Tuesday, March 10, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.03.2026

 


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதப்போகும் 
அனைத்து மாணாக்கர்களுக்கும் நல்வாழ்த்துகள் 


 






திருக்குறள்: 

குறள் 617: 
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான் 
தாளுளாள் தாமரையி னாள்.
   
விளக்க உரை:

 ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள், சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்.

பழமொழி :

Live and let live.

 வாழு வாழ விடு.

இரண்டொழுக்க பண்புகள் :.

1.   திட்டமிட்டு செயல் பட்டால் வெற்றி நிச்சயம்.

2.எனவே  ஒரு செயலை தொடங்கும் முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு செயல் பட வேண்டும்.

பொன்மொழி : 

எல்லோரையும் அன்புடன் அரவணைக்கும் ஒருவரால் எந்த நிலையையும் கடந்து முன்னேற முடியும் .

_____ அன்னை தெரசா

பொது அறிவு : 

01.தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் யார்?

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

Dr. Muthulakshmi Reddy 

02.இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

டாக்டர் விக்ரம் சாராபாய்

Dr.Vikram Sarabhai

English words :

Skippered -actors a captain of a boat or a ship

Exhausted-completely tired

அறிவியல் களஞ்சியம் :

புவியியல் துருவங்கள் (geographic poles) என்பவை பூமியின் சுழற்சி அச்சில் உறுதியாக நிலைத்திருப்பவை. ஆனால் காந்தத் துருவங்கள் அப்படியல்ல; அவை காலப்போக்கில் மெதுவாகவும், சில சமயங்களில் வேகமாகவும் இடம் மாறிக்கொண்டே இருக்கின்றன.

இந்த நகர்வு, வழிகாட்டல் (navigation), புவியியல் ஆய்வுகள் (geophysical surveys), அறிவியல் ஆராய்ச்சிகள் எனப் பல துறைகளில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்துகிறது.

மார்ச் 11

சர் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் அவர்களின் நினைவுநாள்

சர் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் (Sir Alexander Fleming) (ஆகஸ்ட் 6, 1881 – மார்ச் 11, 1955) நுண்ணுயிர் கொல்லியான சிதைநொதியைக் கண்டுபிடித்தவர். மேலும், நுண்ணுயிர் கொல்லியான பெனிசிலினை பெனிசிலியம் நொடேடம் (Penicillium notatum) என்ற பூஞ்சையிலிருந்து பிரித்தெடுத்தார்.

உலகம் அறிந்துள்ள மருத்துவ முன்னேற்றங்களுள் பெனிசிலின் கண்டுபிடிப்பு தனிச்சிறப்பு வாய்ந்தது. பெனிசிலின் காலத்திற்கு முன் பிரசவத்தில் பெண்கள் இறப்பதும், பிறந்தபின் குழந்தைகள் இறப்பதும் சர்வ சாதாரணம். லேசான சிராய்ப்புகளும் கீறல்களும் கூட மரணத்திற்கு இட்டுச் சென்றன. ஒரு நுண்ணுயிரை வைத்து இன்னொன்றைக் கொல்லமுடிகிற பெனிஸிலின் போன்ற நச்சுமுறி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் பல நோய்களிலிருந்து மனிதர்களைக் காப்பாற்ற முடிந்தது. பெனிசிலினைக் கண்டு பிடித்து நவீன நச்சுமுறி மருந்துகள் யுகத்தைத் தொடங்கிவைத்த பெருமைக்குரிய விஞ்ஞானிதான் அலெக்ஸாண்டர் ஃப்பௌமிங். பெனிசிலின் உலகெங்கிலும் உள்ள 20 கோடி மக்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளது என்கிறது ஒரு மதிப்பீடு.

நீதிக்கதை

 சிங்கமும் கழுதைப்புலியும்

சிங்கமும் கழுதைப்புலியும் பசுவைப் பிடித்து வைத்திருந்தன. ஒரு நாள் சிஙகம் பசுவைக் கொன்றது. கழுதைப்புலி தன் குட்டியை சிங்கத்திடம் அனுப்பி தன் பங்கைக் கேட்டது. கழுதைப்புலியின் பங்காக பசுவின் குடலை மட்டும் கொடுத்து அனுப்பியது சிங்கம்.

கழுதைப் புலியோ, “நீ ஏன் குடலைக் கொண்டு வந்தாய்? அரைவாசிப் பங்குதானே நமக்கு உரியது?” என்று கேட்டது.

குட்டி கழுதைப்புலி சொல்லியது: “நான் சின்னப்பயல். பெரியவர்கள் கொடுப்பதைத்தான் கொண்டு வர முடியும். நான் எப்படி சிங்கத்தோடு விவாதிக்க முடியும்”.

அதைக்கேட்டு கோபமான கழுதைப்புலி அந்தக் குடலோடு சிங்கத்தைப் பார்க்கப் போனது. சிங்கம் உணவை உண்டு குகைக்குள் ஒய்வெடுத்துக் கோண்டிருந்தது. கழுதைப்புலி வந்ததைக் கண்டு கண்களை அச்சமூட்டும் வகையில் வைத்திருந்தது. “ஏன் இங்கே வந்தாய்?” – கர்ஜித்தபடி சிங்கம் கேட்டது.

