Pages

Thursday, September 18, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.09.2025

சுனிதா வில்லியம்ஸ்







திருக்குறள்: 

குறள் 466: 
செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க 
செய்யாமை யானுங் கெடும். 

 விளக்க உரை: 

ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான், செய்யத்தக்க செயல்களை செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்.

பழமொழி :

Good habits formed in youth make all difference.  

இளமையில் உருவாகும் நல்ல பழக்கங்கள் வாழ்நாளையே மாற்றுகின்றன.

இரண்டொழுக்க பண்புகள் :

1.அமைதி நம் அறிவை வளர்ப்பது மட்டும் அல்லாது நாம் ஆழ்ந்து சிந்திக்கவும் தூண்டுவது.]


2. எனவே தேவையில்லாத பேச்சைக் குறைத்து அமைதி காக்க முயல்வேன்.

பொன்மொழி :

செல் நோண்டும் பல மணியில் சில நிமிடம் ஒதுக்கி ,மண் நோண்டி மரம் நடுவோம் - நடிகர் விவேக்

பொது அறிவு : 

01.உயிரியல் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்?

 சர் ஜெகதீஸ் சந்திரபோஸ்

Sir Jagadish Chandra Bose

02.மேற்குத் தொடர்ச்சி மலைகளும், கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் சந்திக்கும் இடம் எது?

            நீலகிரி -The Nilgris

English words :

take after– resemble , முன்னோரை போல ஒத்து இருத்தல்

Grammar Tips: 

 When and where to use "to and too"
To is used to show direction, place and purpose 
Ex–she gave the book to me
I am going to school 
After 'to' only present tense will come 
Too means also or more than enough 
Ex–I want to play too
The bag is too heavy

அறிவியல் களஞ்சியம் :

 மனிதர்களின் மேல் தோல் கீழ் மல்பீஜியன் அடுக்குகள் (Malphigian Layers) உள்ளன. இவ்வடுக்குகளில் நிறமித் துணுக்குகள் (Pigment Granules) காணப்படுகின்றன. இவை மனிதனின் தோலின் நிறத்தை நிர்ணயிக்கின்றன. இந்நிறமித் துணுக்குகளில் உள்ள இரசாயனப் பொருள்களின் தன்மை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக அமைவதால், நிறமும் வெவ்வேறு விதத்தில் அமைகிறது.

செப்டம்பர் 19

சுனிதா வில்லியம்ஸ் அவர்களின் பிறந்தநாள்

சுனிதா வில்லியம்ஸ் (பிறப்பு: செப்டம்பர் 19, 1965) ஒரு அமெரிக்க விண்வெளி வீராங்கனையும் கப்பல்படை அதிகாரியும் ஆவார். இவர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 14ம் விண்வெளிப் பயணத்திற்கு உறுப்பினராக்கப்பட்டார், பின் அவர் 15ம் விண்வெளி பயணத்தில் இணைந்தார். விண்வெளியில் பயணம் செய்த பெண்களில் அதிக நேரம் விண்வெளியில் பயணம் செய்த சாதனையை (195 நாட்கள்) அவர் கொண்டிருக்கிறார்.

நீதிக்கதை

 அம்மா சொல் கேள்!

ஒரு நாள் பொழுது விடிந்ததும், ஒருவன் தனது ஆடுகளை செழிப்பான ஒரு புல்வெளியில் மேய்த்துகொண்டிருந்தான். ஆடுகளை மேய்த்தவன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கண் மூடி, புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்தான். 

புல்வெளியைச் சுற்றி வேலி போடப்பட்டிருந்தது. வேலியோரம் ஓர் ஆட்டுக்குட்டி மேய்ந்து கொண்டிருந்ததை பார்த்த ஒரு ஓநாய் ஆட்டுக்குட்டியைத் தின்னும் ஆசையில் பார்த்தது. 

வேலிக்குள் முகத்தை நுழைத்துக்கொண்டு, ஓநாய் எதையோ பார்ப்பது போல பாசாங்கு செய்தது. அதைப் பார்த்த ஒர் ஆட்டுக்குட்டி, உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டது. 

