Wednesday, February 4, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.02.2026

கிறிஸ்டியானோ ரொனால்டோ

   


 






திருக்குறள்: 

குறள் 417: 

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந் 
தீண்டிய கேள்வி யவர்.        

விளக்க உரை: 

நுட்பமாக உணர்ந்து நிறைந்த கேள்வியறிவை உடையவர், ( ஒரு கால் பொருள்களைத்) தவறாக உணர்ந்திருந்தாலும் பேதைமையானவற்றைச் சொல்லார்.

பழமொழி :

Effort is the key to success. 

முயற்சியே வெற்றியின் சாவி.

இரண்டொழுக்க பண்புகள் :

1. பணத்தை விட அறிவே உயர்ந்தது

2. எனவே அறிவைப் பெருக்க அனைத்தும் படிப்போம்.

பொன்மொழி : 

பிறரிடம் உள்ள நல்ல விஷசயங்களை கற்றுக் கொள்ள மறுப்பவன் இறந்தவனுக்கு சமம்.

       - விவேகானந்தர்.

பொது அறிவு : 

01. எந்த நாட்டின் பாராளுமன்றம் அமைதிக்கான நோபல்  பரிசை தேர்வு செய்து பரிந்துரைக்கிறது?

நார்வே பாராளுமன்றம்

The Norwegian Parliament 

02.பலூனில் முதல்முறையாக  உலகைச் சுற்றிப் பறந்த முதல் அமெரிக்கர் யார்?

ஸ்டீவ் ஃபோசெட் -Steve Fossett

English words :

haunting-sad and unforgettable 

piblings-aunt and uncle

தமிழ் இலக்கணம்: 

 அது, இது, அஃது, இஃது 
உயிர் மெய் எழுத்துக்கு முன் அது, இது வரும்
எ. கா. அது மாலாவின் புத்தகம்
இது பாரதியின் வீடு
ஆனால் உயிர் எழுத்துக்கு முன்னால் அஃது, இஃது தான் வரும்
அஃது 
*உ* ன்னுடைய வீடா?
இஃது 
*அ* வரின் கவிதை

அறிவியல் களஞ்சியம் :

இந்த பாலைவனம் நீண்ட காலமாக 'இருண்ட மண்டலம்' என வகைப்படுத்தப்பட்டுள்ளது. பல தசாப்தங்களாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், இந்த நிகழ்விற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. அமெரிக்க ஆய்வுக்குப் பிறகு, மெக்சிகோ அரசு சிஹுவாஹுவா பாலைவனத்தில் ஒரு பெரிய ஆய்வகத்தை நிறுவியது. இது 'தி ஜோன்' என அறியப்படுகிறது.

பிப்ரவரி 05

கிறிஸ்டியானோ ரொனால்டோ அவர்களின் பிறந்தநாள்


கிறிஸ்டியானோ ரொனால்டோ டோசு சாண்டோசு அவேரோ (பிறப்பு: 5 பிப்ரவரி 1985 ) ஒரு போர்த்துகீசிய கால்பந்து வீரர் ஆவார். இவர் சவுதி புரோ லீக்கில் அல் நாசர் அணிக்காகவும், போர்ச்சுகல் தேசிய அணிக்காகவும் விளையாடுகிறார். ஒரு முன்கள வீரரான இவர் தான் விளையாடும் அணிகளின் தலைவராகவும் உள்ளார். ரொனால்டோ ஐந்து பாலோன் தி'ஓர் விருதுகளையும், மூன்று யுஇஎஃப்ஏ ஆண்டின் சிறந்த வீரர் விருதுகளையும், நான்கு ஐரோப்பிய தங்க காலணி விருதுகளையும் வென்றுள்ளார். இவர் ஏழு லீக் பட்டங்கள், ஐந்து யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு, யூஈஎஃப்ஏ ஐரோப்பிய கோப்பை மற்றும் யூஈஎஃப்ஏ பன்னாட்டு கூட்டிணைவு உட்பட 33 கோப்பைகளை வென்றுள்ளார்.

