Pages

Thursday, September 26, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.09.2024

 

உலக சுற்றுலா தினம்

    




திருக்குறள்: 

பால்: பொருட்பால்

அதிகாரம்: நட்பு ஆராய்தல்

குறள் எண்:795

அழச்சொல்லி அல்லது இடித்து வழக்குஅறிய
வல்லார்நட்பு ஆய்ந்து கொளல்.

பொருள்: நன்மையில்லாத செயலைக் கண்டபோது வருந்தும்படியாக இடித்துச் சொல்லி, உலக நடையை அறிய வல்லவரின் நட்பை ஆராய்ந்து கொள்ள வேண்டும்.

பழமொழி :

எறும்பு ஊரக் கல்லும் தேயும். 

 Persistence never fails.

இரண்டொழுக்க பண்புகள் :  

 * தேர்வுகள் எழுதுவது எனது கற்றல் திறனை நானே அறிந்து கொள்ள உதவும். எனவே தேர்வுக்கு நன்கு படித்து தயாராவேன்.                              

* கையெழுத்து அழகாக இருந்தால் நான் எழுதும் விபரம் பிறருக்கு நன்கு புரியும்.  எனவே எப்போதும் அழகாக எழுதுவேன்.

பொன்மொழி :

எடுத்தால் குறைவது செல்வம், கொடுத்தால் வளர்வது கல்வி.

பொது அறிவு : 

1. மையோப்பியா என்ற நோய் மனிதனின் எந்த உடல் உறுப்பை தாக்குகிறது? 

 கண்கள்

 2 . கடல் சிங்கங்கள் எங்கு காணப்படுகின்றன? 

 அண்டார்டிகா.

English words & meanings :

 intend-கருத்து,

  plan-திட்டம்

Applicationsyû வாழ்வும் : 

மடைகளை அமைக்க முதலில் பனைமரங்கள் பயன்படுத்தப்பட்டன. 

செப்டம்பர் 27

உலக சுற்றுலா நாள்

உலக சுற்றுலா நாள் (World Tourism Day) உலக சுற்றுலா நிறுவனத்தின் ஆதரவில் செப்டம்பர் 27ம் நாளில் 1980ம் ஆண்டிலிருந்து உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. 1979இல் ஸ்பெயினில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா நிறுவனத்தின் மூன்றாவது பொது அவைக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. சுற்றுலாவின் முக்கியத்துவத்தை உலகெங்கும் எடுத்துக்காட்டவும் சுற்றுலா எப்படி மக்களின் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டவும் இந்நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

நீதிக்கதை

 நரியும் புலியும் 



ஒரு அடர்ந்த காட்டிற்குள் பல விலங்குகள் வசித்து வந்தன. அங்குள்ள அனைத்து விலங்குகளுக்கும் புலியை கண்டால் மிகவும் பயம். தூரத்தில் புலி வருவதை பார்த்தாலே இவர்கள் அனைவரும் பயந்து ஓடுவார்கள்.ஒருநாள் புலி வந்து கொண்டிருக்கும்போது, மற்ற விலங்குகள் அந்த புலியை பார்த்து பயந்து ஓடுவதை நரி ஒன்று பார்த்துக் கொண்டு இருந்தது.


அந்த நரிக்கு புலியின் மேல் பொறாமை  உண்டு, “இந்த விலங்குகள் எல்லாம் புலியை மட்டும் பார்த்து பயப்பட்டு ஓடுகிறார்கள், ஆனால் என்னை பார்த்து யாரும் பயப்படுவதில்லையே” என்று எண்ணி நானும் ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தது.


அப்போதுதான் அது முடிவெடுத்தது. நானும் புலியைப் போல் மாறினால் என்னையும் பார்த்து எல்லாரும் நிச்சயமாக பயப்படுவார்கள், என்ற எண்ணத்தில்,வண்ணம் பூசுபவனிடம் சென்ற நரி  “எனக்கு புலியைப் போல் தோற்றம் வேண்டும் எனவே என் மீது வண்ணம் பூசு என்றது”. அவனும் சரி என்று சொல்லிக்கொண்டு அந்த நரியின் மேல் வண்ணத்தை பூசினான்.


