Thursday, December 11, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.12.2025








திருக்குறள்: 

குறள் 1032: 

உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா 
தெழுவாரை எல்லாம் பொறுத்து. 

விளக்க உரை: 

உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர், எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர் உலகத்தாற்கு அச்சாணி போன்றவர்.

பழமொழி :

Every ending starts a new life page. 

ஒவ்வொரு முடிவும் புதிய வாழ்க்கைப் பக்கத்தைத் தொடங்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. எனது நோட்டு அல்லது புத்தகத்தில் உள்ள காகிதத்தைக் கிழிக்க மாட்டேன்.

2 காகிதம் கிழித்தால் எனது இருப்பிடம் அசுத்தம் ஆவது மட்டும் அல்ல மரங்களை அழிக்கவும் அது மறைமுக காரணமாகிவிடும்.

பொன்மொழி :

தனக்கென்று ஒரு பொறுப்பு இருக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி வேலையில்லாமல் சோம்பி இருக்கும்போது ஏற்படுவதில்லை. ஜோ.கிப்ஸன்

பொது அறிவு : 

01.குஜராத்தில் சபர்மதி ஆற்றின் கரையில் அமைந்துள்ள முக்கியமான நகரம் எது?

அகமதாபாத்-Ahmedabad

02.இந்தியாவில் "கோவில்களின் நகரம்" என்று அழைக்கப்படும் நகரம் எது?
 
புவனேஸ்வர்-ஒடிசா
Bhubaneswar, Odisha,

English words :

accelerator-increase in speed

tranquil -peaceful

தமிழ் இலக்கணம்: 

 வினா எழுத்துகள் 5
அவை எ, யா, ஆ, ஓ, ஏ 
எ, யா மொழிக்கு முதலில் வரும்
எங்கு?, யார்?
ஆ,ஓ மொழிக்கு இறுதியில் வரும்
பேசலாமா? தெரியுமோ?
ஏ முதலிலும் இறுதியிலும் வரும்
ஏன்? நீதானே?

அறிவியல் களஞ்சியம் :

 அறிவியல் விந்தைகள்

* புவிக் கோளில் ஒரு நிமிடத்தில் 6000 தடவைகள் மின்னல் தோன்றுகிறது

* பச்சோந்தியின் நாக்கு அதன் உடலைப் போல இரண்டு மடங்கு நீளம் உடையது.

* உலகில் 10% பேர் இடது கை பழக்கம் உள்ளவர்கள்.

* மரம் கொத்தி ஆனது ஒரு வினாடியில்  20 முறை மரத்தைக் கொத்தும்

நீதிக்கதை

 மரங்கொத்தியின் தன்னம்பிக்கை

சோம்பலால் வறுமையில் வாடிய ஒருவன் ஒருமகானைச் சந்தித்து, தனது வறுமையைப் போக்கும்படி வேண்டினான். 

அவனது சோம்பலை உணர்ந்த அந்த மகான் அவனுக்கு அதை உணர்த்த ஒரு கதையைக் கூறினார். 

ஒரு மரங்கொத்திப் பறவை, தன் கூரிய அலகால் டொக் டொக்கென்று மரத்தைக் கொத்திக் கொண்டே அந்த மரத்தின் மேல் தாவித் தாவி ஏறியது. அதைப் பார்த்த ஒரு மனிதன், மூடப் பறவையே, எதற்காக மரம் முழுவதையும் கொத்திக் கொண்டிருக்கிறாய்? இது வீண் வேலையல்லவா? என்று கேட்டான். 

அதற்கு அந்தப் பறவை, மனிதனே நான் என் உணவைத் தேடுகிறேன். தேடினால் கிடைக்கும்... என்றது. 

அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தொடர்ந்து மரத்தைக் கொத்தி, மரத்தில் ஓட்டை போட்டு, அதற்குள் பதுங்கியிருந்த புழுக்களை எடுத்து உண்ண ஆரம்பித்தது. 

தனது உணவைச் சாப்பிட்டு முடித்த பிறகு, அந்த மனிதனைப் பார்த்து, மனிதனே, நீயும் தேடு... மரத்திலும், மண்ணிலும், நீரிலும் ஏன் எல்லா இடங்களிலும் தேடு. உனக்கும் ஏதாவது கிடைக்கும் என்றது. 

