Sunday, February 22, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.02.20226

சீகன் பால்க்

 


 






திருக்குறள்: 

குறள் 213: 

புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே 
ஒப்புரவின் நல்ல பிற.       

விளக்க உரை: 

பிறர்க்கு உதவி செய்து வாழும் ஒப்புரவைப் போல நல்லனவாகிய வேறு அறப்பகுதிகளைத் தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும் பெறுதல் இயலாது.

பழமொழி :

Effort never fail. 

முயற்சி திருவினையாக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. உழைக்கப் பழகியவர் எங்கு இருந்தாலும் உயர்ந்த நிலையை அடைவர்.

 2.எனவே எப்போதும் உழைப்பை நாடுவேன்.

பொன்மொழி : 

எதையும் உங்களால் சாதிக்க முடியும் என்று நம்புங்கள். இறைவன் நமது பக்கம் இருக்கிறார் என அறிந்து கொள்ளுங்கள் - சுவாமி விவேகானந்தர்.

பொது அறிவு : 

01.இந்தியாவில் இருந்து அண்டார்டிகா சென்ற முதல் பெண் விஞ்ஞானிகள் யார்?

சுதிப்தா சென்குப்தா மற்றும் அதிதி பந்த் 

 Sudipta Sengupta and Aditi Pant

02.சுதந்திர இந்தியாவின் முதல் பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றியவர் யார்?

சர்தார் பல்தேவ் சிங் 

Sardar Baldev Singh

English words :

Bravely -courageously

Circumnavigate-Sail around

தமிழ் இலக்கணம்: 

 தேனீர் தேநீர் எது சரி? என்று பார்ப்போம் வாருங்கள்

முதலில் பிரித்து பார்க்க வேண்டும் 
தேனீர் = தேன்+நீர் என்று வரும். இதன் பொருள் தேன் கலந்த நீர் என்பதாகும்
தேநீர் = தே+ நீர் என்று வரும். 
தே என்ற சொல்லுக்கு இனிமை, இறைவன், தேயிலை என்று மூன்று பொருள் வரும். 
இங்கு தேயிலை கலந்த நீர் தேநீர் என்று வரும். எனவே *தேநீர்* தான் சரி

அறிவியல் களஞ்சியம் :

விஞ்ஞானிகள் கணக்கிட்டபடி, ஒரு நூற்றாண்டுக்கு சராசரியாக 2 மில்லி வினாடிகள் (ஆயிரத்தில் ஒரு வினாடியில் இரண்டு பங்கு) அளவு பூமியின் சுழற்சி மெதுவாகி/குறைந்து கொண்டிருக்கிறது. இதன் பொருள், 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில், அவைகளின் நடமாட்டம் இருந்த காலத்தில், ஒரு நாள் என்பது சுமார் 23 மணி நேரம் ஆகும்.

பிப்ரவரி 23

சீகன் பால்க் அவர்களின் நினைவுநாள்

சீகன் பால்க் (Bartholomäus Ziegenbalg, ஜூலை 10, 1682 - பெப்ரவரி 23, 1719) என்பவர் செருமனியைச் சேர்ந்த லூத்தரன் பாதிரியார். தமிழ்நாட்டிற்குச் சென்ற முதலாவது புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ மத போதகர் ஆவர். 1714 ஆம் ஆண்டு பர்த்தலோமேயு சீகன்பால்குவினால் முதன்முதலில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது. இந்திய மொழிகளில் தமிழில்தான் விவிலியம் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்டு அச்சேறியது.இந்தியாவிற்கு அச்சு இயந்திரத்தை அறிமுகப்படுத்தியதோடு தமிழில் அச்சு எழுத்துகளையும் உருவாக்கினார். 

நீதிக்கதை

 அன்பை அடைக்க கதவு உண்டோ?


