Tuesday, February 10, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.02.2026

தாமஸ் ஆல்வா எடிசன்

   


 






திருக்குறள்: 

குறள் : 503

அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு. 

விளக்கம்:

அரிய நூல்களை எல்லாம் கற்று குற்றம் ஏதும் இல்லாதவரே எனினும் கூர்ந்து பார்த்தால் அவரிடமும் அறியாமை இல்லாமல் இராது.

பழமொழி :

Affection lives where kindness stays.         

கனிவு இருக்கும் இடத்தில் பாசம் வாழ்கிறது.

இரண்டொழுக்க பண்புகள் :

1. உலகில் உயர்வானது அனைத்து உயிர்களிடமும் நாம் காட்டும் அன்பும் பரிவும் தான்.

2. எனவே அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டுவோம்.

பொன்மொழி : 

கடுமையான கஞ்சத்தனம், தகுதியற்ற தற்பெருமை, எல்லையற்ற பேராசை ஆகிய மூன்றும் மனிதனை வீணாக்கி விடும் - முகம்மது நபி

பொது அறிவு : 

01.சீனப் பெருஞ்சுவரை முதன்முதலில் இணைத்து கட்ட உத்தரவிட்டவர் யார்?

சின் வம்சத்தின் முதல் பேரரசர் சின் சி ஹுவாங் - Qin Shi Huang

02.தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரைச் சமவெளி எப்பெயரால் குறிப்பிடப்படுகிறது? 

சோழமண்டலக் கடற்கரை 

Coromandel Coast

English words :

concordance -to collect all the words used in a book or a writer's work into a book or list in alphabetical order, with information about where the words can be found and in which sentences:

தமிழ் இலக்கணம்: 

 சுற்றுமா? சுழலுமா?
வாருங்கள் பார்ப்போம்
1. பம்பரம் சுழல்கிறது
2. பூமி சூரியனை சுற்றிகிறது.
ஏன் முதல் வாக்கியத்தில் சுழல்கிறது இரண்டாம் வாக்கியத்தில் சுற்றுகிறது?
ஒரு பொருள் தன்னைத் தானே சுற்றும் போது சுழல்கிறது என்று சொல்ல வேண்டும் 
வேறு பொருளை சுற்றும் போது சுற்றுகிறது என்று சொல்ல வேண்டும் 
இன்னும் சில எடுத்துக் காட்டுகள் பார்ப்போம்

1. மின்விசிறி சுழல்கிறது
2. பூமி தன் அச்சில் சுழல்கிறது
3. மாலா பூந்தோட்டத்தை சுற்றி வந்தாள் 
4. முகமது தன் வீட்டைச் சுற்றி சுற்றி விளையாடினான்.

அறிவியல் களஞ்சியம் :

500 மில்லியன் ஆண்டுகள் பழமையான புதைபடிமங்களில் உள்ள கலவை பூமியின் கார்பன் சுழற்சி குறித்த புதிய பார்வையை வழங்குகிறது. நுண்ணுயிர் எதிர்ப்பு மரபணுக்களை முடக்க, புதிய CRISPR கருவி பாக்டீரியாக்கள் முழுவதும் பரவுகிறது.

பிப்ரவரி 11

தாமஸ் ஆல்வா எடிசன் அவர்களின் பிறந்தநாள்

தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison, பெப்ரவரி 11, 1847 – அக்டோபர் 18, 1931) ஒரு அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபரும் ஆவார். இவர் ஒளி விளக்கு, ஒலிவரைவி, திரைப் படக்கருவி உள்ளிட்ட பல கருவிகளை உருவாக்கினார். திரள் உற்பத்தி, ஒன்றுபட்ட பெரிய குழுப்பணி ஆகிய கோட்பாடுகளைப் பயன்படுத்திய முதல் கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவர். தனது பெயரில் சாதனை அளவான 1093 கண்டுபிடிப்புகளின் காப்புரிமைகளைப் பதிவு செய்த எடிசன், பெருமளவு கண்டுபிடிப்புக்களைச் செய்தவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். 

நீதிக்கதை

தங்கமா? வெள்ளியா?

ஒரு நா‌ட்டி‌ல் பொருளாதார ‌நிபுண‌ர் ஒருவ‌ர் இரு‌ந்தா‌ர். அ‌ந்த நா‌ட்டு ம‌ன்ன‌ர் எந்த ஒரு முக்கியமான காரியத்தை செய்வதாக இரு‌ந்தாலு‌ம், அ‌ந்த ‌நிபுணரை அழை‌த்து ஆலோசனை‌க் கே‌ட்ட ‌பிறகே செ‌ய்வா‌ர். அவரின் புகழ் மற்ற நாடுகளுக்கும் பரவியது. 

ஒரு நா‌ள் பொருளாதார ‌நிபுணரை, அ‌வ‌ர் வ‌சி‌க்கு‌ம் ஊ‌ரி‌ன் தலைவ‌ர் அழை‌த்து‌, நீ நா‌ட்டு‌க்கே பொருளாதார ‌‌விஷய‌ங்க‌ளி‌ல் ஆலோசனை வழ‌‌ங்கு‌கிறா‌ய். ஆனா‌‌ல் உ‌ன் மகனை கவ‌னி‌க்காம‌ல் ‌வி‌ட்டு‌வி‌ட்டாயே. அவனு‌க்கு உலோக‌த்‌தி‌ல் ‌அ‌திக ‌விலை ம‌தி‌ப்பானது த‌ங்கமா? அ‌ல்லது வெ‌ள்‌ளியா எ‌ன்று கூட தெ‌ரிய‌வி‌ல்லையே. நா‌ட்டு ‌விஷய‌ங்களை கவ‌னி‌த்தது போது‌ம், ‌வீ‌ட்டையு‌ம் கொ‌ஞ்ச‌ம் கவ‌னி எ‌ன்று கூ‌றினார். 

