Pages

Monday, November 3, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.11.2025

கவிஞர் வில்பிரட் ஓவன்

   






திருக்குறள்: 

குறள் 401: 

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல்.   

  விளக்க உரை: 

அறிவு வளர்ச்சிக்கு ஏற்ற நூல்களைக் கல்லாதவர், கற்றவர் அவையில் பேசுவது, கட்டம் போடாமல் தாயம் உருட்டுவது போலாம்.

பழமொழி :

A minute today saves an hour tomorrow. 

இன்றைய ஒரு நிமிடம் நாளைய ஒரு மணி நேரத்தை காப்பாற்றும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.கடமை தவறாமல் உதிக்கும் சூரியன் போல நானும் எனது கடமையை தவறாமல் செய்வேன்.

2.கனி தரும் மரங்கள் போல நானும் பலன் எதிர்பாராமல் மற்றவருக்கு உதவி செய்வேன்.

பொன்மொழி :

புத்தகத்தில் உலகை படித்தால், அறிவு செழிக்கும் .உலகத்தையே புத்தகமாய் படித்தால், அனுபவம் தழைக்கும் - கலைஞர் .மு .கருணாநிதி

பொது அறிவு : 

01.சலீம் அலி பறவைகள் சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?

 மகாராஷ்டிரா  -சத்ரபதி சாம்பாஜி 

Maharashtra -Chhatrapati Sambhaji

02. பூமி தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

 ஏப்ரல் 22 - April 22

English words :

encourage-inspire

end-terminate

தமிழ் இலக்கணம்: 

 தகராறுக்கு  முதலில் எந்த ‘ர’ போடவேண்டும் என்பதை நினைவில் கொள்ள  தகராறு எப்பவும் சிறியதா  ஆரம்பிச்சு  பிறகுதான் பெரியதா முடியும். அதனால்  முதலில் சின்ன ‘ர’ போடுங்க , அப்பறம் பெரிய ‘ற ‘ போடுங்க!

அறிவியல் களஞ்சியம் :

 பெண்கள் கருத்தரிக்கும் பொழுது, கர்ப்பப்பையானது, அதன் சாதாரண நிலையை விட 500 முறை விரிவடைகிறது.

மனித உடலில் உள்ள கல்லீரானது 500 விதமான வேலைகளை செய்கிறது.

நவம்பர் 04

வில்ஃபிரட் ஓவன் (Wilfred Owen, பி. மார்ச் 181893 - இ. நவம்பர் 41918) ஒரு ஆங்கிலக் கவிஞர் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் படைவீரர். இவர் முதலாம் உலகப் போரின் முக்கியமான கவிஞர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். போர் நடந்த காலகட்டத்தில் போரையும் அதன் பின்னணி அரசியலையும் ஆதரித்து பரப்புரைக் கவிதைகளே வெளியாகிக் கொண்டிருந்த காலகட்டத்தில், போர் முனையிலிருந்து கொண்டே போரின் கடுமையினையும் உண்மையையும் பிரதிபலிக்கும் வண்ணம் ஓவன் எழுதிய கவிதைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. ஓவனின் நண்பரும் சக கவிஞருமான சிக்ஃபிரைட் சாசூன் சாதாரண போர் வீரனாக இருந்த ஓவனைக் கவிதை எழுதத் தூண்டினார். பதுங்கு குழி போர் முறையின் கொடூரங்களையும், நச்சுப்புகை தாக்குதல்களின் அவலங்களையும் ஓவனின் கவிதைகள் துல்லியமாக படம்பிடித்துக் காட்டின. 1918ல் போர் முடிவதற்கு ஒரு வாரம் முன்னர் போர்க்களத்தில் ஓவன் கொல்லப்பட்டார். 1919ல் அவரது கவிதைகள் அடங்கிய தொகுப்பு வெளியானது. வெளியாகி சுமார் நூறாண்டுகள் கடந்த பின்னரும், போர்க் கவிதை மரபில் ஓவன் அழியாத இடம் பெற்றிருக்கிறார். அவரது கவிதைகள் உலகெங்கும் பல கல்லூரிகள் மற்றும் பள்ளிகளின் பாடத்திட்டங்களில் இடம் பெற்று வருகின்றன.