ஒரு நாள் கடை தெருவின் வழியே ஒரு ஐந்து வயது சிறுவன் தன் மூன்று வயது தங்கையை அழைத்து கொண்டு சென்று கொண்டு இருந்தான். ஒரு கடையின் வாசலில் இருந்த பொம்மையை பார்த்து தயங்கி நின்ற தங்கையை பார்த்து, எந்த பொம்மை வேண்டும் என்றான். அவள் கூறிய பொம்மையை எடுத்து அவள் கையில் கொடுத்து விட்டு ஒரு பெரிய மனிதனின் தோரணையுடன் கடையின் முதலாளியை பார்த்து அந்த பொம்மை என்ன விலை என்று கேட்டான். 


அதற்கு அந்த கடையின் முதலாளி சிரித்துக்கொண்டே, உன்னிடம் எவ்வளவு உள்ளது என்று கேட்டார். அதற்கு அந்த சிறுவன் தான் விளையாட சேர்த்து வைத்து இருந்த அந்த கடல் சிப்பிகளை தன் பாக்கெட்டில் இருந்து எடுத்து கொடுத்துவிட்டு, கடைக்காரரைப் பார்த்து இது போதுமா? என்று கவலையுடன் கேட்டான். அதற்கு அந்த கடைக்காரர், அவனின் கவலையான முகத்தை பார்த்து கொண்டே, எனக்கு நான்கு சிப்பிகள் போதும் என்றுக்கூறி மீதமுள்ள சிப்பிகளை அந்த சிறுவனிடம் திருப்பிக் கொடுத்தார். சிறுவன் மகிழ்ச்சியோடு மீதி உள்ள சிப்பிகளோடும், தன் தங்கையோடு அந்த பொம்மையை எடுத்து கொண்டு சென்றான்.


இதை எல்லாம் கவனித்து கொண்டு இருந்த, அந்த கடையின் வேலையாள் முதலாளியிடம், ஐயா! ஒன்றுக்கும் உதவாத சிப்பிகளை வாங்கிக்கொண்டு விலை உயர்ந்த பொம்மையை கொடுத்து விட்டீர்களே ஐயா, என்றான். 


அதற்கு அந்த முதலாளி அந்த சிறுவனுக்கு பணம் கொடுத்தால்தான் பொம்மை கிடைக்கும் என்று புரியாத வயது. அவனுக்கு அந்த சிப்பிகள்தான் உயர்ந்தவை. நாம் பணம் கேட்டால் அவன் எண்ணத்தில் பணம்தான் உயர்ந்தது என்ற மாற்றம் வந்து விடும். அதை தடுத்து விட்டேன். 


மேலும் தன் தங்கை கேட்டவற்றை தன்னால் வாங்கி தர முடியும் என்ற தன்னம்பிக்கையை அவனுக்குள் விதைத்து விட்டேன். என்றாவது ஒரு நாள் அவன் பெரியவனான பிறகு இந்த சம்பவங்களை நினைத்து பார்க்கையில் இந்த உலகம் நல்லவர்களால் ஆனது என்ற நல்ல எண்ணம் அவன் மனதில் தோன்றும். ஆகையால் அவன் எல்லோரிடமும் அன்பு காட்ட தொடங்குவான் என்றார்.

இன்றைய செய்திகள்

23.02.2026

⭐வ.உ.சிதம்பரனார் சிலைக்கு அடிக்கல் நாட்டினார் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்

⭐டிரம்ப் விதித்த பரஸ்பர வரியை அமெரிக்க சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது. இருப்பினும் உலக நாடுகளுக்கு டிரம்ப் புதிதாக 15 சதவீத வரிவிதித்துள்ளார்.

⭐எல் சால்வடார் மற்றும் மெக்சிகோ கடற்படைகள் சுமார் 10 டன் அளவிலான போதைப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளன.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று: இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி

Today's Headlines

⭐ The foundation stone for the statue of V. O. Chidambaranar was laid by Vice President C. P. Radhakrishnan.

⭐ The U.S. Supreme Court has canceled the reciprocal tax imposed by Donald Trump. However, Trump has newly imposed a 15% tax on countries around the world.

⭐ The navies of El Salvador and Mexico have seized approximately 10 tons of illegal drugs.

🏀 Sports News

🏀 In the Super 8 round of the ICC Men's T20 World Cup, England achieved a magnificent victory by defeating Sri Lanka.

