Sunday, September 14, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.09.2025








திருக்குறள்: 

குறள் 545: 

இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட 
பெயலும் விளையுளுந் தொக்கு. 

விளக்க உரை: 

நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படுவனவாகும்.

பழமொழி :

Learning is a treasure that follows its owner everywhere. 

கற்றல் என்பது எங்கு சென்றாலும் உரிமையாளருடன் செல்லும் பொக்கிஷம்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.அமைதி நம் அறிவை வளர்ப்பது மட்டும் அல்லாது நாம் ஆழ்ந்து சிந்திக்கவும் தூண்டுவது.]


2. எனவே தேவையில்லாத பேச்சைக் குறைத்து அமைதி காக்க முயல்வேன்.

பொன்மொழி :

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் . இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் - அறிஞர் அண்ணா

பொது அறிவு : 

01.சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் யார்? 

         சர் ஐசக் பிட்மேன் 

Sir  Isaac pitman

02. இந்தியாவின் முதல் முதலில் கப்பல் கட்டும் தொழிற்சாலை எங்கு அமைக்கப்பட்டது?

            விசாகப்பட்டினம்

Vishakhapattanam 

English words :

shut down - turn off, close.பணிநிறுத்தம், மூடல், அல்லது இயக்க நிறுத்தம்.

Grammar Tips: 

"i before the letter e except before c"
ie makes e sound in words like
Ex: Thief, believe, Chief
But in words like receive, deceive, ceiling, receipt the same'e' sound but 'ie' becomes 'ei'
Reason 
Whenever there is 'c' we have to write 'ei' only

அறிவியல் களஞ்சியம் :

 பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த மரபுசாரா எரிபொருள் உற்பத்தி நிறுவனமான 'இகோட்ரிசிட்டி,' சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத 'ஈகோஜெட்' விமானத்தை இயக்க திட்டமிட்டுள்ளது. ஹைட்ரஜன் வாயுவிலிருந்து மின்சாரம் தயாரித்து இதை இயக்க உள்ளனர். 2025ம் ஆண்டு இது பயன்பாட்டுக்கு வரும். விமானத்தின் உள்ளேயும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத உணவு, தொழிலாளர் உடைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்பது கூடுதல் சிறப்பு.

செப்டம்பர் 15

அனைத்துலக சனநாயக நாள் 

அனைத்துலக சனநாயக நாள் செப்டெம்பர் 15 அன்று அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. நவம்பர் 8, 2007 இல் நடந்த ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்சபைக் கூட்டத்தில் இது பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

சனநாயகத்தினை ஊக்குவிக்கும் முகமாகவும் அபிவிருத்தி செய்யவும், மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரம் போன்றவற்றிற்குரிய கௌரவத்தை கொடுக்கும் முகமாக ஐநா இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இப்பொதுத் தீர்மானத்தை 192 உறுப்பு நாடுகள் அனுமதித்துள்ளன.

நீதிக்கதை

 கிடைத்ததில் சம பங்கு

ஒருநாள் கிருஷ்ணதேவர் அரண்மனையில் கிருஷ்ண லீலா நாடக நாட்டியம் நடைபெற ஏற்பாடு செய்திருந்தார். தெனாலிராமனைத் தவிர மற்ற எல்லா முக்கியப்பிரமுகர்களும் வந்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் அரசியும் மற்றும் சில பெண்களும் கலந்து கொள்வதால், தெனாலிராமன் இருந்தால் நிகழ்ச்சி நடைபெறாமல் போய்விடுமோ, என எண்ணி தெனாலிராமனை மட்டும் உள்ளே விட வேண்டாமென்று வாயிற்காவலளியிடம் கண்டிப்புடன் சொல்லிவிட்டார். 

ஆனால் தெனாலிராமன் எப்படியாவது உள்ளே சென்று விடவேண்டும். என தீர்மானித்துக் கொண்டான். உள்ளே செல்ல முற்பட்ட தெனாலிராமனை, வாயிற்காவலளி தடுத்து நிறுத்தி விட்டான். இந்நிலையில் தெனாலிராமன் ஐயா, என்னை உள்ளே செல்ல அனுமதித்தால் என் திறமையால் ஏராளமான பரிசு கிடைக்கும். அதில் பாதியை உனக்குத் தருகிறேன் என்றான். இதைக் காவலாளி முதலில் சம்மதிக்காவிட்டாலும், பிறகு சம்மதித்துவிட்டான். இதைப் போல் இன்னொரு வாயிற் காப்போனும் சம்மதித்துவிட்டான். 