நீதிக்கதை

ஒரு ஊரில் ஒரு குட்டிப்பறவை இருந்தது. அது பல இடங்களுக்கும் உணவு தேடி பறந்தது. ஓரிடத்தில், ஒரே ஒரு புழு சுற்றிக்கொண்டிருந்தது. பறவை அதைக் கொத்த முயன்ற போது, புழு பறவையிடம், என்னை மட்டும் சாப்பிட்டு விட்டால், உன் பசி தீர்ந்து விடுமா? சற்று தூரத்தில் நாற்பது, ஐம்பது புழுக்கள் இருக்கின்றன. கொஞ்ச தூரம் பறந்து சென்றால் அவற்றையும் சேர்த்து சாப்பிடலாம், என்றது. இரக்கமில்லாத அந்தப் பறவை, எப்போதோ கிடைக்கப் போகும் நாற்பது, ஐம்பது புழுக்களுக்காக, உன்னையும் விட்டு விட்டால் என்னாகும்? இப்போது, உன்னைத் தின்று பசியாறிக் கொள்கிறேன். பிறகு என் வழியில் நான் செல்கிறேன், என்று சொல்லி, புழுவை விழுங்கி விட்டது.


கொஞ்ச தூரம் பறந்து சென்று ஓரிடத்தில் அமர்ந்தது. அது அமர்ந்த இடம் ஒரு வலை. அதில் இருந்து மீள முடியவில்லை. வேடன் அதை தூக்க வந்தான். பறவை அவனிடம், வேடனே! நான் சாதாரண குஞ்சுப்பறவை. என்னிடம் என்ன இறைச்சி இருக்கும்! என்னுடன் வா! என் இருப்பிடத்தில் பல கொழுத்த பறவைகள் உள்ளன. அவற்றைப் பிடித்துச் சென்றால், உனக்கு நிறைய இறைச்சி கிடைக்கும் என்று சொல்லி தப்பிக்கப் பார்த்தது. அட பறவையே! நாளை கிடைக்கப்போகும் பலாக்காய்க்காக, இன்று கிடைக்கும் கிளாக்காயை எவனாவது விடுவானா? ஹூம்... இன்றைய உணவையே நான் பார்க்கிறேன், நாளைக்குரியதை, அந்த நாராயணன் பார்த்துக் கொள்வான், என்றவன், பறவையின் கழுத்தை திருகி விட்டான்.

நீதி: நாம் பிறருக்கு துன்பம் விளைவிக்கும்போது  நமக்கும் இன்னல் வரும்.

இன்றைய செய்திகள்

05.02.2026

⭐'என் கனவு என் எதிர்காலம்' திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

⭐தமிழகத்தில் ஆதிதிராவிடர் முன்னேற்றத் திட்டத்தின் கீழ் 2025-26 நிதியாண்டில் ரூ.66.37 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் மேலும் 1,514 ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு ரூ.14.35 கோடி சிறு வணிக கடன் வழங்கப்பட்டுள்ளது.

⭐மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை வாபஸ் பெறுவதாக உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀16-வது இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் நடந்து வருகிறது.

Today's Headlines

⭐Chief Minister M.K. Stalin launched the project "My Dream My Future"

⭐In Tamil Nadu, Rs. 66.37 crore has been allocated under the Adi Dravidar Munnetra Kazhagam (ADMP) in the financial year 2025-26, and Rs. 14.35 crore of small business loans have been provided to 1,514 Adi Dravidar beneficiaries.

⭐Home Ministry of  India announced withdrawal of President's rule in Manipur.

*SPORTS NEWS*

🏀The 16th Under-19 Cricket World Cup is going on in Zimbabwe and Namibia.

Covai women ICT_போதிமரம்

Tuesday, February 3, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.02.2026

உலகப் புற்றுநோய் நாள்



 






திருக்குறள்: 

குறள் 304: 

நகையும் உவகையுங் கொல்லுஞ் சினத்தின் 
பகையும் உளவோ பிற.      

விளக்க உரை: முகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ?

பழமொழி :

Small efforts daily lead to big results.     

தினசரி சிறு முயற்சிகள் பெரிய பலனை தரும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. பணத்தை விட அறிவே உயர்ந்தது

2. எனவே அறிவைப் பெருக்க அனைத்தும் படிப்போம்.

