்.

⭐ வர்த்தகம், முதலீடு, கல்வி, உற்பத்தி, கலாச்சாரம், கடல்சார் பாரம்பரியம், விவசாயம் மற்றும் AI உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்பு வழங்கும் வகையில் மொத்தம் 17 ஒப்பந்தங்கள் மற்றும் ஆவணங்களில் இந்தியாவும் இஸ்ரேலும் கையெழுத்திட்டுள்ளன.

⭐அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஜெனிவாவில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து அமெரிக்க ராணுவம் இஸ்ரேலியப் படைகளுடன் இணைந்து ஈரான் மீது தாக்குதலைத் ஆரம்பித்துள்ளது

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀சூப்பர் 8 சுற்று: கடைசி போட்டியில் ஜிம்பாப்வேவை எளிதாக வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா.

Today's Headlines

⭐ The 12th standard public examination in Tamilnadu begins today. 8.07 lakh students in Tamilnadu are going to write the 12th standard public examination.

⭐ India and Israel have signed a total of 17 agreements and documents to provide cooperation in several areas including trade, investment, education, manufacturing, culture, maritime heritage, agriculture and AI.

⭐The US military has launched an attack on Iran in conjunction with Israeli forces after talks between the US and Iran in Geneva failed 

 *SPORTS NEWS*

🏀Super 8 round: South Africa easily beat Zimbabwe in the final match.

Covai women ICT_போதிமரம்

Thursday, February 26, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.02.2026




 






திருக்குறள்: 

குறள் 568: 

இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச் 
சீறிற் சிறுகுந் திரு.          

விளக்க உரை: 

அமைச்சர் முதலான தன் இனத்தாரிடம் கலந்து எண்ணாத அரசன், சினத்தின் வழியில் சென்று சீறி நிற்பானானால், அவனுடைய செல்வம் சுருங்கும்.

பழமொழி :

Grasp all lose all. 

பேராசை பெருநஷ்டம்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. உழைக்கப் பழகியவர் எங்கு இருந்தாலும் உயர்ந்த நிலையை அடைவர்.

 2.எனவே எப்போதும் உழைப்பை நாடுவேன்.

பொன்மொழி : 

நீ வெற்றிக்காக போராடும் பொழுது வீண் முயற்சி என்று சொல்பவர்கள், நீ வெற்றி பெற்ற பின் விடாமுயற்சி என்று சொல்வார்கள் - கண்ணதாசன்

பொது அறிவு : 

01.இந்தியாவின் முதன்மையான வனவிலங்கு ஆராய்ச்சி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?

டேராடூன் -  உத்தராகண்ட்

  Dehradun, Uttarakhand

02.இந்தியாவில் எந்த உயிரியல் பூங்காவில் வெள்ளை புலிகள் அதிகம் உள்ளன?

நந்தன்கானன் உயிரியல் பூங்கா -ஓடிசா 

Nandankanan Zoological Park - Odisha

English words :

Preening-cleaning

Bifurcated-splitted

தமிழ் இலக்கணம்: 

 இறந்த காலம் –எதிர்காலம்

 *நேற்று* என்னிடம் *பேசும் போது* அம்மா கூறினார்.
நேற்று என்பது இறந்த காலம்

பேசும் போது என்பது எதிர் காலம்

இறந்த காலத்தில் பேசும் போது எதிர்காலம் உபயோகப் படுத்த கூடாது. சரியான சொற்றொடர் என்னவென்றால்

நேற்று என்னிடம் பேசுகிற போது அம்மா கூறினார்.

எங்கள் கிராமத்தை சுற்றி *வரும்போது* ஒரு பாழடைந்த மண்டபத்தை *பார்த்தேன்* 

வரும்போது எதிர்காலம் 

பார்த்தேன் இறந்த காலம் 

சரியான சொற்றொடர்

எங்கள் கிராமத்தை சுற்றி *வந்தபோது* ஒரு பாழடைந்த மண்டபத்தை *பார்த்தேன்*

அறிவியல் களஞ்சியம் :

பல நூற்றாண்டுகளாக பூமியின் சுழற்சி மெதுவாக ஆவதற்கு சந்திரனின் ஈர்ப்பு விசை முக்கிய காரணம் ஆனது.  இந்த நிகழ்வு ""ஓதத் தடை"" (Tidal Braking) என்பதனால் ஏற்படுகிறது. சந்திரனின் ஈர்ப்பு என்பது பூமியின் நீர்ப்பரப்புகளை (மற்றும் ஓரளவு திடப்பரப்புகளையும்) இழுத்து, பூமி சந்திரனை நோக்கி சிறிது புடைப்பு ஏற்படுத்துகிறது. இந்த உராய்வு, ஆற்றல் பரிமாற்றம் காரணமாக  பூமியின் சுழற்சி உந்தம் குறைக்கப்படுகிறது. இதில் சந்திரன் ஒரு கைத் தடை (Handbrake) போலவே செயல்படுகிறது.

