Tuesday, October 15, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.10.24

 

உலக உணவு நாள்

   




திருக்குறள்: 

பால் :பொருட்பால்

 அதிகாரம்:பழைமை 

குறள் எண்:802

 நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை மற்றுஅதற்கு
 உப்புஆதல் சான்றோர் கடன்.

பொருள்:நட்பிற்கு உறுப்பாவது நண்பருடைய உரிமைச் செயலாகும்; அந்த உரிமைச் செயலுக்கு உடன்பட்டவராதல் சான்றோரின் கடமையாகும்.

பழமொழி :

Anger is sworn enemy .

 தீராக் கோபம் போராய் முடியும்.

இரண்டொழுக்க பண்புகள் :  

* எண்ணம் போல் வாழ்க்கை என்பர் பெரியோர். எனவே நல்ல எண்ணங்களை மனதில் கொண்டு சிறப்பாக வாழ்வேன்.  

* பள்ளியிலிருந்து வெளியிடங்களில் நடைபெறும் போட்டிகளுக்கு என்னை அழைத்துச் சென்றால், பயப்படாமல் பங்கேற்று வெற்றி பெறுவேன்.

பொன்மொழி :

சுமைகளை கண்டு நீ துவண்டு விடாதே!  இந்த உலகத்தை சுமக்கும் பூமியே உன் காலடியில் தான் ..!-----விவேகானந்தர்

பொது அறிவு : 

1. உலகில் மிக அதிகமாக விளையும் காய்கறி எது ?    

விடை :  உருளைக்கிழங்கு.    

2. பள்ளிக்கூடத்தை முதன்முதலில் உருவாக்கியவர்கள் யார்?   

விடை :  ரோமானியர்கள்

English words & meanings :

 Knife-கத்தி,

Plate-தட்டு

வேளாண்மையும் வாழ்வும் : 

ஏரி அல்லது கண்மாயில் இருந்து மடை திறக்கப்பட்டு ஓடை  வழியாக விவசாய நிலங்களுக்கு செல்லும்.

அக்டோபர் 16

உலக உணவு நாள் (World Food Day)

உலக உணவு நாள் (World Food Day) ஆண்டு தோறும் அக்டோபர் 16 ஆம் நாளன்று உலக நாடுகளில் கொண்டாடப்படுகிறது. 1945 ஆம் ஆண்டில் இதே நாளில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதை நினைவு கூர ஐநா இந்நாளைச் சிறப்பு நாளாக அறிவித்தது. நவம்பர் 1979 ஆம் ஆண்டில் இவ்வமைப்பின் 20வது பொது மாநாட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஹங்கேரியின் முன்னாள் வெளிநாட்டமைச்சர் பால் ரொமானி என்பவரின் முன்முயற்சியினால் இத்தீர்மானம் ஏகமனதாக ஏற்கப்பட்டு தற்போது 150ற்கும் அதிகமான நாடுகளில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.

2008 ஆம் ஆண்டிற்கான உலக உணவு நாளின் கருப்பொருள் "உலக உணவுப் பாதுகாப்பு: காலநிலை மாற்றம் மற்றும் உயிரியல் ஆற்றலுக்கான சவால்கள்" என்பதாகும்.

நீதிக்கதை

 யார் சிறந்தவன்? 

டில்லி பாதுஷா திரும்பவும் ஒருமுறை அப்பாஜியின் அறிவைப் பரிசோதிக்க விரும்பினார்.

அதன்படி ஒரே மாதிரியாக உள்ள மூன்று வெண்கலச்சிலைகளை ராயரது சபைக்கு அனுப்பி “இம்மூன்று சிலைகளிலுள்ள மனிதரின் உருவங்களில் யார் உத்தமன், யார் மத்திமன், யார் அதமன் என்பதைக் கண்டுபிடித்து அந்த சிலைகளில் எழுதி திருப்பி அனுப்ப வேண்டும். அப்போதுதான் விஜயநகர அரசின் அறிவை நாங்கள் மதிப்போம் !” என்று தனது தூதர்களிடம் சொல்லி அனுப்பினார். 

