Pages

Monday, September 14, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.09.2026






திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:50.இடன் அறிதல்

குறள் எண்:493

குறள்:

ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்.

பொருள்:

பலம் இல்லாதவர் என்றாலும்கூட ஏற்ற இடத்தை அறிந்து, தம்மையும் காத்து, பகைவரோடு மோதுபவர், பலம் உள்ளவராய்ப் பகையை அழிப்பர்.

பழமொழி :

One doth the act, another hath the blow.

பாவம் ஒரு பக்கம் ; பழி ஒரு பக்கம்.

இரண்டொழுக்க பண்புகள் :.

 1. போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்பதால் எனக்கு இருப்பது போதும் என்று இருப்பேன்.

2. ஞானமும் ஒழுக்கமுமே என் வாழ்வை மேம்படுத்தும். எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்

பொன்மொழி : 

“திறமைக்கு வாய்ப்பு கிடைக்க காத்திருக்காதே; உன் முயற்சியால் வாய்ப்பை உருவாக்கு.”

Thought for the Day :

Democracy Day: “Respect every voice, uphold every responsibility.”

பொது அறிவு : 

1. தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள் எத்தனை? 

 25 மாநகராட்சிகள்

 2. தமிழ்நாட்டில் உள்ள நகராட்சிகள் எத்தனை? 

 137 நகராட்சிகள்.  

English words :

1. Subtle – Not easily noticed, நுட்பமான.


2. Versed – Well-informed or skilled, நன்கு அறிந்தவர் / திறமைமிக்கவர்.

புவியியலும் சுற்றுசூழலும் :

தமிழ்நாட்டின் விவசாயத்திற்கு ஆறுகள் மிக முக்கியமானவை.
முக்கிய ஆறுகள்:
காவிரி
தென்பெண்ணை
பாலாறு
வைகை
தாமிரபரணி
பவானி
அமராவதி
நொய்யல்
கொள்ளிடம்

NMMS :

MAT 

ஒரு குறிப்பிட்ட குறியீட்டில் 85+14=18, 96+27=24 என குறிப்பிட்டால் 14+27ன் மதிப்பு என்ன? 

 (1) 14. 

 (2) 27.

(3) 20. 

 (4) 26.

 விடை: (1) 14

செப்டம்பர் 14

அனைத்துலக சனநாயக நாள் 

அனைத்துலக சனநாயக நாள் செப்டெம்பர் 15 அன்று அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. நவம்பர் 8, 2007 இல் நடந்த ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்சபைக் கூட்டத்தில் இது பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

சனநாயகத்தினை ஊக்குவிக்கும் முகமாகவும் அபிவிருத்தி செய்யவும், மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரம் போன்றவற்றிற்குரிய கௌரவத்தை கொடுக்கும் முகமாக ஐநா இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இப்பொதுத் தீர்மானத்தை 192 உறுப்பு நாடுகள் அனுமதித்துள்ளன.

நீதிக்கதை

ஆவியில் வேகவைத்த உணவின் சிறப்பு

நீதிக்கதை

ஒரு சிறிய ஊரில் ஜகதீஷ் மற்றும் மோனிகா என்ற அண்ணன், தங்கை வாழ்ந்து வந்தனர். அவர்களுடைய அம்மா தினமும் வீட்டில் சுவை யான உணவுகளைச் சமைத்து கொடுப்பார். ஆனால் ஜகதீஷுக்கும் மோனிகாவுக்கும் எண்ணெயில் பொரித்த உணவுகள், பாக்கெட் தின்பண்டங்கள் போன்றவற்றின் மீதுதான் அதிக விருப்பம்.

ஒருநாள் காலை அம்மா இட்லி, இடியாப்பம் மற்றும் ஆவியில் வேகவைத்த காய்கறிகளைத் தயாரித்தார்.

“அம்மா, தினமும் இட்லி, இடியாப்பமா? எங்களுக்கு பூரியும், வடையும் வேண்டும்!” என்று ஜகதீஷ் கேட்டான்.

