Monday, February 24, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.02.2025

நுரையீரல்

   






திருக்குறள்: 

பால்: பொருட்பால்

 அதிகாரம்:பெருமை

 குறள் எண்:976

சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
 பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு.

பொருள்:
பெரியோரைப் போற்றி அவரை பின்பற்றி பெருந்தன்மை கொள்வோம்
எனும் கருத்து சிறியவர் அறிவிற்படுவதில்லை

பழமொழி :

அச்சத்திற்கு மருந்து இல்லை

There is no medicine for fear.

இரண்டொழுக்க பண்புகள் :   

* வெயில் காலத்தில் செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதைத் தவிர்ப்பேன்.  

  *மோர், இளநீர், கம்பு, கேழ்வரகு கூழ் போன்ற இயற்கை குளிர்பானங்கள் குடித்து வெப்பத்தின் தாக்கத்தை தணிப்பேன்.

பொன்மொழி :

அறிஞர்கள் சித்தனை செய்யாதிருந்து அறிவிலிகள் ஆகிறார்கள். அறிவிலிகள் சிந்தனை செய்து அறிஞர்கள் ஆகுகிறார்கள்.


-- தத்துவஞானி கன்பூசியஸ்---

பொது அறிவு : 

1. மனித உடலில் எடை குறைந்த உடல் உறுப்பு எது? 

விடை:   நுரையீரல்.        

2. மனித உடலில் மிக அதிகமாக அடங்கியுள்ள உலோகம் எது?

 விடை : கால்சியம்

English words & meanings :

 Hospital.   -      மருத்துவமனை
 
Hotel.        -       உணவகம்

வேளாண்மையும் வாழ்வும் : 

 இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது ஊற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெருக்கெடுத்து வற்றாத ஜிவ நதியாக ஓட வழிவகை செய்யும்...

நீதிக்கதை

 பீர்பாலின் புத்திசாலித்தனம்


பீர்பால், அறிவாற்றலும் புத்திக்கூர்மையும் உள்ளவர். எவ்வளவு பெரிய சிக்கலையும், தமது அறிவுத் திறமையாலே சமாளித்து விடுவார் என்று கேள்விப்பட்ட காபூல் 

அரசருக்கு, பீர்பாலின் அறிவாற்றலை ஆராய்ந்து 

அறிய ஆவல் ஏற்பட்டது.


அதனால் ஒரு கடிதத்தில் , "மேன்மை தாங்கிய அக்பர் சக்ரவர்த்தி அவர்களுக்கு, ஆண்டவன் தங்களுக்கு 

நலன்கள் பலவும், வெற்றிகள் பலவும் தருவாராக. தாங்கள் எனக்கு ஒரு குடம் அதிசயம் அனுப்புங்கள் "என்று எழுதி கையெழுத்துப் போட்டு, தூதன் மூலமாக அக்பருக்கு அனுப்பினார் காபூல் அரசர்.


கடிதத்தைப் படித்த அக்பர் திகைத்து போய் , ஒரு குடம் அதிசயம் அனுப்புவதா? ஒன்றுமே புரியவில்லையே என்று குழம்பி, பீர்பாலிடம் கடிதத்தை காட்டினார்.


பீர்பால் சிறிது நேரம் யோசித்தார் .பின்பு , அக்பரிடம் மூன்று மாதத்தில் அதிசயம் அனுப்புவதாக பதில் எழுதுமாறு கூறினார். அக்பரும் அதேபோல் தபால் எழுதி அனுப்பினார்.


பின்பு அக்பர், பீர்பாலிடம், ஒரு குடம் அதிசயம் எப்படி அனுப்புவீர்கள்?   என்று விசாரித்தார் .


அதற்கு பீர்பால், 'மூன்று மாதம் கழித்து அந்த அதிசயத்தைப் பாருங்களேன்" என்று கூறினார் .


பிறகு பீர்பால் ஒரு மண் குடத்தை எடுத்தார். ஒரு பூசணிக்கொடியில் காய்த்திருந்த  பூசணிப்பிஞ்சு ஒன்றை கொடியோடு மண் குடத்திற்குள் வைத்தார். வைக்கோலால் குடத்தை மூடினார் .