ஒரேமாதிரியான மூன்று சிலைகளையும் கவனித்து ராயர் வியப்படைந்து அச்சிலைகளை தம் சபையில் வைத்து அவற்றின் குணாதிசயங்களை சோதித்துக் கூறும்படி கட்டளையிட்டார். 

மூன்று சிலைகளும் ஒரு சிறிதும் உருவ வேறுபாடின்றி ஒன்று போலவே இருந்தமையால் முடிவு சொல்ல முடியாமல் சபையினர் திண்டாடினர். 

கடைசியில் அப்பாஜி அம்மூன்று சிலைகளையும் கூர்ந்து கவனித்த போது மூன்று சிலைகளின் காதுகளிலும் துவாரமிருப்பது அவருக்கு தெரிந்தது. உடனே மெல்லிய ஈர்க்குச்சி ஒன்றை எடுத்துக்கொண்டு முதல் சிலையில் உள்ள காது துவாரத்தில் நுழைந்தார். அந்தக் குச்சி வாய்வழியாக வந்து வெளிப்பட்டது. திருப்தி அடைந்த அப்பாஜி, அடுத்த சிலையில் அதே குச்சியை ஒரு காதுக்குள் நுழைத்த போது அது மற்றொரு காது வழியாக வந்து வெளிப்பட்டது. கடைசியாக மூன்றாவது சிலையின் காதுக்குள் விடப்பட்ட குச்சி வெளியே வரவில்லை உள்ளுக் குள்ளே தங்கி விட்டது. உடனே அப்பாஜி புன்னகையுடன் விவரித்தார்.

 ஒரு காதில் வாங்கி தன் இரகசியங்களை வாயால் வெளிப்படுத்துபவன் அதமன் ! அந்த இரகசியத்தை ஒரு காதில் வாங்கி மற்றொரு காதின் வழியாக விட்டு விடுபவன் மத்திமன் ! மற்றவர் சொன்ன இரகசியத்தை வெளியே விடாமல் உள்ளுக்குள்ளேயே அடங்கி வைப்பவன் தான் உத்தமன் !”  அவனே சிறந்தவன் என்று மூன்று சிலைகளின் கீழ் முறையே ” அதமன், மத்திமன், உத்தமன் ! ” என்று எழுதி அனுப்பினார். 

அதைக் கண்ட டில்லி பாதுஷா அப்பாஜியினது அறிவாற்றலை எண்ணி அசந்து போனார்.

நீதி: அறிவுகூர்மையுடன் யோசித்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்

இன்றைய செய்திகள்

16.10.2024

* தொடங்கியது வடகிழக்கு பருவமழை: தமிழகத்தில் 12 மாவட்டங்களில் நாளை மிக கனமழை வாய்ப்பு.

* திருவள்ளூரில் கனமழை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு.

* பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கீழ் நிதி உதவியுடன் பிரபல நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பயிற்சி பெறுவதற்காக 24 மணி நேரத்தில் 1.55 லட்சம் பேர் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர்.

* டென்மார்க் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஒடென்ஸ் நகரில் நேற்று தொடங்கியது.

* 31-வது ஆடவர் தேசிய அட்யா பட்யா போட்டியின் ஆடவர் பிரிவில் தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது.

Today's Headlines

* North East Monsoon has started: Heavy rain is expected in 12 districts of Tamil Nadu tomorrow.

 * Heavy rains in Tiruvallur: Increase in water supply to 5 lakes supplying drinking water to Chennai.

* Within 24 hours, 1.55 lakh people have applied for internships in reputed companies with financial assistance under the Prime Minister's Internship Scheme.

 * The Denmark Open International Badminton Tournament started yesterday in Odense.

 * Tamil Nadu team won the champion title in the men's category of the 31st Men's National Adya Padya Tournament.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Monday, October 14, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.10.24

 

திருமிகு. ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்கள்

 




திருக்குறள்: 

பால்: பொருட்பால்

அதிகாரம்:பழைமை

குறள் எண்:801

பழைமை எனப்படுவது யாதுஎனின் யாதும்
 கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.

பொருள்:பழைமை என்று சொல்லப்படுவது எது என்று வினவினால் அது பழகியவர் உரிமைபற்றிச் செய்யும் செயலைக் கீழ்ப்படுத்தாமல் ஏற்கும் நட்பாகும்.