அந்த நரி பார்ப்பதற்கு புலியைப் போல்  தோற்றம் கொண்டிருந்தது. இந்த நரி “இனிமேல் எல்லோரும் நிச்சயமாக என்னை பார்த்து பயப்படுவார்கள்” என்று சிரித்துக்கொண்டே காட்டுக்குள் சென்று ஊளை இட ஆரம்பித்தது. என்னதான் அது புலியை போல் வண்ணம் பூசி இருந்தாலும், அதன் குரல் நரியை போல் தான் இருந்தது.புலியை போல் அதனால் சத்தம் இட முடியவில்லை. 


இதன் சத்தத்தை கேட்டு மற்ற எல்லா விலங்குகளும் ஓடி வந்தன. மற்ற விலங்குகள் நரியை பார்த்து ஆச்சரியப்பட்டனர். ஆனால் சிறிது நேரத்தில் பயங்கரமான மழை ஆரம்பித்தது. அந்த மழையில் நனைந்த  நரியின் வேஷம் அனைத்தும் கலைந்து போயின. அந்த நரி மீண்டும் பழைய நிலைமைக்கே வந்தது. இதை பார்த்த மற்ற எல்லா விலங்குகளும் ஏளனமாக  சிரித்தனர்.


 நீதி: நாம் நாமாக இருப்பதே நல்லது.

இன்றைய செய்திகள்

27.09.2024

* பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் 1,400 தற்காலிக பட்டதாரி ஆசிரியர்களுக்கு நவம்பர் மாதம் வரை ஊதியம் வழங்குவதற்கான கொடுப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் 40 மாதங்களில் 17.5 லட்சம் பேருக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக, உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

* மண்ணில் குழி தோண்டி விளையாடிக் கொண்டிருந்தபோது முதலாம் ராஜராஜசோழன் (கி.பி.985-1012) பெயர் பொறித்த 1000 ஆண்டுகள் பழமையான ஈழக்காசை ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அரசுப் பள்ளி மாணவிகள் கண்டெடுத்துள்ளனர்.

* சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட, 2024-25-ம் ஆண்டுக்கான சிறந்த பெண் குழந்தைகளுக்கான விருதுக்கு செப்.30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

* விவசாயத்துக்கு மின்விநியோகம் செய்ய தனி வழித்தடம் அமைக்கும் பணியை தமிழ்நாடு மின்சார வாரியம் தொடங்கியுள்ளது.

* மும்பையில்  கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

* உக்ரைனைப் பயன்படுத்தி ரஷ்யா மீது தீவிர தாக்குதல் நடத்தப்படுமானால், அணுஆயுதங்களைப் பயன்படுத்த ரஷ்யா தயங்காது என்று ஐரோப்பிய நாடுகளுக்கு அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

* மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன்: இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

* சீன ஓபன் டென்னிஸ்: ஜானிக் சினெர் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்.

* இலங்கை- நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் நேற்று தொடங்கியது.

Today's Headlines

* Payments for 1,400 temporary graduate teachers working in the school education sector till November have been released.

 * Food Minister Chakrapani said that 17.5 lakh people have been given family cards in 40 months in Tamil Nadu.

 * A 1000-year-old Esakasai inscribed with the name of Rajarajacholan I (985-1012 AD) was found by the girls of Tirupullani Government School of Ramanathapuram district while playing in a hole in the soil.

 * Chennai District Collector Rashmi Siddharth Jagade said that they should apply for the best girl child award for the year 2024-25 under Chennai district by September 30.

 * The Tamil Nadu Electricity Board has started the work of setting up a separate channel for power distribution to agriculture.

*  Normal life of people affected due to heavy rains in Mumbai.

 * President Vladimir Putin has warned European countries that Russia will not hesitate to use nuclear weapons if there is a serious attack on Russia using Ukraine.

*  Macau Open International Badminton: Indian player Srikanth qualified for 2nd round.

 * Chinese Open Tennis: Janic Siner advances to next round

 * The 2nd Test between Sri Lanka and New Zealand started yesterday.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Wednesday, September 25, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.09.2024

     

திரு. மன்மோகன் சிங்




திருக்குறள்: 

பால்: பொருட்பால்

அதிகாரம் :நட்பு ஆராய்தல்

குறள் எண்:794

குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.