நாளாக நாளாக பூசணிப் பிஞ்சு குடத்திற்குள்ளேயே நன்றாக வளர்ந்து பெருத்தது. குடம் நிறையுமளவிற்கு பூசணிக்காய் பெருத்ததும், பூசணிக்காயைத் தவிர மற்ற வைக்கோல், கொடி, காயின் காம்பு எல்லாவற்றையும் கத்தரித்து விட்டார் பீர்பால்.


பின்பு,அந்தக் குடத்தை அக்பரிடம் காட்டினார் பீர்பால். அக்பருக்கு ஆச்சரியம். குடத்தின் வாயோ உள்ளே இருக்கும் பூசணிக்காயைவிட மிகவும் சிறியது. இதனுள் இவ்வளவு பெரிய பூசணிக்காயை எப்படி நுழைத்தார்? என்று கேட்டார் . பீர்பால் அதை விளக்கிவிட்டு, அந்தப் பூசணிக்காய் குடத்தை அப்படியே காபூல் அரசனுக்கு, அதிசயம் என்று எழுதி அனுப்பினார்.


அதைப் பார்த்த காபூல் அரசன் பீர்பாலோட புத்திக் கூர்மையை எண்ணி வியந்தார்

இன்றைய செய்திகள்

25.02.2025

* கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட 2024 YR4 எனும் விண்கல், பூமி மீது மோத இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தனர். ஆனால் இதற்கான வாய்ப்பு குறைவு என்றும், நிலவு மீது மோத வாய்ப்பு அதிகம் எனவும் தற்போது கூறியிருக்கின்றனர்.

* தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் தொடங்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகங்கள். சந்தையில் கிடைப்பதை விட 50 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை குறைந்த விலைக்கு மருந்துகளை இங்கு வாங்கலாம்.

* சென்னைக்கான முக்கிய குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்ட உள்ளதால் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது.

* கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே சுங்கான்டை மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

* ரியோ ஓபன் டென்னிஸ் தொடரில் அர்ஜெண்டினாவின் செபாஸ்டியன் பேஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

Today's Headlines

* Scientists have warned that the 2024 YR4 meteorite, which was discovered last year, will clash on the earth. But they are now said that this is less likely and that the moon is more likely to collide.

* CM pharmacies opened in 1000 places across Tamil Nadu. Drugs can be purchased at a lower price of 50 percent to 75 per cent than in the market.

* The main drinking water source for Chennai, Sembarambakkam Lake is reaching full capacity, is likely to open water for drinking water.

* Wildfire has occurred in the Western Ghats of Sungandi near Eraniyal in Kanyakumari district.

* In the Rio Open Tennis Series, Argentina's Sebastian Base won the championship title.

Covai women ICT_போதிமரம்



Sunday, February 23, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.02.2025

ஸ்டீவ் ஜொப்ஸ்

   






திருக்குறள்: 

பால்: பொருட்பால்

 அதிகாரம்:பெருமை 

குறள் எண் :975. 

பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின் 
அருமை உடைய செயல்.

பொருள்:
பெருந்தன்மை உடையவர்,பிறர் ஆற்றுவியலா செயல்களை
முறையாகச் செய்து முடிப்பர்.

பழமொழி :

அகம்பாவம் அழிவைத் தரும்

Pride goes before a fall.

இரண்டொழுக்க பண்புகள் :   

* வெயில் காலத்தில் செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதைத் தவிர்ப்பேன்.  

  *மோர், இளநீர், கம்பு, கேழ்வரகு கூழ் போன்ற இயற்கை குளிர்பானங்கள் குடித்து வெப்பத்தின் தாக்கத்தை தணிப்பேன்.

பொன்மொழி :

வேரை வெட்டுகிறவன் அந்த மரத்திற்கு எத்தனை கிளைகள் என்று பார்த்து வெட்ட வேண்டும்.

---திரு. ஹென்றி டேவிட் தேரோ

பொது அறிவு : 

1. நறுமணப் பொருளாக பயன்படக்கூடிய பூ மொட்டு எது? 

விடை: கிராம்பு.      

2. மல்லிகைப்பூவுக்கு பெயர் பெற்ற ஊர் எது? 

விடை: மதுரை

English words & meanings :

 Farm     -   பண்ணை

Flyover    -    மேம்பாலம்

வேளாண்மையும் வாழ்வும் : 

 அதுமட்டுமில்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப் பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும்.

