Sunday, February 1, 2026

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 02.02.26

சதுப்பு நில நாள்



 






திருக்குறள்: 

"குறள் 1002:

பொருளானாம் எல்லாமென்றீயா திவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு

விளக்க உரை:

பொருளால் எல்லாம் ஆகும் என்று பிறர்க்கு ஒன்றும் கொடுக்காமல் இறுகப்பற்றிய மயக்கத்தால் சிறப்பில்லாத பிறவி உண்டாம்."

பழமொழி :

A thief knows a thief.

பாம்பின் கால் பாம்பறியும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. பணத்தை விட அறிவே உயர்ந்தது

2. எனவே அறிவைப் பெருக்க அனைத்தும் படிப்போம்.

பொன்மொழி : 

கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி உனக்கு  தானாகவே வந்து சேரும்.

            -  விவேகானந்தர்

பொது அறிவு : 

01.""தென் அமெரிக்காவின் சுவிட்சர்லாந்து"" (Switzerland of South America) என்று அழைக்கப்படும் நாடு எது?

        உருகுவே  -  Uruguay

02.உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான வெப்ப நீரூற்றுகள் (hot springs) உள்ள நாடு 

எது? 

              ஜப்பான்-Japan

English words :

Greed - பேராசை

slander - அவதூறு

தமிழ் இலக்கணம்: 

 தேனீர் தேநீர் எது சரி? பிரித்து பார்க்கும் போது நமக்கு சரியான விடை கிடைத்து விடும். 
தேனீர் பிரித்தால் தேன்+ நீர் =  என்று வரும். தேன் நீர் என்பதின் பொருள் தேன் கலந்த நீர்.
தேநீர் இப்போது இதை பிரித்து பார்ப்போம். தேநீர் = தே+ நீர்
தே என்பதற்கு இறைவன், இனிமை, தேயிலை என்று மூன்று வகைப் பொருள் தரும். 
எனவே நமக்கு தேநீர் என்பது தான் சரியான வார்த்தை என்பது புரிந்து விட்டது.

அறிவியல் களஞ்சியம் :

உலகின் மர்ம பகுதிகளில் ஒன்றான மெக்சிகோவில் 'மௌன மண்டலம்' உள்ளது. இங்கு சென்றால் மின்னணு கருவிகள் எதுவுமே வேலை செய்யாது. வானொலி சமிக்ஞைகளும் கிடைக்காது. இப்படி எதுவுமே கிடைக்காத பகுதியாக உள்ள இந்த இடத்தில் மர்மங்களை அவிழ்க்க பல ஆண்டுகளாக ஆய்வாளர்கள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இன்று வரை விடை கிடைத்தபாடில்லை.

பிப்ரவரி 02

உலக சதுப்பு நில நாள் 

உலக சதுப்பு நில நாள் (World Wetlands Day) என்பது சதுப்பு நிலங்களின் முக்கியத்துவத்தினை மக்கள் அறிந்து கொள்ள கொண்டாடப்படும் நாளாகும். உலகில் உவர்நீர் நிறைந்த கடலுக்கும், நிலங்களுக்கும் இடையில் குறைந்த ஆழத்தில் ஆண்டு முழுவதும் நீர் தேங்கி இருக்கும் பகுதியாக சதுப்பு நிலங்கள் உருவாகின. பூமியின் மொத்தப் பரப்பில் 6 சதவீத பகுதி சதுப்பு நிலங்களாக உள்ளன. இவை பெரும்பாலும் இயற்கையாக உருவானவை, மனிதனால் உருவாக்கப்பட்டவை என இரண்டு பிரிவாக வகைப்படுத்தப்படுகின்றன.
அலையாத்திக் காடுகள், குட்டைகள் உள்ளிட்டவை இயற்கையாக உருவானவை என்றும், ஏரிகள், குளங்கள், நீர்தேங்கும் குவாரிப்பள்ளங்கள் ஆகியவை மனிதனால் உருவாக்கப்பட்டவை என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.