கதையைச் சொல்லி முடித்த மகான், நீயும் இந்தப் பரந்த உலகத்தில் தேடு. உனக்கும் ஏதாவது கிடைக்கும். சோம்பேறியாக இருந்தால் வறுமைதான் கிட்டும் என்றார்.

இன்றைய செய்திகள்

12.12.2025

⭐ தமிழக சட்டசபை தேர்தல்: மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் தொடங்கியது.

⭐இந்தியாவில் உள்ள கிராம பஞ்சாயத்துகளை மேம்படுத்த ரூ.
183248.54 மத்திய அரசு விடுவித்துள்ளது.

⭐ தாய்லாந்து-கம்போடியா எல்லையில் இரு தரப்பினரும் மீண்டும் மோதலில் ஈடுபட்டுள்ளதால் தாய்லாந்தின் எல்லையிலிருந்த 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். 

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀2 முறை சாம்பியனான இந்திய ஜூனியர் ஹாக்கி அணி முதல் முறையாக வெண்கலம் பதக்கம் பெற்றது. 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது.
இந்தியாவின் இந்த வெற்றி மிகவும் சிறப்பானது.

Today's Headlines

⭐Tamilnadu Assembly Elections,  Verification of Electronic Voting Machines has begun. 

⭐The Central Government has released Rs. 183248.54 for the development of Gram Panchayats in India.

⭐ More than 400,000 people on the Thailand border have been evacuated and placed in camps as the two sides engage in renewed clashes on the Thai-Cambodian border.

🏀The two-time champion Indian junior hockey team won the bronze medal for the first time. They defeated Argentina 4-2 in the third-place match. This victory for India is more impressive.

Covai women ICT_போதிமரம்

Wednesday, December 10, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.12.2025

மகாகவி சுப்பிரமணிய பாரதி






திருக்குறள்: 

குறள் 1031: 

சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால் 
உழந்தும் உழவே தலை. 

விளக்க உரை: 

உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.

பழமொழி :

Life is a poetry written by our actions. 

நமது செயல்களால் எழுதப்படும் கவிதை தான் வாழ்க்கை.

இரண்டொழுக்க பண்புகள் :

1. எனது நோட்டு அல்லது புத்தகத்தில் உள்ள காகிதத்தைக் கிழிக்க மாட்டேன்.

2 காகிதம் கிழித்தால் எனது இருப்பிடம் அசுத்தம் ஆவது மட்டும் அல்ல மரங்களை அழிக்கவும் அது மறைமுக காரணமாகிவிடும்.

பொன்மொழி :

ஒருவருக்கு ஏற்படும் பயம் நீங்கும் போது ஏற்படும் நம்பிக்கையே அதிக மகிழ்ச்சி அளிக்கும் - ஸ்காட்

பொது அறிவு : 

01.இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலின் பெயர் என்ன?

  ஐஎன்எஸ் விக்ராந்த்
INS Vikrant

02.இந்தியாவின் முதல் அனைத்து மகளிர் காவல் நிலையம் எங்கு
தொடங்கப்பட்டது?

கோழிக்கோடு- கேரளா
Kozhikode , Kerala.

English words :

sit tight-stay in your place

 isolated - alone or separated

தமிழ் இலக்கணம்: 

 காற்புள்ளி பயன்படுத்தும் இடங்கள் குறித்து காண்போம் (எடுத்துக்காட்டுகளுடன்):
பட்டியலிடும்போது: தொடர்ச்சியான வார்த்தைகளை அல்லது சொற்றொடர்களைப் பிரிப்பதற்குக் காற்புள்ளி இடுவோம்.
எ.கா.: நான் பழங்கள், காய்கறிகள், மற்றும் தானியங்களை வாங்கினேன். (நான் பழங்கள், காய்கறிகள், தானியங்கள் வாங்கினேன். இப்படியும் எழுதலாம்)

அறிவியல் களஞ்சியம் :

 மோனல்


* இந்த பறவை அதிகம் காணப்படும் இடம் இந்தியாவில் இமாச்சலப் பிரதேசம் ஆகும்.
* இது இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களின் மாநில பறவை ஆகவும் நேபாளத்தின் தேசிய பறவை ஆகவும் உள்ளது.
* இது இந்தியா தவிர பாகிஸ்தான் மற்றும் நேபாளத்தில் அதிகம் காணப்படுகிறது.
* ஆண் பறவை அழகிய பல வண்ணங்களிலும் பெண் பறவை வண்ணமற்று சாதாரணமாகவும் காணப்படும்.
* இதன் அழகிய இறகுகளுக்காக வேட்டை ஆட படுவதால் அழியும் நிலையில் உள்ளது.