பசுவில் பாதி கேட்க வந்த கழுதைப்புலி தற்போது தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு பேசியது: “ராஜ சிங்கமே! நீங்கள் குடல் அனுப்பியதற்கு மிக்க நன்றி, ஆனால் அதனை உங்களிடமே சேர்க்க முடிவு செய்து விட்டோம்”.

குடலை சிங்கத்திடம் கொடுத்து விட்டு திரும்பிய கழுதைப்புலியிடம் குட்டி கேட்டது: “பசுவில் பாதி கேட்கப்போன நீங்கள் குடலையும் கொடுத்து விட்டு வருகிறீர்களே?”.

“மகனே! சிங்கம் மிகக் கொடுரமாக இருந்தது. அதைக்கண்டு நடுங்கி விட்டேன். எனவே எனது பங்கையும் கொடுத்துவிட்டுப் பாராட்டி விட்டு வந்தேன். எல்லாம் நன்மைக்காக” என்றது தாய் கழுதைப்புலி.

நம்மை விட வலிமையானவர்களைக் கோபப்படுத்துவதை விட அவர்களை சாந்தப்படுத்துவதே பாதுகாப்பானது.

இன்றைய செய்திகள்

11.03.2026

⭐ மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

⭐ இந்தியாவிற்கு 700 மில்லியன் கியூபிக் மீட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதில் 85 சதவீதம் உணவு உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. மக்கள் தொகை அதிகரிப்பால் வருங்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

⭐இந்தியா சுமார் 10 மில்லியன் டன் யூரியா மற்றும் 6.5 மில்லியன் டன் டி.ஏ.பி உரங்களை இறக்குமதி செய்து வருகிறது. இதில் 75% நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀 ஐபிஎல் போட்டி அட்டவணை நாளை வெளியீடு..!
ஐபிஎல் அட்டவணை இரண்டு கட்டங்களாக வெளியிடப்படுகிறது.முதல் 20 நாட்களுக்கான அட்டவணை வருகிற 12-ந்தேதி வெளியாக உள்ளது.

Today's Headlines

⭐ Approval from the Union Cabinet to upgrade Madurai Airport into an international airport..

⭐ India requires about 700 million cubic meters of water, out of this, 85% is used for food production ,due to the increasing population, there is a possibility of water shortage in the future.

⭐ India imports around 10 million tons of urea and 6.5 million tons of DAP (Di-Ammonium Phosphate) fertilizers, About 75% of these fertilizers are imported from other countries.

 *SPORTS NEWS* 

🏀 IPL match schedule to be released tomorrow. The IPL schedulewill be released in two phases and the schedule for the first 20 days will be announced initially.

Covai women ICT_போதிமரம்

Monday, March 9, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.03.2026




 






திருக்குறள்: 

குறள் 613: 

தாளாண்மை என்னுந் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னுஞ் செருக்கு.              
விளக்க உரை: 

பிறர்க்கு உதவிசெய்தல் என்னும் மேம்பட்ட நிலைமை முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் நிலைத்திருக்கின்றது.

பழமொழி :

The childhood shows the man.    

விளையும் பயிர் முளையிலேயே தெரியும்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1.   திட்டமிட்டு செயல் பட்டால் வெற்றி நிச்சயம்.

2.எனவே  ஒரு செயலை தொடங்கும் முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு செயல் பட வேண்டும்.

பொன்மொழி : 

உணவுக்கு மிகவும் சுவை தரும் பொருள்- பசி. ஆம். பசி இருந்தால் உணவு சுவையாக இருக்கும் - சாக்ரடீஸ்

பொது அறிவு : 

01.உலகின் மிக வேகமான பறவை 

எது?

பெரெக்ரின் ஃபால்கன் -

 Peregrine Falcon

02.அறை வெப்பநிலையில் (சுமார் 20-25°C) திரவமாக இருக்கும் ஒரே உலோகம் எது?

       பாதரசம் - Mercury 

English words :

Grave-serious

Put up with -tolerate

தமிழ் இலக்கணம்: 

தவறான பேச்சு மொழியும் சரியான எழுத்து மொழியும் 2
1. மல்லிகை மணம் வீசுகிறது (வீசி எறிகிறோமா என்ன)
      மல்லிகை   மணம் கமழ்கிறது –சரி 
2. மாறன் கண் முழித்தான் (திரு திரு என்றா)
      மாறன் கண் விழித்தான் 

அறிவியல் களஞ்சியம் :

பூமியின் காந்தப் புலம் என்பது ஒரு நிலைத்த அமைப்பு அல்ல. உருகிய நிலையில் உள்ள வெளிப்புற மையப்பகுதியில் (outer core) நடைபெறும் மிகச் சிக்கலான இயற்பியல் செயல்முறைகளால் அது இடையறாது மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த மாற்றங்களின் மிக வெளிப்படையான வெளிப்பாடுதான்  காந்தத் துருவங்களின் நகர்வு ஆகும்.

மார்ச் 10

சாவித்திரிபாய் புலே அவர்களின் நினைவுநாள்

சாவித்திரிபாய் புலே (Savitribai Jyotirao Phule, 3 சனவரி 1831 – 10 மார்ச் 1897) ஒரு சமூக சீர்திருத்தவாதியும், கவிஞரும் ஆவார்.இவர் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என அழைக்கப்படுகிறார். இவர் தன் கணவர் மகாத்மா ஜோதிராவ் புலேயுடன் (Mahatma Jyotirao Govindrao Phule) இணைந்து, ஆங்கிலேயர் காலத்தில் பெண் உரிமைக்காகவும், கல்விக்காகவும் பாடுபட்டவர். இவர்கள் பெண் கல்விக்காக முதல் பள்ளியை பூனாவிற்கருகிலுள்ள பிடெ வாடாவில் 1848 ஆம் ஆண்டு நிறுவினர்.