ஓநாய் நண்பா!, இங்கே இளசாண புல் கிடைக்குமா என்று பார்க்கிறேன்! இளம்புல் என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சாப்பிட தோன்றுகிறது என்று வருத்தத்துடன் கூறியது. அப்படியா! நீ மாமிசத்தைத்தான் சாப்பிடுவாய் என்று என் அம்மாவும் அப்பாவும் சொன்னார்களே? என்று ஆச்சரியத்துடன் கேட்டது ஆட்டுக்குட்டி. 

சேச்சே... அதெலாம் சுத்தப் பொய்! என்றது ஓநாய். அப்படியென்றால் இரு. நான் வெளியே வருகிறேன். நாம் இரண்டு பேரும் சேர்ந்து மலையின் அந்தப் பக்கம் இருக்கும் இளம்புலை சாப்பிடலாம் என்று சொல்லிக்கொண்டு வெளியே வந்தது. 

உடனே ஓநாய் அதன்மீது பாய்ந்து அதைக்கொன்று தின்றது. அந்த ஆட்டுக்குட்டி ஓநாய்க்கு உதவி செய்ய போய் தனது உயிரை இழந்துவிட்டது. 

நீதி :

அனுபவம் நிறைந்தவரின் ஆலோசனை மிகவும் முக்கியம்.

இன்றைய செய்திகள்

19.09.2025

⭐TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.
வருகிற 28ஆம் தேதி குரூப் 2, 2ஏ தேர்வுகள்
www.tnpsc.gov.in, www.tnpscexam.in இணைய தளத்தில் டவுன்லோடு செய்து கொள்ளலாம் என அறிவிப்பு.

⭐சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

⭐அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு பரஸ்பர வரியாக 25 சதவீதம் அமல்படுத்தியுள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀சர்வதேச கிரிக்கெட் -
அதிக சதங்கள் விளாசிய வீராங்கனைகள் பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, 2வது இடத்திற்கு முன்னேற்றம்

🏀இந்தியா சார்பில் நடப்பு சாம்பியன் நீரஜ் சோப்ரா, சச்சின் யாதவ் ஆகியோர் பங்கேற்கிறார்கள். இந்தியாவின் சச்சின் யாதவ் 86.27 புள்ளிகள் பெற்று 4-வது இடத்திலும் நீரஜ் சோப்ரா 84.03 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தை பெற்றனர்.

Today's Headlines

⭐TNPSC  Announced  Group 2, 2A exams will be held on the 28th ,through www.tnpsc.gov.in, and hall ticket can be downloaded from the website www.tnpscexam.in ,

⭐In a statement issued by the Chennai Meteorological Department, A low-level circulation is prevailing over the South Indian regions. Due to this, light to moderate rains are likely to occur in the areas of Tamil Nadu, Puducherry and Karaikal.

⭐The US has imposed a 25 percent reciprocal tariff on Indian goods. 

 *SPORTS NEWS*

🏀International Cricket - Indian player Smriti Mandhana moves up to 2nd place in the list of players with most centuries.

🏀Reigning champion Neeraj Chopra and Sachin Yadav will be participating from India. India's Sachin Yadav finished 4th with 86.27 points and Neeraj Chopra finished 8th with 84.03 points.

Covai women ICT_போதிமரம்

Wednesday, September 17, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.09.2025

உலக தண்ணீர் கண்காணிப்பு தினம்








திருக்குறள்: 

குறள் 463: 

ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை 
ஊக்கா ரறிவுடை யார். 

விளக்க உரை: 

பின் விளையும் ஊதியத்தைக் கருதி இப்போது கையில் உள்ள முதலை இழந்து விடக் காரணமாச் செயலை அறிவுடையோர் மேற்க்கொள்ள மாட்டார்.

பழமொழி :

The darkest night produces the brightest stars. 

மிக இருண்ட இரவை பிரகாசமான நட்சத்திரங்களை உருவாக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.அமைதி நம் அறிவை வளர்ப்பது மட்டும் அல்லாது நாம் ஆழ்ந்து சிந்திக்கவும் தூண்டுவது.


2. எனவே தேவையில்லாத பேச்சைக் குறைத்து அமைதி காக்க முயல்வேன்.

பொன்மொழி :

உயர்ந்த தவம்-பொறுமை. உயர்ந்த ஆயுதம்- மன்னிப்.பு உயர்ந்த மகிழ்ச்சி-திருப்தி . -குரு நானக்

பொது அறிவு : 

01."பிக் ஆப்பிள்" என்றழைக்கப்படும் அமெரிக்க நகரம் எது?