டிசம்பர் 11

சுப்பிரமணிய பாரதி  அவர்களின் பிறந்தநாள்


சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர்.

பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, கலைமகள் எனப் பாெருள்படும் பாரதி என்ற பட்டம் வழங்கினார். பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949-ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமை ஆக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்.இவரை சிந்துக்குத் தந்தைசெந்தமிழ்த் தேனீபுதிய அறம் பாட வந்த அறிஞர்மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன் இவரைப் புகழ்ந்துள்ளார். இவர் இந்தியாவிஜயா முதலான இதழ்களை நடத்தி, விடுதலைப் போருக்கு வித்திட்டவர்.

பாரதி, இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். பால கங்காதர திலகர், உ. வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை, மகான் அரவிந்தர் முதலியோர் இவரின் சமகாலத்தைய மனிதர்கள் ஆவர். இவர் விவேகானந்தரின் சீடரான, சகோதரி நிவேதிதையைத் தமது குருவாகக் கருதினார்.


பிரணப் குமார் முகர்ஜி அவர்களின் பிறந்தநாள்




பிரணப் குமார் முகர்ஜி (Pranab Mukherjee, வங்காள: প্রণব কুমার মুখার্জী, 11 திசம்பர் 1935 - 31 ஆகத்து 2020) (சுருக்கமாக பிரணாப் முகர்ஜி), இந்திய அரசியல்வாதி. 13 ஆவது இந்தியக் குடியரசுத் தலைவராக 2012 முதல் 2017 வரை பதவி வகித்தவர். மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரசு அரசியல்வாதியான பிரணப், குடியரசுத் தலைவர் ஆகும் முன்னர் மன்மோகன் சிங் அரசில் நிதி அமைச்சர் ஆக இருந்தார்.2012ஆம் ஆண்டு சூலையில் நடந்த இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பதியப்பட்ட 10,29,750 வாக்குகளில் 69.3% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சூலை 25, 2012 அன்று இந்தியக் குடியரசின் பதினான்காவது குடியரசுத் தலைவராகப் (பதின்மூன்றாவது நபராக) பொறுப்பேற்றார்.


பன்னாட்டு மலை நாள்


பன்னாட்டு மலை நாள் (International Mountain Day) ஆண்டுதோறும் டிசம்பர் 11 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. பன்னாட்டு மலைகள் நாளை ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு முன்னின்று நடத்து வருகிறது.

மலைகளைப் பாதுகாக்கவும், மலைப்பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும், மலையின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், 2002ஆம் ஆண்டில் மலைகளின் கூட்டாளி என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு உலகம் முழுவதும் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இவ்வமைப்பின் முயற்சியால் 2002 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவை டிசம்பர் 11 ஆம் நாளை பன்னாட்டு மலைகள் நாளாக அறிவித்தது.

நீதிக்கதை

 அன்னையின் வளர்ப்பு


நோபல் பரிசு பெற்ற ஒரு விஞ்ஞானி இளம் வயதிலேயே சிறந்த அறிவாளியாக விளங்கினார். ஆனால் எந்த வேலையையும் ஒருமைப்பாட்டுடன் செய்யவில்லை. அவரின் போக்கை கண்ட அவரின் தாயார் மிகவும் வருந்தினார். ஒருநாள் அவரை அழைத்து பூதக்கண்ணாடியையும் சில காகிதங்களையும் கொண்டுவரசொல்லி, காகிதங்களை கீழே போட்டு கண்ணாடியை வெயிலில் காட்டினார்.