சாவித்திரிபாய் புலே பிறப்பின் 186 ஆவது ஆண்டு நிறைவை தேடு பொறி கூகுளானது, ஜனவரி 3, 2017 அன்று ”கூகுள் டூடுள்” கொண்டு அடையாளப்படுத்திச் சிறப்பித்தது.

ஜோதிராவ் புலே 1846ஆம் ஆண்டில் ஒரு பள்ளியை தொடங்கி சாவித்திரிபாயுடன் பாத்திமா ஷேக் என்ற பெண்ணையும் சேர்த்து சூத்திரர், ஆதிசூத்திரர் ஆகிய பெண்களுக்குக் கல்வி புகட்டினார். பின்னர் 1848ஆம் ஆண்டு சாவித்திரிபாய் ஆசிரியர் பயிற்சி பெற்றார். மீண்டும் 1848ஆம் ஆண்டு புனேவில் 9 மாணவிகளுடன் ஒரு பள்ளியைத் துவங்கி அதில் சாவித்திரிபாய் தலைமையாசிரியராகப் பணி செய்தார். சுமார் 6 மாதங்களுக்குப்பின் அப்பள்ளி மூடப்பட்டு வேறோர் இடத்தில் பள்ளி தொடங்கப்பட்டது. பழமைவாதிகளும் மேல்சாதியினரும் சாவித்திரிபாய் கல்விப் பணி செய்வதைக் கடுமையாக எதிர்த்தனர். அவர் மீது சேற்றினையும், மலத்தினையும் வீசிப் பல தொல்லைகள் அளித்தனர். தினமும் பள்ளி செல்லும்போது பழைய ஆடைகளை அணிந்து பள்ளி சென்று பின் வேறோர் சேலை அணிந்து கொள்வார். பல துன்பங்களுக்கு இடையில் கல்விப் பணியாற்றினார்.

நீதிக்கதை

வரும்முன் காப்போம்

தேரிக்குடியிருப்பு என்ற ஊரின் எல்லையில் இருந்த காட்டில் பெரிய குளம் இருந்தது, அதனை ஒட்டி சிறிய நீரோடை ஓடிக் கொண்டிருக்கும்.

அந்த குளத்தில் நிறைய மீன்கள், நண்டுகள், மற்றும் அனைத்து நீர்வாழ் இனங்கள் வாழ்ந்து வந்தன. அவற்றில் ராமு, சோமு, தாமு என்ற மூன்று மீன்கள் நல்ல நண்பர்களாக இருந்தார்கள். அந்த மூவரும் எங்கே சென்றாலும் ஒன்றாகவே போவார்கள். ஒரு பயமும் இல்லாமல் சந்தோசமாக வாழ்ந்து வந்தார்கள்.

அவர்கள் மகிழ்ச்சியை கெடுக்கும் விதமாக ஒரு நாள் மாலையில் ஒரு இரண்டு மனிதர்கள் அங்கே வந்தார்கள், வேட்டையாடிய களைப்பு முகத்தில் தெரிந்தது, குளத்து நீரை அருந்தி விட்டு, குளத்தை நன்றாக ஆராய்ந்தார்கள், பின்னர் அவர்களில் ஒருவர் “இந்த குளத்தில் நிறைய மீன்கள் இருக்கிறதே, அதுவும் நன்றாக வளர்ந்து கொழு கொழு என்று இருக்கிறதே, நாம் வீணாக காடு மேடு என்று அலைந்து வேட்டையாட வேண்டாம், பேசாம இங்கே நாளை வந்து வலையை விரிப்போம், மாட்டிக் கொள்ளும் மீன்களை விற்று பணம் சம்பாதிக்கலாம்” என்றார். மற்றவரும் “ஆகா, அருமையான யோசனையாக இருக்கிறதே” என்றார்.

இவர்கள் பேசுவதை கேட்ட ராமு என்ற மீன் பெருங்கவலை அடைந்தது, உடனே தன் நண்பர்களான சோமு, தாமுவிடம் கூறியது. காட்டின் நடுவில் இருந்ததால் இதுவரை பெரிய ஆபத்து வந்தது இல்லை, குளத்தில் நடுவில் போய் இருந்தால் பறவைகள் கூட தங்களை ஒன்றும் செய்தது இல்லை, இன்றோ இந்த மனிதர்களால் பெரிய ஆபத்து வந்து விட்டதே என்ன செய்யலாம் என்று யோசித்தன.

ராமு எப்போவும் வரும்முன் காத்துக் கொள்ளும் மனம் படைத்த மீன், மற்ற மீன்களைப் பார்த்து, நாளை கண்டிப்பாக அவர்கள் இங்கே வருவார்கள், நாம் இன்று இரவே இக்குளத்தை விட்டு நீரோடையின் உதவியால் அருகில் இருக்கும் வேறு குளத்திற்கு போகலாம். சில காலம் போனபின்பு மீண்டும் இங்கே வரலாம் என்றது.