நீதிக்கதை

ஒரு காட்டில் எறும்புகள் கூட்டம் கூட்டமாக வாழந்து வந்தன. அதில் ஒரு செவ்வெறும்பும் கட்டெறும்பும் நண்பர்களாக இருந்தன. இரை தேட போகும் போது இருவரும் ஒன்றாகவே செல்வார்கள்.


செவ்வெறும்புக்கு உணவு கிடைக்காத நாளில் கட்டெறும்பு தனக்கு கிடைத்த உணவை கொடுத்து உதவும். அது போலவே பதிலுக்கு செவ்வெறும்பும் கட்டெறும்புக்கு உதவும்.


ஒரு நாள் இருவரும் இரை தேடி அலைந்து கொண்டிருந்தனர். எங்கேயும் உணவு கிடைக்கவில்லை. கடைசியாக ஒரு குளத்தின் கரையில் இருந்த மாமரத்தைப் பார்த்தன. அதில் நிறைய மாம்பழங்கள் பழுத்து தொங்கி கொண்டிருந்தன.


 

இரண்டு எறும்புகளும் பசியாக இருந்ததால் மாமரத்தில் ஏறி ஒரு மாம்பழத்தின் மீது அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தன. திடிரென்று ஒரு பெருங்காற்று வீச அந்த மாம்பழம் குளத்தில் விழுந்தது. இரண்டு எறும்புகளும் தண்ணீரில் தத்தளிக்க ஆரம்பித்தன. ‘ நண்பா இப்படி வந்து தண்ணீரில்  விழந்துட்டோமே. இப்ப என்ன பண்றது’ என்றது செவ்வெறும்பு.


‘நிச்சயம்; எதாவது உதவி கிடைக்கும். அது வரை நீந்திட்டே இருப்போம்’ என்றது கட்டெறும்பு.


நேரமாகிக் கொண்டே இருந்தது. எந்த உதவியும் கிடைக்கவில்லை. இரண்டு எறும்புகளும் நீந்தி நீந்தி சோர்ந்து போயின. ‘நண்பா இவ்வளவு நேரம் நீந்தியதில் கை, கால்கலெல்லாம் சக்தியில்லாம போய்விட்டது. இதற்கு மேல் என்னால் நீந்த முடியாது. தண்ணீரில மூழ்கி இறக்கத்தான் போகிறேன்'’ என்றது செவ்வெறும்பு.


‘இல்லை இல்லை அப்படி சொல்லாதே. இன்னும் கொஞ்ச நேரம் போராடு நிச்சயம்; எதாவது உதவி கிடைக்கும்’ என்றது கட்டெறும்பு.


‘இனி எந்த உதவியும் கிடைக்க போவதில்லை. நான் சாக தான் போகிறோம் என்று தண்ணீரில் மூழ்கி உயிரை விட்டது’ செவ்வெறும்பு.


எதாவது உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் போரடிக் கொண்டே இருந்தது கட்டெறும்பு. ஒரு கட்டத்தில் கை, கால்கள் பயங்கரமாக வலிக்க ஆரம்பித்தது. இனி நம்மால் முடியாது. செத்து போய் விடுவோமோ என்று தோன்றியது.


‘செத்து போவதுக்காகவா பிறந்தாய். வாழ்க்கைனாலே பிரச்சனைகள் நிறஞ்சது தான். அதுக்கு பயந்தா வாழ முடியாது. அதனால துணிச்சலோடு போராடு’ என்று சொன்னது உள்மனசு.


கட்டெறும்பு துணிச்சலோடு போரட தொடங்கியது. சிறிது நேரம் கழித்து காற்று அடிக்க மரத்திலிந்து ஒரு இலை கட்டெறும்பு பக்கதில் விழுந்தது. உடனே கட்டெறும்பு இலையில் ஏறி அமர்ந்து அதை படகாக பயன்படுத்தி கரையேறியது.


