Thursday, April 16, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - நன்றி மடல்


 🙏🙏🙏நன்றி உள்ளம் நிறைவுடன்🙏🙏🙏


* 2025-26 ஆம் கல்வியாண்டு முழுவதும் பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகளை  தொய்வின்றி செய்வதற்கு எங்களுக்கு எப்பொழுதும் வழிகாட்டியாய்  இருக்கும் போதிமரம் அட்மின் திரு.மூர்த்தி ஐயா அவர்களுக்கு நன்றியினை உரித்தாக்குகிறோம்.🙏🙏🙏

* இரவு எத்தனை தாமதமாக வலைதளத்தில் upload செய்தாலும் அடுத்த 10 நிமிடங்களுக்குள் அதனை pdf ஆக மாற்றி பேருதவி புரியும் திரு. 'மகிழ்ச்சி' ஐயா அவர்களுக்கு நன்றிகள் பல.🙏🙏🙏

* அனுதினமும்  நூறு குழுக்களுக்கும் மேலாக பகிரப்படும் போது, முகமறியா பல ஆசிரிய தோழமைகள் வழங்கிய ஊக்கத்திற்கும், உற்சாகத்திற்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி.🙏🙏🙏

* பாடசாலை வலைதளத்தில் எம் குழுவிற்கு access வழங்கி நேரடியாக நாங்களே வழிபாட்டு செயல்பாடுகளை பதிவேற்றம் செய்ய உதவியதோடு, ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினத்தன்று எங்களை உற்சாகப்படுத்தி குரு விருதினை வழங்கி வரும் பாடசாலை அட்மின் திரு.மதன் ஐயா அவர்களுக்கு இதயம் நிறைந்த நன்றிகள்🙏🙏🙏

* எல்லாவற்றுககும் மேலாக பள்ளி பணிகளுக்கும், குடும்ப பொறுப்புகளுக்கும் மத்தியில் இதற்கென்று நேரம் ஒதுக்கி, முழு ஒத்துழைப்புடன் இதற்கு பணியாற்றி வரும்  என் அருமை தோழிகளுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்.🙏🙏🙏🙏🙏🙏🙏

* திருமதி. ரூபி பாக்கியம்,  காஞ்சிபுரம்

 * திருமதி. கோமதி கோவை

* திருமதி.பழனிமுத்து, காரமடை

* திருமதி. தீபா, சூலூர்

* திருமதி. இரஞ்சிதம், சூலூர்

* திருமதி. வஹீதா, பொள்ளாச்சி

* திருமதி. இளமதி, பொள்ளாச்சி

* திருமதி. சிவகாமி,பொள்ளாச்சி 

* திருமதி. ரெனிட்டா, திருவள்ளூர்

* திருமதி. அம்ரீன், கிருஷ்ணகிரி

* திருமதி. ஏஞ்சல் கிரேஸ், மயிலாடுதுறை



💓 இந்த வருடம் முழுவதும் எங்கள் படைப்புகளை ஏற்றுக்கொண்டு, பயன்படுத்திய அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்ளுகிறோம். சிறுசிறு பிழைகள் அவ்வப்போது ஏற்பட்டதற்கு வருந்துகிறோம்.. இனிவரும் காலங்களில் இன்னும் செம்மையாக நம் மாணவ சமுதாயத்திற்காக பணியாற்றுவோம். 

மீண்டும் அனைவருக்கும் நன்றி.

                            என்றும் சமுதாய பணியில்

                                                அனிட்டா I

                                                   கோவை



Wednesday, April 15, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.04.2026

சார்லி சாப்ளின்




 






திருக்குறள்: 

குறள் 651: 

துணைநலம் ஆக்கந் தரூஉம் வினைநலம் 
வேண்டிய எல்லாந் தரும்.     

 விளக்க உரை: 

ஒருவனுக்கு வாய்த்த துணையின் நன்மை ஆக்கத்தைக் கொடுக்கும், செய்யும் வினையின் நன்மை அவன் விரும்பிய எல்லாவற்றையும் கொடுக்கும்.

பழமொழி :

Hear more but talk less.      

அதிகம் கேள் குறைவாக பேசு.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. படிப்பும் உழைப்பும் தான் மனித சமுதாயம் உயர ஒரே வழி.

2. எனவே படிப்பை எப்போதும் கைவிடமாட்டேன்.

பொன்மொழி : 

எந்த இடத்தில் வசதியாக உணர்கிறீர்களோ அந்த இடத்தை விட்டு விலகிச் சென்று புதிய ஒன்றை தேடத் தொடங்குங்கள். அப்போதுதான் புதிய சாதனைகளை நிகழ்த்த முடியும் -வால்ட் டிஸ்னி 

பொது அறிவு : 

01.இந்தியா அறிவியல் கழகம் (IISc) எங்கு அமைந்துள்ளது?

 பெங்களூரு- கர்நாடகம்

Bengaluru , Karnataka, 

02. போலியோ நோய் தடுப்பூசியை கண்டுபிடித்தவர் யார்?