ராமுவின் நல்ல யோசனையை மற்ற இருவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் சும்மா சொல்லிவிட்டு போயிருப்பார்கள், அவர்களாவது நம்மை பிடிப்பதாவது, நீ வீணாக பயப்படுகிறாய் என்றன.

ராமு எவ்வளவோ சொல்லிப் பார்த்தது, ஆனால் சோமு,தாமு இருவரும் கேட்கவில்லை. ராமு அவர்களிடம் மன்னிப்பு கேட்டு விட்டு தான் இன்று இரவே அந்த குளத்தை விட்டு போவதாக சொல்லி விட்டு இரவே தப்பி வேற குளத்திற்கு போய் விட்டது.

மறு நாள் காலையில் சோமு, தாமு இருவரும் கூடி பேசினார்கள், மீன் பிடிப்பதாக சொன்னவர்களை காணவில்லை, சும்மா பேச்சு சொன்னதை நம்பி ராமு வேற குளத்திற்கு போனது முட்டாள்த்தனம் என்று கேலி செய்தன.

சிறிது நேரத்தில் வலை விரிப்பதாக சொன்ன இருவரும் பெரிய வலையை எடுத்து வந்து எங்கே வலை வீசுவது என்று பேசினார்கள்.

அவ்வளவு தான் அதைக் கேட்டு சோமு “அய்யோ கடவுளே!, ராமு அப்போவே சொன்னதே, இரவே தப்பியிருக்கலாமே” என்று புலம்பியது.

ஆனால் தாமு அந்த சூழ்நிலையிலும் கொஞ்சமும் பயப்படவில்லை, “ஏன் பயப்படுகிறாய், குளத்தில் எவ்வளவோ இடங்கள் இருக்கின்றன, நாம் மறைந்துக் கொள்ளலாம்” என்றது.

சோமு கொஞ்சம் கொழு கொழு மீன், அதற்கு பயம் வந்து விட்டது, அதற்குள் மீனவர்கள் வலை வீச, தாமூ ஓடி ஒளிந்துக் கொண்டது. சோமு மாட்டிக் கொண்டது, வலையில் இருந்து தன்னை விடுவிக்க படாத பாடு பட்டது.

இறுதியில் சோமுவின் வால் பகுதியும் முதுகும் சேதமடைந்து, வலையில் இருந்து விடுபட்டு நீரோடையில் பாய்ந்து தப்பி விட்டது. உடல் எங்கும் ரத்தம், வரும் முன்னால் காக்காமல் வந்த போது காக்க நினைத்த தன் முட்டாள்தனத்தை நினைத்து வருந்தியது.

தாமு குளத்தின் உள்ளே இருந்த பாறையின் அடியில் ஒளிந்துக் கொண்டது, தான் வீரமாக தப்பியதை நினைத்து பெருமைப்பட்டது. அது ரொம்ப நேரம் நீடிக்கவில்லை. வந்த இருவரில் ஒருவர் நீண்ட கம்பை எடுத்து குளத்தின் அடியில் இருக்கும் பாறைகளில் செலுத்தி அசைத்தார், அவ்வாறு செய்கையில் ஒரு முறை அந்த கம்பானது தாமுவை தாக்கியது, தாமு தப்பிக்க நினைத்து அதிலிருந்து வெளியே வர, அங்கே இருந்த வலையில் மாட்டிக் கொண்டது.

சிறிது நேரத்தில் மீனவர்கள் வலையை வெளியே எடுத்து மாட்டிய அனைத்து மீன்களையும் தரையில் போட்டு கொன்றார்கள். அதில் தாமுவும் ஒரு மீன்.

வரும்முன் காப்போம் என்ற கொள்கை கொண்ட ராமு ஒரு ஆபத்தும் இல்லாமல் தப்பி, மகிழ்ச்சியாக வாழ்ந்தது, வந்த போது காப்போம் என்ற கொள்கை உடைய சோமு, உடல் எங்கும் காயப்பட்டு, மற்ற மீன்களுக்கு பயந்து பயந்து வாழ்ந்தது, வந்தப்பின்பு பார்ப்போம் என்ற கொள்கை உடைய தாமுவோ கொல்லப்பட்டு விட்டது.

குழந்தைகளே! இக்கதையானது நம் அனைவருக்கும் நல்ல பாடம். எந்த விசயத்தையும் வரும் முன்பே யோசிக்க வேண்டும், மழைக்காலம் என்றால் வெளியே செல்லும் போது கையில் குடை இருக்க வேண்டும்.

தேர்வு வருகிறது என்றால் ஒரு வாரத்திற்கு முன் அனைத்துப் பாடங்களையும் படித்து முடிக்க வேண்டும். கடைசி நேரத்தில் படிக்கத் தொடங்கினால் அது பயன் அளிக்காது, எனவே நாம் எப்போவும் வரும்முன் காப்போம் என்ற கொள்கையை பின்பற்ற வேண்டும், பின்பற்றினால் கவலையின்றி வாழலாம். 

இன்றைய செய்திகள்

10.03.2026

⭐தமிழகத்தில் ஜூலை 17 முதல் ஆக.30 வரை டிஜிட்டல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது.

⭐உடுமலையில் 3,000 ஆண்டு கால அதிசயம்: கல்லாபுரத்தில் கண்டறியப்பட்ட பிரம்மாண்ட கற்திட்டை!