வீ‌ட்டி‌ற்கு வ‌ந்த ‌நிபுண‌ர், தனது மகனை அழை‌த்து, மகனே.. உலோக‌த்‌தி‌ல் ‌விலை ம‌தி‌ப்பானது த‌ங்கமா? வெ‌ள்‌ளியா? எ‌ன்று கே‌ட்டா‌ர். அத‌ற்கு அ‌ந்த மக‌ன் த‌ங்க‌ம் எ‌ன்று ப‌தில‌ளி‌த்தா‌ன். உடனே, த‌‌ந்தை ‌பிறகு ஏ‌ன் இ‌ந்த ஊ‌ர் பெ‌ரியவ‌ர்க‌ள் உ‌ன்னை‌ப் ப‌ற்‌றி எ‌ன்‌னிட‌ம் புகா‌ர் கூ‌றினா‌ர்க‌ள். உ‌ன்னை நா‌ன் ச‌ரியாக வள‌ர்‌க்க‌வி‌ல்லை எ‌ன்று‌ம், த‌ங்க‌த்‌தி‌ற்கு‌ம், ‌வெ‌ள்‌ளி‌க்கு‌ம் உ‌ள்ள ‌வி‌த்‌தியாச‌த்தை‌க் கூட‌ அவ‌ன் அ‌றி‌ந்‌திரு‌க்க‌வி‌ல்லை எ‌ன்று எ‌ன்‌னிட‌‌ம் சொன்னார்கள் எ‌ன்று ச‌ந்தேக‌த்துட‌ன் கே‌ட்டா‌ர்.

அ‌த‌ற்கு அ‌ந்த மக‌ன், த‌ந்தையே, ‌தினமு‌ம் நா‌ன் ப‌ள்‌ளி‌க்கு‌ச் செ‌ல்லு‌ம் போது, உ‌ங்க‌ளிட‌ம் என்னைப் பற்றி சொல்லிய பெ‌ரியவ‌ர்க‌ள், எ‌ன்னை அழை‌த்து ஒரு கை‌யி‌ல் வெ‌ள்‌ளி நாணய‌ங்களையு‌ம், ஒரு கை‌யி‌ல் த‌ங்க நாணய‌த்தையு‌ம் வை‌த்து‌க் கொ‌ண்டு, இ‌தி‌ல் எது பெ‌ரியதோ அதை ‌நீ எடு‌த்து‌க் கொ‌ள் எ‌ன்று கூறுவா‌ர்க‌ள்.

நா‌ன் உடனே வெ‌ள்‌ளி நாணய‌ங்களை எடு‌த்து‌க் கொ‌‌‌ள்வே‌ன். அவ‌ர்க‌ள் கலகலவெ‌ன்று ‌சி‌ரி‌ப்பா‌ர்க‌ள். நா‌ன் வெ‌ள்‌ளி நாணய‌த்தை எடு‌த்து‌க் கொ‌ண்டு ப‌ள்‌ளி‌க்கு‌ச் செ‌ன்று ‌விடுவே‌ன் எ‌ன்றா‌ன். இ‌தை‌க் கே‌ட்டு அ‌தி‌ர்‌ந்த ‌நிபுண‌ர், வெ‌ள்‌ளியை ‌விட த‌ங்க‌ம்தா‌ன் ‌விலை உய‌ர்‌ந்தது எ‌ன்று உன‌க்கு‌த் த‌ெ‌ரி‌ந்‌திரு‌ந்து‌ம் ஏ‌ன் வெ‌ள்‌ளியை எடு‌த்து‌க் கொ‌ள்‌கிறா‌ய் எ‌ன்று கே‌ட்டா‌ர். 

அத‌ற்கு அ‌ந்த மக‌ன், த‌ந்தையை தனது அறை‌க்கு அழை‌த்து‌ச் செ‌ன்று, ஒரு பெ‌ட்டியை‌த் ‌திற‌ந்து கா‌ண்‌பி‌த்தா‌ன். அ‌ந்த பெ‌ட்டி ‌நிறைய வெ‌ள்‌ளி நாணய‌ங்க‌ள் இரு‌ந்தன. அ‌ப்போது மக‌ன் சொ‌ன்னா‌‌ன், த‌ந்தையே, ஒ‌வ்வொரு முறையு‌ம் அவ‌ர்க‌ள் எ‌ன்‌னிட‌ம் த‌ங்க, வெ‌‌ள்‌ளி நாணய‌ங்களை கா‌‌ண்‌பி‌க்கு‌ம் போது‌ம் நா‌ன் வெ‌ள்‌ளி நாணய‌ங்களையே எடு‌த்து‌க் கொ‌ள்வே‌ன். அதனா‌ல்தா‌ன் எ‌ன்‌னிட‌ம் இ‌வ்வளவு வெ‌ள்‌ளி நாணய‌ங்க‌ள் இரு‌க்‌கி‌ன்றன. நா‌ன் எப்போது த‌ங்க நாணய‌த்தை தே‌ர்வு செ‌ய்‌கிறேனோ அ‌ன்றுட‌ன் ‌இ‌ந்த ஆ‌ட்ட‌ம் ‌நி‌ன்று போகு‌ம். அவ‌ர்களை ஆ‌ட்ட‌த்‌தி‌ல் வெ‌ற்‌றி பெற ‌வி‌ட்டு ‌வி‌ட்டு, நா‌ன் ‌‌‌‌நிஜ‌த்‌தி‌ல் ஜெ‌யி‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறே‌ன் எ‌ன்று கூ‌றினா‌ன். இ‌ந்த ப‌திலை‌க் கே‌ட்டது‌ம் ஆன‌ந்த‌ம் அடை‌ந்தா‌ர் த‌ந்தை.