நீதிக்கதை

 நன்றி கொன்ற ஓநாய்

ஒரு நாள் அடர்ந்த காட்டில் ஓநாய் வாழ்ந்து வந்தது. அதற்கு வசமான மாமிச வேட்டை கிடைத்தது. ஆவலுடன் வேக வேகமாக இரையைத் தின்றது. அப்போது அதன் தொண்டையில் ஒரு எலும்பு சிக்கிக் கொண்டது. வலி பொறுக்க முடியாமல் ஊளையிட்டுக் கொண்டே அங்கும் இங்கும் ஓடியது. அப்போது ஒரு கொக்கு எதிரே வந்தது. அதனிடம் சென்ற ஓநாய் தனது தொண்டையில் மாட்டிக்கொண்ட எலும்பை எடுத்தால் தன்னிடம் உள்ள ஏராளமான பொன்னையும் பொருளையும் தருவதாக ஆசை வார்த்தை கூறி, உதவும்படி மிகவும் கெஞ்சியது. 

ஓநாயின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கிய கொக்கு உதவ முன் வந்தது. தனது நீண்ட அலகை ஓநாயின் வாய்க்குள் விட்டு எலும்பை எடுத்தது. சொன்னபடி பரிசு தரும்படி கொக்கு கேட்டது. பரிசா! உனக்கு... நான் தருவதா? என்று ஏளனமாகச் சிரித்தது ஓநாய். மேலும் உன் கழுத்தைக் கடித்துக் கொல்லாமல் உயிருடன் உன்னை விடுவதே பெரிது. மரியாதையாக இந்த இடத்தை விட்டு ஓடி விடு என்று விரட்டியடித்தது. நன்றியில்லாத ஓநாய்க்கு உதவியது பாவம் என்று எண்ணிக்கொண்டே கொக்கு தன் வழியே சென்றது. 

நீதி :

ஆபத்தில் உதவியவனை அலட்சியப் படுத்தக்கூடாது.

இன்றைய செய்திகள்

02.02.2026

⭐திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் நெடுஞ்சாலை எனப் பெயர் சூட்டப்படும் -மு.க.ஸ்டாலின்

⭐கேரளாவில் அரசு & அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியல் இளநிலைப் படிப்புகளை பயிலும் மாணவர்களுக்கு இனி கல்விக் கட்டணம் இல்லை என கேரள மாநில அரசு அறிவித்துள்ளது.

⭐காங்கோ நாட்டில் உள்ள தங்க சுரங்கத்தில் மண் சரிந்து விழுந்து 200 பேர் உயிரிழந்துள்ளனர்.

⭐'பிராந்திய போர் வெடிக்கும்' அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்!

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச்சை வீழ்த்தி அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
இளம்வயதில் 7 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை கார்லோஸ் அல்காரஸ் வென்று சாதனை.

🏀இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி திருவனந்தபுரத்தில் நடந்த்து.46 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா டி20 தொடரை 4-1 என கைப்பற்றியது.

Today's Headlines

⭐M.K. Stalin has announced that the Thiruvottriyur Highway will be named as Vallalar Highway.

⭐The Kerala state government has announced that there will no longer be any tuition fees for students pursuing undergraduate courses in Arts and Science in government and government-aided colleges in Kerala.

⭐ 200 workers died in the Congo gold mine due to the sand slide 

⭐ Iran  warned  US that there will be regional war.

 *SPORTS NEWS*

🏀Australian Open Tennis: Alcaraz beats Djokovic to win championship. Carlos Alcaraz wins 7 Grand Slam titles at a young age.

.🏀The 5th and final T20 match between India and New Zealand was played in Thiruvananthapuram. India won the T20 series 4-1. by 46 runs

Covai women ICT_போதிமரம்

Thursday, January 29, 2026

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 30.01.26

மகாத்மா காந்தி 






திருக்குறள்: 

குறள் 373: 

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் 
உண்மை யறிவே மிகும். 

விளக்க உரை: 

ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும் ஊழுக்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ள தாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும்.

பழமொழி :

Self control is the strongest power. 

தன்னடக்கம் தான் மிகப் பெரிய சக்தி.

இரண்டொழுக்க பண்புகள் :

1. கண்காணிக்க எவரும் இல்லாத போதும் கடைபிடிக்கப்படும் நேர்மையே உண்மையான ஒழுக்கம்.


2. எனவே எப்பொழுதும் ஒழுக்கத்தை கடைபிடிப்பேன்.

பொன்மொழி : 

சகிப்புத் தன்மையால் தான் மகான்கள் நிம்மதிப் பெறுகின்றனர்.துன்பம் வரும் காலத்தில் அமைதியாக இருக்க பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும்...

-------மார்க் ட்வைன்

பொது அறிவு : 

1.பணத்திற்கு ரூப்யா' (Rupya) என்று பெயர் சூட்டியவர் யார்?