⭐ இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில், சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்குமாறு மத்திய பெட்ரோலிய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

⭐அமெரிக்கா & ஈரான் தேசத்திற்கும் இடையே ஏற்பட்ட போர் காரணமாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது

🏀விளையாட்டுச் செய்திகள்

🏀இந்த டி20 உலக கோப்பை தொடரில் மூன்று முறை சாம்பியனான அணி, டி20 உலக கோப்பையை தக்க வைத்த அணி மற்றும் உள்ளூரில் டி20 உலக கோப்பையை வென்ற முதல் அணி எனப் பல பெருமைகளை தன்வசம் ஆக்கியுள்ளது இந்திய அணி.

Today's Headlines

⭐ In Tamilnadua digital population census will be conducted from July 17 to August 30

⭐ A 3,000-year-old wonder was discovered in Udumalai. A massive stone structure has been identified at Kallapuram

⭐ To prevent  cooking gas shortage in India the Central Petroleum Ministry has instructed to increase the production of cooking gas

⭐ Due to the war between the United States and Iran there is a risk of food shortage in the United Arab Emirates (UAE)

 *SPORTS NEWS* 

🏀The Indian team has achieved many honors in this T20 World Cup series, including being the three-time champion, the team that retained the T20 World Cup, and the first team to win the T20 World Cup domestically.

Covai women ICT_போதிமரம்

 

Sunday, March 8, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.03.2026

யூரி ககாரின்




 






திருக்குறள்: 

அதிகாரம் 62 / CHAPTER 62 

 ஆள்வினை உடைமை 

குறள் 611: 

அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும் 
பெருமை முயற்சி தரும்.

 விளக்க உரை: 

இது செய்வதற்கு அருமையாகாது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும்.  அதைச் செய்வதற்க்குத் தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும்.

பழமொழி :

A good marksman may miss. 

ஆனைக்கும் அடி சறுக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1.   திட்டமிட்டு செயல் பட்டால் வெற்றி நிச்சயம்.

2.எனவே  ஒரு செயலை தொடங்கும் முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு செயல் பட வேண்டும்.

பொன்மொழி : 

மனித வாழ்க்கை மற்றவைகளுக் கெல்லாம் மேலானது.மேலான செயல்களினால் மேன்மை அடைகிறது

-----------------பிளாட்டோ

Human life is above all others. It is exalted by superior actions. ----- PLATO

பொது அறிவு : 

01.சூரிய குடும்பத்தில் எந்த கிரகம் பின்னோக்கி சுழல்கிறது?

             வெள்ளி -Venus

02.உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பிரமிடுகளைக் கொண்ட நாடு எது?

           சூடான் -Sudan

English words :

Take off -remove or leave

Take on- accept responsibility

தமிழ் இலக்கணம்: 

 தவறான பேச்சு மொழியும் சரியான எழுத்து மொழியும்
1. கடிகாரம் வேகமாக ஓடியது (எங்கு ஓடும்?)
      கடிகாரம் வேகமாக இயங்கியது
2. மின்விசிறி வேகமாக சுற்றுகிறது ( தன்னைத் தானே சுற்றுவதால் சுழல்கிறது)
மின்விசிறி வேகமாக சுழல்கிறது
    தொடரும்...

அறிவியல் களஞ்சியம் :

நிலை: துருவங்கள் காந்தத்தின் இரு முனைகளில் மட்டுமே இருக்கும். காந்தப் புலம் காந்தத்தைச் சுற்றியுள்ள முழுவெளியிலும் பரவியிருக்கும்.

பரிமாணம்: துருவம் என்பது ஒரு குறிப்பிட்ட புள்ளி (point), காந்தப் புலம் என்பது ஒரு பகுதி (region/field).

தொடர்பு: காந்தப் புலக் கோடுகள் ஒரு துருவத்தில் தொடங்கி மற்றொரு துருவத்தில் நுழைகின்றன. 

துருவ காந்தம் என்பது காந்தப்புலத்தின் வலிமை குவியும் இடம்

மார்ச் 09

யூரி ககாரின் அவர்களின் பிறந்தநாள்

யூரி அலெக்சியேவிச் ககாரின் (Yuri Alekseyevich Gagarin,9 மார்ச் 1934 – 27 மார்ச் 1968) உருசிய விண்வெளி வீரர் ஆவார். விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரராவார். அத்துடன் பூமியை விண்ணில் வலம் வந்த முதல் மனிதரும் இவரே. ககாரின் 1961 ஏப்ரல் 12 அன்று சோவியத் ஒன்றியத்தின் வசுத்தோக்-1 விண்கலத்தில் பயணித்து சுமார் 108 நிமிடங்கள் விண்ணில் சஞ்சரித்தார்.

சாகீர் உசைன் அவர்களின் பிறந்தநாள்




சாகீர் உசைன் (Zakir Hussain, இந்தி: ज़ाकिर हुसैन, 9 மார்ச்சு 1951 – 15 திசம்பர் 2024) இந்தியாவைச் சேர்ந்த தபேலா இசைக் கலைஞர் ஆவார். இவர் தபேலா இசைக் கலைஞர் அல்லா ரக்காவின் மகன்.[1] இவர் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் அறியப்படுகிறார். மும்பையில் பிறந்தார். தனது ஏழாவது வயதில் தபேலா வாசிக்கத் தொடங்கினார். 1970 ஆம் ஆண்டு இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக அமெரிக்கா சென்றார். ஆண்டிற்கு 150 இசை நிகழ்ச்சிகளுக்கு மேல் நடத்தியுள்ளார்.