பழமொழி :

Abused patience turns to fury.

 சாது மிரண்டால் காடு கொள்ளாது.

இரண்டொழுக்க பண்புகள் :  

* எண்ணம் போல் வாழ்க்கை என்பர் பெரியோர். எனவே நல்ல எண்ணங்களை மனதில் கொண்டு சிறப்பாக வாழ்வேன்.  

* பள்ளியிலிருந்து வெளியிடங்களில் நடைபெறும் போட்டிகளுக்கு என்னை அழைத்துச் சென்றால், பயப்படாமல் பங்கேற்று வெற்றி பெறுவேன்.

பொன்மொழி :

உங்களின் பணிவு தான் உங்கள் முன்னேற்றமாக மாறும்.-,---ரமணர்

பொது அறிவு : 

1. மனிதனின் எந்த உறுப்பில் அதிகளவு பாக்டீரியாக்கள் வாழுகின்றன?  

விடை :  நாக்கு.                   

2.  இந்தியாவின் நயாகரா என அழைக்கப்படும் அருவி எது?  

 விடை : ஒகேனக்கல்

English words & meanings :

 Jar-ஜாடி,Jug-கூஜா

வேளாண்மையும் வாழ்வும் : 

மூச்சடக்கி நீரில் மூழ்கி அடியாழத்தில் இருக்கும் மடையின் அடைப்பை திறந்துவிடுவார். 

அக்டோபர் 15

இன்று இளைஞர் எழுச்சி நாள் ,உலக கைகள் கழுவும் தினம், உலக மாணவர் தினம் மற்றும் வெண்பிரம்பு பாதுகாப்பு தினம் .

APJ அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள்

ஆவுல் பக்கிர் ஜெய்னுலாபுதீன் அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam, 15 அக்டோபர் 1931 – 27 சூலை 2015) பொதுவாக ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் என்று குறிப்பிடப்படுகின்ற இவர் ஒரு இந்திய அறிவியலாளரும், நிர்வாகியும் ஆவார். இவர் இந்தியாவின் 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றினார். இவர் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சிராப்பள்ளியில் உள்ள தூய வளனார் கல்லூரியில் இயற்பியலும் சென்னை தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.

இவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO), இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும் (ISRO) ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் பங்களிப்பால், இவர் இந்திய ஏவுகணை நாயகன் என்று பிரபலமாக அறியப்படுகிறார். 1998 ஆம் ஆண்டில் நடந்த போக்ரான் - II அணு ஆயுத பரிசோதனையில் நிறுவன, தொழில்நுட்ப, மற்றும் அரசியல் ரீதியாக இவர் முக்கிய பங்காற்றினார்.

2002 ஆம் ஆண்டில், இவர் இந்தியக் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் "மக்கள் ஜனாதிபதி" என்று பரவலாகக் குறிப்பிடப்படுகின்றார். பிற்கால வாழ்வில் இவர் கல்வி, எழுத்து மற்றும் பொதுச் சேவைக்கு திரும்பினார். பல கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் வருகைப் பேராசிரியர் ஆக பணியாற்றினார்.

இவர் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா உட்பட, பல மதிப்புமிக்க விருதுகளை பெற்றுள்ளார். கலாம் தனது இந்தியா 2020 என்ற புத்தகத்தில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற திட்டங்களை முன்மொழிந்துள்ளார். கலாம் தனது ஊக்குவிக்கும் முறையிலான பேச்சுகளுக்காகவும், இந்திய மாணவர் சமூகத்துடன் நடத்திய கலந்துரையாடல்களுக்காகவும் பெரிதும் அறியப்படுகிறார். 

நீதிக்கதை

 தெனாலிராமன் பூனை வளர்த்தது 


விஜய நகரத்திலுள்ள பெருச்சாளிகள், எலிகள் முதலியவற்றின் தொல்லைகளை நீக்குவதற்காக பெர்ஷிய நாட்டிலிருந்து ஆயிரக் கணக்கில் பூனைக் குட்டிகளை இராயர் தருவித்து ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு பூனையைக் கொடுத்து, அதற்குப் பசும்பால் கொடுத்து வளர்ப்பதற்காக ஒரு பசுவும் கொடுத்தார். 