பூதக்கண்ணாடியை பிடித்த தாயின் கைகள் இங்கும் அங்குமாய் அசைந்து கொண்டிருந்தது. நீண்ட நேரத்திற்கு பிறகு தனது கைகளை பூதக்கண்ணாடியின் ஒளிக்குவியல் காகிதத்தின் மேல்படுமாறு நீட்டினார். ஒளியின் ஒருமுனையில் தீ காகிதத்தை எரித்தது. இதை கவனத்துடன் பார்த்த இந்த விஞ்ஞானி ஆச்சரியப்பட்டார். அப்போது தாயார் கூறினார். ஒருமுகபடுத்திய ஒளிக்கதிர்கள் நெருப்பாகி காகிதத்தை எரிக்கும். 


ஆனால் ஒருமுகபடுத்தாத கதிரின் ஒளியில் நெருப்பு உண்டாகாது. அதுபோல் நீயும் உள்ளத்தை ஒருமுகபடுத்தினால் எந்த வேலையிலும் வெற்றி அடையலாம் என தாயார் அவருக்கு அறிவுரை கூறினார். இந்த விஞ்ஞானி தனது மனதில் தாயாரின் வார்த்தைகளை வைத்துக்கொண்டார். அன்று முதல் மன ஒருமைப்பாட்டுடன் தனது செயல்களை செய்ய தொடங்கினார். பிற்காலத்தில் உலகமே போற்றும் சர். சி. வி இராமன் ஆனார்.

இன்றைய செய்திகள்

11.12.2025


⭐தமிழகத்தில் 40 சிப்காட் தொழில் பூங்காக்கள் உள்ள நிலையில் மேலும் 21 இடங்களில் தொழில் பூங்கா அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

⭐இந்தியாவின் யுபிஐயில் 2024-25 நிதியாண்டில் 12,930 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளது. இந்தியாவின் யுபிஐ பரிவர்த்தனை முறை உலகளவில் 49% பங்கைக் கொண்டுள்ளது

⭐2025-ல் இதுவரை 85 ஆயிரம் விசாக்கள் ரத்து செய்துள்ளது. வெளிநாட்டினருக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கும் அமெரிக்கா

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀பேட்டிங் தரவரிசையில் இந்திய வீரர் ரோகித் சர்மா (781 புள்ளிகள்) முதலிடத்தில் தொடர்கிறார். விராட் கோலி (773 புள்ளிகள்) இரு இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

🏀3 வடிவ கிரிக்கெட்டிலும் சாதித்த ஒரே இந்திய வீரர்- வரலாறு படைத்த பும்ரா. தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக நேற்றைய ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Today's Headlines

⭐While there are 40 SIPCOT industrial parks in Tamil Nadu,  the Tamil Nadu government is taking steps to set up industrial parks in 21 more locations.

⭐India's UPI transactions reached 12,930 crore in the financial year 2024-25.  India's UPI transaction system has a 49% share globally

⭐85,000 visas have been canceled so far in 2025. The United States imposes strict restrictions on foreigners 

 SPORTS NEWS

🏀Indian batsman Rohit Sharma (781 points) continues to lead the batsmen rankings. Virat Kohli (773 points) has moved up two places to take second place.

🏀The only Indian player to achieve in all 3 formats of cricket - Bumrah creates history. Jasprit Bumrah took 2 wickets against South Africa yesterday.  He has taken 100 wickets in T20 cricket.

Covai women ICT_போதிமரம்

Tuesday, December 9, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.12.2025

மனித உரிமைகள் நாள்







திருக்குறள்: 

குறள் 384: 

அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா 
மான முடைய தரசு. 

விளக்க உரை: 

ஆட்சி முறைக்கு உரிய அறத்தில் தவறாமல் அறமல்லாதவற்றை நீக்கி வீரத்தில் குறைபடாத மானத்தை உடையவனே சிறந்த அரசன் ஆவான்.

பழமொழி :

Every moment is a gift of life. 

ஒவ்வொரு நொடியும் வாழ்க்கையின் பரிசு.

இரண்டொழுக்க பண்புகள் :

1. எனது நோட்டு அல்லது புத்தகத்தில் உள்ள காகிதத்தைக் கிழிக்க மாட்டேன்.