ஜோனாஸ் சால்க்

Jonas Salk

English words :

Itinerary – A planned route or journey schedule

. Destination – The place you are traveling to

தமிழ் இலக்கணம்: 

அயற் சொற்களும் அவற்றிற்கான தமிழ் சொற்களும் இன்று பார்ப்போம்

அ.சொல் - த.சொல்

  அனுமதி -  இசைவு 

இருதயம் - நெஞ்சகம்

ஐதிகம் - உலக வழக்கு

அதிகாரி - அலுவலர்

அறிவியல் களஞ்சியம் :

1883-ல் கிரகடோவா எரிமலை வெடித்தபோது, ​​அதன் சக்தி மிகவும் அதிகமாக இருந்ததால், 4,800 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆஸ்திரேலியா வரை அதன் சத்தம் கேட்டது.

ஏப்ரல் 16

சாப்ளின் அவர்களின் பிறந்தநாள்

சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் (Sir Charles Spencer Chaplin, ஏப்ரல் 16, 1889 - டிசம்பர் 25, 1977) என்ற இயற்பெயர் கொண்ட சார்லி சாப்ளின், ஹாலிவுட் திரையுலகின் பெரும் புகழ்பெற்ற கலைஞர். இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல முகங்கள் உள்ளன.

சாப்ளின் இருமுறை சிறப்பு ஆஸ்கார் விருதினைப் பெற்றார். மே 16, 1922-இல் ஆஸ்கார் விருதுகள் வழங்கியபொழுது, இப்பொழுதுள்ள வாக்களிப்பு முறை இல்லை. சாப்ளின் தி சர்க்கஸ் திரைப்படத்துக்காக சிறந்த நடிகர் மற்றும் சிறந்த இயக்குநர் விருதுகளுக்குத் தேர்வானார். இவருக்கு விருது கிடைக்காதென்று இருந்த நிலையில், இத்திரைப்படத்தை எழுதி, இயக்கி, நடித்து, தயாரித்த அவருடைய பன்முகத்தன்மையையும் மேதைமையையும் பாராட்டிச் சிறப்பு விருது அளித்தார்கள். அதே ஆண்டு, தி ஜாஸ் சிங்கர் படத்துக்காக இன்னொரு சிறப்பு விருதை வழங்கினார்கள். திரைப்படத்தை இந்நூற்றாண்டின் கலை வடிவமாக்குவதில் அளவிடமுடியாத பங்காற்றியதற்காக 44 ஆண்டுகளுக்குப் பிறகு 1972-ஆம் ஆண்டில் இரண்டாவது ஆஸ்கர் விருதைப் பெற்றார்.

நீதிக்கதை

 நன்றி மறந்த சிங்கம்

காட்டில் விறகு வெட்டுவதற்காக சென்று கொண்டிருந்தான் மனிதன் ஒருவன்.

அப்போது காட்டில் எங்கிருந்தோ சிங்கத்தின் கர்ஜினை கேட்டது. பயத்துடன் ஓடத் தொடங்கினான் மனிதன்.

“மனிதனே பயப்படாதே! இங்கே வா! நான் உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்,” என்ற குரல் கேட்டது.

தயக்கத்துடன் குரல் வந்த திசையை நோக்கிச் சென்றான் மனிதன்.

அங்கு ஒரு கூண்டில் சிங்கம் அடைப்பட்டு இருந்தது. வேட்டைக்காரர்கள் சிலர் சிங்கத்தை உயிருடன் பிடிப்பதற்காக ஒரு கூண்டு செய்து அதற்குள் ஓர் ஆட்டை விட்டு வைத்திருந்தனர். ஆட்டிற்கு ஆசைப்பட்ட சிங்கம் கூண்டிற்குள் மாட்டிக் கொண்டது.

மனிதனைப் பார்த்த சிங்கம், “மனிதனே, என்னை இந்தக் கூண்டிலிருந்து விடுவித்து விடு… நான் உனக்குப் பல உதவிகளைச் செய்வேன்,” என்றது.

“நீயோ மனிதர்களைக் கொன்று தின்பவன். உன்னை எப்படி நான் விடுவிக்க முடியும்?” என்றான் மனிதன்.

“மனிதர்களைக் கொல்லும் சுபாவம் எங்களுக்கு உண்டு தான். அதற்காக உயிர்காக்கும் உன்னைக் கூடவா அடித்துக் கொன்றுவிடுவேன். அவ்வளவு நன்றியில்லாதவனா நான்? பயப்படாமல் கூண்டின் கதவைத்திற. உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்,” என்று நைசாகப் பேசியது சிங்கம்.

சிங்கத்தின் வார்த்தையை உண்மையென்று நம்பிவிட்டான் மனிதன். கூண்டின் கதவைத் திறந்தான். அவ்வளவுதான்! நன்றி கெட்ட சிங்கம் மனிதன் மேல் பாய்வதற்கு தயாராயிற்று.

இதனைக் கண்ட மனிதன், “சிங்கமே, நீ செய்வது உனக்கே நியாயமா? உன் பேச்சை நம்பி உன்னைக் கூண்டிலிருந்து விடுவித்தேனே… அதற்கு இதுதானா நீ காட்டும் நன்றி,” என்றான்.