இதை பார்த்த குளத்தில் இருந்த மீன் கட்டெறும்பை பார்த்து சொன்னது

‘நீ துணிச்சலோடு விடாமல் போரடினாய் அதனால் வென்றாய். வாழ்த்துக்கள் நண்பா’.

இன்றைய செய்திகள்

04.11.2025


⭐வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை- தேர்தல் ஆணையம்

⭐ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: உயிரிழப்பு 20 ஆக அதிகரிப்பு-320 பேர் காயம்

⭐45 பாலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்தது இஸ்ரேல்

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀இந்திய வேகப்பந்து வீச்சு வீராங்கனை கிராந்தி கௌட்டுக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்த மத்திய பிரதேச அரசு

Today's Headlines

⭐No one need to worry about  the revision of the voter list said by Election Commission 

⭐Afghanistan earthquake , Death toll rises to 20 and 320 injured 

⭐Israel hands over bodies of 45 Palestinians

 *SPORTS NEWS* 

🏀The Madhya Pradesh government has announced a prize of Rs. 1 crore for Indian fast bowler Kranti Gaud.

Covai women ICT_போதிமரம்

Sunday, November 2, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.11.2025







திருக்குறள்: 

குறள் 545: 

இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட 
பெயலும் விளையுளுந் தொக்கு. 

விளக்க உரை: 

நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படுவனவாகும்.

பழமொழி :

Small lessons build great wisdom. 

சிறிய பாடங்களை பெரிய அறிவை உருவாக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.கடமை தவறாமல் உதிக்கும் சூரியன் போல நானும் எனது கடமையை தவறாமல் செய்வேன்.

2.கனி தரும் மரங்கள் போல நானும் பலன் எதிர்பாராமல் மற்றவருக்கு உதவி செய்வேன்.

பொன்மொழி :

கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது. கஷ்டப்படாமல் கிடைத்தது என்றைக்கும் நிலைக்காது - கவிஞர் கண்ணதாசன்.

பொது அறிவு : 

01.இந்தியாவில் அதிக நிலக்கரி வளம் உள்ள மாநிலம் எது?

ஜார்கண்ட் -Jharkhand

02. இந்தியாவில் முதன் முதலில் இரும்பு பாலம் என்று அமைக்கப்பட்டது?

லக்னோ-Lucknow

English words :

elegant-stylish

embrace-hug

தமிழ் இலக்கணம்: 

 * வல்லின 'ற' அடுத்து மெய்யெழுத்து வராது. 
மூன்று மெய்யெழுத்துக்கள் தொடர்ந்து ஒரு வார்த்தையில் வராது 

எ.கா. வாழ்த்துக்கள் தவறு 
வாழ்த்துகள் சரி

அறிவியல் களஞ்சியம் :

 நமது உடலில் வேகமாக வளரக்கூடிய திசு முடிதான்.

மனித தலையில் சராசரியாக 100,000 தலைமுடிகள் இருக்கும்.

நவம்பர் 03

அமர்த்தியா சென் அவர்களின் பிறந்தநாள்

அமார்த்ய குமார் சென் (Amartya Sen, பிறப்பு: நவம்பர் 3, 1933) இந்தியாவைச் சேர்ந்த ஒரு பொருளாதார அறிஞர் ஆவார். இவர் 1998 இல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றார். மேலும் 1999 இல் பாரத ரத்னா விருதும் பெற்றார். இவர் மேற்கு வங்காளத்தில் உள்ள சாந்தி நிகேதனில் பிறந்தார்.