 ஷெர்ஷா சூரி- Sher Shah Suri

02. இந்தியாவின் தற்போதைய துணை குடியரசுத் தலைவர் யார்?

திரு.ச. பொ. ராதாகிருஷ்ணன்
Thiru.C. P. Radhakrishnan

English words :

overwrought-very worried

 inception-beginning of something

தமிழ் இலக்கணம்: 

 ஒருமை பன்மை குறித்து இன்று பார்ப்போம்
பேருந்து இதை பன்மையாக மாற்றும் போது பேருந்துகள் என்றும்  புறா இதை பன்மையாக மாற்றும் போது புறாக்கள் என்றும் எழுதுகிறோம். ஏன் புறா புறாக்களாக வல்லினம் மிகுந்து வருகிறது? ஒரு எழுத்து நெடிலில்  முடியும் போது அதை பன்மைக்கு மாற்றும் போது கள் விகுதி முன்னால் வல்லினம் மிகுந்து வரும். 
எ.கா –விழா –விழாக்கள்
பூ –பூக்கள்
கனா –கனாக்கள் 
ஆ –ஆக்கள்

ஜனவரி 30

மோகன்தாசு கரம்சந்த் காந்தி  அவர்களின் நினைவுநாள் 


மோகன்தாசு கரம்சந்த் காந்தி (ஆங்கிலம்Mohandas Karamchand Gandhiகுசராத்தி அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948) என்பவர் ஒரு இந்திய வழக்குரைஞரும், அன்னிய ஆட்சியை எதிர்த்த தேசியவாதியும், அரசியல் அறனாளரும் ஆவார். இவர் மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்  .   சத்தியாக்கிரகம்  என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது. 

நீதிக்கதை

வெட்டுக்கிளியும் ஆந்தையும்


ஒரு நாள் ஒரு ஆந்தை அங்குள்ள ஒரு மரத்தின் மரப்பொந்தில் தூங்கிக் கொண்டிருந்தது. கீழே புல்தரையில் வெட்டுக்கிளி பாட்டுப்பாடிக் கொண்டிருக்கும் சத்தத்தை பொறுத்துக் கொள்ள முடியாத ஆந்தை வெட்டுக்கிளியிடம் கொஞ்சம் பாடுவதை நிறுத்தும்படி கேட்டது. வெட்டுக்கிளி ஆந்தையைப் பார்த்து நீ ஒரு குருட்டு ஆந்தை. பகலில் வெளியே வராமல் இரவில் எல்லோரும் தூங்கிய பின்புதான் நீ வெளியே வருவாய் நீ என்ன யோக்கியவானா என்று திட்டியது. 


ஆந்தை தன்னுடையத் தந்திரத்தினால்தான் வெட்டுக்கிளியை அடக்க வேண்டும் என்று நினைத்து உன் குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது. அது இன்னும் தேவகானம் போல் ஒலிப்பதற்கு என்னிடம் ஒரு அமிர்தம் இருக்கிறது. அதில் இரண்டு துளி நீ சாப்பிட்டால் போதும், உன் குரலும் அமிர்தமாய் மாறிவிடும். மேலே வந்தால் உனக்கு நான் தருகிறேன் என்றது. ஆந்தை பேச்சைக் கேட்டு ஏமாந்த வெட்டுக்கிளி மரத்தில் ஏறி ஆந்தையின் பக்கத்தில் சென்றது. வந்த வெட்டுக்கிளியை ஆந்தை பிடித்து நசுக்கிக் கொன்றது. 


நீதி :

பிறருக்கு தொந்தரவு செய்தல் கூடாது. 

இன்றைய செய்திகள்

30.01.2026

⭐சென்னையில் ரூ.822.70 கோடி செலவில் பிராட்வே ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம்-முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

⭐SIR வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு.

⭐மோதலுக்கு அமெரிக்கா-ஈரான் தயாராகி வருகின்றன: மத்திய கிழக்கில் பதற்றம் நீடிப்பு.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

🏀ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பெகுலாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு ரைபகினா முன்னேற்றம்.

Today's Headlines

⭐Chief Minister laid the foundation stone of the new integrated bus stand at Broadway-Chennai for Rs. 822.70 crore.

 ⭐ The Supreme Court has granted 10 more days to add names to the SIR voter list.

⭐Tensions continue to rise in the Middle East as the US and Iran prepare for conflict.

 SPORTS NEWS

🏀The Australian Open tennis tournament, one of the Grand Slam tournaments, is being held in Melbourne. 

🏀 Australian Open tennis: Rybakina advances to the final after defeating Pegula.