தெனாலிராமனோ தான் வாங்கி வந்த பசுவின் பாலையெல்லாம் கறந்து பூனைக் குட்டிக்கு வைக்காமல், தானும் தன் மனைவி மக்களுமாகக் குடித்துவிட்டு பூனையை வெறுமனே விட்டு வைத்தான். 


குறிப்பிட்ட ஒரு தினத்தில் பூனைகளைப் பார்வையிடுவதற்காக இராயர் அனைவரையும் அரண்மனைக்கு வரவழைத்தார். எலும்பும் தோலுமான பிரஜைகள் தாங்கள் வளர்த்த கொழு கொழுவென்ற பூனைகளைத் தூக்கி வந்து காட்டினார்கள்.


கொழுகொழுவென்று வளர்ந்திருந்த தெனாலிராமனோ பட்டினியால் மெலிந்து போன பூனையை தான் காட்டினான். அதைக்கண்டு ஆத்திரமுற்ற இராயர் “ராமா உன் பூனைக்குப் பால் வைக்காமல் ஏன் பட்டினி போட்டாய்?” என்று கேட்டார்.


அதற்குத் தெனாலிராமன், “அரசே! என் பூனை பாலைக் கண்டாலே சாப்பிடாமல் ஓட்டமெடுக்கிறது. நான் என்ன செய்வேன்?” என்றான்.


அதைக்கேட்டு ஆச்சரியமடைந்த அரசர் “ராமா! இதென்ன பால் குடிக்காத பூனையும் பூலோகத்தில் இருப்பது உண்டோ? நீ கூறுவது உண்மையானால் உனக்கு நூறுபொன் பரிசளிப்பேன்!” என்று கூறிவிட்டு அந்தப் பூனையின் முன்னால் பாலை வைக்கும்படிச் செய்தார்.


பாலைக் கண்டதுமே அந்தப் பூனை ஓட்டமெடுத்தது.  அது சூடுகண்ட பூனை பாலைக் கண்டதும் ஓட்டம் பிடிக்கிறது!” 

என்றார்.


தெனாலிராமன் துணிவாக ஆனால் பணிவுடன், “அரசே! என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் பூனைக்குப் பாலூற்றிப் போற்றி வளர்ப்பதைவிட குடிமக்கள் அனைவருக்கும் பாலுணவு கிடைக்கும்படி பராமரிப்பதே மன்னனின் முதற் கடமையென்று கருதுகிறேன்!” என்றான். 


இராயர் அவனுடைய புத்தி நுட்பத்தைப் பாராட்டி நூறு பொன் பரிசளித்தார்.

இன்றைய செய்திகள்

15.10.2024

* இன்று நடைபெறுவதாக இருந்த பிஎட் கலந்தாய்வு கனமழை எச்சரிக்கை காரணமாக, அக்டோபர் 21-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

* தென் கிழக்கு வங்கக்கடலில்  காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

* தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: மருத்துவ குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க பொது சுகாதார துறை இயக்குநர் அறிவுறுத்தல்.

* டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த ஜனவரி 1 வரை பட்டாசு வெடிக்க தடை.

* வங்காளதேசத்திற்கு எதிரான டி20 தொடர்; சிறந்த பீல்டர் விருது வென்ற தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர்.

* வூஹான் ஓபன் டென்னிஸ்: 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சபலென்கா.

Today's Headlines

* The B.ED councelling scheduled to be held today has been postponed to October 21 due to the heavy rain warning.

*  The India Meteorological Department has announced that a low pressure area has formed over the Southeast Bay of Bengal.

 * Heavy rain alert in Tamil Nadu: Director of Public Health instructs to keep medical teams on standby.

 * Ban on bursting of firecrackers till January 1 to control air pollution in Delhi.

* T20 series against Bangladesh;  Tamil Nadu player Washington Sundar won the best fielder award.

 * Wuhan Open Tennis: Sabalenka wins 3rd title.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Sunday, October 13, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.10.24

  





திருக்குறள்: 

பால்:பொருட்பால்

அதிகாரம் :நட்பு ஆராய்தல்

குறள் எண்:800

மருவுக மாசற்றார் கேண்மை;ஒன்று ஈத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு.