பிறகு தெனாலிராமன் ஒருவருக்கும் தெரியாமல் உள்ளே சென்று ஓர் மூலையில் அமர்ந்து கொண்டான். அப்போது கிருஷ்ணன் வெண்ணை திருடி கோபிகைகளிடம் அடி வாங்கும் காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. 

உடனே தெனாலிராமன் பெண் வேடம் அணிந்து மேடையில் தோன்றி கிருஷ்ணன் வேடம் அணிந்தவனை கொம்பால் அடித்தான். இதைப்பார்த்த மன்னர் பெண் வேடமிட்டுள்ள தெனாலிராமனை ஏன் இவ்வாறு செய்தாய் என்றார். 

அதற்குத் தெனாலிராமன் கிருஷ்ணன் கோபிகைகளிடம் எத்தனையோ மத்தடி பட்டிருக்கிறான் இப்படியா இவன் போல் அவன் அலறினான் என்றான். இதைக் கேட்ட மன்னர், தெனாலிராமன் மீது கடும்கோபம் கொண்டு 30 கசையடி தருமாறு உத்தரவிட்டார். 

இதைக் கேட்ட தெனாலிராமன் அரசே இப்பரிசை எனக்கு தர வேண்டாம். எனக்குக் தர வேண்டியப் பரிசை ஆளுக்குப் பாதியாக, தருகிறேன், என்று நம் இரண்டு வயிற்காப்போன்களிடம் வாக்கு கொடுத்துவிட்டேன் என்றான். 

அதனால் இந்த பரிசை, அவர்கள் இருவருக்கும் சமமாக பங்கிட்டுத் தாருங்கள் என்றான். உடனே மன்னர் அவ்விருவரையும் அழைத்து இது குறித்து விசாரித்தார். அவ்விருவரும் உண்மையை ஒத்துக் கொண்டாதால் அவர்கள் இருவருக்கும் தலா 15 கசையடி தருமாறு உத்தரவிட்டார். மேலும் தெனாலிராமனின் தந்திரத்தை பாராட்டி அவருக்கு பரிசு வழங்கினார்.

இன்றைய செய்திகள்

15.09.2025


⭐22-ந்தேதி முதல் அமல்..!-கடைகளில் ஜி.எஸ்.டி. வரி குறைப்பு பட்டியல் வைக்க வேண்டும் என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

⭐அசாமில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. நில அதிர்வால் மக்கள் அச்சம்

⭐நேபாளத்தில் இடைக்கால பிரதமராக அந்நாட்டு உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி (73) பதவியேற்றார்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா தங்கம் வென்றார்.

🏀 துபாயில் நடக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

Today's Headlines

⭐Implementation from 22nd GST reduction list should be kept in shops, said minister Nirmala Sitharaman. 

⭐ 5.8 magnitude earthquake in Assam.,so that  people were get  fear due to earthquake.

⭐ Former Chief Justice of the country's Supreme Court, Sushila Karki (73), was sworn in as the interim Prime Minister of Nepal.

 *SPORTS NEWS*

🏀World Boxing Championship: Indian athlete Jasmine Lamboria won gold. 

🏀 India and Pakistan will clash in the 6th league match in Dubai.

Covai women ICT_போதிமரம்

Thursday, September 11, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.09.2025

ஜெசி ஓவென்ஸ்

      






திருக்குறள்: 

குறள் 542: 

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் 
கோனோக்கி வாழுங் குடி.     

  விளக்க உரை: 

உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.

பழமொழி :

Knowledge is a light that never fades. 

அறிவு என்னும் ஒளி ஒருபோதும் மங்காது.

இரண்டொழுக்க பண்புகள் :

1 என்னால் இயன்ற அளவு மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பேன்.

2 இயற்கை சமநிலை காப்பேன்.

பொன்மொழி :

மூடனை நூறடி அடிப்பதைப்பார்க்கிலும்;, புத்திமானை வாயினால் கண்டிப்பதே அதிகமாய் உறைக்கும். 

  – சாலமோன் ஞானி

பொது அறிவு : 

01.அரசியல் தத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

          பிளேட்டோ -  Plato

02. தேசிய இளைஞர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? 

         ஜனவரி 12 -January 12

English words :

show off- boast, தன் பெருமையை மற்றவர்களுக்கு காட்டிக் கொள்ளுதல்

Grammar Tips: 

 Modal verbs contd
The nine most common modal verbs are can, could, may, might, shall, should, will, would, and must. They are followed by a base form of another verb.