Covai women ICT_போதிமரம்

 

Wednesday, January 28, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.01.2026




 






திருக்குறள்: 

குறள் 331: 

நில்லாத வற்றை நிலையின என்றுணரும் 
புல்லறி வாண்மை கடை. 

விளக்க உரை: 

நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும்.

பழமொழி :

Learning never goes waste. 

கற்றது ஒரு போதும் வீணாகாது.

இரண்டொழுக்க பண்புகள் :

1. கண்காணிக்க எவரும் இல்லாத போதும் கடைபிடிக்கப்படும் நேர்மையே உண்மையான ஒழுக்கம்.


2. எனவே எப்பொழுதும் ஒழுக்கத்தை கடைபிடிப்பேன்.

பொன்மொழி : 

விவேகத்துடன் செயல்லாற்றுபவர் எந்த தடைகளையும் தாண்டிவருவார்.குறித்த இலக்கை அடையும் வரை அயராது உழைக்க வேண்டும்.

--------டாக்டர் ஏ பி ஜெ அப்துல் கலாம்

பொது அறிவு : 

01.நீரின் கொள்ளளவு அடிப்படையில்உலகின் மிகப்பெரிய நீர் தேக்கம் எது?

கரிபா ஏரி-Lake Kariba,
ஜாம்பேசி நதி Zambezi- ரிவேர் ஆப்பிரிக்கா - Africa

02.ஆசியாவையும் ஆப்பிரிக்காவையும் பிரிக்கும் முக்கிய நீர்வழிப்பாதை எது?

சூயஸ் கால்வாய் -The Suez Canal

English words :

invincible-unbeatable

generosity-willing to give freely

தமிழ் இலக்கணம்: 

 கட்டடம் மற்றும் கட்டிடம் வேறுபாடு இரண்டுமே கட்டுமானப் பொருளைக் குறித்துப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டாலும், சிறிய நுணுக்கமான வேறுபாடு உள்ளது. கட்டடம் (Building) என்பது ஏற்கனவே கட்டப்பட்ட அடுக்கு அடுக்கான அமைப்பைக் (Structure) குறிக்கிறது. கட்டிடம் (Site/Plot) என்பது கட்டப்படுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம், மனை அல்லது நிலத்தைக் குறிக்கும் சொல்லாகும்.

நீதிக்கதை

 பலமும் பயமும்


சிங்கம் ஒன்று காட்டு வழியே நடந்து வந்து கொண்டிருந்தது. அதற்குச் சேவல் கூவும் ஒலியைக் கேட்டால் போதும் மிகவும் பயந்துவிடும். நான் காட்டரசனாக மிகுந்த பலத்துடன் இருந்து என்ன பயன்? ஒரு சேவல் கூவுவதைக் கண்டு பயந்து வாழ்வது ஒரு வாழ்வா? என்று தனக்குத்தானே மிகவும் நொந்து கொண்டே இருந்தது. அப்போது எதிரே ஒரு யானை மிகவும் சோர்வுடன் தனது காதுகளை இருபக்கமும் வேகமாக ஆட்டிக்கொண்டே வந்தது. அதனைக் கண்ட சிங்கம், யானையாரே, மிகப் பெரிய உருவம் கொண்ட உமக்கு என்ன கவலை? ஏன் வாட்டமாக வருகிறீர்? என்று கேட்டது. 


சிங்க நண்பரே, அதையேன் கேட்கிறீர்? எனக்கு நிம்மதியே இல்லாமல் போய்விட்டது. இதோ எனது காதுகளின் பக்கத்தில் குளவி ஒன்று பறந்துகொண்டே இருக்கிறது. அது காதுக்குள் நுழைந்து கொட்டிவிட்டால் அந்த வலியைத் தாங்க முடியாது. அந்தக் குளவி காதிற்குள் நுழைந்து விடக் கூடாதே என்ற கவலையுடன் காதுகளை ஆட்டிக் கொண்டே வருகிறேன் என்று கூறியது யானை. எத்தகைய வல்லமை உள்ள உயிருக்கும் கூட அதுக்குன்னு ஒரு கவலை நிச்சயம் உண்டு. அதுபோலத்தான் நமக்கும் என்று உலக வழக்கத்தைப் புரிந்து கொண்டு அதிலிருந்து எதற்கும் கவலைப்படாமல் மகிழ்ச்சியுடன் சிங்கம் வாழ ஆரம்பித்தது. 