நீதிக்கதை

மன்னன் ராஜவர்மன் நீதி தவறாத நேர்மையாளன். நீதியையும் நேர்மையையும் தன் உயிருக்கும் மேலாக மதிப்பவன். ஒரு நாள் குணசேகரன் என்னும் அயலூர்க்காரன் மன்னன் ராஜவர்மனிடம், அரசே, நான் என் மனைவியுடன் உங்கள் தலைநகரில் வந்துகொண்டிருந்தேன். தலைநகரத்தை அடைவதற்கு முன் காட்டில் நண்பகல் நேரம் நானும், என் மனைவியும் ஒரு மரத்தடியில் உறங்கிக் கொண்டிருந்தோம். அப்போது அவள் மீது எங்கிருந்தோ வந்த அம்பு தைத்து உயிரிழந்து விட்டாள். எங்களுக்கு எதிரில் சற்று தூரத்தில் வேடன் அமர்ந்திருந்தான். அவன் தான் என் மனைவியைக் கொன்றவன். அவனை நீங்கள் தண்டிக்க வேண்டும் என்றான். 

ஆனால் அந்த வேடனோ, அரசே, நான் குற்றமற்றவன். எந்த காரணமும் இன்றி நான் ஏன் அந்தப் பெண்ணைக் கொல்ல வேண்டும்? நான் அம்பு எய்தவில்லை என கதறினான். கொல்லப்பட்ட பெண்ணின் உடலையும், அவள் மீது தைத்திருந்த அம்பையும் பார்த்த ராஜவர்மனுக்கு ஓர் எண்ணம் தோன்றியது. 

வேடனே, நீ வேறு விலங்குக்கு குறி வைத்து தவறுதலாக இந்தப் பெண் மீது பட்டிருக்கலாம் அல்லவா? எனக் கேட்டான். ஆனால், அப்போது தானும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்ததாக வேடன் சாதித்தான். வேடனின் வார்த்தைகளை நம்பாத மன்னன், அவனை நாடு கடத்த உத்தரவிட்டான். 

இந்த சம்பவம் நடந்து இரு நாட்களுக்குப் பின், வெளியூர் சென்றிருந்த முதலமைச்சர் ராஜவர்மனைச் சந்தித்தார். அப்போது நடந்த சம்பவத்தைப் பற்றி அவரிடம் விவாதித்தான். அந்தப் பெண்ணின் மீது தைத்த அம்பினைப் பார்த்த முதலமைச்சர், அரசே, இந்த அம்பினை கவனித்தீர்களா துருப்பிடித்திருக்கிறது. வேடர்கள் துருப்பிடித்த அம்பைப் பயன்படுத்த மாட்டார்கள். அந்தப் பெண் உறங்கிய மரத்தின் மீது எப்போதோ இந்த அம்பு சிக்கியிருக்கிறது. அன்று அந்த அம்பு தற்செயலாக அந்தப் பெண் மீது விழுந்திருக்கலாம். வேடன் குற்றமற்றவன் என்றே தோன்றுகிறது என்றார். 

இதைக் கேட்டுப் பதறிய மன்னன், தவறான தீர்ப்பை வழங்கியதால் குற்ற உணர்வில் துடிதுடித்து இறந்தான். 

நீதி :

எப்பொழுதும் நேர்மையாக செயல்பட வேண்டும். 

இன்றைய செய்திகள்

03.11.2025


⭐குப்பை கிடங்குகளில் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை விற்க மாநகராட்சி புதிய திட்டம்

⭐4,410 கிலோ எடை கொண்ட சி.எம்.எஸ் செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது எல்.வி.எம்.-3 ராக்கெட்

⭐ரஷிய எண்ணெய் கப்பல்-துறைமுகம் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வென்று கோப்பையை கைப்பற்றியது.

🏀வாஷிங்டன் சுந்தர் அதிரடி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டி20-யில் இந்தியா அசத்தல் வெற்றி

🏀ஹாங்காங் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் கனடா வீராங்கனை

Today's Headlines

⭐ The corporation wing decided on a new plan to sell recyclable materials from garbage dumps.

⭐ India's LVM-3 rocket launched with a 4,410 kg CMS satellite from Sriharikotta.

⭐Ukraine drone attack on Russian oil tanker at port.

 SPORTS NEWS 

🏀 The Indian women's team won the World Cup by defeating South Africa by 55 runs in the final.

🏀India won the 3rd T20 against Australia, and Washington Sundar was in action.

 🏀Hong Kong Open Tennis, a Canadian player won the championship title

Covai women ICT_போதிமரம்