Ex: can play, shall wait, might have slept, should take, will come, would open, may eat, can look, must follow

அறிவியல் களஞ்சியம் :

 மழைக்காலங்களில் இடி, மின்னலால் சில நேரங்களில் உயிரிழப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் இதை தடுப்பதற்கு இடிதாங்கியை கண்டுபிடித்தவர் அமெரிக்காவின் பெஞ்சமின் பிராங்ளின். உயரமான கட்டடங்களின் உச்சியில், கூர்முனை உள்ள ஒரு தடித்த கம்பி பொருத்தப்படுகிறது. அதுதான் இடிதாங்கி. அந்தக் கம்பி பூமி வரை இழுக்கப்பட்டு பூமியினுள் புதைக்கப்படும். இதற்கு எர்த்திங் என பெயர். இப்படி செய்வதன் மூலம் கட்டடத்தின் மேல் இடி, மின்னல் விழும்போது அதிலுள்ள மின்சாரம், இடிதாங்கி மூலம் பூமிக்கு அனுப்பப்படுகிறது. இதனால் கட்டடம் பாதிப்பது தடுக்கப்படுகிறது.

செப்டம்பர் 12

ஜெசி ஓவென்ஸ் அவர்களின் பிறந்தநாள்


ஜேம்ஸ் கிளீவ்லன்ட் "ஜெசி" ஓவென்ஸ் (James Cleveland "Jesse" Owens, செப்டம்பர் 121913-மார்ச் 311980) ஓர் அமெரிக்க தடகள ஆட்டக்காரர் ஆவார். 1936 பெர்லின் ஒலிம்பிக்கில், ஹிட்லர் உயர்த்திப் பிடித்த 'ஆர்ய மேன்மை’ சித்தாந்தத்தை உடைத்தெறிந்ததில் ஜெஸ்ஸி ஓவன்ஸ் பங்கு முக்கியமானது. அந்த ஒலிம்பிக்கில் 100 மீ, 200 மீ, 4*100 தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதலில் தங்கம் வென்று, ஹிட்லரை திகைக்க வைத்தார். ஒரே ஒலிம்பிக் போட்டியில் நான்கு தங்கப்பதக்கங்களை வென்ற முதல் அமெரிக்கர் என்ற பெருமையும் அவருக்கு கிட்டியது.

நீதிக்கதை

 அதிசயக்குதிரை


கிருஷ்ண தேவராயரின் படைகளுள் குதிரைப் படையும் ஒன்று. குதிரைப்படையும் வலிமையுள்ளதாக இருந்தது சண்டை இல்லாத காலங்களில் குதிரைகளைப் பராமரிக்க மந்திரிகளில் ஒருவர் ஒரு யோசனை சொன்னர். 

அதாவது ஒரு வீட்டிற்கு ஒரு குதிரையையும் அதற்குத் தீனி போடுவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையும் கொடுக்கப்பட்டு வந்தது. அத்தொகையைப் பெற்றுக்கொண்டு குதிரையை நன்கு ஊட்டமளித்து வளர்த்தனர். 

அதே போல் தெனாலிராமனுக்கும் ஒரு குதிரை கொடுக்கப்பட்டது. ஆனால் தெனாலிராமனோ ஒரு சிறிய கொட்டகையில் குதிரையை அடைத்து வைத்து புல் போடுவதற்கு மட்டுமே ஒரு சிறிய தூவாரம் வைத்திருந்தான். அந்த துவாரத்தின் வழியாக புல்லை. நீட்டியவுடன் குதிரை வெடுக்கென வாயால் கௌவிக் கொள்ளும் மிகவும் சிறிதளவு புல் மட்டுமே தினமும் போட்டு வந்தான். அதனால் அக்குதிரை எலும்பும் தோலுமாக நோஞ்சாணாக இருந்தது. 

குதிரைக்குத் தீனி வாங்கிப் போடும் பணத்தில் தெனாலிராமன் நன்கு உண்டு கொழுத்தான். 

ஒரு நாள் குதிரைகள் எப்படி இருக்கின்றன என்று காண அனைவருக்கும் செய்தி அனுப்பி குதிரைகளை அரண்மனைக்கு அழைத்து வர உத்தரவிட்டார் மன்னர். அதன்படி குதிரைகள் அனைத்தும் அரண்மனைக்குக் கொண்டு வரப்பட்டன மன்னர் குதிரைகளைப் பார்வையிட்டார். குதிரைகள் அனைத்தும் மிக திருப்திகரமாக இருந்ததால் மன்னர் மகிழ்ச்சியடைந்தார். 