“என் உயிரைக் காத்துக் கொள்வதற்காக நான் ஆயிரம் பொய் சொல்லுவேன். அதை நீ எவ்வாறு நம்பலாம்? மனிதர்கள் என்றால் பகுத்தறிவுள்ளவர்கள் என்று தானே பொருள்.

அந்த அறிவைக் கொண்டு இது நல்லது, இது கெட்டது என்று பகுதித்தறிய வேண்டாமா? முட்டாள்தனமான உன் செய்கைக்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்?” என்றது சிங்கம்.

“கடவுள் உன்னை தண்டிப்பார். உன் உயிரை காப்பாற்றிய என்னையே சாப்பிடுவது நியாயமா?” உன்னை விடுவித்ததற்கு இம்மாதிரி நடந்து கொள்வது முறையல்ல,” என்றான் மனிதன்.

அவ்வழியாக ஒரு நரி வந்தது.

“இதனிடம் நியாயம் கேட்போம்,” என்று கூறிய மனிதன் நடந்த கதையனைத்தையும் நரியிடம் கூறினான்.

“எங்கள் தொழில் அனைவரையும் அடித்துக் கொன்று சாப்பிடுவதுதான். இது இவனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தும் கூட என்னைக் கூண்டிலிருந்து விடுவித்தான்.

முட்டாள்தனமான இந்தச் செய்கைக்கு உரிய பலனை இவன் அனுபவித்தே தீர வேண்டும். நீ என்ன சொல்ற நரியாரே…” என்றது.

அனைத்தையும் கேட்ட நரி ஒன்றும் புரியாததைப் போல் பாவனை செய்தது.

“நீங்கள் இந்த மாதிரி சொன்னால் எனக்கு ஒன்றுமே புரியல. ஆரம்பத்திலிருந்து சொல்லுங்கள்,” என்றது நரி.

உடனே சிங்கம் சொல்லத் தொடங்கியது.

“நான் அந்தக் கூண்டிற்குள் அடைந்து கிடந்தேன்…”

“எந்தக் கூண்டிற்குள்?” என்றது நரி.

“அதோ இருக்கிறதே அந்தக் கூண்டிற்குள்,” என்றது சிங்கம்.

“எப்படி அடைந்து கிடந்தீர்கள்?” என்றது நரி.

சிங்கம் விடுவிடுவென்று கூண்டிற்குள் சென்றது. இதுதான் சமயம் என்று கருதிய நரி சட்டென்று கூண்டுக் கதவை இழுத்து மூடியது.

“நரியாரே! இது என்ன அயோக்கியத்தனம்! நியாயம் கூறுவதாகக் கூறி என்னை மறுபடியும் கூண்டில் அடைத்துவிட்டீரே!” என்று கத்தியது சிங்கம்.

“நீங்கள் பேசாமல் கூண்டிற்குள்ளேயே இருங்கள். நான் ஒன்றும் இந்த மனிதனைப் போல் முட்டாள் அல்ல. உங்களுக்குச் சாதகமாக நியாயம் சொன்னால் முதலில் மனிதனை அடித்துக் கொல்வீர்கள்.

பிறகு என்னையே5 அடித்துக் கொன்று விடுவீர்கள். அதனால் தான் உங்களைக் கூண்டிற்குள் செல்லுமாறு செய்து கதவைப் பூட்டி விட்டேன்,” என்றது நரி.

நன்றி மறந்த சிங்கம் தன் நிலையை நினைத்து நொந்து போனது.

குறள்நீதி: “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டு; உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு.” ஒருவர் செய்த நன்றியை மறப்பவர்க்கு என்றுமே உயர்வில்லை. ஆகவே, பெற்றவுதவி சிறியதோ/ பெரியதோ என்றுமே நன்றி மறவாது வாழ்வோம்.

இன்றைய செய்திகள்

16.04.2026

⭐கேஸ் சிலிண்டர் விநியோகம் குறித்து பொதுமக்கள் கவலைப்பட வேண்டாம் - இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி தகவல்.

⭐சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தின் சிங்கிதராய் கிராமத்தில் உள்ள வேதாந்தா நிறுவனத்தின் பவர் பிளாண்ட்டில் ஏற்பட்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்தும், 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயமடைந்து உள்ளனர்.

⭐ நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் படித்து 10ஆம் வகுப்புத் தேர்வெழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் நேற்று வெளியானது.

⭐ சவுதி அரேபியாவின் ரியாத், மக்கா, நஜ்ரான் பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. அங்குள்ள சாலைகள் ஆறுகளாக மாறியுள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀 நடப்பு ஐபிஎல் தொடரின் 22-வது
லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் தனது இரண்டாவது தொடர் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

Today's Headlines: 

⭐ Public should not worry about cylinder distribution - Indian Oil Company Official Information.

⭐ 10 people died and more than 40 workers were injured in an accident at the power plant of Vedanta Company in Singitarai village of Chhattisgarh power district.

⭐ Results for class 10th students studying under CBSE curriculum across the country have been declared yesterday.