“ஆமாம் அம்மா, எண்ணெயில் பொரித்த உணவுதான் ரொம்ப சுவையாக இருக்கும்!” என்று மோனிகாவும் சொன்னாள். அப்போது அப்பா சிரித்துக்கொண்டே , “குழந்தைகளே , சுவை மட்டும் பார்த்து உணவைத் தேர்ந்தெடுக்கக் கூடாது. உடலுக்கு எது நல்லது என்பதையும் பார்க்க வேண்டும்,” என்றார்.

அவர் தொடர்ந்து, “ஆவியில் வேகவைத்த உணவுகளுக்கு அதிக எண்ணெய் தேவையில்லை . இட்லி, இடியாப்பம், கொழுக்கட்டை , ஆவியில் வேகவைத்த காய்கறிகள் போன்றவை எளிமையான முறையில் தயாரிக்கப்படுகின்றன.  வீட்டில் தயாரித்த சத்தான உணவுகளை விரும்பி சாப்பிடுவது நல்ல பழக்கம்,” என்று விளக்கினார்.

அம்மா அன்று ஜகதீஷுக்கும் மோனிகாவுக்கும் வண்ணமயமான காய்கறிகளுடன் ஆவியில் வேகவைத்த கொழுக்கட்டை செய்து கொடுத்தார்.

இருவரும் சுவைத்துப் பார்த்துவிட்டு, “அம்மா! இது ரொம்ப சுவையாக இருக்கிறது. இனிமேல் ஆவியில் வேகவைத்த உணவுகளையும் விரும்பிச் சாப்பிடுவோம்!” என்றனர்.

அதன்பிறகு, அவர்கள் வீடில் வாரத்தின் பல நாட்களில் இட்லி, இடியாப்பம், கொழுக்கட்டை , வேகவைத்த காய்கறிகள் போன்ற உணவுகள் இடம்பெறத் தொடங்கின.

நீதி:

சுவையான உணவு மட்டுமல்ல; உடலுக்கு ஏற்ற சத்தான உணவையும் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். ஆவியில் வேகவைத்த உணவுகள் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தின் ஒரு நல்ல பகுதியாக இருக்கலாம். 

இன்றைய செய்திகள்

15.09.2026

🗒️செயற்கை நுண்ணறிவு அனைத்து துறைகளிலும் உலகை ஆட்டிப் படைக்கிறது’ - ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

🗒️ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் நாட்டின் முதல் டி.ஆர்.ஐ. ஆலை அமைக்க மத்திய அரசு திட்டம்.

🗒️தமிழகம் மற்றும் புதுச்சேரி இடைத்தேர்தலில்
மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேல்  உள்ளவர்கள் தபால் ஓட்டுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

விளையாட்டுச் செய்திகள்

🏀ஆசிய ஜூனியர் பேட்மிண்டன்: தன்வி சாம்பியன் பட்டம் வென்றார்

🏀ஜப்பான் பாரா பேட்மிண்டன்: பிரமோத் பகத்துக்கு இரட்டை பதக்கம் இந்தியாவின் பிரமோத் பகத், சக நாட்டவரான யு.குமாரை தோற்கடித்து சாதனை.

🏀உலகக்கோப்பை வில்வித்தையில் தங்கம் வென்று வரலாறு படைத்த தீரஜ்.

Today's Headlines

🗒️ “Artificial Intelligence is ruling the world in all fields,” said High Court Judge Anand Venkatesh.

🗒️ The Central Government plans to set up the country’s first DRI plant that will run using hydrogen fuel.

🗒️ In the Tamil Nadu and Puducherry by-elections, the Election Commission has allowed persons with disabilities and people above 85 years of age to vote by postal ballot.

🏀 Sports News

🏀 Asian Junior Badminton: Tanvi won the championship title.

🏀 Japan Para-Badminton: Pramod Bhagat won two medals. He defeated fellow Indian U. Kumar and created a record.

🏀 Dheeraj made history by winning gold in the World Archery Championship.

Covai women ICT_போதிமரம்

Thursday, September 10, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.09.2026






திருக்குறள்: 

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:50.இடன் அறிதல்

குறள் எண்:492

குறள்:

முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும். 

பொருள்:

வரும்பகையை எதிர்க்கும் வலிமை இருப்பினும், அத்துடன் அரணைச் சார்ந்து போரிடும் வாய்ப்பும் இணையுமானால் பெரும்பயன் கிட்டும்.