பிப்ரவரி 24


ஸ்டீவ் ஜொப்ஸ் அவர்களின் பிறந்தநாள்

ஸ்டீவ் ஜொப்ஸ் (தமிழக வழக்கு: ஸ்டீவ் ஜாப்ஸ்) (Steve Jobs, பிறப்பு பெப்ரவரி 24, 1955- அக்டோபர் 5, 2011) ஆப்பிள் நிறுவனத்தின் தலைவரும் தலைமை ஆட்சியரும், கணினித் துறையின் குறிப்பிடத்தக்க ஓர் ஆளுமையாளரும் ஆவார். இவர் 1985 ஆம் ஆண்டில், அமெரிக்க நாட்டரசு, அவர்களின் குடியரசுத் தலைவரால் வழங்கிப் பெருமை செய்யும் அந்நாட்டின் தலையாய பரிசாகிய தொழில்நுட்பத்துக்கும் புதுமையாக்கத்துக்குமான பதக்கத்தை வென்றார்.

ஸ்டீவ் ஜொப்ஸ், 1976 இல் ஆப்பிள் கம்பியூட்டர் நிறுவனத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவர். இவர் பிக்ஃசார் அசைபட நிறுவனத்தின் (Pixar Animation Studios) தலைமை ஆட்சியராகவும், வால்ட் டிசினி (Walt Disney) போன்ற பல நிறுவனங்களின் ஆட்சிப் பேராய இயக்குநர்களில் ஒருவராகவும் இருந்தார். ஆகத்து 24, 2011 அன்று உடல்நிலை காரணமாக தலைவர் பதவியிலிருந்து விலகினார். இவரையடுத்து டிம் குக் பொறுப்பேற்றார்.2011 ஆம் ஆண்டு அக்டோபர் 06 ஆம் திங்கள் அதிகாலை அவர் உயிரிழந்தார்.

நீதிக்கதை

 யானையின் அடக்கம்


யானை ஒன்று நன்றாகக் 

குளித்துவிட்டு நெற்றியில்

பட்டை தீட்டிக் கொண்டு 

சுத்தமாக வந்து 

கொண்டிருந்தது. 


ஒரு ஒடுக்கமான பாலத்தில் 

அது வரும் போது எதிரே 

சேற்றில் குளித்துவிட்டு 

ஒரு பன்றி, வாலை ஆட்டிக் 

கொண்டே வந்தது.


யானை ஒரு ஓரத்தில் 

ஒதுங்கி நின்று அதற்கு 

வழி விட்டது.


அந்தப் பன்றி, எதிரே இருந்த 

இன்னொரு பன்றியிடம், "பார்த்தாயா, அந்த யானை

 என்னைக் கண்டு பயந்து 

விட்டது!" என்று சொல்லிச்

 சிரித்தது.


அந்த யானையைப் 

பார்த்து இன்னொரு 

யானை, "அப்படியா, நீ 

பயந்து விட்டாயா?" என்று 

கேட்டது.


அதற்கு   அந்த  யானை 

கீழ்க்கண்டவாறு பதில் 

சொன்னது:


"நான் தவறி இடறி விட்டால்

பன்றி நசுங்கி விடும்.மேலும் 

நான் சுத்தமாக இருக்கிறேன். 

பன்றியின் சேறு என் மேல் 

விழுந்து நானும் 

அசுத்தமாகி விடுவேன்.

இந்தக் காரணங்களால், 

நான் ஒதுங்கிக் 

கொண்டேன்."


நீதி:தன் பலம், பலவீனம் 

தெரிந்தவர்கள் அடக்கத்தில் 

சிறந்தவர்களாக இருப்பார்கள். 

இன்றைய செய்திகள்

24.02.2025

* தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு 2,642 மருத்துவர்களை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு சென்னையில் தொடங்கியது.

* தமிழகத்தில் வரும் 25-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* உலகின் மிகப் பெரிய அரசாங்க சுகாதார காப்பீட்டு திட்டமாக ஆயுஷ்மான் பாரத் திட்டம் விளங்குகிறது என்றும், இத்திட்டத்தின் அடையாள அட்டையை 75 கோடி பேர் பெற்றுள்ளனர் என்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

* இந்திய தேர்தலுக்கு உதவுவதற்காக முந்தைய ஜோ பைடன் நிர்வாகம் 18 மில்லியன் டாலர் வழங்கியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

* உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: மனு பாக்கர் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு.

* புரோ ஹாக்கி லீக்: அயர்லாந்தை வீழ்த்தி இந்தியா 4-வது வெற்றி.