⭐  It has been raining heavily in the Riyah, Makkah and Najran areas of Saudi Arabia for the last few days. The roads there have turned into rivers.

🏀 Sports news

🏀 22nd of the ongoing IPL series
In the league match, Chennai Super Kings registered their second consecutive win by defeating Kolkata Knight Riders by 32 runs

Covai women ICT_போதிமரம்

Sunday, April 12, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.04.2026

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

   



 






திருக்குறள்: 

குறள் 470: 

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டுந் தம்மொடு 
கொள்ளாத கொள்ளா துலகு 

விளக்க உரை: 

தம் நிலையோடு பொருந்தாதவற்றை உலகம் ஏற்றுக்கொள்ளாது, ஆகையால் உலகம் இகழ்ந்து தள்ளாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும்.

பழமொழி :

Experience is the best teacher. 

அனுபவமே சிறந்த ஆசான்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. படிப்பும் உழைப்பும் தான் மனித சமுதாயம் உயர ஒரே வழி.

2. எனவே படிப்பை எப்போதும் கைவிடமாட்டேன்.

பொன்மொழி : 

வணங்க ஆரம்பிக்கும் போதே வளர ஆரம்பிப்போம் - கோல்ட்ரிஜ்

பொது அறிவு : 

01.இந்தியாவில் மிளகு அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம் எது?

கர்நாடகா- Karnataka

02. இந்தியாவையும் சீனாவையும் பிரிக்கும் எல்லைக்கோட்டின் பெயர் என்ன?

மெக்மஹோன் கோடு -
The McMahon Line

English words :

Resilience – Ability to recover from difficulties

Perseverance – Continued effort despite challenges

தமிழ் இலக்கணம்: 

பிறமொழிச் சொற்கள் தொடர் 

1. நபர் - அரபி

2. ஜாஸ்தி - உருது 

3. ரூபாய் - இந்துஸ்தானி 

4. துட்டு - டச்சு 

5. பீரோ - பிரெஞ்சு

அறிவியல் களஞ்சியம் :

பூமி மணிக்கு 1,000 மைல் வேகத்தில் சுழல்கிறது, ஆனால் அது விண்வெளியில் நம்பமுடியாத அளவிற்கு மணிக்கு 67,000 மைல் வேகத்தில் பயணிக்கிறது.

ஏப்ரல் 13

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பிறந்தநாள்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (ஏப்ரல் 13, 1930 - அக்டோபர் 8, 1959) ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

நீதிக்கதை

 கரடியும் இரண்டு வழிப்போக்கர்களும்

ஒரு ஊரில் இரண்டு நண்பர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவன் ராமு, மற்றொருவன் சோமு. இருவரும் இணை பிரியாத நண்பர்கள்.

ஒரு நாள் இருவரும் தேன் எடுப்பதற்காக காட்டுக்குப் பகுதிக்குச் சென்றனர். செல்லும் வழியில் ராமு சோமுவிடம், “நீ எதைபற்றியும் பயப்டாமல் என்னுடன் வா.

என்னைப் போன்ற நண்பனைக் காண முடியாது. என்ன துன்பம் வந்தாலும் நான் உன்னைக் காப்பாற்றுவேன்” என்று கூறினான்.

காட்டிலுள்ள பறவைகள், மரங்கள், காட்டு விலங்குகள் போன்றவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருவரும் நடந்து சென்றார்கள்.

அப்போது கரடி ஒன்று உறுமும் சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் அவர்கள் செல்லும் வழியிலேயே, அந்த கரடி திடீரென வந்து கொண்டிருந்தது.

கரடியைக் கண்டதும் இருவரும் பயத்தில் ஓடத் தொடங்கினார்கள். கரடியும் அவர்களைத் துரத்தியது.

ஓடத் தொடங்கிய சில வினாடிகளில் மரம் ஒன்று இருப்பதை ராமு கண்டான். உடனடியாக அந்த மரத்தில் ராமு ஏறி விட்டான்.

சோமுவுக்கோ மரத்தில் ஏறத் தெரியாது என்று அறிந்திருந்தும் மரத்தில் ஏற முடியாதவனைக் கீழே விட்டு விட்டுத் தன்னை மட்டும் காத்துக்கொள்ள சுய நலத்துடன் ராமு நடந்து கொண்டான்.

சோமுவுக்கு மரம் ஏறத் தெரியாததால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தான். கவலையுடன் எப்படி கரடியிடமிருந்து தப்புவது என்று அவசரமாக யோசித்தான்.

இறந்தவன் போல் நடித்தால் கரடி தன்னைக் கொல்லாது என்று ஒரு யோசனை தோன்ற, பின்னர் நிலத்தில் விழுந்து மூச்சை அடக்கிக் கொண்டு இறந்தவனைபோல் படுத்துக் கொண்டான்.

அப்பொழுது கரடியும் அங்கு வந்து சேர்ந்தது. படுத்திருந்தவனை உண்பதற்காக அருகில் வந்த கரடி கீழே விழுந்து கிடந்தவன் காதருகே சென்று நுகர்ந்து பார்த்தது.