Covai women ICT_போதிமரம்

 

Thursday, February 19, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.02.2026

சமூக நீதிக்கான உலக நாள்



 






திருக்குறள்: 

குறள் 341: 

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் 
அதனின் அதனின் அலன். 

விளக்க உரை: 

ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.

பழமொழி :

Borrowing is sorrowing. 

கடன் துன்பத்திற்கு வழிவகுக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. மூத்தோர் சொல் வார்த்தையும் முழு நெல்லிக்காயும் முதலில் கசக்கும் பின் இனிக்கும்.

2. எனவே மூத்தோர் சொல் கேட்டு நடப்பேன்.

பொன்மொழி : 

பகை பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக உன்னிடமே திரும்பி வரும்.- சுவாமி விவேகானந்தர்

பொது அறிவு : 

01.நம் உடலில் உள்ள இரத்தம் ஒரு நாளைக்கு பயணம் செய்யும் தூரம் எவ்வளவு?

சுமார் 19,000 கிலோமீட்டர் -
Approximately 19,000 km

02 மழை நீரில் காணப்படும் வைட்டமின் எது?

வைட்டமின் B12 
Vitamin B12 

English words :

consequence –impact happens due to some incidents 

ஒரு செயலினால்‌ ஏற்படும் பின்விளைவுகள். 

contest –a competition to find out who is the best

யார் சிறந்தவர் என்று கண்டறியும் போட்டி

தமிழ் இலக்கணம்: 

 ஒருமை பன்மையில் வரக்கூடிய பிழைகளை எவ்வாறு கண்டறிந்து அதை சரி செய்வது? வாருங்கள் பார்ப்போம் 
ஒருமை சொற்கள் இறுதியில் து என முடியும்.
 
பன்மை சொற்கள் இறுதியில் ன என முடியும்.
இதை கண்டறிய எதை என்ற கேள்வி கேட்க வேண்டும். 
எ.கா 1. பசு‌ கன்றுகளை ஈன்றன.
எது? பசு.‌ பசு ஒருமை 
ஒருமை து வில் முடியும் 

 சரியான விடை –பசு‌ கன்றுகளை ஈன்றது.
2. கீரைகளில் இரும்பு சத்து உள்ளன.
எது? இரும்பு சத்து.‌ இரும்பு சத்து ஒருமை 

சரியான விடை 

கீரைகளில் இரும்பு சத்து உள்ளது.
3. வண்டிகள் வரிசையாக நிற்கின்றது
எது? வண்டிகள்.‌ இது பன்மை. 
 சரியான விடை 
வண்டிகள் வரிசையாக நிற்கின்றன.

அறிவியல் களஞ்சியம் :

இப்போது நமது பூமியில் ஒரு நாள் என்பது 24 மணி நேரம் / 86,400 வினாடிகள் ஆகும். அப்படித்தான் என எண்ணிக்கொண்டு இருக்கிறோம். ஒரு நாளின் நேரம் என்பதும் மாறக்கூடியதே என்ற தகவல் பெரும்பாலோருக்குத் தெரியாது.  இந்த நேரம் முற்றிலும் நிலையானது அல்ல. பூமி உருவான காலத்தில் இருந்து, பூமியின் சுழற்சி வேகம், பல காரணிகளைப் பொருத்து மாறிக்கொண்டே வந்திருக்கிறது

பிப்ரவரி 20

சமூக நீதிக்கான உலக நாள்


சமூக நீதிக்கான உலக நாள் அல்லது உலக நீதி நாள் (World Day of Social Justice) என்பது உலக நாடுகள் முழுவதும் ஆண்டுதோறும் பெப்ரவரி 20 ஆம் நாளன்று கடைப்பிடிக்கப்படும் நாளாகும். வறுமையைப் போக்கவும், வேலையின்மையின் பிரச்சினைகளைக் கையாளும் முயற்சிகளை ஊக்குவிக்கவும், இந்நாள் அங்கீகரிக்கப்படுகிறது. மேலும் இந்நாளில், ஐக்கிய நாடுகள் அவை, மற்றும் சர்வதேச தொழிலாளர் அலுவலகம் உட்பட, பல அமைப்புக்கள் மக்கள் சமூக நீதி முக்கியத்துவம் பற்றிய அறிக்கைகளை தயாரிக்க அமைக்கப் பெற்றுள்ளது.