பிப்ரவரி 27

  • பன்னாட்டு அரசு சார்பற்ற அமைப்புகளின் நாள்

நீதிக்கதை

 காவல்காரன்


மகத நாட்டின் மன்னர், தான் புதிதாக அமைத்த அழகிய தென்னந்தோப்பைக் காவல் காக்க, பொறுப்பான ஆள் தேவை. அந்த வேலையை யாரிடம் ஒப்படைக்கலாம் என யோசனை செய்தார். அப்போது அவருக்கு ராமனின் நினைவு வந்தது. அரசவையில் கோமாளியைப் போல் ஒரு வேலையும் செய்யாமல் சுற்றி வருகிறான். ஆகையால் அவனுக்கு இந்த வேலையை கொடுப்பது என்று முடிவு செய்தார். இந்த நிலத்தில் தென்னங்கன்றுகள் நடப் போகிறோம். இவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பு உன்னுடையது. இந்தக் கன்றுகளை இரவிலும், பகலிலும் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். கவனமாக நடந்து கொள் என்றார்.


அரசே! நீங்கள் கூறியது போலவே நடந்து கொள்வேன் என்றான் ராமன். அங்கே தென்னங்கன்றுகள் நடப்பட்டன. அவற்றிற்கு காவல் இருக்கத் தொடங்கினான் ராமன். பகல் வேளையில், அவற்றைப் பார்த்துக் கொள்வது அவனுக்கு எரிச்சலாக இருந்தது. இரவு வந்தது. வீடு செல்ல வேண்டும். தென்னங்கன்றுகளையும் பார்த்துக் கொள்ள வேண்டும். என்ன செய்வது என்று சிந்தித்தான். நல்ல வழி ஒன்று அவனுக்குத் தோன்றியது. தென்னங்கன்றுகளை எல்லாம் பிடுங்கி, ஒன்றாகக் கட்டினான். அவற்றைத் தூக்கி கொண்டு, தன் வீட்டிற்கு வந்தான். தன் கண் பார்வையிலேயே அவற்றை வைத்திருந்தான். பொழுது விடிந்தது. அந்தக் கன்றுகளைத் தூக்கிக் கொண்டு நிலத்திற்கு வந்தான். முன்பு இருந்தது போலவே அவற்றை நட்டு வைத்தான். பொழுது சாய்ந்ததும் அவற்றைப் பிடுங்கி எடுத்துக் கொண்டு, தன் வீட்டிற்குச் சென்றான். இப்படியே தொடர்ந்து நடந்து வந்தது. ஒரு வாரம் சென்றது. தென்னங்கன்றுகள் எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்காக அரசர் அங்கு வந்தார்.


தென்னங்கன்றுகள் அனைத்தும் வாடிக் கிடப்பதைப் பார்த்தார். கோபம் கொண்ட அவர், நீ பொறுப்பாகத் தென்னந்தோப்பைக் காவல் காப்பாய் என்று உன் பொறுப்பில் விட்டேன். எல்லா கன்றுகளும் வாடிக் கிடக்கின்றன. என்ன செய்தாய்? என்று கோபமாகக் கேட்டார். அரசே! நீங்கள்தான் இவற்றைப் பகலிலும், இரவிலும் நான் காவல் காக்க வேண்டும் என்றீர்கள். இரவில் நான் இவற்றை வீட்டிற்கு எடுத்துச் சென்று பாதுகாத்தேன். பகலில் மீண்டும் இவற்றை இங்கே நட்டேன். நீங்கள் சொன்னது போலவே நடந்து கொண்டேன். இவை ஏன் வாடி விட்டன! என்று எனக்கும் தெரியவில்லை, என்றான். இதைக் கேட்ட அரசர், இவனிடம் போய் இந்த வேலையை கொடுத்தோமே என்று தலையில் அடித்துக் கொண்டார். அப்பாடா! தப்பித்தோம்! என்று நினைத்து பெருமூச்சு விட்டான் ராமன்.

இன்றைய செய்திகள்

27.02.2026


⭐நாடு முழுவதும் சுமார் 150 ஷோரூம்களை மூட முடிவு செய்துள்ளது ஓலா எலக்ட்ரிக் நிறுவனம்.‌ 700 ஷோரூம்கள் இருந்த நிலையில் 550 ஆக குறைத்து செயல்பாட்டு திறனை மேம்படுத்த இம்முடிவு என தெரிவிப்பு.

⭐ இந்தியாவில் வருடத்துக்கு 2 லட்சத்து 80,000 பெண்கள் கருப்பை வாய் புற்றுநோயால் உயிரிழந்து வருகின்றனர்.

⭐ தமிழக சிறைகளில் நீண்ட காலமாக தண்டனை அனுபவித்து வரும்  நன்னடத்தை கொண்ட கைதிகள் ஆண்டுக்கு 120 நாட்கள் வரை  குடும்பத்தினருடன் இருக்கும் வகையில் தமிழக அரசு சிறை விடுப்பு விதிகளில் திருத்தம் செய்துள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியுடன்  மோதுகிறது.

Today's Headlines

⭐Ola Electric has decided to close around 150 showrooms across the country. The company stated that this decision was taken to improve operational efficiency by reducing the total number of showrooms from 700 to 550.

⭐ In India, around 2,80,000 women die every year due to cervical cancer.

⭐ The Tamil Nadu government has amended prison leave rules, allowing well-behaved inmates who have been serving long-term sentences in Tamil Nadu prisons to stay with their families for up to 120 days a year.

🏀 Sports News

🏀 In the Super 8 round of the ICC T20 World Cup, the defending champions India are set to face Zimbabwe in their second match.

Covai women ICT_போதிமரம்