கரடி சோமுவை முகர்ந்து பார்த்ததை, மேலேயிருந்து பார்த்த ராமு, கரடி சோமுவிடம் ஏதோ சொல்கிறது என்று தவறுதலாக புரிந்து கொண்டான். பிறகு அவன் இறந்தவன் என்று முடிவு செய்து அங்கிருந்து நகர்ந்து போய் விட்டது.

கரடி செல்வதை மரத்தின் மேலிருந்து பார்த்த ராமு, கீழே இறங்கி வந்து சோமுவை எழுப்பினான். “கரடி சென்று விட்டது இனி எழும்பு நாம் தப்பி விட்டோம்” என்று ராமு கூறினான்.

சோமுவும் எழுந்து தன் யோசனை வெற்றியடைந்ததை எண்ணி நிம்மதியடைந்தான்.

கீழே படுத்திருந்தவன் எழுந்து அமர்ந்தான்.

ராமு சோமுவிடம், “கரடி உன் காதில் என்ன இரகசியம் சொன்னது?” என்று கேட்டான்.

அதற்குப் சோமு, “ஆபத்தில் உதவாத நண்பனை என்றுமே நம்பக் கூடாது! என்று சொல்லிவிட்டுப் போனது” என்றான்.

இப்பதிலால், ராமு தன் சுயநலப் புத்தியை எண்ணி நொந்து கொண்டான். சோமுவோ இனி மேல் எங்கள் நட்பு நீடிக்க வேண்டாம் என்று கூறிக்கொண்டு கொண்டு தனியே நடந்து சென்றான்.

நீதி: ஆபத்தில் உதவாதது நட்பல்ல.

இன்றைய செய்திகள்

13.04.2026

⭐ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை

⭐டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் நடைபெறும் பெரும் மோசடிகளை தடுக்க RBI ஒரு புதிய திட்டத்தை பரிசீலித்து வருகிறது. 

⭐ மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதி பேச்சுவார்த்தை  பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தொடங்குகிறது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் 15 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடி ஆட்டத்தால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் மிரள வைத்துள்ளார்.

Today's Headlines

⭐ Summer holidays for students from Classes 1 to 9 will begin on April 17 onwards.

⭐ The RBI is considering a new scheme to prevent large-scale fraud in digital transactions.

⭐ Peace talks between the United States and Iran will begin in Islamabad, the capital of Pakistan, to reduce war tensions in the Middle East.

 SPORTS NEWS 

🏀 In the 2026 IPL series, 15-year-old Vaibhav Suryavanshi, playing for Rajasthan Royals, has stunned the entire cricket world with his explosive performance.

Covai women ICT_போதிமரம்

Thursday, April 9, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.04.2026

உடன்பிறப்புகள் நாள் 




 






திருக்குறள்: 

குறள் 777: 

சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார் 
கழல்யாப்புக் காரிகை நீர்த்து. 

விளக்க உரை: 

பரந்து நிற்க்கும் புகழை விரும்பி, உயிர்வாழ்வையும் விரும்பாத வீரர், வீரக் கழலை காலில் கட்டிக்கொள்ளுதல் அழகு செய்யும் தன்மையுடையதாகும்.

பழமொழி :

work is worship. 

செய்யும் தொழிலே தெய்வம்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. முயற்சி மற்றும் பயிற்சி ஆகிய இரண்டும் தான் வெற்றியை தரும்.

2. எனவே தேர்வுகள் நெருங்கும் இந்த நேரத்தில் முயற்சி எடுத்து கூடுதல் நேரம் படிப்பேன்

பொன்மொழி : 

படைப்பாற்றலின் கதவை திறக்கக் கூடிய சாவி கல்வி -அகதா கிறிஸ்டி

பொது அறிவு : 

01.மிகக் குறைந்த வயது அமெரிக்க அதிபர் யார்?

தியோடர் ரூஸ்வெல்ட் 
Theodore Roosevelt 

02. ஒலிம்பிக் கொடியை உருவாக்கியவர் யார்?

பியர் டி கூபர்டின் -1913
Pierre de Coubertin -1913

English words :

meticulous -

giving or showing great attention to details

நுணுக்க விவரங்களில் ஆழ்ந்த கவனம் செலுத்துகிற.


jostle - 

to push hard against somebody in a crowd.

கூட்டத்தில் ஒருவர் மீது வலுவுடன் இடித்தல்

தமிழ் இலக்கணம்: 

இன்று நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் அந்நிய மொழி அவற்றின் மொழி ஆதாரங்கள் குறித்து பார்ப்போம்

1. குல்லா - பார்சி 

2. ரிக்க்ஷா - ஜப்பானிய

3. பஜார் - பார்சி

4. அலமாரி - போர்ச்சுகீசியம்

5. இனாம் - உருது

அறிவியல் களஞ்சியம் :

ஒளியின் வேகம் பொதுவாக வினாடிக்கு 186,000 மைல்கள் எனக் குறைத்துக் கூறப்படுகிறது. துல்லியமாகச் சொன்னால், அது 299,792,458 மீ/வி (மீட்டர்/விநாடி – அதாவது வினாடிக்கு 186,287.49 மைல்களுக்குச் சமம்).