பொன்மொழி : 

இயற்கைக்கு மாறுபட்ட செயல்களை என்றும் செய்ய முனையக்கூடாது. உலக நடைமுறைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்வதில்லை என்று உறுதி எடுங்கள்.

        - ஔவையார்

பொது அறிவு : 

01.ஆழ்கடல் ஆய்வுக்காக பிரத்தியேகமாகப் பயன்படுத்தப்பட்ட முதல் முக்கிய ஆய்வுக் கப்பல் எது?

 HMS சேலஞ்சர்- HMS Challenger

02.சந்திரனின் மேற்பரப்பை துல்லியமாக புகைப்படம் எடுத்த முதல் விண்கலம் எது?

 அமெரிக்கா-லூனார் ஆர்பிட்டர் 1 America -Lunar Orbiter 1

English words :

cascade-waterfall 

studious-hardworking

தமிழ் இலக்கணம்: 

 இரண்டு வட மொழிச் சொற்கள் சேர்ந்து ஒரு சொல் வரும் போது வல்லினம் மிகாது
தேசம் + பிதா = தேசபிதா
ஆனால் முதல் எழுத்து வடமொழி சொல்லாக இருந்து அடுத்த சொல் தமிழ் சொல்லாக இருந்தால் வல்லினம் மிகும்
தேச+தந்தை = தேசத் தந்தை.
தேசம் வடமொழிச் சொல். தந்தை தமிழ் சொல்

அறிவியல் களஞ்சியம் :

1970 ஆம் ஆண்டில் அமெரிக்க ஏவுகணை விபத்துக்குள்ளான போது 'மௌன மண்டலத்தைப்' பற்றிய ஆராய்ச்சி தொடங்கியது. விசாரணைக்கு அனுப்பப்பட்ட அமெரிக்க விமானப்படை குழு, ஜிபிஎஸ் கருவிகள் உட்பட அனைத்து மின்னணு உபகரணங்களும் செயலிழந்திருந்ததை கண்டது. இதனால் அந்த குழு இதற்கு 'மௌன மண்டலம்' என்று பெயரிட்டது.

பிப்ரவரி 04

வீரமாமுனிவர் அவர்களின் நினைவுநாள்

வீரமாமுனிவர் (Constanzo Beschi, நவம்பர் 8, 1680 - பெப்ரவரி 4, 1747) இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் - கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி (Constantine Joseph Beschi). இவர் இயேசு சபையைச் சேர்ந்த குரு ஆவார். கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில், 1709ஆம் ஆண்டு இயேசுசபையில் குருவானபின், 1710-ஆம் ஆண்டு தமிழகத்துக்கு அதாவது அவரது 30-ஆவது அகவையில் வந்தார்.

இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசு கிறித்துவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப "தேம்பாவணி" என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது. சுப்ரதீபக் கவிராயர் மூலம் தமிழில் புலமை பெற்றார்.


உலகப் புற்றுநோய் நாள்


உலகப் புற்றுநோய் நாள் (World Cancer Day) என்பது புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், நோய்த் தடுப்பு முறைகள், மற்றும் புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகளைப் பரப்புவதற்கும் உலகளாவிய அளவில் ஆண்டுதோறும் பெப்ரவரி 4 ஆம் நாள் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாகும். உலகப் புற்றுநோய் நாள் 2008 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட உலகப் புற்றுநோய்ப் பிரகடனத்தை ஆதரிக்கும் நோக்கில் பன்னாட்டுப் புற்றுநோய் எதிர்ப்பு ஒன்றியம் (Union for International Cancer Control) என்ற அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டுக்குள் புற்றுநோய் இறப்பு வீதம், மற்றும் புற்றுநோய்த் தாக்கத்தை 2020 ஆம் ஆண்டுக்குள் குறிப்பிடத்தக்களவு குறைத்தலே இதன் முதன்மை நோக்கம் ஆகும்.

நீதிக்கதை

 கர்வம் கொண்ட மயில்


குறள் :

அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை 

வியந்தான் விரைந்து கெடும். 