நீதி :

புத்திசாலிகளுக்கு என்றுமே வெற்றிதான். 

இன்றைய செய்திகள்

11.02.2026

⭐தமிழகத்தில் வருகிற 16-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்- வானிலை ஆய்வு மையம் தகவல்

⭐வங்கதேசம் தயாரிக்கும் ஆடை, ஜவுளிப் பொருட்களுக்கு முழு வரி விலக்கு அளிக்க அமெரிக்க அரசு முடிவு

⭐கேரளாவின்  மாற்றுதிறனாளி சிவில் நீதிபதி என்ற பெருமையை 24 வயதான தன்யா நாதன் பெற்றுள்ளார்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து 10-வது டி20 உலகக் கோப்பை தொடரை நடத்தி வருகின்றன. இந்த தொடரில் இன்று நடைபெறும் 14-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - அயர்லாந்து அணிகள் மோதவுள்ளனர்.

Today's Headlines

⭐The Meteorological Department has informed that dry weather is likely to prevail in Tamil Nadu till the 16th. 

⭐The US government has decided to provide full duty exemption on garments and textile products manufactured in Bangladesh

⭐24-year-old Tanya Nathan has been named Kerala's most physically challenged civil judge. 

 *SPORTS NEWS*

🏀 India and Sri Lanka are jointly hosting the 10th T20 World Cup. Australia and Ireland will face each other in the 14th league match of the series today.

Covai women ICT_போதிமரம்

Monday, February 9, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.02.2026


  


 






திருக்குறள்: 

குறள் 502: 
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் 
நாணுடையான் கட்டே தெளிவு.                         
விளக்க உரை: 

நல்லகுடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழியாச் செயல்களைச் செய்ய அஞ்சுகின்ற நாணம் உடையவனையே நம்பித் தெளிய வேண்டும்.

பழமொழி :

Knowledge is the real wealth.         

அறிவே உண்மையான செல்வம்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. உலகில் உயர்வானது அனைத்து உயிர்களிடமும் நாம் காட்டும் அன்பும் பரிவும் தான்.

2. எனவே அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டுவோம்.

பொன்மொழி : 

செல்வத்தை உண்டாக்குவது உழைப்பு. உலகத்தை இயக்குவதும் உழைப்பே - வெப்ஸ்டர் 

பொது அறிவு : 

01.இந்திய தத்துவம்"" (Indian Philosophy) என்ற புகழ்பெற்ற நூலை எழுதியவர் யார்?

டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் 

 Dr. S. Radhakrishnan 

02. உலைகள் மற்றும் உருகிய உலோகங்களில் உள்ள  அதிக வெப்பநிலையை அளவிடப்  பயன்படுவது எது?

       பைரோமீட்டர் 

Pyrometer 

English words :

gaze-look with administration

peek-look secretly

தமிழ் இலக்கணம்: 

 தோப்பா‌ தோட்டமா? 
எந்த எந்த மரம் செடி கொடிகளுக்குப் பின்னால் தோப்பு என்ற சொல் வரும் அல்லது தோட்டம் என்ற சொல் வரும். இன்று காண்போம்.
மிக நீண்ட நாட்கள் இருந்து பயன் தரும் மரம் செடிகள் கூட்டம் தோப்பு என்று அழைக்கப்படும் குறுகிய கால மரம் செடிகள் கூட்டம் தோட்டம் என்று அழைக்கப் படும்
எ. கா : தென்னந் தோப்பு –நீண்ட கால பயன் தரும் மரம்
வாழைத் தோட்டம் குறுகிய கால பயன் தரும் மரம்.
மாந்தோப்பு 
பூந்தோட்டம்
சவுக்குத் தோப்பு
மல்லிகைத் தோட்டம்

அறிவியல் களஞ்சியம் :

நாசாவின் ஆர்டெமிஸ் II (Artemis II) நிலவு ராக்கெட் ஏவுதளத்திற்கு வந்துள்ளது. செவ்வாய் கிரகத்தில், பெர்செவரன்ஸ் ரோவர் முதன்முதலில் AI மூலம் திட்டமிடப்பட்ட பயணத்தை (AI-Planned Drive) மேற்கொண்டுள்ளது.

நீதிக்கதை

வாழ்க்கைக்கு வழிகாட்டிய பறவை

ஒரு கிராமத்தில் ராமு என்று ஒருவன் இருந்தான். அவனுக்குப் போதுமான அளவு செல்வம் இருந்தது!  அவன் மிகவும் சோம்பேறி. கிராமத்தில் உள்ளவர்கள் வேலைக்குச் செல்லும்போது இவன் மட்டும் உறங்கிக்கொண்டிருப்பான். 

ஒருநாள் மாலை அவன்   ஒரு சிறிய அழகான பறவையைப் பார்த்து தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றான். அதனுடன் விளையாடிப் பொழுதைக் கழிக்கலாம் என்று நினைத்து பறவைக்குச் சிறிது உணவு அளித்தான். அது உணவு உண்ணும் அழகைக் கண்டு ரசித்தான். சற்று நேரத்தில் இருட்டிவிட்டது! வழக்கம் போல் தூங்கி விட்டான். 