ஏப்ரல் 10

உடன்பிறப்புகள் நாள் (Siblings Day) (சில வேளைகளில் தேசிய உடன்பிறப்புகள் நாள் என்றும், தேசிய உடன்பிறப்பு நாள் என்றும்) அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10ஆம் நாள் கடைப்பிடிக்கப்படும் இந்நாள், உடன் பிறந்த உறவுகளை கௌரவிக்கும் வகையில் உள்ளது. அமெரிக்காவின் சில மாகாணங்களில் விடுமுறை அளிக்கப்படும் இந்நாள், அன்னையர் நாள், தந்தையர் நாள் போலல்லாது, மத்திய கூட்டரசால் அடையாளம் காணப்படாமல் உள்ளது.1998 முதல், 49 மாகாணங்களின் ஆளுநர்கள் அதிகாரபூர்வமாக தங்களது மாநிலத்தில் உடன்பிறந்தோர் நாளை அங்கீகரிக்கும் பிரகடனத்தை வெளியிட்டனர்.அமெரிக்காவைத் தொடர்ந்து, பன்னாட்டளவில் இந்தியா, ஆத்திரேலியா வரை இந்நாள் அனுசரிக்கப்படுவது பரவியுள்ளது.

நீதிக்கதை

 கெட்டிக்கார சேவல்

ஒரு நாள் காலையில் ஒரு மரத்தின் மீது சேவல் உட்கார்ந்து இருந்தது. காலை நேரம் ரம்மியமாக இருந்தபடியால் உற்சாகமாய் சேவல் கூவியது. பலதடவை கூவியது.

இதைக் கேட்ட நரி அங்கே வந்தது. நரிக்கு சரியான பசி இருந்தது. அந்த சேவலை பிடித்து சாப்பிட ஆசைப்பட்டது, ஆனால் சேவல் மரத்தின் மீது இருந்தபடியால் அதைப் பிடிக்க முடியவில்லை. இதற்காக ஒரு தந்திரம் செய்ய நினைத்தது. உடனே சேவலைப்பார்த்து,

" சகோதரனே!, வணக்கம். ஒரு நல்ல செய்தியை நீ கேள்விபட்டாயா? பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் ஒரு சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டு விட்டது. இனி ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளக் கூடாது. அன்பாய் நடந்துக் கொள்ள வேண்டும், சகோதர மனப்பான்மையை வளர்க்க வேண்டும். நீ கொஞ்சம் கீழே வாயேன். இந்த நல்ல செய்தியைப் பற்றி பேசுவோம்" என்றது.

நரியின் தந்திரப் பேச்சைச் சேவல் புரிந்து கொண்டது. அதை வெளியே காட்டவில்லை. தூரத்தில் எதையோ பார்ப்பதைப் போல் தலையைத் தூக்கிப் பார்த்தது.

இதைக் கண்ட நரி, "என்ன சகோதரா!, ரொம்ப அக்கறையாக எதையோ அடிக்கடி பார்க்கிறாயே. அங்கே என்ன இருக்கிறது?" என்று கேட்டது.

அதற்கு சேவல்,

" அங்கே சில வேட்டை நாய்கள் வருவது மாதிரி தெரிகிறது. வேட்டை நாய்கள் தானா? என்பதைக் கவனிக்கிறேன்" என்றது.

அவ்வளவு தான் நரிக்கு உடல் நடுங்கி விட்டது, வேகவேகமாக "சரி, சரி நான் அப்புறமாக வந்து உன்னிடம் பேசுகிறேன்" என்று கூறி கிளம்பியது.

சேவல், "அருமை சகோதரா, போகாதே, நான் இதோ கீழே வருகிறேன். நாய்களைக் கண்டு ஏன் பயப்படுகிறாய்? இப்பொழுது தானே நீ சொன்னாய், எல்லோருக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது"

நரி "அந்த ஒப்பந்தைத்தைப் பற்றி அநேக பேர் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள், அந்த நாய்களுக்கு தெரியாமல் இருந்தால், நான் என்ன கதி ஆவது? நான் போகிறேன்" என்றது

இதை சொல்லி விட்டு நரி ஒரே ஓட்டமாக ஓடி காட்டுக்குள் மறைந்தது.

சேவல் 'யாரிடம் ஏமாற்றப் பார்க்கிறாய், உன்னுடைய கெட்டிக்கார பொய்கள் என்னிடம் பலிக்காது" என்று கூறி சிரித்தது.

கெட்டிக்காரன் பொய் சொன்னாலும் அது புத்திச்சாலியிடம் வெளிபட்டு விடும்.

இன்றைய செய்திகள்

10.04.2026

⭐கேரளா, அசாம் மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் நேற்று  சட்டமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவு நடைபெற்றுள்ளது.