விளக்கம் :

மற்றவர்களை மதிக்காமலும், தன் வலிமையை உணர்ந்து கொள்ளாமலும், தன்னைத் தானே பெரிதாக விளம்பரப் படுத்திக் கொண்டிருப்பவர்கள் விரைவில் கெட்டுத் தொலைவார்கள். 


கதை :

ஒரு தோப்பில் ஒரு மயில் வசித்து வந்தது. அந்த மயிலுக்கு தன் அழகை எண்ணி அதிக பெருமை. ஒரு நாள் அந்த தோப்புக்கு எங்கிருந்தோ வந்து சேர்ந்தது குரங்கு ஒன்று. அந்த குரங்கிடம் தன் தோகையை காட்டி பெருமைப்பட்டு கொண்டது மயில். அதற்கு குரங்கோ, மயிலே இந்த தோகையையும் அதை விரித்து நீ ஆடுவதையும் பார்க்க மனிதர்கள் உன்னை தேடி வர வேண்டும். 


ஆனால் அந்த குயிலை பார். தினமும் பறந்து மனிதர்கள் இருக்கும் பகுதிக்கு செல்கிறது. அழகாக பாடி மனிதர்களை சந்தோசப்படுத்துகிறது. மனிதர்கள் தங்கள் வீட்டுக்குள் இருந்தே அதன் அழகிய குரலை கேட்டு மகிழ்கின்றனர். அவர்களை சந்தோசப்படுத்தி விட்டு மீண்டும் மாலையில் தன் கூட்டுக்கு வந்து விடுகிறது. உன்னை விட அந்த குயிலே இறைவனின் அற்புத படைப்பு என்றது. 


இதை கேட்டு ஆத்திரமடைந்த மயில் மறுநாள் மனிதர்கள் வாழும் பகுதிக்கு சென்று கத்த தொடங்கியது. அதன் கர்ண கொடூர சத்தம் பொறுக்க முடியாமல் மனிதர்கள் அந்த மயிலை அடித்து தோப்புக்குள் விரட்டினார்கள். 


நீதி :

தனக்கு எல்லாம் தெரியும் என்று பெருமை கொண்டு காரியம் செய்தால் அவமானமே மிஞ்சும்.

இன்றைய செய்திகள்

04.02.2026

⭐செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அரசு
மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கம் கட்டவும், மருத்துவ உபகரணங்கள் வாங்கவும் அரசு ரூ.12 கோடி நிதி அறிவித்துள்ளது.

⭐இந்தியாவில் 5 லட்சத்துக்கு மேல் மக்கள்தொகை கொண்டுள்ள 2ம் & 3-ம் நிலை நகரங்கள் அனைத்திலும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இந்திய அரசு திட்டமிட்டு உள்ளது. 

⭐ இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்திலுள்ள உத்தர்காஷி, சாமோலி, ருத்ரப்ரயாக், பித்தோராகர், பாகேஷ்வர் ஆகிய நகரங்களுக்கு பனிச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀5 அணிகள் இடையிலான 4-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிவில் 12 புள்ளிகளுடன் முதலிடம் (6 வெற்றி, 2 தோல்வி) பிடித்த ஸ்மிர்தி மந்தனா தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ் சர்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

Today's Headlines

⭐  The government has announced a fund of Rs. 12 crore for the construction of operating theatres in hospitals and the purchase of medical equipment for Chengalpattu District, Madurantakam government  hospital.

⭐The Government of India is planning to improve infrastructure facilities in all Tier 2 & 3 cities in India with a population of more than 5 lakhs..

⭐ Avalanche warnings have been issued for the cities of Uttarkashi, Chamoli, Rudraprayag, Pithoragarh, and Bageshwar in the Indian state of Uttarakhand.

 *SPORTS NEWS* 

🏀The 4th Women's Premier League (WPL) 20-over cricket match between 5 teams is underway in Vadodara, Gujarat.
The Smriti Mandhana-led Royal Challengers Bangalore team, which finished first with 12 points (6 wins, 2 losses) at the end of the league round, advanced directly to the final.

Covai women ICT_போதிமரம்

Monday, February 2, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.02.2026

யோகான்னசு கூட்டன்பர்கு






திருக்குறள்: 

குறள் 303: 

மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய 
பிறத்தல் அதனான் வரும். 
      