பொழுது விடிந்தது. கண்விழித்துப் பார்த்த அவன் அதிர்ந்து போனான்! அவன் உணவளித்த பறவை சுமார் மூன்றடி உயரம் வளர்ந்திருந்தது!

நான் சிறிய பறவையைத்தானே எடுத்து வந்தேன்! நீ எடுத்து வந்த பறவைதான் நான்! வளர்ந்துவிட்டேன். எனக்குப் பசிக்கிறது, ஏதாவது சாப்பிடக்கொடு என்றது பறவை. அதற்கு சிறிது தானியங்களைப் போட்டான். பறவை அதைத் தின்றுவிட்டு மீண்டும் பசிக்கிறது என்றது. 

ராமு தனக்காக இருந்த உணவையும் பறவைக்கு அளித்து விட்டான்.  வீட்டைவிட்டு வெளியே சென்றான். பகல் முழுதும் வெளியில் இருந்து விட்டு இரவு வீடு வந்து பார்த்தான். அந்தப் பறவை மிகப் பெரியதாக வளர்ந்து வீடு முழுவதையும் அடைத்துக் கொண்டிருந்தது! அவனால் வீட்டிற்கு உள்ளே செல்ல முடியவில்லை! 

ராமுவுக்கு பயமும் அதிர்ச்சியும் ஏற்பட்டது. வெளியே, குளிரில் படுத்து உறங்கினான். விடிந்தது! ராமு பசியாக இருந்தான். அப்போது அவ்வழியே மூட்டையைச் சுமந்து கொண்டு வந்த ஒரு வண்டியிலிருந்து இறங்கிய பெரியவர் ராமுவைப் பார்த்து, தம்பீ, மூட்டையை சற்று இறக்கித்தா. நான் உனக்குப் பணம் தருகிறேன் என்றார். 

எனக்கு உணவு கிடைக்குமா? வாங்கித் தருகிறேன் என்றார் பெரியவர். பசியோடு இருந்தவனுக்கு அவர் வாங்கித்தந்த உணவு அமிர்தமாக இருந்தது. சாப்பிட்டபின் வீட்டுக்குச் சென்றான். 

 பறவை சற்று சிறிதாக மாறியிருந்தது! எப்படி இது என்றான் ராமு. உன் சோம்பல் சற்று குறைந்துவிட்டது அல்லவா? அதனால்தான் என்றது. 

மறுநாள் கூலி வேலைக்குச் சென்றான். கிடைத்த கூலியில் வயிறார உண்டான். உணவை பறவைக்கும் வாங்கிக் கொண்டான். அவனுக்கு சந்தோஷமாக இருந்தது! இனி உழைத்து உண்ண வேண்டும் என்று தீர்மானித்து வீட்டுக்குச் சென்றான். 

பறவை முதலில் இருந்தது போலவே மிகவும் சிறியதாக இருந்ததைக் கண்டான்! இது எப்படி? என்று பறவையைக் கேட்டான். உன் சோம்பேறித்தனத்தை மாற்றவே நான் அப்படி செய்தேன். நான் வந்த வேலை முடிந்தது என்றது பறவை. 

எனக்கு மிகவும் மகிழ்ச்சி! இந்த உணவைச் சாப்பிடு என்றான் ராமு. என் மீது நீ கொண்ட அன்பிற்கு நன்றி! எனக்கு உணவு வேண்டாம். உன் சோம்பல் நீங்கியதே அதுதான் எனக்கு நிம்மதி! என் உணவை நான் தேடிக்கொள்ளுவேன் என்று கூறிவிட்டு வானை நோக்கிப் பறந்தது. 

அது வானில் ஓரு புள்ளியாய் மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்த ராமுவிற்கு அழுகை வந்தது. இது உலகிற்கு ஞானத்தை ஊட்ட நினைக்கும் பறவை போலிருக்கிறது என்று கண்களைத் துடைத்துக்கொண்டார். 

நீதி :

உழைத்து சாப்பிட்டால் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலைக்கும்.

இன்றைய செய்திகள்

10.02.2026

⭐சந்திரயான்-4 லேண்டர் தரை இறங்குவதற்கான இடம் கண்டறியப்பட்டுள்ளது- இஸ்ரோ தகவல்

⭐டிஎன்பிஎஸ்சி சார்பில், ஒத்திவைக்கப்பட்டிருந்த குரூப் 2,2ஏ தேர்வுகள் மார்ச் 15ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

⭐மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழக ரயில் திட்டங்களுக்கு ₹7,611 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀டி20 உலகக் கோப்பை: ஓமனை எளிதாக வீழ்த்தியது ஜிம்பாப்வே.
முதலில் பேட்டிங் செய்த ஓமன் 103 ரன்னில் சுருண்டது.
ஜிம்பாப்வே 13.3 ஓவரில் சேஸிங் செய்தது.

Today's Headlines

⭐ISRO has Informed that the Landing Site for   Chandrayaan-4 Lander   has been found.

⭐TNPSC has announced that the postponed Group 2, 2A exams will be held on March 15th.

⭐Central government has allocated ₹7,611 crore  for Tamilnadu rail projects in the budget.

 *SPORTS NEWS* 

🏀T20 World Cup: Zimbabwe beat Oman easily. Batting first, Oman were bowled out for 103. Zimbabwe chased down the target in 13.3 overs.

Covai women ICT_போதிமரம்

Sunday, February 8, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.02.2026

 




 








திருக்குறள்: 

குறள் 501: 

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் 
திறந்தெரிந்து தேறப் படும். 