⭐வந்தே பாரத்தை விட மணிக்கு 220 கி.மீ வேகத்தில் செல்லும் 2 புதிய ரயில்களை தயாரிக்கிறது இந்திய ரயில்வே

⭐அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர் நிறுத்தத்திற்குப் பதிலாக இரண்டு வார காலத்திற்கு ஹோர்மூஸ் நீரிணை வழியாகப் பாதுகாப்பான போக்குவரத்து அனுமதிக்கப்படும் என எஸ்என்எஸ்சி அறிவித்தது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀 மகளிர் பிரிவு 9-வது சுற்று செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீராங்கனை வைஷாலி, சக நாட்டு வீராங்கனையான திவ்யா தேஷ்முக் உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய வைஷாலி சாமர்த்தியமாக காய்களை நகர்த்தி அபார வெற்றி பெற்றார்.

🏀மான்டேகார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோல் நடைபெறுகிறது.
இதில் சிறப்பாக ஆடிய ஸ்வரேவ் 6-2, 7-5 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

Today's Headlines

⭐ Voting for the legislative assembly elections was held yesterday in Kerala, Assam, and the Union Territory of Puducherry.

⭐ Indian Railways is preparing two new trains that can run at a speed of 220 km/h, faster than the Vande Bharat trains.

⭐ Instead of a ceasefire between the United States and Israel, the SNSC announced that safe transportation through the Strait of Hormuz will be allowed for a period of two weeks.

 SPORTS NEWS 

🏀 In the women’s section of the 9th round chess tournament, Tamil Nadu’s Indian player Vaishali faced fellow Indian player Divya Deshmukh. Vaishali played brilliantly and secured an impressive victory with smart moves.

🏀 The Monte Carlo Masters international tennis tournament is being held in Monaco. In this, Zverev performed well and advanced to the quarterfinals by winning 6–2, 7–5.

Covai women ICT_போதிமரம்

Wednesday, April 8, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.04.2026


      



 






திருக்குறள்: 

குறள் 775: 

விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின் 
ஓட்டன்றோ வன்க ணவர்க்கு. 

விளக்க உரை: 

பகைவரை சினந்து நோக்கியக் கண், அவர் வேலைக் கொண்டு எறிந்த போது மூடி இமைக்குமானால், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ.

பழமொழி :

எல்லா மதங்களும் அன்பை போதிக்கின்றன.

All roads lead to rome.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. முயற்சி மற்றும் பயிற்சி ஆகிய இரண்டும் தான் வெற்றியை தரும்.

2. எனவே தேர்வுகள் நெருங்கும் இந்த நேரத்தில் முயற்சி எடுத்து கூடுதல் நேரம் படிப்பேன்

பொன்மொழி : 

இளமையில் கல்வியை புறக்கணித்தவன் , தனது இறந்த காலத்தை மட்டும் இழந்தவன் அல்ல எதிர்காலத்தையும் இழந்தவன் ஆவான்- யூரி பிடிஷ்

பொது அறிவு : 

01.முதல் உலகப்போரை முடித்து வைத்த உடன்படிக்கை எது?

வெர்சாய் உடன்படிக்கை,
The Treaty of Versailles


02.அமெரிக்காவிற்கு சுதந்திர தேவி சிலையை பரிசளித்த நாடு எது?

பிரான்ஸ் -1886
France-1886

English words :

developer - 

a person or company that builds houses, shops etc 

உருவாக்குபவர்

Random - anything that is without a pattern 

ஒன்றுக்கொன்று தொடர்பின்றி, குறிப்பின்றி

தமிழ் இலக்கணம்: 

இளம் பயிர் வகைகளின் பெயர்

நெல், சோளம், கத்திரி - நாற்று 

மா, புளி, வாழை - கன்று

தென்னை - பிள்ளை

பனை - மடலி/ வடலி

அறிவியல் களஞ்சியம் :

அறிவியலில் உள்ள மிகவும் வியக்கத்தக்க உண்மைகளில் ஒன்று , நாம் உண்ணும் உணவைச் சுவைக்க உமிழ்நீர் தேவைப்படுகிறது என்பதுதான். ஒரு உணவு சுவைப்பதற்கு, அதிலுள்ள வேதிப்பொருட்கள் உமிழ்நீரில் கரைய வேண்டும். உணவில் உள்ள வேதிப்பொருட்கள் கரைந்தவுடன், அவற்றை நமது சுவை மொட்டுகளில் உள்ள ஏற்பிகளால் கண்டறிய முடியும். 

நீதிக்கதை

 குரங்கின் காற்றாடி

அன்று ஞாயிற்றுக்கிழமை. பள்ளி விடுமுறை என்றாலே குட்டிக் குரங்கு முத்துவிற்கும், பாலுவிற்கும் கொண்டாட்டம்தான். அப்பா எவ்வளவு சொல்லியும், துணிப்பையைக் கொண்டு செல்லாமல், நெகிழி உறைகளில் காய்கறிகளை வாங்கி வருவார் முத்துவின் அம்மா.

அந்த நெகிழி உறைகள்தான் முத்துவிற்கும் பாலுவிற்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொழுதைப் போக்கும். ஆம், அந்த நெகிழிப் பைகளை வயதான கரடி மாமாவிடம் கொடுத்து காற்றாடி செய்து வானில் பறக்கவிடுவதில் இருவருக்கும் பெரு மகிழ்ச்சி.