Today's Headlines

* The Tamil Nadu government has begun the counseling of  doctors to select 2,642 doctors tobe appointed in Tamilnadu government hospitals.

* The Chennai Meteorological Centre has announced that there is a possibility of rain in one or two places in Tamil Nadu from February 25 to 28.

* The Ayushman Bharat Yojana is the world's largest government-run health insurance program, and 75 crore people have received its identity cards, according to External Affairs Minister S. Jaishankar.

* Former US President Donald Trump has again alleged that the previous president Joe Biden's  administration provided $18 million to aid Indian elections.

* The Indian team, led by Manu Bhaker, has been announced for the World Cup shooting competition.

* In the Pro Hockey League, India defeated Ireland to achieve their fourth victory.

Covai women ICT_போதிமரம்

Thursday, February 20, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.02.2025

 

பன்னாட்டு தாய்மொழி நாள்

  






திருக்குறள்: 

பால்: பொருட்பால்

அதிகாரம்: பெருமை

குறள் எண்: 974

ஒருமை மகளிரே போலப் பெருமையும்
 தன்னைத்தான் கொண்டுஒழுகின் உண்டு.

பொருள்:
மகளிர் தங்கள் மன உறுதியால் கற்பை காப்பது போல் ஒருவன் ஒழுக்கம் தவறாதிருப்பின் பெருமை உண்டு.

பழமொழி :

தாழ்ந்து நின்றால் வாழ்ந்து நிற்பாய்.  

If humble thou shalt prosper.

இரண்டொழுக்க பண்புகள் :   

* என்னிடம் உள்ள பொருட்களைப் பற்றி பெருமை பேச மாட்டேன்.  

* என்னிடம் இல்லாத பொருட்களை எண்ணி ஏக்கம் கொள்ள மாட்டேன்.

பொன்மொழி :

உழைப்பவனின் காலம் பொன் ஆகுகிறது.

உழைக்காதவனின் பொன் காலமாகுகிறது.

அறிஞர் அண்ணா.

பொது அறிவு : 

1. லட்சத்தீவின் மாநில மலர் எது? 

விடை : நீலக்குறிஞ்சி.       

2. தமிழ்நாட்டின் மாநில மலர் எது? 

விடை: செங்காந்தள் மலர்

English words & meanings :

 Factory.   -     தொழிற்சாலை
 
Farm.     -       பண்ணை

வேளாண்மையும் வாழ்வும் : 

  பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும்.

பிப்ரவரி 21

பன்னாட்டுத் தாய்மொழி நாள்



பன்னாட்டுத் தாய்மொழி நாள் (International Mother Language Dayபெப்ரவரி 21 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 1952 இல் இந்த நாளன்று அன்றைய கிழக்கு பாகித்தான் தலைநகர் தாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக இந்நாள் உலகளாவிய முறையில் மொழி தொடர்பாக நினைவு கூறப்படும் சிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது.
வங்காள தேச அரசாங்கத்தின் முயற்சிகள், அனைத்துலக அமைப்புகளது ஆதரவுகள் காரணமாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (யுனெசுக்கோ)  1999, பெப்ரவரி 21 அன்று பொது மாநாட்டின் 30 ஆவது அமர்வில் இந்நாளை அனைத்துலக தாய் மொழிநாளாக அறிவித்தது. பல்வேறு சமூகங்களின் மொழிபண்பாட்டுத் தனித்தன்மைகளைப் பேணுவதுடன் அவற்றுக்கிடையிலான ஒற்றுமையையும் உருவாக்கும் எண்ணத்தோடு இந்நாளை யுனெஸ்கோ அறிவித்தது. 2000 ஆம் ஆண்டு முதல் இந்நாளானது உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 2013 ஆம் ஆண்டின் அனைத்துலகத் தாய்மொழி நாளை ஒட்டி யுனெஸ்கோ பாரிசில் "தாய்மொழிகளும் நூல்களும் - எண்ணிம நூல்களும் பாடநூல்களும்" (“Mother tongues and books - including digital books and textbooks”) என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

நீதிக்கதை

 நரியை வென்ற கழுதை


 ஒரு நாள் காட்டுப் பகுதியில் கழுதை ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அதை கவனித்த நரி ஒன்று கழுதையை அடித்து கொல்லும் நோக்கத்துடன் கழுதையின் மேல் பாய்ந்தது.