நீதிக்கதை

 எதையும் நாமே நாடிப்போவது சரியா?

ஒரு நாள் நவீன் தன் அம்மாவுடன் கடைக்கு போனான். அந்த கடைக்காரர் பையன் அழகா இருக்கானே என்று சொல்லிவிட்டு, பாட்டிலில் இருந்து சாக்லேட்டை காட்டி, உனக்கு எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொள் என்றார்.

ஆனால் நவீன் சாக்லேட்டை எடுக்கவே இல்லை. கடைக்காரர் எவ்வளவோ வற்புறுத்தியும் அவன் எடுக்கவில்லை. அதை பார்த்த அவன் அம்மா, சாக்லேட் பாட்டிலில் இருந்து எடுத்துக்கோ என்றார். அப்பவும் நவீன் சாக்லெட்டை எடுக்கவே இல்லை.

பிறகு அந்த கடைக்காரரே சாக்லேட்டை அள்ளி அவன் கைகளில் வைத்தார். அவன் ஆசையுடன் இரண்டு கைகளாலும் வாங்கிக் கொண்டான். வீட்டிற்கு போனவுடன் அவன் அம்மா ஏன் சாக்லேட்டை பாட்டிலில் இருந்து நீயே எடுத்து கொள்ளவில்லை என்று கேட்டார்.

அம்மா என் கையை பாருங்கள். எவ்வளவு சிறியதாக இருக்கிறது. நான் பாட்டிலில் இருந்து எடுத்து இருந்தால் எனக்கு கொஞ்சமாக தான் கிடைத்திருக்கும். இப்பொழுது பாருங்க.. அவர் எடுத்து கொடுத்ததால் எவ்வளவு அதிகமாக சாக்லேட் கிடைத்திருக்கிறது பாருங்கள் என்றான்.

எதையுமே நாம் விரும்பிக் கேட்டால் குறைவாகத்தான் கிடைக்கும். அதுவாக தேடி வந்தால் அதிகமாகக் கிடைக்கும் என்பதை நவீனின் அம்மா புரிந்து கொண்டார்.

இன்றைய செய்திகள்

20.02.2026

⭐தமிழகத்தில் தகுதியுள்ள பெண்களுக்கு இனி ஆண்டுதோறும் ரூ.2,000 கோடைகால சிறப்புத் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

⭐நைஜீரியாவில் விஷவாயு கசிவால் வெடித்து சிதறிய சுரங்கம்: 38 தொழிலாளர்கள் பலி

⭐அமெரிக்காவில் கடும் பனிப்புயல்: 8 பனிச்சறுக்கு வீரர்கள் உயிரிழப்பு.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀டி20 உலகக்கோப்பை: இத்தாலியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி.

Today's Headlines

⭐ Minister Geetha Jeevan has officially announced that eligible women in Tamil Nadu will henceforth receive ₹2,000 every year as a special summer assistance amount.

⭐ A mine exploded due to a toxic gas leak in Nigeria: 38 workers died.

⭐ Severe snowstorm in the United States: 8 skiers lost their lives.

🏀 Sports News

🏀 ICC Men's T20 World Cup: West Indies register a huge win by defeating Italy.

Covai women ICT_போதிமரம்

 

Wednesday, February 18, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.02.2026


    


 






திருக்குறள்: 

குறள் 519: 

வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக 
நினைப்பானை நீங்குந் திரு 

விளக்க உரை: 

மேற்கொண்ட தொழிலில் எப்போதும் முயற்சி உடையவனின் உறவைத் தவறாக நினைக்கும் தலைவனை விட்டுச் செல்வம் நீங்கும்.

பழமொழி :

An empty sack cannot stand upright 

வெறும் கையால் முழம் போட முடியாது

இரண்டொழுக்க பண்புகள் :

1. மூத்தோர் சொல் வார்த்தையும் முழு நெல்லிக்காயும் முதலில் கசக்கும் பின் இனிக்கும்.