2 காகிதம் கிழித்தால் எனது இருப்பிடம் அசுத்தம் ஆவது மட்டும் அல்ல மரங்களை அழிக்கவும் அது மறைமுக காரணமாகிவிடும்.

பொன்மொழி :

நீ மகிழ்ச்சி அடைய வேண்டுமானால் மற்றவர்களை மகிழ்ச்சி அடையச் செய் - மார்க் ட்வைன்

பொது அறிவு : 

01. இந்தியாவில் வீர சாகசம் புரியும் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் விருது எது?

கீதா சோப்ரா விருது
The Geeta Chopra Award

02.உலகிலேயே விலையுயர்ந்த பழம் எது?
  
யுபாரி கிங் மெலன்
Yubari King Melon

English words :

damages-funny climbed for loss or injury

uproar-public anger or protest

அறிவியல் களஞ்சியம் :

 பூச்சிகளும் புதுமைகளும்:


1.) A ladybird might eat more than 5,000 insects in its lifetime. லேடிபர்ட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கரும்புள்ளி செவ்வண்டு தன் வாழ்நாளில் தீங்கு தரும் 5,000 பூச்சிகளை உண்டு அழிக்கும்.


2. ) A bee’s wings beat 190 times a second. ஒரு தேனீ ஒரு நொடியில் 190 முறை தன் இறக்கைகளை அடிக்கும்.

டிசம்பர் 10

மனித உரிமைகள் நாள்


ஐக்கிய நாடுகள் அவை 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் நாள் உலக மனித உரிமைப் பேரறிக்கை என உலக மக்கள் அனைவருக்குமான வாழ்வுரிமைகளை பிரகடனப்படுத்தியது. அந்த நாளைக் குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 10 ஆம் தேதி உலக நாடுகள் அனைத்தாலும் ”மனித உரிமை நாள்” கொண்டாடப்படுகிறது.

1948 டிசம்பர் 10ஆம் நாள் ஒன்றுக்கூடிய ஐக்கிய நாடுகளின் பொது அவையால் அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை பெருமைப்படுத்தும் பொருட்டு இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஐ.நா.வின் பொது அவை நாடுகளுக்கும் தன்னார்வ நிறுவனங்களுக்கும் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க 1950 முதல், டிசம்பர் 10 ஆம் நாள் மனித உரிமைகள் நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் அவையின் நிகழ்வுகளில் முதன்மையான இந்நாளில், நியூயார்கில் அமைந்துள்ள அதன் தலைமைப்பீடத்தில் முக்கிய நிகழ்வுகள் இடம்பெறுவது வழக்கமாகும். இந்நாளில் ஐந்தாண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் பரிசு வழங்கப்படும். மேலும் பல அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இந்நாளில் பல முக்கிய நிகழ்வுகளை நடத்துவது வழக்கமாகும்.

நீதிக்கதை

 பிச்சைக்காரனின் தன்னம்பிக்கை

ஒரு புகைவண்டி நிலையத்தில் பிச்சைக்காரன் ஒருவன் தனது கைப்பை நிறைய பென்சில்களை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான். ஒரு கணவான் அந்தவழியாகச் சென்றபோது 5 ரூபாய் நாணயத்தை பிச்சைக்காரனின் திருவோட்டில் போட்டார். பிறகு புகைவண்டியில் ஏறி அமர்ந்தார். 

அவரது மனதில் ஒரு கருத்து உதித்தது. எழுந்து வேகவேகமாக அதே பிச்சைக்காரனிடம் சென்று, அவனது பையிலிருந்த பென்சில்களை எடுத்துக்கொண்டு 5 ரூபாய்க்குச் சமமான பென்சில்களை எடுத்துக்கொள்கிறேன். என்ன இருந்தாலும் நீயும் தொழில் செய்கிறாய் அல்லவா? என்று கூறிவிட்டு புகைவண்டியில் தனது இருக்கைக்குத் திரும்பினார். 

ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்த கணவான் ஒரு விருந்தில் கலந்துகொள்ளச் சென்றார். அந்த விருந்தில் 6 மாதங்களுக்கு முன்னாலே இரயில்நிலையத்தில் பிச்சையெடுத்துக்கொண்டு இருந்தவனும் அமர்க்களமான கோட் மற்றும் டை சகிதமான உடையில் கனகச்சிதமான கணவானாக விருந்தில் பங்குகொள்ள வந்து இருந்தான். அவன் இந்தக் கணவானை அடையாளம் கண்டுகொண்டு இப்படிக்கூறினான். 

அன்பரே... நீங்கள் என்னை மறந்து போகியிருக்கலாம். ஆனால் நான் உங்களால்தான் இப்படி நல்ல நிலைமைக்கு வந்து இருக்கிறேன். நான் நல்ல நிலைமைக்கு வருவதற்கு நீங்கதான் காரணம். அந்த கோட் சூட் வாலிபன் கணவானிடம் பழைய நிகழ்வுகளை நினைவூட்டினான். 

கணவான், எனக்கு நினைவுவந்துவிட்டது. இப்போது என்ன செய்கிறாய். உடைகளிலும் நல்ல மாற்றம் தென்படுகிறது, என்னப்பா? என்று கேட்டார். 

கோட் சூட் வாலிபன் சொன்னான், நீங்கள்தான் என்னுடைய மாற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் காரணம். என்னுடைய வாழ்நாளிலே உங்களை மறக்கமுடியாது. என் வாழ்க்கையில் என்னை ஒரு மனிதனாக மதித்த முதல் மனிதர் நீங்கள்தான். 5 ரூபாயை எனது திருவோட்டில் இட்டபின் சிறிது நேரத்திற்குப் பிறகு வந்து அந்த ரூபாய்க்குச் சமமான பென்சில்களை என்னிடமிருந்து பெற்றுச் சென்றீர்கள். 

எனக்குள் ஒழிந்திருந்த வியாபாரி அப்போதுதான் எனக்கே தெரியவந்தான். அதுவரையில் பிச்சையெடுத்துத் திரிந்த நான் அந்த ஒரு நிமிடத்தின் தாக்குதலில் ஒரு வியாபாரியாக உருவெடுத்து உழைக்க ஆரம்பித்தேன். 

அந்த ஒரு நிமிடத்துக்கு முன்னர்வரையில் சோம்பேறியாக அழுக்காக புகைவண்டி நிலையத்தின் பிச்சைக்காரர்களின் வரிசையில் ஒருவனாக யாராலும் மதிக்கப்படாத, உருப்படாதவனாக இருந்த நான் உங்கள் நடவடிக்கையால் திருந்தினேன். 

என்னுள்ளே சாக்ரடீஸின் கொள்கைகளைத் தூண்டிவிட்டவர் நீங்கள்தான். பிறகுதான் சிந்திக்க ஆரம்பித்தேன். நான் யார்? எனது கொள்கை என்ன? எதற்காகவோ பிறந்துவிட்டேன். ஆனால் சாகும்போதாவது எதையாவது சாதித்துவிட்டு சாகலாமே என முடிவெடுத்தேன். பிச்சையெடுப்பதை நிறுத்தி எனது புதிய வாழ்க்கையை ஆரம்பித்தேன். நான் உங்களுக்கு நன்றி கூறுவதற்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். நன்றிகள் பலகோடி அய்யா, என்றான்.

இன்றைய செய்திகள்

10.12.2025

⭐காவிரி மேலாண்மை ஆணையம், தமிழகத்திற்கு 7.35 டி.எம்.சி. நீரைத் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

⭐மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு அதிகாரிகளை நியமிக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு.

⭐இந்தோனேசியாவில் அலுவலக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் பலி.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀கர்நாடகா மற்றும் சௌராஷ்டிரா அணிகளுக்கு இடையேயான டி20 போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில்  வெற்றியை பதிவுசெய்தது சௌராஷ்டிரா அணி.

🏀 இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி  ஒடிசாவின் கட்டாக் நகரில் உள்ள பாரபதி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Today's Headlines

⭐Cauvery Management Authority has ordered the Karnataka government to release 7.35 TMC of water to Tamil Nadu. 

⭐ The central government orders all states to appoint officers for the population census.

⭐20 people were killed in a fire at an office building in Indonesia.

 SPORT NEWS 

🏀Saurashtra won the T20I match between Karnataka and Saurashtra by 1 run.