பொருள் :உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வரக்கூடிய பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்பு கொள்ள வேண்டும்.

பழமொழி :

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது. 

 Don't measure the worth of a person by their size.

இரண்டொழுக்க பண்புகள் :  

 * தேர்வுகள் எழுதுவது எனது கற்றல் திறனை நானே அறிந்து கொள்ள உதவும். எனவே தேர்வுக்கு நன்கு படித்து தயாராவேன்.                              

* கையெழுத்து அழகாக இருந்தால் நான் எழுதும் விபரம் பிறருக்கு நன்கு புரியும்.  எனவே எப்போதும் அழகாக எழுதுவேன்.

பொன்மொழி :

நேர்மறை எண்ணங்களே சாதனைக்கு வழிகாட்டும் ---ஹெலன் கெல்லர்

பொது அறிவு : 

1. கீரின்விச் கோட்டிற்கு மேற்கே செல்லச்செல்ல

விடை: நேரம் குறையும். 

 2. நான்கு பக்கங்களிலும் கடலால் சூழப்பட்ட நிலப்பகுதி

விடை: தீவு

English words & meanings :

 burning-எரித்தல்,

 caustic-நாசமாக்குகிற

வேளாண்மையும் வாழ்வும் : 

மடையர்கள்*
ஏரியை வடிவைமைத்த பிறகு அதிலிருந்து தண்ணீர் வெளியேறத் தமிழன் கண்டுபிடித்த தொழில்நுட்பம்தான் "மடை"

செப்டம்பர் 26

மன்மோகன் சிங் அவர்களின் பிறந்தநாள்

மன்மோகன் சிங் (Manmohan Singh, பஞ்சாபி: ਮਨਮੋਹਨ ਸਿੰਘ, பிறப்பு: செப்டம்பர் 26, 1932) இந்தியாவின் 14 ஆவது, பிரதமர் ஆவார். மன்மோகன் சிங், மேற்கு பஞ்சாபிலுள்ள கா என்னும் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) ஊரில் பிறந்தார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். மே 22, 2004 இல் இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார்

1991 முதல் 1996 வரை பி. வி. நரசிம்ம ராவ் அமைச்சரவையில் மன்மோகன் சிங் நிதி அமைச்சராக பணியாற்றினார். கல்வியாலும், பயிற்சியாலும் தேர்ந்த பொருளாதாரவியல் வல்லுநரான அவர், இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையின் துவக்கத்தில் பெரும்பங்கு வகித்தார். மன்மோகன் சிங் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் மத்திய ரிசர்வ் வங்கியின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். அவர் நிதியமைச்சராகும் முன் பின்தங்கிய நிலையில் இருந்த இந்திய பொருளாதாரம், இவரின் கொள்கைகளால் முன்னேறத் துவங்கியது எனக் கருதப்படுகிறது

நீதிக்கதை

 விதியை மாற்றி அமைக்கலாம்


ஒருமுறை ஒரு ராஜா பெரிய ராணுவப்படை ஒன்றை தயார் செய்து போருக்கு தயாரானார் எப்படியும் இந்த போரில் தாம் வெல்வோம் என்ற நம்பிக்கையுடன் இருந்தார்.


 ஆனால் அந்தப் படை வீரர்களோ பெரும் சந்தேகத்துடனே இருந்தார்கள்.  மேலும் சோர்ந்து போய், நம்பிக்கையற்று  இருந்தார்கள். 


 அதனால் அந்த ராஜா தனது  தனது வீரர்களுக்கு நம்பிக்கையூட்ட,தைரியத்தை வரவழைக்க என்ன செய்யலாம் என்று யோசனை கேட்க ஒரு ஜென் துறவியை பார்க்க  புறப்பட்டார்.


அப்போது துறவி ராஜாவிடம் ஒரு யோசனை கூறினார். அதேபோல் ராஜாவும் செய்தார். 


அது என்னவென்றால், அந்த ராஜா போருக்கு செல்லும் வழியில் உள்ள கோவிலில் பூஜை செய்துவிட்டு  ஒரு நாணயத்தை எடுத்து வீரர்களிடம் காண்பித்து "நான் இப்போது இந்த நாணயத்தை சுழற்றி விடுவேன் தலை விழுந்தால் நாம் போரில் ஜெயிப்போம் இல்லையெனில் தோற்போம்" என்று துறவி கூறியதை படைவீரர்களிடம் கூறினார்.