பொருள்:குற்றமற்றவருடைய நட்பைக் கொள்ளவேண்டும்; ஒத்த பண்பு இல்லாதவருடைய நட்பை ஒன்றைக் கொடுத்தாவது கைவிடவேண்டும்.

பழமொழி :

A man of course never wants weapons

 வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.

இரண்டொழுக்க பண்புகள் :  

* எண்ணம் போல் வாழ்க்கை என்பர் பெரியோர். எனவே நல்ல எண்ணங்களை மனதில் கொண்டு சிறப்பாக வாழ்வேன்.  

* பள்ளியிலிருந்து வெளியிடங்களில் நடைபெறும் போட்டிகளுக்கு என்னை அழைத்துச் சென்றால், பயப்படாமல் பங்கேற்று வெற்றி பெறுவேன்.

பொன்மொழி :

செல்லும் பாதை சரியாக இருந்தால் வேகமாக அல்ல மெதுவாக ஓடினாலும் வெற்றி தான்.

பொது அறிவு : 

1. சிப்பியில் முத்து உருவாக்க சுமார் எத்தனை ஆண்டுகள் ஆகும்.

விடை: 15 ஆண்டுகள்

2. ”புதியதோர் உலகம் செய்வோம்” எனப் பாடி முழங்கியவர்?

விடை: பாரதிதாசன்


English words & meanings :

 Cup-கோப்பை,

Glass-கண்ணாடி

வேளாண்மையும் வாழ்வும் : 

மழையால் ஏரியில் தண்ணீர் நிரம்பி, கரையை உடைத்துக்கொண்டு செல்வதற்குமுன், ஒரே ஒருவர் மட்டும் ஏரிக்கரைக்குச்சென்று கடல்போல் கொந்தளிக்கும் ஏரிக்குள் குதிப்பார்.

அக்டோபர் 14

அக்டோபர் 14 - உலக தர நிர்ணய நாள் (World  Standards  Day)

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 14 அன்று, ISO (தர நிர்ணயத்திற்கான சர்வதேச அமைப்பு), IEC (சர்வதேச மின்தொழில்நுட்ப ஆணையம்) மற்றும் ITU (சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம்) ஆகியவற்றின் உறுப்பினர்கள் உலக தர நிர்ணய தினத்தைக் கொண்டாடுகிறார்கள்இது சர்வதேச தரங்களாக வெளியிடப்படும் தன்னார்வ தொழில்நுட்ப ஒப்பந்தங்களை உருவாக்கும் உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான நிபுணர்களின் கூட்டு முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் ஒரு தினமாக கொண்டாடப்படுகின்றது.

நீதிக்கதை

 எழுதத் தெரிந்த புலி 


காட்டிலிருந்து பிடிபட்டு கொண்டுவரப்பட்ட புலி ஒன்று சர்க்கஸ் கூண்டிற்குள் அடைக்கப்பட்டிருந்தது. கூண்டில் அடைக்கப்பட்ட மற்ற மிருகங்களைப்போல இல்லாமல் பகலும் இரவும் அந்தப்புலி நடந்து கொண்டேயிருந்தது. ஏன் அப்படி கூண்டிற்குள் அலைகிறது என்று எவருக்கும் தெரியவில்லை. 


ஒரு நாள் எங்கிருந்தோ ஊர்ந்து வந்த நத்தையொன்று புலிக்கூண்டின் மீது உட்கார்ந்தபடியே அதை பார்த்துக் கொண்டிருந்தது. புலி ஒய்வில்லாமல் வட்டமாக சுற்றிக் கொண்டிருப்பதைக் கண்டு எதற்காக இப்படி சுற்றிக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டது. அதற்கு புலி பதில் சொல்லவில்லை.


உடனே நத்தை ‘ கூண்டிற்குள் அடைபட்டுக் கிடக்க பயமாக இருக்கிறதா என்று கேட்டது. அதற்கு புலி நான் சுற்றிக் கொண்டிருக்கவில்லை. எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றது. நத்தைக்கு அது புரியவில்லை. 