🏀 The first match of the 5-match T20 series between India and South Africa will be played at the Barapati Stadium in Cuttack, Odisha.

Covai women ICT_போதிமரம்

Monday, December 8, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.12.2025

ஐடா ஸோஃபியா ஸ்கட்டர்

   






திருக்குறள்: 

குறள் 424: 

எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு. 
              
விளக்க உரை: 

தான் சொல்லுவன எளிய பொருளையுடையனவாகப் பதியுமாறு சொல்லி, தான் பிறரிடம் கேட்பவற்றின் நுட்பமானப் பொருளையும் ஆராய்ந்து காண்பது அறிவாகும்.

பழமொழி :

Dark days teach the best lessons.        

இருண்ட நாட்கள் சிறந்த பாடங்களை கற்றுக்  கொடுக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. எனது நோட்டு அல்லது புத்தகத்தில் உள்ள காகிதத்தைக் கிழிக்க மாட்டேன்.

2 காகிதம் கிழித்தால் எனது இருப்பிடம் அசுத்தம் ஆவது மட்டும் அல்ல மரங்களை அழிக்கவும் அது மறைமுக காரணமாகிவிடும்.

பொன்மொழி :

வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கமே மனிதனின் மகத்தான சக்தியாகும் - ஜேம்ஸ் ஆலன்

பொது அறிவு : 

01.உலகில் மிக நீண்ட காலம் வாழும் விலங்கு எது?

         கிரீன்லாந்து சுறா

Greenland Shark

02.  மிகப்பெரிய தமிழ்த்தாய் சிலை  எங்கு நிறுவப்பட உள்ளது?

           மதுரை -Madurai

English words :

fill-put something into your space, fill out-complete a form by writing information

தமிழ் இலக்கணம்: 

 1. சொல்லின் இறுதியில் உயிரெழுத்துகள் தனித்து வராது.
2. சொல்லின் இறுதியில் ஆயுத எழுத்து வராது.
3. க்,ங்,ச்,ட்,த், ப்,ற் ஆகிய ஏழு மெய்யெழுத்துகளும் சொல்லின் இறுதியில் வராது. 
4. எ கர வரிசையில் கெ முதல் னெ வரை எந்த உயிர்மெய் எழுத்துக்களும் இறுதியில் வராது.

அறிவியல் களஞ்சியம் :

 ஆவாரம் பூ: ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் தாவர மூலிகைகள் எல்லாம் நமக்கு எளிமையாக கிடைக்க கூடியவை. அதில் ஒன்று ஆவாரம்பூ.

ஆவாரம்பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்து சாப்பிடலாம். இந்த பூவை கொதிக்க வைத்து தேநீராக்கி குடிக்கலாம்.

டிசம்பர் 09

ஐடா ஸோஃபியா ஸ்கட்டர் அவர்களின் பிறந்தநாள்

ஐடா ஸோஃபியா ஸ்கட்டர் (Ida Sophia Scudder, டிசம்பர் 9, 1870 – மே 23, 1960) என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண் மருத்தவராவார். இவர் வேலூரில் உள்ள கிருத்தவ மருத்துவக் கல்லூரியை நிறுவியதற்காக அறியப்படுகிறார்.


1914 இல் நெடு விடுப்பில் ஐடா அமெரிக்காவுக்குச் சென்றார். அதேநேரம் முதல் உலகப் போர் மூண்டது. 1915 இல் கடுமையான போர்ச் சூழலில் இந்தியா திரும்பிவந்தார், மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான பணியைத் விரைவுப்படுத்தினார் இதையணுத்து 1918 இல் பட்டைய மருத்துவப் படிப்புடன் பெண்களுக்கான மருத்துவப் பள்ளி நடத்துவதற்கான அனுமதியானது, சென்னை மாகாண மருத்துவத் துறை தலைவர் கர்னல் பிரைசனிடமிருந்து பெற்றார். 1918 ஆகத்து 12 இல் ஒன்றழய மறைப்பணி பள்ளியை சென்னை மாகாண கவர்னர் பென்ட்லண்ட் பிரபு தொடங்கி வைத்தார். 1948 இல் யூனியன் மருத்துவப் பள்ளி, கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போதுதான், பெண்களுடன் ஆண்களும் மருத்துவம் படிக்கத் தொடங்கினர்.