விளக்க உரை: 

அறம், பொருள், இன்பம், உயிர்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான்.

பழமொழி :

Hard paths create strong people. 

கடினமான பாதைகள் வலிமையான மனிதர்களை உருவாக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. உலகில் உயர்வானது அனைத்து உயிர்களிடமும் நாம் காட்டும் அன்பும் பரிவும் தான்.

2. எனவே அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டுவோம்.

பொன்மொழி : 

வலிமையே மகிழ்ச்சிகரமான, நிரந்தரமான, வளமான, அமரத்துவமான வாழ்க்கை ஆகும்
- சுவாமி விவேகானந்தர்

பொது அறிவு : 

01.உலகின் மிகப்பெரிய பள்ளி எது?

 சிட்டி மாண்டிசோரி பள்ளி  லக்னோ,இந்தியா
City Montessori School -Locknow, India


02.பூமியின் வடக்கே உள்ள கடைசி நகரம் எது?

லாங்கியர்பைன்-நார்வே 
Longyearbyen- Norway

English words :

clance-look quickly 

stare -looked fixedly

அறிவியல் களஞ்சியம் :

மலிவான AI சாட்பாட்கள் குறைந்த வசதி கொண்ட இடங்களில் மருத்துவ நோயறிதலை எளிதாக்குகின்றன. தோல் மீளுருவாக்கத்திற்கு உதவும் ‘rete ridges’ என்ற தண்டு செல் கட்டமைப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

நீதிக்கதை

 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

கோபுரத்தில் சில நீல நிறப்புறாக்களும் சில வெள்ளை நிறப் புறாக்களும் அடைக்கலமாகி இருந்து வந்தன. கோபுரத்தில் சுத்தம்  வேலைகள் தொடங்க ஆரம்பித்ததால் இது நாள் வரை எதிரும் புதிருமாக இருந்து வந்த இருவகைப் புறாக் கூட்டமும் இப்போது ஒன்று கூடி வேறொரு இடம் தேடி புறப்பட்டன.

செல்லும் வழியில் ஓரிடத்தில் வெயிலில் உலர்த்துவதற்காக பரப்பப்பட்ட தானியங்களை கண்டதும் அனைத்தும் ஒன்று கூடி தானியங்களை தின்று தீர்த்து விட்டு மரக்கிளை ஒன்றில் அமர்ந்தன. 

தானியத்தை உலர்த்தும் பொருட்டு பரப்பி விட்டு சென்ற வேடன் தானிய மணிகள் ஒன்று கூட இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தான். தானியங்கள் காயப்போட்ட இடத்தில் புறாக்களின் எச்சம் கிடப்பதை பார்த்து வேடன் என்ன நடந்தது என்பதை ஊகித்தான்.

நாளைக்கு இந்த புறாக்களை எப்படியும் வலை விரித்து பிடித்து விட வேண்டும் என்று முடிவு செய்து அதன்படி மறுநாள் தயார் செய்து வலை விரித்தான். அடுத்த நாள் அங்கே வந்த புறாக்கள் தானியத்தைப் பார்த்ததும், அதை உண்ணும் ஆசையில் வேகமாக தரையிறங்கி உண்ணத் தொடங்கின. சில மணித்துளிகளில் அதன் கால்கள் வலைகளில் சிக்கிக் கொண்டன.

சற்று தொலைவில் மறைந்திருந்த வேடன் நிலைமையை நன்கு புரிந்து கொண்டு புறாக்களை பிடிக்க ஓடி வந்தான். வேடன் வருவதைப் பார்த்த புறாக்கள் ஆபத்தை உணர்ந்து கொண்டு, உயிர் மீதுள்ள ஆசையினால் புறாக்கள் எல்லாம் ஒன்றாக இறக்கையை விரித்து பறக்க, வலையோடு புறாக்கள் பறக்க ஆரம்பித்தன.

உடனே வேடன், அய்யய்யோ... புறாக்கள் போனாலும் பரவாயில்லை. நான் கஷ்டப்பட்டு தயாரித்த வலையும் அதோடு போகிறதே... என்று புலம்பிக் கொண்டே, பறந்து செல்லும் புறாக்களின் பின்னே ஓடினான். பறந்து செல்லும் போதே, அதில் இருந்த வெள்ளைப் புறாக்கள் கர்வத்தோடு, எங்களது வலிமையால்தான் நீங்களும் காப்பாற்றப்பட்டு இருக்கிறீர்கள். நாங்கள் சிறகை மிக வேகமாக அடித்து பறக்கவில்லை என்றால்....அவ்வளவுதான் என்று கூறின.

உடனே நீல நிறப் புறாக்களும் தன் பங்கிற்கு, நாங்கள்தான் வலிமையோடு பறந்தோம். உங்களுக்கு அழகு இருக்கலாம், ஆனால் ஆற்றல் கிடையாது என்று கூறிக் கொண்டு ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டே பறந்ததினால், அதன் பறக்கும் வேகம் குறைய ஆரம்பித்து, ஒரு மரக்கிளையில் வலை சிக்கிக் கொண்டது.

இதனைப் பார்த்த வேடனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற பழமொழிக் கேற்ப இப்புறாக்கள் தப்பி விடுமோ என்று பயந்தேன். நல்லவேளையாக ஒற்றுமை நீங்கினால் அனை வருக்கும் தாழ்வு என்ற நெறிப்படி பறந்த புறாக்களே நன்றி என்று புறாக்களைப் பார்த்து கூறிக் கொண்டே அவைகளை தனது கூடைக்குள் போடத் தொடங்கினான்.

நீதி:ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.