அங்கிருந்த தெனாலிராமனை அழைத்து உன் குதிரையை ஏன் கொண்டு வரவில்லை என மன்னர் கேட்டார். அதற்கு தெனாலிராமனோ என் குதிரை மிகவும் முரட்டுத்தனமாக இருக்கிறது. அதை என்னால் அடக்க முடியவில்லை. அதனால் தான் இங்கே கொண்டு வர வில்லை என்றான். குதிரைப்படைத் தலைவரை என்னுடன் அனுப்புங்கள். அவரிடம் கொடுத்தனுப்புகிறேன் என்றான் இதை உண்மையென்று நம்பிய மன்னர் குதிரைப்படைத் தலைவனை தெனாலிராமனுடன் அனுப்பினார். 

குதிரைப்படைத் தலைவருக்கு நீண்ட தாடியுண்டு. குதிரைப் படைத்தலைவரும் அந்த துவாரத்தின் வழியாக குதிரையை எட்டிப் பார்த்தார். உடனே குதிரை அது புல்தான் என்று நினைத்து அவரது தாடியைக் கவ்விப் பிடித்துக் கொண்டது. வலி பொறுக்கமாட்டாத குதிரைப் படைத்தலைவர் எவ்வளவோ முயன்றும் தாடியை குதிரையிடமிருந்து விடுவிக்க முடியவில்லை. இச்செய்தி மன்னருக்கு எட்டியது. மன்னரும் உண்மையிலேயே இது முரட்டுக் குதிரையாகத்தான் இருக்கும் என்று எண்ணி தெனாலிராமன் வீட்டுக்கு விரைந்தார். 

அங்கு குதிரையின் வாயில் குதிரைப்படைத் தலைவரின் தாடி சிக்கி இருப்பதை அறிந்து அந்தக் கொட்டகையைப் பிரிக்கச் செய்தார். பின் குதிரையைப் பார்த்தால் குதிரை எலும்பும், தோலுமாக நிற்பதற்குக் கூட சக்தியற்று இருந்ததைக் கண்டு மன்னர் கோபங்கொண்டு அதன் காரணத்தைத் தெனாலிராமனிடம் கேட்டார். அதற்குத் தெனாலிராமன் இவ்வாறு சக்தியற்று இருக்கும் போதே குதிரைப் படைத்தலைவரின் தாடியை கவ்விக்கொண்டு விடமாட்டேன் என்கிறது. நன்கு உணவு ஊட்டி வளர்த்திருந்தால் குதிரைப்படைத் தலைவரின் கதி அதோகதிதான் ஆகி இருக்கும் என்றான். 

இதைக் கேட்ட மன்னன் கோபத்திலும் சிரித்து விட்டார். பின்னர் தெனாலிராமனை மன்னித்து விட்டார்.

இன்றைய செய்திகள்

12.09.2025


⭐TET-ல் கட்டாய தேர்ச்சி: உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு-  அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு.

⭐ஓசூரில் 2,000 ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையம்
அமைக்கப்படும்- முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

⭐இந்தியர்களை ராணுவத்தில் சேர்ப்பதை ரஷியா உடனடியாக நிறுத்த வேண்டும் - இந்தியா வலியுறுத்தல்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀உலக கோப்பைக்கான அனைத்து நடுவர்களும் பெண்களாக செயலாற்றுவது கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறை என ஐசிசி அறிவிப்பு

🏀இந்திய அணி 4.3 ஓவர்களில் 60 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆட்டநாயகானக குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.

Today's Headlines

⭐Tamil Nadu government decides to file a review petition against the Supreme Court verdict regarding compulsory TET,  Minister Anbil Mahesh announced. 

⭐International airport to be set up on 2,000 acres in Hosur- Chief Minister M.K. Stalin announced.

⭐Russia should immediately stop recruiting Indians into its army - India insists.

 *SPORTS NEWS* 

🏀All umpires for the World Cup will be women: ICC announces for the first time in cricket history.

🏀India scored 60 runs in 4.3 overs and won by 9 wickets. Kuldeep Yadav was selected as the man of the match in this match.