2. எனவே மூத்தோர் சொல் கேட்டு நடப்பேன்.

பொன்மொழி : 

வாழ்க்கையில் எந்த நெருக்கடி நிலையில் இருக்கும்பொழுதும் வாய்மையை கடைப்பிடிப்பது போல உறுதியான நிச்சயமான பாதுகாப்பு வேறு எதுவும் கிடையாது- கார்லஸ் டிக்கின்ஸ்

பொது அறிவு : 

01.2000 ரூபாய் நோட்டின் பின்புறத்தில்  இடம்பெற்றுள்ள சின்னம் எது?

    மங்கள்யான்- Mangalyaan

02.உலகின் மிகப்பெரிய மற்றும் மிக உயரமான கடிகாரம்  எங்குள்ளது?

      மெக்கா-சவூதி அரேபியா

 Mecca-Saudi Arabia.

English words :

regret –to feel sorry that you did something or that you did not do something.

ஒன்றைச் செய்தமைக்காக/செய்யாமைக்காக வருத்த உணர்வு கொள்ளுதல்

remorse –a feeling of sadness because you have done something wrong.

தவறு செய்துள்ளமை காரணமாக மனத்தில் தோன்றும் வருத்த உணர்வு.

தமிழ் இலக்கணம்: 

 தன்/தம் பயன் படுத்தும் இடங்கள்
ஒருமை வரும்போது *தன்* உபயோகப் படுத்த வேண்டும்.
1. அருளன் *தன்* கையால் பரிசைப் பெற்றுக் கொண்டான்
2. சிறுமிகள் *தம்* கரங்களால் மலர் தூவினர் 
ஆனால் இதற்கு விலக்கும் உண்டு. மரியாதைக்குரியவர்களைக் குறிக்கும் போது ஒருமையில் இருந்தாலும் *தம்*  என்று தான் குறிக்க வேண்டும் 
சான்றோர் தம்மைத் தாம் புகழ மாட்டார்கள்

தலைவர் தம் பணத்தைக் கொடுத்து பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வாங்கிக் கொடுத்தார்.

அறிவியல் களஞ்சியம் :

நமது  பூமிப்பந்து சுற்றிக்கொண்டு இருக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், முழுமையான காரணம் பலருக்குத் தெரியாது. சூரியனின் ஈர்ப்பு விசையால் சுழல்வதாக எண்ணிக்கொண்டு இருக்கிறோம். பூமி சுழல்வதற்கான முக்கிய காரணம், அதன் உருவாக்கத்தின் தொடக்க காலத்தில் இருந்தே பெறப்பட்ட கோண உந்தம் (Angular Momentum) ஆகும். சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சூரிய மண்டலம், அதாவது சூரிய விண்மீன் ஒரு பெரும் சுழலும் வாயு மற்றும் தூசியின் மேகத்தில் இருந்து உருவானது. இந்த மேகம் சுழன்று கொண்டே இருந்தது. அப்போது உருவானதுதான் இந்த பூமி.  பூமி உள்ளிட்ட கோள்கள் உருவாகும்போது, இந்தப் பிரபஞ்ச அளவிலான சுழற்சியின் உந்தம் அனைத்துக்  கோள்களுக்கும் பரிமாறப்பட்டது. இந்த உந்தத்தை இழக்க எந்த புற விசையும் இல்லாததால், பூமி இன்றும் தொடர்ந்து சுழன்று கொண்டே இருக்கிறது.

பிப்ரவரி 19


நீதிக்கதை

 அன்பை வெளிப்படுத்தும் விதம்

ஒரு நாள் வகுப்பறையில் ஆசிரியை மாணவர்களிடம், அன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டு வாருங்கள் என்று கூறி நான்கு மாணவிகளை அனுப்பினார். திரும்பி வந்த மாணவிகளில் ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது. இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் பூச்சி இருந்தது. மற்றொரு மாணவியிடம் ஒரு குஞ்சுப்பறவை இருந்தது. 