நியூயார்க் - Newyork City

02."திருமறைக்காடு" என்று அழைக்கப்படும் ஊர் எது?

வேதாரண்யம் -, நாகப்பட்டினம்
Vedaranyam -Nagapattinam

English words :

stand out – noticable, தனித்துவமாக தெரிதல். stick to – follow strictly ஒரு விதியை, ஒழுங்கை அல்லது ஒரு செயலைத் தவறாமல் பின்பற்றுவது.

Grammar Tips: 

 Common mistakes with cut
1. Cut your nails X
       Clip your nails ✓
2. Cut your hair X
       Trim your hair ✓
3. Cut the bread X
       Slice the bread ✓
 4. Cut the grass X
 Mow the grass ✓

அறிவியல் களஞ்சியம் :

 கண்ணீரைத் தோற்றுவிக்கும் சுரப்பி கண்ணீர் சுரப்பி (Lachymal gland) என அழைக்கப்படுகிறது. கண்ணீர் என்பதற்கான லத்தீன் மொழிச் சொல் லக்ரிமா (Lacryma) என்பதாகும். அச்சுரப்பி கிட்டத்தட்ட வாதுமைக் கொட்டை அளவு வடிவில் (Almond nut) கண்ணின் மேலே அமைந்துள்ளது. ஆறு அல்லது ஏழு நுண்ணிய நரம்புக் குழாய்களால் கண்விழியில் மேற்பரப்பில் அது திறந்து விடுகிறது. ஒவ்வொரு முறையும் கண்மூடித் திறக்கும்போது (blink) கண்ணின் மேற்பரப்பு முழுமையும் பரப்பலாகிறது. மேல் கீழ் கண்ணிமைகள் சேருமிடத்தில் தேவைக்கு மேலான நீர் சேகரிக்கப்பட்டு கண்ணின் உள் மூலையில் இரண்டு வாய்க்கால் வழியே வந்து மூக்கின் அருகிலுள்ள கண்ணீர்ப் பைக்கு எடுத்து வரப்படுகிறது.

செப்டம்பர் 18

உலக தண்ணீர் கண்காணிப்பு தினம்

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 18-ஆம் தேதி உலக தண்ணீர் கண்காணிப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இப்போது உலகில்  நீருக்கான  நெருக்கடி மற்றும்  நீர் பற்றாக்குறை, மாசுபாடுகளால் மனிதர்களுக்கு நெருக்கடிகளும் உருவாகியுள்ள சூழலில் உலக தண்ணீர் கண்காணிப்பு தினம் என்பதும் மிக அவசியான ஒரு நாளாக மாறியுள்ளது.

நீதிக்கதை

 மணல் எழுத்தும் கல்லெழுத்தும்!


ஒரு ஊரில் இரண்டு நண்பர்கள் இருந்தனர். அவர்கள் பாலை மணல் வெளியில் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் இருவருக்கும் ஒரு விஷயம் குறித்து வாதம் ஆரம்பித்தது. அது வாய்ச்சண்டையாக மாறியது. நண்பனின் கன்னத்தில் அறைந்துவிட்டான் மற்றொருவன். அறை வாங்கியவன் கோபிக்கவில்லை. அமைதியாக ஒதுங்கிப் போய் மணலில் அமர்ந்தான்.

விரல்களால் மணல் இன்று என் உயிர் நண்பன் என் கன்னத்தில் அறைந்துவிட்டான்! என்று எழுதினான். மற்றவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இருவரும் நடையைத் தொடர்ந்தார்கள். வழியில் ஒரு பாலைவன ஊற்றைக் கண்டார்கள். நடந்ததை மறந்து, அந்த ஊற்றில் வெக்கை தீர குளிக்க ஆரம்பித்தார்கள். கன்னத்தில் அறை வாங்கியவன் காலை திடீரென்று யாரோ இழுப்பது போன்ற உணர்வு. அவன் புதைகுழியில் சிக்கிக் கொண்டான். 