பழமொழி :

Once bitten, twice shy.

சூடுபட்ட பூனை அடுப்பண்டை சேராது.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. பள்ளியில் நடைபெறும் போட்டிகளில் எனது தனித்திறமையை வெளிப்படுத்துவேன். 

2. என்னுடன் போட்டியிடும் மாணவர்கள் வெற்றி பெற்றால் அவர்களை வாழ்த்தி ஊக்குவிப்பேன்.

பொன்மொழி : 

“இளைஞர்களின் உழைப்பும் திறமையும் இணைந்தால், நாட்டின் வளர்ச்சி வேகம் பெறும்.”

Thought for the Day :

Engineers’ Day: “Innovate today to build a better tomorrow.”

பொது அறிவு : 

1. தென்னாட்டின் ஜான்சி ராணி என்றழைக்கப்படுபவர் யார்? 

அஞ்சலை அம்மாள். 

2. தென்னாட்டின் பகத்சிங் என்றழைக்கப்படுபவர் யார் ? 

வாஞ்சிநாதன்

English words :

1. Lucid – Easy to understand, எளிதில் புரியக்கூடிய.


2. Proficient – Highly skilled, திறமைமிக்கவர்.

புவியியலும் சுற்றுசூழலும் :

இதற்காக கிராம மக்கள் தங்கள் சொந்த ஊரிலேயே வேலைவாய்ப்பு பெற வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினார். மக்கள் பெரிய தொழிற்சாலைகளை மட்டும் சாராமல், சிறு மற்றும் குடிசைத் தொழில்களை வளர்க்க வேண்டும் என்றார்.கதர் மற்றும் கைத்தறி
கதர் நூற்பு, நெசவு போன்ற கிராமக் கைத்தொழில்களை ஊக்குவித்தார். இதன் மூலம் கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கருதினார்.

NMMS :

SAT 

இந்தியாவின் மிகப்பெரிய தேசிய அருங்காட்சியகம் அமைந்துள்ள இடம் _____

(1) சென்னை

(2) டெல்லி 

(3) மும்பை

(4) கொல்கத்தா

விடை:  (2) டெல்லி

செப்டம்பர் 11

மகாகவி பாரதியின் நினைவுநாள்

சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர்.

பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, கலைமகள் எனப் பாெருள்படும் பாரதி என்ற பட்டம் வழங்கினார்.பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949-ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமை ஆக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும். இவரை சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞர், மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன் இவரைப் புகழ்ந்துள்ளார். இவர் இந்தியா, விஜயா முதலான இதழ்களை நடத்தி, விடுதலைப் போருக்கு வித்திட்டவர்.

நீதிக்கதை

 நேரம் தவறாமை

ஒரு அழகான காட்டில் அணில், முயல், குரங்கு ஆகிய மூன்று நண்பர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு ஆந்தை ஆசிரியராக இருந்தார்.

ஒருநாள், மறுநாள் காலை காட்டில் ஒரு முக்கியமான அறிவுப் போட்டி நடைபெறும் என்று ஆந்தை ஆசிரியர் அறிவித்தார். போட்டி காலை 8 மணிக்குத் தொடங்கும் என்றும், அனைவரும் 7:45 மணிக்குள் வந்துவிட வேண்டும் என்றும் கூறினார்.

அணில் அன்று இரவே தனது புத்தகங்களையும் தேவையான பொருட்களையும் தயார் செய்து வைத்தது. காலையில் சீக்கிரமாக எழுந்து, நேரத்திற்கு முன்பே போட்டி நடைபெறும் இடத்திற்குச் சென்றது.

முயலும் சரியான நேரத்தில் வந்தது. ஆனால் குரங்கு, “இன்னும் நிறைய நேரம் இருக்கிறது” என்று நினைத்து விளையாடிக் கொண்டிருந்தது. நேரம் சென்றதே தெரியாமல் போனது.

குரங்கு அவசரமாக ஓடி வந்தபோது போட்டி தொடங்கிவிட்டது. அதனால் முதல் சுற்றில் கலந்துகொள்ள முடியவில்லை.