நான்கு மாணவிகளில் முதலில் கிளம்பிப்போன மாணவி கடைசியில் வெறும் கையுடன் திரும்பி வந்தாள். ஆசிரியை அந்த மாணவியிடம் நீ ஏன் எதையும் கொண்டு வரவில்லை என்று கேட்டார்.

அதற்கு அந்த மாணவி, நானும் மலரைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. செடியிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. சுதந்திரமாய்ப் பறக்கட்டும் என்று விட்டுவிட்டேன். குஞ்சுப் பறவையைப் பார்த்தேன். தாய்ப்பறவை தேடுமென்று விட்டுவிட்டேன் என்று பதில் கூறினாள். 

மாணவி கூறிய பதிலைக் கேட்டவுடன் ஆசிரியை அந்த மாணவியை அணைத்துக் கொண்டார். அன்பு என்றால் இது தான். ஒன்றுமே கொடுக்க வேண்டாம். எதையுமே பறிக்காமல் இருந்தால் அதுவே போதும் என்றார்.

இன்றைய செய்திகள்

19.02.2026

⭐ தமிழகத்தில் சமூக பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் முதியோர், மாற் றுத்திறனாளிகள் & ஆதரவற்ற விதவைகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியங்கள் மூலம் சுமார் 35.33 லட்சம் நபர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

⭐உலகின் சர்க்கரை கிண்ணம் என அழைக்கப்படும் கியூபாவில் எரிபொருள் தட்டுப்பாடு நாளுக்கு நாள் மோசமான நிலையை அடைந்துவருகிறது. இதனால் அந்நாட்டின் பொருளாதாரமும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையையும் முடங்கியுள்ளது.

⭐’ரஷ்யாவிடம் இருந்து 2000 குழந்தைகள் மீட்பு' - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀டி20 உலகக் கோப்பை:
நமீபியாவை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது பாகிஸ்தான்.

Today's Headlines

⭐ Under the social security schemes in Tamil Nadu, about 3.533 million (35.33 lakh) people are benefiting from pensions provided to senior citizens, persons with disabilities, and destitute widows.

⭐ In Cuba, which is known as the “Sugar Bowl of the World,” the fuel shortage is worsening day by day. As a result, the country’s economy and the normal life of the people have been severely affected.

⭐ ‘2,000 children rescued from Russia’ – Ukrainian President Zelenskyy

🏀 Sports News

🏀 T20 World Cup:
Pakistan advanced to the Super 8 round after defeating Namibia.

Covai women ICT_போதிமரம்

 

Tuesday, February 17, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.02.2026

மார்ட்டின் லூதர்






திருக்குறள்: 

குறள் 513: 

அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும் 
நன்குடையான் கட்டே தெளிவு 

விளக்க உரை: 

அன்பு, அறிவு, ஐயமில்லாமல் தெளியும் ஆற்றல், அவா இல்லாமை ஆகிய இந் நான்கு பண்புகளையும் நிலையாக உடையவனைத் தெளியலாம்.

பழமொழி :

Hard work writes your destiny.         

கடின உழைப்பே உங்கள் விதியை எழுதும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. மூத்தோர் சொல் வார்த்தையும் முழு நெல்லிக்காயும் முதலில் கசக்கும் பின் இனிக்கும்.

2. எனவே மூத்தோர் சொல் கேட்டு நடப்பேன்.

பொன்மொழி : 

வணங்க ஆரம்பிக்கும் போதே வளர ஆரம்பிப்போம் - கோல்ட்ரிட்ஜ்

பொது அறிவு : 

01.இந்திய மக்களவையின் முதல் பெண் சபாநாயகர் யார்?

மீரா குமார்-Meira Kumar

02.இந்திய நாணயத்தின் (ரூபாய்) சின்னத்தை (₹) வடிவமைத்தவர் யார்?