விளக்க உரை: 

யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும்.

பழமொழி :

There is no substitute for hardwork.   

கடின உழைப்பிற்கு மாற்று எதுவும் இல்லை.

இரண்டொழுக்க பண்புகள் :

1. பணத்தை விட அறிவே உயர்ந்தது

2. எனவே அறிவைப் பெருக்க அனைத்தும் படிப்போம்.

பொன்மொழி : 

இந்த நொடிப் பொழுது போல் விலைமதிப்பற்ற பொருள் வேறெதுவும் இல்லை. சரியாகப் பயன்படுத்துபவரே வெகுமதியானவர் ...


----------இறையன்பு ஐஏஎஸ்

பொது அறிவு : 

01.கரீபியன் கடலில் உள்ள மிகப்பெரிய தீவு எது?

          கியூபா -Cuba

02.இந்தியாவின் முதல் இரத்த வங்கி எங்கு தொடங்கப்பட்டது?

 கொல்கத்தா-மேற்கு வங்காளம்

Kolkatta- west  Bengal

English words :

Adverse - unfavorable. பாதகமான. எதிரான.

Anticipate -to expect something to happen, hope for something 

ஒன்றை எதிர்பார்த்து நம்பிக்கையோடு இருத்தல்

தமிழ் இலக்கணம்: 

 என்ன? யாவை? என்ற வினாச் சொற்களை எங்கு உபயோகிக்க  வேண்டும்?
வினா கேட்கும் போது செயல் ஒருமையாக இருந்தால் என்ன என்பதை பயன்படுத்த வேண்டும்? செயல் பன்மையாக இருந்தால் யாவை என்பதை பயன்படுத்த வேண்டும்.
எ. கா 
காற்று மாசுபாட்டிற்கு *காரணங்கள்* என்ன? இது தவறு
காரணங்கள் என்று பன்மையில் வருவதால் 
காற்று மாசுபாட்டிற்கு *காரணங்கள்* யாவை ? என்று வர வேண்டும் 
காற்று மாசுபாட்டிற்கு *காரணம்* யாவை? என்று வரக்கூடாது.
காரணம் என்பது ஒருமைச் செயல் எனவே 
காற்று மாசுபாட்டிற்கு காரணம் என்ன என்று வர வேண்டும்?

அறிவியல் களஞ்சியம் :

குடியிருப்புப் பகுதிகளிலிருந்து 25 மைல் தொலைவில் உள்ள இந்த இடம், உலகத்துடனான தொடர்பை துண்டிக்கிறது. தொலைக்காட்சி, வானொலி, ஷார்ட்வேவ் மற்றும் செயற்கைக்கோள் சமிக்ஞைகள் இங்கு அடைவதில்லை.

பிப்ரவரி 03

யோகான்னசு கூட்டன்பர்கு அவர்களின் நினைவுநாள்

யோகான்னசு கூட்டன்பர்கு (Johannes Gensfleisch zur Laden zum Gutenberg;1398 – பிப்ரவரி 3, 1468) ஓர் இடாய்ச்சுலாந்திய (செருமானியக்) கொல்லர், பொற்கொல்லர், அச்சுப்பதிவாளர் மற்றும் பதிப்பாளர் ஆவார். ஐரோப்பாவில் முதன்முதலில் அச்சு இயந்திரத்தைக் கண்டறிந்தவர். இவருடைய இயங்கும் அச்சு இயந்திரமானது நவீன அச்சுக்கலையில் புரட்சிகரமான மாற்றத்திற்கு வித்திட்டது. 


ஹென்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை அவர்களின் நினைவுநாள்


கிறித்துவக் கம்பர் ஹென்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை (எச். ஏ. கிருஷ்ணபிள்ளை, ஏப்ரல் 23, 1827 - பெப்ரவரி 3, 1900) என்பவர் ஒரு கிருத்தவ தமிழறிஞர், புலவர், ஆசிரியிர் ஆவார். ஹென்றி ஆல்பிரடு என்ற பெயர்களின் சுருக்கமே எச்.ஏ.ஆகும். தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய இவரது படைப்புகள் போற்றித் திருவருகல், இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய மனோகரம் ஆகியவை. 