தனக்கு வந்த ஆபத்தைக் கண்டு பயந்துவிட்டது கழுதை.

 ஓநாயை எதிர்த்து சண்டை போடுவது கஷ்டம். அதனால் ஏதாவது தந்திரம் செய்து தான் தப்பிக்க வேண்டும் என்று கழுதை தீர்மானித்தது.


ஓநாய் பாய்ந்து வரும் போது சற்று விலகிக் கொண்டு, "ஓநாயரே! உம்முடைய வலிமையின் முன்னால் நான் எம் மாத்திரம். நான் இன்று உனக்கு இரையாக போவது உறுதி. அதை யாராலும் தடுக்க முடியாது.நானும் உனக்கு இரையாக தயாராக தான் இருக்கிறேன். அதற்கு முன்  நான் சொல்ல வேண்டிய விஷயத்தை  தயவுசெய்து கேட்க வேண்டும்" என்று வேண்டிக் கொண்டது கழுதை.


 "நீ என்ன சொல்ல விரும்புகிறாயோ அதை சீக்கிரம் சொல்" என்று கேட்டது ஓநாய்


"ஓநாயரே! என் காலில் முள் ஒன்று குத்திவிட்டது.முள்ளை எடுக்க நான் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை. காலில் முள் உள்ள நிலையில் தாங்கள் என்னை சாப்பிட்டால் அந்த முள் உங்கள் தொண்டையில் குத்தி விடும். அது உங்களுக்கு கடுமையான வேதனையை தருவதுடன்,உங்கள் உயிரையே பலி வாங்கி விடும். முதலில் என் காலில் உள்ள முள்ளை எடுத்துவிட்டு பின்னர் என்னை நீங்கள் சாப்பிடுவதில் எந்த ஆட்சேபனையும் எனக்கு இல்லை" என்று கூறியது கழுதை.


 ஓநாயும் ஒத்துக்கொண்டது கழுதை தன் பின்னங்கால்களை எடுத்து ஓநாயிடம் காண்பித்தது ஓநாயும் முள் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்த பொழுது, அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய கழுதை பின்னங்கால்களால் ஓநாயை பலமாக உதைத்தது.

ஓநாய் உயிர் பிழைத்தால் போதும் என்று ஒரே ஓட்டமாக ஓடிவிட்டது.


நீதி: எந்தவொரு சூழ்நிலையிலும் சிந்தித்து செயல்பட்டால் இறுதி வெற்றி நமக்கே.

இன்றைய செய்திகள்

21.02.2025

* தமிழக பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப்.25-ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

* தமிழகத்தில் 23-ம் தேதி வரை வழக்கத்தைவிட வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

* விண்வெளித்துறையி்ல தற்சார்பு நிலையை அடையும் வகையில், 10 டன் எடையில் உலகின் மிகப் பெரிய செங்குத்து உந்துசக்தி கலவை இயந்திரத்தை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

* ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் மார்ச் 12-ம் தேதி பூமியில் இருந்து புறப்படுகிறது. அந்த விண்கலன் சர்வதேச விண்வெளி மையத்துடன் டாக்  ஆனதும், அதே விண்கலனில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் 8 மாதங்களுக்கு பிறகு பூமி திரும்புகின்றனர். அவர்கள் மார்ச் 19-ம் தேதி அங்கிருந்து பூமிக்கு புறப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

* புரோ ஹாக்கி லீக்: நேற்றைய ஆட்டத்தில் ஜெர்மனியை வீழ்த்தி இந்தியா வெற்றி.

* தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி: ஒரே நாளில் தமிழகத்திற்கு 6 தங்கப்பதக்கங்கள்.

Today's Headlines

* Tamil Nadu's budget is set to be approved on February 25, with Chief Minister M.K. Stalin leading the cabinet meeting at the Secretariat in Chennai. This meeting is crucial as it will finalize the state's budget, outlining its financial plans and allocations for the upcoming year.

* In other news, Chennai's temperature is expected to rise by 4 degrees Celsius above normal until February 23, according to the Chennai Meteorological Centre.

* ISRO has successfully developed the world's largest vertical rocket stage, weighing 10 tons, marking a significant milestone in India's space program.

*  The Space X Dragon spacecraft is scheduled to launch on March 12 and will dock at the International Space Station. Astronauts Sunita Williams and Butch Wilmore will return to Earth on March 19 after an eight-month mission.