"நம் தலைவிதி இந்த  நாணயத்தை பொறு த்து அமையட்டும்" என்று மன்னர் கூறியபடி நாணயத்தை சுழற்றினார். அனைவரும் ஆர்வத்துடன் நாணயத்தை பார்த்திருந்தனர்.


தலை விழுந்தது. அந்த வீரர்கள் மிகவும் சந்தோஷத்துடன் நாம் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையுடன் போர்க்களத்தை நோக்கி புறப்பட்டனர்.


போர்க்களத்தில் வெற்றியும் பெற்றனர். அப்போது துணை தளபதி அவர்கள் "பார்த்தீர்களா!மன்னா  நாம் தான் வெற்றி பெற்று பெறுவோம் என்று இருக்கிறது. நாம் தான் வெற்றி பெற்றுள்ளோம். விதியை யாராலும் மாற்ற முடியாது" என்று கூறினார். 


அப்போது மன்னரோ, தன்னிடம் இருந்த நாணயத்தின் இரு பக்கத்திலும் தலை இருப்பதை காண்பித்தார். இதைக் கொண்டே துறவி கூறியபடி,தாம் தம் படைவீரர்களுக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அளித்ததாக

விளக்கினார்.


 நீதி: நம்பிக்கையுடன் செயல்பட்டால் எத்தகைய காரியத்தையும் எளிதில் முடிக்கலாம்.விதியையும்  மாற்றி அமைக்கலாம்.

இன்றைய செய்திகள்

26.09.2024

*50 லட்சம் இளைஞர்களுக்கு வேலை உருவாக்க இலக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்.  

 * அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 12 வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு நடந்து வரும் நிலையில் , காலாண்டு விடுமுறை நீட்டிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அக்டோபர் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கும்.

*அரசுப் போட்டித் தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகள் அதிக அளவில் தேர்வாக வேண்டும் என்பதை மையமாக வைத்து, ஆண்டுதோறும் 200 பேருக்கு சிறப்பு பயிற்சி வழங்க ₹12.90 லட்சம் ஒதுக்கி அரசாணை வெளியீடு!

 *மயிலாப்பூரில் உள்ள எஸ்.ஐ. காது கேளாதோருக்கான மேல்நிலைப் பள்ளியில் முதல்கட்ட வகுப்புகள் நடத்தப்படும்.

* ஆசியாவின் 3ஆவது சக்திவாய்ந்த நாடு இந்தியா: லோவி மதிப்பீட்டு நிறுவனம் அறிவிப்பு!!

* இந்திய விமானப் படை துணைத் தளபதியாக ஏர் மார்ஷல் எஸ்.பி. தார்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

* பாரிஸ் பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு முதல்வர்  ஊக்கத் தொகை வழங்கி கவுரவிப்பு.

* ஹாங்சோ ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய இணை சாம்பியன் பட்டம் வென்றது.

* ஐ.எஸ்.எல். கால்பந்து ; ஐதராபாத் அணியை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி.

* ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் அஸ்வின்.

Today's Headlines

* Chief Minister M. K. Stalin's said the government's target is to create jobs for 50 lakh youth. 

* While the quarterly examination for classes 1 to 12 is going on in government, government-aided and private schools, an announcement has been made regarding the extension of the quarterly vacation. Schools will re open on October 7. 

*Focusing on the fact that disabled persons should be selected in large numbers in government competitive examinations,₹12.90 lakh is allotted to provide special training to 200 people every year. 

 * First Stage classes will be held in the SI  Higher Secondary School for the Deaf in Mylapore.

* India is Asia's 3rd most powerful country: Loewy Ratings Announces!! 

* Air Marshal S.P. Darkar is appointed as the Deputy Commander of the Indian Air Force. 

* Those who won the Medal at the Paris  CM Stalin has awarded the winners with incentives.

*India won the men's doubles co-champion title at the Hangzhou Open tennis tournament. 

*ISL football; Punjab won by defeating Hyderabad.

* ICC Test rankings: Ashwin continues at number one.
 Prepared by

Covai women ICT_போதிமரம்