போட்டி முடிந்ததும், ஆந்தை ஆசிரியர் மாணவர்களிடம் கூறினார்:

“நேரத்தை மதிப்பவன் தனது வாழ்க்கையையும் மதிக்கிறான். கடந்துபோன நேரத்தை மீண்டும் திரும்பப் பெற முடியாது. எனவே, ஒவ்வொரு செயலையும் சரியான நேரத்தில் செய்வது மிகவும் முக்கியம்.”

அப்போது குரங்கு தனது தவறை உணர்ந்தது. இனிமேல் எந்த வேலையையும் தாமதப்படுத்தாமல், நேரத்தைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தது.

🌟 நீதி:

“நேரம் பொன்னைவிட மதிப்புமிக்கது; நேரத்தை மதிப்பவன் வாழ்க்கையில் முன்னேறுவான்.”

 மாணவர்களுக்கான நினைவுச் சொல்:

“இன்று செய்ய வேண்டியதை நாளைக்கு தள்ளாதே; நேரம் தவறாமல் செய்!”

இன்றைய செய்திகள்

11.09.2026

🗒️சென்னை மாநகராட்சியில் பள்ளிக்குச் செல்லாத மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் மூலம்
263 குழந்தைகள் தொழிற்பயிற்சி நிலையத்திலும், பள்ளியிலும்  சேர்க்கப்பட்டுளனர்.

🗒️தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இங்கிலாந்து பயணம்  எனத் தமிழக அரசு விளக்கம்.

🗒️வளைகுடா போர் எதிரொலியால் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டாலரை தாண்டிவிட்டது. ஆகவே இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலைகள் உயரும் அபாயம் உள்ளது.

🗒️பிரிக்ஸ் உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற உள்ளது. மாநாட்டில் பங்கேற்க உலகத் தலைவர்கள் இந்தியாவிற்கு வருகைத்தர உள்ளனர்.

விளையாட்டுச் செய்திகள்

🏀ஸ்குவாஷ் வீரர் - வீராங்கனைகளுக்கு தமிழக அரசு சார்பில்  சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று பாராட்டு நடந்தது. விழாவில் நிதியுதவி , சான்றிதழ் ஆகியவற்றை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழங்கினார்.

Today's Headlines

🗒️ In the Chennai Corporation, a special camp was held for children with disabilities who were not attending school. Through this camp, 263 children were admitted to vocational training centres and schools.

🗒️ The Tamil Nadu Government said that Chief Minister Joseph Vijay is travelling to the United Kingdom to attract more industrial investments.

🗒️ Due to the impact of the Gulf War, the price of crude oil has again crossed 100 dollars per barrel. So, petrol and diesel prices may increase in India.

🗒️ The BRICS Summit is going to be held in Delhi. World leaders are expected to visit India to participate in the summit.

🏀 Sports News

🏀 A felicitation ceremony was held yesterday at Nehru Stadium, Chennai, for Tamil Nadu squash players. At the event, Minister Aadhav Arjuna presented financial assistance and certificates to the players.

Covai women ICT_போதிமரம்

 

Wednesday, September 9, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.09.2026






திருக்குறள்: 

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:50.இடன் அறிதல்

குறள் எண்:491

குறள்:

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது.  


பொருள்:

பகைவரை வளைத்து வெல்லும் இடத்தைக் காணும் முன் எந்தச் செயலையும் தொடங்க வேண்டாம்.பகைவரை அற்பர் என்று இகழவும் வேண்டாம்.

பழமொழி :

Old is gold.

பழமையே சிறந்தது.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. பள்ளியில் நடைபெறும் போட்டிகளில் எனது தனித்திறமையை வெளிப்படுத்துவேன். 

2. என்னுடன் போட்டியிடும் மாணவர்கள் வெற்றி பெற்றால் அவர்களை வாழ்த்தி ஊக்குவிப்பேன்.

பொன்மொழி : 

“கைத்தொழில் கற்ற இளைஞன், தன் கைகளால் தன் எதிர்காலத்தை வடிவமைக்கிறான்.”

Thought for the Day :

You can learn from yesterday and prepare for tomorrow, but don’t forget to actually live today.