நண்பன் நிலை கண்டதும், பெரும் பிரயத்தனப்பட்டு காப்பாற்றி கரை ஏற்றினான் அவனை அறைந்தவன். உயிர் பிழைத்த நண்பன் ஊற்றை விட்டு வெளியில் வந்ததும், அருகில் இருந்த ஒரு கல்லின் மீது அமர்ந்தான். அங்கு ஒரு கல்லை எடுத்து தட்டித் தட்டி, இன்று என் உயிர் நண்பன் என் உயிரைக் காப்பாற்றினான் என்று எழுத ஆரம்பித்தான்.

இதையெல்லாம் பார்த்த மற்றவன் கேட்டான்... நான் உன்னை அறைந்தபோது, மணலில் எழுதினாய். இப்போது காப்பாற்றியிருக்கிறேன். கல்லில் எழுதுகிறார். ஏன் இப்படி? இதற்கு என்ன அர்த்தம் நண்பா? என்றான். அதற்கு நண்பன், யாராவது நம்மை காயப்படுத்தினால், அதை மணலில் எழுதிவிடு. மன்னிப்பு எனும் காற்று அதை அழித்துவிட்டுப் போய்விடும். ஆனால் யாராவது நல்லது செய்தால் அதை கல்லில் எழுது… காலத்தைத் தாண்டி அது நிலைத்திருக்க வேண்டும்! என்று பதில் கூறினார்.

இன்றைய செய்திகள்

18.09.2025

⭐ தொடர்ந்து குண்டு மழை ஏமன் துறைமுக நகரம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்

⭐டேராடூன் நகரையே புரட்டிப்போட்ட மேகவெடிப்பில் சிக்கி குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

⭐ வாக்கு திருட்டு, வாக்கு இயந்திரங்களில் முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் S.Yகுரேஷி வலியுறுத்தி உள்ளார்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பிலேயே சிறப்பாக செயல்பட்டார்.

🏀கிரிக்கெட் வாரியத்தின் புதிய தேர்வுக்குழு உறுப்பினர்களாக ஆர்.பி.சிங், ஓஜா நியமனம்


Today's Headlines

⭐ Israeli airstrikes continue on Yemeni port city 

⭐At least 15 people have been killed in a cloudburst that flattened the city of Dehradun.

⭐ Former Chief Election Commissioner S.Y. Qureshi has urged the Election Commission of India to conduct a proper investigation into allegations of vote rigging and irregularities in voting machines.

 *SPORTS NEWS* 

🏀The World Athletics Championships are underway in the Japanese capital Tokyo. India's Neeraj Chopra performed well in his first attempt in today's competition.

🏀RB Singh, Ojha appointed as new selection committee members of the Cricket Board.

Covai women ICT_போதிமரம்

Tuesday, September 16, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.09.2025

தந்தை பெரியார்


      






திருக்குறள்: 

குறள் 461: 
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் 
ஊதியமுஞ் சூழ்ந்து செயல்.

விளக்க உரை: 

ஒரு செயலைச் செய்யும்போது வரும் நட்டத்தையும், பின் விளைவையும் பார்த்து, அதற்குப்பின் வரும் லாபத்தையும் கணக்கிட்டுச் செய்க.

பழமொழி :

Time is a silent teacher.             

காலம் ஒரு அமைதியான ஆசிரியர்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.அமைதி நம் அறிவை வளர்ப்பது மட்டும் அல்லாது நாம் ஆழ்ந்து சிந்திக்கவும் தூண்டுவது.]


2. எனவே தேவையில்லாத பேச்சைக் குறைத்து அமைதி காக்க முயல்வேன்.

பொன்மொழி :

ஏமாற்றுவதைக் காட்டிலும் தோற்றுப் போவது மரியாதைக்குரியது-  ஆபிரகாம் லிங்கன்

பொது அறிவு : 

01. இந்தியாவில் விவசாயிகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

             டிசம்பர் 23- December 23

02. பாரத ரத்னா விருது பெற்ற முதல் இந்திய பெண்மணி யார்?