நீதிக்கதை

எதிர்காலம்

ஒரு நாள் முல்லா தெருவழியே நடந்து போய்க் கொண்டிருந்தார். ஒரு குடிசை வாசலை, அவர் கடந்து சென்ற சமயம் குடிசைக்குள் ஏதோ சத்தம் கேட்கவே உள்ளே சென்றார். அந்தக் குடிசையில் ஒரு ஏழை விதவைப் பெண் வசித்து வந்தாள். துணிகளை தைத்துக் கொடுத்து அவள் கஷ்ட ஜீவனம் நடத்திக் கொண்டிருந்தாள். அவளுக்கு பத்து வயதில் ஒரு மகன் இருந்தான். 

அந்தக் குடும்பத்தைப் பற்றி முல்லாவுக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் மீது அவருக்கு அனுதாபமும் உண்டு. வீட்டுக்குள் தாயும், மகனும் எதோ சச்சரவில் ஈடுபட்டிருந்தனர். இங்கே என்ன நடக்கிறது? என்று முல்லா வினவினார். முல்லா அவர்களே இவனைப் பாருங்கள் ஒழுங்காக பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று அடம்பிடிக்கிறான், அறிவுரை கூறிப் பார்த்தேன், அடித்து மிரட்டிப் பார்த்தேன், ஒன்றுக்கும் மசியமாட்டேன் என்கிறான் என்றாள் தாய் வேதனையோடு. 

குழந்தாய் நீ பள்ளிக்கூடம் போக வேண்டியது அவசியமில்லையா? அது உன் எதிர்காலத்துக்கு நல்லதில்லையா? என்று முல்லா சிறுவனுக்கு புத்திமதி கூறினார். பையன் கேட்பதாக இல்லை. நான் பள்ளிக்கூடம் போகப்போவதே இல்லை என்று அடம்பிடித்தான். முல்லா சுற்றும்முற்றும் பார்த்தார். தைப்பதற்காக அந்தப் பையனின் தாய் வைத்திருந்த விலை உயர்ந்த துணி ஒன்று அவர் கண்களில் பட்டது. அதை எடுத்து முல்லா துண்டு துண்டாகக் கிழித்துப் போட்டு விட்டார். அதைக்கண்டு தாயும், மகனும் அதிர்ச்சியும் திகைப்பும் அடைந்தனர். 

அம்மா, முல்லா விலை உயரந்த துணியைக் கிழித்துப் பாழாக்கி விட்டரே? என்று திகைப்போடு கேட்டான் பையன். பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று உன் எதிர்கால வாழ்க்கையையே பாழாக்கிக் கொள்கிறாயே, அதைவிட இந்த விலை உயரந்த துணி பாழானது பெரிய விஷயமா என்றார் முல்லா. இந்தச் சொற்கள் அவன் மனத்தில் பெரிய மாறுதலை உண்டாக்கிற்று. உடனே புத்தகங்களை எடுத்துக் கொண்டு பள்ளிக்குப் புறப்பாட்டான். அவன் சென்றபிறகு, முல்லா தாம் கிழித்த துணியின் மதிப்புக்கேற்ற விலையைக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டார். 

இன்றைய செய்திகள்

03.02.2026

⭐பயணங்கள் என்பது புத்தகமில்லா வகுப்பறை - சுற்றுலா உச்சி மாநாட்டில் முதலமைச்சர் பேச்சு.
கடந்த 5 ஆண்டுகளில் சுற்றுலாத்துறைக்கு ரூ.612 கோடியை தமிழ்நாடு அரசு ஒதுக்கி உள்ளது.

⭐ இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு & உளவு அமைப்பான 'இண்டெலிஜென்ஸ் பீரோ' அமைப்பிற்கு ரூ.6,782.43 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

⭐ஒப்பந்தம் ஏற்படாவிட்டால் ஈரான் மீது ராணுவ தாக்குதல் நடத்துவோம்- டிரம்ப் 

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀இந்தியா மற்றும் இலங்கையில் எதிர்வரும் பிப்.7 முதல் மார்ச் 8-ம் தேதி வரையில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது.