பொது அறிவு : 

1. தென்னாட்டின் திலகர் என்றழைக்கப்படுபவர் யார்? 

வ. உ .சிதம்பரனார். 

2. தென்னாட்டின் சாக்ரடீஸ் என்றழைக்கப்படுபவர் யார்? 

பெரியார்.

English words :

1. Feasible – Possible to do, செய்யக்கூடியது.


2. Impartial – Fair to everyone, பாரபட்சமற்றவர்

புவியியலும் சுற்றுசூழலும் :

காந்தியடிகளின் கிராம சுயாட்சி (Gram Swaraj) என்பது வெறும் அரசியல் சுதந்திரம் மட்டும் அல்ல. 

ஒவ்வொரு கிராமமும்:

தன்னிறைவு + உள்ளூர் வேலைவாய்ப்பு + உள்ளூர் உற்பத்தி + மக்களின் பங்கேற்பு + சுயநிர்வாகம் என்ற அடிப்படையில் வளர வேண்டும் என்பதாகும்.

NMMS :

SAT 

மனிதக் கண்ணால் __________________ மில்லியன் நிறங்களை வேறுபடுத்திக் காண இயலும். 

(1) 12-24.

 (2) 10-20. 

(3) 1-10. 

(4) 10-12. 

விடை: (4) 10-12.

நீதிக்கதை

 பிடிவாதத்தின் விலை


ஒரு சிறிய ஊரில் மித்ரா என்ற பெண் தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்தாள். அவள் புத்திசாலியும் திறமையானவளும்தான். 


ஆனால் அவளிடம் ஒரு கெட்ட பழக்கம் இருந்தது—தனக்குப் பிடித்ததுதான் சரி என்று நினைப்பது.

பெற்றோர் ஏதாவது அறிவுரை கூறினால்,

“எனக்குத் தெரியும்! நீங்கள் எப்போதும் என்னையே குறை சொல்கிறீர்கள்!” என்று கோபமாகப் பேசுவாள்.


ஒருநாள் மித்ரா தனது நண்பர்களுடன் வெளியே செல்ல முடிவு செய்தாள். அன்று மாலை வீட்டிற்கு சீக்கிரம் வரும்படி அவளுடைய அம்மா கூறினார்.

“மித்ரா, இன்று மழை வரப்போகிறது. சீக்கிரமாக வீட்டிற்கு வந்துவிடு. தாமதமாக வெளியே இருக்க வேண்டாம்,” என்றார் அம்மா.


ஆனால் மித்ரா, “எனக்கு ஒன்றும் ஆகாது. நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும். நீங்கள் தேவையில்லாமல் அறிவுரை சொல்லாதீர்கள்!” என்று கோபமாகப் பேசிவிட்டு சென்றாள்.


மாலை நேரம் ஆனது. வானம் இருண்டு, பலத்த மழை பெய்யத் தொடங்கியது. ஆனால் மித்ரா இன்னும் வீடு திரும்பவில்லை.


நேரம் செல்லச் செல்ல அவளுடைய பெற்றோரின் கவலை அதிகரித்தது. அம்மா மீண்டும் மீண்டும் வாசலுக்கு வந்து பார்த்துக் கொண்டிருந்தார். அப்பா மித்ராவின் நண்பர்களுக்கு தொலைபேசி செய்து அவள் எங்கே இருக்கிறாள் என்று விசாரித்தார். 


மழையையும் பொருட்படுத்தாமல், அப்பா அவளைத் தேடி அருகிலுள்ள தெருக்களுக்குச் சென்றார். அம்மா வீட்டில் இருந்து அவள் பாதுகாப்பாக வர வேண்டும் என்று கவலையுடன் காத்திருந்தார்.


“காலையில் என்னிடம் கோபமாகப் பேசினாலும் பரவாயில்லை... என் மகள் பாதுகாப்பாக வீட்டிற்கு வந்தால் போதும்,” என்று அம்மா கண்ணீருடன் கூறினார்.


சிறிது நேரத்திற்குப் பிறகு, மித்ரா தனது நண்பரின் வீட்டில் பாதுகாப்பாக இருப்பது தெரியவந்தது. அவள் வீட்டிற்கு வந்தபோது, வாசலில் கவலையுடன் காத்திருந்த பெற்றோரைப் பார்த்தாள்.