          திருமதி. இந்திரா காந்தி

Mrs.Indira Gandhi

English words :

stand up – support, உறுதுணையாக நிற்றல். stand for – represent, ஒரு நபருக்காக அல்லது மக்களுக்காக செயல் படுதல் அல்லது பேசுதல்

Grammar Tips: 

 Some common mistakes with close and the correct form 
1. Close the pen –X
       Cap the pen ✓
2. Close the curtains X
        Draw the curtains ✓
3. Close the jar X
      Tighten the lid ✓
4. Close the umbrella X
       Fold the umbrella ✓
  5. Close your shirt X
    Button your shirt ✓

அறிவியல் களஞ்சியம் :

 ஆஸ்திரேலியாவின் குவின்ஸ்லாந்து பல்கலையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் 'மெகாலோபிகி ஓபெர்குலாரிஸ்' எனும் ஒருவகை புழுவின் முடியிலிருந்து எடுக்கப்படும் சில மூலக்கூறுகளுக்குப் புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். விரைவில் இதிலிருந்து புற்றுநோய்க்கான மருந்து தயாரிக்கபடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

செப்டம்பர் 17

பெரியார் பிறந்த தினம் - சமுக நீதி நாள்


பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமி (இயற்பெயர்: ஈ. வெ. இராமசாமி , ஆங்கில மொழி: E.V. Ramasamy, செப்டம்பர் 17, 1879 – திசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர்.இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது.  சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார். அவர் தமிழ்ச் சமூகத்திற்காகச் செய்த புரட்சிகரமான செயல்கள், மண்டிக்கிடந்த சாதிய வேறுபாடுகளைக் குறிப்பிடத்தக்க வகையில் அகற்றியது. தமிழ் எழுத்துகளின் சீரமைவுக்கு இராமசாமி குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார்.இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழக அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியவை.

நீதிக்கதை

இயல்பு

 இரு துறவிகள் ஆற்றில் தவம் செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு தேள் ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்ததைக் கவனித்தனர். உடனடியாக ஒரு துறவி அந்த தேளை எடுத்து ஆற்றங்கரையில் விட்டார். அப்போது அத்தேள் அவரைக் கடித்துவிட்டது.

சிறிது நேரத்தில் திரும்பவும் அத்தேள் ஆற்றில் விழுந்து விட்டது. மீண்டும் அத்துறவி அதனை எடுத்து கரையில் விடும் போது அத்தேள் அவரைக் கொட்டிவிட்டது. இதனைக் கண்ட இன்னொரு துறவி, ”நண்பரே , தேள் கொட்டும் எனத் தெரிந்தும் ஏன் மீண்டும் மீண்டும் அதனைக் காப்பாற்ற எண்ணுகிறீர்கள்?” என்று கேட்டார்.

துறவி சொன்னார்: “கொட்டுவது தேளின் இயல்பு. காப்பாற்றுவது எனது இயல்பு”

இன்றைய செய்திகள்

17.09.2025

⭐தமிழகத்தில் 4 புதிய தொழிற்பேட்டைகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

⭐ஆயுதபூஜை, தீபாவளி: நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடிக்கு சிறப்பு ரெயில் அறிவிப்பு: நாளை முன்பதிவு தொடக்கம்..!

⭐சென்னை- நெல்லை வந்தே பாரத் ரெயில் பெட்டிகளின் எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு..!

⭐தமிழ்நாட்டிற்கு உரங்களை விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀வைஷாலி கிராண்ட் செஸ் தொடரை வெல்வது இது இரண்டாவது முறையாகும்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கேன்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு அவர் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளார்.

Today's Headlines

⭐Chief Minister M.K. Stalin inaugurated 4 new industrial parks in Tamil Nadu. 

⭐ Special trains are announced for Ayudha Puja and  Diwali to  Nellai, Nagercoil and Thoothukudi. Bookings start from tomorrow onwards.

⭐Chennai - Nellai Vande Bharat train coaches' number increased to 20.

⭐Chief Minister's letter to Prime Minister Modi seeking urgent action to provide fertilizers to Tamil Nadu.

 *SPORTS NEWS* 

🏀This is the second time that Vaishali has won the Grand Chess Tournament. She was directly qualified for the Candidates Chess Tournament which is to be held next year.

Covai women ICT_போதிமரம்

Monday, September 15, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.09.2025

ஓமர் முக்தர்

    






திருக்குறள்: 

குறள் 546 – 

வேலன்று வென்றி தருவது மன்னவன் 
கோலதூஉங் கோடா தெனின். 

  விளக்கம்: 

ஒரு மன்னனுக்கு வெற்றி தருவது அவனுடைய வேல் அல்ல, மாறாக அவனுடைய நேர்மையான, கோணாத செங்கோல்தான்

பழமொழி :

Knowledge without action is waste.    