Today's Headlines

⭐ Chief Minister quote *travel is a classroom without books* at  the center of Tourism Summit. Also Tamilnadu government has allocated Rs. 612 crore for the department of tourism  in the last 5 years.

⭐ The central government has allocated Rs. 6,782.43 crore for the 'Intelligence Bureau' that is India's internal security & spy agency. 

⭐US president Trump said 
they will launch a military attack on Iran if there is no agreement .

 *SPORTS NEWS* 

🏀The T- 20 World Cup will be held in India and Sri Lanka from February 7 to March 8.

Covai women ICT_போதிமரம்

Sunday, February 1, 2026

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 02.02.26

சதுப்பு நில நாள்



 






திருக்குறள்: 

"குறள் 1002:

பொருளானாம் எல்லாமென்றீயா திவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு

விளக்க உரை:

பொருளால் எல்லாம் ஆகும் என்று பிறர்க்கு ஒன்றும் கொடுக்காமல் இறுகப்பற்றிய மயக்கத்தால் சிறப்பில்லாத பிறவி உண்டாம்."

பழமொழி :

A thief knows a thief.

பாம்பின் கால் பாம்பறியும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. பணத்தை விட அறிவே உயர்ந்தது

2. எனவே அறிவைப் பெருக்க அனைத்தும் படிப்போம்.

பொன்மொழி : 

கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி உனக்கு  தானாகவே வந்து சேரும்.

            -  விவேகானந்தர்

பொது அறிவு : 

01.""தென் அமெரிக்காவின் சுவிட்சர்லாந்து"" (Switzerland of South America) என்று அழைக்கப்படும் நாடு எது?

        உருகுவே  -  Uruguay

02.உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான வெப்ப நீரூற்றுகள் (hot springs) உள்ள நாடு 

எது? 

              ஜப்பான்-Japan

English words :

Greed - பேராசை

slander - அவதூறு

தமிழ் இலக்கணம்: 

 தேனீர் தேநீர் எது சரி? பிரித்து பார்க்கும் போது நமக்கு சரியான விடை கிடைத்து விடும். 
தேனீர் பிரித்தால் தேன்+ நீர் =  என்று வரும். தேன் நீர் என்பதின் பொருள் தேன் கலந்த நீர்.
தேநீர் இப்போது இதை பிரித்து பார்ப்போம். தேநீர் = தே+ நீர்
தே என்பதற்கு இறைவன், இனிமை, தேயிலை என்று மூன்று வகைப் பொருள் தரும். 
எனவே நமக்கு தேநீர் என்பது தான் சரியான வார்த்தை என்பது புரிந்து விட்டது.

அறிவியல் களஞ்சியம் :

உலகின் மர்ம பகுதிகளில் ஒன்றான மெக்சிகோவில் 'மௌன மண்டலம்' உள்ளது. இங்கு சென்றால் மின்னணு கருவிகள் எதுவுமே வேலை செய்யாது. வானொலி சமிக்ஞைகளும் கிடைக்காது. இப்படி எதுவுமே கிடைக்காத பகுதியாக உள்ள இந்த இடத்தில் மர்மங்களை அவிழ்க்க பல ஆண்டுகளாக ஆய்வாளர்கள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இன்று வரை விடை கிடைத்தபாடில்லை.

பிப்ரவரி 02

உலக சதுப்பு நில நாள் 

உலக சதுப்பு நில நாள் (World Wetlands Day) என்பது சதுப்பு நிலங்களின் முக்கியத்துவத்தினை மக்கள் அறிந்து கொள்ள கொண்டாடப்படும் நாளாகும். உலகில் உவர்நீர் நிறைந்த கடலுக்கும், நிலங்களுக்கும் இடையில் குறைந்த ஆழத்தில் ஆண்டு முழுவதும் நீர் தேங்கி இருக்கும் பகுதியாக சதுப்பு நிலங்கள் உருவாகின. பூமியின் மொத்தப் பரப்பில் 6 சதவீத பகுதி சதுப்பு நிலங்களாக உள்ளன. இவை பெரும்பாலும் இயற்கையாக உருவானவை, மனிதனால் உருவாக்கப்பட்டவை என இரண்டு பிரிவாக வகைப்படுத்தப்படுகின்றன.
அலையாத்திக் காடுகள், குட்டைகள் உள்ளிட்டவை இயற்கையாக உருவானவை என்றும், ஏரிகள், குளங்கள், நீர்தேங்கும் குவாரிப்பள்ளங்கள் ஆகியவை மனிதனால் உருவாக்கப்பட்டவை என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.