அவள் அவர்களிடம் எதுவும் பேச முடியாமல் அமைதியாக நின்றாள்.


அம்மா கோபப்படாமல், “நீ பாதுகாப்பாக வந்துவிட்டாயே, அதுதான் எங்களுக்கு முக்கியம்,” என்று மட்டும் கூறினார்.

அந்த வார்த்தைகள் மித்ராவின் மனதைத் தொட்டன.


“நான் அவர்களிடம் கோபமாகப் பேசினேன். அவர்களுடைய அறிவுரையை மதிக்கவில்லை. ஆனால் நான் தாமதமானதும், அவர்கள் கோபத்தைப் பற்றி நினைக்காமல் என்னுடைய பாதுகாப்பைப் பற்றித்தான் கவலைப்பட்டிருக்கிறார்கள்,” என்று அவள் எண்ணினாள்.


அப்போது பாட்டி மித்ராவிடம் மெதுவாகக் கூறினார்:

“கண்ணே, பெற்றோர் சொல்வதெல்லாம் கட்டளை அல்ல; பல நேரங்களில் அவர்கள் அனுபவத்தில் கற்றுக்கொண்ட பாதுகாப்பான வழி. கருத்து வேறுபாடு இருந்தால் அமைதியாகச் சொல்லலாம். ஆனால் அவர்களை எதிர்த்து, காயப்படுத்தும் வார்த்தைகளில் பேசுவது நல்லதல்ல.

உனக்காக வாழும் மனிதர்களின் வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கும் அக்கறையைப் புரிந்துகொள்ள வேண்டும். பிடிவாதம் நம்மை உயர்த்தாது; அன்பானவர்களின் மனதை மட்டுமே காயப்படுத்தும்.”


மித்ராவின் கண்களில் கண்ணீர் வந்தது.

“பாட்டி, இனிமேல் எனக்குப் பிடித்ததை மட்டும் நினைக்காமல், அம்மா அப்பாவின் அக்கறையையும் புரிந்துகொள்வேன். அவர்களுடன் கருத்து வேறுபாடு வந்தாலும் மரியாதையாகப் பேசுவேன்,” என்றாள்.


அன்று முதல் மித்ரா தனது பிடிவாதத்தைக் குறைத்து, பெற்றோரிடம் அன்புடனும் மரியாதையுடனும் பேசத் தொடங்கினாள்.


🌸 நீதி:


பெற்றோர்களின் அறிவுரையின் பின்னால் அவர்களின் அன்பும் அக்கறையும் இருக்கும். கருத்து வேறுபாடு இருந்தாலும், பெரியவர்களை எதிர்த்து பேசாமல் மரியாதையுடன் பேசுவதே நல்ல பண்பு.

இன்றைய செய்திகள்

10.09.2026

🗒️தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளுக்கான காலாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

🗒️இளம் கலைஞர்களுக்கான மாநில கலைப்
போட்டிகளில்  வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பரிசுகள் வழங்கினார்.

🗒️கடல்சார் ஆய்வில் புதிய மைல்கல்: ‘சாகர் மந்தன்’ ஆய்வுக் கப்பல் செயல்பாட்டை ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங்.
தொடங்கி வைத்தார்.

🗒️விஞ்ஞான உலகை வியப்பில் ஆழ்த்திய அண்டார்டிகா: தற்காலிகமாக 695 பில்லியன் டன் பனி அதிகரித்
துள்ளது.

விளையாட்டுச் செய்திகள்

🏀பாரா உலக வில்வித்தை: 2 தங்கப் பதக்கம் வென்ற இந்தியா... 

🏀ஹர்விந்தர் சிங்- விஜய் சன்டி அடங்கிய இந்திய அணி 6-2 என்ற கணக்கில் சுலோவக்கியாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.

Today's Headlines

🗒️ The quarterly examination timetable for government, government-aided, and private schools in Tamil Nadu has been released.

🗒️ Minister Rajmohan distributed prizes to the winners of the State Art Competitions for young artists.

🗒️ New milestone in marine research: Union Minister Jitendra Singh launched the operations of the research vessel ‘Sagar Manthan’.