நீதிக்கதை

 நாவினால் சுட்ட வடு

ஒரு முன்கோபக்காரப் பையன் இருந்தான். முணுக்கென்றால் அவனுக்குக் கோபம் வரும். கோபம் வந்தால் தலைகால் தெரியாமல் வாய்க்கு வந்த படி வயது வரம்பில்லாமல் எல்லோரையும் பேசி விடுவான். பின்னர் அவர்களிடம் வருத்தப் படுவான்.

நாளடைவில் அவனை சுற்று வட்டாரத்தில் பலருக்கு இதனாலேயே பிடிக்காமல் போனது. அவனைத் தவிர்க்க ஆரம்பித்தார்கள். பையனுக்குத் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றினாலும் எப்படி என்றுதான் தெரியவில்லை.

அவனுடைய அப்பா பொறுத்துப் பொறுத்து பார்த்து விட்டு ஒரு நாள் அவனிடம் ஒரு வாளி நிறைய ஆணிகளையும் ஒரு சுத்தியலையும் கொடுத்தார்.

ஒவ்வொரு முறை ஆத்திரப் படும் போதும் சம்பந்தப் பட்டவர்களைத் திட்டுவதைத் தவிர்த்து விட்டு வீட்டுக்குப் பின்னால் உள்ள மர வேலியில் ஒரு ஆணியை ஆத்திரம் தீரும் வரை அறைந்து ஏற்றி விடும் படி அறிவுரைத்தார்.

முதல் நாள் வேலியில் சுமார் 50 ஆணிகளை அறைந்து ஏற்றினான். நாட்கள் செல்லச் செல்ல அவனைக் கோபமூட்டுபவர்கள் முன் வன்மையாகப் பேசுவதைக் கட்டுப் படுத்தக் கற்றுக் கொண்டான். கோபம் வந்தால்தான் உடனே ஆணி அடிக்கப் போக வேண்டுமே!

நாளடைவில் வாளியையும் சுத்தியலையும் எடுத்துக் கொண்டு வேலிப் பக்கம் போகுமுன் கோபவெறி குறைந்து போய், வேலியில் ஆணி அறைவது குறையத் தொடங்கியது. சில நாட்களில் வேலியில் ஆணி அடிக்க வேண்டிய தேவையே அவனுக்கு இருக்கவில்லை.

அப்பாவிடம் போய் விபரத்தைச் சொன்னான்

அவர் உள்ளுக்குள் மகிழ்ச்சியடைந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் அவனிடம் ஒரு ஆணி பிடுங்கும் கருவியைக் கொடுத்து வேலியில் அவன் அடித்த ஆணிகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கச் சொன்னார். அனைத்தையும் பிடுங்க அவனுக்கு முழுதாக ஒரு நாள் பிடித்தது.

எல்லா ஆணியையும் பிடுங்கிய பிறகு அப்பாவும் மகனும் வேலியை பார்க்கப் போனார்கள். அப்பா வேலியில் ஆணிகளைப் பிடுங்கிய இடத்தில் இருந்த வடுக்களை மகனுக்குக் காட்டி “கோபம் வந்தால் அறிவிழந்து சொல்லும் சுடுசொல்லும் இந்த ஆணியைப் போலத்தான்.

ஆணியைப் பிடுங்குவது போல் நீ பேசியதற்கு மன்னிப்புக் கேட்டாலும், அந்த சொல் தைத்த இடத்தில் உள்ள வடு இந்த ஆணி ஏற்படுத்திய வடுவைப் போலவே மறைவது மிகக் கடினம்” என்று அவனுக்கு எடுத்துக் கூறினார்.

மகனும் கருத்தை நன்றாக உணர்ந்து திருந்தி ஊர் போற்றும் வகையில் வளர்ந்து வாழ்க்கையில் வெற்றிகள் பல பெற்றான்.

இன்றைய செய்திகள்

09.03.2026

⭐கொடுமுடியில் கே.பி. சுந்தராம்பாள் முழு உருவ சிலையை முதலமைச்சர்  திறந்து வைத்தார்.

⭐தெஹ்ரானில் பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு- அமில மழை எச்சரிக்கை விடுத்த  ஈரான்

⭐ ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது அமெரிக்கா இஸ்ரேல் படைகள் சரமாரி குண்டுவீச்சு.

🏀 விளையாட்டுச் செய்திகள்


🏀 ஐசிசி T20 உலககோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. 3வது முறையாக இந்திய  அணி சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

🏀நியூசிலாந்து நாட்டில் நடைபெற உள்ள 5 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரில் தென்ஆப்பிரிக்கா அணி பங்கேற்கிறது. வருகிற 15-ந்தேதி தொடங்கும் போட்டியை முன்னிட்டு 15 பேர் கொண்ட தென்ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.

Today's Headlines

⭐ The Chief Minister inaugurated a full-size statue of K. B. Sundarambal at Kodumudi.

⭐ An oil storage facility caught fire in Tehran, and Iran has issued a warning about possible acid rain.

⭐ The oil depots in Iran were heavily bombed by the forces of United States and Israel.