Covai women ICT_போதிமரம்

Wednesday, September 10, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.09.2025

மகாகவி பாரதி







திருக்குறள்: 

குறள் 541: 

ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும் 
தேர்ந்துசெய் வஃதே முறை. 

விளக்க உரை: 

யாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம் செய்யாமல் நடுவுநிலைமைப் பொருந்தி (செய்யத்தக்கதை) ஆராய்ந்து செய்வதே நீதிமுறையாகும்.

பழமொழி :

Hope is the anchor of the soul. 

நம்பிக்கையை ஆன்மாவின் நங்கூரம்.

இரண்டொழுக்க பண்புகள் :

1 என்னால் இயன்ற அளவு மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பேன்.

2 இயற்கை சமநிலை காப்பேன்.

பொன்மொழி :

தொல்லைகளும்,பிரச்சனைகளும் இல்லை என்றால் உழைப்பும் வெற்றியும் நம்மை நெருங்காது...

டாக்டர். கலாம்

பொது அறிவு : 

01.எந்த ஆண்டு சென்னை மாகாணம் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது?

1969

02. பாலைவனம் இல்லாத கண்டம் எது?

ஐரோப்பா- Europe

English words :

set up - arrange, establish,அமைத்தல், நிறுவுதல், அல்லது கட்டமைப்பு

Grammar Tips: 

A modal verb is an auxiliary (or "helping") verb that adds meaning to another verb in a sentence

Ex: I CAN play.

Here can and play both are verbs. Can is the modal verb.

 After a modal verb, the main verb stays in the basic form; it does not change with subject or time.

அறிவியல் களஞ்சியம் :

 வெப்பநிலை உயர்வால் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. மனிதர்களின் நடவடிக்கையால் 2050க்குள் இது இரண்டு மடங்காக அதிகரிக்கும் என ஆய்வு எச்சரித்துள்ளது. 90 சதவீத உலக வர்த்தகம் கடல் வழியாகவே நடைபெறுகிறது. கடலில் மீன்வளம் குறைவு, கடல் மட்ட உயர்வு, அமிலமயமாக்கல், மாசுபாடு குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். இதில் குறையும் பவளப்பாறைகள், நன்னீர் - கடல் நீர் சமநிலையின்மை, இனப்பெருக்க இடங்களின் இழப்பு, அழியும் சதுப்புநிலங்கள் ஆகிய பாதிப்பால் கடல்வாழ் உயிரினங்களுக்கு அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.

செப்டம்பர் 11

மகாகவி பாரதியின் நினைவுநாள்

சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர்.

பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.தமிழ்தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, கலைமகள் எனப் பாெருள்படும் பாரதி என்ற பட்டம் வழங்கினார்.பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949-ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமை ஆக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும். இவரை சிந்துக்குத் தந்தைசெந்தமிழ்த் தேனீபுதிய அறம் பாட வந்த அறிஞர்மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன் இவரைப் புகழ்ந்துள்ளார். இவர் இந்தியாவிஜயா முதலான இதழ்களை நடத்தி, விடுதலைப் போருக்கு வித்திட்டவர்.

உலக வர்த்தக மையம் தாக்குதல் 

2001 – செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள்நியூயார்க் நகரின் உலக வர்த்தக மையம் மற்றும் பெண்டகன் மீது அல் காயிதா தீவிரவாதிகளினால் நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் மொத்தம் 2,974 பேர் கொல்லப்பட்டனர்

நீதிக்கதை

 ஜெகனின் புதுசட்டை

பிரபு என்பவன் ஆறாம் வகுப்பு படித்து வந்தான். அவனுக்கு கொஞ்சம் முரட்டு சுபாவம். கோபம் அதிகம் உள்ளவன். யாராவது ஒருவரிடம் வம்பு செய்துகொண்டே இருப்பான். அவன் ஆசிரியர் ரவி. பிரபுவை பெஞ்சின் மீது ஏறி நிற்கச் சொன்னார். பிரபு முணுமுணுத்துக் கொண்டே நின்றான். 

ஜெகன் என்பவன் கிளாஸ் லீடர். அவன்தான் என்னைப் பற்றி ஆசிரியரிடம் சொல்லியிருப்பான் என்று அவன்மீது கோபமாக இருந்தான். 

பள்ளிக் கூடம் விட்டதும் வெளியே வந்த ஜெகனிடம் டேய் வாத்தியார் கிட்ட என்னைப்பத்தி என்னா சொன்ன என்று கோபமாய் கேட்டு அவன் சட்டையைப் பிடித்து ஓங்கி அவன் முகத்தில் ஒரு குத்து விட்டான். ஜெகன் கீழே விழுந்தான். மீண்டும் அவனைத் தாக்க முயன்றான். 