இன்றைய செய்திகள்

09.02.2026

⭐ இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்காக நீட் நுழைவுத்தேர்வுக்கு இன்று முதல் மார்ச் 8-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

⭐சென்னையில் கடும் பனிமூட்டம் விமான சேவைகள் பாதிப்பு

⭐ சவுதி அரேபிய அரசு இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு வழங்கி வந்த கச்சா எண்ணெயை விலையை குறைக்க (ரூ.25) முடிவு செய்து உள்ளது. 

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀டி20 உலகக்கோப்பை அயர்லாந்தை 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஸ்ரீலங்கா.

🏀 ஆசிய துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியா தங்கம் வென்றது.

Today's Headlines

⭐ Applications for the NEET entrance exam for admission to undergraduate medical courses can be submitted till March 8 itself.

⭐ Heavy fog in Chennai affects flight services

⭐ The Saudi Arabian government has decided to reduce the price of crude oil supplied to Asian countries, including India (by Rs.25). 

 SPORTS NEWS 

🏀Sri Lanka defeated Ireland by 20 runs in the T20 World Cup.

🏀India won gold at the Asian Shooting Championships.
Covai women ICT_போதிமரம்

Thursday, February 5, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.02.2026




 






திருக்குறள்: 

குறள் 283: 

களவினா லாகிய ஆக்கம் அளவிறந் 
தாவது போலக் கெடும்.     

விளக்க உரை: 

களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவது போல் தோன்றி இயல்பாக இருக்க வேண்டிய அளவையும் கடந்து கெட்டு விடும்.

பழமொழி :

Work hard in silence ; let success make the noise. 

அமைதியாக உழை; வெற்றி உன் பெயரை பேசட்டும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. பணத்தை விட அறிவே உயர்ந்தது

2. எனவே அறிவைப் பெருக்க அனைத்தும் படிப்போம்.

பொன்மொழி : 

படித்த ஜாதி, படிக்காத ஜாதி என்றொரு ஜாதி உண்டாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

  - காமராஜர்

பொது அறிவு : 

01.இந்திய சினிமா துறையில் வாழ்நாள் பங்களிப்பிற்காக இந்திய அரசால் வழங்கப்படும் மிக உயர்ந்த தேசிய விருது எது?

தாதாசாகேப் பால்கே விருது  Dadasaheb Phalke Award

02.நவீன "தமிழ் உரைநடையின் தந்தை" எனப் போற்றப்படுபவர்யார்?
 ஆறுமுக நாவலர்
Arumuga Navalar 

English words :

strangle-choke

cranky-easily irritable

தமிழ் இலக்கணம்: 

 சுடு தண்ணீர்
இது தவறு. 
சுடு என்றால் சூடான
தண்ணீர் பிரித்தால் தன்மை+நீர் என்று வரும். தன்மை என்றால் குளிர்ந்த என்று பொருள் 
இப்போ சுடு தண்ணீர் என்பதன் பொருள் சூடான குளிர்ந்த நீர் என்று ஆகி விடும். இது தவறு எனவே சுடு நீர் அல்லது வெந்நீர் என்றே சொல்ல வேண்டும்

அறிவியல் களஞ்சியம் :

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, இப்பகுதி 'தெதிஸ் கடல்' என்று அழைக்கப்பட்ட கடலாக இருந்தது என்று ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. இந்த பாலைவனத்தின் தற்போதைய மேற்பரப்பு, பண்டைய கடற்பரப்பின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

உள்ளூர்வாசிகள் இந்த பாலைவனத்தில் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் அல்லது ஏலியன்கள் இருப்பதாகக் கூறுகின்றனர்.

பிப்ரவரி 06

பெண் பிறப்புறுப்பு சிதைவுக்கான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை நாள் (FGM), ஆண்டுதோறும் பிப்ரவரி 6 அன்று அனுசரிக்கப்படுகிறது, இது முன்னேற்றத்தை முன்னிலைப்படுத்தவும் இந்த தீங்கு விளைவிக்கும் நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவர விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

நீதிக்கதை

 சிங்கத்தின் வீரம்

ஒரு காட்டில் சிங்கம் ஒன்று இருந்தது. அந்த சிங்கத்தின் பிடரி ரோமங்களுக்கிடையே ஒரு ஈ வாழ்ந்து வந்தது. அந்த ஈ, நான் சிங்கத்தின் பிடரி ரோமங்களுக்கிடையே வாழ்ந்திருப்பதால்தான், சிங்கம் இவ்வளவு வீரமாக இருக்கிறது. நான் இருப்பதால்தான் சிங்கம் நன்றாக வேட்டையாடி பசி இல்லாமல் இருக்கிறது.

இந்த சிங்கத்தின் வாழ்விற்கே நான்தான் காரணம். நான் இல்லாவிட்டால், சிங்கத்தால் எதுவுமே செய்யமுடியாது என்று நினைத்துக் கொண்டிருந்தது. ஒரு நாள், தலை அரித்ததால் ஒரு சிறு மரத்தில் தலையை உரசிக்கொண்டது சிங்கம். ஈ இதை எதிர்பார்க்காததால், மரத்திற்கும் சிங்கத்தின் தலைக்குமிடையே சிக்கி சற்று அழுந்திவிட்டது. மிகவும் கோபம் வந்துவிட்டது ஈ க்கு. அது பறந்து சிங்கத்தின் முன்னால் வந்து கேட்டது. 