* In sports, India defeated Germany in the Pro Hockey League, while Tamil Nadu won six gold medals in the National Para Athletics Championship.

Covai women ICT_போதிமரம்

Wednesday, February 19, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.02.2025

   

உலக நீதி நாள்






திருக்குறள்: 

பால்: பொருட்பால்

அதிகாரம்: பெருமை

குறள் எண்:973

 மேல்இருந்தும் மேல்அல்லார் மேல்அல்லர்; கீழ்இருந்தும்
 கீழ்அல்லார் கீழ்அல் லவர்.

பொருள்:
உயர்ந்த நிலையிலிருந்தாலும் உயர்வான தன்மையில்லாதவா் சிறியர்; கீழ் நிலையில் இருந்தாலும் இழிவான எண்ணமில்லாதவர் பெரியோர்.

பழமொழி :

தன்னை அறிந்தவன் தானே தலைவன்.  

 He who knows himself may know his maker.

இரண்டொழுக்க பண்புகள் :   

* என்னிடம் உள்ள பொருட்களைப் பற்றி பெருமை பேச மாட்டேன்.  

* என்னிடம் இல்லாத பொருட்களை எண்ணி ஏக்கம் கொள்ள மாட்டேன்.

பொன்மொழி :

சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது. பல நேரங்களில் வெற்றியே புத்தியாகிவிடுகிறது.

--கவிஞர் கண்ணதாசன்

பொது அறிவு : 

1. விழாக்காலங்களில் பலூன்களில் நிரப்பப்படும் வாயு எது? 

விடை : ஹீலியம்.       

2. இந்தியாவின் தேசிய நீர் வாழ் விலங்கு எது? 

விடை : கங்கை டால்பின்

English words & meanings :

 College.  -    கல்லூரி

Court.      -     நீதிமன்றம்

வேளாண்மையும் வாழ்வும் : 

 அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும்...

ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது..

இதனை உணர்ந்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர்…

பிப்ரவரி 20

உலக நீதி நாள்


சமூக நீதிக்கான உலக நாள் அல்லது உலக நீதி நாள் (World Day of Social Justice) என்பது உலக நாடுகள் முழுவதும் ஆண்டுதோறும் பெப்ரவரி 20 ஆம் நாளன்று கடைப்பிடிக்கப்படும் நாளாகும். வறுமையைப் போக்கவும், வேலையின்மையின் பிரச்சினைகளைக் கையாளும் முயற்சிகளை ஊக்குவிக்கவும், இந்நாள் அங்கீகரிக்கப்படுகிறது. மேலும் இந்நாளில், ஐக்கிய நாடுகள் அவை, மற்றும் சர்வதேச தொழிலாளர் அலுவலகம் உட்பட, பல அமைப்புக்கள் மக்கள் சமூக நீதி முக்கியத்துவம் பற்றிய அறிக்கைகளை தயாரிக்க அமைக்கப் பெற்றுள்ளது.

நீதிக்கதை

 தென்றலும்‌ சூறாவளியும் 


ஆற்றங்கரையிலே நின்ற அந்த மாமரம்‌ சலசலவென்று சிலிர்த்து ஆடிக்கொண்டிருந்தது. அதன்‌ கிளைகளிலே தங்க நிற மாம்பழங்கள்‌ அழகாகத்‌ தொங்கிக்‌ கொண்டிருந்தன. ஓர்‌ அணிற்‌ பிள்ளையும்‌ ஒரு கிளிப்பிள்ளையும்‌ அந்த மாமரத்தை நெருங்கின. 


“அம்மா, மாமரத்‌ தாயே ! பசித்து வந்திருக்‌கிறோம்‌” என்றது கிளிப்பிள்ளை. “உங்களுக்காகத்தானே பழம்‌ வைத்திருக்‌கிறேன்‌. நன்றாகச்‌ சாப்பிடுங்கள்‌”? என்று கூறியது மாமரம்‌. 


“மாவம்மா,இன்று, ஒரே ஆனந்தமாயிருப்பது போல்‌ தெரிகிறதே! என்ன காரணம்‌?” என்று விசாரித்தது அணிற்பிள்ளை. 


“பிள்ளைகளே ! தென்றல்‌மாமா வந்திருக்‌கிறார்‌. அவர்‌ வந்திருப்பதே ஓர்‌ இன்பம்தானே!” என்று கூறியது மாமரம்‌. 