ஜெகனின் எண்ணம் எல்லாம் கிழிந்து போன தனது ஒரே சட்டையைப் பற்றியே இருந்தது. ஜெகன் செத்துப்போன தனது அப்பாவையும், கட்டிட வேலைக்குப் போய் சம்பாதித்து தன்னை படிக்க வைக்கும் தனது அம்மாவையும் நினைத்தான். 

ஜெகன் வெற்று உடம்போடு புத்தகமும் கையுமாய் நடந்து போனது பிரபு மனசுக்கு என்னவோ போல் இருந்தது. 

ஜெகன் ஒருவாரம் பள்ளிக்கு வரவே இல்லை. ஒரு சின்ன குடிசையில் ஜெகனும், அவன் அம்மாவும் வசித்து வந்தனர். அன்று மாலை பிரபு பள்ளியிலிருந்து வீட்டுக்கு செல்லும் வழியில் ஜெகன் கட்டிட வேலைக்கு செங்கல் துக்கி செல்வதைப் பார்த்தான். மெதுவாக அந்த இடத்திற்குச் சென்றான் பிரபு. 

என்னடா ராஜா பள்ளிக்கூடம் போகலையா..... ? வேலைக்கு வந்திட்டே... என்று அங்கு வேலை செய்யும் ஒருவர் கேட்டார். போட்டுக்கறதுக்கு சட்டை இல்லை. புதுசா எடுக்கணும். பணம் வேணும். என்றான் ஜெகன். 

ஓஹோ புது சட்டைய போட்டுக்கிட்டு அப்புறம் பள்ளிக்கூடம் போகப் போறீயா? என்று சிரித்தபடி போனார் அவர். இருந்த ஒரே சட்டையையும் நான் கிழித்து விட்டேன். அவன் எப்படி பள்ளிக்கு வருவான்? என்று மனதுக்குள் நினைத்தான் பிரபு. 

அவனது கோபம். அவனுக்கே பிடிக்காமல் போனது. பிரபு தனது பிறந்த நாளுக்காக அப்பா வாங்கி வைத்திருந்த சட்டையை எடுத்துக்கொண்டு ஜெகன் வீட்டிற்குச் சென்றான். 

உள்ள வாடா என்று அன்புடன் அவனை வரவேற்றான் ஜெகன். என் மீது உனக்கு கோபம் இல்லையா என்றான் பிரபு. வீட்டிற்கு வந்தவர்களிடம் யாராவது கோபப்படுவார்களா? என்றான் ஜெகன். 

கோபத்தில் நான் தவறு செய்துவிட்டேன். என்னை மன்னித்துவிடு என்று சொல்லி தனது பிறந்தநாள் சட்டையை அவனிடம் கொடுத்தான். 

எனக்கு புதுச்சட்டை ரெடியாகிவிட்டது. உன் அன்புக்கு நன்றி என்றான். பிரபு எவ்வளவோ வற்புறுத்தியும் ஜெகன் வாங்கவில்லை. அடுத்தநாள் புதுச்சட்டையுடன் பள்ளிக்கு வந்த ஜெகனை வைத்த கண் வாங்காமல் பார்த்தான் பிரபு. 

நீதி :
முட்டாள்தனமான கோபம் ஆபத்தானது.

இன்றைய செய்திகள்

11.09.2025

⭐கொலோன் பல்கலைக்கழகம் வழங்கிய பழங்கால ஓலைச்சுவடிகளை நூலகத்திற்கு வழங்கினார் மு.க.ஸ்டாலின்

⭐பள்ளி மற்றும் கல்லூரி கட்டணங்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.போட்டித் தேர்வு, நுழைவுத் தேர்வு பயிற்சி நிறுவன கட்டணங்களுக்கு 18% வரி விதிக்கப்பட்டுள்ளது.

⭐மியான்மரில் நடந்து வரும் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடிய 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். 14,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

🏀விளையாட்டுச் செய்திகள்

🏀2025 ஆசிய கோப்பை T20| தொடர்  இந்தியாவின் தொடக்க போட்டியாக, இந்திய அணியும் யூ.ஏ.இ அணியும் எதிர்கொள்கின்றன. 