ஏய்.... சிங்கமே! உனக்கு என்ன அறிவு கெட்டுப் போய்விட்டதா? ஏன் தலையை மரத்தில் உரசி, உன் பிடரியில் வசிக்கும் எனக்குத் தொந்தரவு செய்கிறாய்? இதோ, நான் உன்னைவிட்டு இப்போதே போகிறேன்! என்னை இழந்து நீ துன்பப்பட்டால்தான் உனக்கு என் அருமை புரியும். சிங்கத்திற்கு ஒன்றுமே புரியவில்லை. அது மீண்டும் மரத்தில் தலையை உரசியது. அப்போது, மரம் அசைந்து சருகுகள் உதிர்ந்தன.

இதைப் பார்த்துக் கத்தியது ஈ அட... முட்டாள் சிங்கமே, பார்! நான் உன்னைவிட்டுப் போகிறேன் என்று சொன்னவுடனே, காற்றடித்து சருகுகள் உன் மீது உதிர்கின்றன. இனி வரக்கூடிய துன்பங்களையெல்லாம் நன்றாக அனுபவி! இனிமேல் நான் உனக்கு உதவி செய்யமாட்டேன். பிறகு ஈ பறந்து சென்றது. இந்த ஈ இவ்வளவு காலம் என் பிடரியில் இருந்தது என்று இப்போதுதான் எனக்குத் தெரிகிறது என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டது சிங்கம். தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது என்று அகம்பாவம் கொள்பவர்கள் இந்த ஈக்களைப் போன்றவர்கள்தான். எத்தனையோ அறிஞர்களும், மகான்களும், பேராற்றல் மிக்கவர்களும் வந்து சென்ற இடம் இந்த உலகம். அந்த நினைவும், பணிவும் நமக்கு வேண்டும்.

இன்றைய செய்திகள்

06.02.2026

⭐ரூ.1,267 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

⭐தமிழகத்தில் வெப்பநிலை உயரக்கூடும்- வானிலை ஆய்வு மையம் தகவல்

⭐ இந்தியாவின் தலைநகர் டெல்லியில் 2026-ஆம் ஆண்டின் முதல் 15 நாட்களில் மட்டும் 807 பேர் காணாமல்போயி ருப்பதாக டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ளது. 

⭐ இந்தியாவின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO), "திட எரிபொருள் ராம்ஜெட்" என்ற மிக நீண்ட தூரம் சென்று வான் இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைத் தொழில்நுட்பத்தை செயல்படுத்துகிறது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 7-ந்தேதி தொடங்குகிறது.
நடப்பு சாம்பியனான இந்திய அணி மூன்றாவது முறை சாம்பியன் ஆக வாய்ப்பு உள்ளது.

🏀டிராபி. 2025-26 ரஞ்சி டிராபி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.  காலிறுதி போட்டிகள் நாளை முதல் தொடங்க உள்ளது.

Today's Headlines

⭐Chief Minister M.K. Stalin laid the foundation stone for new projects worth Rs. 1,267 crore. 

⭐ The Meteorological Department warned that temperatures may rise in Tamil Nadu.

⭐ Delhi Police has revealed that 807 people went missing in the first 15 days of 2026 alone in the Indian capital Delhi.

⭐The Defence Research and Development Organisation (DRDO) is implementing a "solid fuel ramjet" missile technology that can hit air targets from a very long distance.

 SPORTS NEWS 

🏀The 10th T20 World Cup begins on the 7th. The defending champions, India, have a chance to be the champions for the third time.

🏀Trophy. The 2025-26 Ranji Trophy is currently underway. The quarter-finals are set to begin tomorrow.

Covai women ICT_போதிமரம்

 

Wednesday, February 4, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.02.2026

கிறிஸ்டியானோ ரொனால்டோ

   


 






திருக்குறள்: 

குறள் 417: 

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந் 
தீண்டிய கேள்வி யவர்.        

விளக்க உரை: 

நுட்பமாக உணர்ந்து நிறைந்த கேள்வியறிவை உடையவர், ( ஒரு கால் பொருள்களைத்) தவறாக உணர்ந்திருந்தாலும் பேதைமையானவற்றைச் சொல்லார்.

பழமொழி :

Effort is the key to success. 

முயற்சியே வெற்றியின் சாவி.

இரண்டொழுக்க பண்புகள் :

1. பணத்தை விட அறிவே உயர்ந்தது

2. எனவே அறிவைப் பெருக்க அனைத்தும் படிப்போம்.

பொன்மொழி : 

பிறரிடம் உள்ள நல்ல விஷசயங்களை கற்றுக் கொள்ள மறுப்பவன் இறந்தவனுக்கு சமம்.

       - விவேகானந்தர்.

பொது அறிவு : 

01. எந்த நாட்டின் பாராளுமன்றம் அமைதிக்கான நோபல்  பரிசை தேர்வு செய்து பரிந்துரைக்கிறது?

நார்வே பாராளுமன்றம்

The Norwegian Parliament 

02.பலூனில் முதல்முறையாக  உலகைச் சுற்றிப் பறந்த முதல் அமெரிக்கர் யார்?

ஸ்டீவ் ஃபோசெட் -Steve Fossett

English words :

haunting-sad and unforgettable 

piblings-aunt and uncle

தமிழ் இலக்கணம்: 

 அது, இது, அஃது, இஃது 
உயிர் மெய் எழுத்துக்கு முன் அது, இது வரும்
எ. கா. அது மாலாவின் புத்தகம்
இது பாரதியின் வீடு
ஆனால் உயிர் எழுத்துக்கு முன்னால் அஃது, இஃது தான் வரும்
அஃது 
*உ* ன்னுடைய வீடா?
இஃது 
*அ* வரின் கவிதை

அறிவியல் களஞ்சியம் :

இந்த பாலைவனம் நீண்ட காலமாக 'இருண்ட மண்டலம்' என வகைப்படுத்தப்பட்டுள்ளது. பல தசாப்தங்களாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், இந்த நிகழ்விற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. அமெரிக்க ஆய்வுக்குப் பிறகு, மெக்சிகோ அரசு சிஹுவாஹுவா பாலைவனத்தில் ஒரு பெரிய ஆய்வகத்தை நிறுவியது. இது 'தி ஜோன்' என அறியப்படுகிறது.

