இயல் : அரசியல்
அதிகாரம்:50.இடன் அறிதல்
குறள் எண்:493
குறள்:
ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்.
பொருள்:
பலம் இல்லாதவர் என்றாலும்கூட ஏற்ற இடத்தை அறிந்து, தம்மையும் காத்து, பகைவரோடு மோதுபவர், பலம் உள்ளவராய்ப் பகையை அழிப்பர்.
One doth the act, another hath the blow.
பாவம் ஒரு பக்கம் ; பழி ஒரு பக்கம்.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்பதால் எனக்கு இருப்பது போதும் என்று இருப்பேன்.
2. ஞானமும் ஒழுக்கமுமே என் வாழ்வை மேம்படுத்தும். எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்பொன்மொழி :
“திறமைக்கு வாய்ப்பு கிடைக்க காத்திருக்காதே; உன் முயற்சியால் வாய்ப்பை உருவாக்கு.”
Thought for the Day :
Democracy Day: “Respect every voice, uphold every responsibility.”
பொது அறிவு :
1. தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள் எத்தனை?
25 மாநகராட்சிகள்.
2. தமிழ்நாட்டில் உள்ள நகராட்சிகள் எத்தனை?
137 நகராட்சிகள்.
English words :
1. Subtle – Not easily noticed, நுட்பமான.
2. Versed – Well-informed or skilled, நன்கு அறிந்தவர் / திறமைமிக்கவர்.
புவியியலும் சுற்றுசூழலும் :
தமிழ்நாட்டின் விவசாயத்திற்கு ஆறுகள் மிக முக்கியமானவை.
முக்கிய ஆறுகள்:
காவிரி
தென்பெண்ணை
பாலாறு
வைகை
தாமிரபரணி
பவானி
அமராவதி
நொய்யல்
கொள்ளிடம்
NMMS :
MAT
ஒரு குறிப்பிட்ட குறியீட்டில் 85+14=18, 96+27=24 என குறிப்பிட்டால் 14+27ன் மதிப்பு என்ன?
(1) 14.
(2) 27.
(3) 20.
(4) 26.
விடை: (1) 14
செப்டம்பர் 14
நீதிக்கதை
ஆவியில் வேகவைத்த உணவின் சிறப்பு
நீதிக்கதை
ஒரு சிறிய ஊரில் ஜகதீஷ் மற்றும் மோனிகா என்ற அண்ணன், தங்கை வாழ்ந்து வந்தனர். அவர்களுடைய அம்மா தினமும் வீட்டில் சுவை யான உணவுகளைச் சமைத்து கொடுப்பார். ஆனால் ஜகதீஷுக்கும் மோனிகாவுக்கும் எண்ணெயில் பொரித்த உணவுகள், பாக்கெட் தின்பண்டங்கள் போன்றவற்றின் மீதுதான் அதிக விருப்பம்.
ஒருநாள் காலை அம்மா இட்லி, இடியாப்பம் மற்றும் ஆவியில் வேகவைத்த காய்கறிகளைத் தயாரித்தார்.
“அம்மா, தினமும் இட்லி, இடியாப்பமா? எங்களுக்கு பூரியும், வடையும் வேண்டும்!” என்று ஜகதீஷ் கேட்டான்.
“ஆமாம் அம்மா, எண்ணெயில் பொரித்த உணவுதான் ரொம்ப சுவையாக இருக்கும்!” என்று மோனிகாவும் சொன்னாள். அப்போது அப்பா சிரித்துக்கொண்டே , “குழந்தைகளே , சுவை மட்டும் பார்த்து உணவைத் தேர்ந்தெடுக்கக் கூடாது. உடலுக்கு எது நல்லது என்பதையும் பார்க்க வேண்டும்,” என்றார்.
அவர் தொடர்ந்து, “ஆவியில் வேகவைத்த உணவுகளுக்கு அதிக எண்ணெய் தேவையில்லை . இட்லி, இடியாப்பம், கொழுக்கட்டை , ஆவியில் வேகவைத்த காய்கறிகள் போன்றவை எளிமையான முறையில் தயாரிக்கப்படுகின்றன. வீட்டில் தயாரித்த சத்தான உணவுகளை விரும்பி சாப்பிடுவது நல்ல பழக்கம்,” என்று விளக்கினார்.
அம்மா அன்று ஜகதீஷுக்கும் மோனிகாவுக்கும் வண்ணமயமான காய்கறிகளுடன் ஆவியில் வேகவைத்த கொழுக்கட்டை செய்து கொடுத்தார்.
இருவரும் சுவைத்துப் பார்த்துவிட்டு, “அம்மா! இது ரொம்ப சுவையாக இருக்கிறது. இனிமேல் ஆவியில் வேகவைத்த உணவுகளையும் விரும்பிச் சாப்பிடுவோம்!” என்றனர்.
அதன்பிறகு, அவர்கள் வீடில் வாரத்தின் பல நாட்களில் இட்லி, இடியாப்பம், கொழுக்கட்டை , வேகவைத்த காய்கறிகள் போன்ற உணவுகள் இடம்பெறத் தொடங்கின.
நீதி:
சுவையான உணவு மட்டுமல்ல; உடலுக்கு ஏற்ற சத்தான உணவையும் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். ஆவியில் வேகவைத்த உணவுகள் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தின் ஒரு நல்ல பகுதியாக இருக்கலாம்.
இன்றைய செய்திகள்