🏀பெண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கி: சூப்பர் 4 சுற்றில் கொரியாவை 4-2 என வீழ்த்தியது இந்தியா

Today's Headlines

⭐M.K. Stalin presented ancient manuscripts donated by the University of Cologne to the library.

⭐School and college fees are exempted from GST. Competitive exam and entrance exam coaching institute fees are taxed at 18%.

⭐More than 2,000 people have died in Myanmar while protesting against the ongoing military rule, and 14,000 have been arrested.

 SPORTS NEWS 

🏀2025 Asia Cup T20| India will face the UAE in the opening match of the series.

 🏀Women's Asia Cup Hockey, India beat Korea 4-2 in the Super 4 round.


Covai women ICT_போதிமரம்

Tuesday, September 9, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.09.2025








திருக்குறள்: 

குறள் 535: 
முன்னுறக் காவா திழுக்கியான் தன்பிழை 
பின்னூ றிரங்கி விடும்.         

விளக்க உரை: 

வரும் இடையூறுகளை முன்னே அறிந்துக் காக்காமல் மறந்து சோர்ந்தவன், பின்பு அவை வந்துற்றபோது தன் பிழையை நினைத்து இரங்குவான்.

பழமொழி :

The river cuts rock not by the power, but by persistence.       

ஆறு கல்லை உடைப்பது வலிமையால் அல்ல, தொடர்ச்சியால் தான்.

இரண்டொழுக்க பண்புகள் :

1 என்னால் இயன்ற அளவு மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பேன்.

2 இயற்கை சமநிலை காப்பேன்.

பொன்மொழி :

அழகைப் பற்றி கனவு காணாதீர்கள், அது உங்கள் கடமையை பாழாக்கி விடும். உங்கள் கடமையைப் பற்றி கனவு காணுங்கள். அது ,உங்கள் வாழ்க்கையை அழகாக்கி விடும்- டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம்

பொது அறிவு : 

"01.திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து எது?

      

                         'ஒள'


02. இந்தியாவின் முதல் பெண் ரயில்வே அமைச்சர் யார்?


              மம்தா பானர்ஜி

Mamata  Banerjee

"

English words :

Set off - start a journey 

பயணம் தொடங்குதல்

Grammar Tips: 

 4 different spelling patterns  of F Sound
as in 
1. Friend, Fun and Fish - F Sound 
2. When the word has two ff's at the last as in Floss rule 
Puff, Cliff, Huff
3. In 'ph' as 
      Phone, Photo    Elephant, 

4. Right after au or ou as in Cough, Rough, Laugh, Enough 

F, FF, PH, GH these makes F sound

அறிவியல் களஞ்சியம் :

 உலகில் கடந்த 30 ஆண்டுகளில் சராசரி கடல் நீர்மட்டம் 2.5 செ.மீ., உயர்ந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ், சான்டிகோ உள்ளிட்ட கடலோர நகரங்கள், கடல் நீர்மட்ட உயர்வால் பாதிப்பை சந்திக்கும். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுவர் என 'நாசா' ஆய்வு எச்சரித்துள்ளது. 2015 - 2023ல் செயற்கைக்கோள் தரவுகளை ஆய்வு செய்ததில் இது கண்டறியப்பட்டது.

நீதிக்கதை

 இரண்டு தேவதைகள்!


நயாகரா நீர்வீழ்ச்சி தொடர்ந்து பாய்ந்து கொண்டிருந்தது. நீர்வீழ்ச்சியின் அழகை, இரண்டு தேவதைகள் ரசித்துக்கொண்டிருந்தனர். 

அப்போது, அனீலஸ் என்ற பறவை, அந்த நீர்வீழ்ச்சிக்கு வந்தது. தேவதைகள் இருவரும் அந்தப் பறவையைப் பார்த்து அனீலஸ் பறவை நீர்வீழ்ச்சியில் குளிக்க வந்துள்ளது, பன்னிரண்டு வருடத்திற்கு ஒருமுறை தான் நீராடும் என்று இரு தேவதைகள் பேசிக்கொண்டனர். 

அது நீராடுகிற காட்சியைப் பார்ப்பதற்கு யோகம் செய்தவர்களாக இருக்கிறோம், என்று பெருமைப்பட்டு கொண்டனர். 

அனீலஸ் பறவையோ, தன் அருகே இரண்டு தேவதைகள் இருப்பதைப் பார்த்து நீர்வீழ்ச்சியில் இன்பமாக குளித்தது. 