பிப்ரவரி 05

கிறிஸ்டியானோ ரொனால்டோ அவர்களின் பிறந்தநாள்


கிறிஸ்டியானோ ரொனால்டோ டோசு சாண்டோசு அவேரோ (பிறப்பு: 5 பிப்ரவரி 1985 ) ஒரு போர்த்துகீசிய கால்பந்து வீரர் ஆவார். இவர் சவுதி புரோ லீக்கில் அல் நாசர் அணிக்காகவும், போர்ச்சுகல் தேசிய அணிக்காகவும் விளையாடுகிறார். ஒரு முன்கள வீரரான இவர் தான் விளையாடும் அணிகளின் தலைவராகவும் உள்ளார். ரொனால்டோ ஐந்து பாலோன் தி'ஓர் விருதுகளையும், மூன்று யுஇஎஃப்ஏ ஆண்டின் சிறந்த வீரர் விருதுகளையும், நான்கு ஐரோப்பிய தங்க காலணி விருதுகளையும் வென்றுள்ளார். இவர் ஏழு லீக் பட்டங்கள், ஐந்து யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு, யூஈஎஃப்ஏ ஐரோப்பிய கோப்பை மற்றும் யூஈஎஃப்ஏ பன்னாட்டு கூட்டிணைவு உட்பட 33 கோப்பைகளை வென்றுள்ளார்.

நீதிக்கதை

ஒரு ஊரில் ஒரு குட்டிப்பறவை இருந்தது. அது பல இடங்களுக்கும் உணவு தேடி பறந்தது. ஓரிடத்தில், ஒரே ஒரு புழு சுற்றிக்கொண்டிருந்தது. பறவை அதைக் கொத்த முயன்ற போது, புழு பறவையிடம், என்னை மட்டும் சாப்பிட்டு விட்டால், உன் பசி தீர்ந்து விடுமா? சற்று தூரத்தில் நாற்பது, ஐம்பது புழுக்கள் இருக்கின்றன. கொஞ்ச தூரம் பறந்து சென்றால் அவற்றையும் சேர்த்து சாப்பிடலாம், என்றது. இரக்கமில்லாத அந்தப் பறவை, எப்போதோ கிடைக்கப் போகும் நாற்பது, ஐம்பது புழுக்களுக்காக, உன்னையும் விட்டு விட்டால் என்னாகும்? இப்போது, உன்னைத் தின்று பசியாறிக் கொள்கிறேன். பிறகு என் வழியில் நான் செல்கிறேன், என்று சொல்லி, புழுவை விழுங்கி விட்டது.


கொஞ்ச தூரம் பறந்து சென்று ஓரிடத்தில் அமர்ந்தது. அது அமர்ந்த இடம் ஒரு வலை. அதில் இருந்து மீள முடியவில்லை. வேடன் அதை தூக்க வந்தான். பறவை அவனிடம், வேடனே! நான் சாதாரண குஞ்சுப்பறவை. என்னிடம் என்ன இறைச்சி இருக்கும்! என்னுடன் வா! என் இருப்பிடத்தில் பல கொழுத்த பறவைகள் உள்ளன. அவற்றைப் பிடித்துச் சென்றால், உனக்கு நிறைய இறைச்சி கிடைக்கும் என்று சொல்லி தப்பிக்கப் பார்த்தது. அட பறவையே! நாளை கிடைக்கப்போகும் பலாக்காய்க்காக, இன்று கிடைக்கும் கிளாக்காயை எவனாவது விடுவானா? ஹூம்... இன்றைய உணவையே நான் பார்க்கிறேன், நாளைக்குரியதை, அந்த நாராயணன் பார்த்துக் கொள்வான், என்றவன், பறவையின் கழுத்தை திருகி விட்டான்.

நீதி: நாம் பிறருக்கு துன்பம் விளைவிக்கும்போது  நமக்கும் இன்னல் வரும்.

இன்றைய செய்திகள்

05.02.2026

⭐'என் கனவு என் எதிர்காலம்' திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

⭐தமிழகத்தில் ஆதிதிராவிடர் முன்னேற்றத் திட்டத்தின் கீழ் 2025-26 நிதியாண்டில் ரூ.66.37 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் மேலும் 1,514 ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு ரூ.14.35 கோடி சிறு வணிக கடன் வழங்கப்பட்டுள்ளது.

⭐மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை வாபஸ் பெறுவதாக உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀16-வது இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் நடந்து வருகிறது.

Today's Headlines

⭐Chief Minister M.K. Stalin launched the project "My Dream My Future"

⭐In Tamil Nadu, Rs. 66.37 crore has been allocated under the Adi Dravidar Munnetra Kazhagam (ADMP) in the financial year 2025-26, and Rs. 14.35 crore of small business loans have been provided to 1,514 Adi Dravidar beneficiaries.

⭐Home Ministry of  India announced withdrawal of President's rule in Manipur.

*SPORTS NEWS*

🏀The 16th Under-19 Cricket World Cup is going on in Zimbabwe and Namibia.

Covai women ICT_போதிமரம்