செயல் இல்லாத அறிவு வீணாகும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.அமைதி நம் அறிவை வளர்ப்பது மட்டும் அல்லாது நாம் ஆழ்ந்து சிந்திக்கவும் தூண்டுவது.]


2. எனவே தேவையில்லாத பேச்சைக் குறைத்து அமைதி காக்க முயல்வேன்.

பொன்மொழி :

ஒரு புன்னகையால் அதிசயத்தை நிகழ்த்த முடியும். எனவே, புன்னகைத்து உங்கள் செயல்களை நிறைவேற்றுங்கள். -ரால்ப் மார்ஸ்டன்

பொது அறிவு : 

01.அதிக மக்கள் தொகை கொண்ட இந்திய மாநிலம் எது?

              உத்திர பிரதேசம் 

 Uttar Pradesh 

02.நுண் உயிரியலின் தந்தை யார்?

  ஆண்டன்வான்  லூவான் ஹாக்

Antonie van Leeuwen hoek 

English words :

shut up – stop talking, பேசுவதை நிறுத்து

Grammar Tips: 

 "Generalization rule"
Wrong spellings of 'ar'(அர்) sound 
How to differentiate between ir, ur, er. All have the same sounds. 
er will come at the last as in
Paper, Cooler 
Ur mostly in the middle of the word like 
Hurt, curd, curl, burning 
Ir comes before 
m,d,t or th 
Flirt, birth, third, squirm.

அறிவியல் களஞ்சியம் :

 புவி வெப்பத்தை அதிகரிக்க வைக்கும் பசுமை இல்ல வாயுக்களில் முக்கியமானது மீத்தேன். இது பசுக்களின் சாணத்தில் இருந்து அதிகளவில் வெளிவருகிறது. சுவீடன் நாட்டு விவசாய பல்கலையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பசுஞ்சாணத்தில் 'ஆஸ்பராகாப்சிஸ் டாக்ஸ்ஃபோர்மிஸ்' எனும் சிவப்பு நிறப்பாசியைச் சேர்ப்பதன் வாயிலாக, அதிலிருந்து உற்பத்தி ஆகும் மீத்தேனை, 44 சதவீத அளவுக்குக் குறைக்க முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர்.

செப்டம்பர் 16

ஒமர் முக்தார் (Omar Mukhtar, 1858 - செப்டம்பர் 16, 1931) மினிபா எனும் பழங்குடி இனத்தைச்சார்ந்த இவர் லிபியாவில் பார்குவா எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார். 1912 ஆம் ஆண்டில் இருந்து 20 ஆண்டுகளாக லிபியாவில் இத்தாலியரின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடியவர்.  1912 ல் இத்தாலி லிபியாவை துருக்கியிடமிருந்து கைபற்றியது. அது முதல் இத்தாலி சுமார் சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக இத்தாலியின் காலணி ஆதிக்கத்தின் கீழ் லிபியா இருப்பதை விரும்பாத முக்தார் அவ்வாட்சியை எதிர்க்க எதிர்ப்பு இயக்கம் நடத்தி அதன் தலைவராக களம் கண்டவர். ஒமர் தன் எதிர்ப்பு இயக்கத்தை ஒழுங்கு படுத்தப்பட்ட, தீரமிக்க மற்றும் சீர்மிக்க இயக்கமாக வழிநடத்தி இத்தாலியை எதிர்த்தார்.

கி. ராஜநாராயணன் அவர்களின் பிறந்த நாள்






கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் (16 செப்டம்பர் 1922 – 17 மே 2021),[3][4] கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். ரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி இவரே. சாகித்ய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது[7] உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் பெற்ற, 98 வயதான கி.ரா. தனது இறுதி காலத்தில் புதுச்சேரியில் வாழ்ந்தார். 2016-17 ஆம் ஆண்டுக்கான மனோன்மணியம் சுந்தரனார் விருது கி.ராவிற்கு வழங்கப்பட்டது.