அந்த நேரத்தில், நீர்வீழ்ச்சியின் வேகம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. நீர் வேகமாகத்தை தாங்காமல் அனீலஸ் பறவை, தடுமாறியபடி நீரில் சிக்கிக்கொண்டது. அதைக் கண்ட தேவதைகள் இருவரும் பயந்தனர். 

அதில் ஒரு தேவதை, அனீலஸ் பறவை ஆபத்தில் சிக்கிவிட்டது. நான் சென்று உடனே காப்பாற்றுகிறேன்! என்றாள். உடனே மற்றொரு தேவதை, வேண்டாம். அனீலஸ்ஸை நானே சென்று காப்பாற்றுகிறேன். அந்த பாக்கியம் எனக்கே கிடைக்க வேண்டும் என்றாள். அதைக் கேட்ட மற்றொரு தேவதையோ, நானே அனீலஸ்ஸைக் காப்பாற்றப் போகிறேன். எக்காரணம் கொண்டும் உன்னை அனீலஸ்ஸைக் காப்பாற்றும்படி விட்டுக்கொடுக்க மாட்டேன்! என்று பிடிவாதமாகக் கூறியது. 

இப்படியே இரண்டு தேவதையும் வாக்குவாதம் செய்துகொண்டிருந்த நேரத்தில், கீச்... கீச்... என்ற கீச் குரல் கேட்டது. இரண்டு தேவதைகளும் திடுக்கிட்டு பார்த்தன. அவர்கள் பக்கத்தில் அனீலஸ் பறவை நின்று கொண்டிருந்தது. 

தேவதைகளே! உங்களுக்குள் சண்டை எதற்கு? நான் உயிர் பிழைத்து விட்டேன். நீங்கள் என்னைக் காப்பாற்றுவீர்கள் என்று நம்பிக் கொண்டிருந்தால், என் உயிரை இழந்திருப்பேன். நானே முயற்சி செய்து உயிர் பிழைத்து உங்கள் முன்னே நின்று கொண்டிருக்கிறேன்! என்றது. 

அதைக் கேட்ட இரண்டு தேவதைகளும், வெட்கத்தில் தலை குனிந்தனர். நமக்குள் போட்டியிட்டு தற்பெருமைப்பட்டுக் கொண்டோமே! இந்தப் பறவைக்கு இருக்கிற அறிவு கூட தேவதைகளான நமக்கு இல்லையே! என்று வருத்தப்பட்டனர். 

நீதி :

பிறரை நம்புவதை விட நாம் நம்மை நம்பினால் வாழ்க்கையில் முன்னேரலாம்.

இன்றைய செய்திகள்

10.09.2025

⭐ இந்தியக் குடியரசு துணைத் தலைவராக சி்.பி்.இராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

⭐ சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் செயல்படும் குடிநீர் ஆலைகளில் தர ஆய்வு மேற்கொள்ள உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

⭐தமிழ்நாட்டில் முதலீடு செய்ய 10 புதிய நிறுவனங்கள் விருப்பம்; ஓசூரில் விரைவில் முதலீட்டாளர்கள் மாநாடு என சென்னை திரும்பிய முதல்வர் அறிவிப்பு.

⭐நேபாள போராட்டம் எதிரொலியாக பிரதமர் சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பிரதமரை தொடர்ந்து ஜனாதிபதியும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

⭐சியாச்ச்சினில் பனிச்சரிவு: 3 ராணுவ வீரர்கள் மரணம்

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஆசிய கோப்பை அறிமுகம்: 
 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் அணிகள் இடம்பிடித்தன.
'பி' பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் அணிகள் இடம் பெற்றுள்ளன.

Today's Headlines

⭐ C.P. Radhakrishnan has been elected as the Vice President of the Republic of India.

⭐ The Food Safety Department has ordered a quality inspection of drinking water plants operating in major cities including Chennai.

⭐10 new companies are interested in investing in Tamil Nadu; The Chief Minister, who returned to Chennai, announced that an investors' conference will be held soon in Hosur.

⭐Prime Minister Sharma Oli resigned from his post in response to the Nepali protests. Following the Prime Minister, the President has also resigned from his post. 

⭐Avalanche in Siachen: 3 soldiers killed.

 *SPORTS NEWS* 

🏀Asia Cup Introduction: India, Pakistan, United Arab Emirates, Oman have been drawn in Group 'A'. Sri Lanka, Bangladesh, Afghanistan, and Hong Kong have been drawn in Group 'B'.

Covai women ICT_போதிமரம்