 டி. உதய குமார்-தமிழ்நாடு
 D. Udaya Kumar - Tamilnadu

English words :

Famished-starving

Slugishly-slowly

தமிழ் இலக்கணம்: 

 வாக்கிய பிழை பாகம் 2
மாறன் சிறந்த இசை வல்லுனராக ஆக விரும்பினான்
வல்லுனராக –இதிலே ஆக என்று இருப்பதால் தனியாக ஒரு ஆக தேவையில்லை
2. பத்தே பத்து கடைகள் மட்டும் திறந்து இருந்தன.
பத்தே, மட்டும் இரண்டுமே அழுத்தம் கொடுக்கும் சொல். எனவே 
அ. பத்து கடைகள் மட்டும் திறந்து இருந்தன.

ஆ. பத்தே பத்து  கடைகள்  திறந்து இருந்தன.

என்று எழுத வேண்டும் 
நாளை மற்றும் ஒரு குறிப்பு பார்ப்போம்

அறிவியல் களஞ்சியம் :

பூஞ்சைகள் பிளாஸ்டிக்கை உடைக்கும் சரியான செயல்முறை இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை. இருப்பினும், பூஞ்சைகள் பிளாஸ்டிக்கை எளிய மூலக்கூறுகளாக சிதைக்கின்றன, பின்னர் அவை உறிஞ்சி அல்லது வெளியேற்றும் என்று நம்பப்படுகிறது.

பிப்ரவரி 18

மார்ட்டின் லூதர்  அவர்களின் நினைவுநாள்

மார்ட்டின் லூதர் (Martin Luther, நவம்பர் 10, 1483–பெப்ரவரி 18, 1546) ஒரு கிறித்தவத் துறவியும் செருமனிய மதகுருவும், இறையியலாளரும், பல்கலைக்கழகப் பேராசிரியரும், புரட்டஸ்தாந்தத்தின் தந்தையும், திருச்சபைச் சீர்திருத்தவாதியும் ஆவார். இவரது கருத்துக்கள் புரட்டஸ்தாந்தச் சீர்திருத்தத்தில் செல்வாக்குச் செலுத்தி மேனாட்டு நாகரிகத்தின் போக்கையே மாற்றியது. 

மைக்கலாஞ்சலோ அவர்களின் நினைவுநாள்

மைக்கலாஞ்சலோ



மைக்கலாஞ்சலோ டி லொடோவிக்கோ புவோனரோட்டி சிமோனி (Michelangelo di Lodovico Buonarroti Simoni, மார்ச் 6, 1475 - பெப்ரவரி 18, 1564) ஒரு இத்தாலிய மறுமலர்ச்சிக் கால ஓவியரும், சிற்பியும், கவிஞரும்,கட்டிடக்கலைஞருமாவார். இவர் மைக்கலாஞ்சலோ எனப் பொதுவாக அறியப்படுகிறார். இவரது கலைசார்ந்த பல்துறைத் திறமையின் உயர்ந்த தரம் காரணமாகச் சமகாலத்தவரான லியொனார்டோ டா வின்சியுடன் சேர்த்து இவரும் மறுமலர்ச்சிக் காலத் தந்தையெனக் கணிக்கப்படுகின்றார்.

மைக்கலாஞ்சலோவின் நீண்ட கால வாழ்க்கையில், அவர் படைத்தவைகள் அனைத்தும் அவரது அதிசயிக்கத்தக்க திறமைக்குச் சான்றாக அமைகின்றன. கடிதத் தொடர்புகள், வரைபடங்கள், நினைவுக் குறிப்புகள் என இவர் எழுதிக் குவித்தவை ஏராளம். இவைகளையும் சேர்த்தால், 16 ஆம் நூற்றாண்டில் அதிகமாக ஆவணப்படுத்தப்பட்ட கலைஞர் இவரே எனலாம்.

நீதிக்கதை

 நன்மை தீமை இரண்டையும் ஏற்றுக்கொள்

ஒரு வயதான விவசாயி தன் வயலில் பாடுபட்டு உழைத்து அதில் வரும் சொற்பமான வருமானத்தில் வாழ்ந்துகொண்டிருந்தார். ஒரு நாள் அவர் வளர்த்து வந்த குதிரை காணாமல் போய்விட்டது. தகவலைக் கேள்விப்பட்ட அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் என்ன ஒரு துரதிர்ஷட நிலை? என்று பரிதாபமாக விசாரித்தனர். அவர்களின் ஆறுதலுக்கு விவசாயி மௌனமாக இருக்கலாம் என்று பதிலளித்தார்.