எப்படி என்று கேட்டது. கூண்டிற்குள் அடைபட்ட பிறகு வாழ்க்கையில் எதுவும் மிச்சமிருப்பதில்லை. பூஜ்யமாகி விடுகிறோம். இப்போது நான் மாட்டிக் கொண்டிருக்கிறேன், அதனால் என் வாழ்க்கை வெறும் பூஜ்யம் அதை நான் மறந்துவிடாமல் இருக்கவே சுற்றி சுற்றி நடந்து கொண்டேயிருக்கிறேன், எனது நடை பூஜ்யத்தை எழுதுவது தான். 


இப்படி நினைவு கொள்ளாவிட்டால் இந்தக் கூண்டு பழகிப்போகும். அவர்கள் போடும் உணவு பழகிப் போகும், என்னை வேடிக்கை பார்ப்பவர்கள் முகம் பழகிப்போகும். பிறகு நான் கூண்டுப்புலியாக சுகமாக வாழப் பழகிவிடுவேன். அது அவமானம். அப்படி வாழக்கூடாது. அது ஒரு இழிவு. ஆகவே  நினைவில் உள்ள காட்டை ஒருபோதும் நான் மறக்க கூடாது. 


இப்போது முடக்கப்பட்டு நான் அடையாளமற்றுப் போயிருக்கிறேன் என்ற உண்மை மனதில் இருந்து கொண்டேயிருந்தால் மட்டுமே விடுதலையைப் பற்றிய நினைவு வளர்ந்து கொண்டேயிருக்கும்.



அதற்காகவே பகலும் இரவும் வட்டமாகச் சுற்றி வந்தபடியே எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றபடி புலி நடக்கத் துவங்கியது. 


 மேலும்,நான் அடைபட்டுக் கிடந்த போதும் என் குரல் அடைக்கப்படவில்லை. கேள் என் ரௌத்திரத்தை என்றபடியே புலி உறுமியது. 


அந்த குரலின் ஆழத்தில் புலியின் மனதில் இருந்த காடும் அதன் நினைவுகளும் எழுந்து அடங்கியது.. மேலும்,புலியின் விடுதலையும் வெகு தூரத்தில் இல்லை என்பதையும் காட்டியது.


நீதி :நாமும் நம்முடைய வாழ்க்கை இலட்சியத்தை தினம் தினம் நம் மனதில் நினைத்துக் கொண்டிருந்தால் கண்டிப்பாக ஒரு நாள் நம்மால் வெற்றி பெற முடியும்.

இன்றைய செய்திகள்

14.10.2024

* வணிகவரி - பதிவு துறையில் கடந்த ஆண்டைவிட ரூ.9,085 கோடி கூடுதல் வருவாய் ஈட்டி சாதனை.

* தமிழகத்தில் இன்று முதல் அக்டோபர் 17 ஆம் தேதி வரை  மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், அக்டோபர் 16 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

* இஸ்ரேல் உளவுத் துறையின் சைபர் தாக்குதலால் ஈரான் அரசின் செயல்பாடுகள் முடங்கிப் போயின. குறிப்பாக ஈரானின் அணுசக்தி தளங்கள் மீதும் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டு ரகசியங்கள் திருடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

* வூஹான் ஓபன் டென்னிஸ்: சபலென்கா, ஜெங் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.

* ஆசிய டேபிள் டென்னிஸ்: வெண்கலப் பதக்கம் வென்றது இந்திய ஜோடி.

Today's Headlines

* Business Tax - Registration Department recorded an additional revenue of Rs 9,085 crore over last year.

*  Heavy rain is likely to occur in Tamil Nadu from today to October 17.  Also, a red alert was issued for 4 districts namely Chennai, Tiruvallur, Kanchipuram, and Chengalpattu on October 16.

 * Iran's government operations were crippled by a cyber attack by Israel's intelligence agency.  In particular, it has been reported that cyber attacks have been carried out on Iran's nuclear facilities and secrets have been stolen.

 * Wuhan Open Tennis: Sabalenka, Zheng advanced to finals.

*  Asian Table Tennis: The Indian pair won the bronze medal.
 Prepared by

Covai women ICT_போதிமரம்