🏀 Sports News


🏀  ICC T20 World cup: India recorded a tremendous  victory against  Newzealand by 96 runs and became the Champion for the 3rd time.

🏀 South Africa national cricket team will participate in a five-match international T20 series to be held in New Zealand.Ahead of the series starting on the 15th, a 15-member squad for South Africa has been announced.

Covai women ICT_போதிமரம்

 

Thursday, March 5, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.03.2026

வலந்தீனா தெரெசுக்கோவா 



 






திருக்குறள்: 

குறள் 642: 

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலாற் 
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு 

விளக்க உரை: 

ஆக்கமும் கேடும் சொல்லுகின்ற சொல்லால் வருவதால் ஒருவன் தன்னுடைய சொல்லிற்க்கு தவறு நேராமல் காத்துக்கொள்ள வேண்டும்.

பழமொழி :

Charity is a double blessing.   

 தருமம் தலை காக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. எனது உணவானது விவசாயி போன்ற பலர் உழைப்பில் வருகிறது.

2. எனவே உணவை வீணாக்க மாட்டேன்.

பொன்மொழி : 

வெற்றி என்பது புத்திசாலிகளின் சொத்தல்ல. அது முன்னேற துடிக்கும் உழைப்பாளிகளுக்கும் தன்னம்பிக்கைக்குமே சொந்தம்.- அடால்ப் ஹிட்லர்

பொது அறிவு : 

01.மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

ஹிப்போகிரேட்டஸ் (Hippocrates) 

02. உலகின் கரும்பு உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?

 பிரேசில்-Brazil

English words :

Skirmish-: A small or short fight between small groups of soldiers, usually before a bigger battle.


Combat

: Fighting in a war or battle between armed forces.

அறிவியல் களஞ்சியம் :

காந்த துருவம் (Magnetic Pole): காந்தத்தின் வட அல்லது தென் முனைகள், காந்த வலிமை அதிகமுள்ள இடங்கள்.

காந்த புலம் (Magnetic Field): காந்தப் பொருள்கள் ஈர்க்கப்படும் அல்லது விலக்கப்படும் காந்தத்தைச் சுற்றியுள்ள பகுதி. 

மார்ச் 06

வலந்தீனா விளாடிமீரொவ்னா தெரெசுக்கோவா அவர்களின் பிறந்தநாள்


வலந்தீனா விளாடிமீரொவ்னா தெரெசுக்கோவா என்பவர் சோவியத் ஒன்றியத்தின் ஓய்வுபெற்ற விண்வெளி வீராங்கனையும் முதற்தடவையாக விண்வெளிக்குச் சென்ற பெண்ணும் ஆவார். இவர் வசுத்தோக்கு 6 விண்கலத்தில் 1963 சூன் 16 அன்று விண்வெளிக்குச் சென்று அங்கு மூன்று நாள்களுக்குச் சற்றுக் குறைவாகத் தங்கியிருந்து வெற்றிகரமாகத் திரும்பினார்.

1961ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த யூரி ககாரின் மண்ணிலிருந்து விண்ணுக்குச் சென்ற முதல் மாந்தர் என்ற பெருமையைப் பெற்றார். அவருக்கு அடுத்தபடியாகப் பெண் ஒருவரை விண்ணுக்கு அனுப்ப சோவியத்து ஒன்றியம் முடிவு செய்தது. இந்த அறிவிப்பை கேட்டதும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்தன. இறுதிக் கட்டமாக நான்கு பெண்கள் மட்டுமே தெரிவு செய்யப்பட்டனர். மிகக்கடினமான பயிற்சிகளுக்குப் பிறகு 25 வயதான வலண்டீனா தெரெசுக்கோவா தெரிவு செய்யப்பட்டார்.

சூன் 19ஆம் நாள் விண்கலம் பூமிநோக்கிப் பாய்ந்து வந்தபோது, தரையிறங்கும் முன்பே பாராசூட்டில் இருந்து குதித்து, பாதுகாப்பாக இறங்கினார்‘சோவியத் ஒன்றியத்தின் வீராங்கனை’ என்ற பதக்கத்துடன் ‘இலெனின் விருது’என பல்வேறு விருதுகள் குவிந்தன.

நீதிக்கதை

 வெங்காயம்

ஒரு வீட்டில தக்காளி வெங்காயம் மற்றும் குச்சி ஐஸ் மூன்றும் நல்ல நண்பர்களா வாழ்ந்து வந்தது.

ஒரு நாள் தக்காளிக்கு வெளிஉலகை சுற்றிபார்க்க ஆசை வந்தது.தக்காளி இப்படிச் சொன்னதும் வெங்காயம் சொல்லுச்சு அய்யோ நாம இங்கிருந்து வெளியே போவது நமக்கு பாதுகாப்பு இல்லை..அதனால நம்ம வீட்டிலேயே இருந்திடலாம்.

வெங்காயம் சொன்னதை தக்காளி கேட்கவே இல்லை.தக்காளி குச்சி ஐஸ் கூட்டி கிட்டு வெளியே கிளம்பிச்சு. வெங்காயம் அவங்கள தனியா போக வேண்டாம்னு சொல்லிட்டு வெங்காயமும் கூடவே போச்சு.

அது டிசம்பர் மாசம் கொஞ்சம் குளிராக இருந்தது.எல்லாரும் ஜாலியா வெளிய போய் விளையாடினாங்க.