நீதிக்கதை

 ஒரு ஊரில் ஒரு வறிய தம்பதியினர் இருந்தனர். அவர்களுக்கு உண்ண உணவு உடுத்த உடை இல்லா நிலை. அதிக வேதனை அடைந்தனர். இந்நிலையில் அவன் ஆண்டவனை நோக்கி …’இறைவா எங்களை ஏன் இப்படி படைத்தாய்…இது இப்படியே நீடித்தால்….வறுமை தாங்காது…நாங்கள் இறப்பதை தவிர வேறு வழியில்லை’ என வேண்டினான்.

அவன் மீது இரக்கம் கொண்ட இறைவன் அவன் முன் தோன்றி அவனின் குறைகளைத்தீர்க்க….அவனுக்கு வாத்து ஒன்றை பரிசளித்தார். அந்த வாத்து தினம் ஒரு பொன் முட்டை இடும் என்றும்…அதை விற்று அன்றடம் குடும்பத்திற்கு தேவையானவற்றை வாங்கி வாழ்நாளைக் சந்தோஷமாக கழிக்கலாம் என்றும் கூறி மறைந்தார்.

வாத்து தினம் ஒவ்வொரு பொன் முட்டையிட …அவர்கள் அதனை விற்று வாழ்கையை இனிதாகக் கழிந்தனர்.

ஒரு நாள் கந்தசாமியின் மனைவி தன் கணவனிடம் சென்று ‘தினம் தினம் இந்த வாத்து ஒவ்வொரு பொன் முட்டையே இடுகின்றது, இப்படியே இருந்தால் நாம் எப்படிப் பெரிய பணக்காரர் ஆவது என்று சொல்லி, இந்த வாத்தின் வயிற்றில் இருக்கும் எல்லா முட்டைகளையும் நாம் எடுத்தால் அதை விற்று பெரிய பணக்காரர் ஆகிவிடலாம் என்று ஒரு உபாயம் சொன்னாள்.  இதைக் கேட்ட கந்தசாமிக்கும் அது சரியெனப் தோன்றியது.

உடனே, கந்தசாமி அந்த வாத்தைப் பிடித்து வாத்தின் வயிற்றில் இருக்கும் எல்லா முட்டைகளையும் எடுக்க வாத்தை கொன்று அதன் வயிற்றைக் கிழித்தான். “ஆ” என்ன ஆச்சரியம் அந்த வாத்தின் வயிற்றில் ஒருமுட்டையுமே இருக்கவில்லை. தினம் ஒரு பொன் முட்டையிட்ட வாத்து இறந்து விட்டதால், வறுமை அவர்களை மீண்டும் சூழ்ந்துகொண்டது.

நீதி: ஆசை அளவுக்கு மிஞ்சினா; அது பேராசை. பேராசை பெரு நஷ்டத்தையும் கஷ்டத்தையும் தரும்

இன்றைய செய்திகள்

16.09.2025


⭐பி.எட்., எம்.எட் பாடப்பிரிவுகளுக்கு மாணவர்கள் 30-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் அறிவிப்பு

⭐வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்ஜினீயர்கள்- பிரதமர் மோடி வாழ்த்து

⭐பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில், "அன்புக்கரங்கள்" திட்டம் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது

 ⭐உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்நாடு அரசின் முயற்சியால் சேர்க்கப்பட்டுள்ள மாணவ-மாணவியர்களுக்கு மடிக்கணினிகளும் வழங்கினார்.

🏀விளையாட்டுச் செய்திகள்

🏀 2025 ஆம் ஆண்டிற்கான ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் துபாயில் நடைபெற்று வருகின்றன 

🏀 2025 ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று ஐக்கிய அரபு அமீரகம் - ஏமன் மற்றும் இலங்கை - ஹாங்காங் அணிகள் மோதுகின்றன.

Today's Headlines

⭐ Students can apply for B.Ed., M.Ed. courses till 30th September. 

 ⭐PM Modi has congratulated the engineers who play a key role in creating the developed India. 

⭐The "Loving Hands" scheme was announced by the Tamil Nadu government to embrace and continue to protect children who are unable to be cared for by their parents .

⭐ CM ,MK Stalin has presented laptops to students who are admitted to higher educational institutions through the efforts of the Tamil Nadu government. 

 *SPORTS NEWS*

🏀 The 2025 Asia Cup T20 cricket matches are being held in Dubai 

🏀 The UAE - Yemen and Sri Lanka - Hong Kong teams will clash today in the 2025 Asia Cup cricket series.


Covai women ICT_போதிமரம்