நீதி :

பயம், பலவீனம் இரண்டும் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் பொதுவானது.

இன்றைய செய்திகள்

29.01.2026

⭐ பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் &  சீர்மரபினர் வகுப்பை சேர்ந்தவர்களை
பொருளாதார ரீதியாக முன்னேற்றும் நோக்கில் பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் (TABCEEDCO) ரூ.25 லட்சம் வரை கடனுதவி வழங்க தமிழக அரசு
முன்வந்துள்ளது.

⭐ இந்தியாவிலேயே பெண்களை அதிகம் பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயை தடுக்கும் விதமாக தமிழ்நாட்டிலுள்ள 14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.

⭐ தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்கள் 5% குறைத்து அரசாணை  வெளியிடப்பட்டுள்ளது.

⭐சில்லறை தட்டுப்பாட்டை தீர்க்க சிறு ரூபாய் நோட்டுகளுக்கான ATM - மத்திய அரசு திட்டம். ஹைப்ரிட் ஏடிஎம்'களாக அமைக்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த ஏடிஎம்களை அமைக்க அரசு முன்னுரிமை அளிக்கும்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀வங்கதேச அணி உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. வங்கதேச அணி விலகியதால் ஸ்காட்லாந்து அணி டி20 உலகக்கோப்பையில் விளையாடவுள்ளது.

🏀பிப்ரவரி 7-ந்தேதி தொடங்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. அந்த வகையில் பாகிஸ்தானுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட ஆஸ்திரேலியா அணி முடிவு செய்தது.

Today's Headlines

⭐ Tamilnadu government has come forward to provide loan assistance of up to Rs. 25 lakhs to the Backward Classes Economic Development Corporation (TABCEEDCO), which aims to economically advance the backward classes, the most backward classes and the scheduled castes.

⭐ The Chief Minister of Tamil Nadu has launched a free vaccination program for girls under the age of 14 in Tamil Nadu to prevent oral cancer.

⭐A government order has been issued in Tamil Nadu reducing the passing marks for the Teacher Eligibility Test by 5%.

⭐Central Government Scheme for ATMs for Small Currency Notes to Address Retail Shortage. * The Central Government is considering setting up hybrid ATMs. Also
The government will prioritise installing these ATMs in places where people congregate.

 SPORTS NEWS 

🏀 Bangladesh team out of World Cup series. * The Scotland team will play in the T20 World Cup due to the Bangladesh team's withdrawal.

🏀All teams are preparing for the T20 World Cup series starting on February 7. In that regard, the Australian team has decided to play a 3-match T20 series with Pakistan.

Covai women ICT_போதிமரம்

Tuesday, January 27, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.01.2026

லாலா லஜபதி ராய்




திருக்குறள்: 

குறள் 444: 

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் 
வன்மையு ளெல்லாந் தலை. 

விளக்க உரை: 

தம்மைவிட (அறிவு முதலியவற்றால் ) பெரியவர் தமக்குச் சுற்றத்தராகுமாறு நடத்தல், வல்லமை எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.

பழமொழி :

Mistakes are lessons in disguise. 

தவறுகள் அனைத்தும் மறைந்துள்ள பாடங்கள்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. கண்காணிக்க எவரும் இல்லாத போதும் கடைபிடிக்கப்படும் நேர்மையே உண்மையான ஒழுக்கம்.


2. எனவே எப்பொழுதும் ஒழுக்கத்தை கடைபிடிப்பேன்.

பொன்மொழி : 

சிந்தனையைவிட செயலால்தான் எல்லோரையும் மாற்றி அமைக்க முடியும்.

   - வில்லியம் வேர்ஸ்ட்வொர்த்

பொது அறிவு : 

01.தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படும் இடம் எது?

பாளையங்கோட்டை -
Palayamkottai

02.உலகிலேயே மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த (Venomous) மீன் எது?

ஸ்டோன்ஃபிஷ்
Stonefish(Synanceia)

English words :

Struggle, scuffle   -   இழுபறி

Vagrant, vagabond  -  நாடோடி

தமிழ் இலக்கணம்: 

 சரியான முறையில் எண்களை தமிழில் எழுதுவது எப்படி பாகம் 2
இருபத்தி, முப்பத்தி, ஐம்பத்தி என்று எழுத கூடாது என்று பார்த்தோம். 
இருபத்து மூன்று, முப்பத்து நான்கு இவற்றில் மூன்று, நான்கு என்பவை உயிர் மெய் எழுத்துகள் எனவே அவற்றை பிரித்து எழுதலாம். ஆனால் ஐம்பத்து ஆறு என்பதில் ஆ உயிர் எழுத்து எனவே சேர்த்து எழுதுவது சிறப்பு.
ஐம்பத்தாறு, எழுபத்தியேழு, எண்பத்தொன்பது முதலியன.