நீதிக்கதை

 நன்றி கொன்ற ஓநாய்

ஒரு நாள் அடர்ந்த காட்டில் ஓநாய் வாழ்ந்து வந்தது. அதற்கு வசமான மாமிச வேட்டை கிடைத்தது. ஆவலுடன் வேக வேகமாக இரையைத் தின்றது. அப்போது அதன் தொண்டையில் ஒரு எலும்பு சிக்கிக் கொண்டது. வலி பொறுக்க முடியாமல் ஊளையிட்டுக் கொண்டே அங்கும் இங்கும் ஓடியது. அப்போது ஒரு கொக்கு எதிரே வந்தது. அதனிடம் சென்ற ஓநாய் தனது தொண்டையில் மாட்டிக்கொண்ட எலும்பை எடுத்தால் தன்னிடம் உள்ள ஏராளமான பொன்னையும் பொருளையும் தருவதாக ஆசை வார்த்தை கூறி, உதவும்படி மிகவும் கெஞ்சியது. 

ஓநாயின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கிய கொக்கு உதவ முன் வந்தது. தனது நீண்ட அலகை ஓநாயின் வாய்க்குள் விட்டு எலும்பை எடுத்தது. சொன்னபடி பரிசு தரும்படி கொக்கு கேட்டது. பரிசா! உனக்கு... நான் தருவதா? என்று ஏளனமாகச் சிரித்தது ஓநாய். மேலும் உன் கழுத்தைக் கடித்துக் கொல்லாமல் உயிருடன் உன்னை விடுவதே பெரிது. மரியாதையாக இந்த இடத்தை விட்டு ஓடி விடு என்று விரட்டியடித்தது. நன்றியில்லாத ஓநாய்க்கு உதவியது பாவம் என்று எண்ணிக்கொண்டே கொக்கு தன் வழியே சென்றது. 

நீதி :

ஆபத்தில் உதவியவனை அலட்சியப் படுத்தக்கூடாது.

இன்றைய செய்திகள்

02.02.2026

⭐திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் நெடுஞ்சாலை எனப் பெயர் சூட்டப்படும் -மு.க.ஸ்டாலின்

⭐கேரளாவில் அரசு & அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியல் இளநிலைப் படிப்புகளை பயிலும் மாணவர்களுக்கு இனி கல்விக் கட்டணம் இல்லை என கேரள மாநில அரசு அறிவித்துள்ளது.

⭐காங்கோ நாட்டில் உள்ள தங்க சுரங்கத்தில் மண் சரிந்து விழுந்து 200 பேர் உயிரிழந்துள்ளனர்.

⭐'பிராந்திய போர் வெடிக்கும்' அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்!

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச்சை வீழ்த்தி அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
இளம்வயதில் 7 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை கார்லோஸ் அல்காரஸ் வென்று சாதனை.

🏀இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி திருவனந்தபுரத்தில் நடந்த்து.46 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா டி20 தொடரை 4-1 என கைப்பற்றியது.

Today's Headlines

⭐M.K. Stalin has announced that the Thiruvottriyur Highway will be named as Vallalar Highway.

⭐The Kerala state government has announced that there will no longer be any tuition fees for students pursuing undergraduate courses in Arts and Science in government and government-aided colleges in Kerala.

⭐ 200 workers died in the Congo gold mine due to the sand slide 

⭐ Iran  warned  US that there will be regional war.

 *SPORTS NEWS*

🏀Australian Open Tennis: Alcaraz beats Djokovic to win championship. Carlos Alcaraz wins 7 Grand Slam titles at a young age.

.🏀The 5th and final T20 match between India and New Zealand was played in Thiruvananthapuram. India won the T20 series 4-1. by 46 runs

Covai women ICT_போதிமரம்