🗒️ Antarctica surprises the scientific world: Antarctica temporarily gained 695 billion tonnes of ice.

🏀 Sports News

🏀 Para World Archery: India won two gold medals.

🏀 The Indian team comprising Harvinder Singh and Vijay Chandi defeated Slovakia 6–2 to win the gold medal.

Covai women ICT_போதிமரம்

Tuesday, September 8, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.09.2026

மா சே துங்

   




திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:49.காலம் அறிதல்

குறள் எண்:490

குறள்:

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.

பொருள்:

பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப் போல் அமைதியாக இருக்க வேண்டும், காலம் வாய்த்த போது கொக்கு தவறாமல் தன் இரையைக் குத்திப் பிடிப்பது போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.

பழமொழி :

Nothing is impossible to a willing heart.

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. பள்ளியில் நடைபெறும் போட்டிகளில் எனது தனித்திறமையை வெளிப்படுத்துவேன். 

2. என்னுடன் போட்டியிடும் மாணவர்கள் வெற்றி பெற்றால் அவர்களை வாழ்த்தி ஊக்குவிப்பேன்.

பொன்மொழி : 

“உன் திறமைக்கு எல்லை இல்லை; உன் முயற்சிக்கு மட்டும் எல்லை வைக்காதே.”

Thought for the Day :

“Your future is shaped by what you learn, practise, and create today.” 🌱

பொது அறிவு : 

1. 10 ரூபாய் நோட்டிற்கு பின்புறம் அச்சிடப்பட்டுள்ள படம் எது? 

 கோனார் சூரிய கோயில் (ஓடிஸா) 

2. மனித உடலில் எத்தனை சதவீதம் தண்ணீர் உள்ளது? 

60 சதவீதம் 

English words :

1. Coherent – Clear and logical, தெளிவான மற்றும் தர்க்கரீதியான.


2. Discreet – Careful and private, ரகசியம் காப்பவர் / நிதானமானவர்.

புவியியலும் சுற்றுசூழலும் :

தொட்டபெட்டா பகுதி புல்வெளிகள், சோலைக்காடுகள் மற்றும் இயற்கை அழகுக்குப் பெயர் பெற்றது. இங்குள்ள தொட்டபெட்டா சிகரக் காட்சி முனையம் (Doddabetta Peak Viewpoint) சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமானது.இது தமிழ்நாடு சுற்றுலாவின் முக்கியமான இடங்களில் ஒன்றாகும்.

NMMS :

MAT 

ஒரு முதிர்ந்த பெண் பட்டுப்பூச்சி சுமார் ___________ முட்டைகள் இடும்.

 (1) 600. 

 (2) 500.

 (3) 5000. 

 (4) 6000. 

 விடை: (2) 500

செப்டம்பர் 09

மா சே துங்  அவர்களின் நினைவுநாள்

மா சே துங் (About this soundMao Zedong , Mao Zedong, டிசம்பர் 26, 1893செப்டம்பர் 9, 1976) சீன மார்க்சியக் கொள்கையாளர், போர் வீரர், கவிஞர் மற்றும் ராஜதந்திரி ஆவார். இவர் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இளமையில் ஆறு மாத காலம் ராணுவ அனுபவம் பெற்றார். இவர், பல நூற்றாண்டு கால அன்னிய ஆக்கிரமிப்புக்கு பின், இருபதாம் நூற்றாண்டில் சீனாவில் நிகழ்ந்த 
கம்யூனிசப் புரட்சியையும் அதனைத் தொடர்ந்த உள்நாட்டுப் போரையும் முன்னின்று நடத்தினார். சீன உள்நாட்டுப் போரில், குவோமின்டாங்கை எதிர்த்து சீனப் பொதுவுடமைக் கட்சி வெற்றி கண்டது. இதன் பின், அக்டோபர் 1, 1949 அன்று பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த பெய்ஜிங் தியனெமன் சதுக்கத்தில் இருந்து, சீன மக்கள் குடியரசு நிறுவப்படுவதை மாவ் அறிவித்தார்

நீதிக்கதை

 நண்பர்களின் அன்பு 

ஒரு அடர்ந்த காட்டில் யானை , மான், குரங்கு, முயல், கிளி ஆகியவை நெருங்கிய நண்பர்களாக வாழ்ந்து வந்தன.