அணிற்பிள்ளையும்‌ கிளிப்பிள்ளையும்‌ வயிறு நிறைய பழம்‌ சாப்பிட்டுவிட்‌.டுச்‌ சென்றுவிட்டன. தென்றல்‌ மாமாவுடன்‌ நேரம்‌ போவது தெரியாமல்‌ பேசிக்‌ கொண்டிருந்தது மாமரம்‌.


இரண்டு நாட்கழித்து,

“மாவம்மா! நேற்றெல்லாம்‌ *ஓ*வென்று அலறிக்‌ கொண்டிருந்தாயே ஏன்‌?” என்று கேட்டுக் கொண்டே மாமரத்திடம் வந்தது அணிற்பிள்ளை.


மாமரத்தைப் பார்த்து “இதென்ன அநியாயம்‌! மாமரத்‌ தாயே! உன்‌கிளைகளெல்லாம்‌ ஏன்‌ முறிந்து கிடக்கின்றன. ஐயோ ! பழமெல்லாம்‌ கீழே வீழுந்து அழுகிக்‌ கிடக்கின்றனவே, ஏன்‌?' என்று பதறிப்‌ போய்க்‌ கேட்டது கிளிப்பிள்ளை. 


பிள்ளைகளே, நேற்று சூறாவளி  என்கிற முரடன்‌ வந்தான்‌. அவன்‌ செய்த அட்டூழியம்தான்‌ இது!” என்று கூறிக்‌ கண்ணீர்‌ விட்டது மாமரம்‌. மாமரத்தின்‌ துன்பத்தைக்‌ காணப்‌ பொறுக்காமல்‌  கிளிப்பிள்ளையும்‌

அணிற்பிள்ளையும்‌ கண்ணீர்‌ விட்டன.  


அவற்றிற்குப்‌ பழம்‌ கொடுக்க முடியாமல்‌ போய்‌விட்டதே என்று மாமரம்‌ வருந்தியது. பின்னர் 

அவையிரண்டும்‌  தத்தம்‌ இருப்பிடம்‌ நோக்கிச்‌ சென்றன.


கருத்துரை:-- நல்லவர்கள்‌  வரவால்‌ இன்பம்‌ உண்டாகும்‌. தீயோர்கள்‌ வரவால்‌ துன்பமே உண்டாகும்‌.

இன்றைய செய்திகள்

20.02.2025

* தமிழக அரசின் நலத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்த ஏதுவாக, மத்திய அரசின் திட்டங்களுக்கான பங்குத் தொகையை, குறிப்பிட்ட காலத்துக்குள் விடுவிக்க வேண்டும் என மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

* 12 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் திருச்சி, மதுரையில் டைடல் பூங்காக்கள்: தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

* “விண்வெளி உட்பட பல துறைகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது” - மத்திய தொழில்நுட்ப இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் பெருமிதம்.

* தூய்மையான எரிசக்தி, தொழில்துறையை பயன்படுத்தி இந்தியா வேகமாக வளர்ச்சியடையும்  என ஐ.நா. கருத்து தெரிவித்துள்ளது.

* துபாய் ஓபன் டென்னிஸ் தொடர்: அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் கஜகஸ்தான் வீராங்கனை எலினா  ரைபகினா.

* பிரிட்டிஷ் ராலி சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தின் 2025-ம் ஆண்டு சீசனில் எம்ஆர்எஃப் அணி இணைந்துள்ளது. மேலும் இந்த தொடருக்கு தேவையான அனைத்து டயர்களையும் விநியோகம் செய்யும் உரிமையையும் எம்ஆர்எஃப் பெற்றுள்ளது.

Today's Headlines

*  Tamil Nadu Chief Minister M.K. Stalin has written to Union Minister for Women and Child Development Smriti Irani, requesting her to release the central government's share of funds for various schemes within a specified timeframe.

*  Tamil Nadu Chief Minister M.K. Stalin laid the foundation stone for the Tidal Parks in Trichy and Madurai, which will provide employment opportunities for 12,000 people.

*  "India is making rapid progress in various fields, including space technology," said Union Minister of State for Technology Jitendra Singh.

*  The United Nations has stated that India will experience rapid growth using clean energy and industrialization.

* Dubai Open Tennis: Kazakhstani player Elena Rybakina advances to the next round.

*  MRF team joins British Rally Championship for the 2025 season and obtains the rights to supply all the necessary tires for the tournament.

Covai women ICT_போதிமரம்