அடுத்த நாள் தொலைந்துப்போன அவருடைய குதிரை தன்னுடன் மூன்று குதிரைகளை அழைத்து வந்தது. இதை ஆச்சர்யமாக பார்த்த அக்கம் பக்கத்தினர், நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி, இப்பொழுது நான்கு குதிரை உனக்கு கிடைச்சிடுச்சு என்றனர். தனக்குக் கிடைத்த அதிர்ஷ்டத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் மறுபடியும் இருக்கலாம் என்று கூறினார் விவசாயி. 

ஒரு வாரத்துக்குப் பிறகு, விவசாயியின் மகன் குதிரையை வேகமாக ஓட்டிச்சென்று தவறுதலாக கீழே விழுந்து காலை உடைத்துக்கொண்டான். இப்பொழுது அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், விவசாயிடம், உனக்கு ஒரு நல்லது நடந்தால், அடுத்து ஒரு கெட்டது நடக்குதே. உன் பையன் எழுந்து நடக்க பத்து மாதத்திற்கும்மேல் ஆகும் போல இருக்கிறதே, ரொம்ப கஷ்டமான நிலைமை என்று கூறி ஆதங்கப்பட்டனர். அப்போழுதும் அந்த விவசாயி பெரிதாக வருந்தாமல் இருக்கலாம் என்று அதே பதிலைக் கூறினார்.

ஒரே வாரத்தில் அந்த நாட்டில் போர் வந்துவிட்டது. வீட்டில் இருக்கும் எல்லா இளைஞர்களும் கட்டாயம் போரில் கலந்துகொள்ள வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. வீடு வீடாக ராணுவத்தினர் புகுந்து இளைஞர்களை அழைத்துச் சென்றனர். ஆனால், அந்த ஏழை விவசாயியின் மகனுக்குக் கால் உடைந்து இருந்ததால் அவனை மட்டும் அழைத்துச் செல்லவில்லை. இதைக் கண்டு ஊர் மக்கள் அந்த விவசாயியின் அதிர்ஷ்டத்தைக் கண்டு புகழ்ந்தனர். இப்போதும் அந்த விவசாயி இருக்கலாம் என்று கூறினார்.

அந்த விவசாயி ஒவ்வொருமுறையும் கூறும் பதிலைக் கேட்டுக் கொண்டிருந்த அவருடைய நண்பர், அந்த விவசாயியைப் பார்த்து, உனக்கு நல்லது நடந்தாலும், கெட்டது நடந்தாலும் இருக்கலாம் இருக்கலாம் என்றே சொல்கிறாயே ஏன்? என்று கேட்டார்.

அதற்கு அந்த விவசாயி நல்லது, கெட்டது இரண்டும் நாணயத்தின் இருபக்கங்கள். யாருக்கும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். சுகம், துக்கம் இவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை என்பதை உணர்ந்தாலே போதுமானது என்றார்.

இன்றைய செய்திகள்

18.02.2026

⭐ 2030க்குள் 33% மின் பேருந்துகள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.

⭐இடைக்கால பட்ஜெட்டில் வேளாண்மைத்துறைக்கு ரூ.47,248 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 ⭐இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி நிதி ஒதுக்கீடு - அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀டி20 உலகக் கோப்பை 2026: கனடாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து.

Today's Headlines

⭐ In Tamil Nadu, 33% Electric Buses by 2030: Chief Minister M. K. Stalin announced.

⭐ In the interim budget, ₹47,248 crore has been allocated to the agriculture sector.

⭐ In the interim budget, ₹48,534 crore has been allocated to the School Education Department, said Minister Thangam Thennarasu.

🏀 Sports News

🏀 In the ICC Men's T20 World Cup 2026, New Zealand defeated Canada by 8 wickets.

Covai women ICT_போதிமரம்