அப்பா குரங்கு நெகிழியால் (பிளாஸ்டிக்) எவ்வளவு தீமை என்று கூறியும், அதைக் காதில் வாங்காது, நாள்தோறும் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வரும் உறைகளை அப்படியே குப்பைத் தொட்டியில் எறிவதையே வழக்கமாகக் கொண்டிருந்தார் முத்துவின் அம்மா. வாங்கி வருகிற பெரிய உறைகளை எடுத்து காற்றாடி விட்டுக் கொண்டிருந்தான் முத்து.

எவ்வளவு சொல்லியும் மனைவியும், மகனும் மனம் திருந்தாதது கண்டு மிகவும் வருந்தினார் முத்துவின் அப்பா.

எப்பப் பார்த்தாலும் அப்பாவுக்குக் குறை சொல்றதே வேலையாகப் போய்விட்டது என முத்துவும் பாலுவும் அப்பாவின் வருத்தத்தைப் புரிந்து கொள்ளாமல் பள்ளி விடுமுறை நாட்களில் காற்றாடி விடுவதைக் கடமையாக்கிக் கொண்டனர்.

ஒரு ஞாயிற்றுக்கிழமையில் வெளியூரில் வேலை முடித்து தனது ஊருக்கு, மோட்டார் வண்டியில் வந்து கொண்டிருந்தது ஓர் இளங்கரடி.

உயரமான குன்றின் மீது பல குட்டிக் குரங்குகளுடன் காற்றாடி பறக்கவிட்டு உற்சாகமாக சத்தம் போட்டுக் கொண்டிருந்தனர் முத்துவும் பாலுவும்.

முத்துவின் காற்றாடிக்கு பாலு தன் காற்றாடி மூலம் விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தான். ஒருவரை ஒருவர் வெற்றி பெறுவதற்கான விளையாட்டு அது. அதற்காக அவர்கள் அந்நூலில் வஞ்சிர கோந்து, கண்ணாடிச் சில்லு தூள்கள், பாட்டரி கரி என பலவற்றைச் சேர்த்து, கத்தி போன்று கடினமாக்கி வைத்திருந்தனர். எதிர்பாராதவிதமாக முத்துவின் காற்றாடி அறுந்தது.

காற்றில் அசைந்து அசைந்து காற்றாடி நூல் வண்டியில் வந்து கொண்டிருந்த இளங்கரடியின் கழுத்தை அறுத்துவிட்டது.

அய்யோ! என்று அலறியது இளங்கரடி. ரத்தம் வேகமாக வெளியேறியது. அருகில் இருந்தவர்களின் உதவியோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது கரடி.

பயத்தில் செய்வதறியாது திகைத்துக் கொண்டிருந்தனர் பாலுவும் முத்துவும். அவர்களின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.

மறுநாள் செய்தித்தாளில் காற்றாடி நூலால் இளங்கரடி கழுத்து அறுபட்ட செய்தியும், அதற்குக் காரணமான முத்து, பாலுவின் படங்களும் வெளியாகியிருந்தன.

தனது தவறை உணர்ந்த குட்டிக் குரங்குகள் காவல் நிலையத்தில் தலைகவிழ்ந்து நின்றனர். தந்தையும் தாயும் வந்து காவலரிடம் மன்னிப்புக் கேட்டனர். இனி, பெற்றோரின் பேச்சை மீறுவதில்லை, பூமிக்கும் தீங்கு விளைவிப்பது இல்லை என்றும் வாக்கு அளித்தனர்.

நானும், இனி கடைகளுக்குச் செல்லும் போது துணிப்பைகளையே கொண்டு செல்வேன் என முத்துவின் தாயார் கூறினார்.

இன்றைய செய்திகள்

09.04.2026

⭐ சென்னை மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மின்தடை அதிகரித்து வருகிறது.

⭐ ஈரானை குறிவைத்து வளைகுடா நாடுகளில் உள்ள ராணுவ தளங்களில் அதி நவீன ஏவுகணைகளை அமெரிக்கா குவித்து வருகிறது.

⭐ஈரானுக்கு ராணுவ ஆயுதங்களை வழங்கும் அனைத்து நாடுகள் மீதும் 50% இறக்குமதி வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀மும்பை மற்றும் ராஜஸ்தான் இடையே  ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது ராஜஸ்தான் அணி.

Today's Headlines

⭐ Power outages are increasing in Chennai and the districts of Chengalpattu, Kanchipuram, and Tiruvallur.

⭐ The United States is deploying advanced missiles at military bases in Gulf countries targeting Iran.

⭐ Donald Trump has announced that a 50% import tariff will be imposed on all countries supplying military weapons to Iran.

 SPORTS NEWS 

🏀 In the Indian Premier League match between the Mumbai Indians and the Rajasthan Royals, Rajasthan won by 27 runs. With this, the Rajasthan Royals have secured the top position in the points table with 3 wins in 3 matches.

Covai women ICT_போதிமரம்