ஒருநாள் காலை , வழக்கம்போல் எல்லோரும் ஆற்றங்கரையில் விளையாடிக் கொண்டிருந்தனர். ஆனால் மான் மட்டும் வரவில்லை .

“மான் எங்கே போய்விட்டது?” என்று முயல் கவலையுடன் கே ட்டது.

“நேற்று மாலை மானுக்கு உடல்நிலை சரியில்லை என்று கிளி சொன்னது!” என்றது குரங்கு.

உடனே யானை , “அப்படியா? நண்பன் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது நாம் இங்கே விளையாடிக் கொண்டிருக்கலாமா? வாருங்கள், மானைப் பார்த்து நலம் விசாரிப்போம்!” என்றது.

அனைவரும் மானின் குடிலுக்குச் சென்றனர்.

“மான் நண்பா! எப்படி இருக்கிறாய்?” என்று யானை அன்புடன் கேட்டது.

“உங்களைப் பார்த்ததும் எனக்கு பாதி உடல்நலம் வந்துவிட்டது!” என்று மான் சிரித்தது.

முயல், “உனக்காக இனிப்பான பழங்கள் கொண்டு வந்திருக்கிறேன்!” என்றது.

குரங்கு உடனே , “நான் உனக்காக மரத்திலிருந்து பறித்த தேனும் கொண்டு வந்திருக்கிறேன்!” என்றது.

அதைப் பார்த்த மான் மிகவும் மகிழ்ந்தது. “நண்பர்கள் துன்பத்தில் இருக்கும்போது அவர்களைச் சந்தித்து நலம் விசாரிப்பதுதான் உண்மையான அன்பு!” என்றது.

அன்றிலிருந்து காட்டில் யாருக்காவது உடல்நிலை சரியில்லை யென்றாலும், ஏதேனும் துன்பம் ஏற்பட்டாலும், எல்லா விலங்குகளும் ஒன்றாகச் சென்று அவர்களைச் சந்தித்து நலம் விசாரிக்கத் தொடங்கின.

நீதி:

🌷 நாம் அறிந்தவர்களை அன்புடன் சந்தித்து நலம் விசாரிப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தரும்

இன்றைய செய்திகள்

09.09.2026

🗒️மத்திய அரசு வெளியிட்டுள்ள 2026-ம் ஆண்டின் காற்று தூய்மையாக உள்ள நகரங்களின் தேசிய தரவரிசை பட்டியல் தற்பொழுது வெளியாகியுள்ளது. அதில் சென்னை 35 வது இடத்தில் உள்ளது.

🗒️நாடகக்கலையில் முதுகலை பட்டப்படிப்பு: தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னையில் தொடங்கப்படுகிறது.

🗒️தமிழ்நாட்டுக்கு காவிரியில் 6 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்துள்ளது.

🗒️இந்தோனேசியா எரிமலை வெடிப்பால் கடும் பாதிப்பு: மீண்டும் இயங்கத் தொடங்கிய விமான நிலையங்கள்.

விளையாட்டுச் செய்திகள்

🏀பாரா உலக வில்வித்தை: ஷீத்தல் தேவி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.

🏀அரைஇறுதியில் தோல்வி கண்ட இந்திய வீராங்கனை சரிதா வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் சீனாவின் வாங் ஷூயிடிங்கை எதிர்கொள்கிறார்.

Today's Headlines

🗒️ The Central Government has released the 2026 national ranking of cities with clean air. Chennai is ranked 35th.

🗒️ A postgraduate course in Theatre Arts will be started in Chennai by the Tamil Nadu Government.

🗒️ The Cauvery Water Regulation Committee has recommended releasing 6,000 cusecs of water to Tamil Nadu.

🗒️ Indonesia was badly affected by a volcanic eruption. Airports have now started operating again.

🏹 Sports News

🏀 Para World Archery: Indian archer Sheetal Devi has reached the final.

🏀 Indian archer Sarita, who lost in the semi-final, will face China’s Wang Shuiding in the bronze medal match.

Covai women ICT_போதிமரம்