ஜனவரி 28

லாலா லஜபதி ராய் அவர்களின் பிறந்தநாள்

லாலா லஜபதி ராய் ஒரு எழுத்தாளரும் அரசியல் தலைவரும் ஆவார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் இவரது பங்குக்காக இவர் பெரிதும் மதிக்கப்படுகிறார். இவரை மக்கள் பஞ்சாப் சிங்கம் எனவும் அழைப்பதுண்டு. லால்-பால்-பால் என்று அழைக்கப்படும் மூன்று முக்கியத் தலைவர்களுள் இவரும் ஒருவராவார். மற்ற இருவர் பால கங்காதர திலகர் மற்றும் பிபின் சந்திர பால் ஆவர். 'லாலா லஜபத் ராய்' பஞ்சாப் தேசிய வங்கி மற்றும் "லட்சுமி காப்புறுதி கம்பெனி" ஆகியவற்றை நிறுவியவரும் ஆவார்

நீதிக்கதை

 நாயும் அதன் நிழலும்


ஒரு இறைச்சிக் கடையில் இருந்த மாமிசத்துண்டு ஒன்றை திருடிய நாய் ஒன்று அதனை தன் வாயில் கவ்விக் கொண்டு தன் இருப்பிடம் நோக்கிச் சென்றது. தன் இருப்பிடத்திற்குச் செல்லும் வழியில் நாய் ஒரு ஓடையைக் கடக்க முயன்ற போது அதன் உருவமும், அது தன் வாயில் வைத்திருந்த மாமிசத்துண்டும் தண்ணீரில் தெரிந்தது. அதைக் கண்ட நாய் அந்த உருவம் தன்னுடையது என்று அறியாமல் தண்ணீரில் தெரிந்த மாமிசத்துண்டினையும் கவ்வ எண்ணி லொள், லொள் எனக் குரைத்து கொண்டே தண்ணீரில் தெரிந்த நாயின் மீது பாய்ந்தது. அப்போது அதன் வாயில் இருந்த மாமிசம் தண்ணீரில் விழுந்தது. மாமிசத்தைத் தேடிச் சென்ற நாய் தண்ணீரில் தத்தளித்து. ஆற்றிலிருந்து தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டால் போதும் என்று நினைத்துக் கரையேறியது. 


நீதி :

ஒருவனிடம் இருப்பதையும் இல்லாமல் போகச் செய்வது பேராசை

இன்றைய செய்திகள்

28.01.2026

⭐தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் கட்டணத்தை முறைப்படுத்தவும், பெற்றோர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கவும் வகை செய்யும் “தமிழ்நாடு பள்ளிகள் திருத்தச் சட்டம்- 2026 தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறை வேற்றியுள்ளது.

⭐சென்னையில் பெண்கள் மட்டுமே பயணிக்க 10 'பிங்க்' பஸ்
சேவைகள்- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

⭐ஐரோப்பிய ஒன்றியம் உடனான வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவிற்கு ஜவுளி மற்றும் ஆடைகள் மீதான வரி 12% லிருந்து 0% ஆகக் குறையும். ரயில்வே, கப்பல் தயாரிப்புகள் மீதான வரி 7% லிருந்து 0% ஆகக் குறையும்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது.
இந்தத் தொடர் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடக்கிறது.

🏀 இந்தியா - நியூசிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகள் முடிவில் 3-0 கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியது.

Today's Headlines

⭐TheTamilnadu Schools Act-2026 - Amendment, which will regulate the fees of private schools in Tamilnadu and provide more power to parents, has been unanimously passed in the Tamilnadu Legislative Assembly.

⭐ Tamil Nadu Chief Minister inaugurated 10 Pink bus services for women only in Chennai.

⭐The trade agreement with the European Union will see India's tariffs on textiles and clothing reduced from 12% to 0%. And tariffs on railway and shipping products will be reduced from 7% to 0%.

 SPORTS NEWS 

 🏀The Australian Open, the first Grand Slam of the year, is underway in Melbourne. The tournament runs until February 1.

 🏀 India and New Zealand are playing a 5-match T20 series. India won the series 3-0 after the first 3 matches.

Covai women ICT_போதிமரம்