இரண்டுமாதங்கள் கழித்து வெயில் காலம் வந்தது.

தக்காளி வெங்காயம் குச்சி ஐஸ் மூன்றுபேரும் எப்பவும் போல விளையாட வெளியே போனாங்க அப்போ வெயில் அதிகமா இருந்தது.வெயிலின் காரணமாக குச்சி ஐஸ் உருகிடுச்சு.

இதைப் பார்த்த தக்காளியும் வெங்காயமும் ரொம்பவே வருத்தப்பட்டார்கள்.

நாம திருப்பி வீட்டுக்கு போயிடலாம் அப்படின்னு சொல்லி போய்க்கிட்டு இருக்கும் போது ஒரு சின்ன பையன் பந்தை வைத்து விளையாடிக் கொண்டு இருந்தான்.

அந்தப் பையன் பந்தை தூக்கி போட்டான் .அந்தப் பந்து தக்காளியை நோக்கி வந்தது. இதைப் பார்த்த வெங்காயம் பந்தை தடுத்து நிறுத்தி தட்டி விட்டது.

பின்பு வீட்டை விட்டு வெளியே வந்தாலே நிறைய ஆபத்துகள் உள்ளன என்று எண்ணி இரண்டும் வீட்டிற்கு விரைந்து சென்று கொண்டு இருந்தது. சாலையை கடக்க தக்காளியும் வெங்காயமும் சென்று கொண்டிருக்கும் பொழுது ஒரு லாரி அங்கு வேகமாக வந்து கொண்டு இருந்தது.

இதை கவனிக்காத தக்காளி சாலையை கடக்கும் பொழுது லாரி தக்காளியின் மேல் ஏறியது..லாரி தக்காளியின் மேல் ஏறியதும் தக்காளி நசுங்கி செத்துப்போச்சு.

தன் நண்பனை காப்பாற்ற முடியலியே அப்படின்னு மிகவும் வருத்தத்தில் வெங்காயம் வீட்டிற்கு வந்தது..வீட்டிற்கு வந்த வெங்காயம் வருத்தத்தில் மிகவும் அழுதது.

அப்போ வெங்காயம் கடவுள் கிட்ட கேட்டு ஓ கடவுளே! என்னோட பிரெண்ட்ஸ்காக நான் அழுதேன்.நான் இல்லாம போனா எனக்காக வருத்தப்பட்டு அழுவதற்கு யாரு இருக்கா?.

அப்போ கடவுள் வெங்காயத்தின் முன்பு தோன்றி வெங்காயமே நீ வருத்தப்படாத.வெங்காயமே உனக்கு ஏதாவது ஆகிடுச்சுனா உன்னை சுற்றி இருப்பவர்கள் அனைவரும் அழுவார்கள்.அதற்கான ஒரு வரத்தை நான் உனக்கு அளிக்கிறேன் என்று கடவுள் கூறினார்.

அதுக்குவெங்காயம்நான் இப்போ தனியாதானே இருக்கிறேன்.அதனால என்னோட ஃப்ரண்ட்ஸ் எல்லாரையும் எனக்கு திருப்பி கொடுங்க.அப்படின்னு சொல்லுச்சு.

உடனே கடவுள் நான் உனக்கு ஒரு புது நண்பனை கொடுக்கிறேன்.அவன் பெயர் மிளகாய்.மக்கள் உங்கள் இரண்டு பேரையும் எப்பொழுதும் சேர்த்துதான் சமையலுக்கு எடுப்பார்கள் என்றுகூறினார்.

தன்னோட புது நண்பனோட வெங்காயம் சந்தோஷமா இருந்துச்சு.

இன்றைய செய்திகள்

06.03.2026

⭐சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி நியமனம்!

⭐போர் சூழல் எதிரொலி: ரஷியாவிடம் இருந்து கூடுதல் கச்சா எண்ணெய் வாங்க இந்தியா திட்டம்

⭐கடலில் வலம் வரும் ஈரானின் போர்க்கப்பல்களை அமெரிக்க படைகள் சுட்டு வீழ்த்தி கடலில் மூழ்கடித்து வருகி ன்றன.தற்போது வரை 17 ஈரானிய போர்க்கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀2026 டி20 உலகக் கோப்பை தொடர் ஒரு பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
சூப்பர் 8 போட்டி முடிவடைந்த நிலையில், இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

🏀மும்பை: ஐசிசி டி20 தரவரிசையில், விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் பேட்டிங் பிரிவில் 25 இடங்களில் முன்னேறியுள்ளார்.

Today's Headlines


Madras High Court (Chennai High Court) has appointed Sushrut Arvind Dharmadhikari as the Chief Justice.

⭐ Due to the war situation, India is planning to purchase additional crude oil from Russia.

⭐ United States forces are shooting down Iran warships that are moving in the sea and sinking them. So far, 17 Iranian warships have reportedly been sunk.


🏀 Sports News

🏀 The ICC Men's T20 World Cup 2026 tournament has reached an exciting stage.
After the Super 8 round, India national cricket team, England cricket team, South Africa national cricket team, and New Zealand national cricket team have qualified for the semi-finals.

🏀 In International Cricket Council (ICC) T20 rankings, wicketkeeper Sanju Samson has moved up 25 places in the batting rankings

Covai women ICT_போதிமரம்