நீதிக்கதை

 எண்ணம் போல் வாழ்வு


ஒரு ஊரில் குமாரசாமி என்ற பெயருடைய மனிதர் ஒருவர் இருந்தார். அவரை எல்லோரும் முட்டாள் என்றும், பிழைக்கத் தெரியாதவர் என்றும் கேலி செய்து வந்தனர். இதைக் கேட்டுக்கேட்டு அந்த மனிதருக்கு வெட்கமாகிப் போய்விட்டது. அந்த ஊரின் எல்லையில் ஒரு முனிவர் இருந்தார். அவரிடம் சென்று அந்த மனிதர் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு கேட்டார்.


கடவுளை நினைத்து தவம் செய். உனக்கு வேண்டிய வரத்தைக் கொடுப்பார் என்று அந்த முனிவர் கூறினார். குமாரசாமி கடுமையாகத் தவம் இருந்தார். பல நாட்கள் சென்ற பிறகு, கடவுள் அவர் எதிரில் தோன்றினார். பக்தனே, உனக்கு என்ன வரம் வேண்டும்? கடவுள் கேட்டார். தவம் செய்தால் கடவுள் வந்து வரம் கொடுப்பார்னு அந்த முனிவர் சொன்னார். மன்னார்சாமி, என்ன வரம் வேண்டும், கேள் என்றார் கடவுள். அதான் கேட்டேனே வரம்... அதை கொடு... என்றார் மன்னார்சாமி.


இப்போது கடவுளுக்கே குழப்பம் வந்து விட்டது. கடவுள் பிரத்யட்சம் செய்துவிட்டால் யாருக்காவது வரம் கொடுத்தே ஆக வேண்டும். அதுவும் தவம் செய்தவருக்குத் தவறாமல் வரம் கொடுத்தே ஆக வேண்டும். என்ன செய்யலாம்? கடவுள் யோசித்தார். பக்தா, இப்போது நீ என்ன நினைக்கிறாயோ, அதையே வரமாகக் கொடுக்கின்றேன் பெற்றுக்கொள். அய்...யய்ய....யோ... நான் ஒன்றும் நினைக்கவே இல்லையே! அதான்... என்று சொல்லிவிட்டுக் கடவுள் மறைந்து விட்டார். இதிலிருந்து என்ன தெரிகிறது? பலனை நோக்கிய உழைப்புதான் உயர்வைத் தரும்! எண்ணம் போல் வாழ்வும் கூட, மனதில் நல்லதை நினைப்போம் நல்வழி செல்வோம்.

இன்றைய செய்திகள்

09.12.2025

⭐இந்தியாவில் 2023-ம் ஆண்டில் 2.12 லட்சம் பெண்களும், இந்த ஆண்டில் அக்டோபர் 2025 
வரை 2,52,108 பெண்களும் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.

⭐போதைப்பொரு ளுக்கு எதிரான சென்னை போதைப்பொருள் தடுப்பு காவல் குழுவினரின் நடவடிக்கையில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த 26 நபர்களும், கேமரூன் நாட்டைச் சேர்ந்த ஒருவரும், சூடான் நாட்டைச் சேர்ந்த இருவர் என 29 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

⭐ ரஷ்யா நடத்திய தாக்குதலில் உக்ரேனில் உள்ள செர்னேபில் அனு உலையின் பாதுகாப்பு கவசம் சேதமடைந்துள்ளது.

🏀விளையாட்டுச் செய்திகள்

🏀 நியூசிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பரபரப்பாக சென்ற முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது.

Today's Headlines


⭐The Indian Council of Medical Research has reported that 2.12 lakh women in India were affected by breast cancer in 2023 and 2,52,108 women this year till October 2025.

⭐55 foreigners arrested in anti-drug operation by Chennai Narcotics Control Team.

⭐ The protective shield of the Chernobyl nuclear power plant in Ukraine has been damaged in a Russian attack.

 *SPORTS NEWS* 

🏀 New Zealand and West Indies are playing a 3-match Test series. The exciting first Test ended in a draw.

Covai women ICT_போதிமரம்